Wednesday, July 19, 2017

நீட் தேர்வு: விலக்குக் கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்

சென்னை, ஜூலை 19 நீதிமன்றத்தில் ஆணித்தரமாக வாதிட்டு அரசாணை யைக் காப்பாற்றாதது ஏன்? குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலைப் பயன் படுத்தி ‘நீட்’ தேர்வுக்கு அழுத்தம் தரப் படுமா? என்று சட்டப் பேரவையில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று கேள்வி எழுப்பினார்.
சட்டப் பேரவையில் நேற்று (18.7.2017 கேள்வி நேரம் முடிவுற்றதும் எதிர்க் கட்சித் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், சில முக்கிய பிரச்சினைகளை ‘தகவல் கோரலின்’ கீழ் எடுத்துரைத்து உரையாற்றினார். 

அப்போது தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதமும் வருமாறு:-


தளபதி மு.க. ஸ்டாலின்: - அடுத்து, ஒரு முக்கியமான பிரச்சினை. ‘ழிணிணிஜி’ தேர்வுப் பிரச்சினை. இந்தப் பிரச்சினை குறித்து பல நேரங்களில் இங்கு விவா திக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதிக மாக அதைப்பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை என்று சொன்னாலும், அவசியத்தை, அவசரத்தை, இன் றைக்கு இருக்கக் கூடிய மாணவர்கள் படக்கூடிய துன்பங்களை, துயரங்களை அடிப்படை யாக வைத்து, ஒரே யொரு பிரச்சினையை நான் இங்கு தங்கள் மூலமாக இந்த அவைக்கு, இந்த அரசின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

மாநிலப் பாடத் திட்டத்தில் 4.2 இலட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். சி.ஙி.ஷி.ணி. பாடத் திட்டத்தில் 4,675 பேர் மட்டுமே படித்துக்கொண்டிருக்கிறார் கள். ‘ழிணிணிஜி’ தேர்வு எழுதியிருக்கும் 88,431 பேரில், ஜூன் 22ஆம் தேதியிட்ட ஆணையில் குறிப்பிட்டிருக்கின்ற அடிப் படையில், சிஙிஷிசி பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 4,675 பேர் மட்டுமே. மீதமுள்ள 84,000 மாணவர்கள் மாநில பாடத் திட்டத்தில் +2 படித்தவர்கள். ஆகவேதான், ‘ழிணிணிஜி’ தேர்வுக்கு விலக்க ளிக்க வேண்டுமென்று வலியுறுத்தி, இதே சட்ட மன்றத்தில், 1.--2.2017 அன்று ஏகமன தாக எல்லா கட்சிகளும் ஒருங்கி ணைந்து இரண்டு மசோதாக்களை நிறை வேற்றி, அந்த இரண்டு மசோ தாக்களுக் கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டு மென்ற நிலையில், டில் லிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் படாமல் மத்திய அரசின் அலுவலகத்தி லேயே கட்டிப் போட்டு வைத்திருப்பது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு அது விரோ தமாக இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ‘ழிணிணிஜி’ தேர்வின் அடிப்படையில் 85 சதவிகித இடங்களை ஒதுக்கி, 22.6.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டிருக் கிறது. மாநிலப் பாடத் திட்டத்தில் படித் தவர்களையும், மத்தியில் உள்ள சி.ஙி.ஷி.ணி. பாடத்திட்டத் தில் படித்தவர்களையும் ஒரே தட் டிலே வைத்து நாம் பார்க்க முடியாது என்பதை நீதிமன்றத்தில் ஆணித் தர மாக வாதிட்டு, அரசாணையை இந்த அரசால் காப்பாற்ற முடியவில்லை என்பது ஒரு செய்தி.

 அழுத்தம் கொடுத்திருக்கலாம்!


அதைவிட ஒரு அருமையான சந் தர்ப்பம், இந்த அரசுக்குக் கிடைத்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில், மத் தியில் உள்ள பா.ஜ.க.வின் வேட்பாள ருக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பாக, இந்த ‘ழிணிணிஜி’ தேர்வு மசோதாவுக்கு ஒப்பு தலைப் பெற அழுத்தம் கொடுத்திருக் கலாம். அதையும் இந்த அரசு செய்ய வில்லை. 


மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பிறகு, பொறியியல் கலந்தாய்வு நடப்பது தான் வழக்கம். ஆனால், இந்த முறை ‘ழிணிணிஜி’ தேர்வுக் குழப்பத்தால், மருத்து வக் கலந்தாய்வு தடைபட்டிருக்கிறது. ஆனால், பொறியியல் கலந்தாய்வு நேற் றிலிருந்து நடக்கத் தொடங்கியிருக்கிறது.


ஆகவே, மாணவர்களுடைய எதிர் காலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெற் றோர்கள் பெரிய கவலைக்கும், அவ திக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.


எனவே, இதற்கெல்லாம் முதல் காரணமாகத் திகழும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காதது இந்த அரசு தான் என்பதை நான் இங்கே அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்ய விரும்புகி றேன். எனவே, தமிழகத்திற்கு மன்னிக்க முடியாத ஒரு துரோகத்தை மத்திய, மாநில அரசுகள் செய்திருக்கின்றன.


எனவே, நான் நிறைவாகக் கேட்க விரும்புவது, மத்திய அரசிடம் இருக் கக்கூடிய ‘ழிணிணிஜி’ தேர்வு தொடர்பான இரண்டு மசோதாக்களுக்கு உடனடி யாக குடியரசுத் தலைவரின் ஒப்புத லைப் பெறுவதற்கான முயற்சிகளிலே நீங்கள் ஈடுபட வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

எனவே, குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலைப் பயன்படுத்தியாவது, இந்த அரசு, இந்த ‘ழிணிணிஜி’ தேர்வுப் பிரச்சினையிலே முழுக்கவனம் செலுத்தி, முழு அழுத்தத்தைத் தர வேண்டுமென்று பேர வைத்தலைவர் மூலமாக நான் அரசைக் கேட்டு அமைகிறேன்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...