Tuesday, December 13, 2011

ஈரோடு மாநகராட்சியில் பெரியார் படம் அகற்றம்


ஈரோடு, டிச.13- ஈரோடு மாநகராட்சியில் தந்தை பெரியார் படம் அகற்றப் பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியின் மேய ராக அ.இ.அ.தி.மு.க. வைச் சேர்ந்த பெண் ஒருவர் இருக்கும் நிலையில், மேயர் ஆசனத்துக்கு மேலாக மாட்டப்பட்டு இருந்த தந்தை பெரியார் படம் அகற்றப்பட்டு வேறு இடத்தில் ஒதுக்குப்புற மாக வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகர்மன்ற உறுப்பினர் திருமதி இராதாமணி பாரதி, மாநகராட்சியின் முதல் கூட்டத்திலேயே பிரச்சினையை எழுப்பி யுள்ளார். மேயருக்கு இவர் எழுதியுள்ள கடிதம் வரு மாறு:

பெறுதல்:    நாள்: 16.11.2011

வணக்கத்திற்குரிய மேயர்,

துணைமேயர் மற்றும் ஆணையர் அவர்கள்

ஈரோடு மாநகராட்சி. வணக்கம். இன்று மாநகராட்சியாக ஈரோடு தரம் உயர்த்தப்பட்டதற்கு அன்று 1917ஆம் ஆண்டு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் நகர்மன்ற தலைவராக இருந்தபோது தீர்மானமாக கொண்டுவரப்பெற்று நிறை வேற்றப்பட்ட தீர்மானம் 2008ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சியாக உருவா வதற்கு வழிவகுத்தது.

பெண்ணுரிமைக்காக போராடிய பெரியார் அமர்ந்த நகர்மன்ற தலைவர் இருக்கையில் இன்று ஒரு பெண் முதல் மேயராக அமர்ந்திருப்பது பெரியாருக்கு நாம் செய்யும் நினைவாக இருக்கும் என்பது எனது கருத்து.

இன்று அவரது திருவு ருவப்படம் மேயர் அமர்ந் திருக்கும் இருக்கைக்கு அருகில் இருப்பது சாலச் சிறந்தது. அவரது படத்தை வேறு இடத்தில் மாற்றி எடுத்து வைத்துள்ளதை மீண்டும் மேயர் இருக் கைக்கு அருகில் வைக்க வேண்டும் என்ற எனது கருத்தை ஈரோடு மாநக ராட்சி முதல் கூட்டத்தில் முதல் கருத்தாக எடுத்து வைத்துள்ளேன்.

ஈரோடு இன்று உலக அளவில் பேசப்படுகிறது என்றால் அதற்குக் கார ணம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர் களால் ஈரோட்டில் நடை பெற்று, மகாத்மா காந்தி அவர்களை இணைத்து நடைபெற்ற போராட்டங் களாகும்.

அதற்கு வித் திட்ட தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படம் மீண்டும் மேயர் அவர்களின் இருக் கைக்கு அருகே வைக்க வேண்டும்- என்று கடிதம் எழுதி யுள்ளார் என்றாலும் உரிய நடவடிக்கை எடுக் கப்படவில்லை. (தலையங்கம் 2ஆம் பக்கம் காண்க.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...