Wednesday, October 12, 2011

பாபர் மசூதி இடிப்பில் மதவாத சக்தியுடன் தொடர்பு வைத்திருப்பவர் ஜெயலலிதா


தி.மு.க. பொருளார் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி, அக். 12- சிறுபான்மையினருக்கு ஜெயலலிதா துரோகம் செய்து வருகிறார் என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட் டினார். திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் போட் டியிடும் முன்னாள் அமைச் சர் நேருவை ஆதரித்து இறுதி கட்ட பிரசாரத் தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசிய தாவது: இடைத்தேர்த லின் போது அதற்கு முன்னர் அதே தொகுதி யில் தேர்வு பெற்று இறந் தவரின் குடும்பத்தினர் போட்டியிட்டால், மற்ற வர்கள் போட்டியிடக் கூடாது என்று கலைஞர் வலியுறுத்தி வந்தார். இதன்படி இறந்த மரி யம்பிச்சையின் குடும்பத் தினர் போட்டியிட்டிருந் தால் திமுக வேட்பாளரை நிறுத்தியிருக்காது.
ஆனால் இறந்த சிறு பான்மை இனத்தவரின் வாரிசுக்கு வாய்ப்பளிக்க தவறியதுடன் அந்த இனத் தையே ஒதுக்கி விட்டார். சிறுபான்மையினருக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு. ஆனால் சிறுபான்மை யின துரோகியாக ஜெய லலிதா செயல்பட்டு வரு கிறார். பாபர் மசூதி இடிப் பில் தொடர்புடைய மதவாத சக்திகளுடன் உறவு வைத்துள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் சாவு அதிகரித்துள்ளது.
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், கான்கிரீட் வீடு திட்டம் உள்ளிட்ட திமுகவின் மக் கள் நலத்திட்டங்களை முடக்கியதுடன், அவற்றை அழிக்கவும் முயன்று வருகிறார் ஜெய லலிதா. ஆட்சியில் உள்ள ஜெய லலிதா தனது தவறு களை திருத்திக்கொள்ள நடைபெறும் தேர்தல். ஜெயலலிதாவின், ஆணவ, அராஜக ஆட் சிக்கு பாடம் புகட்டும் வகையில் இடைத்தேர்த லில் நேருவை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ் வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...