Wednesday, February 10, 2016

சிறப்புச் சலுகைகள் பெறுவதற்கான சிறப்புரிமை பெற்றிருப்பது


(ஜாதியின் பெயரிலான  அடக்குமுறை திட்டமிட்டு பின்பற்றப்படுகிறது;
அறிந்தோ அறியாமலோ நம்மில் ஒவ்வொருவரும் அதில் பங்கெடுத்துக் கொள்கிறோம்)
அண்மையில் கணினி வலைதளத்தில் வளைய வந்து கொண்டிருக்கும் ஒரு காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உடல் பருத்த ஒருவன் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு முழுவதும் குடிக்க முடியாமல் வாயில் வைத்துக் கொண்டிருக்கும் தண்ணீர் கீழே சிந்துவது போலவும், கீழே தரையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மெலிந்த ஒருவன் அவன் சிந்தும் தண்ணீரை தாகத்துடன் பருகுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்த காட்சிதான் அது. பின்னர் அந்த கேலிச் சித்திரம், அந்த நடைமுறையை நீங்கள் வெறுத்தால், உங்கள் உணர்வை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நம்மை கேட்கிறது. புகழ்பெற்ற கலாச்சாரத்தைப் பெற்றவர்கள் என்று பறைசாற்றிக்கொள்பவர்களின் இந்த ஒரு தோற்றத்தைப் பார்த்தால்போதும், ரோஹித் வெமுலா போன்ற தலித்துகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது நமக்குப் புரியும்.
இந்த கேலிச்சித்திரம் செய்யும் மாயவித்தை என்னவென்றால், சிறப்பு சலுகைகள் பெற்று கீழ்ஜாதி மக்களை அடக்கி ஒடுக்கி வரும் உயர்ஜாதி மக்களைப் பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டுவதுதான். மக்கள் தொகையில் 15 - 20 விழுக்காட்டினராக இருக்கும் நிலை யில்    நாட்டில் உள்ள அரசுப் பணிகளிலும், கல்வி நிறு வனச் சேர்க்கையிலும் 50 விழுக்காட்டுக்கு மேலாக உயர்ஜாதி மக்கள் பெற்று வருவதை இந்த மாயவித்தையினால்தான் நியாயப்படுத்த முடியும்.
அவ்வாறு இருக்கும்போது, வெமுலாவின் தற் கொலை ஒரு ஜாதிப் பிரச்சினையே அல்ல என்றும், வெமுலா ஒரு தலித்தே அல்ல என்றும் உயர்ஜாதியினர் மறுத்துவருவதில் வியப்பேதும் இல்லை. மத்திய அமைச்சர்கள்,  செயல்திட்டங்களை வடிவமைக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தினர், எழுத்தாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களால் வெளியிடப்படும் இத் தகைய அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. மன அழுத்தம்தான் அவரது தற்கொலைக்குக் காரணம் என்று மனநோய்மருத்துவர்களின் கருத்துகளும் உயர் ஜாதியினரின் கேலிச்சித்திரங்களும் கணினி தளத்தில் வளைய வந்து கொண்டிருக்கின்றன.
முன்னேற்றக் கருத்து கொண்ட உயர்ஜாதியினரும் கூட, இந்த தலித்துகளின் பிரச்சினை,  பல்கலைக் கழக அளவில் தீர்க்கப்படவேண்டிய ஒரு நிர்வாகப் பிரச்சினை என்றே கூறுகின்றனர். கோட்பாட்டு அளவிலும், பொருளாதார ரீதியிலும், அவர்கள் எந்த அரசியல் கட்சியையோ, எந்த மதத்தையோ சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, மக்களை ஜாதியின் அடிப்படையில் பிளவு படுத்தி நிற்கும் ஒரு மிகப் பெரிய சமூகத்தின் ஒரு சிறிய பகுதிதான் இந்தப் பல்கலைக் கழகம் என்பதைக் கூட எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நடைமுறையிலும் நிலவி வரும் ஜாதிய நடைமுறை ஒழிக்கப்படாத வரை,  கல்வி நிறுவனங்களில் எந்த அளவில் சீர்திருத்தம் மேற்கொள்வதும் பயன்தராது.
இதில் உள்ள முக்கியமான அம்சம் என்னவென்றால்,  சமூகத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்  நாம்  என்னும் உயர்ஜாதியினர்தான் பிரச்சினையே என்பது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தலித்துகளை (அவர்களை) சீர்திருத்துவது என்பதில் இருந்து தேடும் விளக்கை, ஜாதியின் பெயரால் தாங்கள் பெறும் சிறப்பு சலுகைகளைத் தாங்கள் பெறுகிறோம் என்பதை  ஏற்றுக் கொள்ளாமல் ஜாதிய அடக்குமுறையை நடைமுறைப்படுத்தி வரும்  உயர்ஜாதியினர் (நம்மை நாமே) சீர்திருத்திக் கொள்வது என்பதன் பக்கம் நகர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. பல ஆயிரம் ஆண்டு காலமாக உயர்ஜாதி மக்கள் அனுபவித்து வரும் சமூக, பொருளாதார, கலாச்சார அளவிலான சிறப்புச் சலுகைகளை மறைப்பதற்காகப் போடப்படும் திரையே தகுதி மற்றும் திறமை என்பவையாகும்.
இந்த சிறப்புச் சலுகைகள் ஜாதிக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதல்ல; பிரிவு, பாலினம், இனம் போன்ற மற்றவைகளுக்கும் கூடப்பொருந்தும். அமெரிக்காவில் நிலவும் மனஅளவிலான போராட்டத்தைப் பற்றி கீ.ஙி.ஞிu ஙிஷீவீs என்பவர் குறிப்பிடும்போது, வெள்ளைய ரின்ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு சமூகத்தில், ஏழையான ஒரு வெள்ளைக்காரனும் கருப்பர்களை விட உயர்ந்தவன் என தன்னை நினைத்துக் கொள்கிறான் என்று கூறி யுள்ளார். இதனைத்தான் ஜாதிப் பிரிவினை என்பது உழைப்பைப் பகிர்ந்துகொள்வது என்பதாக இல்லாமல், உழைப்பாளர்களைப் பிரித்து வைப்பதாகவே உள்ளதென அம்பேத்கர்  கூறியிருக்கிறார்.
இடஒதுக்கீட்டில் அளிக்கப்பட்டு நிரப்பப்படாமல் காலியாக உள்ள 40-50 விழுக்காடு ஆசிரியர் பணியி டங்கள் உள்ள மத்திய, மாநில அரசுப் பல்கலைக் கழ கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் நீங்கலான மற்ற அனைத்துத் துறைகள் ஒவ்வொன்றிலும் உயர்ஜாதி சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகஅளவில் நிலவி வருவதன் காரணமாகவும், இடஒதுக்கீடு இல்லாத சக்தி வாய்ந்த தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தலித் மக்கள் எவருமே இடம் பெறாத நிலை காரணமாகவும்,  கிரிக்கெட், பாலிவுட், நுகர்வோர் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆங்கில மொழிவழி ஊடகங்களின் பிரச்சாரங்கள் காரணமாகவும்  ஏற்படும்  ஜாதி பற்றிய மனவியல் ரீதியான போராட்டங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ள உயர்ஜாதி மக்கள் முழுமையாகத் தவறி விடுகிறார்கள்.
இத்தகைய சிறப்புச் சலுகைகள் தங்களுக்கு இருப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதே,  ஜாதி ஒழிப்பிற்குத் தடையாக இருப்பதும்,   உயர்ஜாதியினரின் பழிவாங்கும் மனப்பான்மைக்குக் காரணமாக இருப்பது மாகும். இத்தகைய சிறப்புச் சலுகைகள் இருப்பது ஏற்றுக் கொள்ளப்படாதது ஜாதிக்கு மட்டுமே பொருந்துவது அல்ல. அண்மையில் அமெரிக்காவில் எல்.டெய்லர் பிலிப்ஸ் மற்றும் பிரியான் லோயரி என்பவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இருந்து, இத்தகைய சிறப்புச் சலுகைகள் வெள்ளைக்காரர்களுக்கு இருப்பது பற்றி அவர்களிடம் கேள்வி கேட்டபோது,  அதனை அவர்கள் மறுக்காதது மட்டுமன்றி,  தனிப்பட்ட தடைகளால் அவர்கள் அந்தச் சலுகைகளை அனுபவிக்க முடியாமல் இருப்பதாகக் கூறியதும் தெரியவருகிறது. லோயரி கூறுகிறார்:  நல்ல விஷயங்களைப் பெறுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் அவைகளை உங்கள்  உழைப்பினால் பெறாமல், சிறப்புச் சலுகைகளாக நீங்கள் பெறுகிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்க நீங்கள் விரும்புவதில்லை என்று கூறுகிறார்.
தகுதி, திறமை என்ற இது போன்ற தவறாக வழிநடத்தப்பட்ட புரிதல்,  ஜாதி ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற தீவிர முயற்சிகளுடன் சேர்ந்து, உயர்ஜாதியினருக்கு சிறப்புச் சலுகைகள் இருப்பதை மறுக்கும் மனப்பான்மைக்கு ஆணிவேராக அமைந் துள்ளது. பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இல்லாத உயர்ஜாதி மக்களும், உயர்ஜாதி காரணமாக சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படும் நடைமுறையை அழிக்கவேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்ட உயர்ஜாதியினரும்  இருக்கின்றனர் என்பது உண்மைதான்.  ஆனால், ஒரு பெண்ணியலாளராகவும், இனக்கோட்பாட்டு ஆர்வலராகவும் உள்ள பெக்கி மெக்கின்டோஷ் என்பவர் கூறுகிறார்: தனிப்பட்ட மனிதர்களின் இழிசெயல்களில் மட்டுமே இனவெறி இருப்பதைக் காண்பதற்கு எனக்குக் கற்பிக்கப்பட்டுள்ளதே அன்றி,  எனது குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தும் கண்ணுக்குத் தெரியாத நடை முறைகளில் உள்ள இனவெறியைக் காண்பதற்கு எனக்குக் கற்பிக்கப்படவில்லை.
ஜாதிய அடக்குமுறை என்பது திட்டமிட்டு நடை முறைப்படுத்தப்படுவதாகும்.  சிறப்புச் சலுகை பெறும் உயர்ஜாதியினர் ஒவ்வொருவரும் அதில் பங்கேற்கின்றனர். இங்கு தனிப்பட்ட மனிதரின் பண்பாடு முக்கியமானதாகக் கருதப்படுவதில்லை. மெக்கின்டோஷ் கூறுவது போல, நீங்கள் மென்மையாக இருக்கும் அதே நேரத்தில் அடக்கி ஒடுக்குபவராகவும் இருக்க உங்களால் முடியும். உயர்ஜாதி காரணமாக சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுவதை நாம் எதிர்க்கும்போது,  இந்த எதிர்மறையான உண்மையை நாம் எதிர்கொள்கிறோம். அவசரமாக நாம் செய்யவேண்டியது என்னவென்றால், புதிய பாதையைத் திறந்து காட்டவல்ல 1988 இல் மெக்கின்டோஷ் வெளியிட்ட ஒரு கட்டுரையில்  வெள்ளைக்காரர்கள் பெற்றிருந்த 50 சிறப்புச் சலுகை களை பட்டியலிட்டுக் காட்டியிருந்தது போன்று உயர் ஜாதியினருக்கு அளிக்கப்படும் சிறப்புச் சலுகைகள் பட்டியல் ஒன்றினை முழுமையாகத் நாம் தயாரிக்க வேண்டும். தலித் மாணவர்களின் தற்கொலையைப் பொருத்த அள வில் இவ்வாறு செய்வது மிகவும் பொருத்தமானதும் அவ சியமானதும் ஆகும்.
உயர்ஜாதியினர் தாங்கள் பெறும் சிறப்புச் சலுகைகளை ஒப்புக் கொள்வது,  திறமையும் தகுதியும் நிறைந்த உயர்ஜாதி என்னும் நற்தோற்றத்தை மறுப்பதாக இருக்குமானால், நாம் எடுத்துவைக்க வேண்டிய இரண்டாவது அடி மிக வும் கொடியதும், துன்பம் தரத்தக்கதுமாகும். அத்தகைய சிறப்புச் சலுகைகளைப் பெறாமல் கைவிட உயர்ஜாதியினர் தயாராக இல்லாதநிலையில், அத்தகைய சிறப்புச் சலு கைகள் தங்களுக்கு இருப்பதை அவர்கள் ஒப்புக் கொள்வதால் விளையும் பயன் ஏதுமில்லை. ஜாதிய பொய்களை முடிவுக்குக் கொண்டு வரும் உண்மையான போராட்டம் இதில்தான் இருக்கிறது. இளைய மார்டின் லூதர் கிங் கூறுகிறார்: சிறப்புச் சலுகைகள் பெற்ற குழுக் கள் தாங்களாகவே முன் வந்து அத்தகைய சிறப்புச் சலுகைகளைப் பெறாமல் கைவிட்டுவிடமாட்டார்கள் என்பதுதான் வரலாற்று உண்மையாகும்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில்  அளிக்கப்படும்  இட ஒதுக்கீடு என்னும் ஒரு சிறு ஜனநாயக நடைமுறை,  உயர்ஜாதியினரிடையே ஒரு மோசமான, வன்முறையுடன் இணைந்த மாபெரும் எதிர்ப்பையே உருவாக்கிவிடுகிறது. எனவே, ஜாதிய அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது, உயர்ஜாதி மக்களின் கருணையின் மூலம் எப்போதுமே நடைபெற இயலாததாகும். ஜனநாயக நடைமுறையில் பொதிந்துள்ள தவிர்க்க இயலாத, அவசரமான, முக்கியமான நியாய உணர்வை உயர்ஜாதியினர் அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதற்கான நேரம் இதுவே. ஆப்பிரிக்க-அமெரிக்க ஆசிரியர் மாயா ஏஞ்சலு  வாதிட்டபடி, செல்வச் செழிப்பு மிகுந்த வெள்ளைக்காரர் சமூகத்தில் வளர்வது என்பது,  கிரடிட் கார்டுகளுக்கு மரியாதை கொடுப்பது, திருமணம் செய்து கொள்வது, குழந்தைகள் பெற்றுக்கொள்வது போன்ற செயல்களின் மூலம் வாழ்வது ஆகாது. நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும், நீங்கள் ஆக்கிரமித்துள்ள இடத் துக்கும் நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்வதும்,  ஒருவரது மனிதத் தன்மைக்கு ஒவ்வொரு வாழும் மனிதரும் மரியாதை செலுத்துவதும்தான் வளர்வது என்பது.  நாமும், அதனைப் போல, உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு சமூகத்தில்,  தகுதியற்ற முறையில் நாம் ஆக்கிர மித்துள்ள பெரிய இடத்தை, எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கவேண்டுமோ, அந்த அளவுக்கு விட்டுக் கொடுப்போம்.

நன்றி: தி ஹிந்து ஆங்கில இதழ் ஞாயிறு மலர் 7-2-2016
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


மீண்டும் நுழைவுத் தேர்வா? (1)


இப்பொழுது என்னவென்றால் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
நெருக்கடி நிலை காலத்தில் கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய அரசு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மனப்பால் குடிக்கிறது போலும்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எதிலும் நுழைவுத் தேர்வு கிடையாது என்ற நிலை இருக்கும்பொழுது மத்திய அரசு எப்படி அதற்கு மாறான ஒன்றைத் திணிக்கலாம்?
இந்தியா முழுவதும் மூன்று மொழி இருக்கிறது. தமிழ்நாட்டில் இரண்டே மொழிகள்தான். தமிழும், ஆங்கிலமும்தான். தமிழ்நாட்டில், இந்திக்கு இடம் இல்லை என்பது தமிழ்நாட்டின் சட்ட பூர்வமான நிலை. அப்படி இருக்கும் பொழுது அகில இந்தியக் கொள்கை என்று மத்திய அரசு தமிழ்நாட்டில் திணிக்க முடியுமா?
அதே நிலைதான் இந்த நுழைவுத் தேர்வு பிரச்சினையிலும்; தமிழ்நாடு அரசு உடனடியாக இதனை எதிர்த்து அரசுக்குக் கடிதம் எழுதி இருக்க வேண்டாமா? எதிலும் தயக்கம் - மயக்கம் தானா?
இதில் வேடிக்கை என்னவென்றால் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அல்டம்ஸ் கபிர் மற்றும் நீதிபதி விக்கிரமஜித்சிங் ஆகிய இருவர் அடங்கிய அமர்வு நுழைவுத் தேர்வு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று வரையறுத்துத் தீர்ப்புக் கூறி விட்டது.
நுழைவுத் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 16 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான தீர்ப்பில்தான் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.
மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்பின் கருத்துரையை ஏற்றுத்தான் மத்திய அரசு நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளது. இதை நினைத்தால் விலா நோக சிரிப்புதான் குமட்டிக் கொண்டு வருகிறது; மத்திய அரசில் சட்டத்துறை ஒன்று இருக்கிறதா? அது நீதிமன்றம் தொடர்பான கோப்புகளைக் கைவசம் வைத்துள்ளதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
2013 ஜூலை 18ஆம் தேதி தீர்ப்பிலேயே மட்டையடியாக உச்சநீதிமன்றம் கூறி விட்டது.
மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளை வகுப்பதைத் தவிர, நுழைவுத் தேர்வை நடத்திட உத்தரவிடும் அதிகாரம் மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது என்று உச்சநீதிமன்ற அமர்வு ஆணியடித்து அறைந்ததுபோல தீர்ப்புக் கூறிய பிறகும், மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது என்று கூறி மத்திய அரசு நுழைவுத் தேர்வை அறிவிக்கிறது. என்னே இந்த ஆட்சியின் இலட்சணம்!
இதனைப் பார்க்கும் பொழுது மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் நிருவாகத் திறன் எந்த அளவு கெட்டுப் போயிருக்கிறது என்பதை உணரலாம்.
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு நீதிமன்ற அவமதிப்பே என்பதில் அய்யமில்லை. நீதிமன்றத்தில் குட்டு வாங்குவது மோதிரக் கையால் வாங்கப்பட்ட குட்டு என்று ஒருக்கால் இந்த அரசுகள் கருதுகின்றனவோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
பிளஸ் டூ தேர்வு எழுதி அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கும் வழக்கத்தில் உள்ள நடைமுறையில் என்ன குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள் - இந்தக் ‘கொலம்பசுகள்?’
மாநில அரசு நடத்திய தேர்வு செல்லத்தகாததா? அதில் மாணவர் பெற்ற மதிப்பெண்கள் மதிக்கத் தகுந்தவையல்ல என்று மத்திய அரசு கருதுகிறதா? இது தேவையில்லாமல் மாநில அரசோடு மத்திய அரசு மோதிப் பார்க்கத் துடிக்கும் அதிகப் பிரசங்கித்தனமாகும்.
தமிழ்நாட்டிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டது. (1982) அந்த ஆணையை அப்பொழுதே எரிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியதுண்டு.
நுழைவுத் தேர்வு செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அந்த ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது (27.6.2005) உண்மைதான்.
கல்வி நிபுணர் குழு அமைத்து அவர்கள் தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் தனி சட்டம் இயற்றி நுழைவுத் தேர்வை ரத்து செய்யலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கூறிய யோசனையை (விடுதலை 16.1.2006) முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுச் செயல்பட்டு இருந்தால் உயர்நீதிமன்ற தீர்ப்பு வேறு மாதிரியாகவே இருந்திருக்கும். அதைச் செய்யத் தவறியதால் மற்றொரு முறையும் தமிழ்நாடு அரசு ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது (27.2.2006).
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 2006இல் ஆட்சிக்கு வந்தவுடன் கல்வியாளர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரை (7.7.2006) அடிப்படையில் கலைஞர் தலைமையிலான அரசு சட்டமியற்றி (5.3.2007) குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. அதனை எதிர்த்தும் வழக்குப் போடப்பட்டது. முறைப்படி ஆய்வு நடத்தப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று அதே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததே (27.4.2007).
2010ஆம் ஆண்டில் இதே மருத்துவக் கவுன்சில் நுழைவுத் தேர்வுக்குப் பரிந்துரைத்தபோது திராவிடர் கழகம் அதனை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியதை(29.12.2010) நினைவூட்டுகிறோம்.
இந்த வகையில் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடுதான் அகில இந்தியாவுக்கே வழிகாட்டும் என்பதில் அய்யமில்லை.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பத்மசிறீ விருதுகள் தேர்தல் காலங்களில் விருதுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : ஆய்வில் தகவல்


புதுடில்லி, பிப்.9 தேர்தல் காலங்களில் பத்மசிறீ விருதுகளின் எண்ணிக்கை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள் ளது.
மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது பத்மசிறீ விருது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மற்ற ஆண்டுகளை காட்டிலும் தேர்தல் காலங்களில் பத்மசிறீ விருதுகளின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. 
கடந்த 16 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பத்மசிறீ விருது குறித்து நடத்தப்பட்ட சர்வேயில் 7 மாநிலங்கள் மொத்தமாக 63 சதவீத விருதுகளை கைப்பற்றியுள்ளன. அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் இவற்றின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தலில் ஏற்பட்ட வெற்றி தோல்விக்கும் இதற்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லாத போதும், 
அரசியலின் செல்வாக்கு பத்மசிறீ விருதுகளை வழங்குவதில் இருந்து வந்துள்ளது. 2004ம் ஆண்டு மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த போது 74 பேருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் அந்த விருது பெற்றவர்களின் சராசரி எண்ணிக்கை 57.
அதே போல் 2009இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது 93 பேருக்கு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சராசரியாக 66 பேருக்கு மட்டுமே பத்மசிறீ வழங்கப்பட்டது. அதே போல் 2014இல் மீண்டும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்த போது 101 பேருக்கு வழங்கப்பட்டது. 
அதற்கு முந்தைய நான் காண்டுகளில் சராசரியாக விருது பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 80. தேர்தல் அல்லாத ஆண்டுகளை காட்டிலும் 2004,2009, 2014 ஆகிய ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகமாக விருது எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மாநிலங்களைப் பொறுத்த அளவில் டில் லியும், மகாராஷ்டிராவும் அதிகமான எண்ணிக் கையை கைப்பற்றியுள்ளன. கடந்த 16 ஆண்டுகளில் மொத்தம் 1200க்கு பத்மசிறீ வழங்கப்பட்டுள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு விருதுகளை இந்த இரண்டு மாநிலங்களும் பகிர்ந்து கொண்டுள்ளன. 
அடுத்தபடியாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகியவை பாதிக்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளன. ஆந்திரா வும், உ.பி.யும் தலா 6 சதவீதம். பீகார் உள்ள திலேயே மிகவும் குறைவாக 2 சதவீதம் என்ற அளவில் 20 பேருக்கு மட்டுமே பெற்றுள்ளது என்று அதில் தெரியவந்துள்ளது.

Tuesday, December 15, 2015

கோவிலுக்குள் செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் என்னை தடுத்தனர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு


புதுடில்லி, டிச.15 அண்மையில் அசாம் சென்றிருந்த போது பார் பேதா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குள் என்னை செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கள் தடுத்ததாகவும், இது தான் பாரதீய ஜனதாவின் அரசியல்  பாணி என்றும் இது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று எனவும் காங்கிரஸ் துணைத்தலை வர் ராகுல் காந்தி தெரி வித்துள்ளார். 
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:- நான் அசாம் மாநிலத்திற்கு சென்றிருந்த பொழுது, அங்குள்ள பர்பேதா மாவட்டத்தில் இருக்கும் கோவில் ஒன்றுக்கு செல்ல விரும்பினேன். ஆனால், கோவில் இருந்த ஆர்.எஸ். எஸ். தொண்டர்கள் என்னை கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுத் தனர். பாரதீய ஜனதா செயல்படும் விதம் இது தான். 
என்னை தடுத்து நிறுத்த அவர்கள் யார்? எனவும் மிகவும் ஆவேச மாக ராகுல் காந்தி பேசினார். கடந்த வெள் ளிக்கிழமை பர்பதா மாவட்டத்திற்கு சென்று இருந்த ராகுல் காந்தி, இந்த பிரச்சினைக்கு பிறகு  ஆர்.எஸ்.எஸ் தொண் டர்கள் கோவிலில் இருந்து வெளியேறிய பின்னர் அன்றைய தினம் மாலை கோவிலுக்கு சென்று வழி பட்டார். 
அசாம் முதல் அமைச்சர் தருண் கோகாய் நேற்று இவ்விவ காரம் குறித்து பேசும் போது, ராகுல் காந்தியை பர்பேதே கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுக்க பாஜகவும் ஆர்.எஸ். எஸும் சதியில் ஈடுபட் டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மாநகராட்சியும், அரசும் செய்யாததை கழகம் செய்தது!


மாநகராட்சியும், அரசும் செய்யாததை கழகம் செய்தது!
அமைந்தகரையில் கழகத் தோழர்களின் தூயத் தூய்மைப்பணிகள்!
நன்றிப் பெருக்கும்! மக்களின் வாழ்த்தும்!!
சென்னை. டிச. 15_ கடந்த 1_ஆம் தேதியிலிருந்து அடுப்பு பற்ற வைக்காத குடும்பங்கள் ஏராளமாக இங்கு இருக்கிறார்கள் என்று அமைந்தகரை கூவம் நதிக்கரையோரம் உள்ள மஞ்சக்கொல்லை தெருவிலி ருக்கும் மக்கள் வேதனையோடு துப்புரவு பணி செய்ய நம் இயக்க தோழர்கள் சென்றிருந்தபோது கூறினர்.
தமிழர் தலைவரின் பிறந்த நாளான டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கிய இந்த வெள்ள நிவாரணப் பணிகள் மக்களின் தேவை கருதி அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று கொண்டேயிருக்கின்றன. முதலில் உடனடித் தேவையான உணவு கொடுக்கப்பட்டது. இதில் பெரியார் திடல், ஆவடி, மதுரவாயல் ஆகிய பகுதி களையும் சேர்த்து ஏறக்குறைய 60,000 மக்களுக்கு உணவு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து 9ஆம் தேதி-யிலிருந்து தாம்பரம் பொழிச்சலூர், 
மல்லிகா நகர், குரோம்பேட்டை, அமைந்தகரை ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் அமைத்து மக்களுக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன. அதே நேரத்தில் மழை வெள்ளத்தால் குப்பையும், கூளமும், சாக்கடையோடு கலந்து சாலைகளே சகதி யாக மாறிப்போனதால் மக்கள் சொல்லொண்ணா மன உளச்சல்களுக்கு ஆளாகியுள்ளதால் எதையும்  செய்யும் மனத்திண்மை பெற்ற திராவிடக் கழகத் தோழர்களும் தன்னார்வத் தொண்டர்களும் இந்த துப்புரவு பணியிலும் இணைந்து ஈடுபட்டனர்.
கூவம் நதிக்கரை ஓரம்!
முதலில் கூவம் நதிக்கரையோரம் உள்ள அமைந்த கரையில் இப்பணியை தொடங்கலாம் என்று முடிவு செய்து முதல்தளம் முழுவதும் மூழ்கிய பகுதியான மஞ்சக்கொல்லை தெருவில் 13.12.2015 அன்று காலை 7 மணிக்கு 20 பேர் அடங்கிய குழு களமிறங்கியது.

மக்கள் மாநகராட்சி மீதும், அரசு மீதும் கடுமை யான கோபத்தில் இருப்பதை நாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குப் போகும் போதெல் லாம் காண முடிந்தது. மஞ்சக் கொல்லை தெருவில் நசநசத்து கிடந்த குப்பைகள் மிகுந்த துர்நாற்றத்தை பரப்பிக் கொண்டிருந்தன. பல வீடுகளில் சாக்கடை அடைத்துக் கொண்டு இயற்கை உபாதைகளைக்கூட வெளியேற்ற முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அந்தத் தெருவில் வசிக்கும் பெயிண்டிங் பணி செய்யும் கென்னடி என்பவர், டிசம்பர் 2ஆம் தேதி எந்தவித முன்னறிவிப்பின்றி தண்ணீரை திறந்து விட்டனர், இந்த தெருவில் ஏழடி உயரம் வரை தண் ணீர் வந்து விட்டது; எங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கினோம். அங்கேயும் தண்ணீர் வந்து விட்டதாலும் அங்கிருந்தும் வெளியேறினோம், பள்ளிக்கூடங்கள் நிறைந்து விட்டதால், தெரியாத வர்கள் வீட்டில் எல்லாம் தங்கினோம். அந்த நேரத் தில் அரசுத்தரப்பில் இருந்து யாரும் வரவில்லை. தொண்டு நிறுவனங்கள், வசதி வாய்ப்பு உள்ளவர்கள் உதவி செய்தனர் என்று தன்னிரக்கத்தோடு கூறிவிட்டு, எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு 5000 ரூபாய் போதுமானதல்ல என்று வேதனையை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
இப்படி பலரும் நம்மிடம் புலம்பினார்கள். கென் னடி பாதிரியாராகவும் இருந்து வருகிறார். மக்களின் அனைத்து துயரங்களையும் கேட்டுக் கொண்ட தோழர்கள் முதலில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர் கூவம் நதியில் கலக்கும் வண்ணம் ஏற்கனவே இருந்து தூர்ந்து போன சிறு கால்வாயை தூர்வாரினர். அதைதொடர்ந்து சாலையோரம் நாற்றமடித்து இருந்த குப்பையை பாலிதீன் பைகளில் சேகரித்து மாநகராட்சி வண்டியை வரவழைத்து அவற்றை எடுத்துச் சென்று உரிய இடத்தில் கொட்டிவிட்டுத் திரும்பினர்.
மாநகராட்சி செய்யாததை...
மாநகராட்சி செய்யாத பணியை, காசாவது கொடுக் கிறோம் செய்யுங்கள் என்று மக்கள் சொல்லியும், மாநகராட்சி செய்யாத பணியை தேர்தலின் போது மட்டும் வந்ததாக மக்களால் சொல்லப்படும் 102ஆம் வார்டின் அதிமுக கவுன்சிலர் ஜீவா கவனம் செலுத் தாத அந்தப்பணியை பெரியார் திடலில் இருந்தும், வேறுவேறு பகுதிகளில் இருந்தும் வந்திறங்கும் தன்னார்வ தொண்டர்கள் பொறுப்போடு அம்மக் களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே பணியைச் செய்ததால், கென்னடி போன்ற சிலர் வரிந்து கட்டிக் கொண்டு நம்மோடு களத்தில் இறங்கி வேலை செய்தனர். குப்பை பைகள் வேகவேகமாக இடம் பெயர்ந்தன. இப்பணிகளை ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் ஆளாளுக்கு வீடுகளில் தேனீர் தயாரித்தும் பிஸ்கட்டுகளை எடுத்து வந்தும் குடியுங்கள்! குடியுங்கள்! என்று அன்போடு வேண்டுகோள் வைத்தனர்.
12ஆம் தேதியிலிருந்து அப்பகுதி மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து போர்வை கொடுத்து வருகிறார்கள். பெண்கள் நமது தோழர்களோடு சரளமாக பேசத் தொடங்கிய பிறகு, மாநகராட்சி தங்களை எப்படி யெல்லாம் கேட்பாரற்று விட்டுவிட்டது என்பதைச் சொல்லி தங்கள் மனதிலிருக்கும் பாரத்தை இறக்கி வைத்தனர். இவர் இதையெல்லாம் சொல்லியபோது சொல்ல வேண்டாம் என்று அச்சத்துடன் பேசியவர் களைத் சிலர் தடுத்தனர். அவர்களோ துணிச்சலுடன் என்ன இப்போ என்று தடுத்தவர்களை மடக்கிவிட்டு தொடர்ந்து தம்முடைய வேதனைகளை நம்மிடம் கூறினர்.
குப்பையையெல்லாம் இடம் மாற்றிய பிறகு அந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர் தூவிவிடப்பட்டது. மக்கள் மிகுந்த நன்றிப்பெருக்கோடு நம் தோழர்களை வழியனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு மஞ்சக் கொல்லையை விட மிகமிக மோசமாக இருந்த கதிரவன் காலனிக்குச் சென்றனர். நம் தோழர்களின் குழு, அங்கு சாலையே சாக்கடை கலந்த சகதியாக கணுக்கால் அளவு படர்ந்து இருந்தது. பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது. நம் தோழர்கள் கொஞ்சமும் சளைக்கவில்லை. அதற்குரிய உபகரணங் களை கைகளிலும் கால்களிலும் அணிந்திருந்த தோழர்கள் களத்தில் உற்சாகமாக இறங்கினர்.
மக்களும் எதற்கெடுத்தாலும் அரசை எதிர்பார்த்து பார்த்து சுய முயற்சியற்றுப் போயிருந்தனர். வெள்ளம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து பலரும் இன்னமும் மீளாமலேயே இருந்தனர். நகராட்சி வராதா? அரசு வராதா? வேறு யாராவது வரமாட்டார்களா? என்று ஏக்கக்தோடு எதிர்பார்த்து காத்திருக்கத்தான் முடிந்ததே தவிர யார் வந்தாலும் வராவிட்டாலும் முடிந்தவரையில் நாம் இருக்கும் இடத்தை நாம் தூய்மை செய்து கொள்வோம் என்று சிந்திக்கவும் திராணியற்றுப்போயிருந்தனர். அந்த தன்னம்பிக்கை இழப்பை யாராவது தூண்டி விட்டால் அவர்கள் வீறுகொண்டு எழுந்து விடுவார்கள் என்பதை மஞ்சக்கொல்லை தெருவைப் போல பலமடங்கு மக்களின் தன்னிரக்கம் விடைபெற்று தன்னம்பிக்கை கொழுந்துவிட்டு எரிந்து, ச்சே! எங்கிருந்தோ வந்து செய்யறாங்க! நாம் சும்மா இருப்பதா? என்று ஆண்கள், பெண்கள் என்று தோழர்களுடன் களத்தில் இறங்கி விட்டனர்.
சகதியும் சாக்கடையும்
கால்வாயில் தேங்கியிருந்த சகதியும், சாக்கடையும் அள்ளி சின்னச்சின்ன வாளிகளில் ஊற்றப்பட்டு, அமைந்தகரை கழகத்தோழர் தளபதி பாண்டியனால் ஏற்பாடு செய்யப்பட்ட தள்ளு வண்டிகளில் கொட்டி வெகு தூரம் சென்று நம் தோழர்களும் கொட்டி விட்டு வந்தனர். தோழர்களும், தன்னார்வத் தொண் டர்களுக்கும் பழக்கம் இல்லாத பணியாதலால் சிலருக்கு கைகளில், கால்களில் காயம்பட்டு இரத்தம் வந்தது. அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக் கப்பட்டது. மக்களின் முகங்களில் தெரிந்த நம்பிக்கை கீற்று தோழர்களின் உற்சாகத்தை பலமடங்காக்கின. இந்த மக்கள் தொண்டில் நமக்கு கிடைத்த உற்சா கத்தால் பல மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய பணியை சில மணி நேரத்திலேயே முடிக்க வைத்து விட்டது. இது பெரும்பாலும் இஸ்லாமியர்கள் குடியி ருக்கும் பகுதி.
பணிநிமித்தமாக லக்னோ சென்று திரும்பியிருந்த புருசோத்தமராஜ், நம்மோடு களத்தில் இறங்கி பணிபுரிந்து கொண்டே, மாநகராட்சியின் மீதும், அரசின் மீதும் தனக்குள்ள காட்டத்தை, ஓட்டு போட்டவன் நடுத்தெருவில்? ஓட்டு வங்கியவன் நான் கடுக்கு மாளிகையில் என்று சொல்லி தமது கோபத்தை காட்டிக்கொண்டார். இவர் மருத்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிபவர். நம்மோடு பணியாற்றிய ஆட்டோ ஓட்டுகிற சலீம் பாஷா நன்றிப் பெருக்கு டன், ஒரு வாரமே இப்படியேதான் இருந்தது. வேற யாரும் வரலே. நீங்கதான் வந்தீங்க என்று கண்ணீ ருடன் வாழ்த்தினார்.
இதற்கிடையில் அங்கு வந்த கார்ப்பரேசன் மேஸ் திரியை மக்கள் கேள்விக் கனைகளால் துளைக்க அவர் களோ, உங்களுக்கு எவ்வளவு செஞ்சாலும் போதாது என்று கோபத்தோடு கூறிவிட்டு போய்விட்டார், அப்படி என்ன செய்து விட்டீர்கள் என்றனர் மக்கள்.
கதிரவன் காலனியில் சாக்கடை அள்ளும் பணி நடந்து கொண்டிருக்க, தோழர்கள் சிலர் ஒவ்வொரு வருக்கும் முன்னால் உள்ள குப்பைகளை பாலிதின் பைகளில் சேகரித்து தெருவோரங்களில் வைத்தனர். மக்களும் வீட்டினுள் உள்ள குப்பைகளையும் சேகரித்து வந்து அதில் போட்டனர். 
பிளீச்சிங் பவுடர் தூவிய பிறகு அங்குள்ள மக்களுக்கு தனியாக தேவையான அளவிற்கு பிளீச்சிங் பவுடர் கொடுத்து விட்டு அவர்களின் ரொம்ப நன்றிங்க! ரொம்ப நன்றிங்க! என்று நமக்கு அளித்த நெஞ்சம் நிறைந்த நன்றிகளை பெற்றுக் கொண்டு திரும்புகிற வழியில் இருந்த குப்பைகளையெல்லாம் பைகளில் சேகரித்துத் கொண்டே வந்ததை பார்த்த மக்கள் பலரும் பாராட்டினர். குறிப்பாக பள்ளிக்களுக்கே போகாத ரீட்டா என்ற பெண் தோழர்களின் பணியைப் பாராட்டி ஆங்கிலத்தில் பேசி நம்மை அசத்தினார். எப்படி வர்றாங்க பாரு! நம்ம வீட்டு பசங்கக் கூட இந்த மாதிரி செய்ய மாட்டாங்க என்றெல்லாம் கூறி தோழர்களின் பணியை வியந்து போற்றினர்.
பெரியார் பற்றி குமணன் சொன்னவை
முன்னதாக தூய்மை செய்த மஞ்சக்கொல்லைத் தெருவில் நமது பணிகளை பாராட்டி பேசிய குமணன் என்பவர் 5 ஆண்டுகளில் இங்கு கவுன்சிலர் ஒரே ஒரு முறைதான் வந்தார் என்ற வழக்கமான பல்லவியைப் பாடிவிட்டு, பெரியாரைப் பற்றியும், அவர்தம் புத்தகங்களைப் பற்றியும், முரளீஸ்கபே போராட்டம் பற்றியும், பார்ப்பனர், பார்ப்பனரல் லாதாரின் போராட்டங்கள் பற்றியும் பேசி நம்மை அசத்தினர்.
இந்தப் துப்புரவுப் பணியில் பெரியார் திடல் சுரேஷ், உடுமலை வடிவேல், தீபிகா, இசையின்பன், பசும்பொன், கலைமதி, சீர்த்தி (மறைந்த இறையன், திருமகள் செய்து கொண்டிருந்த கழகப் பணிகளின் தொடர்ச்சியானது போல இசை அண்ணன் குடும்பத் தினரும் இந்த துப்புரவுப் பணியில் தங்களை ஈடுபடுத் திக்கொண்டனர்) ரோஸ், பழனிகுமார் ரேவந்த்குமார், தமீம், சரண்யா, தாமு, சிவா, பிரசாந்த், சல்மா, பிரேம்ஷா, விஜய், மோகன் ஆகியோர் அடங்கிய குழுவை பிரின்சு என்னாரெஸ் பெரியார் ஒருங்கி ணைத்தும் அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர். தளபதி பாண்டியன் வழிகாட்டியும் சிறப்பித்தனர்.
மேற்பட்ட 20 பேரடங்கிய குழுவோடு ஒன்றி ணைந்து மஞ்சள் கொல்லை பாதிரியார் கென்னடி, மதன், மோகன், தண்டபாணி ஆகியோரும் கதிரவன் காலனியைச் சேர்ந்த சலீம்பாஷா, தேன்மொழி, மசூதா, தேவி, குமார், வினோத், சசி, ஹசீனா, பர் ஹானா, இலியாஸ், போன்றோரும் பணி செய்தனர். மேற்கண்ட பணிகளுக்கு தளபதி பாண்டியனின் இல்லத்தினர் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.
பணிகள் தொடரும்
மக்கள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கும் இந்தத் தூய்மை பணி மற்ற நிவாரணப் பணிகளோடு மக்களுக்கு தேவை இருக்கிற வரையிலும் தொடரும்.
இந்த துப்புரவுப் பணியில் நாம் ஈடுபட்டிருந்ததை முகநூலில் பார்த்த தோழர்கள் பலர் நம்மிடம் எங்களை ஏன் கூட்டிக்கொண்டு போகவில்லை என் றும், அடுத்தமுறை நாங்களும் இந்தப்பணிக்கு வருவோம் என்று உரிமையோடு கூறியது நம் கழகத்தின் மனித நேயப் பணிக்கு கட்டியம் கூறியது போல இருந்தது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அழகிய சென்னையை உருவாக்கலாம்



விடுதலை நாளிதழில்  2015 ஜூன் மாதம் உலக சுற்றுப்புறச்சூழல் நாள் குறித்த சிறப்புக் கட்டுரையில் எல்நினோ விளைவு பற்றி தெளிவாகக் குறிப்பிட்டு இந்திய நகரங்களுக்கு வரும் பாதிப்பு குறித்து அன்றே விரிவாக விளக்கப்பட்டு இருந்தது.    அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நல்ல மழை பெய்யும், 
வங்காள விரிகுடாக் கடலில் தொடர்ந்து ஏற்படும் காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் அதிக மழை பெறும், உள் மாவட்டங்களுக் கும் மழைப் பொழிவு இருக்கும். முக் கியமாக தலைநகர் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங் களான காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் போன்றவை எப்போதும் அதிக பாதிப்பைப் பெறும் மாவட்டங்களாகும். சென்னை மாநகரைப் பொறுத்த வரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து மழைவெள்ளப் பாதிப்பின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டு இருக்கிறது.
சென்னை நகரின் பதிவு களைக் காணும் போது, முதல் முதலாக  1943 ஆம் ஆண்டு கடுமையான வெள்ளப் பாதிப்புகள் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு, 1950, 1957, 1961, 1962, 1978, 1985, 2002,  2005, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் வெள்ள பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2012 நீலம் புயலின் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு இரண்டு ஆண்டுகள் சென்னை மழைப்பொழிவைப் பெறவில்லை. 2015-ஆம் ஆண்டு கோடையில் இந்தியா, இலங்கை, 
உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் நாடுகளில் ஏற்பட்ட கடுமையான வெப்பமே மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்பிற்கு அச்சாரமிட்டு விட்டது, ஒன்று கடுமை யான வறட்சி அல்லது கடுமையான மழைவெள்ளம் இரண்டில் ஏதாவது ஒன்று நிகழ்வது உறுதியாகிவிட்டது. மழைக்காலத்தில் புயலுடன் கூடிய மழை ஏற்பட்டால் கோடைகாலத்தில் கடுமையான வறட்சி என்பது உறுதி யாகியுள்ளது.  சென்னையில் மழை பெய்து வெள்ளம் வரும் போதெல்லாம் செம் பரம்பாக்கம், புழல், 
வீராணம் உள் ளிட்ட  சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்து தண்ணீர் வீணாக கடலில் கலப்பது ஆண் டாண்டு காலமாக சென்னை நகர மக்கள் பார்த்து வந்த தொடர் விளைவுகள். அதே போல் கோடைக் காலம் என்ற உடனேயே ஆந்திர மாநிலம், கிருஷ்ணா ஆற்றிலிருந்து நீர் கேட்டு கையேந்தி நிற்பதும் தொடர் கதையாக உள்ளது.  தீவுக்கூட்டங்கள் எப்படி மும்பை நகரமாகியதோ அதேபோல் நன்னீர் ஏரிகள் சூழ்ந்த நகரமாக சென்னை இருந்தது. 
இயற்கை எப்போதும் தன்னுடைய பாதையை சீராக அமைத்து முன்னேறிக்கொண்டே இருக்கிறது. அது படைப்புத்தூண் என்ற ஒளிர்முகில் கூட்டத்தில்  ஞாயிறு பிறந்தது முதல் இன்று பூமி என்ற ஒன்று உயிரோட்டம் நிறைந்து காணப்படுவது வரை தொடர்கிறது. இயற்கையின் ஆற்றல் முன்பு எந்த ஒரு செயற்கை ஆற்றலும் எதிர்த்து நிற்க முடியாது, அப்படி நிற்க முயன் றால் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும். ஆனால் அந்த இயற் கையை, சிதைக்காமல் ஆக்கத்திற்குப் பயன்படுத்தலாம். இதைத்தான் அய்ரோப்பிய நாடுகளில் உள்ள பல நகரங்கள் மற்றும் தாய்லாந்தின் பாங்காக் நகரமும் செய்துள்ளது.
ஏரிகள்
சென்னையைச் சுற்றி 1800-ஆம் ஆண்டு வாக்கில் 700-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. மேலும் நூற்றுக்கணக் கான சிறிய குளம் மற்றும் கண்மாய்கள் (நீர்த்தேக்கங்கள்) இருந்தன. பருவ காலத் தில் கிடைக்கும். மழை நீர், ஏரிகள் மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களில் தங்கிவிடும். அதில் 1. செம்பரம்பாக்கம், 2.பூண்டி, 3. சோழவரம், 4. புழல், 5. வியாசர்பாடி ஏரி, 6. வேளச்சேரி ஏரி, 7.ஆதம்பாக்கம் ஏரி, 8. மாதவரம் ஏரி 9.விருகம்பாக்கம் ஏரி, 10.வில்லிவாக்கம் ஏரி போன்றவைகள் இன்றும் உள்ளன.  பெரிய ஆறுகள் 1.ஆந்திராவில் இருந்து வரும் கொசஸ் தலை ஆறு சென்னை நகருக்குள் 17 கிமீ தூரம் ஓடுகிறது. 2. திருவள்ளூர் மாவட்டம், கேசாவரம் ஏரியில் இருந்து புறப்படும் கூவம் ஆறு சென்னைக்குள் 60 கிமீ தூரம் பயணிக் கிறது,
3. மாகாணியம் மலையம்பட்டு ஏரியில் இருந்து துள்ளியோடும் அடையாறு சென் னைக்குள் 40 கிமீ தூரம் பயணிக்கிறது.
இந்த ஆற்றுநீரை கடலுக்கு எடுத்துச் செல்லவும், நகரில் பல்வேறு சிறிய குளம் மற்றும் கண்மாய்களுக்கு ஆற்று நீரை  கொண்டு சேர்க்கவும் பல்வேறு நீர்வழித் தடங்கள் சென்னையில் இருந்தன. அவற்றில் இன்று இருப்பவை கால்வாய்
1. வடக்கு பக்கிங்காம் கால்வாய் எண் ணூரில் இருந்து துவங்கி வடக்கு கூவம் ஆறுவரை 58 கி மீ பயணிக்கிறது.
2. மத்திய பக்கிங்காம் கால்வாய்  தெற்கு கூவத்தில் துவங்கி அடையாறு வரை 7 கிமீ தூரம் நகருக்குள் பாய்கிறது.
3. தெற்கு பக்கிங்காம் கால்வாய் அடையாற்றில் துவங்கி மரக்காணம் வரை 108 கிமீ தூரம் பயணிக்கிறது.
4. ஓட்டேரி நல்லான் கால்வாய் வில்லி வாக்கம் ஏரியில் இருந்து வடக்கு பக்கிங் காம் கால்வாய் வரை 11 கிமீ சென்னை நகருக்குள் பயணிக்கிறது.
5. விருகம்பாக்கம் கால்வாய் விருகம் பாக்கத்தில் துவங்கி மத்திய கூவம் வரை 7 கிமீ தூரம் பாய்கிறது.
6. கொடுங்கையூர் கால்வாய் மாத வரம் ஏரியில் துவங்கி வடக்கு பக்கிங்காம் வரை நகருக்குள் 7 கிமீ தூரம் பாய்கிறது.
7. வீராங்கல் கால்வாய் ஆதம்பாக் கத்தில் இருந்து பள்ளிக்கரணை வரை 3 கிமீ வரை செல்கிறது.
8. காட்டன் கால்வாய் வியாசர்பாடி ஏரியிலிருந்து தொடங்கி  தண்டையார் பேட்டையில் வடக்கு பக்கிங்காம்  கால் வாய்வரை 7 கிமீ தூரம் பயணிக்கிறது.
9. வேளச்சேரி கால்வாய், வேளச்சேரி ஏரியில் இருந்து பள்ளிக்கரணை வரை 2.30 கிமீ நகருக்குள் ஓடுகிறது.
இந்தக் கால்வாய்கள் அனைத்தும் சென்னை மற்றும் புறநகரை  முழுமையாக இணைத்து பாய்ந்துகொண்டு இருக்கின் றன. இந்தக் கால்வாய்களுடன் 500-க்கும் மேற்பட்ட சிறிய கால்வாய்கள் இணைந் துள்ளன.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியின் மொத்த பரப்பளவு 1600 கி.மீ சுற்றளவு தற்போது சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்கள் புறநகர் மின் தொடர்வண்டி இணைப்பு ஏற்பட்டதால் எல்லை மாவட்டங்களும் சென்னையா கவே மாறிவிட்டன. ஒரு திரைப்படப் பாடலில் என்னவளம் இல்லை இந்த திருநாட்டில், 
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற வரிகளை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.  அய்ரோப்பாவில் பல்வேறு நகரங்கள் இதே நடைமுறையைப் பின்பற்றி தங்கள் நகரங்களுக்குள் செல்லும் கால்வாய்களை உள்ளூர் நீர்வழிப் பயணத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் அந்த நாட்டின் சுற்றுலாவும் சிறந்து விளங்குகிறது.
முக்கியமாக வியன்னா, பெல்கிரேட்ஸ், ஆம்ஸ்டர்டாம், மாட்ரீட், ரோஸ்வீக் போன்ற நகரங்களைக் கூற லாம். மேலும் நார்வே ஓஸ்லோவில் ஆண்டுக்கு 7 மாதங்கள் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கும் கால்வாய்களைக் கூட, கோடைக் காலத்தில் நீர்வழித்தடமாக பயன்படுத்துகின்றனர்.  மேலே சொன்ன நகரங்கள் எல்லாம் பெரும்பாலும் செயற்கையான கால்வாய் களை உருவாக்கி நகரங்களின் பல்வேறு பகுதிகளை இணைத்துள்ளனர்.
பாங்காக் நகரமும், சென்னை நகரமும் ஒரே பருவநிலையைக் கொண்டதுதான் பாங்காக் நகருக்குள் சாவோ பரையா நதி பாய்கிறது. அந்த நகர நிர்வாகம் அந்த நதியை நகரின் பல்வேறு சுற்றுலாத் தலங்களைச் சுற்றிச்செல்லும் கால்வாய் களாக மாற்றியதன் விளைவு, பாங்காக் நகர சுற்றுலாவில் அந்த நதிக்கால்வாய்ப் பயணமும் முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டாண்டு காலமாக ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தாய்லாந்து நல்ல மழையைப் பெறுகிறது.  பாங்காக் நகரத்தில் ஜூலை முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை கடுமையான மழை பொழிகிறது. ஆனால் அங்கு எந்த ஒரு இடத்திலும் மழைநீர் தேங்காது,
 காரணம் நகருக்குள் இருக்கும் கால்வாய்கள் அனைத்தும் மழை நீரை கொண்டுசென்று ஆற்றுடன் கலந்து விடுகின்றன. எளிமை யான தொழில்நுட்ப உதவியுடன் நகருக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் ஆற்று நீர் கடலில் கலந்துவிடுகிறது. சென்னை நகரில் உள்ள ஏரிகளை வலுப்படுத்தி சென்னை நகரத்தின் ரத்த நாளங்களைப் போல் இருக்கும் கால் வாய்களிலும் ஆற்றிலும் கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் கடை மடை மதகு முறையைப் பயன்படுத்தி மழைக்காலங்களில் எவ்வளவு பெரிய பயமுறுத்தும் மழை வந்தாலும் அந்த நீரை சில மணிநேரங்களில் கடலில் சென்று கலக்கும் வகையில் கால்வாய்களை சீர் செய்யலாம், அதன் பிறகு ஆண்டு முழு வதும் கால்வாய்களில் தண்ணீர் இருப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.
பயன்கள்
இதன் பயன்களைப் பட்டியலிட் டால் சென்னை சந்திக்கும் பல்வேறு சிக்கல்களை எளிதாக தீர்த்துவிடலாம் முக்கியமாக நகரில் குடிநீருக்கும் பஞ்சம் வராது. கால்வாய்ப் போக்கு வரத்தின் மூலம் வாகன நெரிசலை அறவே தவிர்க்கலாம்.
அதுமட்டுமா சென்னை நகருக்கு சுற்றுலா வருப வர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகும். இதன் மூலம் குறைந்த பட்சம் நேரடியாகவும், மறைமுகமாக வும் லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை கள் நடுத்தர மக்கள் பயனடைவார்கள். கால்வாய்க் கரைகளை தோட்டங் களாக்குவதன் மூலம் நகரின் கால நிலையில் இனிமையான மாற்றங்கள் வரும், நாம் குளுமையான பெங் களூரை எண்ணி ஏங்கிக்கொண்டு இருக்கும் காலம் மாறி பெங்களூரு மக்கள் சென்னையை எண்ணி ஏங்கும் நிலை வரும். 
பாஜக போன்ற கட்சிகள் எடுத்த எடுப்பிலேயே ஏழைகளை சென்னை நகரை விட்டு விரட்டவேண்டும் என்றும் அவர்கள் தான் சென்னை நகரின் வெள்ளபாதிப்பிறகு காரணம் என்று அறிக்கை விடுகிறது. சென்னை மட்டுமல்ல உலகின் பெரிய நகரங் களின் உருவாக்கத்திற்கு பின்புறம் அந்த ஏழைகளின் கடின உழைப்பு தான் உள்ளது என்பதை பணத் திமிரில் இருக்கும் கட்சிகள் மறந்து விடுகின் றன. இந்த ஏழைகளின் வாழ்வாதாரத் தையும் வசிப்பிடத்தையும் பல்வேறு வசதிகளுடன் மாற்றி சென்னை நகரை அழகான உயிரோட்டம் நிறைந்த சிங்காரச் சென்னையாக மாற்றும் திறன் இந்தக் கால்வாய்களுக்கு உண்டு.
இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யவோ, அல்லது அயல் நாட்டுப் பொறியியல் வல்லுநர்களுக்கு நமது வரிப்பணத்தை அள்ளித்தந்து யோசனை கேட்கவோ தேவை யில்லை. மெட்ரோ தொடர்வண்டிக் கான திட்டப்பணிகளுக்கு செலவழித்த தொகையில் சிறுபங்கை இந்தக் கால்வாய்சீரமைப்பிற்கு செலவழித் தால் போதும், மெட்ரோ தொடர் வண்டி திட்டப் பணியால் 90 விழுக் காடு வட இந்தியர்கள் தான் பயன் பெற்றனர், பெறுகின்றனர். 
ஆனால் இந்தக் கால்வாய் சீரமைப்புப் பணியை தொடங்கினால் முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதனைச் சுற்றி யுள்ள மக்களின் உழைப்பைப் பயன் படுத்தி நமது மக்களின் பொருளா தாரத்தை மேம்படுத்தலாமே? இதோ தேர்தல் வருகிறது, கண்டிப்பாக மழைவெள்ள பாதிப்பும் வரும்தேர்தலில் எதிரொலிக்கும். கால்வாய்களைச் சீர்செய்யாமல் சென்னையை மழைவெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முடியாது, கால்வாய்களைச் சீர் செய்து சென்னை நகர மேம்பாட்டிற்கு திட்டங்களைக் கொடுக்க வலியுறுத்துங்கள்.
வரும் நமது எதிர்காலத்தலைமுறையாவது அழகிய பசுமையான வாகனநெரிசல் இல்லாமல், விடுமுறைக்காலங்களில் நகரை சுற்றிவர குடும்பத்துடன் படகுச் சவாரி செய்ய வழிவகுப்போம். அதைவிட இனிமேல் மழை வெள் ளத்தால் அழிவில்லாமல் இதை விட அதிக மழை பொழிந்தாலும் அந்த மழைநீரை சேமித்து அழகிய சென்னை யின் பயன்பாட்டிற்குச் செலவழிப்போம். - சரவணா ராஜேந்திரன்

எதற்கும் எல்லைக் கோடு தேவை!


சுதந்திரம் வேண்டுமென்று விரும்பு கிறோம். நியாயந்தான், தேவைதான். ஆனால் அச்சுதந்திரம் ஓர் எல்லை யுடன் இருந்தால்தானே, மக்களுக்கும் சரி, தனி மனிதர்களுக்கும்  சரி அது பயன்படும்?
வறட்சி பற்றி வருத்தப்பட்டோம் சில வாரங்களுக்குமுன்.
மழை வராதா என்று ஏங்கினோம்! இன்று தமிழ்நாட்டில் பல மாவட் டங்கள், சென்னை துவங்கி குமரி வரை, மழை பெய்து பயிர்களையும், உயிர் களையும் நாசப்படுத்தும் கொடுமை கண்டு குமுறாத நெஞ்சங்களே இல்லை. காரணம்  என்ன? பல மடங்கு அதிகமான மழை - அதன் காரணமாக வெள்ளக்காடு - அதனால் ஏற்பட்ட சொல்லொணா இழப்பும் துயரமும், துன்பமும் - விளைவுகள்!
அளவோடு பெய்திருந்தால் வளமோடு பயிர்கள் செழிக்குமே. இது, ஓர் உதாரணத் திற்காகத்தான்! சாலைகளில் கார் ஓட்டும் நாம், எவ்வளவுதான் சாலைவரி கட்டினாலும், கார் புதிய கார் என்றாலும், சாலை சிமெண்ட் சாலை என்றாலும், அதி வேகமாக எல்லா இடங்களிலும் கார் ஓட்டும் சுதந்திரத்தை, கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தாமல் பயன்படுத்த முடியுமா?
உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிற்சில நேரங்களில் அவதிப்படுவோர், நோய் வந்தவுடன் அந்நோய் பற்றி அரைகுறை அறிவுடன் இனிமேல் நமக்கு வாழ்வே இல்லை என்று அச்சத்தின் உச்சிக்குச் சென்று, அதீதக் கற்பனையை, தம் இஷ்டம்போல் - எல்லையின்றி செலுத் தினால் அதுவே இறப்பில்கூட பல நோயாளிகளைக் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடுமே - இல்லையா?
அண்டை நாடுகளுக்கு இடையே போர் மேகம் குவிவதற்கு ஒருகாரணம் எல்லை தாண்டுவதுதானே!
எதற்கும் எல்லை வேண்டும் - கட்டுப்பாடுகள் தேவை.
காட்டாற்று வெள்ளத்தால் யாருக்கு, ஊருக்கு என்ன பயன்?
அதையே அணைக்கட்டித் தேக்கி, வெள்ளத்தடுப்பு காரணமாக (தடுப்பணை) பயனுறு வகையில் செய்தால் பொது நலம் - குடி மக்கள் வாழ்வு வசதிகள் பெருகுமே!
மனித வாழ்வில்கூட மனிதர்களுக்கு இயல்பாக உள்ள சுயநலம், ஓர் எல்லைக் குட்பட்டு இருந்தால் தனி மனிதர்கள்கூட நல்ல வகையில் ஒளி வீசும் பல நற்பணிகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆக முடியும்!
ஆனால் 100-க்கு 90 பேர்கள் எல்லை யற்ற சுயநலத்துடன்தான் தங்கள் வாழ்வை மட்டுமே கணக்குப் போட்டு காய் நகர்த்தும் எப்போதும் எதையோ எதிர்பார்த்த வாழ்வாகவே ஆக்கிக் கொண்டு எல்லை தெரியாத தொல்லைக்கு ஆளாகித் திண்டாடுகிறார்கள்!
தந்தை பெரியார் அவர்கள் குடும்ப வாழ்வின் சங்கிலித் தொடர் விலங்கு களை நாமே எப்படி மாட்டிக் கொள் ளுகிறோம் என்பதை நன்கு விளக்குவார்.
முதலில் திருமணம் - பிறகு பிள்ளை குட்டிபெறல், அதை வளர்க் கக் கவலை - அதற்கு படிப்பு, வேலை கவலை, (சுயநலத்தின் வெளிப் பாடுகள்) அதன்பின் அவர்களுக்குத் திருமணம் - குழந்தைப் பேறு என்று எல்லையற்ற தீய வட்டம் சுழன்று கொண்டே உள்ளதால் மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தையும், சுயமரியாதை யையும் இழந்து மாறி மாறி ஒரு சுழற்சி - சைக்கிள்போல நடப்பதால் அதில் சிக்கிச் சீரழிகிறார்கள்.
பறவைகளை ஒப்பிடுகையில் தாய்ப் பறவைகள் குஞ்சுகள் இறக்கை முளைக்கும் வரைதானே காப்பாற்று கின்றன. பிறகு அதற்காக சிபாரிசுக்காக  செல்லுகின்றனவா? ஆனால் மனிதர் கள்  அப்படியா? யோசியுங்கள்.
- கி.வீரமணி
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...