Tuesday, December 15, 2015

கோவிலுக்குள் செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் என்னை தடுத்தனர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு


புதுடில்லி, டிச.15 அண்மையில் அசாம் சென்றிருந்த போது பார் பேதா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குள் என்னை செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கள் தடுத்ததாகவும், இது தான் பாரதீய ஜனதாவின் அரசியல்  பாணி என்றும் இது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று எனவும் காங்கிரஸ் துணைத்தலை வர் ராகுல் காந்தி தெரி வித்துள்ளார். 
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:- நான் அசாம் மாநிலத்திற்கு சென்றிருந்த பொழுது, அங்குள்ள பர்பேதா மாவட்டத்தில் இருக்கும் கோவில் ஒன்றுக்கு செல்ல விரும்பினேன். ஆனால், கோவில் இருந்த ஆர்.எஸ். எஸ். தொண்டர்கள் என்னை கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுத் தனர். பாரதீய ஜனதா செயல்படும் விதம் இது தான். 
என்னை தடுத்து நிறுத்த அவர்கள் யார்? எனவும் மிகவும் ஆவேச மாக ராகுல் காந்தி பேசினார். கடந்த வெள் ளிக்கிழமை பர்பதா மாவட்டத்திற்கு சென்று இருந்த ராகுல் காந்தி, இந்த பிரச்சினைக்கு பிறகு  ஆர்.எஸ்.எஸ் தொண் டர்கள் கோவிலில் இருந்து வெளியேறிய பின்னர் அன்றைய தினம் மாலை கோவிலுக்கு சென்று வழி பட்டார். 
அசாம் முதல் அமைச்சர் தருண் கோகாய் நேற்று இவ்விவ காரம் குறித்து பேசும் போது, ராகுல் காந்தியை பர்பேதே கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுக்க பாஜகவும் ஆர்.எஸ். எஸும் சதியில் ஈடுபட் டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...