Sunday, July 19, 2015

1200 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு


 திண்டுக்கல், ஜூலை 19_ தமிழகம் முழுவதும் 1,200 அரசுப் பள்ளிகளை மூடு வது என தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு ஆரம்பப் பள்ளி ஆசிரி யர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலக்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மோசஸ் செய்தி யாளர்களிடம் கூறியதா வது:
இடைநிலை ஆசிரியர் கள் பணியிட மாறுதல் களுக்கான கலந்தாய்வை தமிழக அரசு ஓராண்டு என்பதற்குப் பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று அறிவித்துள்ளது. இதனை கைவிட்டு ஒவ் வொரு ஆண்டும் கலந் தாய்வுக் கூட்டங்களை நடத்த அரசு முன்வர வேண்டும் என்று ஜேக்டோ மற்றும் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக் கொள் கிறோம். இது ஒளிவுமறை வற்ற கலந்தாய்வாக அமைய வேண்டும்.

ஆங்கில வழிக்கல்வி முறை துவக்கப்பள்ளி களை அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. அதற் கான ஆசிரியர்களை நிய மிக்கவில்லை. அரசு தமிழ் வழிக்கல்வியை ஊக்கப் படுத்தவேண்டும். குறைந்த மாணவர்கள் எண் ணிக்கை உள்ள பள்ளி களை மூட அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது. கூடுதலான மாணவர் வருகையை உறுதிப்படுத்திட அரசு தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநிலம் முழுவதும் 1200 அரசுப் பள்ளிகளை மூட அரசு முடிவெடுத் துள்ளது. அரசு பள்ளிகள் இயங்காமல் இருக்க தனி யார் பள்ளிகளுக்கும், சுய நிதி பள்ளிகளுக்கும் அரசு ஊக்கமளித்து வருகிறது. 

அரசு பள்ளிகளை இழுத்து மூட இது ஒரு திட்ட மிட்ட சதியாக நாங்கள் பார்க்கிறோம். அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் அரசு உதவ வில்லை. ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் 5_க்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகளுக்கு அனுமதி வழங்குகிறது அரசு. அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரி யருக்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்திற்கு மாறாக ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள் என்ற விகிதத்தை அமலாக்கு கிறது. இதனால் கல்வியின் தரம் குறைகிறது.

தேர்தல் வாக்குறுதியை அதிமுக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது. அதி முக தனது தேர்தல் அறிக் கையில் நாங்கள் ஆட் சிக்கு வந்தால் கோரிக் கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங் களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவோம், தீர்வு காணுவோம் என்று கூறியிருந்தது.

மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளின் அனுமதியை ரத்து செய்வோம் என்று கூறியது. ஆனால் அதிமுக வின் ஆட்சி நிறைவடை கிற தறுவாயில் உள்ளது. இதுவரை ஆசிரியர்களை அழைத்துப் பேசவில்லை.

இந்நிலையில், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஆசிரியர் கள் கூட்டமைப்பான ஜேக்டோவின் சார்பில் சென்னையில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 2-அன்று அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் எங் களது சங்கம் முழுமையாக பங்கேற்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Friday, July 10, 2015

ஆர்.எஸ்.எஸ்.இன் சமஸ்கிருத அரசியல்



- குடந்தை கருணா

பாரதீய சிக்சன் மண்டல் எனும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உள் பிரிவு, சமஸ்கிருதம் கட்டாயம் கற்க வேண்டும் அல்லதுபிற செம் மொழிகளான அராபிக், பர்சியன், லத்தீன், கிரேக்கம் ஆகிய ஒரு மொழியைக் கற்கவேண்டும். இதற் கான மொழிக் கொள்கை உரு வாக்கப்பட வேண்டும் என அர சுக்கு வேண்டுகோள் விடுத்துள் ளது. ஆர்.எஸ்.எஸ். மொழியில் வேண்டுகோள் என்பது கட்டளை என்பதாக புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாட்டில் வழக்கில் இல்லாத ஒரு மொழி சமஸ்கிருதம். எந்த மாநிலத்திலும் பேசப்படாத ஒரு மொழியை, இந்த நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் கற்கவேண்டும். அப்போது தான் நமது கலாச்சாரம் பாதுகாக் கப்படும் என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதில் சமஸ்கிருதத்தோடு சேர்த்து பேசப்படும் பிற செம் மொழிகளான அராபிக், லத்தீன், கிரேக்க, பர்சியன் மொழியை கற்க வேண்டும் என்கிறார்கள். இதையும் இந்த நாட்டில் எத்தனை பேர் பேசுகிறார்கள்;

 எந்தெந்த மாநிலத் தில் பேசுகிறார்கள் என்று தெரிய வில்லை. இது நாளும் ஹிந்திதான் தேசிய மொழி என்று கூறி வந்த பார்ப்பனக் கூட்டம், இப்போது, ஹிந்தி மொழி படிக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்கிறது. ஹிந்தி கற் காததால் நாங்கள் பாதிக்கப்பட் டோம் என இங்கே கூறும் அரை வேக்காடுகள், ஆர்.எஸ்.எஸ்.இன் இந்த கருத்துக்கு என்ன விளக்கம் வைத்துள்ளார்கள் எனத் தெரிய வில்லை. இதெல்லாம் கிடக்கட்டும். தமிழ் மொழியை செம்மொழி என அறிவித்து பல ஆண்டுகள் ஆயிற்று. ஏழு கோடிக்கும் மேல் இந்தியாவில் தமிழ்மொழியை பேசுகிறார்கள். சமஸ்கிருதம் அல்லது பிற செம்மொழிகள் என்று பட்டியல் இட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தமிழ் மொழியை பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே? அதுவும் செம் மொழிதானே? ஹிந்தித் திணிப்பை எதிர்த்து பெரியார் போராடியபோது, ஹிந்தியை வெறும் ஒரு மொழித் திணிப்பாக மட்டும் பார்க்க வில்லை; மாறாக, ஆரிய மொழி யான சமஸ்கிருதத்தை நுழைப் பதற்கு விடப்படும் முன்னோட்டம் என்பதாகத்தான், ஹிந்தித் திணிப்பை கடுமையாக எதிர்த்தார்.

இப்போதும் கூட, ஆர்.எஸ்.எஸ். ஆரிய மொழியான சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று கூறும் அதே நேரத்தில், அதற்கு மாற்றாக, அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள எந்த இந்திய மொழியையும் கூறாமல், அராபிக், பர்சியன், லத்தீன் போன்ற பிற அன்னிய  நாட்டு மொழி களைத் தான் துணைக்குச் சேர்க் கிறது. லண்டனில் 1746- இல் பிறந்து, சட்டம் பயின்று, கல் கத்தாவின் அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதியாக 1784- இல் பதவி ஏற்ற சர் வில்லியம் ஜோன்ஸ், சட்டம் மட்டுமல்லாது, லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, அராபிக், பர்சியன் போன்ற பல மொழிகளைக் கற்றவர். இந் தியாவில் சமஸ்கிருத மொழியைக் கற்று ஆராய்ச்சி செய்தவர். அவர் 1794 இ-ல் மறைவதற்கு முன், சீன மொழி உள்பட 28 மொழிகளைக் கற்றவர். கல்கத்தாவில், 1784- இல் ஏசி யாட்டிக் சொசைட்டி ஆப் பெங்கால் எனும் அமைப்பை தோற்றுவித்தவர்: மனுஸ்மிருதி, காளிதாசனின் படைப்புகளை மேலை நாடுகள் தெரிந்து கொள்ள மொழி பெயர்த்தவர். இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரை கள், அவர் மறைவுக்குப் பின் 1807- இல் அய்ரோப்பாவில் பதிமூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது. அய்ரோப்பிய செம்மொழிகளான லத்தீன், கிரேக்கம், பர்சியன் ஆகிய மொழிகள் எதன் அடிப்படையில் உருவானதோ, அந்த ஆதாரத்தைக் கொண்டு உருவான மொழிதான் சமஸ்கிருதம் என்ற கருத்தை, 1786- இல் தனது மொழி பற்றிய ஆராய்ச்சி குறித்து பேசுகையில், சர் வில்லியம் ஜோன்ஸ் சொல்கிறார். இப்போது புரிகிறதா? செம் மொழிகள் பட்டியலில் உள்ள சமஸ்கிருதத்தைப் படி; இல்லை யேல் பிற செம்மொழிகளான லத்தீன், கிரேக்கம், பர்சியன் போன்ற மொழிகளைப் படி என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்., நம் திராவிட மொழியான செம்மொழி தமிழைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை எனப் புரிகிறதா?

இந்திக்கு ஏன் முன்னுரிமை?


பத்திரிகை, தொலைக்காட்சிகள், பதாகைகள் என விளம் பரங்களுக்கு செலவிடும் மொத்தத் தொகையில் குறைந்த பட்சம் 50 சதவீதம் ஹிந்தி விளம்பரங்களுக்கு செலவிடப்பட வேண்டும் என அரசின் அனைத்துத் துறைகளையும் மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்துத் துறைகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறை எழுதியுள்ள கடிதத்தில் விளம்பரங்களுக்குச் செலவிடும் தொகையில் 50 சதவீதத்தை ஹிந்தி விளம்பரங்களுக்குச் செலவிட வேண்டும். மீதமுள்ள 50 சதவீதத்தை ஆங்கிலம், பிராந்திய மொழி விளம்பரங்களுக்குச் செலவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி, இதர இந்திய மொழிகளைப் புறந்தள்ளிவிட்டு, ஆங்கில மொழி விளம்பரங்களுக்கு மத்திய அமைச்சகங்களும், துறைகளும் முக்கியத்துவம் அளிப்பதாக அலுவல் மொழிகளுக்கான நாடாளு மன்றக் குழுவின் கருத்தை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது என்று மத்திய உள்துறை வலியுறுத்தியுள்ளது.

மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பிஜேபி அரசு, அதிகாரத்திற்கு வந்த நாள் தொட்டே இந்தி, சமஸ்கிருதம் இரண்டையும் முன்னிலைப்படுத்துவதில் அதீத அக்கறை காட்டி வந்து கொண்டு தானிருக்கிறது.

கடுமையான எதிர்ப்புப் புயல்கள் சுழன்றடிக்கும்போது எதை எதையோ சமாதானங்களைச் சொல்லி, ஆமை தன் தலையை ஓட்டுக்குள் பதுக்கிக் கொள்வது போல நடந்து கொண்டு வருகிறது.!

தொடக்கத்தில் மத்திய அரசு அலுவலகக் கடிதங்கள் இனி இந்தியில் தான் இருக்க வேண்டும். சமூக இணைய தளங்களில் இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது. கண்டனங்கள் வெடித்துக்கிளம்பியுவுடன் இந்தி மொழி பேசும் மாநிலங் களுக்குத்தான் பொருந்தும், மற்ற மாநிலங்களுக்குப் பொருந்தாது என்று சொன்னார்கள்.

தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல; காஷ்மீர் முதல் அமைச்சராகவிருந்த உமர் அப்துல்லாவும், இந்தி பகுதியைச் சேர்ந்த முன்னாள் முதல் அமைச்சர் மாயாவதியும்கூட எதிர்ப்புக் குரலை ஓங்கிக் கொடுத்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் (விடுதலை 21.6.2014) ஒரு கேள்வியை எழுப்பினார்.

இந்தி பேசாத பகுதிகளில் தொடர்புக்கு இந்தி பயன்படுத் தப்படாது எனும்  உள்துறை அறிக்கையின் சாரம் உண்மையானால் இந்தியை அதிக அளவு பயன்படுத்துபவர்ளுக்குக் கூடுதல் சம்பளம் உயர்வு அளிக்கப்படும் என்பது எந்த வகையைச் சேர்ந்தது? என்று கேட்டாரே அதற்குப் பதிலே இல்லை. இவ்வளவு நிலைப்பாடுகள் இருந்தாலும், வட இந்தியர்கள் எப்பொழுதுமே இந்திக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை வாடிக்கையாகவே கொண்டவர்கள் - வாஜ்பேயி உட்பட; ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்திருந்தும் நாடாளுமன்றத்தில் இந்தியில் தான் பேசுவார். அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தபோது வாஜ்பேயிடம் கேட்டபோது, நாடாளுமன்றத்தில் நான் இந்தியில்தான் பேசுவேன் - உங்களுக்கு வேண்டுமானால் நான் பேசியதன் சுருக்கத்தை ஆங்கிலத்தில் கூறுகிறேன் என்றாராம்.

22 தேசிய மொழிகளை இந்திய அரசமைப்பு  சட்டம் அங்கீகரித்தாலும் இந்திக்கு மட்டும் ஏன் தனிச் சிம்மாசனம் என்பதுதான் இந்தி பேசாத பெரும்பாலான மக்களின் நியாயமான கேள்வியாகும்.

இவ்வளவுக்கும் இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை 25 கோடியே. பெரும்பான்மையினர் பேசும் மொழி என்பதெல்லாம் சுத்தப் புரட்டே!

அரசு விளம்பரங்களைச் செய்யும்போது 50 சதவீதம் இந்திக்குத்தான் முன்னுரிமை என்று மத்திய அரசு சுற்றறிக்கை விடுவது சட்ட விரோதமானது, நியாய விரோதமானது, ஏன் நம் பிக்கைத் துரோகமுமாகும். எல்லா மொழிக்காரர்களும் செலுத்தும் வரிப் பணம் இந்தியின் வயிற்றில் மட்டும் அறுத்துக் கட்டப்பட வேண்டுமா?

ஒரு நாட்டின் நிதி வலிமைக்கும், அந்நாட்டு மொழியின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு நாடு பொருளாதாரரீதியாக முன்னேறும்போது, அந்நாட்டு மொழிகளை கற்றுக்கொள்வதன் அவசியம் மிக மிக முக்கியமாகிறது. இந்தியாவிலும் அது நடக்கும். இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும்போது, இந்தி மொழியின் முக்கியத் துவத்தை உணர்ந்து உலகம் முழுவதும் பலரும் அதை கற்க ஆர்வம் கொள்வார்கள்.

மக்களுக்கும், மக்களுக்கும் இடையிலான தொடர்புதான், எந்த நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு அடிப்படை ஆகும். அதில், மொழியும், கலாசாரமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நான் வெளிநாட்டுக்குச் செல்லும்போதெல்லாம், அந்த நாட்டு மொழியில் சில வார்த்தைகள் பேசினால், அங்குள்ள மக்கள் உடனடி நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

மொழி என்பது தண்ணீர் போன்றது. எதில் அதை ஊற்றுகிறோமோ, அந்த நிறத்தையே அது பெறுகிறது. அது காற்று போன்றது. எந்த தோட்டம் வழியாக வருகிறதோ, அந்த மணத்தையும் சுமந்து வருகிறது.

உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவுடன் இந்தி பாடல்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன். அவர் ஒவ்வொரு இந்தி பாடலையும் தெரிந்து வைத்திருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தேன். இங்கு இந்திய படங்களும், இசையும் பிரபலமாக உள்ளன என்று  பேசியுள்ளார் ருசியாவில் பிரதமர் மோடி. ருசியாவில்கூட ருசிய மொழியை முன்னிறுத்திய காரணத்தால் தான் பிரிவினை எண்ணம் தலை தூக்கியது என்கிற பாடத்தை முதலாவதாக இந்தியப் பிரதமர் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தியாவிலேயே இந்தி மொழி மட்டும்தான் இருக்கிறது என்கிற கண்ணோட்டத்தில் பிரதமர் பேசி இருப்பது சற்றும் பொருத்தமற்றதே!

இந்தியாவில் செழுமை வாய்ந்த மொழிகள் ஏராளம்!  இன்னும் சொல்லப் போனால் இந்தத் திசையில் அடி மட்டமான வளமில்லாத மொழி இந்தியே!

பெங்காலி மொழி எட்டரைக் கோடி, தெலுங்கு ஏழரைக் கோடி, மராத்தி ஏழு கோடி, தமிழ் 7 கோடி, உருது 5 கோடி, குஜராத்தி 4.6 கோடி, கன்னடம் 4 கோடி, மலையாளம் மூன்றரைக் கோடி, ஒரியா 3.3 கோடி, சந்தாலி 64 லட்சம், காஷ்மீரி 55 லட்சம் மக்கள் பேசுகிறார்கள்.

இந்த மொழிகள் பேசுவோர் எல்லாம் இந்தியத் துணைக் கண்டத்துக்குள் தானே இருக்கிறார்கள். இந்தியாவிற்குள் கட்டுண்டு கிடக்கின்ற காரணத்தால் இந்த மொழியைப்பேசுவோர். இரண்டாந்தர குடிகளாக இருக்க வேண்டுமா? என்ற கேள்விகள் இந்தியா முழுவதும் வெடிக்கச் செய்யும் ஒரு நிலையை மத்திய பி.ஜே.பி. ஆட்சி தோற்றுவித்தால் - இந்த மொழிக்காரர்கள் தங்களின் தனித் தன்மையையும், பண்பாட்டையும் எப்படிக் காத்துக் கொள்வது என்ற திசையில் சிந்திக்க ஆரம்பிக்க மாட்டார்களா?

மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம்தான் என்பது ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கரின் கருத்து; சமஸ்கிருதத்தைத் திணிக்குமுன் - அதன் குட்டி மொழியான இந்தியை முன்னோட்டம் விட்டுப் பார்க்கிறார்கள் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சொல்லுவது சரியே! இந்தி பேசாத மக்களிடத்தில் எச்சரிக்கையும் - விழிப்புணர்வும் தேவை! தேவை!!   

கும்பமேளாவையொட்டி நாசிக் நகரில் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகமாம்!



நாசிக், ஜூலை 10_ மகா ராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் ஜூலை 14 அன்று கும்பமேளா என்ற அம் மணச் சாமியார்களின் கூட்டுக் களியாட்டம் நடைபெறும் இந்த நிகழ்வை ஒட்டி நாசிக் முழுவதும் 8 லட்சம் ஆணுறைகள்  விநியோ கிக்கப்பட்டுள்ளன.  

  ஜூலை 14 இல்

மும்பை நகரைச் சேர்ந்த பிரபல ஆணுறை விநியோகிக்கும் ஜே.கே.அன்ஷீல் மற்றும் ஜோய் லைஃப் லோடக்ஸ் இந்தியா பிரைவேட் லிமி டெட் என்ற இரண்டு நிறுவனங்களும் கடந்த மாதம் நாடு முழுவதும் விநியோகிக்கும் ஆணுறை யில் அளவை 60 விழுக் காடு குறைத்துள்ளது.  இது குறித்து அந்த நிறு வனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள் ளது  அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது,  மக ராஷ்டிரா நகரமான நாசிக்கில் ஜூலை 14 மகாகும்பமேளா நடை பெற உள்ளது இந்த கும்பமேளாவிற்காக எங்களது உற்பத்தில் 47 விழுக்காடு நாசிக் நக ரத்திற்கு அனுப்பியுள் ளோம். ஆகவே முன்னேற் பாடான இதர மாநிலங் கள் அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ளவேண்டு கிறோம் என்று அனுப்பி இருந்தது. அதே நேரத்தில் நாசிக் நகருக்கு அருகில் உள்ள பெருநகரங்களான மாலேகாவ் சிரிடி சங் கம்னேர் கோபர்காவ் உமர்காவ் போன்ற நக ரங்களில் பலமடங்கு ஆணுறைகள் வாங்கி இருப்பு வைத்தனர். எல் லாவற்றையும்விட மக ராஷ்டிர அரசு பாலியல் தொற்றுநோய் தடுப்புத் துறை வழக்கத்திற்கு மாறாக 8 லட்சம் ஆணு றைகளை நாசிக் மாவட் டம் முழுவதும் இலவச மாக வழங்க அனுப்பி யுள்ளது.   

பாலியல்நோய் தடுப்புத்துறை

வடமாநிலங்களில் சில ஆண்டிற்கு ஒருமுறை நாசிக், அலகாபாத், அரித் துவார் போன்ற நகரங் களில் நடக்கும் கும்ப மேளா விழாவில் லட்சக் கணக்கான நிர்வாண சாமியார்கள் ஒன்றுகூடு வார்கள். இவர்கள் கங் கையிலும், திரிவேணி சங் கமம் என்று அழைக்கப் படும் அலாகாபாத் நகரத் திலும் கோதாவரி நதி துவக்க இடமான நாசிக் கிலும் கூடி கும்மாளமிடு வார்கள். லட்சக்கணக் கான அம்மணச்சாமியார் கள் ஒன்று சேரும் போது பல விதங்களில் பிரச் சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மகராஷ் டிரா பாலியல்நோய் தடுப்புத்துறை கூறியுள் ளது. சாமியார்களுக்கு கவலையாம்  

கும்பமேளா நடக்கும் நிலையில், அதிகளவில் காண்டம்கள் வர வழைக்கப்படுவது விழா அமைப்பாளர்களை அதிர வைத்துள்ளது. சாமியார்கள் அதிக அளவு கூடும் நிலையில், இப்படி காண்டம்கள் விநி யோகம் செய்யப்பட்டுள் ளது தவறான முன்மாதி ரியை ஏற்படுத்தி விடும் என்று சாதுக்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளன ராம்.

4 லட்சம் பாலியல் தொழிலாளர்கள்

2013 ஆம் ஆண்டு அலகாபாத் நகரில் நடந்த கும்பமேளாவிற்குப் பிறகு வட உத்தரப்பிரதேசத்தில் மாத்திரம்  4 லட்சத்திற்கு அதிகமாக பாலியல் நோய் தொடர்பான நோயாள கள் அரசு மற்றும் பொது மருத்துவ மனையில் சேர்க் கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகத்துறை நிறுவனங்களில் நிருவாகப் பொறுப்புகளில் பெண்களை நியமனம் செய்வதில்லை

வணிகத்துறை நிறுவனங்களில் நிருவாகப் பொறுப்புகளில் பெண்களை நியமனம் செய்வதில்லை

அரசும் இப்பிரச்சினையில் அக்கறையோடு இருப்பதில்லை

மத்திய அமைச்சர் மேனகா குற்றச்சாட்டு!

கூட்டத்தை விட்டு கோபமாக வெளியேறினார்

புதுடில்லி, ஜூலை 10_ அசோசெம், எப்அய்சி சிஅய், சிஅய்அய் உள் ளிட்ட வணிகத்துறை களின் பல்வேறு பிரிவு களாக உள்ளவர்களி டையே நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பாஜக அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறைக்கான அமைச்சரான மேனகா காந்தி பங்கேற்றபோது, கொஞ்சம்கூட அக் கறையே இல்லாத கூட்ட மாக இருக்கிறது, கால விரயம்தான் என்று கோப மாகக்கூறிவிட்டு கூட்ட அரங்கைவிட்டு வெளியேறி விட்டார்.

நாட்டை கட்டமைப் பதில் போதிய அக்கறை யுடன் அவர்களில் எவ ருமே இல்லை என்று அவர் குற்றம் சாட்டியுள் ளார். மேனகா காந்தி கூட் டத்தில் பாதியிலேயே வெளியேறிய சம்பவத்தால் கூடியிருந்த பார்வையா ளர்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. கால விரயமானது
வணிக அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்பது என்பது மிகுந்த கால விரயமானது என்று மேனகா கூறியுள்ளார்.

நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ப தற்காகத்தான் இந்தக் கூட்டம் கூட்டப்படு கிறது. ஆனால், செயலாற் றுவதைக் காட்டிலும், அவர்களிடையே பேச்சு தான் பெரிதாக இருக் கிறது.

மேலும் அவர் கூறும் போது, நாடுமுழுவதும் பெண் களுக்கான 300 கழிப் பிடங்கள் மட்டுமே சிஎஸ்ஆர் மூலமாக கட் டப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறும் போது,

நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளின்படி, தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் இருக்கின் றன. நிறுவனங்களில் பாலி யல் புகார்களை பெற்று விசாரணை செய்து நட வடிக்கை எடுத்திட குழு அமைக்கப்பட்டு குறைந்த பட்சம் நிர்வாகத் தில் இயக்குநர்களாக ஒரு பெண்ணைக்கூட நிய மிக்காமல் உள்ளனர். அவர்கள் ஏராளமாக பேசுகிறார்கள். ஆனால் சிறிய அளவில் மட்டுமே அவர்களின் செயல்பாடு கள் உள்ளன. அரசு என்றாலும் வேண்டு கோளாகத்தான் கடமைக் காக செயல்பட்டுவரும் நிலை உள்ளது என்றார்.

பொதுவாக உள்ள குற்றச்சாட்டாக இருப்பது என்ன வென்றால், நிறு வனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் உறவினர் களை, குடும்பத்து உறுப் பினர்களையே இயக்கு நர்களாக நியமித்துக் கொள்கின்றனர்.

உங்களில் (நிறுவனத் தாரில்) எத்தனைபேர் உறவுமுறைக்கு அப்பாற் பட்டவர்களாக இருக்கும் பெண்களை நிர்வாகங் களில் நியமனம் செய்து வருகிறீர்கள்? அக்கறையு டன் கூடிய நிர்வாகிகளை நீங்கள் (நிறுவனத்தார்) நியமனம் செய்வதில்லை. அதேபோலவே நாங் களும்(அரசும்) கடமைக் காக வேண்டுகோளை முன்வைத்துவருகிறோம். அனைவரும் கூடுகிறோம், ஏற்கெனவே தயாரிக்கப் பட்ட பேச்சைப் பேசிவரு கிறோம் என்று கூறினார்.

பதில் அளிக்க வேண்டும்

மேலும் அவர் குறிப் பிடும்போது, உண்மையிலேயே அக் கறையுடன் பேசுபவர் களாக பேசுவதாக இருந்தால்தான், இங்கு கூடி விவாதிப்பதிலும், எதையாகிலும் செய்வதி லும் ஓர் பொருள் இருக்க முடியும் என்றார்.

உறவுப்பெண்களைத் தவிர்த்து நிர்வாகப் பொறுப்புகளில் பெண்  கள் நியமிக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களும் பதில் அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்போகி றேன் என்றார் மேனகா.

தாழ்த்தப்பட்டோருக்கான நிதியை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தவில்லை

அதிர்ச்சித் தகவல்! அதிர்ச்சித் தகவல்!!

தாழ்த்தப்பட்டோருக்கான நிதியை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தவில்லை

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கண்டனம்


சென்னை, ஜூலை 10_ தமிழக நிதிநிலை அறிக் கையில் அறிவித்த ஒடுக் கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதியை, தமிழக அரசு முழுமை யாகப் பயன்படுத்த வில்லை என தாழ்த்தப் பட்டோருக்கான தேசிய ஆணையம் தமிழக அர சுக்குக் கண்டனம் தெரி வித்துள்ளது.

தமிழக பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக் கான 18 சதவீத நிதியில் 2 சதவீதத்தை கூட அவர் களுக்காகப் பயன்படுத்த வில்லை என தாழ்த்தப் பட்டோருக்கான தேசிய ஆணையத் தலைவர் பி.எல்.புனியா தெரிவித் தார்.

தாழ்த்தப்பட்டவர்களுக் கான தேசிய ஆணையத் தலைவர் பி.எல்.புனியா தலைமையில், உறுப்பினர் கள் கமலம்மா, ராஜூ பார்மர் உள்ளிட்டோர் தமிழகம் வந்துள்ளனர். நேற்று  முன் தினம் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் சங்கங்களிடம் அவர்கள் கருத்து கேட்டனர்.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசி கன், தமிழக டிஜிபி அசோக்குமார் மற்றும் துறைகளின் செயலாளர் களுடன் நேற்று ஆலோ சனை நடத்தினர்.

தொடர்ந்து ஆணைய தலைவர் புனியா கூறிய தாவது:

தமிழகத்தில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு வழங் கப்படும் கல்வி தேசிய அளவைவிட 7 சதவீதம் அதிகமாக உள்ளது. கல்வி கற்ற தாழ்த்தப்பட்ட பெண்கள் எண்ணிக்கை யும் அதிகம். தாழ்த்தப் பட்ட மாணவர்களுக் கான 1,314 விடுதிகளில் 482 விடுதிகள் மாணவிகளுக் கானவை. இவற்றில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து புகார் வந்ததால், ஆய்வு செய்ய அரசுக்குப் பரிந்துரைத் துள்ளோம்.

தமிழகத்திலுள்ள தாழ்த்தப்பட்டவர்களுக் கான 18 சதவீத இட ஒதுக் கீட்டை, 20 ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளோம். இவர்களில், 33 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக் குக் கீழே உள்ளனர்.

தமிழக நிதிநிலை அறிக் கையில், தாழ்த்தப்பட்ட வர்களுக்காக ஒதுக்கப் படும் 18 சதவீத நிதியில், 2 சதவீதம் மட்டுமே அவர்களுக்காக செலவி டப்படுகிறது. மீதமுள்ள நிதி பொதுத் திட்டங் களுக்கு செலவிடப்படு கிறது. இதை ஆணையம் அனுமதிக்காது.

தேசிய அளவில் தாழ்த் தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை அதிகள வில் நடக்கும் 5 மாநிலங் களில் தமிழகமும் ஒன்று. வன்கொடுமை தொடர் பான புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதியாமல், நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்பே பதிவு செய்யப்படுகிறது.

வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி ஆதாரம் இல்லாவிட்டால் வழக்கை முடிக்கலாம். ஆனால், தமிழகத்தில் 70 சதவீதம் வழக்குகள் ஆதாரம் இல்லை என முடிக்கப் பட்டுள்ளன. மேலும், 10 சதவீதம் வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்பான விஷயங் களை கண்காணிக்க மாநில அளவில் முதல் வர் தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சி யர் தலைமையிலும் கண் காணிப்புக் குழுக்கள் உள் ளன. ஆண்டுக்கு இருமுறை கூட வேண்டிய இந்த குழு, மாநில அளவில் கடந்த 2013- ஆம் ஆண்டு ஜூன் 25-_க்குப் பின் கூடவில்லை.

தாழ்த்தப்பட்டவர்கள் என போலி சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் சேர்ந்துள்ள 2000 பேரை யும் பணியில் இருந்து உடனடியாக நீக்கி, குற்ற நடவடிக்கை எடுக்க பரிந் துரைத்துள்ளோம்.

வேறு ஜாதி பெண் களை காதலிக்கும் தாழ்த் தப்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியை விரைவில் கைது செய் வோம் என டிஜிபி விளக் கம் அளித்துள்ளார். கவுர வக் கொலைகள் விவகா ரத்தில் நீதி மறுக்கப்பட் டால் மட்டுமே ஆணை யம் தலையிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, July 9, 2015

மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் வியாபம் ஊழல் விசாரணை புதிய திருப்பம்

மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் வியாபம் ஊழல் விசாரணை

புதிய திருப்பம் - சி.பி.அய். விசாரணைக்கு

உச்சநீதிமன்றம் உத்தரவு


டில்லி ஜூலை 9  கோடிக்கணக்கான ரூ ஊழல் மற்றும் 50 சந்தேக மரணங்கள் தொடர்பான வியாபம் ஊழல் தொடர் பான வழக்கை சிபிஅய் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடு மையான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள வியாபம் ஊழல் தொடர்பான  வழக்கை சி.பி.அய். விசா ரணை செய்ய வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், ஆம் ஆத்மி கட்சி யின் முக்கிய தலைவர் களில் ஒருவரான தலைவர் விஸ்வாஸ் உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இவர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும். மத்திய பிர தேச உயர்நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விசா ரணை நடத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து ஊழலில் நேரடித் தொடர்பு உள்ளதாக கருதப்படும் பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் ஆளுநர் இருவரையும் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  காங்கிரஸ் முன்னணி தலைவர் திக்விஜய் சிங் இதுகுறித்து திக்விஜய் சிங் கூறும்போது ஊழலில் தொடர்புடைய மாநில முதல்வர் பதவியில் இருந்துகொண்டே விசா ரனையை எதிர்கொள்வ தென்பது விசாரனையின் மீதான நம்பிக்கையை குலைத்துவிடும் ஆகவே நேர்மையான விசார ணைக்கு வழிவிட்டு சிவ் ராஜ்சிங் சவுகான் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று கூறினார்.

காவலர் மரணம்

இந்த வழக்கில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் என இன்று வரை 50 பேர் சந்தேகத் திற்கிடமான  முறையில் மரணம் அடைந்து வருகின் றனர். இந்த நிலையில், வியாபம் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த போலீஸ் கான்ஸ் டபிள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மர்ம மான முறையில் இறந்தது தெரிய வந்துள்ளது.

போலீஸ் அகாடமியில் இருந்து மூன்று போலீசார் தப்பிக்க உதவி புரிந்ததாக கூறப்படும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சஞ்செய் குமார் யாதவ் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக சிறப்பு விசாரணைக்குழு நீதிமன் றத்தில் நேற்று தெரிவித் துள்ளது. 

இதன்மூலம் இந்த வழக்கில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் என மர்மமான முறையில் இறந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. தலைமை வழக்குரைஞர் உடல்நிலை மோசமாகியது  இந்த வழக்கை விசா ரித்து வரும் அரசுத் தரப்பு  வழக்கறிஞர் ஆதர்ஷ் முன்னி திரிவேதியின் உடல் நிலை தற்போது மிகவும் மோசமாகியுள் ளது. 

நேற்று மாலை, அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர் சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. உடனடி யாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்கும் போது மருத்துவமனைக் குக் கொண்டு வரும் போதே மிகவும் மோச மான நிலையில் அவரது உடல்நிலை இருந்தது. தற்போது அவரை உயிர் காப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்கள். இன்று உச்சநீதிமன்றத் தில் வியாபம் தொடர் பான வழக்கில் இவரது வாதமும் நடைபெறும் என்ற நிலையில் தற் போது வழக்கறிஞரும் உயி ருக்கு ஆபத்தான முறை யில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கில் பலர் மர்மமான முறையில் பலியாகி வரும் நிலையில் உணவில் விஷம் கலந்து கொலை செய்வதற்கான முயற்சியாக இருக்க வேண்டுமென அவரது குடும்பத்தார் சந்தேகிக் கின்றனர்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...