Thursday, July 9, 2015

மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் வியாபம் ஊழல் விசாரணை புதிய திருப்பம்

மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் வியாபம் ஊழல் விசாரணை

புதிய திருப்பம் - சி.பி.அய். விசாரணைக்கு

உச்சநீதிமன்றம் உத்தரவு


டில்லி ஜூலை 9  கோடிக்கணக்கான ரூ ஊழல் மற்றும் 50 சந்தேக மரணங்கள் தொடர்பான வியாபம் ஊழல் தொடர் பான வழக்கை சிபிஅய் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடு மையான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள வியாபம் ஊழல் தொடர்பான  வழக்கை சி.பி.அய். விசா ரணை செய்ய வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், ஆம் ஆத்மி கட்சி யின் முக்கிய தலைவர் களில் ஒருவரான தலைவர் விஸ்வாஸ் உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இவர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும். மத்திய பிர தேச உயர்நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விசா ரணை நடத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து ஊழலில் நேரடித் தொடர்பு உள்ளதாக கருதப்படும் பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் ஆளுநர் இருவரையும் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  காங்கிரஸ் முன்னணி தலைவர் திக்விஜய் சிங் இதுகுறித்து திக்விஜய் சிங் கூறும்போது ஊழலில் தொடர்புடைய மாநில முதல்வர் பதவியில் இருந்துகொண்டே விசா ரனையை எதிர்கொள்வ தென்பது விசாரனையின் மீதான நம்பிக்கையை குலைத்துவிடும் ஆகவே நேர்மையான விசார ணைக்கு வழிவிட்டு சிவ் ராஜ்சிங் சவுகான் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று கூறினார்.

காவலர் மரணம்

இந்த வழக்கில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் என இன்று வரை 50 பேர் சந்தேகத் திற்கிடமான  முறையில் மரணம் அடைந்து வருகின் றனர். இந்த நிலையில், வியாபம் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த போலீஸ் கான்ஸ் டபிள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மர்ம மான முறையில் இறந்தது தெரிய வந்துள்ளது.

போலீஸ் அகாடமியில் இருந்து மூன்று போலீசார் தப்பிக்க உதவி புரிந்ததாக கூறப்படும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சஞ்செய் குமார் யாதவ் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக சிறப்பு விசாரணைக்குழு நீதிமன் றத்தில் நேற்று தெரிவித் துள்ளது. 

இதன்மூலம் இந்த வழக்கில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் என மர்மமான முறையில் இறந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. தலைமை வழக்குரைஞர் உடல்நிலை மோசமாகியது  இந்த வழக்கை விசா ரித்து வரும் அரசுத் தரப்பு  வழக்கறிஞர் ஆதர்ஷ் முன்னி திரிவேதியின் உடல் நிலை தற்போது மிகவும் மோசமாகியுள் ளது. 

நேற்று மாலை, அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர் சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. உடனடி யாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்கும் போது மருத்துவமனைக் குக் கொண்டு வரும் போதே மிகவும் மோச மான நிலையில் அவரது உடல்நிலை இருந்தது. தற்போது அவரை உயிர் காப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்கள். இன்று உச்சநீதிமன்றத் தில் வியாபம் தொடர் பான வழக்கில் இவரது வாதமும் நடைபெறும் என்ற நிலையில் தற் போது வழக்கறிஞரும் உயி ருக்கு ஆபத்தான முறை யில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கில் பலர் மர்மமான முறையில் பலியாகி வரும் நிலையில் உணவில் விஷம் கலந்து கொலை செய்வதற்கான முயற்சியாக இருக்க வேண்டுமென அவரது குடும்பத்தார் சந்தேகிக் கின்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...