Saturday, September 21, 2013

இதுதான் இடதுசாரி சிந்தனையா?

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கேரளா வில் அமைச்சராக (கம்யூனிஸ்டு) இருந்தவரும், இடதுசாரி சிந்தனையாளர் என்று பொதுவாகக் கூறப்படு வருமான திரு. வி.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், 2014ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில், பிஜேபியின் பிரதமருக் கான வேட்பாளராக, நரேந்திரமோடி முன்னிறுத் தப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், பிரதமர் பொறுப்புக்கு அவர்தான் தகுதியானவர் என்றும், தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் செயல் பாடுகள், அவரது நிர்வாகத் திறமையை, தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ள, அவரை நாம் ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நிர்வாகத் திறமை உடையவரா நரேந்திர மோடி? என்பது ஒரு புறம் இருக்கட்டும்; அந்த நிருவாகத் திறமை எதற்குப் பயன்பட்டு இருக்கிறது என்பதை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவருக்குத் தெரியாமல் போனது ஏன்?
அவர் நிருவாகத் திறமையின் இலட்சணம் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தது தானா? அவருக்குச் சம்பந் தமே யில்லை என்று கூறப் போகிறார்களா?
அதுவுண்மை என்றால், ஒரு முதல் அமைச்சருக்கே சம்பந்தம் இல்லாமல் பல்லாயிரம் பேர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என்றால், செயல்படாத ஒருவர் முதலமைச்சராக இருந்தார் என்று பொருள் படாதா?
ஓர் உண்மையைத் திட்டமிட்டு, மறைக்கப் பார்க்கின்றனர். நரேந்திரமோடி என்ற முதல் அமைச்சர், தன் நிருவாகத்தின் முழு சக்தியையும் பயன்படுத்தி, சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்திருக்கிறார் என்பதை மறைக்கப் பார்க் கிறார்கள்.
அறிவு நாணயத்தோடு அவர் செயல்பாடு இருந்தால், இவ்வளவு பேரழிவுக்குக் காரணமாக இருந்ததற்குத் தான் பொறுப்பேற்ற, முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டாமா?
கோத்ரா ரயில் பெட்டி எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதனை ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்தி, சிறுபான்மையினருக்கு எதிரான வன் முறையைத் தூண்டுவதற்கு, ஒரு முதல் அமைச்சரே அதிகாரிகள் கூட்டத்தைக்  கூட்டி ஏற்பாடு செய் தார்  என்றால், இதனை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது?
பிஜேபி சட்டமன்ற, உறுப்பினர்களின் வாக்கு மூலத்தை தெகல்கா ஊடகம் பெற்று அம்பலப் படுத்தி விடவில்லையா?
எந்த ஒரு செயலுக்கும் ஓர் எதிர் விளைவு உண்டு என்ற அய்ன்ஸ்டின் தேற்றத்தைக் கூறி, சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையை நியாயப்படுத்தியதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அறிய மாட்டாரா? மோடியின் பின் புலத்தில் பணத் திமிங்கலங்கள் இருப்பது கூடவா மார்க்சியவாதி என்று கூறப்படுபவருக்குப் புரியாது?
குஜராத் மாநிலத்தை, இந்துத்துவாவின் பரிசோ தனை சாலையாக ஆக்கி, அதில் வெ(ற்)றி பெற்ற நிலையில் அதே பாணியை ஒடிசா மாநிலத்தில் அரங்கேற்றவில்லையா? இதனை இந்தியா முழுமையும் அரங்கேற்றுவதற்குப் பச்சைக் கொடி காட்டலாமா?
குஜராத் நிகழ்வினைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் வாஜ்பேயி எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரே!
இன்றைக்குக்கூட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் நரேந்திரமோடிக்கு விசா கொடுக்க மறுத்து  வருவது எந்த அடிப்படையில்?
இராமச்சந்திர குகா, மார்க்கண்டேய கட்ஜூ (இவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிதான்) பொருளாதார மேதை - நோபல் பரிசு பெற்ற அமர்த் தியா சென் போன்றவர்கள் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்துள்ள நிலையில், வி.ஆர். கிருஷ்ண அய்யர் இந்துத்துவா சக்திக்குத் துணை போவது கண்டிக்கத்தக்கது. இதுவரை அவர்மீது போர்த்தப்பட்டு இருந்த இடதுசாரி என்ற திரையை அவரே கிழித்துக் கொண்டு விட்டார் என்றே கருதப்பட வேண்டும்.
மோடிக்குப் பல்வேறு முகாம்களும் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டன திட்டமிட்ட வகையில்;  இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இந்திய வாக்காளர்களே!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>

அக்டோபர் 16-31 - 2013

Tuesday, September 17, 2013

எம் ஆசானின் 135ஆவது பிறந்த நாளில்....! நமது பயணங்கள் நிற்காது தொடரும்! தொடரும்!!

நம் மக்களின் மானமீட்பரான எங்கள் பகுத்தறிவு ஆசானே!
இருண்ட எமது வாழ்க்கையில் சிந்தனைச் சுடரைக் கொளுத்திய, எம் இனத்தின் திருவிளக்கே!
காலமெல்லாம் விதியென்றும், கர்மம், (குல) தர்மம் என்றும்   உழன்று கிடந்த உலுத்துப்போன வாழ்வைப் புறந்தள்ளி, புதுவாழ்வு தந்த புத்தொளியே, புரட்சியின் கர்த்தாவே உமது 135ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா இன்று!
அகிலமெங்கும் அவரது விழா - நன்றித் திரு விழாவாக
அறிவும் மானமும் பெற்றவர்களின் நன்றித்
திருவிழா கொண்டாட்டமாகக் காட்சியளிக்கிறது!
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை
புத்தருக்குப் பின் வீழ்த்தி, வெற்றி கண்ட புதுமைச் சித்தர்தான் நம் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்!
அவர்கள்தந்த தத்துவம்- சுயமரியாதை;  மனிதர் எவராலும் புறக்கணிக்க முடியாத மகத்தான தத்துவம்
எந்த ஒரு கட்டத்திலாவது, அதை மறந்தவர்கூட, மறுத்தவர்கள், மறைத்தவர்கள்கூட அதனைப் பயன்படுத்திடாமல் இருக்கவே முடியாது!
அவ்வளவு சக்தி வாய்ந்த மின் ஈர்ப்புச் சொல் அய்யா தந்த அந்த சுயமரியாதை என்ற சொரணை மீட்கும் அச்சொல்!
அந்தப் பகலவனின் கதிர்கள், உலகத்தை முன்னேற்றப் பாதையின் வெளிச்சங்களாகி இன்று நிலைத்து விட்டன!
அவர்தம் தொலைநோக்கு இன்றைய உலகின் தவிர்க்க இயலாததாக தழுவிக் கொள்ளப்படும் போக்காக,  ஆனதால் அவரது வாக்கு பொய்யாததாகி விட்டது!
பெரியாரைத் துணைக்கோடல் என்பதை ஏற்ற ஆட்சிகள் நிலைத்தன!
பெரியாரைப் பிழையாமையை ஏற்காத எகத்தாள ஆட்சிகள் நிலைக்கவில்லை.
- இது இன்று வரலாற்றுக் காட்சிகள்!
அரசியலுக்கு அவர் சென்றதில்லை; ஆனால் அரசியல் அவரிடம் சென்றே செயலுருக் கொண்டது!
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்                 (குறள் 892)
எரியாற் சுடப் படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார் பிழைத்தொழுகுவார்    (குறள் 897)
பெரியார் பிழைத்தொழுகும் ஆட்சிகள் நிலைத்தது போன்ற விளம்பர வானவில் வண்ணங்கள் - ஒரு தற்காலிக வெளிச்சமே; நிலைத்து நிற்காது! நீடிக்காது!
பகலவன்தான் நிலையானது என்பது அறிவியல் உண்மை அல்லவா!
எம்மை பதவி, புகழ் வேட்டைக்கு உரியவர்களாக ஆக்காது, தொண்டு, கைம்மாறு கருதாத மான மீட்புப் பணி, எளிமை, சிக்கனம் நன்றி எதிர்பாராத தொண்டாற்றும் தூய்மை - இவைகளில் தோய்த்து எடுத்து, துலக்கி நிறுத்தியுள்ள எங்கள் ஆசானே, அறிவே, ஒளியே! உமது 135ஆம் ஆண்டு பிறந்த நாளில்
முடிக்க வேண்டிய களப்பணிகளை -
ஜாதி ஒழிப்பை,
மதவெறி மாய்ப்பை,
சமூகநீதி காப்பை,
மூடநம்பிக்கை அழிப்பை,
மனிதநேய பரப்புரையை
செய்ய உறுதியேற்று அன்னையைத் தொடர்ந்து எங்கள் பயணங்கள் தொடருகின்றன!
நிற்காது பயணமாக அது நடந்து கொண்டே இருக்கும் என்று சூளுரைக்கிறோம்.
பயணத்தைத் தொடர்கிறோம்
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை  
17.9.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

ஓணம் - அதன் பின்னணி!

இன்று ஓணம் பண்டிகை கேரள மாநிலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் புராணப் பண்டிகையின் அடிப்படையைப் பார்த்தால் அதில் இழையும் பார்ப்பனச் சூழ்ச்சி. தந்திரத்தின் உண்மை முகம் தெரியும்.
மாவலி என்பவன் சிறந்த அரசன். தன்னைத் தேடி வருவோர்க்கு வாரி வழங்கிய கொடை வள்ளல். மக்கள் மத்தியில் பேரும், புகழுடனும் திகழ்ந்தான்.
அவனைக் கொன்றொழிப்பதற்கு மகாவிஷ்ணு, வாமன (குள்ளப் பார்ப்பான்) அவதாரம் எடுத்தானாம்.
அந்தக் குள்ளப் பார்ப்பானாகிய மகாவிஷ்ணு வந்தார்க்கு வாரி வழங்கிய மாவலியிடம் சென்று யாகம் செய்வதற்கு மூன்றடி மண் கேட்டானாம். அட்டியின்றி வழங்கினேன் என்றானாம் மாவலி.
அந்தக் குள்ளப் பார்ப்பான் என்ன செய்தானாம்? ஓரடியால் பூமியை அளந்தானாம் - இன்னொரு அடியால், வானை அளந்தானாம்.
மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று கேட்டானாம்; தன் தலையில் வைக்கும்படி மாவலி சொன்னானாம். அதன்படி தலையில் காலை வைத்து அழுத்தினானாம், மாவலி மாண்டானாம். அப்பொழுது உனக்கு என்ன வரம் வேண்டும் என்று குள்ளப் பார்ப்பானாகிய மகாவிஷ்ணு கேட்க மாவலிச் சக்ரவர்த்தியோ நான் கொல்லப்பட்ட நாளில் எங்கள் மக்களை நேரில் வந்து பார்க்கும் பாக்கியம் தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு அருள்புரிய வேண்டும் என்றும் இறைஞ்சினானாம். அவ்வாறே அளிக்கப்பட்டதாம். அந்த நாள் தான் இந்த ஓணம் பண்டிகையாம்.
வீட்டுக்கு வீடு மாவலியை வரவேற்க வாசலில் மாக்கோலம் போடுகிறார்களாம்.
இதில் முட்டாள்தனமும், சூழ்ச்சியும், வஞ்சகமும் புகுந்து விளையாடுவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
புராணக் கதைகள், மகாவிஷ்ணு அவதாரம் என்று சொல்லப்படும் அனைத்துமே ஆரியப் பார்ப்பனர்கள் திராவிடர்களை, அரக்கர்கள் என்று கூறி ஒழித்ததுதான்.
தீபாவளிக் கதையில் நரகாசுரனை, விஷ்ணு ஒழித்தான் என்றும், அவன் கொல்லப்பட்ட நாளை எல்லாரும் கொண்டாட வேண்டும் என்று நரகாசுரன் கேட்டுக் கொண்டான்; அதற்கு விஷ்ணு வரம் கொடுத்தான். அதன்படி நரகாசுரன் கொல்லப்பட்ட நாளை தீபாவளி என்று கொண்டாடுவதில்லையா? அது போன்றதுதான் மாவலி, மகா விஷ்ணுவால் கொல்லப்பட்ட நாளும் ஓணமாகக் கொண்டாடப் படுகிறது. மாவலி வாரி வழங்கிய வள்ளல்; நல்லாட்சி நடத்திய நாயகன் - அவனை ஏன் மகாவிஷ்ணு கொல்ல வேண்டும் -  அதுவும் சூழ்ச்சியால் கொல்ல வேண்டும்? சூழ்ச்சி என்று வந்தால், குள்ளப் பார்ப்பானாக வடிவம் எடுப்பதையும் காண தவறக் கூடாது.
கேட்டது மூன்றடி மண்தானே? மண்ணில்தானே மூன்று அடி கேட்க வேண்டும். கேட்டுப் பெறப்பட்ட வரத்துக்கு மாறாக மண்ணை ஓரடியாலும், ஆகாயத்தை மற்றொரு அடியாலும் அளக்கலாமா?
யாகத்தை பூமியில் மண்ணில்தானே செய்ய முடியும்? ஆகாயத்திலா யாகம் செய்ய முடியும்?
இது போன்ற பகுத்தறிவுக் கேள்விகளுக்குப் புராணத்தில் இடமில்லை. அந்தப் புராண முட்டாள் தனமான அழுக்கு மூட்டைக் கதைகளைக் கொட்டி அளக்கும் ஏடுகள் நடத்துவோராலும் சொல்ல முடியாது.
தன் பக்தனை கடவுள் சோதிக்கிறான் என்பதே கூட கடவுள் சக்திக்கு மாறானதுதான்; சோதிக் காமலேயே தெரிந்து கொள்ளும் ஆற்றல் கடவுளுக்கு இல்லையா? மனிதனை அழிக்க கடவுள் அவதாரம் எடுக்க வேண்டுமா? தன்னால் படைக்கப்பட்டவனை கடவுள் ஏன் அழிக்க ஆசைப்பட வேண்டும்? பெற்ற தாய், தன் பிள்ளையைக் கொல்ல ஆசைப்பட்டால் அவள்தாய்தானா?
சரி.. அன்றைக்கு அதர்மத்தை அழிக்க ஆண்டவன் அவதாரம் எடுத்தான் என்று கொட்டி அளக்கிறார்களே - இப்பொழுது நாட்டில் அதர்மமே நடக்கவில்லையா?
ஆண்டவன் அவதாரம் எடுத்து இப்பொழுது நேரில் வர வேண்டியதுதானே? ஏன் வரவில்லை?
ஒரு பெரியார் தோன்றி மக்கள் மத்தியிலே விழிப் புணர்வை ஏற்படுத்தி விட்டார் - வாமன அவதாரக் கதை எல்லாம் இறந்த காலத்தில் சொல்லப்படும் அளப்புகளே - நிகழ்காலத்தில் நடக்காது - ஏன் எனில் அவை எல்லாம் பொய் மூட்டைகளே!

Monday, September 16, 2013

திமிர் மஹாவிஷ்ணுவுக்கா? மகாபலிக்கா?


 மகாபலி எனும் சக்கரவர்த்தி வீரமும் கொடைக்குணமும் மற்றும் செருக்கும் உடையவனாக திகழ்ந் தான். மகாபலியின் செருக்கை அடக்க, மஹாவிஷ்னு "வாமனன்" அவதாரம் எடுத்து அவனது அரண்மனைக்குச்சென்று தானம் கேட்டார்.

வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என அறிந்தும் என்ன வேண்டும் என்று கேட்டான் மகாபலி. மூன்று அடி மண் வேண்டும் என்றார் மஹாவிஷ்னு. மகாபலி தானம் செய்து கொடுக்கத் தயாரானான். மஹாவிஷ்ணு ஓங்கி உலகளந்த உத்தம ரானார். அதைக் கண்ட மகாபலியின் மகன் நீங்கள் வந்த குள்ள உருவத்தில்தான் மண்ணை அளக்கவேண்டும் என் றான். மஹாவிஷ்ணுவுக்கு கோபம் மண்டைக்கு ஏறியது. உலகளந்த உத்த மனாய் ஒரு அடியில் மண்ணுலகமும் இரண்டாவது அடியில் விண்ணுலகமும் அளந்து மூன்றாவது அடிக்கு மண் எங்கே என்று கேட்டார் விஷ்ணு. இப்படி மகாபலி யின் செருக்கை அடக்கிய நாள்தான் திருவோணம்.  - தினமலர் பக்திமலர்

மண்ணுலகத்தை மஹாவிஷ்ணு எங்கே நின்றுகொண்டு தாண்டினார்?
விண்ணுலகத்தை இரண்டாவது அடியில் தாண்டிய மஹாவிஷ்ணு அடுத்த காலை எங்கே வைத்தார்?.

மண்ணுலகமும் விண்ணுலகமும் அளக்கப்பட்டபோது மகாபலி எங்கே நின்றுகொண்டிருந்தான்?

தினமலருக்கே குழப்பம் ஏற்பட்டதால் தான் மகாபலி தலையில் காலை வைப்பது போல் படம் வரையப்பட்டதா?

அல்லது சத்திரிய, சூத்திர மக்களை இழிவுபடுத்துவதற்காக பூணுல் சகிதமாக மஹாவிஷ்ணு தன் காலை மகாபலி தலையில் வைப்பதுபோல் படம் வரைந்து தினமலர் புளகாங்கிதம் அடைந்திருக் கிறதா?

வாமனன் உருவத்தில் தானம் கேட் டவன் அதே உருவத்தில் மண்ணை அளப்பதுதானே சரி?

இதைத்தட்டிக் கேட்டால் மகாபலி மகன் மீது மஹாவிஷ்ணுவுக்கு கோபம் வருவது சரியா?

- கி. தளபதிராஜ்

தி இந்து தமிழ் பதிலளிக்குமா தமிழில்?


தி இந்து தமிழ் நாளிதழுக்கு எனது வாழ்த்துக்கள்.தமிழ் பத்திரிகை உலகில் நல்ல பல அம்சங்களுடன் வெளிவந்திருக்கும் தி இந்துவில் எந்தவித பாரபட்சங்களுமின்றி கருத் துகள் இடம்பெற வேண்டும் என்பது என்னைப் போன்றோர் கருத்து.

நான் தினமும் ஆறு பத்திரிகை களைப் படிப்பவன்.பார்ப்பவனல்ல!   ஆங்கில நாளிதழில் பல வெளிவராத செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதை மற்ற நாளி தழ்கள் மொழி பெயர்த்து வெளி யிட்டுள்ளன.

இப்போது ஒரு நெருடலான செய்தி என்னவென்றால் முதல் நாள் வெளிவந்த தி இந்து ஆர்வமாய் வாங்கி படித்தேன். நல்ல பல கட்டு ரைகள். கவர் ஸ்டோரி,விளையாட்டு, இன்னும்பல..ஆனால்தேடி தேடி பார்க்கின்றேன். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செய்தி ஒரு இடத்தில் கூட இல்லை. இது தொடர்பான சைக்கிள்பந்தயம் என்ற ஒரு செய் தியை தவிர.. தங்களின் தலையங்கத் தில் தமிழ் மொழியின் சிறப்பிற்கு மேலும் அழகூட்ட நாங்களும் வந் துள்ளோம் என்று எழுதி விட்டு அன்னை தமிழ் மொழிக்கு எப்படி யெல்லாம் சிறப்பை சேர்க்க முடியுமோ அதையெல்லாம் செய்த தமிழ்த்தாயின் மூத்த குடிமகன் என்று தமிழர்களால் அடையாளம் காணப் பட்ட அந்த அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் செய்தியை விட்டு விட்டீர்களே! அரசியல் கட்சியினர் நடத்தும் அண்ணா பிறந்தநாள் செய்திகள் இடம்பெற வில்லை என்றாலும் ஒரு முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையிலாவது செய்தி வெளியிட்டு சிறப்பை சேர்த்திருக்கலாமே! ஆனால் ஒரு வகையில் நான் எதிர்பார்த்ததுதான் தவறு என நினைக்கின்றேன்.

ஆம். சென்னை உயர்நீதிமன்றத் தில் டி.முத்துசாமி அய்யர் என்ற ஆரியர் ஒருவர் தமிழராக தெரியும் (இன்றைய தலையங்கத்தில் வந்த ஆதாரம்) தி இந்துவிடம் தன் தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அண்ணாவை எப்படி தெரியும்? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.திராவிட இயக்கப் புறக்கணித்தலை கைவிட்டால்தான் தங்கள் நாளிதழை மக்கள் புறக் கணிக்க மாட்டார்கள்.

- தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட தி.க.செயலாளர்   காரைக்குடி-630002

அட, தமிழக அரசியலே! மலத்தில் அரிசி பொறுக்கலாமா?

வாரப் பத்திரிகை ஒன்றில் கேள்வி - பதில் பகுதியில்,
கேள்வி: பெண்களை பாவயோனி யில் பிறந்தவர்கள் என்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா என கி.வீரமணி கேட்கிறாரே? அவருக்கு வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், மற்றவர்களுக்கு?
பதில்: பகவான் கிருஷ்ணன் சொன்ன பகவத் கீதையின் எத்தனையோ வாழ்க்கை தத்துவங்களைவிட்டு, வீரமணியின் கண்ணில் பட்டது எது பார்த்தீர்களா? அவரவர் தரத்திற்கு தகுந்தாற்போல்தான் எண்ணமும், பார்வையும்! கடவுளை நிந்திப்பதாக நினைத்து தன் சுயமரி யாதையை நிந்தித்துக் கொண்டிருக்கிறார் பெரியவர். தந்தை பெரியார் எவ்வளவோ பகுத்தறிவு - சீர்திருத்த வாதங்களை சமூகத்திற்கு அளித்தார். அதையெல்லாம் மறந்துவிட்டு, பறச்சிகளும், பள்ளச்சி களும் ரவிக்கை போட ஆரம்பித்ததால்தான் துணிவிலை ஏறிவிட்டது என்று பெரியார் அன்றைய சூழ்நிலையில் சொன்னதை மட்டும் நினைவு வைத்துக் கொள்வாரா வீரமணியார்? இப்படி ஒரு பதில்.
இவற்றைப் படித்துப் பார்ப்பவர்கள் ஒன் றைச் சிந்திக்கவேண்டும்.
ஆபாசம் - அசிங்கம் - இவற்றின் பெருக் கல் தொகையாக ஒரு கடவுள் கற்பிக்கப்பட் டுள்ளார். குளிக்கும் பெண்களின் நிர்வா ணத்தை இரசிப்பவன் கடவுளா? நாரதன் என் கிற ஆண் கடவுளோடு புணர்ந்த கிருஷ்ண னைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியுமா?
கிருஷ்ணனைப்பற்றி நாம் எடுத்துக் காட்டுவது நமது கற்பனையல்ல - இந்துப் புராணங்கள் எழுதி வைத்தவைதான்.
நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண் டும் என்று நினைக்கிறவர்கள், ஒழுக்கத்தை யும், அறிவையும் மதிக்கிறவர்கள் - மக்களுக்கு வழிகாட்டுவதை ஒரு கடமையாகக் கருதுபவர் கள் ஒரு கருத்தைக் கூறுகிறார்கள் என்றால், கொஞ்சம் புத்தியும், கடுகு மூக்கு அளவுக்கு ஒழுக்கமும் உள்ளவர்கள் அவற்றை வரவேற் பார்கள்.
அப்படியானால் இப்படி சொல்பவர்களை, எழுதுபவர்களைக் கொச்சைப்படுத்துபவர் களைப் பொதுமக்கள்தான் அடையாளம் காணவேண்டும்.
வீரமணிக்கு வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் - மற்றவர் களுக்கு? என்று கேள்வி கேட்டுள்ளார்.
கேள்வி கேட்பவருக்கு - கடவுள் நம்பிக்கை இருந்து தொலையட்டும் - அந்தக் கடவுள் நம்பிக்கை குறைந்தபட்சம் ஒழுக்கத்தின் அடிப்படையில் இருக்கவேண்டாமா என்பது தான் நமது கேள்வி.
மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள யோக்கி யதை உடையவன் கடவுள் என்று அவர் ஏற்றுக்கொள்கிறாரா? என்பதுதான் கேள்வி.
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்கிறார் இவர்கள் போற்றும் கிருஷ்ணன் என்ற கடவுள் (கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32).
ஆதாரத்தோடு திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் கீதையின் மறுபக்கம் எனும் தலைப்பில் எழுதப்பட்டது 1998 இல். அதற்குப் பின் பல பதிப்புகளும் வெளிவந்துவிட்டன. தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் வெளி யிடப்பட்டுள்ளது (Bhagavad Gita Myth or Mirage?).
அதற்கு இதுவரை எந்த ஒரு கொம்ப னாலும் மறுப்பு எழுதப்பட முடியவில்லை. எழுத முடியாத கோழைகள் கொம்பேறித் தாவிக் கொரிக்கிறார்கள்.
கீதையில் பகவான் கிருஷ்ணன் எத்த னையோ வாழ்க்கைத் தத்துவங்களையெல்லாம் கூறியிருக்கிறாராம்.
கீதை ஒரு கொலை நூல் - கீதையின் சுலோகத்தை எடுத்துக்காட்டித்தான் காந்தி யாரைப் படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ். காரனான நாதுராம் கோட்சே நீதிமன்றத் திலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளான் என்ற அரிச்சுவடி தெரியுமா தமிழக அரசியல் எழுத்தாளருக்கு.
சரி.... அவர் விவாதப்படியே கீதையில் நல்ல விடயங்கள் சொல்லப்பட்டதாக வைத்துக் கொள்வோம். ஒரு கேள்வி அந்த எழுத்தா ளருக்கு.
தாட்டு இலை போட்டு, பத்து வகைப் பதார்த் தங்களைப் பரிமாறி, அதன் ஒரு மூலையில் மலத்தை வைத்து இருந்தால், பரவாயில்லை - இத்தனை வகைக் கறிகளை பிரமாதமாக சமைத்திருக்கிறார்கள் - ஓரத்தில்தானே மலம் இருக்கிறது என்று எண்ணி, வயிறு முட்ட சாப்பிடுவார்களா?
கேள்விக்குப் பதில் எழுதிய வெறும் சோற்றுத்துருத்திகள் சாப்பிட்டாலும் சாப் பிடுவார்கள் - யார் கண்டது?
திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டி யுள்ள பகுதி ஏதோ அலட்சியப்படுத்தக் கூடிய பகுதியும் அல்ல!
கீதையின் அடிப்படைத் தத்துவமே வருணப் படைப்புதான்!
நான்கு வருணங்கள் என்னால் உண் டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங் களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது (கீதை அத்தியாயம் 4; சுலோகம் 13).
அதன் அடிப்படையில்தான் கீதை அத்தி யாயம் 18; சுலோகம் 44 இல்
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று இவர்கள் நம்பும் பகவான் கிருஷ்ணன் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
பாவ யோனியில் பிறந்ததாக, ஏதோ கிருஷ்ணன் பிரசவம் பார்த்ததுபோல எழுது கிறானே - அதைச் சொன்னால் வீரமணியின் தரத்தைப்பற்றி எழுதுகிறாரே - அவர் தரத்தைப்பற்றி எழுதுவதற்கு பெண்களின் புடவைகளைத் திருடும் கடவுளை கும்பிடும் தரம் உள்ளவர்களா தகுதி உடையவர்கள்?
பதில் எழுதியவர் இதில் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்? பார்ப்பனராக இருந்தால் - இன் றைக்கும் அவர்கள் மற்றவர்களை இழிவு படுத்துவதில் ருசி காண்பவர்களாக இருக் கிறார்கள் என்று பொருள்.
பார்ப்பனர் அல்லாத சூத்திரராக இருந் தால் வெட்கப்படவேண்டாமா? நமது தாயைக் கொச்சைப்படுத்தி கிருஷ்ணன் சொல்லி யிருக்கிறானே என்று ஆத்திரப்பட்டு இருக்க வேண்டாமா - சொரணை இருந்தால்!
திராவிடர் கழகத் தலைவர் எழுதியதில் என்ன தவறு?
உண்மையைத்தானே எழுதி இருக்கிறார் என்று பதில் எழுதி இருக்கவேண்டாமா?
வீரமணி அவர்களின் தரம் உலகம் அறிந்தது. தந்தை பெரியாரால் தட்டிப் பார்க்கப்பட்ட பொறுக்குமணி அவர். அவரைப்பற்றி தரக்குறைவாக எழுதி தன் தரத்தைக் காட்டியுள்ளார்.
சூத்திரன் என்றால் என்ன பொருள் என்று எழுத்தாளருக்குத் தெரியுமா? (எதையும் படிக்காமல் வயிற்றுப் பிழைப்புக்காக பேனா பிடித்தால் நாம் என்ன செய்வது?).
சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்:
1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன்
3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழி யஞ் செய்கிறவன்
4. விபசாரி மகன்
5. விலைக்கு வாங்கப்பட்டவன்
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7. தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்
(மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 8; சுலோகம் 415).
என்னை விபச்சாரி மகன் என்று சொன்ன தைப்பற்றி எனக்குக் கவலையில்லை - அதே மனுதர்ம சாஸ்திரத்தில் நல்லவை ஏராளம் கூறப்பட்டுள்ளன என்று எழுதட்டுமே பார்க் கலாம். (யார் கண்டது? ஆசாமி எழுதினாலும் எழுதுவார்).
பெரியார் எவ்வளவோ பகுத்தறிவு சீர் திருத்த வாதங்களை சமூகத்திற்கு அளித்தார் என்றும் எழுதியுள்ளார் - திராவிடர் கழகத் தலைவரை இழிவுபடுத்தவேண்டும் என்றால் பெரியாரைப் பெருமைப்படுத்துவது என்பது ஒரு தந்திரம் அவ்வளவுதான்.
சரி... எவ்வளவோ நல்லதைப் பெரியார் சொல்லி இருக்கிறாரே - இந்த ஏடு பெரியார் சொன்ன அந்த உயர்ந்த கருத்துகளை வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறதா? பெரியார் சொன்னதைவிட மிகப்பெரிய விஷ யங்களைத் தான் வெளியிட்டு மக்களுக்குப் பெரிய உதவியைச் செய்துகொண்டு இருக்கிறதா?
தாழ்த்தப்பட்டவர்கள்பற்றி பெரியார் சொன்னதாக அவதூறு கிளப்பியுள்ளதே (இதுதான் பெரியாரை மதிக்கும் செயலா?). அதற்கு என்ன ஆதாரம்?
நாம் எழுதுபவை அத்தனைக்கும் ஆதாரத் தைக் குறிப்பிடுகிறோம். அறிவு நாணயம் இருந் தால் அடுத்த இதழில் பெரியார் சொன்னதற் கான ஆதாரத்தை வெளியிடட்டும் பார்க்கலாம் - சவால் விட்டுக் கேட்கிறோம்.
இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான் என்று தந்தை பெரியார் எழுதினாரே - (விடுதலை, 17.9.1969) அதுதான் நினைவிற்கு வருகிறது.
மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்றார் தந்தை பெரியார். மானத்தைப்பற்றி கவலைப்பட்டிருந்தால் நமது தாயை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையில் உள்ளதை திராவிடர் கழகத் தலைவர் குறிப் பிட்டதற்கு நன்றி சொல்லவேண்டும்.
பெரியார் திடலுக்கு ஓடோடி வந்து வணக்கம் தெரிவித்திருக்கவேண்டும்.
அறிவைப் பயன்படுத்தி இருந்தால் ஆதா ரத்தோடு அல்லவா எழுதியிருக்கிறார் என்று சிந்தித்திருக்கவேண்டும். இரண்டும் இல்லாத துகள் தரத்தைப்பற்றி எழுதுவது கண்டு வாயால் சிரிக்க முடியவில்லை.
குறிப்பு: இதுபோன்ற ஏடுகளின் யோக்கி யதையைத் தமிழர்கள் தெரிந்துகொள்ளட்டும்!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...