Tuesday, October 30, 2012

இந்துவின் பார்ப்பனத்தனம்


உலகத் தலைவர் தந்தை பெரியார் மறைவிற்குத் தலையங்கம் தீட்டாத ஒரே ஒரு ஏடு ஹிந்து பார்ப்பன ஏடுதானே!

தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவானான சி.பி. ஆதித்தனாரின் மறைவுச் செய்தியை உள்ளே மறைவுச் செய்தியாக வெளியிட்ட ஹிந்து ஏடு,

 அதே நாளில் மறைந்த மிருதங்க வித்வானான பாலக்காட்டு மணி அய்யர்வாளைப் பற்றி முதல் பக்கத்தில் வரிந்து தள்ளியிருந்ததே! 

அன்னை மணியம்மையார்; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் மறைவுச் செய்திகளை மரணம் அடைந்தோர்க்கென்று ஹிந்து ஏட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்தியில் (Obituary) வெளியிட்டு இருந்தது என்றால், 

இவற்றைவிட பார்ப்னத் திமிர் பிடித்த கூட்டத்தின் துவேஷம் என்ற ஆலகால நஞ்சுக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

எக்கணமும் சிக்கனமே சிறந்தது!



இன்று உலக சிக்கன நாள்  - என்று அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு நாள் மட்டுமல்ல என்றுமே நமது வாழ்வு. சிக்கன வாழ்வாக அமைந்தால் அதைவிட சிறப்பான வாழ்க்கை வேறு இருக்கவே முடியாது!

சிக்கனம் என்பது எப்போது பெருமை அடைகிறது தெரியுமா?

ஏராளமான வசதி வாய்ப்புப் பெற்றுள்ளவர்கள் எளிமையையும், சிக்கனத்தையும் கடைப்பிடிக்கும் போதுதான் அது மேலும் பாராட்டத் தகுந்ததாக அமையக்கூடும்.

ஏழை, எளியவர்கள் சிக்கனத் திருமணத்தைச் செய்தால், உலகத் தார் உடனே, அவருக்கு வேறு வழி என்ன? சிக்கனத்தைத் தவிர? என்று எளிதாகக் கூறி விடுவார்கள்.

ஆனால் நிரம்ப வசதி படைத் தவர்கள் சிக்கனத் திருமணம் செய்து கொள்ளும்போது அதைப் பாராட்டுவர் - சரியான தெளிவு படைத்த மனங் கொண்டோர். கோணல் இல்லாத குணங் கொண்டோர்.

கோணல் புத்தியுள்ளவர்களோ, பாரய்யா இவ்வளவு வசதியிருக்கிற இவர், ஏன் தாராளமாகப் பணத்தைச் செலவழிக்கக் கூடாது? இவர் சாதாரண ஆள் இல்லப்பா; உலக மகா கஞ்சன் என்று கூறிடும் நிலையும் உண்டு!

நாம் எவரும் யாருக்காகவும், ஊருக்காகவும் வாழ வேண்டிய தில்லை; நமக்காக, நமது சுயமரி யாதைக் காப்புறுதிக்காக வாழ வேண்டும்.

வரவுக்குட்பட்டு செலவழிக்கும் எவருக்கும் கடன் வாங்க வேண்டிய கட்டாயமோ, அல்லது அப்படியே தவறிப் போய் கடன் வாங்கினாலும்கூட ஒழுங்காகத் திருப்பி அதனை உரிய காலத்திற்குள் அடைத்திடும் வாய்ப்பும், வழியும் உண்டே!

அண்மைக் காலங்களில் தொலைக் காட்சிகளின் விளம்பரங்கள் பல நடுத்தர வர்க்க மக்களைக்கூட தொற்று நோய் போல் தொற்றிக் கொண்டு, ஆடம்பரப் பொருள்களை வாங்கிக் குவிக்கச் செய்கிறது!

அதிலும் வங்கிகள் தந்த (Credit Cards)  கடன் அட்டைகளை வைத்துக் கொண்டு ஆடம்பரப் பொருள்களை வாங்குவது - தேவையைக் கருதி அல்ல - ஆசையைக் கருதி, அந்தஸ்தை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வெளிச்ச வியாதிக்குப் பலியாகி, கண்டபடி குறிக்கோள் அன்றிச் செலவழிப்பர்.
தொலைக்காட்சியில் ஒரு பிரபல ஜவுளிக் கடைக்கு ஒரு பெண்மணி செல்லுகிறார். (நான் பார்த்தேன் - நேற்று - விளம்பரம் அல்ல உண்மையான செய்தி!) தீபாவளிக்கு ஒரு புடவை எடுப்பதற்காக இங்கு வந்தேன். இங்கு வந்து பார்த்தவுடனே எல்லாம் மிகவும் கவர்ச்சியாக இருக்கின்றபடியால் 12 புடவைகள் எடுத்துள்ளேன் என்று சிறிதுகூட லஜ்ஜையின்றிக் கூறுகிறார் தொலைக்காட்சி செய்தியாளரிடம்!

12  புடவைகளை ஒரு நபர் வைத்து எப்படித்தான் மாற்றிக் கட்டுவார்; வீட்டில் ஏற்கெனவே ஏராளம் அடுக்கி வைத் திருப்பார்களே!

இது ஒரு சிறு நிகழ்வு. இதுபோல தேவையைக் கருதாது, மனம் போன போக்கில், ஆசைக்கு லகான் போடத் தெரியாமல் சென்றால் அவர்கள் வாழ்க்கை என்னவாகும்?
வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தார்!

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்          (குறள் 479)

அளவறிந்து அதற்குத்தக்கபடி வாழ்க்கை நடத்தாதவனுடைய ஆடம்பரச் சிறப்பு, இருப்பது போல் இருந்து இல்லாமற் போய் மீண்டும் தலைதூக்க விடாமல் கெட்டுப் போகும் என்கிறார் வள்ளுவர்!

என்னே அருமையான, தேவை யான எச்சரிக்கை!

தந்தை பெரியார் அவர்கள் எப்போதும் சிக்கனக்காரராக இருந் தவர் - மண்டிக் கடை வியாபாரியாக இருந்த காலம் முதல் பொது வாழ்க்கையில் மக்கள் ஏற்ற தலைவராக உயர்ந்து உள்ளத்தார் உள்ளத்தில் எல்லாம் உள்ளவராகி வாழும் நிலை பெற்ற பிறகுகூட.

வீட்டை விட்டு வெளியேறி,  காசியில் பசியால், பட்டினியால் எச்சில் இலையிலிருந்து வழித்துச் சாப்பிட்ட நிலையை அனுபவித்து, அதைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஞானி அவர்!

தனது தந்தை ஆந்திராவிற்கு வந்து மகனைக் கண்டறிந்து மகிழ்ந்த போது, அவரது நண்பர் வீட்டில் தனது பொன்னகைகளையெல்லாம் மூட்டை கட்டி நம்பிக்கையுடன் கொடுத்து அப்படியே திருப்பி தந்தையிடம் ஒப்படைத்த கதை மெய் சிலிர்க்க வைப்பதல்லவா?

ஏண்டா இராமா - சாப்பாட்டிற்கு என்ன செய்தாய் என்று தந்தை வெங்கட்டநாயக்கர் கேட்டபோது, அது ஒன்றுமில்லை நைனா, நீங்கள் போட்ட தானத்தை - சதாவிருத்தி களை நான் அங்கே திரும்ப வசூலித்துவிட்டேன் என்று கூறியது -  வெறும் நகைச்சுவை உணர்வு மட்டுமா? 

எவ்வளவு பெரிய சிக்கனத்தின்  செதுக்கல்? எங்கும் சிக்கனம் பெருகுக! 

Sunday, October 28, 2012

நாகசாமியும் நாட்டிய சாஸ்திராவும்


- பொறியாளர் ப. கோவிந்தராசன்

முன்னுரை
நாடகம் மற்றும் நாட்டியம் என்றாலே கொஞ்சம் கற்பனை; கொஞ்சம் ஒப்பனை; கொஞ்சம் நடிப்பு; கொஞ்சம் கவர்ச்சி ;சேர்ந்தது என்று தமிழ் நாட்டில் உள்ள பள்ளிச் சிறுவனுக்குக் கூடத் தெரியும். இந்த ஒபபனைக் காவியம், மற்றும் கற்பனை கலந்த புராணக் கதைகள் மூலம் ஆரியர் களின் மதத்தையும், தெய்வங்களையும் பரப்ப எழுதப்பட்ட அய்ந்தாவது வேதமாம், நாட்டிய சாஸ்திரா எனும் நூல். கற்பனைகளுக்கு உண்மை வடிவம் தர எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திராவின் அடிப்படையில் சங்க கால இலக்கியங்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மற்றும் இதர நூல்கள் எழுதப்பட்டன என்று டாக்டர் நாகசாமி தனது Mirror of Tamil and Sanskrit  என்ற நூலில் தெரிவித்துள்ளார். இதன் மையக் கருத்துக்கள் கீழே உள்ளவாறு விவாதிக்கப்படுகிறது.
நாட்டிய சாஸ்திராவின் நோக்கம்
ஆரியர்களின் மத வேதங்களான ரிக், யஜூர், சாம  அதர்வண ஆகியவற்றைப் பெண்கள் (மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர்), சூத்திரர்கள் (மக்கள் தொகையில் 97 விழுக்காட்டினர்) ஆகியோர் படிக்கத் தகுதி இல்லாத வர்கள் என ஆரியர்கள் தெரிவித்து வந் தனர். இந்த நிலை உலகம் தோன்றியது முதல் வேத கால இறுதிக் கட்டம் வரை நடைமுறையில் இருந்து வந்தது. சூத்திரர்கள் அனைவரும் உல்லாச மாகப் பொழுதைப் போக்க நாட்டிய சாஸ்திராவைப் படைத்து இந்திரனிடம் தந்தனர். இந்திரன் பரதமுனிவரிடமும், அவரது 100 மகன்களுக்கும் தந்தார். நாட்டிய சாஸ்திரம் கிடைத்த பின் பெண்களும், சூத்திரர்களும் வேதங் களைப் படிப்பதை மறந்து விட்டு உல் லாசமாகப் பொழுதைப் போக் கினார்கள்.
வட இந்திய நாட்டியக் கலை
வட இந்தியாவில் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாய், அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீஹார், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில், நாட்டியக்கலை பல்வேறு படை யெடுப்புகளால் பாதிக்கப் பட்டது. நாட்டியக் கலையில் மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்த மன்னர் களில் முதன்மையானவர்கள் மவுரி யர்கள், குப்தர்கள், முகலாயர்கள், இறுதியில் ஆங்கிலேயர்கள் ஆவர். இந்தப் பேரரசுகள் ஆதரவினால் வளர்ந்த நாட்டியக் கலை பன்முகத் தன்மை உடையதாக இருந்தது. நாட்டிய சாஸ்திரா வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட போதிலும், அது மவுரியர் மற்றும் குப்தர்கள் காலத்தில் தான் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. வட இந்திய நாட்டியக் கலையின் சிறப்புக்கள் கீழே தரப் பட்டுள்ளன.
  • வட இந்திய நாட்டியக் கலையில் சிறந்து விளங்குவது கதக் நடனம் ஆகும். இந்தப் பெயர் கதைகள் சொல்லப்படும் நாட்டியங்களுக்குப் பெயராக அமைந்தது. முகலாயர் ஆட் சிக்கு முன்னர் கதைகளை நாட்டியம் மூலம் சொல்லும் இனத்தவர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் கதக்கார் என்று அழைக்கப் பட்டார்கள். ஆரம்ப காலத்தில் இராமாயண, மகாபாரதக் கதைகள் சொல்லப்பட்டன. எனவே கதக் நடனம், மதம் சம்பந்தப்பட்ட விழாக்களிலும், அரசர் சம்பந்தப்பட்ட தர்பார் நிகழ்ச்சிகளிலும், பெரிதும் நடத்தப்பட்டன. முகலாயர் ஆட்சிக் காலத்தில இந்து-வேத மதக் கதைகளுக்கு வரவேற்பு மங்கியது.
  • முகலாய காலத்தில் புராணக் கதைகளுக்கு முக்கியத்துவம் குறைந்து, மகிழ்ச்சி தரக்கூடிய நாட்டிய வகைகள் தோன்றின.
    நாட்டியம், சங்கீதம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பெண்கள் பாய் என்று அழைக்கப்பட் டனர். உதாரணம் மீராபாய், பன்னிபாய்.
  • முகலாயர் காலத்தில் பர்தா அணியும் முறை பின்பற்றப்பட்டதால் பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்வது குறைந்தது.
  • நாட்டிய சாஸ்திராவில் பெண் கள்தான் பாடலுக்குச் சிறந்தவர்கள் என்று கூறியபோதும், பாடுவதற்குப் பெண்கள் முன்வரவில்லை.
  • ஆரம்ப காலங்களில் கதக் நாட்டியம், கிராமங்களில், நாட்டுப்புறக் கதைகள் சொல்லுவதற்குப் பயன்பட் டது. இதன் தோற்றம் 2000 ஆண்டு களுக்கு முந்தையது ஆகும்.
  • இந்தியாவில், வட இந்தியா கி.பி. 1300-1600 காலக் கட்டங்களில் வைணவ மதம் வளர ஆரம்பித்தது. பக்தி இயக்கம் வளரத் தொடங்கியது. ராதாகிருஷ்ண லீலைகள் சொல்லும் கதக் நாட்டியங்கள் பரவின.
  • முகலாயர் காலத்தில் நாட்டியம் ஆடும் முறை மாற்றம் அடைந்தது. வேக மாக ஆடுதல், சுழன்று ஆடுதல் பெரிய அளவில் சேர்க்கப்பட்டன.
  • முகலாயர் காலத்தில் நாட்டியத் தில் Ada and Nazaket’ (காதல், அழகு, வெட்கம்) போன்ற பகுதிகள் அதிகரித் தன. கதக் நிகழ்ச்சிகளில், துமரி,  கஜல்,  தத்ரா வகைகள் முக்கியத்துவம் பெற்றன. இந்திய உடைகளான சோளி மற்றும் பாவாடை நீக்கப்பட்டு, பிஸ்வாஸ் மற்றும் சுரிதார் சேர்க்கப்பட்டன.
  • கதக் நாட்டியத்தின் பெரும்பகுதி நாட்டிய சாஸ்திராவில் சொல்லப்பட்ட விதிகளைக் கடைப் பிடிக்கப்படவில்லை.
தென் இந்தியாவில் நாட்டியக் கலை
  • தென்னிந்தியாவில் கோவில்கள் கட்டும் பணிகள் குப்தர் காலம் முதல் தொடங்கின. இந்தக் கோவில் திருவிழாக் களில் ஆடும் நடனத்திற்கு ஆகம நடனம் என்று பெயர். இது கோவிலின் உட்பகுதியில் நடைபெறும். இத்தகைய நடனத்தை நாட்டிய சாஸ்திரா மார்சி நடனம் அல்லது ஆன்ம விடுதலைக் கான நடனம் எனக் குறிப்பிடுகின்றது. உல்லாசப் பொழுது போக்கிற்காகச் செய்யப்படும் மற்ற நடன வகைகள் தேசி நடனங்கள் என்று அழைக்கப்பட்டன.
  • அரசர் அவைகளில், சாஸ்திரிய சங்கீதத்துடன் நடத்தப்படும் நடனங்கள் கர்நாடகம் என அழைக்கப் பட்டன. இந்தப் பெயர் வட இந்திய - அன்னிய இசையில் இருந்து வேறுபடுத்திக் காட்ட உதவியது.
  • தென்னிந்தியாவில் நாட்டிய சாஸ்திராவில் சொல்லப்பட்ட விதி களுக்கு உட்பட்ட நடன வகைகளை சாஸ்திரிய நடனங்களாக சங்கீத நாடக அகடமி அங்கீகரித்துள்ளது. அவை (1) பரதநாட்டியம் (தமிழ்நாடு) (2) கதக்களி (கேரளா) (3) குச்சிப்புடி (ஆந்திரா) (4) மோகினியாட்டம் (கேரளா). இதைத் தவிர கதக், மணிப்புரி (மணிப்பூர்), சத்திரியா (அஸ்ஸாம்), ஒடிசி (ஒரிஸ்ஸா) அகில இந்திய அளவில் அங்கீகரிக் கப்பட்ட 8 நடன வகைகளில் 4 நடன வகை தென்னாட்டில் (திராவிட நாட்டில்) அமைந்து சிறப்பானது.
  • மேற்கண்ட 8 வகைகளில் தென்னாட்டில் கோவில் நடனங்கள் என நாட்டிய சாஸ்திராவில் குறிப் பிடப்பட்டுள்ள நடனம் பரதநாட்டியம் மட்டும்தான். மற்றது ஒடிசி ஆகும்.
  • பழங்கால சதிராட்டம்தான் 20 ஆம் நூற்றாண்டில் திருத்தியமைக் கப்பட்டு பரதநாட்டியம் என அழைக்கப்பட்டது.
பரத நாட்டியத்தின் வரலாறு:
  • பரதநாட்டியத்தின் வளர்ச்சியில் முக்கிய கட்டங்கள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.
  • நாட்டிய சாஸ்திரா தோன்றிய காலத்தில் கோவில்கள் இல்லை. குப்தர்கள் காலத்தில் (கிபி 320-620) கோவில் கட்டும் கலை தோன்றியது. எனவே கோவில்களில் நடத்தப்படும் நடன வகைகள் கிபி 620 வரை தோன்றவில்லை.
  • தென்னிந்தியாவில் கடைப்பிடிக்கப் பட்ட தேவதாசி முறை பரதநாட்டியக் கலையை வளர்க்கப் பெரிதும் உதவியது.
  • குப்தர்கள் காலத்தில் கோவில் களில் நடனமாடும் பெண்கள் இருந்த தாகக் காளிதாசனின் மேகதூதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கிபி 600 ல் தேவதாசி முறை தொடங்கியதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த முறையில் பெண்கள் கோவில் தெய் வத்திற்கு தேவன்-தேவிக்கு திருமண மாகவோ, அர்ப்பணிப்பாகவோ கொடுக்கப்படுவார்கள். சோழர்கள் காலத்தில் தஞ்சைப் பெரிய கோவிலில் 400 பேர் (ஆண்கள் உள்பட) இறை வனுக்கு அர்ப்பணிக்கப் பட்டார்கள். ஒரிஸ்ஸாவில் மஹரி தேவதாசி முறை, பூரி ஜகந்நாதர் கோவிலில் நடை முறைக்கு வந்தது. இந்த தேவதாசி முறை திருவாங்கூர் மன்னராட்சியில் இருந்தது.
  • 20_ஆம் நூற்றாண்டில் கோவில்கள் வட இந்தியாவில் உடைக்கப்பட்டன. இந்து அரசர்கள் ஆட்சியை இழந்தார்கள். இதனால் தேவதாசி முறை வீழ்ந்தது. தேவதாசி முறையை ஒழிக்க, பம்பாய் மாநிலத்தில் 1934 இல் சட்டம் இயற்றப்பட்டது. இறுதியில்தேவதாசி முறை 1988 இல் ஒழிக்கப்பட்டது.

    தேவதாசிகள், விபச்சாரம், வறுமை, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதுதான் காரணம்.

இழிமொழி எது?


பிராமணர் தமிழரையும், திரவிடரையும் போல இந்தியப் பழங்குடி மக்களல்லர். அவர் கிரேக்க நாட்டையடுத்த மேலை ஆசியாவினின்று பாரசீக வழியாக இந்தியாவிற்குள் புகுந்தவர். அவர் முதன் முதலாகக் குடியேறிய சிந்துவெளி நாடும் அவர்க்குத் தொன்றுதொட்டு உரியதன்று; அது முகஞ்சொதரோ - அரப்பா நாகரிகத்தை வளர்த்த முதுபழம் திரவிட மக்களது.
ஆரியர் சிறுபான்மையராய் இருந்தமையான், இந்தியாவிற் குடியேறிய உடனேயே மாபெரும்பான்மையரான பழம் திரவிட மக்களுடன் கலந்து நாளடைவில் தம் முன்னோர் மொழியை மறந்துவிட்டனர். அதனால் அவர் எந்த மாநிலத் தில் குடியேறி வாழ்கின்றனரோ அந்த மாநில மொழியையே தம் தாய்மொழியாகக் கொண்டுள் ளனர். ஆயினும், தம் தாய்மொழியிற் சற்றும் பற்றின்றி தம் முன்னோர் மொழியின் கலவைத் திரிபாகிய வேதமொழி யையும், அதற்குப் பிற்பட்ட அரைச் சேர்க்கையான இலக்கிய நடை வழக்காகிய சமற்கிருதத் தையுமே இன்றும் கண்ணும் கருத்துமாகப் பேணி வருகின்றனர். தம் தாய்மொழிகளான திரவிட மொழிகளை, இழிந்தோர் மொழியெனப் பழிக்கவுஞ் செய்கின்றனர்.
தமிழ்த் தெய்வமென்று சிலரால் போற்றப்பெறும் காலஞ்சென்ற தென்கலைச் செல்வர், பெரும் பேராசிரியர், பண்டாரகர். உ.வே.சாமிநாதர் அவர்களும் தம் வாழ்நாள் முழுதும் தமிழைக் கற்று மாபெரும் புலவராகித் தமிழ்ப் பேராசிரியராய்ப் பணியாற்றி, பல அரும் பெருந் தொன்னூல்களை வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றியும், தமிழ்ப் பற்றுக் கொள்ளாதது மிக மிக வருந்தத்தக்கதாம். தவத்திரு. அழகரடிகளின் மாமனாரும் சென்னைவாணருமாகிய காலஞ்சென்ற திருவாளர் தணிகைமணியார் (எம்.ஏ.) ஒருமுறை பர். சாமிநாதர் அவர்களிடம் சென்று, அய்யா! நேற்றுத் தாங்கள் ஆற்றிய சொற்பொழிவு மிக நன்றாயிருந்தது என்று சொல்ல, அப்பண்டாரகர் உடனே சீறி விழுந்து, என்ன அய்யா, நீங்கள்கூடச் சுயமரியாதைக்காரராகிவிட்டீர்கள்! உபந்நியாசம் என்றல்லவா சொல்ல வேண்டும்! சொற்பொழிவு என்கிறீர்களே! இப் புதுச்சொல்லை எங்கே கற்றுக்கொண்டீர்கள்? எனக் கழறினாராம். மற்றொருமுறை பண்டாரகரின் பழைய மாண வரும், குடந்தைப் பொன் வணிகருமான திரு. ப.தி.சொ. குமாரசாமி அவர்கள் சென்னை வந்து பண்டாரகரைக் கண்டு அய்யா நலமா யிருக்கிறீர்களா? என்று அன்புடனும், ஆர்வத் துடனும் வினவ பண்டாரகர் கடும் புலிபோல் பாய்ந்து, என்ன உங்களுக்குச் சமஸ்கிருதத்தின் மேல் இவ்வளவு துவேஷம்? க்ஷேமம் என்று சொல்லக் கூடாதா? ஏன் நலமென்று வழக்கற்ற சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள்? என்று சீறி விழுந்தாராம்.
சென்ற ஆண்டு திரு. காஞ்சி காமகோடி பீட சங்கராச்சாரியாரவர்கள் குறளை சென்றோதோம் என்னும் ஆண்டாள் கூற்றிற்கு குறளைச் சென்றோதோம் என்று திரித்து ஓரிடத்திற் பொருள் கூறியது பற்றி ஆட்சி மொழிக் காவலர் திரு. கி. இராமலிங்கனார் (எம்.ஏ.) வினவச் சென்றிருந்த போது, ஆச்சாரியாரவர்கள் (தமிழறிந்திருந்தும்) வடமொழியில் விடை இறுக்க அதை அவர்களது அணுக்கத் துணைவர் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினாராம். அதன்பின், ஆட்சிமொழிக் காவலர், அய்யா! அடிகளுக்குத் தமிழ் நன்றாகத் தெரியுமே! அங்ஙனமிருந்தும் ஏன் வடமொழியில் விடை இறுக்க வேண்டும்? என வினவ, அணுக்கத் துணைவர், ஆச்சாரியார் சுவாமிகள் பூஜை வேளையில் நீச பாஷையில் பேசுவதில்லை, என மறுமொழி தந்தனராம்!
தமிழ் மக்காள்! தமிழ் மாணவர்காள்! தமிழ்ப் புலவர்காள்! பார்த்தீர்களா தவத்திரு. சங்கராச்சா ரியாரவர்கள் கடுங்கூற்றை! தமிழ் இழிந்தோர் மொழியாம்! ஆங்கிலக் கல்வியும் மொழியாராய்ச்சியும் மிக்க இவ்விருபதாவது நூற்றாண்டிலும் தமிழுக்கு இத்துணை இழிப்பும் பழிப்பும் ஏற்படுமாயின், வடமொழி தேவமொழியென்றும், பிராமணர் நிலத்தேவர் (பூசுரர்) என்றும் முற்றும் நம்பப்பட்ட பண்டைக்காலத்தில் இவை எத்துணை மிக்கு இருந்திருத் தல் வேண்டும் என்பதை உய்த்து ணர்ந்து கொள்க.
உண்மையில் தேவமொழி தமிழே! இழிமொழி வடமொழியே! இதை என் ‘The Primary Classical Language of the World’ என்னும் ஆங்கில நூலிலும், வடமொழி வரலாறு என்னும் தமிழ் நூலிலும் கண்டு கொள்க.
********
ந்துமாவாரியில் மூழ்கியுள்ள குமரிக்கண்டத் தென்கோடியில் கி.மு.50,000 (அய்ம்பதினாயிரம்) ஆண்டுகட்கு முன்பே முழுவளர்ச்சி அடைந்த தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழியும் திரவிடத்தாயும் ஆரிய மூலமும் ஆகும். தேவமொழி யென்று ஏமாற்றித் தமிழகத்திற் புகுத்தப்பட்ட சமற்கிருதம் என்னும் வடமொழியாலேயே தமிழ் தாழ்த்தப்பட்டது. அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். தமிழன் மீண்டும் முன்னேறுவதற்குத் தமிழ் வடமொழியி னின்றும் விடுதலை யடைதல் வேண்டும். வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள். தமிழ் உயர்ந்தால்தான் தமிழன் உயரமுடியும். அதற்குத் தமிழர் இனி எல்லா வகையிலும் தமிழையே போற்றுதல் வேண்டும். முதற்கண் தமிழர் அனை வரும் தமிழ்ப் பெயரே தாங்கல் வேண்டும். ஆண்டில் ஒரு நாளைப் பெயர் மாற்றத் திருநாள் என்று இனி ஆண்டுதோறும் கொண்டாடி வருவது நன்று. பிறந்த அண்மையிற் பிறமொழிப் பெயர் பெற்றவரெல் லாரும் அந்நாளில் தம் பெயரைத் தனித் தமிழ்ப் பெயராக மாற்றிக் கொள்ளலாம். அதை இல்லத்தில் விழாவாகக் கொண்டாடுவதுடன் ஊர்வலத்தாலும் ஊரார்க் கறிவிக்கலாம்.
தமிழ்ப்பெயர் தாங்குபவரே உண்மைத் தமிழராவர். தமிழ்ப் பெயர் ஏற்றபின் தமிழிலேயே திருமணத்தையும் இருவகைச் சடங்குகளையும் செய்தலும் செய்வித்தலும் வேண்டும். கடவுள் நம்பிக்கையுள்ளவர் திருவழிபாட்டையும் தமிழிலேயே ஆற்றுதல் வேண்டும்.
இங்ஙனம் தொடர்ந்து செய்துவரின் இன்னும் அய்ந்தாண்டிற்குள் தமிழர்தம் அடிமைத்தனமும், அறியாமையும் அடியோடு நீங்கி மேலையர்போல் புதுப்புனைவு தலைப்படுவர் என்பது திண்ணம்.
(தமிழ் வளம் என்னும் நூலிலிருந்து)

மத்திய அரசை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது சரியான அணுகுமுறையில்லை


மின் தேவைக்காக கோரிக்கை வைத்தது நியாயமே! - ஆனால்

பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டுமே தவிர 

உச்சநீதிமன்றம் வழக்கு -  அணுகுமுறை தவறானது!
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை


தமிழ்நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தினைப் பெறுவதற்கு தமிழ்நாடு முதல் அமைச்சர், பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து சாதிக்க வேண்டுமே தவிர, மத்திய அரசை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது சரியான அணுகுமுறையில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மின்வெட்டு 16 மணி நேரம் வரை சென்று கொண்டிருக்கிறது; இதனால் மக்களுக்குப் பல்வகைத் துன்பங்கள்.

தூக்கமின்மையில் தொடங்கி, டெங்கு காய்ச்சல் வரை பரவலாகி வரும் அவல நிலை ஓர்புறம்; மின்வெட்டு காரணமாக, தேர்வுக்கு மாணவர்கள் படிக்க முடியாது தவித்தல், சிறு, குறு தொழிற்சாலைகள் மின்வெட்டினால் மூடி, பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பை இழந்து வாடிடும் இளைஞர் கூட்டம் நாளும் பெருகுகிறது. காவிரி டெல்டா விவசாயிகளை - தற்காலிகமாக மழை பெய்து ஓரளவுக்கு காப்பாற்றும் என்று நினைத்து மகிழ்ந்தபோது, அதிகம் பெய்து சம்பா பயிர்கள் அழுகி ஏராளமான நட்டத்தை ஏற்படுத்தி விட்டது.

தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இரண்டு மணி நேரம் தானே - இப்போது?

இந்நிலையில் தி.மு.க. ஆட்சியின் போது புதிய வேலை வாய்ப்புத் தந்த வெளிநாட்டவர் இங்கே துவங்கிய தொழிற்சாலைகள் காரணமாகவும், ஒன்றரை கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்கியும், குடிசை நீங்கிய புதிய வீடுகள் வந்ததின் காரணமாகவும் மின் தேவை, உற்பத்தியை விட அதிகம் ஆன படியால் இரண்டு மணி நேர மின்வெட்டு வந்தது. அதைத் தேர்தலில் பயன்படுத்தியது அ.தி.மு.க. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில்இதனை மாற்றிக் காட்டுவோம்; மின் மிகை மாநிலமாக்குவோம் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கியதை மக்களும் நம்பினர்; வாக்களித்தனர்.

ஒன்றரை ஆண்டுகளில் அத்தனையும் சாதிப்போம் என்றது அ.தி.மு.க. ஆட்சித் தலைமை - முதல்வர். இப்பொழுது ஒன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டனவே - சாதிக்கப்பட்டது என்ன? மந்திரத்தால் மாங்காய் விழாது என்பதற்கொப்ப,  மின்வெட்டைப் போக்க, ஆக்க ரீதியான வழிவகையை நடைமுறைக்கேற்ற வழியில் -  அதுவும் ஒரு கூட்டாட்சியைக் காண தமிழக ஆட்சியாளர் - முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும்.

முந்தைய தி.மு.க. ஆட்சியையே குறை கூறிக் கொண்டு அரசியல் லாவணியில் ஈடுபடுவது எந்த பயனையும் தராது; பொது மக்களின் வேதனையை தீர்க்க உதவாது. கூடங்குளம் பிரச்சினையில் முடிவெடுக்கத் தாமதம்!

மத்திய அரசுக்கு சில மாநிலங்களால் தரப்பட்ட சுமார் 900 மெகாவாட் மின்சாரத்தை எங்களுக்கு வழங்குங்கள் என்று கேட்பது நியாயமானதுதான்; கூடங்குளம் மின்உற்பத்தியை தாமதப்படுத்தாமல் முதலிலேயே தமிழக அரசு ஒரு திடமான நிலைப்பாட்டை எடுக்காமல், இரட்டை நிலைப்பாட்டை துவக்கத்தில் எடுத்ததால் போராட்டக்காரர்களுக்கும் ஒரு புதுத் தெம்பு கிடைத்தது; நம்பி ஏமாந்து இன்று சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் வரை அது கொண்டு போய் விட்டது.

கூடங்குளம் மின் உற்பத்தியை முழுவதும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என்று கேட்டார் முதல்வர்; நாமும் அது சரிதான் என்று அறிக்கை விடுத்தோம். மத்திய இணையமைச்சர் திரு. நாராயணசாமி அவர்களும்கூட அதை ஆதரிக்கிறோம் என்றார் கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கருதி.

நீதிமன்றம் சென்றது சரியா?

அதுபோலவே இப்போது மத்திய அரசுக்குத் தரப்பட்டுள்ள அந்த மின்சக்தியை தமிழ்நாட்டில் மின்வெட்டு அதிகமாக இருப்பதால், தமிழ்நாட்டிற்கு அதைத் தர வேண்டும் என்று முதல் அமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது நியாயமானதுதான். அதை நாம் ஆதரிக்கிறோம்.

ஆனால் அதற்காக அவர் கடைப்பிடிக்க உத்தேசித்துள்ள முறை - உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வழக்குப் போட்டு, அதைப் பெற முயற்சிப்போம் என்பது சரியான அணுகுமுறை அல்ல. கூட்டாட்சியில் உள்ள ஒரு மாநில முதல்வர், பிரதமரை, மத்திய மின்துறை அமைச்சரை டெல்லி சென்று நேரில் வற்புறுத்திக் கேட்டு, வெற்றியடைய முயற்சிக்க வேண்டுமே தவிர, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஓர் இணக்கச் சூழலை ஏற்படுத்தி, பிரச்சினையைத் தீர்க்க அந்த அணுகுமுறை ஒரு போதும் உதவாது.
பிரதமரை நேரில் சந்தித்து, ஆவன செய்ய கேட்டுக் கொள்ள வேண்டும்.

பிரதமரை நேரில் சந்திக்க வேண்டாமா?

குஜராத் அரசுடன் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்ட போதே, மின்தட வசதியில் மின்சாரத்தைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர சிக்கல் உள்ளது என்று அறிந்தவுடனேயே மத்திய அரசுக்கு, பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு நிறுத்திக் கொள்ளுவது எவ்வளவு தூரம் காரியசித்திக்கு உதவிடும் என்பதை எண்ணிப் பார்த்து, பிரதமரை நேரில் சந்தித்து இச்சிக்கலுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தமிழக அரசுக்குச் சாதகமாக அமையும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. மாறாக அமைந்தால் தாங்களே இரட்டைத் தாழ்ப்பாள் போட்டதாக ஆகி விடாதா? நீதிமன்றங்களே எல்லா ஆணைகளையும் பிறப்பித்து விட முடியுமா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

எனவே முதல் அமைச்சர் கோரிக்கையில் உள்ள நியாயத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் செல்வதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
காரியம் பெரிதே தவிர, வீரியம் பெரிதல்ல என்று சாதாரண மக்கள் மத்தியில் ஒரு சொலவடை உண்டு.

கர்நாடகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுவதற்கு வழக்குப் போட்டது வேறு. மத்திய அரசு மீது மின்சாரம் வழங்க ஆணையிட வேண்டும் என்று வழக்குப் போட்டுத் தீர்ப்புக் கோருவது வேறு.

இது ஆரோக்கிய அரசியல் நடைமுறை ஆகாது. உறவுக்குக் கை கொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுப்பது நியாயம். ஆனால் மத்திய அரசைக் குற்றம் சுமத்தி, இவைகளைப் பெற வைப்பது என்பது நல்ல முன்னுதாரணம் ஆகாது. தவறான அணுகுமுறையாகும்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
28.10.2012

கழிப்பறையா? கோவிலா?


சென்னை அண்ணா சாலை,பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை, கடற்கரைக் காமராஜர் சாலை, தியாகராயர் நகர் தியாகராயர் சாலை, உஸ்மான் சாலைகள், சவுந்திரபாண்டியனார் அங்காடிச் சாலை, உயர்நீதிமன்ற பிராட்வே சாலை .... இப்படி சென்னையின் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகளில் நீங்கள் ஒரு கழிப்பறையையாவது பார்த்திருக்கிறீர்களா? ஆனால்,
சாலையோரங்களில் நடைபாதையை மறைத்துக்கொண்டிருக்கும் கோவில்களை நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

நெருக்கடி மிகுந்த சென்னையின் கிட்டத்தட்ட எல்லாத் தெருக்களிலும் ஒரு இந்துக் கோவிலாவது இருக்கும். அதுவும் போக்குவரத்தை தடை செய்வதாக இருக்கும், அல்லது நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் இந்தக் கோவிலுக்குப் போட்டியாக மாதா சிலைகள் அமைத்து சிறு வழிபாட்டுத்தலங் களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இது தமிழகத் தலைநகர் சென்னையின் நிலை. மாநிலம் முழுதும் உள்ள நிலைகளை வாசகர்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். உங்கள் ஊர்களி லேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
முதலில் இந்தக் கோவில்கள் எல்லாமே சட்டவிரோத மானவை. எந்தவித நில உரிமையும் இல்லாதவை. ஆங்காங்கே சிலரால் சுய நலத்துக்காக அரசின் நிலத்தில், பொதுச் சொத்தினை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பவை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மதுரையில் பொது இடத்தில் ஆக்கிர மித்துக் கட்டிய கோவில்களை அகற்ற உத்தரவிட்டது. அப்போது சில கோவில் கள் அகற்றப்பட்டன. அதன்விளைவாக சாலைகள் விரிவாயின. போக்குவரத்து சீரானது.
அதனைத் தொடர்ந்து சில ஆண்டு களில் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் பொது இடங்களில் ஆக்கிரமித்து அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கோவில்களை அகற்றவும் ஆணையிட் டது. மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்பியது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. ஆனால், அது இன்னமும் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வில்லை.
மதச்சார்பற்ற இந்திய அரசின் சட்டமும் அதனை செயல்படுத்தும் நீதிமன்றங்களும் இந்த விஷயத்தில் நடுநிலையோடு தீர்ப்புக் கூறுகின்றன என்பது ஆறுதலான செய்திதான். ஆனால், மதத்தை வைத்தே பிழைத்துவரும் சங்பரிவார்கள்தான் சட்டத்தையும் மதிப்பதில்லை, நீதிமன்றத்துக்கும் மதிப்பளிப்பதில்லை. பொது ஒழுக்கத் தையும் பேணுவதில்லை.
பாபர் மசூதியை இடித்த சங்பரிவார்கள் இந்துக்கோவிலென்றால் கொதித்துப் போகிறார்கள்.
அண்மையில் இப்படித்தான் குய்யோ...முறையோ என்று குமுறினார்கள்.மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ். இவர் ஒன்றும் நாத்திகரோ அல்லது இந்து மதத்தினைச் சாராதவரோ அல்ல. இவர் இந்துதான் என்பதை அவரது பெயரே சொல்லும். நெற்றியில் குங்குமம் இட்டபடியே இவர் தெரிவித்த ஒரு கருத்துக்குத்தான் சங்பரிவார்கள் சாடித்தீர்த்தன. அக்டோபர் 6 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பொது சுகாதாரத்தை வலியுறுத்திப் பேசியபோது "நமது நாட்டில் கழிப்பறைகளை விட கோவில்களே அதிகமுள்ளன.
கோவில்களை விட கழிப்பறைகள் மிக முக்கியம். நாட்டில் எத்தனை கோயில்கள் உள்ளன என்பது முக்கியமல்ல. கழிப்பறைகளுக்கும், சுகாதாரத்துக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசிவிட்டார்.
இந்த உரையை தொலைக் காட்சிகள் ஒளிபரப்பின.அதைப் பார்த்தபோது அவர் திட்டமிட்டுப் பேசவில்லை என்பதை உணரமுடிகிறது. பொதுச் சுகாதாரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர் இயல்பாக நாட்டு நடப்பை எடுத்துக் காட்டும் விதமாக கழிப்பறைகளைவிடக் கோவில்கள் அதிகமுள்ளன என்ற உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். அவ்வளவுதான் சங்பரிவாரின் அரசியல் முகமாக பா.ஜ.க.வின்செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி,`` மத நம்பிக்கையின் அடிப்படையில் கோயில்களைக் கட்டுவது என்பதும், கழிவறைகளை அமைப்பது என்பதும் வெவ்வேறு விஷயங்கள்.
இந்தியா பல்வேறு மதங்களை உள்ளடக்கிய நாடு. கோயில், மசூதி, குருத்வாரா, தேவாலயம் ஆகிய மக்களால் புனிதமான இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒன்றுக்கொன்று தொடர் பில்லாத விஷயங்களை தொடர்புபடுத்தி அமைச்சர் பேசியிருப்பது பெரும் தவறுஎன்று கூறியுள்ளார்.
வழக்கம்போல காங்கிரஸ் வழவழா மறுப்பைக் கூறியுள்ளது. அதன் தொடர்பாளர் மணீஷ் திவாரி, ``எங்கள் கட்சி அனைத்து மதங்களின் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளது. எந்த சூழ்நிலையில், எதை வலியுறுத்துவதற்காக ஜெய்ராம் ரமேஷ் அப்படி பேசினார் என்பது சரியாகத் தெரியவில்லை. நாங்கள் அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கின்றோம், என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்ராம் ரமேஷ் வீட்டுக்கு முன்பாக விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து, தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்தினார்களாம்.
எதற்காக ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கேட்கவேண்டும்? அவர் சொன்னதை துணிவோடு மறுக்க சங்பரிவார்களால் முடியுமா?அது உண்மையில்லை என்றுதான் அவர்களால் கூறமுடியுமா? நாட்டில் சரி பகுதிக்கு மேல் ஒரு வேளை உணவே உண்ணும் மக்களைப் பற்றிக் கவலைப் படாமல், கடவுளையும் மதத்தையும் பற்றி மட்டுமே கவலைகொள்ளும் காவிகளுக்கு மக்களின் பொதுச்சுகாதாரம் பற்றிப் பேசத்தான் அருகதை உண்டா?
இதற்கு முன் நாட்டை ஆண்ட பா.ஜ.கவுக்குத் தெரியாதா இந்தியாவின் பொதுச் சுகாதார நிலை? புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன?  நாட்டில் 18 விழுக்காட்டினருக்கு தண்ணீருடன் கூடிய அய்ரோப்பிய மாதிரிக் கழிப்பறைகளும்,11.5 விழுக்காட்டினருக்கு சாதாரண குழிக் கழிப்பறைகளும், 6.9 விழுக்காட்டினருக்கு பிறவகைக் கழிப்பறைகளும் மட்டுமே உள்ளன.எஞ்சிய 63.6 விழுக்காட்டினருக்கு கழிப்பறைகள் கிடையாது. இதில் கிராமப்புரங்களில் வாழும் மக்களே அதிக அளவில் கழிப்பறைகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்த தகவல்.
அதாவது இந்தக் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 70 கோடி மக்கள் திறந்தவெளிகளில், வயல்வெளிகளில், சாலை ஓரங்களில் மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள மக்கள் நகராட்சிப் பூங்காக்களில் மலம் கழிக்கின்றனர். தொற்றுநோய் பரவுவதற்கு இவையே முக்கியக் காரணியாக உள்ளதாக சுகாதாரம் குறித்த ஆய்வு கூறுகிறது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 49.8 விழுக்காட்டினர் திறந்தவெளிகளிலும், 3.2 விழுக்காட்டினர் மட்டுமே பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துபவர் களாகவும் இருக்கின்றனர்.
இதுபோக பள்ளி செல்லும் 3 கோடி குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் கிடையாது. இந்நிலையில் பள்ளிகளில் கட்டாயம் கழிப்பறைகளும் குடிநீர்வசதிகளும் செய்துதரப்பட வேண்டும் என்றும் அது மாணவர்களின் உரிமை என்று 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது.
-இந்தக் கணக்கோடு நாட்டில் உள்ள கோவில்களின் கணக்கையும் ஒப்பிட்டுப்பாருங்கள். தெருவுக்குத் தெரு கோவில்கள் உண்டு. ஆனால், எல்லாத்தெருக்களிலும் கழிப்பறைகள் உண்டா? கோவில்களைக் கட்ட ஒரு கூட்டம் எப்போதும் வசூல் நோட்டைத்தூக்கிக் கொண்டு காசு பார்ப்பது உண்டு.
ஆனால், சாலையோரங்களில், சந்துபொந்து களில், வெட்டவெளிப்பொட்டல்களில் மலம்-_ சிறுநீர் கழிப்பதை நிறுத்தி, பொதுக்கழிப்பிடம் கட்ட வசூல்நோட்டைத்தூக்கியதுண்டா? கோவிலுக்காக சண்டைபோடும் பக்த சிரோன்மணிகள் கழிப்பறைகளுக்காக வாய் திறந்த துண்டா? அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் கட்டிக்கொடுத் துள்ள கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரிப் பதுதான் உண்டா? சாலைப் போக்குவரத்தை ஆக்கிரமித் துள்ள கோவில்களை இடிக்க அரசு முனையும் போது அதனை எதிர்த்து மறியல் செய்யும் மதவெறி மாக்கள், எங்கள் தெருவுக்கு கழிப்பறை வேண்டும் என மறியல் நடத்தியதுதான் உண்டா? நாட்டின் நிலை இவ்வாறிருக்க அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியது சரிதானே!
அன்றாடம் இரண்டு வேளை ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவைப்படும் கழிப்பறை அவசியமா? மனித அறிவை மழுங்கடித்து  பணத்தையும் பறிக்கும் கோவில்கள் அவசியமா?
* நாத்திகக் கலைஞானி கமல்ஹாசனின் `நம்மவர் என்ற படத்தில் ஒரு காட்சி.கமல் அவர்களே அக்காட்சியில் பேசுவார்.``எனக்கு அவசரமா பக்தி வந்திருச்சு;பக்கத்தில கோவில் எங்க இருக்கு ன்னு யாராவது கேக்குறாங்களா?அவசரமா யூரின் வருது;கக்கூஸ் எங்க இருக்குன்னுதானே கேக்குறாங்க...
அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசுனது ஒரு வகையில இதுமாதிரிதானே!
* இந்துத்துவ சோதனைக் களமான குஜராத்தில் நவீன ஹிட்லர் நரேந்திரமோடி சாலைகளை அகலப் படுத்த முனைந்தார். அப்போது சாலைகளில் உள்ள கோவில்களை அகற்றவேண்டிவரும் என்று அதிகாரி கள் கூறினார்கள்.சத்தமில்லாமல் அதற்கு ஒப்புதல் கொடுத்தார் மோடி. அங்கு இந்துத்துவ வியாபாரத் தலங்களான கோவில்கள் பலநூறு இடிக்கப்பட்டன. அங்குமட்டுமல்ல,இந்தியாவின் வேறு எங்கும் இந்துத்துவாக்கள் இதுபற்றி மூச்சுவிடவில்லை. மோடி இடித்தால் குட்டிச்சுவர்; மற்றவர் இடித்தால் கோவிலோ?


* 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு வினோத யதார்த்தம் இது. இந்தியாவில் 49.8 விழுக்காட்டினருக்கு கழிப்பறைகள் இல்லை. ஆனால், 63.2 விழுக்காட்டினர் தொலைப் பேசியும், 53.2 விழுக்காட்டினர் செல்பேசியும் வைத்துள்ளனர்.
- மணிமகன்-

தசராவின் கதை


இன்றைய தினம் விஜயதசமி எனப்படும் தசராவை அப்பாவி மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக் கின்றார்கள். தசராவைப் பற்றி இந்து புராணக் கதைகள் விலா வாரியாக விவரிக்கின்றன. பத்துத் தலை இராவணனைப் பற்றி புராணங்கள் புளுகித் தள்ளுகின்றன. தீமையை நன்மை வெற்றி கொண்டதால் இந்த விழாவாம். இந்தக் கதைகளை எல்லாம் பகுத்தறிவாளர்களால் நம்ப முடியுமா? இந்தக் கதைகளின் உண்மை முகத்தைக் கண்டால் அருவருப்பே மிஞ்சும்.
அயோத்தி மன்னனான இராமனுக் கும், இலங்கையை ஆண்ட இரா வணன் என்னும் அரசனுக்கும் இடையே நிகழ்ந்த போர் என்பதே உண்மை.
சீதை மட்டுமா பழி வாங்கப்பட் டாள்? சூர்ப்பனகைப் பழி வாங்கப் பட்டதைப்பற்றி என்னவென்று சொல்வது? இலக்குவனிடத்திலே, தன் அன்பான காதலை எடுத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக அவளின் அழகிய மூக்கு வெட்டப்படுகிறது என்றால் என்ன பொருள்? சூர்ப் பனகையின் காதலை ஏற்றிட இலக்கு வன் மறுத்திருக்கலாம். அதற்கான உரிமை அவனுக்குண்டு. ஆனால் அவளின் மூக்கை வெட்டுவதென்பது என்ன நியாயம்? வெள்ளைத் தோல் கொண்டவன் என்கின்ற ஆணவத் திமிர்தானே இதற்குக் காரணம். வெள்ளை நிறத்தினரான ஆரியர்கள், கறுப்பு நிறத்தினரான தென்னிந்தியர் களை வெறுத்ததுதானே இதற்குக் காரணம்? இங்கு இலக்குவனின் மனிதப் பண்பு கீழ்த்தரமானதாக உள்ளது. காட்டுமிராண்டிகள்கூட, தன் அன்பை எதிர்பார்த்து வந்த பெண்ணை இந்த வகையில் மானபங்கப் படுத்த மாட்டார்கள்.
இராவணனின் நாகரிகத்தை அதே சமயம் நாம் போற்ற வேண்டியுள்ளது. அசோகவனத்தில் சீதை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறாள். தன் அதிகாரத்தின்கீழ் இருக்கும் சீதையை இராவணன் நினைத்திருந்தால், என்னவெல்லாமோ செய்திருக்க முடியும்.
ஆனால் இராவணனோ நாகரிகம் மிக்கவன். மனிதநேயக் காவலன். சீதையினிடத்தில் பண்புடன் நடந்து கொண்டான். தன்னுடைய தங்கை சூர்ப்பனகையை மூக்கரிந்து மானபங்கம் செய்த இலக்குவனின் அண்ணி என்கிற வகையில் சீதையை பழி வாங்கி இருக்க லாம். ஆனால் நாகரிகம் மிக்க இராவணன் அவ் இழி நிலைக்குச் சென்றானில்லை. இராவணன் மரியாதைக்குரியவனாக இங்கே தோற்றமளிக்கிறான். நற்பண்புகள் கொண்ட மனிதனாக இராவணன் மிளிர்கின்றான்.
ஆனால் காலத்தின் போக்கு எதிர் திசையில் அல்லவா அமைந்து விட்டது. இராவணன் மாபாதகன் என்றல்லவா வருணித்து விட்டார்கள் மாபாதகர்கள்.
வெண்தோல் கொண்ட ஆரிய அரசன் இராமனுக்கும், கருமை நிறத் திராவிட அரசன் இராவணனுக்கும் இடையே நிகழ்ந்த போர்தானே இது.
இன்றைய தலித்துகள் இருக்கும் நிலைமைக்கும், அன்றைய இராவணன் இருந்த நிலைமைக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லையே. ஆனாலும் ஆரிய சூழ்ச்சிக்கு இராவணன் இரையானானே?
குரங்குப் படையின் கதைதான் என்ன? குரங்குப் படை என்பது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு தானே? கருந்தோல் திராவிடர்களை இழிவுப்படுத்தத்தானே இந்த குரங்குப் படையைப் பற்றிய கதை.
இலஜோரி இராம்பாலி என்பவர் அம்பேத்காரியவாதி. அனைவராலும் மதிக்கப்படுபவர். அவர் இராவணனை சர்வ சாதாரணமாக இராவணன் என்று கூறுவதில்லை, மகாத்மா இராவணன் என்றே கூறுவார்.
உழைப்பாளி வர்க்கத்தை அடிமைப்படுத்தி அதனால் சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நயவஞ்சக ஆரியர்களின் கதைதான் இந்த விஜயதசமியைப் பற்றிய கதை.
இராவணன் என்றும் மாமனித னாகத் திகழ்ந்தான் என்பதுதானே உண்மை.
இராம் பாலி கூறுகிறார்: தீபாவளி அன்று தீபங்களின் அணிவகுப்பு என் கிற வகையில் அதை இரசிக்கிறேன். ஆனால் இராமனின் கதையை என் னால் நம்ப முடியவில்லையே?
அம்பேத்கார் தத்துவத்தை பின்பற்றும் இராம்பாலியின் கள்ளங்கபடமற்ற கூற்று அனைவரும் ஏற்கத்தக்கது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...