அயோத்தி மன்னனான இராமனுக் கும், இலங்கையை ஆண்ட இரா வணன் என்னும் அரசனுக்கும் இடையே நிகழ்ந்த போர் என்பதே உண்மை.
சீதை மட்டுமா பழி வாங்கப்பட் டாள்? சூர்ப்பனகைப் பழி வாங்கப் பட்டதைப்பற்றி என்னவென்று சொல்வது? இலக்குவனிடத்திலே, தன் அன்பான காதலை எடுத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக அவளின் அழகிய மூக்கு வெட்டப்படுகிறது என்றால் என்ன பொருள்? சூர்ப் பனகையின் காதலை ஏற்றிட இலக்கு வன் மறுத்திருக்கலாம். அதற்கான உரிமை அவனுக்குண்டு. ஆனால் அவளின் மூக்கை வெட்டுவதென்பது என்ன நியாயம்? வெள்ளைத் தோல் கொண்டவன் என்கின்ற ஆணவத் திமிர்தானே இதற்குக் காரணம். வெள்ளை நிறத்தினரான ஆரியர்கள், கறுப்பு நிறத்தினரான தென்னிந்தியர் களை வெறுத்ததுதானே இதற்குக் காரணம்? இங்கு இலக்குவனின் மனிதப் பண்பு கீழ்த்தரமானதாக உள்ளது. காட்டுமிராண்டிகள்கூட, தன் அன்பை எதிர்பார்த்து வந்த பெண்ணை இந்த வகையில் மானபங்கப் படுத்த மாட்டார்கள்.
இராவணனின் நாகரிகத்தை அதே சமயம் நாம் போற்ற வேண்டியுள்ளது. அசோகவனத்தில் சீதை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறாள். தன் அதிகாரத்தின்கீழ் இருக்கும் சீதையை இராவணன் நினைத்திருந்தால், என்னவெல்லாமோ செய்திருக்க முடியும்.
ஆனால் காலத்தின் போக்கு எதிர் திசையில் அல்லவா அமைந்து விட்டது. இராவணன் மாபாதகன் என்றல்லவா வருணித்து விட்டார்கள் மாபாதகர்கள்.
வெண்தோல் கொண்ட ஆரிய அரசன் இராமனுக்கும், கருமை நிறத் திராவிட அரசன் இராவணனுக்கும் இடையே நிகழ்ந்த போர்தானே இது.
குரங்குப் படையின் கதைதான் என்ன? குரங்குப் படை என்பது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு தானே? கருந்தோல் திராவிடர்களை இழிவுப்படுத்தத்தானே இந்த குரங்குப் படையைப் பற்றிய கதை.
இலஜோரி இராம்பாலி என்பவர் அம்பேத்காரியவாதி. அனைவராலும் மதிக்கப்படுபவர். அவர் இராவணனை சர்வ சாதாரணமாக இராவணன் என்று கூறுவதில்லை, மகாத்மா இராவணன் என்றே கூறுவார்.
உழைப்பாளி வர்க்கத்தை அடிமைப்படுத்தி அதனால் சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நயவஞ்சக ஆரியர்களின் கதைதான் இந்த விஜயதசமியைப் பற்றிய கதை.
இராவணன் என்றும் மாமனித னாகத் திகழ்ந்தான் என்பதுதானே உண்மை.
இராம் பாலி கூறுகிறார்: தீபாவளி அன்று தீபங்களின் அணிவகுப்பு என் கிற வகையில் அதை இரசிக்கிறேன். ஆனால் இராமனின் கதையை என் னால் நம்ப முடியவில்லையே?
அம்பேத்கார் தத்துவத்தை பின்பற்றும் இராம்பாலியின் கள்ளங்கபடமற்ற கூற்று அனைவரும் ஏற்கத்தக்கது.
No comments:
Post a Comment