Wednesday, August 29, 2012

அரை நூற்றாண்டுகள் விடுதலை பணி தொடர அயராது உழைத்த - ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!


விடுதலை  ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்து என்னை எழுது என்ற ஆணையைப் பிறப்பித்தவர் அய்யா!

அரை நூற்றாண்டுகள் விடுதலை பணி தொடர அயராது உழைத்த - ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!

உங்கள் நம்பிக்கை பொய்த்துவிடாமல் உறுதியாக உழைப்பேன்! உழைப்பேன்!!
விடுதலை ஆசிரியர் அவர்களின் நெக்குருகும் அறிக்கை

உங்கள் நம்பிக்கை பொய்த்துவிடாமல் உறுதியாக உழைப்பேன்! உழைப்பேன்!! விடுதலை ஆசிரியர் அவர்களின் நெக்குருகும் அறிக்கை
அரை நூற்றாண்டுக்காலம் விடுதலை ஆசிரியராகப் பணியாற்றி யதற்கு ஒவ்வொரு வகையிலும் காரணமாக இருந்த - அய்யா தொடங்கி தொண்டர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி கூறி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர் கள் மனித குலத்தின் சுயமரியாதையைப் பாதுகாக்கும் பகுத்தறிவு நாளேடான விடுதலையில் அய்யா அவர்கள் தொண்டர்களில் ஒருவனான என்னை- கடந்த 50 ஆண்டு களுக்குமுன்பு, அவர்களே அழைத்து வந்து (சிந்தாதிரிப் பேட்டை, 2, பாலகிருஷ்ணப்பிள்ளைத் தெருவில்) விடு தலைப் பணிமனையில் பணியாற்ற என்னை ஒரு குரு சீட னைப் பீடத்தில் அமர்த்தி எழுத்தாணியைத் தந்து எழுது, துணிவாக எழுது, தெளிவாக எழுது, அச்சமின்றி உண் மையை எழுது என்று அறிவுறுத்துவதுபோல் அறிவுரை தந்து, தனது சிம்மப் பார்வையோடும், அன்பு நதியினில் நனைத்து கட்டிப் போட்ட இதயத்தோடும், பணித்தார்கள்!
அய்யா - அம்மா
அரை நூற்றாண்டு உருண்டோடிவிட்டது! இது எனது வாழ்வில் யான் பெற்ற பெரும்பேறு!! அய்யாவுக்கும், அம்மாவிற்கும் (அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்) கடைசிவரை உடனிருந்து பணி செய்து பயன்பட்டு, மனநிறைவு கொள்ளச் செய்த மகத்தான பணிதான் எனது வாழ்வின் விழுமித்த பயன்.
எண்ணற்ற கழகக் குடும்பங்களின் இணையற்ற பாசம் தான் யான் பெற்ற - பெறுகின்ற, பெரும் ஊதியம்!
உலகின் ஒரே நாத்திக ஏடு!
உலகிலேயே பகுத்தறிவு - (நாத்திக) கொள்கையைப் பரப்பும் சமூக அறிவியல் புரட்சிப் பணிக்கென நாள்தோறும் அச்சிடப்பட்டு வெளியாகும் ஒரே ஒரு நாளேடு, விடுதலை நாளேடுதான் என்பதை உலகப் பகுத்தறிவாளர் - மனிதநேயர்கள் அமைப்பின் தலைவரான, நார்வே நாட்டினைச் சார்ந்த லெவிஃபிராகல் (டுநஎல குசயபரட) அவர்கள் டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவின்போது, உலகுக்கே பிரகடனப்படுத்திப் பெருமைப்பட்டார்கள்!
அரசியல், பொருளாதாரத் துறைகளில் மக்களின் பெரும்பான்மைக் கருத்துக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து, வெற்றி பெறுவதுகூட (ஒப்பீட்டு அடிப்படையில்) எளிது; ஆனால், மக்களிடம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை, கடவுள், மதம், ஜாதி, பெண்ணடிமை போன்ற மனித ஒருமைப்பாட்டிற்கும், சமூக முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகளை எதிர்த்து - எதிர்நீச்சல் போட்டு 78 ஆண்டுகள் ஒரு நாளேடு தாக்குப் பிடித்து நிலைப்பது, நீடிப்பது என்பதே ஒரு தனித்ததோர் சாதனையென்றே சொல்லவேண்டும்.
எப்படி சாத்தியமாயிற்று?
நட்டத்திற்கென நடந்த ஏட்டினை, அய்யா தந்தை பெரியார்தம் சொந்த செல்வமும், சலிப்பறியாத உழைப்பும், எதிர்ப்பினால் கலங்காத நெஞ்சுரமும், நேர்மைத் திறனும், பற்றற்ற நிலையும் (அறிவுப் பற்று, கொள்கைப் பற்று, மனிதகுலப் பற்று தவிர வேறு எந்தப் பற்றும் - புகழ்ப்பற்றுகூட இல்லாத தலைவர்) உடைய அவர்களால் தான் தொடர்ந்து நடத்திடச் சாத்தியமாயிற்று.
அந்தப் பணி - அதே எதிர்நீச்சல், அடக்குமுறை - அரசுகளின் ஆதரவின்மை - இவைகளைத் தாண்டி தொடர்கிறது இன்றும்கூட - மூலகாரணம் அய்யாவின் அருந்தொண்டர்களான பற்றற்றான் பற்றினை பற்றி நடக்கும் மாவீரர்களான கருஞ்சட்டை வீரர் - வீராங் கனைகளின் கடும் உழைப்பும், பெரியார் ஆணை ஒன்றே நமக்குப் பெரிது; வேறு எந்த சுயநலச் சிந்தனையோ, ஆசா பாசமோ அல்லவென்றே கருதி, தம் வறுமை நிலையில்கூட கொள்கை வளத்தினை சுவாசிக்கும் தொண்டர் கூட்டத் தின் கட்டுப்பாடு தளரா பேராதரவின் காரணமாகத்தான்.
அவர்களின் பணியாளர்களில் - தோழர்களின் வரிசையில் கடைகோடியில் நின்று கடமையாற்றும் எளியவன் யான். எவ்வளவு மகத்தான ஆதரவு இப்பணி புரியும் எனக்கு!
என்னை ஊக்கப்படுத்தினால்...!
என்னை ஊக்கப்படுத்தினால், அது விடுதலைக் குழுமத்திற்கு உற்சாகத்தைப் பெருக்கும்; கழகக் குடும்பத்தினரை மேலும் உழைக்க, பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழ வைக்க வாய்ப்பாகும் என்பதற்கு - 25 ஆம் தேதி ஆகஸ்ட் விடுதலை நாள் விழா - ஓர் எடுத்துக்காட்டே!
நன்றி! நன்றி!!
அனைவருக்கும் நன்றி!!!
அதில் கலந்துகொண்டு மனந்திறந்து பாராட்டி, சீராட்டிய தமிழினக் காவலர் - எம் இனத்தின் இன்றைய இராவணன், ஆட்சியைவிட இனத்தின் மீட்சிக்காக அல் லும் பகலும் அயராது உழைக்கும் ஓய்வறியா உழைப்பின் உருவம் - எம்மூத்த சகோதரர் மானமிகு கலைஞர் அவர்களும், காலையில் வந்து கலந்து, கருத்துமழை பொழிந்த தன்மானப் பெரும் புலவர் டாக்டர் மா. நன்னன் அவர்களுக்கும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்கள் ஜஸ்டீஸ் டாக்டர் எஸ். மோகன், ஜஸ்டீஸ் டாக்டர் ஏ.ஆர். இலட்சுமணன், அகில இந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் புரட்சி எழுத்தாளர் பொன்னீலன், ஊடகவியலா ளர்கள் பெருமைக்குரிய ஏ.எஸ். பன்னீர்செல்வம், ரமேஷ் பிரபா, லக்னோ பல்கலைக் கழக சமூகவியல் பேராசிரியர் ஜெக்மோகன்சிங்வர்மா மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது உளம் நெகிழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
உங்களது நம்பிக்கைகளை பொய்க்கவிடாமல், இறுதி மூச்சு உள்ளவரை - உழைத்து உழைத்து, காப்பாற்றிடு வேன் என்று உறுதி கூறுகிறேன்.
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
எனது உடல்நலப் பாதுகாப்புக்கென அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்டு, என்னை தாயினும் சாலப் பரிந்து காக்கும் புரவலர்களுக்கும், அவர்களின் அன்பு மழைத் துளிகளை, அணைகளாகக் கட்டி ஒழுங்குபடுத்தி அறக்கட்டளை உருவாக்கி, எனது வேண்டுகோளை ஏற்று, பெரியார் நலநிதி அறக்கட்டளையாக்கிட இசைவு தந்து ஏற்பாடு செய்துள்ள அதன் தலைவர், எமது மதியுரைஞர் அய்யா மானமிகு எஸ். இராஜரத்தினம் மற்றும் அவர்தம் அணியினர், அனைவருக்கும் நன்றி.
என்றும் எனது காவலராக - நலம் பாதுகாப்பு அரணாக உள்ள டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களுக்கும், உலக முழுவதிலும் உள்ள நலம் நாடிடும் நண்பர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்?
சென்னை 
28.8.2012
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


ஓணம் தத்துவம்



ஓணம் பண்டிகையாம்; இது தமிழ்நாட்டை விட கேரள மாநிலத்தில் வெகு விமர்சையாகக் கொண் டாடப்படுகிறது.

இதன் கதை என்ன?
சோழ நாட்டில் திருமரைக்காடு (வேதாரண்யம்); அங்கு ஒரு சிவன் கோயில். அங்குள்ள சிவனின் மனைவிக்குப் பெயர் ஞானம் பழுத்த நாயகி என்பதாகும்.
ஒரு நாள் தன் மனைவியோடு சிவன் புணர்ந்து கொண்டு இருந்தானாம். (இது மாதிரி சமாச்சாரம் இல்லையென்றால், இந்து மதம் என்பதற்கு அர்த்தமே கிடையாது!)
அந்த நேரத்தில் எரிந்து கொண்டிருந்த தீபம் ஒளி குன்றி எரிந்து கொண்டிருந்ததாம். அந்த சமயத்தில் அங்கு வந்த எலி விளக்கில் இருந்த நெய்யைக் குடித்துவிட்டு, எலியின் வால் திரியின் மேல் பட்டதால்,  தூண்டப்பட்டு ஒளி பிரகாசமாகிவிட்டதாம்.
சிவனா கொக்கா? எலியைப் பார்த்து சிவன், நீ மூவுலகையும் அரசாட்சி செய்வாய்! என்று வரம் கொடுத்தானாம்.
விளக்கைத் தூண்டவேண்டும் என்ற எண் ணத்தில்கூட எலி அந்த வேலையைச் செய்யவில்லை; எதிர்பாராவிதமாக வால் பட்ட சங்கதி! சிவன் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தால் இப்படி ஒரு வரம் கொடுத்திருப்பான்? (ஓ, இது மாதிரி கடவுள் சமாச்சாரங்களில் எல்லாம் அறிவைச் செலுத்தக் கூடாதே - கண்மூடி தண்டனிட வேண்டுமே!)
மாவலி என்னும் பெயரோடு பிறந்த அசுர குல அரசன் மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம் மூன்றையும் கட்டி ஆண்டானாம்.
விண்ணுலகையும் மாவலி ஆண்டதால், இந்திர லோகத்தின் அதிபதியாகிய இந்திரன் கூட மாவ லிக்குக் கட்டுப்பட்டவனாகிவிட்டான். பொறுக்குமா அவர்களுக்கு?
அதே நேரத்தில் யாருக்கும் எந்த கேட்டையும் செய்யாமல் நல்லாட்சி புரிந்து, நல்ல பெயர் எடுத்தான் மாவலி!
அசுர குலத்தவன் நல்லாட்சி செய்வதாவது! நல்ல பெயர் எடுப்பதாவது! விட்டுவிடுவார்களா? இந்திரனின் தகப்பனாகிய காசிப முனிவன், விஷ்ணுவிடம் மனு போட்டானாம். கடும் தவமிருந்து விஷ்ணுவிடம் வரம் வேண் டினானாம். விஷ்ணு தமக்கு மகனாகப் பிறந்து மாவலியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மன்றாடினானாம். அதன்படியே வரமும் கிடைத்தது.
(மூன்று உலகத்தையும் மாவலி கட்டி ஆள வேண் டும் என்று சிவன் கொடுத்த வரம் என்னவாயிற்று? சிவனை விட வைணவக் கடவுளுக்குச் சக்தி அதிகம் என்று காட்டுவதற்கு இதுபோன்ற கதைகள் போலும்!)
ஒருமுறை யாகம் செய்த மாவலி தான தருமங்களைச் செய்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி காசிப முனிவருக்குப் பிறந்த வாமனன் (குள்ளப் பார்ப்பான் - சூழ்ச்சி என்று வந்தால் புராணங்கள் கூட பார்ப்பானைத்தான் தேடிப் பிடிக்கின்றன.) பிச்சைக்காரனாக (யாசகம் புருஷ லட்சணம் என்பதே பார்ப்பன தருமம் ஆயிற்றே!) சென்று மூன்று அடி மண்ணைக் கேட்டானாம். கேட்பாருக்கு இல்லை என்று சொல்லிப் பழக்க மில்லாத அந்தத் தர்மப்பிரபுவாகிய மாவலி எனும் அசுர அரசன் சம்மதித்தான்.
சூழ்ச்சிக்காரக் குள்ளப் பார்ப்பனனாகிய  வாமனன் பேருரு எடுத்து (விசுவரூபம்) ஓரடியை மண்ணுலகத்திலும் மற்றொரு அடியை விண்ணு லகத்திலும் வைத்து, மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்டானாம். என் தலையில் வை! என்றானாம் அந்த அப்பாவி; அவ்வளவுதான். தலையில் காலை வைத்து மிதித்து சிறையிலும் அடைத்தானாம்.
இந்த நாளில் மாவலி வீட்டுக்கு வீடு வருகி றானாம். கேரளத்தில் அப்படி ஒரு நம்பிக்கை. வீட்டு வாசலில் கோலம் போட்டு வைக்கிறார்கள்- மாவலியின் வருகைக்காக. ஓணம் பண்டிகை என்பது இதுதான்.
இந்தக் கதை மூடத்தனத்தின் மொத்தக் குத்தகை என்பது ஒருபுறம். இந்து மதத்தில் விஷ்ணு அவதாரம் எடுப்பதெல்லாம் அசுரர்களை அழிக்கத் தான் என்பதை மறந்துவிடவேண்டாம். தீபாவளிக் கதையும் இந்த ரகத்தைச் சேர்ந்ததே!
நல்லவனாக இருந்தாலும் அவன் அசுர குலத்தவன் என்றால் - சூத்திரன் என்றால் அவனை ஆளவிடாதே- அழித்துவிடு! என்கிற ஆரிய தத்துவம்தான் இந்த வாமன அவதாரக் கதை!
இங்கு மதம், கடவுள், பக்தி என்பதெல்லாம் நம்மை ஒழிப்பதற்கே! இந்தச் சூழ்ச்சி புரியாமல் கடவுள், காடாத்து என்று அலைவது பரிதாபமே!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

ஆகஸ்ட் 16-31

சம உரிமையுடன் வாழ விரும்பும் ஈழத்தமிழர்கள்


பாதிக்ககப்பட்ட ஈழத் தமிழர்களை நேரில் சந்தித்த மனநல மருத்துவர் மா.திருநாவுக்கரசு

இலங்கையில் சிங்கள இனவாத அரசு நடத்திய இனப்படுகொலைக்குப் பிறகும் எஞ்சி வாழும் தமிழர்களின் வாழ்வுரிமை என்பது கேள்விக்குறி என்ற நிலையில், உலகத் தமிழர்களெல்லாம் கவலையோடு இருக்கின்ற வேளையில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் தற்போதைய மனநிலை எப்படி உள்ளது? அவர்களுக்கு தற்போதைய தேவைகள் என்ன? அவர்கள் எதை எதிர் பார்க்கிறார்கள்? என்பதை அறிய இலங்கையில் கொழும்பு, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, வன்னிபிரதேசம், யானையிறவு, யாழ்ப்பாணம் போன்ற தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு நேரில் சென்று வந்த உலக மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பின் தெற்காசியப் பிரிவுத் தலைவரும், சிறந்த மனநல மருத்துவ நிபுணருமான பேராசிரியர் மா.திருநாவுக்கரசு அவர்கள், தமிழர்களை சந்தித்து அவர்களுக்கு மன உறுதிக்கான ஆலோசனைகளை வழங்கியதோடு, தற்போது அங்குள்ள சூழ்நிலைகளை நம்மிடம் எடுத்துரைத்தார்.
அதன் விவரம் வருமாறு: கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி  கொழும்புவில் உள்ள மனநல மருத்துவர் சிவதாஸ் எழுதிய நலமுடன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றினேன். மக்கள் ஆர்வத்துடன் இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார்கள். இந்தியாவில் இருந்து வந்திருந்து தமிழில் உரையாற்றி, கலந்துரையாடலும் செய்ததைப் பற்றி அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
அவர்களுடைய ஆர்வமும், தமிழ்ப் பற்றும் வெளிப்படையாகத் தெரிந்தது. அன்று இரவே அனுராதபுரம் வழியாகப் பயணம் செய்து வவுனியா வந்தடைந்ததோம், வவுனியா தற்போதுதான் மீண்டெழுந்து செயல்பட்டு வருகிறது. மக்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார்கள்.
இரண்டு மணி நேரம் பயணம் செய்து கிளிநொச்சியைச் சென்றடைந்தோம். அங்கு உள்ள மத்திய பள்ளி வளாகத்தில் புத்தக வெளியீட்டு விழா. போருக்குப் பின் அப்பள்ளியில் நடக்கும் ஒரு பொது நிகழ்ச்சி என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
நிகழ்ச்சி வன்னி பிரதேச கல்வி இயக்குனர் தலைமையில் நடந்தது. போரின்போதெல்லாம் அப்பள்ளி வளாகம் சிகிச்சை அளிக்கக் கூட பயன்படுத்தப்பட்டது என்று கூறினர். அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.
சுனாமி பேரழிவின் பாதிப்புகள், போரின் அவலங்கள், அதனால் ஏற்பட்ட காயங்கள்,  மிச்சங்கள் மற்றும் எச்சங்கள் ஆகியவை பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள். வவுனியா பிரதேசத்தின் பொது மருத்துவமனையின் இயக்குனரும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது முள்ளி வாய்க்கால் முழுக்க அவரது நிர்வாகப் பொறுப்பில்தான் இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. அனைவருமே நம்பிக்கையூட்டும் விதமாக பேசினார்கள். பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஏதாவது ஒரு முகாமை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கெல்லாம் வந்து பேச, உரையாட, அறிவுரை வழங்க கேட்டுக் கொண்டார்கள்.
கல்வி நிலைய முதல்வர்களுடனும், களப் பணியாளர்களுடனும் ஒரு மணி நேரம் கலந்துரையாடல் நடைபெற்றது. போரினால் ஏற்பட்ட இழப்புகள், தாக்கங்கள், காயங்கள் மற்றும் மன அழுத்தங்கள் தெளிவாகத் தெரிந்தன. அனைவருமே எதையாவது இழந்திருந்தார்கள். இழப்பை சந்திக்காதவர்களே இல்லை என்று கூறலாம்.
போருக்கு முன் ஏறத்தாழ நான்கு அய்ந்து ஆண்டுகளுக்கு மேல் பள்ளிகளே செயல்பட வில்லை. கிளிநொச்சி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரம் கிடையாது என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது.
யானையிறவு பகுதியில் பலத்த பாதுகாப்பு சோதனை இருந்தது. யாழ்ப்பாணம் பகுதி சுறுசுறுப்பாகத்தான் இருந்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லூர் முருகன் கோயில் பகுதிக்குச் சென்ற பிறகு வெவல்வெட்டித்துறை, கணேசன்துறை, பலாலி வழியாக செல்லும்போது பிரபாகரன் வீடு அமைந்த சந்தையும் (வீதி) பார்க்க நேர்ந்தது. இராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீட்டைப் பார்க்க அனுமதி இல்லை என்று கூறிவிட்டார்கள். அங்கிருந்து பாயின்ட் பெட்ரோ சென்று கடற்கரையைப் பார்த்தோம். வெகு நாட்களாக மீன் பிடிக்கத் தடை செய்யப்பட்டிருந்த இடம் இது.
அங்கிருந்து வேதாரண்யம் மிக அருகில் உள்ளது என்றார்கள். சமீபத்தில்தான் மீன் பிடி தொழில்தடை நீங்கி, உயிர் பெற்று சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மீண்டும் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தைப் பார்த்த பிறகு பொதுஜன நூலகத்தைப் பார்த்துவிட்டு கொழும்பு திரும்பினோம்.
2006 இல் சுனாமியின்போது மீட்புப் பணிகளுக்காக கொழும்பு சென்றிருந்தேன். அப்போது திரிகோண மலை மற்றும் மட்டக்களப்பு வரைதான் செல்ல அனுமதி கிடைத்தது. வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் செல்ல தடையிருந்ததாகக் கூறினார்கள்.
தற்போது சென்றபோது தடை இல்லை. கண்காணிப்போடு எந்த இடத்திற்கும் சென்றுவர முடிந்தது. மக்களை சந்திக்க முடிந்தது. உரையாட முடிந்தது. அதிலிருந்து நான் அறிந்து கொண்டவை இவைதான்:-
போருக்குப் பின் ஏற்பட்ட அமைதி தெளிவாகப் புலப்பட்டது. மக்கள் சகஜமாக நடமாடுகிறார்கள். இயல்பாக இருக்க முயற்சிக்கிறார்கள். வழி நெடுக சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் ராணுவ மற்றும் காவலர் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை மய்யங்கள் உள்ளன.
வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய இடங்கள்தான் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்கள். பலர் யாழ்ப்பாணத் திலிருந்து புலம் பெயர்ந்து வேறு நாடுகளுக்குச் சென்று செட்டிலாகிவிட்டார்கள். அதே சமயம் வவுனியா பகுதியில் உள்ள மக்கள்தான் இரண்டு பக்கத்திலும் மாட்டிக்கொண்டு இன்னல்களை அனுபவித்திருக்கிறார்கள்.
தற்போது தமிழர்களிடம் இருப்பது மனிதவளம்தான். தைரியத்தோடும், தெளிவோடும் இருக்கிறார்கள்.
மேற்கொண்டு போராடுவதற்கு அவர்கள் தயாராக இல்லை என்று தெரிகிறது. அதே சமயம் நடந்தவைகளை நினைத்து அசைபோட விரும்பவில்லை. மேற்கொண்டு என்ன செய்யலாம் எவ்வாறு முன்னேறலாம் என்றுதான் முயற்சிக்கிறார்கள்.
மனித வளத்தை முதலீடு செய்து மேம்படவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தைரியம், தன்னம்பிக்கையை இழந்ததாகத் தெரியவில்லை. அதே சமயம் பாதுகாப்பின்றிதான் இருக்கிறார்கள். சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்ற நினைப்பும், சமத்துவமாக நடத்தப்படுவதில்லை என்ற ஆதங்கமும், கவலையும் அவர்களது பேச்சில் தெரிகிறது.
சுதந்திரமாக செயல்படவும், சமத்துவமாக நடத்தப்படவுமான உலக நாடுகளின் உதவி மற்றும் செயல் பாடுகளால், வற்புறுத்தலால் தங்களுக்குக் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள். எல்லோரும் தோற்றதாகத்தான்  நினைக்கிறார்கள். யாரும் வெல்லவில்லை என்பதுதான் அவர்களது கருத்து.
தமிழ் மக்கள் செய்த தியாகம் மகத்தானதுதான். அம்மக்களுக்குக் கிடைக்கவேண்டிய பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் சமத்துவம் கிடைத்திட, உலக நாடுகள் முயன்றிட வேண்டும் என எண்ணுகிறேன் என்று மனநல மருத்துவ நிபுணர் பேராசிரியர் மா.திருநாவுக்கரசு அவர்கள் ஈழத் தமிழர்களை நேரில் சந்தித்த தனது அனுபவங்களை உண்மை இதழ் வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டார்.
சந்திப்பு: வே.சிறீதர்



ஆகஸ்ட் 16-31

தினமலர் - ஆன்மீக மலரும்: நமது வினாக் கணையும்


குழந்தைகளுக்கு வைக்கும் திருஷ்டிப் பொட்டே அழகாக இருந்தால் திருஷ்டி எப்படி கழியும்? 
அழகாக இருந்தாலும் திருஷ்டிப் பொட்டு தானே? கருமையால் பொட்டு வைத்து விட்டால் பார்ப்பவர் களுக்கு முதலில் அதுதான் கண்ணில் படும். இதனால், குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்து விடும். வேண்டுமானால் நீங்கள் திருஷ்டிப் பொட்டை அழகாக வைக்காமல், கோணலாக வையுங்கள்.

நமது கேள்வி:
தினமலர் - ஆன்மீக மலரும்: நமது வினாக் கணையும்
இது போன்ற திடீர்ப் பொட்டை பார்ப்பன அய்.ஏ.எஸ். அதிகாரி வீட்டுப் பிள்ளையின் கன்னங்களில் வைக்காதது ஏன்? திடீர்ப் பொட்டில் கலந்திருக்கும் இராசாயனப் பொருள் தோல் வியாதியைத் தானே உண்டாக்குகிறது?


தவறு செய்த மனிதனுக்கு அடுத்த பிறவியில் துன்பம் கொடுப்பதை விட இந்தப் பிறவியிலேயே அவனைத் திருத்தக் கூடாதா? 
சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணிய பலனை அனுபவிப்பதற்கே இந்தப் பிறவியின் ஆயுட்காலம் போதவில்லை. புதிதாகச் சேரும் பாவங்களுக்கும் இறைவன் துன்பத்தைக் கொடுத்தால் மனிதனால் தாங்க முடியாது. இதற்காகத்தான் அவன் திருந்தும் வரை பொறுமையாகத் தண்டிக்க மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறார்.
இந்த கருணையைப் புரிந்து கொண்ட வர்கள் தீயவழியில் சென்று பாவத்தைச் சேர்க்க மாட்டார்கள். புரிந்து கொள்ளாதவர்களும் தீயவழியில் சென்று பாவத்தை சேர்க்க மாட்டார்கள். புரிந்து கொள்ளாத வர்களும், புரிந்து அலட்சியப் படுத்துபவர்களும் தீயவழியில் சென்று பாவத்தை சேர்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் பக்குவப்படும் வரை பிறவிகளையும் அந்தந்த பிறவிகளில் இன்ப துன்ப அனுபவங்களையும் இறைவன் தந்து கொண் டேயிருப்பார்.
ஒரே பிறவியில் மனிதனைத் திருத்து வதற்கு சுவாமியின் கருணை உள்ளம் இடம் தாராது.
நமது கேள்வி:
இது உண்மையானால் கொலை குற்றப் புகழ் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் எந்தப் பட்டியலில் அடங்குவார்? புற்று நோயால் அவதிப்பட்டு மாண்ட ரமண ரிஷியின் நிலை என்ன?

ஒரு மாத காலம் படுத்த படுக்கையில் கிடந்து படாத பாடுபட்ட சாயிபாபாவும் பாவ ஆத்மாதானா?

அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, பாவம் செய்வதை மட்டும் மனிதன் மீது சுமத்து வானேன்?

பாவச் செயலுக்குக் கடவுள்தானே பொறுப்பு?

பொறுப்பைத் தட்டிக் கழிப்பவன்தான் பகவானா?

ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு மகளாகிய நான் திதி கொடுக்கலாமா? 
நேரடியாக கொடுக்க முடியாது. உங்கள் தந்தை அதாவது சித்தப்பா, அல்லது பெரியப்பா அல்லது அவர்களின் மகன்கள் போன்றவர்கள் மூலம் திதி கொடுக்கலாம். செலவிற்குப் பணத்தை நீங்கள் கொடுத்து விடலாம்.

நமது கேள்வி:
பெண் ஏன் திதி கொடுக்கக்கூடாது? பெண் மட்டும் ஆண்டவனின் படைப்பு இல்லையா? சிவபெருமான் தலையில் ஒரு பெண்ணையும் (கங்கையையும்) இடுப்பில் ஒரு பெண்ணையும் (பார்வதியையும்) வைத்திருக்கும் போது, சக்தி இல்லையேல் சிவன் ஏது என்று கூட சொல்லிக் கொண்டு பெண்ணை இழிவுபடுத்துவானேன்?

புத்தென்னும் நரகத்திலிருந்து தந்தை யைக் காப்பாற்றுபவன்தான் புத்திரனாம். உண்மையைச் சொல்லப்போனால் மகனை விட மகள்தானே தங்கள் பெற்றோர்களைப்; பெரும்பாலும் உபசரிப்பர். இந்த நிலையில் திதி கொடுக்கும் உரிமை மகனுக்கு மட்டும் ஏன்? ஓ, இந்து மதம் என்றால் பெண்ண டிமைத்தனம் தானே!

காசு மட்டும் பெண்கள் கொடுக்க வேண்டு மா? ஓ, நாய் விற்ற காசு குறைக்காதே!

பெற்றோர் இருக்கும் போது, பிள்ளைகள் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா?

தினசரி சாப்பிடும் முன் காகத்திற்கு சாதம் வைப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். பித்ரு தினங்களில் பெற்றோர் இல்லாதவர்கள் மட்டுமே வைக்க வேண்டும். அமாவாசை, முன்னோர் வழிபாட்டு நாள் போன்றவை பித்ரு தினங்களாகும்.

நமது கேள்வி:
காகங்கள் என்ன பித்ருக்களின் முகவர் களா? ஏமாந்த குழந்தைகளின் கைகளி லிருந்து காகம் கொத்திச் செல்லுகிறதே. அந்தப் பொருள் கூட பித்ருக்களுக்குத்தான் போய்ச் சேருமா?


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>

ஆகஸ்ட் 16-31

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...