Monday, March 16, 2020

என்ன ஆச்சு தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு?

தமிழ்நாட்டில் மேலும் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களாம்

கூறுகிறார் மத்திய அமைச்சர்
 
தமிழகஅரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கும் நோக்கில் டெல்டா மாவட்டங்களை வேளாண் மண் டலமாக மாற்றி சட்டம் இயற்றியுள் ளது. ஆனால், தமிழகத்தில் மேலும்  3 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல் படுத்தப்பட இருப்பதாக நாடாளுமன் றத்தில் மத்திய அமைச் சர் கூறி உள்ளார். இது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்தின் நிதிநிலைக் கூட் டத்தொடரின் 2-ஆவது அமர்வு நடை பெற்று வருகிறது. கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் நிறை வேற்றப்படும் ஹைட்ரோ கார்பன் திட் டங்கள் குறித்து  கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசின் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ஒரு திட் டமும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத் திற்கு 2 திட்டங்களும் வழங்கப்பட் டுள்ளது.
அதன்படி,  தமிழ்நாடு, புதுவை யில் 2337 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும், ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் திட்டங்களை நிறை வேற்றிக் கொள் ளலாம். இதில் இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன் நிறு வனம் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் 477 சதுர கிலோ மீட்டரிலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனது 2 திட்டங்கள் மூலமாக கட லூர், நாகப்பட்டினம், காரைக்கால், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய வற்றிலும்  நிறைவேற்றிக் கொள்ள லாம்.
இதில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 1259 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் திட்டங்களை நிறைவேற்ற அனுமதி அளிக்கப்பட் டுள்ளது என்று தெரிவித்தார் மேலும் இதுதொடர்பாக தமிழக அரசிற்கு கடிதம் எழுதப்பட்டுள் ளது, தமிழக அரசு விரைவில் முடிவெ டுக்கும் என்று தெரிவித்தார்.
தமிழக அரசு பிப்ரவரி 20-ஆம் தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங் களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, அதற்கான சட்டமும் தாக்கல் செய்யப்பட்டது, அதன் படி இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஹைட்ரோகார்பன், மீத் தேன் உள்ளிட்ட இயற்கை எரி வாயு களுக்கான ஆய்வு, பிரித் தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.
துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. ஒருங் கிணைந்த எஃகு ஆலை, இலகு இரும்பு உருக்காலை, தாமிர உருக் காலை, அலுமினிய உருக் காலை களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவையும் இப் பகுதிகளில் தொடங்க அனுமதி கிடை யாது. சட்டத்தின் இரண்டாவது பட்டி யலில் இடம் பெற்றிருக்கும் இந்தத் தடை செய்யப் பட்ட தொழில்களின் பட்டியலில் எதையாவது சேர்க்கவோ, நீக்கவோ அரசால் முடியும்.
இந்த சட்டத்தின் கீழ் பாதுகாக் கப்படும் பகுதிகளில் மேலே சொன்ன தொழில்களைத் துவங்கி நடத்தினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் சிறைத் தண்டனையும், 50 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு தமி ழகத்தில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவ தாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...