Monday, March 16, 2020

முகநூல் பயன்பாட்டைக் குறைத்தால் உடல் நலம் கூடும்: ஆய்வில் தகவல்


முகநூல் பயன்பாட்டைக் குறைப்பவர் களுக்கு, உடல் நலனை மேம் படுத்துவதற்கான பழக்க வழக் கங்கள் அதிகரிக்கும் என்று ஜெர்மனியில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட் டின் பாஷும் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்தவர்கள் உள் ளிட்ட ஆய்வாளர்கள் மேற் கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாவது:
முகநூலைப் பயன்படுத்தி வரும் 286 பேரைக் கொண்டு, அந்த சமூக வலைதளப் பயன் பாட்டுக்கும், உடல் நலனுக் கும் இடையிலான தொடர்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
அந்த ஆய்வுக்கு உள்படுத் தப்பட்டவர்கள் இரண்டு பிரி வுகளாகப் பிரிக்கப்பட்டனர். அவர்களில் 146 பேர் வழக்க மான அளவில் முகநூலைப் பயன்படுத்தினர்; 140 பேர் இரண்டு வாரங்களுக்கு தின மும் 20 நிமிடங்கள் மட்டுமே முகநூலைப் பயன்படுத்தினர்.
அந்த ஆய்வு தொடங்குவ தற்கு முன்னரும் பிறகு ஒரு வாரம் கழித்தும் அதனைத் தொடர்ந்து சோதனையின் முடிவிலும் சோதனையில் உள்படுத்தப்பட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
அவர்களது முகநூல் பயன்பாடு, உடல் நலனைப் பேணுவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக் கைகள் உள்ளிட்ட விவரங் கள் சேகரிப்பட்டன.
இதன் மூலம், முகநூலை குறைவாகப் பயன்படுத்துபவர் கள், புகைப்பிடித்தலைக் குறைத் தல், உடல் நலனை அதிகரிக் கும் நடவடிக்கைகளில் ஈடு படுல் போன்றவற்றை அதிக ரித்தனர். ஆனால், முகநூலை வழக்கம் போல் பயன்படுத்து பவர்கள், சுறுசுறுப்பாக இயங்குவதை முடிந்த அளவு தவிர்த்து வந்தனர். முக நூலைப் பயன்படுத்தும் பிறரு டன் தங்களை ஒப்பிட்டுக் கொள்ளும் அவர்கள், அதன் காரணமாக பொறாமை, மன உளைச்சல் ஆகியவற்றையும் அனுபவித்தனர். ஆனால், முகநூல் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டவர்க ளுக்கு இதுபோன்ற உளவியல் ரீதியிலான பிரச்னைகள் குறைந்து மன நலனும் அதிக ரித்தது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...