Wednesday, March 11, 2020

தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு

கணக்கீட்டாளர், உதவியாளர் பணிக்கு

தமிழ் வழியில் இணையவழி தேர்வு

கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு தமிழ்வழியிலும் இணைய வழித் தேர்வு நடத்தப்படும் என்றும் இத்தேர்வுக்கு மார்ச் 23ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்பகிர்மான கழகத்தில் இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவியில்500 காலியிடங் களும் கணக்கீட்டாளர் பதவியில் 1,300 காலியிடங்களும் உள்ளன. இவை போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. முதலில் இணையவழி தேர்வு ஆங்கில வழியில் மட்டும் நடத்தப்படுவதாக இருந்தது. இதற்கு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இணையவழி தேர்வை தமிழ்வழியிலும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவிகளுக்கான இணையவழி தேர்வானது தமிழ் வழியிலும் நடத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன்தலைமை பொறியாளர் (பணியமைப்பு) வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு ஆங்கில மொழியில் நடைபெறும் என ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அவர்களின் நலன் கருதி மேற்கண்ட தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம் மார்ச் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கணக்கீட்டாளர் பதவிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 32 ஆகவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், இளநிலை உதவியாளர் பதவிக்கு பி.காம். பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகும்.
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. உரிய கல்வித் தகுதியும், வயது தகுதியும் உடைய பட்டதாரிகள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தை பயன்படுத்தி மார்ச் 23ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதள தேர்வு நடைபெறும் நாள், நேரம் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...