Sunday, November 24, 2019

இலக்கிய கவிஞர், இலக்கிய எழுத்தாளர் விருது

திருச்சி அனைத்துலகத் தமிழ் மன்றம் சார்பில் கருநாடக மாநிலத்திராவிடர் கழக வழக்குரைஞர் பிரிவுத் தலைவர் சே.குணவேந்தன் அவர்களுக்கு "இலக்கிய கவிஞர்" என்ற விருதும், மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ அவர்களுக்கு "இலக்கிய எழுத்தாளர்" என்ற விருதும் 16.11.2019 அன்று சாந்தி யோகாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் முனைவர் வே.த.யோகநாதன் விருதினை வழங்கினார். இனிய நந்தவனம் இதழாசிரியர் த.சந்திரசேகரன், திருச்சி திராவிடர் கழக அமைப்பாளர் கனகராஜ் மற்றும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் முன்னிலையில் சிறப்பான விழாவில் நடைபெற்றது. நிகழ்வு தொடக்கத்தில் இரா.முல்லைக்கோ, சாந்தி யோகாவின் உருவப் படத்தினைத் திறந்துவைத்து அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அனைவரும் கருத்துகளை கூறிய பின்னர் மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.
பெரியார் உயராய்வு சிந்தனைகள் பட்டயப்படிப்பு சான்று வழங்கல்
கருநாடக மாநிலம் பெங்களூரு திராவிடர் கழக வழக்குரைஞர் பிரிவு தலைவர் சே.குணவேந்தன், தஞ்சை பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மய்யத்தில் "பெரியார் உயர் சிந்தனைகள்" எனும் பட்டயக்கல்வி பயின்று முதன்மையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற் கானப் பட்டயக்கல்வி சான்றினை உதவி துணை வேந்தர் தேவராஜ் வழங்கினார். உடன் உதவிப் பேராசிரியர் முனைவர் த.ஜெயக்குமார், கருநாடக மாநிலச் செய லாளர் இரா.முல்லைக்கோ நிர்வாகத்துறை கண் காணிப்பாளர் இளவேனில், முகிலன் ஆகியோர் உடனிருந்து வாழ்த்துகளைக் கூறினர். இதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல குழந்தை களுக்கு இனிப்புகள் வழங்கிடும் வகையில் ரூ. 500 வழங்கி மகிழ்ந்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...