Tuesday, August 27, 2019

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புரட்சியாளர் விருதுகள்

சென்னையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான யூ ஆர் லவுட் மற்றும் அம்மா கல்வியகம், கோவையில் உள்ள கே.பி.ஆர். இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி யுடன் இணைந்து, 4ஆவது ஆண்டாக இந்த புரட்சியாளர் விருதுகளை வழங்க உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே இருந்து, இந்த விருதுக்கானவர்களை தேர்வு செய்துள்ளனர்.
நடப்பு ஆண்டுக் கான விருது வழங்கும் விழா, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி, கோவை, கே.பி.ஆர். இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினி யரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத் தில் நடைபெற உள்ளது.
தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் டேனியல் ஜேக்கப் கூறியிருப்பதாவது: இந்த விருது வழங்குவதன் முக்கிய நோக்கம், மாணவர் களை அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து பயில வைப்பதும், ஆசிரியர்களை அரசுப் பள்ளியைத் தேர்வு செய்து அங்கு பணியாற்றச் செய்வதும்தான்.
தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள், திறமை மற்றும் புத்திசாலித்தனத்தில் மற்ற யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இது, இன்று வரை உண்மையாகத் தொடர்கிறது. இந்நிலையில், இதுபோன்ற விருதுகளும், அங்கீ காரமும், அரசுப் பள்ளி மாணவர் களை மேலும் தன்னம்பிக்கை கொள்ளச் செய்வதுடன், அவர்களது முடிவு சரியானது தான் என்பதை உறுதி செய்வதாகவும் அமையும்  என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...