Sunday, August 25, 2019

போக்குவரத்து விதிகள் மீறல்: தினசரி 1200 பேருக்கு இ-சலான் அனுப்பும் போக்குவரத்து காவல்துறை

போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்பவர்களின் வீடுகளுக்கு, போக்குவரத்து காவல்துறையில் இருந்து அவர் களின் வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் ரசீது அனுப்பப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் 1200 பேர் பேர் போக் குவரத்து விதிகளை மீறி வாகனங்களை செலுத்தி வருவதாகவும், அவர்களின் வாகன எண்களை வைத்து, அவர்களின் முகவரிக்கு அபராதத்துக்கான மின்னணு ரசீது அனுப்பி வைக்கப்படுவதாக போக்கு வரத்து காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் கடுமை யாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.  ஹெல்மெட் அணியாதவர்கள், சீட் பெல்ட் போடாதவர்கள், சிக்னலை மீறி வாகனத்தை ஓட்டி செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களை, அந்த பகுதியில் உள்ள காமிரா உதவியுடன் கண்டறிந்து, வாகனத்தின் பதிவு எண்ணின் வாயிலாக அவர்களின் வீடுகளுக்கு புகைப்படத்துடன் கூடிய கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. அந்த கடிதத்தில் வண்டி எண், விதிமீறிய இடம், ரசீது எண் உடன் எவ்வளவு அபராதம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கூறிய போக்குவரத்து காவல்துறை அதிகாரி,  சென்னை காவல்துறையினர் ஒவ்வொரு நாளும் குறைந்தது 1,200 வழக்குகள் தொடர்பாக, வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிகளுக்கு மின்னணு ரசீதுகள் அனுப்புகின்றனர். வாகனத்தின் எண்ணை அடையாளம் காணக்கூடிய கேமராக் களில் சிக்கியவர்களைத் தவிர, வாகனத்தின் பதிவு எண்ணின் புகைப்படங்களைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றவர் களை காவல்துறை பதிவு செய்கிறது.ரசீது பெற்ற வர்கள், அடுத்த  24 மணி நேரத்திற்குள் அபராதம் செலுத்த வேண்டும்.
சென்னையின் முக்கிய சந்திப்புகளில்  தினசரி ஏறக்குறைய 4,000 விதிமீறல்களைக் கண்டறிப்படு கிறது என்றும்,  அதை .  ஆராய்ந்து ஒரு நாளைக்கு சுமார் 500 பேருக்கு சலான்கள் வழங்கப்படுவதாகவும்  கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...