Monday, November 27, 2017

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு

 

சென்னை, நவ.26 அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் இரண்டு நாள் மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு முதல் நாள் மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக நேற்று (25.11.2017) மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத் தில் மாலை அய்ந்து மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு வருகை தந்தவர்களை சென்னை மண்டலச் செய லாளர் வி.பன்னீர் செல்வம் வரவேற்றார்.

தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்டு நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராட் டத்தின் 60 ஆம் ஆண்டு விழா மற்றும் பட்டிமன்றம், ஜாதி, தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்க நிகழ்வுகள் அணிஅணியாக கருத்து மழையாக, உரிமைப்போர் முழக்கமாக, ஜாதி ஒழிப்பு புயலாக வெடித்துக்கிளம்பியது.

ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கு முதன்மை

பிரச்சாரமா? சட்டம் இயற்றலா? பட்டிமன்றம்


ஜாதி, தீண்டாமை ஒழிப்பில் முதன் மைக் கரணியம் பிரச்சாரமே என்கிற தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன், பா.மணியம்மை, பொன்னேரி கு.செல்வி ஆகியோர் தங்கள் வாதங்களை எடுத்துரைத் தனர். ஜாதி, தீண்டாமை ஒழிப்பில் முதன்மைக் கரணியம் சட்டம் இயற்றலே! என்ற தலைப்பில் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, வழக்குரைஞர் அ.அசோக், தோழர் சே.மெ.மதிவதனி ஆகியோர் தங்கள் வாதங்களை எடுத்துரைத்தனர்.

ஜாதி, தீண்டாமை ஒழிப்பில் முதன்மை யானது   பிரச்சாரமா? சட்டம் இயற்றலா? தலைப்பிலான பட்டிமன்றத்தின் நடுவரான திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் இருதரப் பினரின் வாதங்களை விளக்கி எடுத்துக் காட்டி இறுதியாக ஜாதி, தீண்டாமை ஒழிப்பில் முதன்மையானது சட்டம் இயற்றலே என்று தீர்ப்பினை வழங்கினார். பட்டிமன்றத்தில் பங்கேற்ற அனை வருக்கும் இயக்க வெளியீடுகள் அளித்து சிறப்பு செய்யப்பட்டது. தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வ நாதன் நன்றி கூறினார்.

கருத்தரங்கம்

பட்டிமன்றத்தைத் தொடர்ந்து, நீதிபதி து.அரிபரந்தாமன் ஜாதி, தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கத்தின் தலைமையில் நடைபெற்றது.

வழக்குரைஞரணிச் செயலாளர் வழக் குரைஞர் ஆ.வீரமர்த்தினி வரவேற்புரை யாற்றி, இணைப்புரை வழங்கினார். கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அறிமுகவுரையாற்றினார்.

கழகப் பொருளாளர் மருத்துவர் சு.பிறைநுதல்செல்வி`பெண்களுக்கும் அர்ச்சகர் உரிமை' என்ற தலைப்பிலும்,  எழுத்தாளர் பழ.கருப்பையா `தமிழில் வழிபாட்டுரிமை' எனும் தலைப்பிலும், முனைவர் பெ.செகதீசன் `சமூகவியலும் தந்தை பெரியாரும்' எனும் தலைப்பிலும், இதழாளர் புனித பாண்டியன்`ஜாதி ஒழிப்பும் சமூக ஜனநாயகமும்'எனும் தலைப்பிலும், தோழர் கவுசல்யாசங்கர் `ஜாதி வெறியும், ஆணவக் கொலைகளும்' எனும் தலைப்பிலும், அர்ச்சகர் பயிற்சி பெற்றவரான தோழர் வா.அரங்கநாதன் `அர்ச்சகர் பயிற்சியும் நியமனமும்' எனும் தலைப்பிலும் கருத்தரங்க உரையாற்றி னார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் பங்கேற்று பட்டிமன்றம் மற்றும் கருத்தரங்கில் உரையாற்றிய அனைவரின் உரையினையும் கேட்டு பாராட்டினார். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான தமிழகத்தின் சட்டப் போராட்டக் களங்களை விரிவாக எடுத்துரைத்து நீதிபதி து.அரிபரந்தாமன் நிறைவுரையாற்றினார். வடசென்னை மாவட்ட மகளிரணிச் செயலாளர் பொறி யாளர் ச.இன்பக்கனி நன்றி கூறினார்.

நூல் வெளியீடு


கா.சு.பிள்ளை எழுதிய தமிழ்நாட்டு இந்து சமயங்கள் வரலாறு மற்றும் மஞ்சை வசந்தன் எழுதிய தமிழா நீ ஓர் இந்துவா? ஆகிய நூல்களை மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் எழுத்தாளர் பழ.கருப்பையா வெளியிட காங்கிரசு கட்சியின் மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் உ.பலராமன் பெற்றுக் கொண்டார். இரண்டு நூல்களின் நன் கொடை மதிப்பு ரூ.120. மாநாட்டையொட்டி ரூ.100க்கு வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசி ரியர் அவர்களிடமிருந்து ஏராளமானவர்கள் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

நூலைப் பெற்றுக்கொண்டவர்கள்

மேனாள் மேயர் சா.கணேசன், த.கு.திவா கரன்,  சாமி.திராவிடமணி, கோ.சா.பாஸ்கர், வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஊமை.செய ராமன், தகடூர் தமிழ்செல்வி, தங்க.தன லட்சுமி, இறைவி, இன்பக்கனி, வேட்ட வலம் பி.பட்டாபிராமன், திண்டிவனம் க.மு.தாஸ், பாபு, தூத்துக்குடி பெரியாரடியான், புழல் த.ஆனந்தன், விழிகள் வேணுகோபால், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ் செல்வம்,  கொரட்டூர் பன்னீர்செல்வம், பழ.சேரலாதன் உள்பட ஏராளமானவர்கள் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.

விடுதலை சந்தா வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டக் கழகத்தின் சார்பில் மூன்றாவது தவணையாக விடு தலை சந்தாத் தொகை ரூ.20ஆயிரத்தை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளித்தார்.

கலந்துகொண்டவர்கள்

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன்,  காங்கிரசு கட்சியின் முதுபெரும் தலைவர் இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், பேராசிரியர் திருக்குறள் க.பாசுகரன், தலைமை செயற் குழு உறுப்பினர் க.பார்வதி, காரைக்குடி மாவட்டச் செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சி.வெற்றிச் செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்செந்தில்குமாரி, தாம்பரம் ப.முத்தையன், கோ.நாத்திகன், மோகன் ராஜ், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டிவீரபத்திரன், வழக்கு ரைஞர் சென் னியப்பன், விஜயலட்சுமிதாஸ், வழக் குரைஞர் ம.வீ.அருள்மொழி, தம்பி பிரபாகரன், செந்துறை இராசேந்திரன், விஜய் ஆனந்த், மருத்துவர் க.வீரமுத்து, பெரியார்மாணாக்கன், பூவைசெல்வி, கோ.வீ.ராகவன், கோ.தங்கமணி, அம் பத்தூர் ஏழுமலை, கு.தென்னவன்,

கி. இராமலிங்கம் உள்பட பலர் மாநாட்டின் முதல் நாளில் பெரிதும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...