Saturday, October 28, 2017

டாக்டர் ராம் புனியானி பெரியார் திடல் வருகை





சென்னை, அக்.27 இந்தியாவில் அதிகரித்து வருகின்ற அடிப்படை வாதங்களுக்கு எதிராகவும், மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்திடவும் தொண்டாற்றி வருபவரான டாக்டர் ராம் புனியானி அவர்கள் சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்கு நேற்று (26.10.2017) வருகை தந்தார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, தற்போது நடைபெற்று வருகின்ற பாஜக ஆட்சியில், குடிமக்களிடையே நல்லிணக்கத்தை பாதிக் கக்கூடிய பல்வேறு நிகழ்வுகள் நாடுமுழுவதும் நடைபெற்று வருவது குறித்து மிகவும் கவலையுடன் கலந்துரையாடினார்.

தந்தை பெரியார் ஆற்றிய மனித நேயப் பணிகள்குறித்து டாக்டர் ராம்புனி யானிநெகிழ்ச்சியுடன்கருத்துகளைபகிர்ந்து கொண்டார். மேலும், மீண்டும் தமிழகத்துக்கு வருகைதந்து திராவிட இயக்கத் தலைவர் களுடன் கலந்துறவாட ஆர்வமுடன் உள்ள தாகவும் தெரிவித்தார்.

பெரியார் நூலகம், ஆய்வகத்தை பார் வையிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் தந்தை பெரியார் நினைவிடம் சென்று பெரியார் நினைவிடத்தில் மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினார்.

டாக்டர் புனியானி மும்பை அய்.அய்.டி. நிறுவனத்தில் மூத்த மருத்துவத்துறை அலு வலராக 27 ஆண்டுகள் பணியாற்றியவர். 2004ஆம் ஆண்டில் விருப்பு ஓய்வு பெற்றார். இந்தியா முழுவதும் நல்லிணக்கத்தை வளர்த்திட முழுநேர செயற்பாட்டாளராக தம்மை மாற்றிக் கொண்டார்.

மதசார்பற்ற ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான இந்து ராஷ்டிராவை உருவாக்குவதாகக் கூறி,  மத அடிப்படைவாதங்களுடன் உள்ள சங் பரிவார பாசிசம்  குறித்த நூல் ஆக்கங்களின் மூலமாக சங் பரிவாரங்களை தோலுரித்துள்ளார். 30 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

முன்னதாக  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் டாக்டர் ராம்புனியானி அவர்களுக்கு தந்தை பெரியார் புத்தகங்களை வழங்கியும், பயனாடை அணிவித்தும்  வரவேற்று சிறப்பு செய்தார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் கருணானந்தம், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உடனிருந்தார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...