Thursday, July 13, 2017

கோபால கிருஷ்ண காந்தி கலைஞரிடம் வாழ்த்து பெற்றார்




சென்னை, ஜூலை 13 இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி அவர்கள், நேற்று  (12-07-2017) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதுடன், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார். தி.மு.கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திரு. கோபால கிருஷ்ண காந்தி அவர்களை வரவேற்று, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டதுடன், மதச்சார்பற்றக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திரு. கோபால கிருஷ்ண காந்தி அவர்களுக்கு, திமுகவின் சார்பில் தனது ஆதரவை தெரிவித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...