Thursday, July 13, 2017

அமித்ஷா வருவார் முன்னே கலவரம் வரும் பின்னே!


கோவாவில் மத வழிபாட்டுத் தளங்கள் இடிக்கப் படுவது தொடர்பாக சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
சனாதன் சான்ஸ்தா அமைப்பினர் உள்ளூர் இந்து அமைப்புகளுடன் சேர்ந்து புராதன கிறித்துவ சின்னங் களையும்,  தேவாலயங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக கோவா காங்கிரஸ் கட்சி தலைவர் சாந்தராம் நாயக் தலைநகர் பனாஜியில் மாநில காவல்துறை ஆணையர் முக்தேஷ் சந்தரை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதன் பிறகு. ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், "மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சில அமைப்பினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும்.  

மாநில காவல்துறையில் புகார் அளித்தால் அவர்களுக்கு மாநில அரசின் சில முக்கியத் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து, அவர்களை செயல்படாமல் வைக்கின்றனர். ஆகையால் இவ்விவகாரம் தொடர்பாக சிபிஅய் விசா ரணையைக் கோரியிருக்கிறோம். அவர்கள் இந்த வழக்குகளை விசாரித்தால் தான் நன்றாக இருக்கும். மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் இது தொடர்பாக எவ்வித பதிலும் கூறாமல் அயல்நாடு சென்றுவிட்டார். 

தெற்கு கோவா மாவட்டத்தில் கிறித்துவ தேவால யத்தில் உள்ள பல கல்லறைகளை மர்ம நபர்கள் சேதப் படுத்தியுள்ளனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் 9 சிலுவைகள் மற்றும் ஒரு தேவாலயமும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் கோவா மாநிலத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளன. 

சென்ற வாரம் இங்கு அமித்ஷா வந்து சென்ற பிறகு இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத் தக்கது" என்று அவர் கூறியுள்ளார்.
அமித்ஷா சென்று வந்த இடங்களில் எல்லாம் தொடர்ச்சியாக மத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. 

கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதே சத்தில் மிசாப்பூரில் இந்து - முஸ்லிம் கலவரத்தை உருவாக்கி அதன் அரசியல் பலனை பா.ஜ.க.வுக்கு ஏற்படுத் திடவில்லையா?

திரிணாமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத் திலும் இதே நிலைதான்!
இந்து வாக்கு - முசுலிம் வாக்கு என்று பிளவு படுத்தி (Polarisation) வாக்குகளைக் கபளீகரம் செய்யவில்லையா? வாக்கு வங்கி  அரசியல் செய்வதில் கெட்டிக்காரர்கள் அவர்  ; அந்த யுக்தியை அரசியல் நடவடிக்கையாகவே செய் வதில் கொழுத்த அளவுக்கு அனுபவசாலிகள் இந்த சங்பரிவார்க் கும்பல்! அவ்வாறு செய்து வெற்றியும் பெற்று விடுவதால் மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களுக்கு வேண்டியது வாக்குகள், அதிகாரம், அதிகாரத்தின் வழி, காவி வழி மனுதர்ம ஆட்சியை நடத்துவது என்ற நோக்கிலும், போக்கிலும் இந்த இந்துத்துவா பாசிஸ்டுகள் நடந்து வருகிறார்கள். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

குஜராத்தில் நரேந்திர மோடி முதல் அமைச்சராக இருந்தபோது, சிறுபான்மையினர்மீது நடத்தப் பட்ட மத வன்முறை வேட்டைக்குப் பின்புலமாக இருந்தவர் - அங்கு நடைபெற்ற போலி என் கவுன்ட்டர் கொலையில் சம்பந்தப்பட்டவர் அமித்ஷா.

சொரபுதீன் போலி என் கவுன்ட்டர் வழக்கில் கொலை, கடத்தல், உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 25.7.2010 முதல் 29.10.2010 வரை சிறையில் அடைக்கப்பட்டவர்.

குஜராத் வன்முறைத் தாண்டவத்துக்கு முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்குக் கை வாளாக இருந்தவர். இவர் வேலையே  கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் இலாபத்தை பிஜேபிக்குக் கிடைக்கச்  செய்வதுதான்! அதனால் தான் தாம் பிரதமரானதும் - அமித்ஷாவை விடாமல் தன் கையோடு வைத்துக் கொண்டு தொடர்ந்து பிஜேபியின் தலைவராகத் தொடரச் செய்வதாகும். ஜாடிக்கு ஏற்ற மூடி என்பார்களே அது இதுதான்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...