Wednesday, December 4, 2013

பெரியார் வெறும் சிலையல்ல - சீலம்! பெரியார்காணவிரும்பியஉலகம்சித்தரிக்கப்படும்

பெரியார் உலகம் - பெரியார் பேருருவச் சிலை

பெரியாருக்குமுன்-பெரியாருக்குப்பின்-உட்பட

பெரியார்காணவிரும்பியஉலகம்சித்தரிக்கப்படும்

பெரியார் வெறும் சிலையல்ல - சீலம்!


தஞ்சை, டிச.3- தந்தை பெரியார் வெறும் சிலையல்ல - சீலம் - தத்துவ விளக்கம் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

2.12.2013 அன்று தஞ்சையில் நடைபெற்ற பெரியார் உலகத்திற்கு 1000 பவுனுக்குரிய தொகை வழங்கும் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு, இயற்கை யோடு போராடி, மழையோடு போராடி, மழை நம்மை மிரட்டி னாலும், இந்த மக்கள் மழையையும் மிரட்டுவார்கள் என்று சொல் லக்கூடிய அளவில், ஒரு மகத்தான வரலாற்று பூர்வமான நிகழ்ச்சியாக இந்த தஞ்சையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக் கக்கூடிய பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் மானமிகு அய்யா பொத்தனூர் க.சண்முகம் அவர்களே,

கடமைக்குரிய பலன் நிச்சயமாகக் கிடைக்கும்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியில், இறுதியில் தந்தை பெரியார் அவர்களுடைய 95 அடி உயர சிலை, மிகப்பெரிய பெரியார் உலகம், அதில் பெரியார் அவர் களுடைய சாதனை இவற்றையெல் லாம் உள்ளடக்கமாக வைக்கப் படக்கூடிய அந்தத் திட்டத்திற்கு, முதல் தவணையாக நிதி திரட்ட வேண் டும் - அது ஆதார நிதியாக முயற்சி களுக்கு அமைய வேண்டும் என்று முடிவெடுத்த நேரத் தில், நம்முடைய தோழர்கள் மட்டுமல்ல, அனைத்துப் பெருமக்களும், எல்லையற்ற மகிழ்ச்சி யோடு ஒரு சிறு சங்கடத்தைக் கூட பெறாமல், ஒரு பவுன் என்று சொன் னால், ரூ.25 ஆயிரம் என்று கழகம் முடிவு செய்து - அதனைத் தாருங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடுத்த நேரத்தில், ஒன்றரை மாத குறுகிய காலகட்டத்தில், நம்முடைய தோழர்கள் தேனீக்களைப் போல பறந்து பறந்து, பெரியார் பற்றா ளர்கள் உள்பட எல்லோரிடத்திலும் மிகப்பெரிய அளவிற்கு நிதியைத் திரட்டி, நாங்களேகூட எதிர்பாராத வகையில், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொருளாளர் என்ற தனித் தகுதியும், அதே நேரத்தில், நாளைய தமிழகம் இவரால்தான் விடியல் பெற இருக்கிறது என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பையும் பெற்ற எனது அருமை சகோதரர் அவர்கள், தளபதி அவர்களுடைய வருகை, இந்த முயற்சியை மென்மேலும் எங்களுக்கு ஊக் கத்தைத் தந்திருக்கிறது.

அப்படிப்பட்ட தளபதி அவர்களே, பல பேர் இங்கிருந்து மலையேறுகிறார்கள்; மலைக்குச் சென்ற நீங்கள் மக்களைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறீர்கள். அங்கும் மக்களிடத்தில் என்ன கடமையைச் செய்ய வேண்டுமோ, அந்தக் கடமையைச் செய்திருக் கிறீர்கள். அந்தக் கடமைக்குரிய பலன் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதில் மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இருக்கிறது.

சமுதாய இழிவு ஒழிவதற்காக யார் பாடுபடுகிறார்களோ, அவர்கள்தான் முக்கியம்!

நீங்கள் தளபதி என்பதற்கு அடையாளமே, மற்றவர்கள் போரிடத்தயங்கி ஒதுங்கிக் கொண் டிருக்கக் கூடிய காலத்தில்கூட, நான் தளபதி கடைசிவரையில் போரிடுவேன், எனக்கு வெற்றி - தோல்வி என்பதுகூட இரண்டாம் பட்சம்தான் என்ற நிலையில், அந்த அரசியல் போராட்டத்தில், நீங்கள் களத்தில் கடைசி கட்டத்தில் நின்று, அதற் கடுத்தபடியாக, இங்கே இணைப்புரை வழங்கிய, டாக்டர் அன்பழகன் கூறியதைப் போல, எது தாய் வீடோ, அந்தத் தாய் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள்; ஈரோட்டுக் களத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது ஈரோட்டுக்களம் மட்டு மல்ல, இதுதான் திராவிடர் இயக்கத்தின் அடித்தளம். ஆகவேதான், மிக முக்கியமாக இங்கே வந்திருக்கின்ற உங்களுக்கும், அதேபோல, இந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் மழையையும் பொருட்படுத்தாமல், டில்லி யில் நடைபெறவிருக்கின்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் - அதே நேரத்தில், எங்கள் சமுதாய இழிவு ஒழிவதற்காக யார் பாடுபடுகிறார்களோ, அவர்கள்தான் முக்கியம் என்று சொல்லி, தளபதி அவர்கள் கூறி யதைப்போல, இரட்டைக்குழலாக திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் இருப் பதைப்போல, அதில் இன்னொரு குழலும் இணைந்தது - அதுதான் விடுதலை சிறுத்தை களுடைய அமைப்பு என்று சொல்லத்தகுந்த அளவிலும், இவைகளுக்குத் தோட்டா வழங்கு வதற்குத்தான் பக்கத்தில் இருக்கின்ற இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்; அதுபோல, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையினுடைய இணையற்ற பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

மேடையில் வீற்றிருக்கக்கூடிய அருமை இன் னாள், முன்னாள் அமைச்சர் பெருமக்களே மற்றும் பெருமக்களே, ஒவ்வொருவரையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமின்மை காரணத்தால், நான் சுருக்கமாக என்னுடைய நன்றியுரையை, ஏற்புரையை இங்கே வழங்கவிருக்கிறேன்.

மழையையும் பொருட்படுத்தாமல் வெள்ளம் போல் திரண்டிருக்கின்ற உங்களுக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1005 பவுனுக்குரிய தொகையைக் கொடுத்திருக்கிறார்கள்!

தோழர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்; தஞ்சை தந்தை பெரியார் அவர்களுக்கு மிகப்பெரிய நஞ்சை. அந்த அடிப்படையில்தான், அதிகமாக எந்த மாவட்டம் வசூலிக்கிறதோ, அந்த மாவட்டத் தில்தான் விழா என்று சொன்னவுடன், தஞ்சை தோழர்கள்தான் இந்த இடத்தில் அந்த விழா நடைபெறவேண்டும் என்று முயற்சி எடுத்து, அதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 1000 பவுன் தருவதாகச் சொல்லி, இங்கே கொடுத்திருப்பதோ, 1005 பவுனுக்குரிய தொகையைக் கொடுத்திருக் கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்வத்தோடு கொடுத்திருக்கிறார்கள்; எல்லோ ரும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி. நேற்று காலையில் நான் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து, அவருடைய வாழ்த்தினைப் பெற்று, நான் வந்தேன். மாலையில், பேராசிரியர் அவர்களிடத் திலும் செல்லவேண்டும் என்ற உணர்வோடு, நம் முடைய இனமானப் பேராசிரியர் அவர்களைச் சந்தித்தேன். அவருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது சொன்னேன், இயக்கப் பொறுப் பாளர்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும், மிகுந்த ஈடுபாடோடும், உறுதியோடும், விரைவாகவும் செய்கிறார்கள் என்று சொன்னேன்.

திராவிடர் கழகக் கேட்டிற்குள் நுழைந்தாலே அது தானே வந்துவிடுமே!

உடனே பேராசிரியர் அவர்கள் சொன்னார், அது இருப்பதால்தானே திராவிடர் கழகத்தில் இருக்கிறார்கள்; திராவிடர் கழகக் கேட்டிற்குள் நுழைந்தாலே அது தானே வந்துவிடுமே என்று சொல்லிவிட்டு, நாங்கள் விடைபெறும்பொழுது, ஒரு நீள கவரில் ரூ.25 ஆயிரத்தினை வைத்து, பெரியார் உலகத்திற்காக நிதி என்று சொல்லி, என்னுடைய பெயரையும் எழுதிக் கொடுத்தார்கள். அது இன்றைய விடுதலையிலும் செய்தியாகவும் வெளிவந்துள்ளது.

இங்கே விடுதலை சிறுத்தைகளின் சார்பாக, ரூ.50 ஆயிரத்தினை பெரியார் உலகத்திற்காக அளிக் கிறேன் என்று அறிவித்தார்கள். நாளை அதனை உங்கள் அலுவலகத்தில் வந்து கொடுக்கிறேன் என்று சொன்னார்கள்.

தமிழ்ச் சமுதாயத்தினுடைய நன்றிக் கடன்!

பணம் முக்கியமல்ல நண்பர்களே, நம்முடைய இனத்தினுடைய உறுதிப்பாடு இதில் இருக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தினுடைய நன்றிக் கடன் என்பது வந்திருக்கிறது.

தளபதி அவர்களுக்குத் தொல்லை கொடுத் தார்களே என்று எனக்கு வருத்தம்தான். ஏனென் றால், கடந்த மூன்று நாள்களாக ஓய்வின்றி சுற்று பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். அப்படிப் பட்டவருக்கு நாம் தொந்தரவு கொடுக்கவேண்டுமா என்று கழகத்தவரிடம் தெரிவித்தபொழுது, தளபதி அவர்களே மகிழ்ச்சியாக, மாலை 5 மணிக்கு தேர்தல் பிரச்சாரத்தினை முடித்துக் கொண்டு இங்கே வந்திருக்கிறார் என்று சொன் னால், இங்கே கொடுக்கப்பட்ட நிதியினை திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களும், தலைவர்கள் முன்னிலையில், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத் தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை, இன்னும் ஏனைய பற்றாளர்கள் ஆகியவர்களின் முன்னிலையில் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த விழாவிற்கு தளபதி வந்ததில் ஒரு மிகப் பெரிய பொருத்தம் என்னவென்று சொன்னால், பெரியார் சமத்துவபுரம் திட்டம் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்தனை சமத்துவபுரத்திலும் பெரியார் சிலையை திறந்து வைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால், அவர்தான் நம்முடைய தளபதி அவர்கள்; சமத்துவபுரம் இந்த நேரத்தில், கொஞ்சம் அலட்சியப்படுத்த புரமாககக்கூட இருக்கலாம், ஆட்சியாளர்களால்! ஆனால், அது நிரந்தரமல்ல நிச்சயமாக! பெரியாரை அலட்சியமாகக் கருதியவர் களை, மக்கள் அலட்சியப்படுத்துவார்கள் என்பது தான் வரலாறு.

கலைஞர் அவர்கள்தான் எமது 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னின்று நடத்தினார்

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தளபதி அவர்கள் இந்த விழாவிற்கு வந்து, ஒரு சிறப்பான பணியை செய்திருப்பதற்காக, நன்றியை தெரிவிக்கின்ற நேரத்தில், என்னுடைய பிறந்த நாள் விழாவை, நான் எப்பொழுதுமே கொண்டாடுவதை விரும்பாதவன் மட்டுமல்ல; தோழர்களிடமும்கூட அகப்படாதவன். ஆனால், என்னை முதலிலே சிக்க வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்னுடைய 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நான் முன்னின்று நடத்துகிறேன் என்று சொல்லி, 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை நடத்தினார்கள்; அவருடைய சொல் லைத் தட்ட முடியாமல், ஏற்றுக்கொண்டேன். அன்று எல்லோரும் என்னை சந்தித்தார்கள்; பிறகு அதேபோல, 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்று சொன்னார்கள்; அதற்கு சரியென்று சொன்னேன்; இப்பொழுது 81 ஆம் ஆண்டு என்று சொன் னார்கள். சரி, இவ்விழாவில் என்னை முன்னிலைப் படுத்தக் கூடாது; தந்தை பெரியாரைத்தான் முன்னிலைப்படுத்தவேண்டும். ஆகவே, தந்தை பெரியாருக்குப் பேருருவச் சிலை; பெரியார் உலகம்; ஆகவே, அதனைச் செய்யவேண்டும் என்பதற்காக, முடிவு செய்து சொன்ன நேரத்தில், தோழர்கள் அற்புதமான ஒரு பணியினை முதற்கட்டமாக செய்து, 2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் ரூபா யினை இங்கு முதல் தவணையாகக் கொடுத்திருக் கிறார்கள்.

தோழர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்!

பெரியார் உலகத் திட்டம் 15 ஆண்டுகாலத் திட்டமாகும். இந்த உலகம், பெரியாருக்கு முன்னால்; பெரியாருக்குப் பின்னால்; பெரியார் காண விரும்பிய சமுதாயம் - அறிவியல் சமுதாயம் - அறிவியலுக்கும், மூட நம்பிக்கைக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடுகள்; அறிவியலால் ஏற்படும் நன்மைகள்; மூட நம்பிக்கையால் ஏற்படும் தீமைகள்; இவைகளையெல்லாம் ஒருமுனைப்படுத்தி, ஒரே இடத்தில், ஒரு நகருக்குள்ளே, ஒரு உலகத்திற் குள்ளே சென்று திரும்பும்பொழுது, பழைய நம்பிக் கைகள் உள்ளவர்கள் கூட மாறிவருவார்கள் என்று சொல்லி, பெரியார் கண்ட, காண விரும்பிய ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்ற பணி, அங்கே தொடர்ச்சியாக இருக்கும். அதற்காகத் தோழர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அமீர கத் தமிழர்கள் இங்கே வந்து சிறப்பு செய்தார்கள்; தளபதி அவர்களுக்கும் சிறப்பு செய்தார்கள்.

பெரியார் சிலையாக மட்டுமல்ல, சீலமாகவும்!

அமீரகத் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வுகளை அங்கே நடத்திக் கொண்டிருக் கிறார்கள். அதுபோல, அமெரிக்காவில், பெரியார் பன்னாட்டு நிறுவனத்தின் சார்பாக, டாக்டர் சோம. இளங்கோ அவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள். பேராசிரியர் சாகு அவர்கள், பெரியாரின் கருத்து களை ஒடிசா மொழியில் மொழியாக்கம் செய்து, உத்கல் பல்கலைக் கழகத்தில் ஒடிசா அரசாங்கமே அந்த நூலினை வெளியிட்டிருக்கிறது. பெரியாரு டைய கருத்துகள் மிகப்பெரிய அளவிற்கு உலக ளாவிய நிலையில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தப் பெருமை நிலைக்கவேண்டும் என்பதற்காகத் தான், எதிர்காலத்தில் இந்தப் பணியினை செய்யக்கூடிய வாய்ப்பினை இன்றைக்கு நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அதற்கு சிறப்பான வகையில் ஒத்துழைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்கின்ற நேரத்தில், பெரியார் சிலையாக மட்டுமல்ல, சீலமாகவும், வழிகாட்டுகின்ற ஒளி யாகவும் நமக்குப் பயன்படவேண்டிய ஒரு கால கட்டம் இப்பொழுது.

ஏனென்றால், பெரியார் கொள்கைகளை தலைகீழாக மாற்றிவிடலாம்; பெரியார், அண்ணா கொள்கைகளை - கலைஞர் ஆட்சி செய்தது; ஆகவே, அவர் செய்த காரியங்களையெல்லாம் தலைகீழாக மாற்றிவிடலாம் என்கிற ஒரு முயற்சி, ஆரியத்தாலே, இப்பொழுது திட்டமிட்டு நடத் தப்படுகின்றது. அது மிகப்பெரிய ஆபத்திற்குரிய ஒன்று.

அதற்காக நிறைய சொல்லவேண்டிய அவசிய மில்லை; அண்மையில் நடந்துகொண்டிருக்கக் கூடிய ஒரு செய்தியை உங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன்.

சிதம்பரம் கோவில் வழக்கு!

சிதம்பரம் கோவில், நம்முடைய சோழர்கள் கட்டிய கோவில். அதற்கு ஆதாரங்கள் இருக் கின்றன. பராந்தர சோழன், பொன்மேடு வேய்ந் தான் என்பதெல்லாம் வரலாறு. எந்த ஒரு பார்ப் பனரும், இதுவரை ஒரு கோவில் கட்டியதாகக்கூட  வரலாறு கிடையாது. கோவிலில் நுழைந்த பெருச்சாளிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள், இதுதான் வரலாறு.

இவ்வளவு பெரிய கோவிலைக் கட்டிய, இதே தஞ்சையில் பெரிய கோவில், வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த கோவிலைக் கட்டிய, இராஜராஜ னுக்கு ஒவ்வொரு ஆண்டும் சதய திருவிழா மிகப்பெரிய அளவிற்கு நடைபெறுகிறது. ஆனால், அந்த சிலை எங்கே இருக்கிறது, கோவிலுக்கு வெளியேதான் இருக்கிறது; அதுவும் கலைஞர் எடுத்த முயற்சியால்தான். கலைஞர் எவ்வளவு பெரிய கெட்டிக்காரர் என்பதற்கு அடையாளம், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார். சிலையை உள்ளே வைக்க அனுமதி இல்லை என்று தொல்பொருள் துறை சொல்லியது. சரி, சிலையை வெளியே வைப்போம் என்று வெளியில் சிலை வைத்தார். உள்ளே போகவில்லை. இதிலிருந்து ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள், கோவில் கட்டு கின்ற தமிழன் வெளியில்தான் நிற்கவேண்டுமே தவிர, கோவிலுக்குள்  போக முடியாது; பார்ப் பான்தான் போக முடியும் என்பதை, சொல்லாமல் சொன்னார் கலைஞர். நாங்கள் வெளிப்படையாக சொல்வோம். இதுதான் திராவிடர் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உள்ள வேறுபாடு.

சிதம்பர ரகசியம் என்ற நூலில்...

அதுபோல, சிதம்பரம் கோவிலை, காலங் காலமாக சுரண்டித் தின்ற, 3000 தீட்சதர்கள்; அவர்களுக்குப் பெற்றோர்களே கிடையாது; நேராக மேலே இருந்து வந்தவர்கள் என்று அவர்கள் புராணம் எழுதி வைத்தார்கள். அவர் களுக்கு எந்தச் சட்டமும் பொருந்தாது; குழந்தை மணமா - அவர்கள் நடத்திக் கொண்டிருப்பார்கள். இதனை எடுக்கவேண்டுமென்று, எம்.ஜி.ஆர். ஆட்சியில்கூட அவர் கடுமையாக முயற்சி செய்தார்; பலரும் முயற்சி செய்தனர். அத்தனைப் பேரும் தோற்று போன இடத்தில், சிதம்பரம் நகர மக்கள், கோடானகோடி பக்தர்கள் - அங்கே திருவாசகம், தேவாரம் ஓதவேண்டும் என்பது வரலாறு - ஏற்கெனவே அந்தக் கோவில் தீட்சதர் களுக்குச் சொந்தமில்லை என்கிற தீர்ப்பு நூறாண்டு களுக்கு முன்பு வந்திருக்கிறது - அந்தத் தீர்ப்பினை கொடுத்தது யார் என்றால், முத்துசாமி அய்யர் - ஒரு பார்ப்பன நீதிபதிதான் இந்த வரலாற்றைச் சொல்லியிருக்கிறார் - சிதம்பர ரகசியம் என்ற நூலில் இந்தப் புள்ளி விவரங்களைக் கொடுத் திருக்கிறோம்.

இதையெல்லாம் ஆதாரமாக வைத்துத்தான், மிகப்பெரிய அளவில், அந்தக் கோவிலை, மக்களுக்காக, பக்தர்களின் கோரிக்கைக்காக - மிகப்பெரிய அளவில் அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வந்த பெருமை - கலைஞர் ஆட்சியைச் சார்ந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!

உடனே சுப்பிரமணியசாமி போன்றவர்கள் வழக்கு மன்றம் சென்றார்கள்; தனி நீதிபதி அந்த வழக்கினை விசாரித்து, ஆணி அடித்ததுபோல அசைக்க முடியாத அளவில் தீர்ப்பு எழுதினார்.

பிறகு அவர்கள் மேல்முறையீடு செய்தார்கள்; மேல்முறையீட்டில் இரண்டு நீதிபதிகள் அமர் விலும், அரசாங்கம் கோவிலை எடுத்தது சரிதான் என்று தீர்ப்பளித்தார்கள்.

புள்ளி விவரத்தோடு சொன்னார்கள்; தீட்ச தர்கள் இருந்தபொழுது எவ்வளவு சுரண்டி னார்கள்; அரசாங்கம் எடுத்த பிறகு வருமானங்கள் முறையாக அறநிலையத் துறைக்கு வந்திருக்கிறது என்று அந்தத் தீர்ப்பில் சொன்னார்கள்.

ஆட்சிகள் மாறியவுடன், காட்சிகள் மாறு கின்றன என்று சொல்வதுபோல, ஆரியம் எப்படி சிலிர்த்து எழும்புகிறது என்பதற்கு அடையாளமாக, இப்பொழுது உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வழக்குப் போட்டுள்ளனர்.  எதைப்பற்றியும் கவலைப்படக் கூடியவர்கள் அல்லர் நாங்கள்!

உச்சநீதிமன்றத்தின் நீதிப்போக்கு எப்படி இருக்கிறது என்பது உலகம் முழுவதும் தெரியும். இது தனிக்கூட்டமாக இருந்தால் நான் விரிவாக உரையாற்றுவேன்;  எதைப்பற்றியும் கவலைப்படக் கூடியவர்கள் அல்லர் நாங்கள். ஆனால், இவர் களை யெல்லாம் மேடையில் வைத்துக் கொண்டு, அந்த வேலைக்கு நான் இப்பொழுது போகமாட் டேன். ஆனால், தேவைப்படும்பொழுது நாங்கள் நிச்சயமாக அதனைச் செய்வோம்.

கடவுளையே தூக்கி எறிகின்ற நமக்கு, நீதிமன்றம் என்ன? நீதியாக இருந்தால், அது நீதிமன்றம். நீதியைப் போட்டு புதைக்கின்ற மாதிரி இருந்தால் - யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று வந்தால், நீதிமன்றத்தினுடைய யோக்கியதை என்னவென்று இப்பொழுது உங்களுக்குப் புரியாதா?

ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள செய்தியைப் பாருங்கள்!

சங்கரராமன் கொலை வழக்கில் என்னாயிற்று. 81 சாட்சியம் பிறழ் சாட்சியம். தர்மம் வென்றது; உண்மை நிலைத்தது என்று விளம்பரம் கொடுக் கிறார்கள். தர்மம் எப்படி வென்றது என்றால், கொலை செய்யப்பட்ட அய்யரின் மனைவியைக் கேளுங்கள்; ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள செய்தியைப் பாருங்கள் உண்மை புரியும்- இதுதான் நீதிமன்றத்தின் போக்குகள்.

உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதி கங்குலி அய்யர்; அவர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக இருந்தார்; அவர்தான் 2ஜி வழக்கு களில், ராசா போன்றவர்கள் பதவியில் இருக்கக் கூடாது என்று சொல்லி, பதவி விலகவேண்டும் என்று சொன்னாரே, தி.மு.க.விற்கு அவமானத்தை உண்டாக்கவேண்டும் என்பதற்காகச் செய்தார் களே, அந்தக் கங்குலியின் இன்றைய பெருமை என்ன? பெண்ணிடத்தில் தவறாக நடந்துகொண் டார்; அவருக்கு என்ன வயது? உச்சநீதிமன்றத்தின் நீதிபதியினுடைய யோக்கியதையை ஒரு பெண் வழக்குரைஞர் சொல்லும்பொழுது, நீதி, நியாயம் என்று நினைக்கும்பொழுது, எங்களுடைய ரத்தம் கொதிக்கிறது - பெரியார் தொண்டர்களாகிய எங்களுக்கு அடுத்த தேர்தலைப்பற்றி கவலை யில்லை - அடுத்த தலைமுறையினரைப்பற்றித்தான் கவலைதான் எங்களுக்கு.

சுப்பிரமணியசாமி உண்மையைப் பேசுபவரா?

சிதம்பரம் கோவில் சம்பந்தமாக, சுப்பிரமணிய சாமி உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்யும்பொழுது, தில்லைவாழ் அந்தணர்கள் 3000 பேரும் மேலே இருந்து குதித்தார்கள் என்று சொன்னவுடன், உடனே தடையாணை வருகிறது. 3 ஆம் தேதியன்று தமிழக அரசு பதில் சொல்லவில்லையானால், சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்கே உரியது என்று நீதிபதி கூறியதாக, சுப்பிரமணியசாமி சொல்லி யிருக்கிறார். சுப்பிரமணியசாமி உண்மையைப் பேசுவாரா என்பது வேறு விஷயம். ஆனால், அதேநேரத்தில், அப்படி இருந்தால், அதன் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா? கலைஞர் என்ன அவருக்காகவா செய்தார்; மக்களுக்காகத்தானே செய்தார். தி.மு.க.வுக்கு என்ன நட்டம்? தி.க.வுக்குத்தான் என்ன நட்டம்?

நீதிக்கட்சியினால் கொண்டு வரப்பட்ட சட்டம்

சில பேர் புரியாமல் கேட்கிறார்கள், இவர்கள் தான் கடவுள் இல்லை என்கிறார்களே, அவர் களுக்கு எவன் கொள்ளையடித்தால் என்ன என்று; இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை சட்டமே - நீதிக்கட்சியினால் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம். அந்த வரலாற்றினை தெரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு இவ்வளவு பெரிய கொடுமை நடந்து கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் கோவில் தொடர் பான வழக்கு வருகின்ற நேரத்தில், தமிழக அரசின் சார்பில், ஜூனியர் வழக்கறிஞர்கள் இரண்டு பேர் இருந்தார்கள் என்று சொன்னால், இது என்ன கொடுமை?

மனித உரிமை என்பதுதான் மிக முக்கியம்

இந்தக் கூட்டத்தின் வாயிலாக, தமிழக அரசிற்கு ஒரு வேண்டுகோளை நாம் வைக்கிறோம்; ஒரு அரசு செய்த காரியம்; இன்னொரு அரசு என்று வரும் பொழுது - அது கொள்கை முடிவாக வந்த நேரத்தில் - அதனை நிச்சயமாக அலட்சியப்படுத்தக் கூடாது; அலட்சியப்படுத்த முடியாது; அதுமட்டு மல்ல, அது எந்தக் கட்சி செய்தது என்பது முக்கியமல்ல; அதில் இருக்கின்ற நியாயங்கள் மிக முக்கியம். அதனை செய்யவேண்டும். மீறி, வேறு விதமாக நடந்தால், மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்பது மிகமிக முக்கியமானது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் தெளிவாக இருக்கிறார்கள்; திரா விடர் கழகம் தெளிவாக இருக்கிறது. பக்தர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதில் பக்தி இருக் கிறதா? பக்தி இல்லையா? என்பது முக்கிய மல்ல; மனித உரிமை என்பதுதான் மிக முக்கியம். இப்படி எத்தனையோ பிரச்சினைகள்.

ஒரு பக்கம் ஜாதியம், இன்னொரு பக்கம் மதவெறி இவைகளெல்லாம் வருகின்றபொழுது, பெரியார் சிலையாக நின்றால் மட்டும் போதாது; பெரியாரைப் பின்பற்றப்படவேண்டிய சீலமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி என்று சொல்லி, கொட்டும் மழையானா லும், கொளுத்தும் வெயிலானாலும் கொள்கை யாளர்களுக்கு அவை பொருட்படுத்த முடியாத வைகள்; எங்களுடைய பயணங்கள் என்றும் தடைபடாது; சென்றுகொண்டே இருக்கும்.

அதேநிலையில், இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு செய்த உங்களுக்கு நன்றி, நன்றி!

கூடுதல் தகுதியோடு அந்தப் பணியை செய்வார் நம் தளபதி!

அதேநேரத்தில், இந்த சிலை, நிச்சயமாக, இந்தப் பெரியார் உலகம் இன்றைக்குத் துவக்கத்தை நம்முடைய தளபதி செய்திருக்கிறார்கள்; ஆனால், அடுத்தபடியாக, நிச்சயமாக அந்தப் பெரியார் உலகத்திற்கு தளபதி அவர்கள் அங்கே வருவார்கள்; அந்தப் பணியை செய்வார்கள்; அதுமட்டுமல்ல, அப் பொழுது கூடுதல் தகுதியோடு அந்தப் பணியை செய்வார் என்பதை நான் மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் சொல்லி, இது எங்கள் விருப்பம் மட்டு மல்ல, வரலாற்று கட்டாயம் என்று கூறி முடிக் கிறேன், நன்றி, வணக்கம்!
இங்கே வந்திருக்கின்ற அனைத்துத் தலைவர் களுக்கும் நன்றி! விட்டு விட்டு பெய்யும் மழைக்கும் நன்றி! உங்களுக்கும் நன்றி!

வாழ்க பெரியார்! வாழ்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் உரையாற்றினார்.





தமிழர் தலைவருக்குச் சிறப்பு

பிறந்த நாள் விழா காணும் தமிழர் தலைவருக்கு விழாவில் பங்கேற்க வந்த பல்வேறு கட்சித் தலைவர்களும் கழகத் தலைவ ருக்குச் சால்வை அணிவித்து வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொண் டனர். விழாவில் பங்கேற்று உரை யாற்றிய பல்வேறு கட்சிகளின் தலை வர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார்.


பெரியார் பேருருவச் சிலைக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.50,000


பெரியார் உலகம் - பெரியார் பேருருவச் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.50 ஆயிரத்தை அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல் - திருமாவளவன் தஞ்சை விழாவில் பலத்த கரஒலிக்கிடையே அறிவித்தார்.


பெரியார் உலகத்திற்கான நிதி ரூ.2 கோடியே 51 லட்சத்து 33,000

பெரியார் உலகம் - 95 அடி பெரியார்  பேருருவச் சிலைக்கு 1005 சவரன் தங்கத்துக்கான நிதியாக  ரூபாய் 2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் கழகத் தலைவரிடம் பலத்த கரஒலிக்கிடையே அளிக்கப்பட்டது. முன்னதாக தமிழர் தலைவருக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சால்வை அணிவித்தார். கழகத் தலைவரின் இணையர் மோகனா அவர்களுக்குக் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி சால்வை அணிவித்தார்.

.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...