Friday, October 14, 2011

தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் கருத்துப் பேழை 6


தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் கருத்துப் பேழை 6


பேராசிரியர் முனைவர்  நம். சீனிவாசன்

திராவிடர் கழக மாநிலச் சட்டத் துறைத் தலைவர் கி.மகேந்திரன், வழக்குரைஞர்; இனிய பண்பாளர்; நல்ல கவிஞர்; சிறந்த பேச்சாளர். அவரது புதுக்கவிதை பெரியார் மலரை அலங்கரிக்கிறது. புதுவிதி செய்தார் பெரியார் - இது கவிதைத் தலைப்பு.

இதுவரை
உலகில்
யாரும் தோன்றவில்லை
உம்போல்
ஒரு பெரியார்!

என்று  தொடங்கும் கவிதை பெரியாரின் ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, கடவுள் எதிர்ப்பு, மூடநம்பிக்கை அழிப்பு முதலியனவற்றை கவித் துவமாய் எடுத்துரைக்கிறது. தமிழர் தலைவர் வீரமணியின் பணிகளால் ஏற்படும் விளைவை, அக்கிரகாரங் களில் பூகம்ப அதிர்வுகள்! என்ற படிமக் காட்சி யாக்குகிறார். கவிக் கூற்று பொய்த்ததில்லை; திராவிடர் வெற்றி பெறுவர்.

பேராசிரியர் தமயந்தி இராசதுரை அவர்கள் நீதிக் கட்சியும் சுயமரி யாதை இயக்கமும் மகளிர்க்கு ஆற்றிய தொண்டுகளை விரிவாகப் பட்டியலிட்டிருக்கிறார். திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் செயல் துடிப்பு மிக்க களப்பணி வீரர்; ஓய்வறியாப் பிரச்சார பீரங்கி; நல்ல பேச்சாளர்; முனைவர் பட்டம் பெற்றவர்.

பெரியார் பிறந்த நாள் மலரில் அவர் எழுதிய கட்டுரை சாமியார்களின் முகத் திரையைக் கிழிக்கிறது. அவருடைய எழுத்து நடையில் துள்ளலும் இருக் கிறது; எள்ளலும் இருக்கிறது. படித்துச் சுவைக்க லாம். பெரியாரின் சொத் துக்கள் பொது நலத்திற்குப் பயன்படுவதை எடுத்துக் காட்டி, நெஞ்சை நிமிர்த்திக் கூறலாம் பெரியாரே உயர்ந்தவர் என்று நிறுவுகிறார்.

பெரியாரும் வள்ளுவரும்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் சுப.திண்ணப்பன் அவர்கள் பெரியார் பிறந்த நாள் மலரில் பெரியாரும் வள்ளுவரும் என்ற தலைப்பில் அருமையான கட்டுரையை எழுதியுள்ளார். குறளை ஆழமாகக் கற்று பொருள் உரைப்பவர் பெரியார் என்பதை பேராசிரியர் சுப.திண்ணப்பன் நிறுவுகிறார்.

திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் கடும் உழைப்பாளி; எப்போது பார்த்தாலும் எழுதிக் கொண்டே இருப்பார். பெரியார் கொள்கை- இயக்கம் இவை தவிர அவர் வேறு எதையும் பேசி நான் பார்த்ததில்லை. இயக்க வரலாற்றில் சந்தேகம் கேட்டால் உடனே பதில் சொல்லு வார்; அரை மணி நேரத்தில் ஆதாரத்தோடு நேரில் வருவார்.

மதிப்பிற்குரியவர். இயக்க நிகழ்வுகளை ஆவணப்படுத்தி இருக்கிறார். எந்தத் தகவல்களையும் உடனே எடுக்க இவருடைய உழைப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்வது பெரியாரால்தான் என்னும் கட்டுரை மலரில் இடம் பெற்றிருக்கிறது.

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மலருக்கு எழுதியிருக்கின்ற கட்டு ரைகள் யாவும் ஆவணமாக இருப்பதைப் படிப்பவர்கள் உணர்வார்கள். இவ் வாண்டு சமூக நீதியின் பயணத்தை ஆவணமாக்கித் தந்துள்ளார். 

1916 தொடங்கி 2010 வரை நடைபெற்ற முயற்சி - பிரச்சாரம் - போராட்டங்கள், யாவும் பத்து பக்கங்களில் நிறைந்து கனிந்து விரவிக் கிடக்கின்றன. முனைவர் பட்ட ஆய்வில் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் ஒரே கட்டுரையில் பெற முடிகிறது.

தந்தை பெரியார் 133 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் கொள்கை விளக் காய்ச் சுடர்விடுகிறது. அய்யாவின் அருமை பெருமைகளை அகிலத்திற்கு அறிவிக்கிறது.

சான்றோர்களின் சிந்தனை ஊற்று எழுத்துக்கள் பதிவு பெற்றிருக்கின்றன.

இயக்கச் செயல்பாடுகள் இளைஞர் களின் கவனத்திற்குச் சென்றிருக் கின்றன. மலரின் கருத்துக்கள் மக்கள் மனதில் பரவட்டும்!
அய்யாவின் மனித நேயச் சிந்தனை கள் அகிலத்தை வெல்லட்டும்!
(நிறைவு)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...