Saturday, August 20, 2016

வாழும் கலை சிறீசிறீ ரவிசங்கரின் அட்டூழியம்!

யமுனை நதிக்கரையில் நடத்தப்பட்ட விழாவால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு
பிரதமரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்து அதிர்ச்சி தகவல்கள்
புதுடில்லி, ஆக.20 -கார்ப்பரேட் சாமியார் சிறீசிறீ ரவி சங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பாகஉலக கலாச் சார விழா கடந்த மார்ச் 11 முதல் 13 வரை தில்லியிலுள்ள யமுனைநதிக்கரையில் நடத்தப்பட்டது. இந்த கலாச்சாரவிழாவிற்கான ஏற்பாடுகளுக்காக பல் லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் உட்பட யமுனை நதி படுகை கையகப்படுத்தப்பட்டது. காடு கள் அழிக்கப்பட்டு நிலம் சமப்படுத்தப்பட்டன. யமுனை நதியின் குறுக்கே தற்காலிக இரும்புப் பாலங்கள் அமைக்கப்பட்டன. யமுனை நீர்பரப்பு பகுதிகளும், விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டன. இதற்கு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. யமுனை கரையில் இப்படிப்பட்ட விழாவை நடத்துவது விதி மீறல்தான் என பசுமை தீர்ப்பாயம் முதற்கட்டமாக 5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. ஆனாலும், நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தது. அபராதத் தொகை எதுவும் செலுத்த முடியாது என்றும் இந்த நிகழ்ச்சி உலக கலாச்சார ஒலிம்பிக் போன்றது. நூற்றுக்கணக்கான நாடுகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரு கின்றார்கள். பிரதமர் நரேந்திர மோடிதான் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்.

நாங்கள் ஒரு மரத்தை கூட வெட்டவில்லை. கொஞ்சம் கிளைகளை மட்டுமே நறுக்க செய்திருக்கின்றோம் என்றார். சிறீசிறீ ரவிசங்கர். நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக பல்வேறு கேள்விகளை அவர்கள் முன் வைத்தனர்.உலக கலாச்சார விழாவிற்கான கட்டுமானப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது எப்படி என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இது நாடாளுமன்றத்திலும் பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த நிகழ்ச்சியை நடத்து வதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் எப்படி அனுமதியளித்தது? டில்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த விழாவை நடத்த அனுமதியளிக்கவில்லை என்றுதெரிவித்திருந்தது. ஆனால் டில்லி பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி யளித்திருந்தது என வாழும் கலை அமைப்பு கூறியது.

பிரதமரே பங்கேற்பு!

இந்நிலையில் திட்டமிட்டபடி விழா நடத்தப் பட்டது. பிரதமர் மோடியும் பங்கேற்றார். லட்சக்கணக் கான மக்கள் கூடிய அந்த பகுதி முழுவதும் நாசப் படுத்தப்பட்டன. விழா முடிந்ததற்கு பின்னால் பல் லாயிரக்கணக்கான டன்கள் குப்பை கழிவுகளும், சிறுநீர் கழிவுகளாலும் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்பட்டது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.இதில் யமுனை நதியின் நீர்பரப்பு பகுதி முழுவதும் நாசப்படுத்தப்பட்டு, நீர்பரப்பில் இருந்த அரிய வகையிலான தாவரங்கள், பூஞ்சைகள் அழிக்கப்பட்டுவிட்டன. பல்லுயிரினங்கள் அழிக்கப்பட்டு இயற்கை சமநிலை சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பெரும் சர்ச்சை எழுந்ததற்கு பின்னால் அபராத தொகை ரூ.5 கோடி முழுமையாக செலுத்தப்பட்டது. இந்நிலையில் பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், கேடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்திட மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சசிசேஷ்கர் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிபுணர்குழு நேரடியாக ஆய்வினை மேற்கொண்டு ஆதாரங்களை திரட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 15 அன்றும் ஜூன் 6 அன்றும் நேரடியான கள ஆய்வினை நடத்தியது. யமுனைநதிக்கரையில் விழா நடந்த அந்த பகுதியில் முன்னர் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை ஒப்பீடு செய்யப்பட்டு அறிவியல்பூர்வமான ஆய்வுநடத்தப்பட்டது. ஆய் வறிக்கை கூறியிருப்பதாவது: யமுனை நதி கரையில் உள்ளதாவரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. நீர்பரப்பில் இருந்த பல்வேறுஅரிய பல்லுயிரினங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

நீர்ப்பரப்பு முழுமையும் குப்பைக் கூளங்கள்!


நீர்பரப்பு முழுவதும் குப்பை கிடங்குகளால், கழிவு நீரால் நாசப்படுத்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் பெருமளவில் சீர்கெட்டுவிட்டது. விவசாய விளை
நிலங்கள்அழிக்கப்பட்டுவிட்டன.ஏராளமானநுண்உயிரினங்களும்அழிக்கப்பட்டுள்ளன.இந்தசுற்றுச் சூழல்சமநிலைஏற்படபலஆண்டுகாலம்ஆகலாம் எனவும் நிபுணர்குழு கூறியுள்ளது. இயற்கையாகவே பல்லுயிரினங்களுக்கான வாழ்விடம் தரைமட்டமாக்கப் பட்டுவிட்டன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக மரங்கள், புதர்கள், நாணல்கள், உயரமான அரியவகை புற்கள்,நீர்வாழ் உயிரினங்கள் ஒரு வகை பூங்கோரை நுண்ணிய பாசிகள், தாவரங்கள், மண்வளம் என அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. பல்லுயிரினங்களின் வாழ்விடமாக இருந்த இந்த பகுதியில் விலங்குகள், பறவைகள், மீன்கள், தவளைகள், ஆமைகள், பூச்சிகள், மெல்லுடலிகள், மண்புழுக்கள் போன்றவைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுவிட்டதால் பல்லுயிர் பெருக்கம் என்பது நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வு அறிக்கை ஆதாரங்களோடு இயற்கை சமநிலை அழிக்கப்பட்டுள்ளதை பட்டியலிட்டுள்ளன.

47 பக்கங்களை கொண்ட அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குழு 120 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என மதிப்பிட்டுள்ளது. இவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் கேட்டினை ஏற்படுத்தியதற்கு பல நூற்றுக்கணக்கான கோடி அபராதம் விதிக்க வேண்டி வரும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அன்னமளித்தால் புண்ணியமா?



30.6.1929- குடிஅரசிலிருந்து....
ஒரு அடியாருக்கு அன்னமளித்தால் இவ்வளவு புண்ணியம் என்று கணக்கு வாரியாக அதன் பலனாய் இவ்வளவு காலத்திற்கு மோட்சத்திலிருக்கலாமென்று வகுத்தெழுதி யிருக்கிறார்கள். இதைக் கேட்ட பிறகு, இத்தகைய தர்மம் சம்பந்தமான எண்ணம் வரு கிறதே தவிர வேறல்ல. இம்மாதிரியான காரியங்களினால் உண்மையான பரோபகாரமான காரியங்களுக்குக் குந்தகமேற் படுகின்ற தென்பதை நீங்கள் நன்றாய்க் கவனிக்க வேண்டும். இவற்றால் தான் நாடு முன்னுக்கு வருங்காரி யங்கள் தடைப் படுகின்றன.
எந்த தேசத்திலும் தர்மமில்லாமலிருக்கவில்லை. வெள்ளைக்காரன் தேசத்தின் தர்மம் நம்நாட்டுத் தர்மத்தைவிட பன்மடங்கு உத்தமமாயும் தேசத்திற்கும் சமூகத்திற்கும் உண்மை யான நன்மையளிப்பதாயுமிருக்கின்றது. வெள்ளைக் காரன் நாட்டு தர்மம் கிணறு நிரம்பி வழிவது போல அவன் ராஜ்யம் நிரம்பி நம் நாட்டிலும் வழிந்தோடு கின்றது.
அத்தகைய தர்மம் நிறைந்த நாட்டில் என்னவழக்க மென்றால் ஒருவன் தெருவில் பிச்சைக்கு வந்தால் உடனே போலீஸ்காரன் பிடித்துக் கொண்டு போவான். அங்கு பிச்சையிடுவது சோம்பேறிகளை வளர்க்கும் முறை என்பதை நன் கறிந்து கொண்டார்கள்.
வெள்ளைக் காரன் நாட்டில் படிக் காதவன் என்றால் அவன் வெட்கித்தலை குனிந்துவிடுவான். நம்நாட்டிலோ தர்மம் என்று வந்தால் நமக்கென்ன? நம்மாலான சாப்பாடு போட்டு விடுவோம். பிறகு அவன் தலைவிதி போலாகிறது. சரஸ்வதி நாக்கிலிருந்தால் எப்படியும் படித்துவிடுவார் என்ற தர்மந்தான் நமக்குக் கற்பிக்கப் பட்டிருக் கின்றது.
அவர்கள் முன்னேறும்போது நாம் இக்கதிக்களாக்கியிருக்கக் காரணமென்ன? நமது மதங்கள், தர்மங்கள் என்ற பலத்தத்துவங்கள்தான் நம்மை இந்நிலையில் வைத்திருக்கின்றன. அவர்கள் முன்னேற்றத்திற்குப் பலமும் பீரங்கியும் மட்டும் காரணமல்ல. சென்னை மாகாணத்தில் உயர்ந்த குஷ்டரோக சயரோக, மருத்துவ ஆஸ்பத்திரிகளும் உயர்ந்த கலா சாலைகளும், கல்லூரிகளும் அவர்களுடையதாகத் தானிருக்க காண்கின்றோம்!
தப்பான வழிகளில் பிள்ளைகளைப் பெற்று பள்ளியில் போட்டுவிட்டால் அவற்றை எடுத்து வளர்த்து சம்ரட்சிக்கும் அனாதை ஆசிரமங்களும் அவர்களுடையதாகத் தானிருக்கின்றன. தெருவிலும் நடக்கக்கூடாது அருகிலும் வரக்கூடாதென்று மிருகங்களிலும் கேவலமாய் நம்மால் நடத்தப் படுபவர்களையும் அவர்கள் சேர்த்துக் கல்வி அளித்து சமத்துவம் பாராட்டி மாக்களெனக் கருதப்பட்ட வர்களை அவர்கள் மக்களாக்கி வருவதைக் காண்கின்றோம். இவற்றை எல்லாம் நாம் எளிதில் மறக்க முடியாது அல்லது மறைக்கவும் முடியாது.
அவர்கள் நொண்டி, முடம், குருடர்களைக் கொன்று விடுகிறார்களா? அத்தகைய வர்களுக்கும் தம்சுய உதவியினால் எவ்வளவுக்கு ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு உதவிபுரிந்து வழிகாட்டி வருகின்றார்கள். இதனால் வெள்ளைக்காரன் தான் புத்திசாலியா? நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? என்ற கேள்வியும் கிளம்பக் கூடும் இதற்காக நாம் நமது முன்னோர்கள் வேரிலும் சுலபமாகக் குற்றம் சொல்லிவிட முடியாது. எந்தக் கொள்கை நீதியும், தர்மமும் காலத்திற்கும் இடத்திற்கும் சந்தர்ப்பதிற்கும் ஏற்றவாறு தானிருக்கும்.
ராமேசுவரத்தில் ஒரு செட்டியார் தர்மம் செய்வதற்காகக் சாணியும், பாலும் சுக்கு மட்டும் கொடுக்கிறார் என்றால் அதுபோல நாமும் இங்குச் சாணியை குவியலாய்க் கொட்டிக் கொண்டு வாரிக் கொடுப்பது தகுதியாகுமா? அந்தவிடத்திற்கு அவசியத்திற் கேற்றவாறு அது முக்கிய தர்மமாகவிருக்கலாம். அதற்காக நாம் அந்த செட்டியார் மீது குறை சொல்ல முடியுமா? முந்நூறு நானூறு வருடங்களுக்கு முந்திய காலத்துத் தர்மமென்ற காரியங்கள் இப்போது செய்ய முடியாதவைகளாகத்தானிருக்கும். அப்போது அவை அவசியமாக செய்யவேண்டியவைகளாகத் தானிருந்திருக்கும்.
அக்காலத்தில் தற்போதிருப்பது போன்ற துரிதமான போக்கு வரத்து சாதனங்களோ மற்றவசதிகளோ கிடையாது. அவ்வந்த நாட்டு மக்களுக்கு அவ்வந்த ஊரே சுவர்க்கம். அக்காலத்தில் அவர்கள் கிணற்றுத் தவளைகளை போலத் தானிருந்திருக்க முடியும். அப்பேர்பட்டவர் களுக்கு விளைச்சலும் அபரிமிதமாய் விளைந்து கொண்டிருந்தது. அக்காலத்தில் மழை பெய்வதற்கு அவசியமான காடு முதலியவை அடர்ந்திருந்ததால் பருவ மழைகள் தப்புவதில்லை.
இதனால் உழுதாலும் உழாமல் விட்டாலும் அறுவடைக்குக் குறைவில்லை. அப்போது அதிகமாக விளைந்தாலும் தற் போதைப் போல விளைந்த தானியம்  முழுதும் வெளி  ஊருக்குக் கொண்டு போகப் படாமல் பெரும் குழிகள் வெட்டி அவற்றில் புதைத்து வைப்பதும் வழக்கமாயிருந்து வந்தது.
அன்றியும், அக்காலத்தில் பிச்சைக்காரர்களும் மிக அரி தென்றே சொல்லலாம். எவ்வளவு விளைந்தாலும் வாரி வெளிநாட்டுக்கு அனுப்புவது என்ற முறை அக்காலத்தில் கிடையாது.  அதற்கு சாதனமும் கிடையாது.
அதனால்தான் இவ்வளவு பேருக்கு அன்னமிட்டால் இவ்வளவு புண்ணியமென்றும் எழுதிவைக்க இடமிருந்தது, அதனால் நம் நாட்டில் காலக்கிரமத்தில் பிச்சை எடுக்கும் சாதிகளென்றே பல ஜாதிகளும் தோன்றிவிட்டன. ஏதோ சாம்பலையும் மண்ணையும் பூசிக்கொண்டு வந்தாலும் சாமி என்று விழுந்து கும்பிடும் முட்டாள்கள் அதிகமிருக்கின்றார்கள் என்பதையறிந்து தான் பிச்சைக்காரர்களும் நாளுக்கு நாள் விருத்தியாகி கொண்டு வருகின்றனர். இத்தனைக் கோயில்களிருக்கையில் இன்னும் புதிதாகக் கோயில் கட்டுவது அவசியமாவென்று கேட்டால் பாவி தடுக்கின்றான். அவன் சொல்லைக் கேட்ட காதை லோஷன் போட்டுக் கழுவ வேண்டுமென்கிறார்கள்.
அக்காலத்தில் செல்வமிகுதியினால் செலவிடுவதற்கு வழியின்றி இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருந்தார்கள். தங்கள் விளைபொருள்களுக்குச் செலவு வேண்டுமென்ற முறையில் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு மேன்மேலும் தர்மம் என்னும் பெயரால் பலவாறு செலவிட்டு வந்தார்கள்.
அக்காலத்தில் எத்தனைக் கடவுளிருந்தாலும் பூசை போட்டு எவ்வளவு பேர் வந்தாலும் சோறு போடும் செல்வமும் செழிப்பு மிருந்தது. அதனால்தான் இவ்வளவு கடவுள்களும் அடியார் களும் ஏற்பட இடமிருந்தது. ஆனால் இப்போதைய கொள் கையும் மதக்கோட்பாடுகளும் கால தேசவர்த்த மானத்திற்கு ஏற்றபடியும் மனிதன் அறிவுக்கும் தன்மைக்கும் ஏற்றவாறுமிருக்க வேண்டும்.

2016 தேசிய கல்விக் கொள்கை ஆர்.எஸ்.எஸ். கொள்கையே தவிர வேறல்ல


- சீத்தாராம் யெச்சூரி
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் நிறைவுபெற்றது. இக்கூட்டத்தொடரின் நிறைவில், மாநிலங் களவையில் 2016ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை மீது குறுகிய கால விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் துவக்கி வைத்து சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. உரையின் சாராம்சங்கள் வருமாறு:
கல்விக் கொள்கை அல்லது கல்வி அமைப்பு என்பது ஒரு நாட்டின் குணத்தை வரையறுப்பதற்கான அடிப்படையாகும். தேசத்தின் குணத்தை அதுதான் வரையறுக்கிறது.
நாம், நமக்காக நாமே அமைத்துக் கொண்டுள்ள அரசமைப்புச் சட்டம், இந்தியக் குடியரசை ஒரு மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்றுதான் வரையறை செய்திருக்கிறது. அந்த மாண்பை, அந்த மதிப்பை, அந்த குணத்தை உயர்த்திப்பிடிக்கும் விதத்தில்தான் நம் கல்விஅமைப்பு பேணிப் பாதுகாத்து வலுப்படுத்தப்பட வேண்டும். இதுவே என் முதல் அம்சமாகும்.

54 சதவீதம் இளையோர்

இரண்டாவதாக, கல்விக் கொள்கை என்பது நம் நாட்டிலுள்ள நம் சக்தியை, நம் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தக்கூடிய விதத்தில், அமைந்திட வேண்டும். நாட்டின் மக்கள் தொகையில் 54 சதவீதத்தினர் 25 வயதுக்குக் குறைந்தவர்களாவார்கள். இந்த இளைய சமுதாயம் முறையாகப் பேணி வளர்க்கப்பட்டால், முறையாகக் கல்வி அளிக்கப்பட்டால், முறையான சுகாதாரவாழ்க்கை அளிக்கப்பட்டால் மற்றும்முறையான வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டால், உலகில் எவரொரு வரும் இந்தியாவைநாம் இன்றைக்கிருப்பதிலிருந்து மேலும் உயரக்கூடிய விதத்தில் சிறந்ததோர் இந்தியாவாக மாறுவதைத் தடுத்திட முடியாது. இவ்வாறு நம் இளைய சமுதாயத்தின் ஆற்றலை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளும் விதத்தில் கல்விக் கொள்கை உரு வாக்கப்பட்டிருக்க வேண்டும்.

மூன்று ‘சி’கள்


ஆனால், அவ்வாறு உருவாக்கி, நம் அரசமைப்புச் சட்டம் உருவாக்கித் தந்துள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் குணத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு தேசிய கல்விக் கொள்கை மூன்று ‘சி’-களை உள்ளடக்கி இருக்கிறது. அவை மத்தியத்துவம் (Centralisation), õEèñò‹ (Commericialisation)
மற்றும் மதவெறிமயம் (சிஷீனீனீuஸீணீறீவீsணீtவீஷீஸீ) ஆகியவையாகும். இவை மூன்றும் தான் ஒட்டுமொத்த இந்த வரைவின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்றைய தினம் அனைவருக்குமான கல்வி முறையைக் கொண்டுவராமல், நம் இளைஞர்களிடையே பொதிந்து கிடக்கும் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
பொதுக் கல்விமுறை
வளர்ந்த நாடுகள் அனைத்தின் வரலாற்றையும் சற்றே ஆராய்ந்து பாருங்கள்.பள்ளிக் கல்விமுறையை அனைவருக்குமானதாக மாற்றாமல் எந்த ஒரு வளர்ந்த நாடும்கிடையாது, மாணவக் குழந்தைகள் அருகிலேயே அமைந்துள்ள பள்ளிக்கூடங்களுக்குச் செல்கிறமாதிரிதான் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இருக்கின்றன, அமெரிக் காவிற்குச் சென்றுள்ள இந்தியர்கள் அந்நாட்டின் சட்டத்தின்படி தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில்தான் சேர்த்திட வேண்டும். அமெரிக்காவின் அடித்தளங்கள் எவற்றால் அமைக்கப்பட்டிருக்கின்றன?
தாமஸ் ஜெஃபர்சன் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது, பொதுக் கல்விக்கு அரசாங்கம் ஏன் அதிகம் செலவழிக்கவேண்டும் என்ற விவாதம் நடை பெற்றது. அப்போது மேதகு வாஷிங்டன் என்பவர் (அதிபர் வாஷிங்டன் அல்ல) மிகவும் வலுவாக வாதிடு கையில், நாம் இப்போது படிக்காத இளைஞர்களை சட்டம்- ஒழுங்கு ரீதியாகக் கட்டுப்படுத்துவதற்கான சார்ஜெண்டுகளாகத் தெரிவுசெய்வதற்காக அதிகம் செலவழித்துக் கொண்டிருக்கிறோம்; அதற்குப் பதிலாக படிக்காத இளைஞர்களைப் படிக்க வையுங்கள், அது நாட்டை வளர்ப்பதற்கு மட்டும் அல்ல, அது சமூகக் கட்டுப்பாட்டையும் கொண்டுவரும், என்றார்.

அப்படித்தான் அங்கே பொதுக் கல்வி முறை உருவானது. இதேபோன்றுதான் இங்கிலாந்து,

பிரான்ஸ்,ஜப்பான் என அனைத்து நாடுகளிலும் கல்வி முறை இருக்கிறது. அனைவருக்குமான கல்வி முறையை நாம் பெற்றிராவிட்டால், நாட்டின் குழந்தைச் செல்வங்களை முறையாகப் பயிற்றுவித்து அவர்களின் ஆற்றல்களைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாடு முன்னேறுவது என்பது சாத்தியமில்லை. இதற்காகத்தான் நாம் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக இங்கே விவாதம் நடைபெற்றபோது அருகமைப் பள்ளிகளை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது நம் நாட்டில் ஓராசிரியர் பள்ளிகள் இருப்பது குறித்து விவாதித்தோம், ஆசிரியர்களே இல்லாத பள்ளிகள் குறித்தும் விவாதித்தோம். பல பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் இல்லை, பல பள்ளிகளில் கரும்பலகைகள் கிடையாது; இவ்வாறிருந்தால் எப்படி நாம் நம் குழந்தைகளின் ஆற்றல் களை முழுமையாக வெளிக்கொணர முடியும்?

கல்வி உரிமைச் சட்டம் என்னாயிற்று? அது எப்படி அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது குறித்து ஏதேனும் பரிசீலனை செய்திருக்கிறோமா? எவ்விதத் திசையுமின்றி இன்றையதினம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் இப்போது புதிய தேசியக் கல்விக் கொள்கை வந்திருக்கிறது.

இன்றைய நம் நிலை என்ன?
உலக அளவில் எழுத்தறிவற்றோர் அதிகம்உள்ள நாடுகளில் ஒன்றாக மாறியிருக்கிறோம். நம் இளைஞர்களில், அதாவது 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், 86 சதவீதத் தினர் படித்தவர்கள். அதற்குக் கீழ் உள்ளவர்களில் 69.3 சதவீதத்தினர் படித்தவர்கள்.

குறைந்த வயதுள்ள குழந்தைகளின் படிப்பறிவு விகிதமும் குறைவாக இருக்கின்றன. அடுத்து படிப்பறிவின் தரம் எந்த நிலையில் இருக்கிறது? எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட
எளிய கணக்கைப் போட முடியவில்லை.

பள்ளித் தேர்வுகளில் மிகஉயர்ந்த அளவில் மதிப் பெண் எடுத்த மாணவர்கள் சிலர் கூட மோசமாக மதிப் பெண் எடுத்திருப்பதைப் பார்க்கிறோம்.
நாடு சுதந்திரம் பெற்ற பின், இந்த அவையின் (மாநிலங் களவையில்) முதல் தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணன் இருந்தபோது,உயர் கல்வி குறித்து ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஒட்டு மொத்த பள்ளிக் கல்வி குறித்தும் கோத்தாரி ஆணையம் அமைக்கப்பட்டது. அது அளித்த பரிந்துரைகளை இதுநாள் வரையிலும் அமல்படுத்தவில்லை.
தொழில் கல்வி குறித்து முதலியார் ஆணையத்தைப் பெற்றிருந்தோம். சுயேட்சையாக வளர்ச்சி மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை உச்சத்திற்கு எடுத்து செல்லவேண்டும் என்ற முறையில் சுயசார்பு பொரு ளாதாரத்தை நிறுவுவதே நம் குறிக்கோளாக இருந்தது.
நாடு சுதந்திரம் அடைந்தபின் மூன்றுஆணையங்கள் அமைத்தும், அவை பரிந்துரைத்த எதையும் நாம் எய்திட வில்லை.

6 சதவீதம் நிதி ஒதுக்குக!

நம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கவில்லை என்றால் இந்தப் பரிந்துரைகள் எதையும் நிறைவேற்றவும் முடியாது.

மேற்படி ஆணையங்கள் அளித்திட்ட பரிந்துரைகளில் பெரும்பாலானவை, தற்போதைய புதிய வரைவு கல்விக் கொள்கையில் பிரதிபலித்திடவில்லை.

இன்றைய இந்திய நிலைமைகளில் நம் கல்வி அமைப்புக்கு என்ன தேவை? தரம் - எண்ணிக்கை - நியாயம் (Quality - Quantity - Justice) என்னும் மூன்றின் மேல் நம் கல்வி அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. இம்மூன்றும் இன்றையதினம் எந்த நிலையில் இருக் கின்றன?

இம்மூன்றுக்கும் இடையேயுள்ள உறவுகளை ஆராய்வதற்கு முன், இன்றையதினம் எவ்விதக் கடிவாள முமின்றி அமலாகிக் கொண்டிருக்கும் தனியார்மயக் கல்வி ஆபத்தானது.

அரசுப்பள்ளிகள் மூடல்

அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு, அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது. இது ஏன்? ஏனெனில் அங்கே கல்வித் தரம் இல்லை. இதைக்காரணம் காட்டி, கல்வி என்ற பெயரில் வணிகக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இது அங்கிங்கெனாதபடி எங்கும் ஊடுருவியிருக்கிறது.

ஆர்எஸ்எஸ் ஆவணத்தின் நகல்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு என்பது, புதிய கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என ஜூலை 12, 13,14 தேதிகளில் அமர்கந்தக் என்னுமிடத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆவணத்தின் நகல்தான்.

நான் ஆரம்பத்திலேயே மத்தியத்துவம், வணிகமயம் மற்றும் மதவெறிமயம் என்று குறிப்பிட்டேன், அல்லவா? இது முழுக்க முழுக்க மதவெறிமயம்தான். இக்கல்விக் கொள்கையின் மேல் வேத உலகக் கண்ணோட்டம் Vedic World Vision) அல்லது வேதகல்வி (Vedic Education) எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்தியா உருவாகிக் கொண்டிருக்கிறது என்றும், இந்தியா உலக வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும், இந்தியா மிக உச்சத்திற்குச் சென்று கொண்டி ருக்கிறது என்றும் கூறும் அதே சமயத்தில், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இந்தியாவை நவீனப் படுத்துவதற்குப் பதிலாக, இந்த நாட்டை எங்கே எடுத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?
மாணவர்களுக்கு என்ன சொல்லித்தர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

வரலாற்றுக் கல்வியை, இந்து புராணங்களின் கல்வியாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். இந்தியத் தத்துவ ஞானத்திற்கு ஒரு நீண்ட நெடிய வளமான பாரம்பரியம் உண்டு. அதனை வளர்த்து மேலெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, இந்தியத் தத்துவஞானத்தை இந்து வேதாந்த சாஸ்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

வரலாறு என்பது உங்களுடைய புராணமாக மாறு கிறது, தத்துவஞானம் என்பது உங்களுடைய வேதாந்த சாஸ்திரமாக மாறுகிறது. இவற்றைப் படிப்பதால் எதிர்காலம் எப்படி இருக்கும்?
நம் உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களில் மாற்றங்களைக் கொண்டுவர பரிந்துரைகள் அளிக்கப் பட்டிருக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். தலித் மாணவர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டார்கள். இதேபோன்று அலகாபாத் பல்கலைக் கழகம், ஜாதவ்பூர் பல்கலைக் கழகம், மும்பை டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆப் சோசியல் சயின்சஸ், சென்னை அய்.அய்.டி., புனேபிலிம் இன்ஸ்டிட்யூட் என அனைத்து நிறுவனங்களிலும் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம்.

இந் நிறுவனங்கள் அனைத்தையும் மதவெறிமயமாக மாற்ற அரசாங்கம் முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்தபின் நம் உயர்கல்வி நிறுவனங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஜவஹர்லால் நேரு என்ன சொன்னார்?

“ஒரு பல்கலைக்கழகம் மனிதாபிமானம், சகிப்புத் தன்மை, பகுத்தறிவு, சிந்தனைப் புரட்சி, உண்மையைத் தேடும் பண்பு ஆகியவற்றை தங்கள் லட்சியங்களாகக் கொண்டிருக்க வேண்டும். மனித குலத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றிட வேண்டும்.பல்கலைக்கழகங்கள் தங்கள் கடமைகளை செவ்வனே ஆற்றுமானால், அது நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் நல்லவிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்”.

ஆனால் இன்றைய தினம் பல்கலைக்கழகங்களை நாம் எப்படி நடத்திக்கொண்டிருக்கிறோம்? பல்கலைக் கழகங்களின் நிர்வாகம் எப்படி இருக்கின்றன?
பல்கலைக் கழக மானியக் குழு என்பது இப்போது கல்வி ஆணையம் என்று மாற்றிஅமைக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள சில நபர்கள் அரசாங்கத்திற்கு அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டின் கல்வித்துறையை மத்தியத்துவப்படுத்தப்படுவதற்காக ஒட்டுமொத்த உயர் கல்வி, பள்ளிக் கல்வி மற்றும் தொழில்கல்வி அமைப்புகள் கலைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது என்பதை நாம் நினைவு கூர்வோம். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் அது மாநிலங்களின் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதற்கு முன்பு அது மாநிலங்களின் பட்டியலில்தான் இருந்தது.அனைத்துமாநிலஅரசுகளுடனும்கலந்தா லோசனை எதுவும் செய்யாமல், இவ்வாறு மத்தியத்துவப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது ஏற்கப்பட முடியாததாகும்.

வேத பாடம் என்றால் என்ன?

இப்போது நான் வேதக் கல்விக்கு வருகிறேன். நாம் ஆர்யபட்டாக்களைப் பெற்றிருக்கிறோம், நாம் நம்முடைய புரதான நாகரிக அறிவியல்களில் அளப்பரிய சாதனைகளைப் படைத்திருக்கிறோம். `பூஜ்யத்தின்’ மதிப்பை நாம்தான் கண்டுபிடித்தோம். இவற்றை நான் ஒரு பிரெஞ்சு அறிவுஜீவி முன்பு சொன்னேன். இது கண்டுபிடிக்கப்பட்டது ஆறாம் நூற்றாண்டில்.
அதன்பின் என்ன நிலை? ஆரியர்கள் வந்தார்கள். அதற்கு முன்புவரை அனைவருக்குமான கல்வி முறை இருந்தது. அதுதான் சிந்தனைகள் அனைவரிடமும் ஊற்றெடுக்க வழிவகுத்தது. ஆரியர்கள் வந்தபின் நிலை என்ன? அறிவு பெறுவோர் சாதி அடிப்படையில் வடிகட்டப்பட்டனர். இதற்கு ஏகலைவன் மிகச் சிறந்த உதாரணம். கீழ்சாதியில் எவரும்படிப்பாளிகள் வந்துவிடக்கூடாது. அதைத்தான் இப்புதிய கல்விக் கொள்கை முன் வைத்திருக்கிறது.

வேத அறிவு என்ற பெயரால், வேத கணிதம் என்ற பெயரால் மற்றும் வணிக மயம், தனியார்மயம் போன்றவற்றால், கல்வி அனைவருக்கும் கிடைப்பதைக் கட்டுப்படுத்துகிறீர்கள்.
இன்று நம் நாட்டில் 60 கோடிக்கும் மேல் இளைஞர்கள் இருக்கிறார்கள், 80 கோடிக்கும் மேல் வயது வந்த மக்கள்தொகையினர் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு அளிக் கப்பட்டால், உலகில் அறிவிற்சிறந்த சமுதாயமாக நம் சமுதாயம் மாறுவதை எவரும் தடுத்திட முடியாது. ஆனால் புதிய கல்விக் கொள்கை அதற்கான வாய்ப்பை மறுக்கிறது.

எனவே கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

தனியார்மயம், மத்தியத்துவப்படுத்துதல், வணிகமயம், மதவெறிமயம் ஆகியவற்றை ஏற்க முடியாது.

நன்றி: தீக்கதிர், 18.8.2016

Friday, August 12, 2016

வரலாற்றைத் திரிக்கும் "மொகஞ்சதாரோ": வலுக்கும் எதிர்ப்பு

பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் அசுதோஷ் கோவரிகர் சிந்து சமவெளி நாகரீகத்தில் முக்கிய இடம் பிடித்த மொஹன்சாதாரோ என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்து முடித்துள்ளார். நாளை (ஆகஸ்ட் 12-ஆம் தேதி) வெளிவரும் இந்த திரைப்படத்தில் சிந்து சமவெளி நாகரிகம் முழுக்க முழுக்க திராவிடப் பண்பாடே என்பதை மறைத்து வேதகாலத்தின் உச்சத்தில் இருந்த நகரமென்று நம்ப வைக்க, ஆரியக் கலாச்சாரமாக திரைப்படத்தில் திரித்துக் காண்பித்திருக்கின்றார்.
1996-ஆம் ஆண்டு பாஜக முதல் முதலாக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட அடையாளங்கள் முற்றிலும் சிதைக்கும் வேலையை தீவிரமாக நடத்திக் கொண்டு வந்தது, 1999 ஆம் ஆண்டு மத்தியில் வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சியும், மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜக ஆட்சியும் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகமான பிரின்ஸ் வேல்ஸ் மியூசியத்தில் (தற்போது சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகம்) வைக்கப்பட்டிருந்த சிந்துசமவெளிப் பொருட்கள் அடங்கிய பகுதியில் திராவிட நாகரீகத்தின் எச்சங்கள் என்ற பெயரை நீக்கிவிட்டு அடையாளம் தெரியாத(unknown civilizations) நாகரீக மக்கள் வாழ்ந்த இடம் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டது, இன்றுவரை அது அப்படியே உள்ளது.
ஆரியக் கலாச்சாரத்தின் தொட்டில்
தற்போது சிந்து சமவெளி நாகரீகம் குறித்து, அது ஆரியக்கலாச்சாரத்தின் தொட்டில் என்று திரித்துக் காண்பிக்கும் வேலை, திரைப்படங்கள் மூலம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு விமானம் என்பது வேதகாலத்தில் கண்டறியப்பட்ட ஒன்று என்று கூறி சில கட்டுகதைகளை வைத்து ஹவாய்ஜாதா என்ற திரைப்படமே எடுக்கப்பட்டுவிட்டது. அதில் ரைட் சகோதரர்களுக்கு முன்பே இந்தியாவில் விமான சாஸ்திரம் என்ற வேதகால நூல் ஒன்றை வைத்து மராட்டிய இளைஞன் ஒருவன் விமானத்தை தயாரித்தாகவும் அதை மும்பை கடற்கரையில் வெற்றிகரமாக பறக்கவிட்டார் என்றும் காட்டப்பட்டிருந்தது.
தற்போது பண்டைய திராவிடர் பண்பாட்டின் சின்னமாகத் திகழும் மொகன்சதாரோ என்னும் அழிந்து போன திராவிட நாகரீக நகரை ஆரியர்களின் நகரமாக காண்பித்துள்ளனர். "இந்த திரைப்படத்தின் பின்னனியில் மாடு பூட்டிய அலங்கார வண்டி, பருத்தியினால் செய்யப்பட்ட ஆடைகள், உலோக ஆயுதங்கள், உழவுக் கருவிகள் போன்றவை அன்றைய காலகட்டத்தில்  கி.மு3000) கிடைத்த புதைபொருட்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவையாகும்" என்று கூறிய அசுதோஷ் கோவரிகர் "நாங்கள் வேதகால மொகஞ்சாதாரோவை மக்களின் கண்களுக்கு முன்பாக கொண்டு வந்துள்ளோம்" என்றும் கூறியிருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரிக எச்சங்களை ஆரிய கலாச்சாரக நாகரிகம் என்று காண்பிக்கும் பணிகளை பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக நடத்தி வந்தனர். தங்களது அடையாளங்களை திணிக்கமுடியாத இடங்களை அழித்து குடியிருப்புகளாக உருவாக்கிவிட்டனர். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக குஜராத்தில் உள்ள தொலவீரா என்ற இடத்தைக் கூறலாம். ஆங்கிலேயர் காலத்தில் மிகப்பெரிய அளவு அகழ்வாராய்ச்சிக்கு உட்பட்ட இந்த இடத்தை சுதந்திரத்திற்குப் பிறகு முற்றிலும் அழித்து தற்போது ஒரு சிறுபகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகள் அனைத்தையும் தனியாருக்கு சுண்ணாம்புப் பாறைகளைவெட்டி எடுக்க ஒப்பந்தத்தில் விட்டுவிட்டார்கள். இதன் மூலம் சுமார் 3000 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த அந்தப் பகுதி 20 ஆண்டுகளுக்குள் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது.
சிந்துவெளியில் குதிரைகள் எங்கே வந்தன
இந்தப் படத்தில் குதிரைகள் காட்டப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரீகத்தில் எந்த இடத்திலும் குதிரைகள் இல்லை. அகழ்வாராச்சிகளில் சில இடங்களில் கட்ச் கழுதைகளின் எழும்புகள் கிடைத்துள்ளன. இவை விவசாயத்திற்கும் ஏற்றம் இறைக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்தை ஜெர்மானிய அகழ்வாராய்ச்சியாளர் Gustaf Kossinna (1858-1931) என்பவர் கூறியிருந்தார். ஆனால் அந்த கழுதை எழும்புகள் கிடைத்த காலம் குறித்து இன்றுவரை சரியான முடிவுகள் இல்லை. அப்படி இருக்க அந்தப் படத்தில் குதிரைகளைக் காண்பிப்பது ஏன் என்றால், ரிக்வேதத்தில் குதிரை முதன்மையான விலங்காக காட்டப்பட்டுள்ளது, முக்கியமாக அசுவமேத யாகத்தில் குதிரையின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வாசகத்தை உண்மையாக்க இந்த திணிப்புகளை, திரிபுகளைத் திரைப்படத்தில் புகுத்தியுள்ளனர்.
திரைப்படத்தில் பல இடங்களில் சிவலிங்ககளை காண்பித்துள்ளனர். இந்த சிவலிங்கங்கள் அனைத்தும் சமலா நதிக்கரையில் (கர்னாடகா) நேர்த்திக்கடன் என்ற பெயரில் பக்தர்கள் செதுக்கிவைத்த சிவலிங்கங்களாகும். அவற்றைக் காட்டி அந்த பகுதி மொகஞ்சாதாரா மக்கள் அனைவரும் சிவபக்தர்கள் என்று காட்ட முனைகின்றனர்.

சிந்து சமவெளியில் சமஸ்கிருதமாம்
மிகவும் முக்கியாக அங்கு வாழ்ந்த மக்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்று பதிவுசெய்யப்பட்டுளளது. சமஸ்கிருதம் இந்தோ-அய்ரோப்பியன் மொழி என்றும் திராவிட நாகரீகத்தில் சமஸ்கிருதமோ அல்லது இந்துமத வழிபாடோ எங்கும் காணப்படவில்லை என்றும் வரலாற்று உண்மைகள் இருக்கும் போது, மிகப்பெரும் பொருட் செலவில் திரைப்படம் எடுத்து சரஸ்வதி நதி, சமஸ்கிருதம், சனாதன மதம் என்று பல்வேறு புரட்டுக்களை திணித்து 'மொகஞ்சதாரோ' என்ற திரைப்படம் வாயிலாக, திராவிட நாகரீகச் சான்றை அழிக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள காவி அமைப்புகள் முன்வந்துள்ளன.
முக்கியமாக இந்த திரைப்படத்திற்கு சனாதன பிரச்சார அறக்கட்டளை என்ற வெளிநாட்டு அமைப்பு (Sanatan Trust) பல்வேறு வகையில் நிதி உதவி செய்ததாக திரைப்பட நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த இத்திரைப்பட இயக்குனர் அசுதோஷ் கோவரிகர் கூறியிருந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு 'ஜோதா அக்பர்' என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அக்பர் ஒரு இஸ்லாமிய மன்னராக இருந்தாலும், இந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்றும், அவர் சைவ உணவுப் பிரியர் என்றும் காட்டி இருந்தார். மேலும் பசுவதை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பவராக இருந்தார் என்றும் படத்தில் காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரலாற்றுப் புரட்டைச் செய்யும் மொகஞ்சதாரோ படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


.
 8

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, August 11, 2016

அட கூறு கெட்ட குமுதமே கேள்!


‘குமுதம்‘ இதழுக்கு இப்பொழுது அப்படி என்ன நெருக்கடி? திராவிடர் கழகத் தலைவர் மீது தரக்குறைவான வார்த்தைகளால் தாக்க வேண்டிய அவசியம் என்ன?
ஆடிட்டர் குருமூர்த்தியின் கையாளாக வேண்டிய “நெருக்கடி” என்ன? இந்து ஆன்மீகக் கண்காட்சி என்ற பெயராலே இந்து வெறித்தனத் தீயை விசிறி விடும் வேலையில் அவாள் ஈடுபட்டு கொண்டிருப்பதன் முகத் திரையை திராவிடர் கழகத் தலைவர் தார் தாராக கிழித்தார் என்ற ஆத்திரத்தில் குருமூர்த்திக் கும்பல்கள் நான்குகால் பாய்ச்சலில் ஈடுபடுவதைப் புரிந்து கொள்ள முடியும்.
விவேகானந்தர் ரதம் என்று சொல்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவியதைக் கண்டித்த காரணத்தால் ‘காச் மூச்சென்று’ அவாள் வட்டாரம் அலறுவது இயல்புதான்.
ஆனால் அவர்களின் அழுக்குக் குரலைக் கடன் வாங்கி இந்த வாரக் குமுதம் (17.8.2016) விழுந்து பிறாண்டுகிறதே!
திராவிடர் கழகத் தலைவர் மீது அப்படி என்ன குற்றச்சாட்டாம்?
திமுகவுக்கு ஆதரவாக இருப்பது,  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கருணாநிதியைப் புகழ்வது, பெரியார் புத்தகங் களை ஸ்டால் போட்டு விற்பது என்பது முதல் குற்றச்சாட்டு.
திமுக தலைவர் கலைஞர் அவர்களைப் புகழ்வது என்ன பஞ்சமா பாதகமா? திமுக தலைவர் அவர்களிடம் மாறுபட்ட நிலையில் இருந்ததில்லையா? கண் மூடித்தனமாகப் புகழ்வதும் இல்லை, கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் திராவிடர் கழகத்தின் வேலையல்லவே.
வெளிநாட்டில் குமுதத்தின்  முதலாளி இருந்த சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி கொள்ளையடித்த பூணூல் யார்? கம்பி எண்ண வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது முதல் அமைச்சராக இருந்த கலைஞரின் காலைப் பிடித்து கண்ணீரால் கழுவியவர்கள் யார் என்று நமக்குத் தெரியாதா?
பெரியார் புத்தகங்களை ஸ்டால் போட்டு வீரமணி விற்கிறாராம். அடேயப்பா எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு.வேறு எதைப் போட்டு விற்க வேண்டுமாம்?
இதே குமுதம், புத்தக கண்காட்சிகளில் எதைப் போட்டு விற்கிறார்களாம்?
புதிய கல்விக் கொள்கைகளை வீரமணி எதிர்க்கிறாராம் - அதுவும் ஒரு குற்றச்சாட்டாம்.
குமுதத்தில் வேலை பார்க்கும் பார்ப்பனர் அல்லாதாருக்கும் சேர்த்துதான் புதிய கல்விக் கொள்கைகளை வீரமணி எதிர்க்கிறார். அன்று ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தது தந்தை பெரியார் தலைமையிலான திராவிடர் கழகமே!
இன்றைக்கு அதே குலக்கல்வி புதிய  சூழ்ச்சியோடு முகமூடி அணிந்து வருகிறது.
ஆச்சாரியார் ஆட்சிக் காலத்தில் குலக்கல்வி திட்டத்தை  அன்று திராவிடர் கழகம் எதிர்த்தது போல, இன்று புதிய குலக்கல்வித் திட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர்க்கிறது,
அது கூடவே கூடாது. எங்கப்பன் தொழிலைத்தான் நாங்கள் செய்வோம் என்று குமுதம் சொல்லுகிறதோ!
குமுதத்தில் இதை எழுதியது பார்ப்பன கையா அல்லது அதன் தொங்கு சதையா?
மலம் கழிக்கும் பொழுது, பழத்தைச் சாப்பிடுகிறாயே என்று கேட்டால், நீ என்ன சொல்லுவது, நான் தொட்டுக் கிட்டுக்கூட சாப்பிடுவேன் என்று குமுதக் கோணாங்கி கூறினால், நாம் என்ன செய்யட்டும்! தாராளமாகத் தின்னுத் தொலையட்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
கருப்பு நிற ஆடை அணிந்து சபரிமலை செல்வோர் கோடிக்கணக்கில் பெருகி விட்டார்கள். சிவப்பு நிற ஆடை  அணிந்து மருவத்தூர் போகிறார்கள். இன்னொரு பெரியார் தேவையா? அப்ப வீரமணி வேஸ்ட்னு ஆகாதா?- கேட்கிறது குமுதம்.
ஆக மக்கள் மூடநம்பிக்கை நோய் பரப்பும் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க எவ்வளவுப் பெரிய அக்கறை இந்த குமுதத்துக்கு!

ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஒரு கடவுள் என்பார்கள் - அந்த அசிங்கத்தைக் கும்பிடப் போகிறோம் நாங்கள் என்றால் அதை கண்டிப்பவர் வீரமணி மட்டும்தான் என்று சொல்லுவது வீரமணி அவர்களுக்குப் பெருமைதான்.
ஆமாம்... இந்த அசிங்கத்தை குமுதம் ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? அல்லது நம்பித் தொலைக்கிறதா?
நாட்டில் எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை பெருகு கிறது என்பதால் மருத்துவத்துறையே வேஸ்ட் என்று கூறலாமா?
பெரியார் கொள்கை மீது ரொம்ப அக்கறை உள்ளவர் போல காட்டிக் கொள்வது உண்மையென்றால், பெரியார் இருந்த காலத்தில் இந்தக் குமுதக் கோமாளிகள் காதொடிந்த ஊசி முனை அளவுக்காவது  அவருக்கு உதவி செய்தது உண்டா? ஆதரவு தெரிவித்ததுண்டா?
இந்த குமுதத்தின் யோக்கியதை என்ன தெரியுமா?
தந்தை பெரியார் மறைந்த போது நாடே துயரத்தின் உச்சியில் இருந்த போது, ஏடுகள் எல்லாம் கறுப்புக் கட்டம் கட்டித் தன் துயரத்தை வெளிப்படுத்தியிருந்தன. அந்தத் தருணத்தில் கூட இந்தக் குமுதம் எவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டது தெரியுமா?
தந்தை பெரியாரிடம் ஒரு கட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டபோது வெளியே சென்ற கோவை அய்யா முத்து அவர்கள், தந்தை பெரியாரைக் குறை சொல்லி எப்பொழுதோ எழுதிய கட்டுரையை தூசி எடுத்து வெளியிட்டு  தன் கேவலப் புத்தியை அநாகரிகமாக அப்பட்டமாக காட்டிக் கொண்டதுதான் இந்தக் கேடு கெட்ட குமுதம்.
கோயிலுக்கு செல்வோர் பற்றி கணக்குக் காட்டி திராவிடர் கழகத் தலைவரை குறை கூறுகிறது குமுதம் - இதே ‘குமுதம்‘ இன்னொரு காலக்கட்டத்தில் என்ன எழுதிற்று தெரியுமா?
கேள்வி: ஏராளமான கோயில்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறதே. பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகள் புதை குழிக்குள் போய்விட்டதா?
ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்
பதில்: புதிதாய்த் தோன்றுவது கோயில்கள் அல்ல உண்டியல்கள். பெரியாரின் கொள்கைகள் புதை குழியில் போவதற்கானவை அல்ல. புதைகுழியில் புதைய இருப் பவர்களைக்  காப்பாற்றுவதற்காக.
(குமுதம், 9.6.2010, பக்கம் 20)
அது மட்டுமா? டில்லியில் பெரியார் மய்யத்தை உருவாக் கினாரே திராவிடர் கழகத் தலைவர்  கி,வீரமணி  அவர்கள் அதைப் பற்றி எப்படி செய்தி வெளியிட்டது இதே குமுதம்?
“தலைநகரில் தமிழர் பெருமை” என்ற தலைப்பிட்டு டில்லி - பெரியார் மய்யம் படத்தையும் வெளியிட்டுப் புளகாங்கிதம் அடைந்ததே (குமுதம் 19.5.2010 பக்கம்: 60-61)
அந்த பெருமைக்குரிய சாதனையைச் செய்தவரும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி தானே?
யாரோ பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்பார்களே அது இதுதானா?
உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர், பெரியார் சிலைக்கு மாலை போடுகிறாராம்  வீரமணி- இப்படியும் ஒரு குற்றச்சாட்டு.
வழிபாட்டில் நம்பிக்கை இல்லைதான். அதனால்தான் பெரியார் சிலையையும் நாங்கள் வழிபடுவதில்லை. இந்த சாதாரண உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாத தலைப் பிராட்டைகளா இவர்கள்?
சரி.. கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கதறும் கடவுள் பக்தர்களே!.
அந்த கடவுள் உண்மையில் இருந்தால் நீங்கள் நம்பும் கோயிலைச் சுற்றிலும் சென்ட்ரல் ஜெயில் காம்ப வுண்டை விட உயரமாக எதற்காக மதில் எழுப்புகிறீர்கள்? தனி ஆர்டர் கொடுத்து செய்து அல்லவா பெரிய பெரிய பூட்டைப் போட்டுப் பூட்டுகிறீர்கள்? அப்படி இருந்தும் திருடன் புருசன் பெண்டாட்டிக் கடவுள்களை அடித்துக் கொண்டு போகிறானே, அம்மனின் தாலியை அடித்துக் கொண்டு செல்கிறானே!  அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்று நாங்கள் கேட்க முடியாதா?
உங்கள் சிவபுரத்து நடராஜன் சிலையின் கையில் உள்ள தட்டு அமெரிக்காவில் உள்ள நார்டன் துரை சிகிரெட்டு சாம்பலை உதறும் ஆஷ்டிரேயாகப் பயன்படுத்துவது ‘பிரார்த்தனைக் கிளப்’ நடத்திய குமுதம் அறியுமா?
அன்றைய அம்பேத்கர் பிறந்த நாளில் தாலியகற்றும் நிகழ்ச்சியை திடலில் கழகம் நடத்துதியது குறித்தும் கேலி செய்துள்ளது.
ஆம் அதில் என்ன தப்பு? கல்யாணம் ஆனதற்கு பெண்களுக்குத் தாலி அடையாளம் என்றால், ஆணுக்கு என்ன அடையாளம்? அவன்தானே அதிகமாக ஊர் சுற்றுகிறான்? - ஓடு காலிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் வேலையில் இறங்குவது தான் குமுதத்தின் வேலையா? கணவன் இறந்த பின் அந்தத் தாலியை அறுத்து முண்டச்சி என்று முத்திரை குத்தி மூலையில் முடக்குகின்றீர்களே?
விதவை என்று கூறி வீட்டில் நடக்கும் விழாக்காலங்களில் கூட எதிரே வரக்கூடாது என்று பெண்களின் மீது பெரிய அவமானத்தை இழிவை சுமத்தியிருக்கிறீர்களே - நீங்கள் எல்லாம் சகோதரிகளுடன் பிறந்தவர்கள்தானா? என்று கேட்பவர்கள் கேடானவர்களா? கேடு கெட்ட குமுதமே பதில் சொல் பார்க்கலாம்.
பெண்களின் அரை குறை ஆடைகளை அட்டைப் படமாக்கி கல்லாப் பெட்டியை நிரப்பும் ஏடுகள் எல்லாம் திராவிடர் கழகத்தைப் பற்றியோ, அதன் தலைவரைப் பற்றியோ பேச, எழுத அருகதை உண்டா?
பெண்கள் படத்தை கிட்டதட்ட நிர்வாணமாக்கி போடு கிறீர்களே என்று மக்கள் காரித்துப்பிய போது ஏன் - ஆண் களைக்கூட அப்படிப் போடுவோம் என்று சொல்லி கையை வைத்து மறைத்துக் கொண்ட ஆண்களின் நிர்வாணப் படத்தை - குமுதம் என்ற குட்டிச்சுவர் வெளியிட்டதுண்டே!
இப்படியும் ஒரு பிழைப்பா? வேறு பிழைப்பு இருக்கவே இருக்கிறது - செய்வது தானே!
அய்யப்பன் கோயில் பிரச்சினை, பெரியார் சிலைக்கு மாலை என்று ஆர்.எஸ்.எஸ். பேர்வழி எஸ்.குருமூர்த்தி எடுத்த வாந்தி¬யையே மறு சுழற்சியில் குமுதம் எடுத்தி ருப்பது மூலம் கோணிப்பைக்குள்ளிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டதே. யாருடைய கையாளாகவோ, தொங்கு சதையாகவோ இருந்து கொண்டு குமுதம் குட்டிக்கரணம் அடிக்கும் மர்மக்குட்டு உடைந்து விட்டதே!
மத்திய பிஜேபி ஆட்சியை அணு அணுவாக தோலு ரித்துக் காட்டுகிறாரே வீரமணி.
செத்துப்போன பசுவின் தோலை உரித்த தாழ்த்தப் பட்டவர் தாக்கப்படுவது குறித்தும் - புதிய கல்வி என்ற குலக்கல்வி பற்றியும் அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறாரே-  பிரச்சாரம் செய்கிறாரே - அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறாரே, போராட்டம் நடத்துகிறாரே என்ற ஆத்திரம் அலைமோதுகிறதோ. இந்த நேரத்தில் தலைவர் வீரமணி மீது சேற்றை வாரி இறைக்கின்ற காரணத்தைத் தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள்.  இதில் நம்மீது சேற்றை வாரி இறைப்பதன் பின்னணியில் ஆதிக்கக் கைகள் இருக்கின்றன என்பது தான் உண்மை.  யார் எந்தப் பக்கத்திலிருந்து வீசுகிறார்கள் என்பதையும் நாட்டு மக்கள் அறிவார்கள்.
தாங்களே முன்வந்து அடையாளம் காட்டிக்கொண்டது விபீடணக் கும்பல் - அதுவும் ஒரு வகையில் நல்லது தானே!

வைரக்கல்லைப் பதியுங்கள்!

தேசியக் கல்விக் கொள்கை - 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள்’’ - பிரச்சினை குறித்து திராவிடர் கழகம் கூட்டிய கலந்துரையாடல் கூட்டத்தில் (28.7.2016) எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த 8 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி  அவர்களின் தலை மையில் நடைபெற்ற மக்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப் பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்பட ஒத்தக் கருத்துள்ளவர்கள் கூடினர்.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த ஆர்ப்பாட் டத்தில் முக்கியமாக வைக்கப்பட்ட கோரிக்கை - பல வகைகளிலும் பெரும்பான்மை மக்களைப் பாதிக்கச் செய்யும் (மாநில உரிமை, சிறுபான்மையினர் உரிமை, சமூகநீதி உரிமை போன்ற) மத்திய அரசின் தேசிய புதிய கல்வித் திட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு  வேண்டுகோள் விடுக்கும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

ஏற்கெனவே, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவைத் தலைவரிடம் அளித் துள்ளார். அது குறித்தும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் (9.8.2016) சட்டப்பேரவையில் நினைவூட்டியபோது, அது பரிசீலனையில் உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே கல்வி மானியக் கோரிக்கையின்போது மேனாள் தமிழகக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சென்னையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தை நினைவூட்டி மத்திய அரசின் புதிய கல்வித் திட்டம் குறித்துப் பொருத்தமாகப் பேசியுள்ளார். அந்த நேரத்தில் தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் குறுக்கிட்டு தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளைத் திணித்திட அனுமதிக்கமாட்டோம் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
அனைத்துத் தரப்பினரும் சட்டப் பேரவையில் மட்டுமல்ல; வெளியில் உள்ள அனைத்துத் தரப்புப் பொதுமக்களும் வரவேற்கவே செய்வார்கள் என்பதில் அய்யமில்லை.
மத்திய அரசு இப்பொழுது கொண்டுவரத் திட்ட மிடப்பட்டுள்ள கல்வித் திட்டம் என்பது வெறும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு மட்டுமல்ல; அவற்றையும் கடந்த பல்வேறு கேடுகள் கூர்மை யாகவே இருக்கின்றன.

அதிக மதிப்பெண்கள் பெறாதவர்களுக்குத் தொழிற்பயிற்சி என்ற பெயரால் குலக்கல்வி, மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், பெறாதவர்கள் என்று பிளவுபடுத்தித் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குதல், கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் சேருவதற்கு தேசிய நுழைவுத் தேர்வு, இருபால் மாணவர்கள் சேர்ந்து படிக்கக் கூடாது என்ற பிற்போக்குத்தனம், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அரசு செலவிடாது என்ற போக்கு  என்பது போன்ற ஏராள பிரச்சினைகள் இந்தக் கல்வி திட்டத்தில் தீயாய்ச் சுட்டெரிக்கின்றன.
கல்வித் திட்டமும், ஏகக் கலாச்சாரம் என்ற தன்மையைக் கொண்டதாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.சை பொருத்தவரையில் மாநிலங்களே இருக்கக்கூடாது என்பதுதான் அதன் கோட்பாடு - இந்தியா ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கிற மய்யப் புள்ளியில் சுழலக்கூடியதாகும். அந்த அடிப்படையில் பாடத் திட்டத்தைத் தயாரித்தால் நாம் எப்படி அவற்றை ஏற்றுக்கொள்ள முடியும்?

இப்பொழுதே பி.ஜே.பி. ஆளும் அரியானாவில் கீதை பாடத் திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிறவியில் ஏற்ற தாழ்வு கூடாது என்கிற தன்மைக்கு விரோதமான தத்துவத்தைக் கொண்டது கீதை. ஆர்.எஸ்.எஸ். தன் இந்துத்துவா கண்ணோட்டத்தில் கீதையைத் திணிக்கலாம்? அதனை மற்றவர்கள் ஏற்க முடியுமா?

இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் விஞ்ஞானத் தைத் தேடிக் கொண்டிருக்கும் இந்துத்துவா சக்திகள் ஆட்சியிலே இருப்பதை மறந்துவிடக்கூடாது.

பள்ளிக்கூடங்களைப் பக்கத்தில் உள்ள குருகுலங் களோடு இணைக்கவேண்டும் என்கிறது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை. நாம் 2016 ஆம் ஆண்டில் வாழுகிறோமோ, கற்காலத்தில் வாழுகிறோமா என்பதை நமது உடலைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டு தான் சிந்திக்க வேண்டியுள்ளது.

எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் டாட்சியின் இந்(து)தக் கல்வித் திட்டத்தை தமிழ்நாடே முற்றிலுமாக எதிர்க்கிறது என்பதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கக் கூடிய இடம் தமிழ்நாடு சட்டப்பேரவையே!

அண்ணாவின் பெயரில் கட்சியை வைத்துக்கொண்டி ருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும்போது, இந்த வகையில் சட்டம் இயற்றப்படும் என்று எல்லோரும் எதிர்ப்பார்க்கக் கூடியதேயாகும்.

கல்வி மானியத்தின் மீது விவாதம் பொருத்தமாக நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசு சார்பிலேயே தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தால், அதனை சட்டப்பேரவையில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக ஆதரிப்பர் என்பதில் அய்யமில்லை.

ஏற்கெனவே சுயமரியாதைத் திருமணச் சட்டம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் சட்டம், 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான (31-சி) சட்டம் போன்றவை இதே தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகவே நிறைவேற்றப்பட்ட வரலாற்றுப் பெருமை தமிழக சட்டப் பேரவைக்கு உண்டு.
அந்த மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக் கல்லைப் பதிக்குமாறு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.


.

விளையாட்டிலும் ஜாதியா?


சோபாடே என்று சுருக்கமாக அறிவிக்கப்படும் சோபா ராஜடேங்கா என்பவர் ஊடக உலகிற்கு அறிமுக மானவர் தான். மகாராட்டிர பார்ப்பனர் குடும்பத்தில் பிறந்தவர். விளம்பர அழகியாக தொழில் தொடங்கி, தொலைக்காட்சிகளில் தம் முகத்தை அடிக்கடி காட்டிக் கொள்வார்.

ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தீபா கரம்சார் என்பவர் இந்தியா  சார்பில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்றார். இறுதிப் போட்டி வரை எட்டிய சாதனையாளர். அவரைப் பற்றி சோபாடே என்ன எழுதுகிறார்?

"ஏ, கருப்பி, எங்கள் பணத்தை வீணாக்காதே. செல்பி எடுத்துவிட்டு, ஒழுங்காக இந்தியா திரும்பு" என்கிறார்.

என்னதான் ஊடகத்துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், உரிமையை  ஒரு கட்டுக்குள்  வைத்துக் கொள்ளக் கடமைப்பட்டவரில்லையா?
விமர்சனம் செய்யட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை. அது என்ன 'கருப்பி?'
சிவப்பிகள் எல்லாம் வெற்றி பெற்று விட்டார்களா? 125 கோடி மக்கள் வாழும் இந்தியாவின் கதி ஒலிம்பிக்கில் சிரிப்பாய் சிரிக்கிறதே!

பெரும்பாலும் பஜனை பாடிவிட்டு, பகவானை பூஜையறையில் வழிபட்டும், சகுனம் பார்த்தும்  ஒலிம்பிக்கில் போட்டி யிடும் இந்தியர்கள் சாதித்துக் கிழித்தது என்ன?' இவற்றை எல்லாம் செய்யாத சீனாக்காரன் வெளுத்து வாங்குகிறானே!

இந்திய வீரர்களுக்குப் பாதிப்பு என்பது 'உளவியல்' ரீதியானது என்ற ஒரு பொதுக் கருத்து உண்டு தெரியுமா?

விளையாட்டிலும்கூட ஜாதி பார்க்கும் பார்ப்பனரைத் தெரிந்து கொள்க!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...