Monday, March 28, 2016

அதிக டெபாசிட் இழக்கப்போவது யார்? என்ற போட்டியில் அடிக்குது பாஜகவுக்கு முதல் பிரைஸ்

- நோக்காளன்
பெரியார் மண்ணாகவும், திராவிடர் இயக்க பூமியாகவும் உள்ள இப்பெரும் தமிழ்நாட்டில், எப்படியும் காலூன்றி, காவிக் கொடியைப் பறக்கவிடலாம் என்ற நோக்கத்தோடு, ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க. அதன் பிரிவுகளான ஹிந்து முன்னணி, விசுவஇந்து பரிஷத் போன்றவை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செய்யும் முயற்சிகள் வெற்றி பெறவே இல்லை!
மத்தியில் காங்கிரஸ் - அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மீதிருந்த மக்கள் வெறுப்பைப் பயன்படுத்தி, மாற்றம் இதோ, என்று கூறி, நாங்கள் பதவிக்கு வந்த 60 நாட்களில் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்து ஒவ்வொரு கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போட்டு விடுவோம் என்றெல்லாம் ‘புருடா’ விட்டு புதிய இளம் வாக்காளர்களை ஏமாற்றினர். மாற்றத்திற்கு ஏங்கி, வாக்களித்து விட்டு, அவர்கள் உறுதி கூறியபடி எந்த புதிய வாய்ப்பும் இன்றி கார்ப்பரேட் ராஜ்யம், மனுதர்ம ராஜ்யம் என்ற பச்சை ஹிந்துத்துவா முறையில் நடைபெறுவதை கண்டு, படித்த இளைஞர்களும், மாணவர்களும் விழி பிதுங்கி விடியல் எப்போது வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர்!
தமிழ்நாட்டில் ஒன்றே ஒன்றே!
மற்ற மாநிலங்களில் பெரு வெற்றி பெற்ற பா.ஜ.க. மோடியால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதி அதுவும் வாக்குகள் பிரிந்த காரணத்தால் கன்னியா குமரி மாவட்டத்தில் வெற்றி பெற்றது! 37 இடங்களில் அ.தி.மு.க.தான் வென்றது. 2009இல் நாடாளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க. 39 தொகுதிகளிலும் நின்று 39 தொகுதிகளிலும் தமிழ்நாட்டில் “டெப்பாசிட்” இழந்து தனித்தன்மை பெற்றது.
அடுத்து 2014 நாடாளுமன்றத்தேர்தலில் சில தமிழக கட்சிகள் ம.தி.மு.க., பா.ம.க. மற்றும் சில கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தும்,  பிரதமர் வேட்பாளர் மோடி மூன்று அல்லது நான்கு முறை தமிழ்நாட்டிற்கு வந்து - திரட்டப்பட்ட கூட்டத்தினரிடையே தேர்தல் பிரச்சாரம் செய்தார்!
ஆறு இடங்களில் டெபாசிட் காலி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கே சென்று சந்தித்தார்; மற்றொரு சினிமா ஸ்டார் விஜய்யை சந்தித்தார். இப்படி பல வித்தைகள் செய்தும், எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லையே!
2014இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) போட்டியிட்ட  39 இடங்களில் பா.ஜ.க. நின்றது 7 இடங்களில், ஒரு இடத்தில்தான் டெப்பாசிட்டைக் காப்பாற்றிக் கொண்டது. அதற்கும் காரணம் ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகளின் கூட்டே!
இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, பா.ஜ.க வின் தேசிய ஜனநாயக முன்னணி கலைந்துவிட்டது; ம.தி.மு.க. வெளியேறியது; பா.ம.க. வெளியேறியது. சில சில்லரை கட்சிகள் தாமரை இலைத் தண்ணீராக தொடர்கின்றன!
இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்று பா.ஜ.க. தான் என்று மார்தட்டினர்!
அமித்ஷா அலாவுதீன் அற்புத விளக்கா?
அமித்ஷா ஒரு அலாவுதீன் அற்புத விளக்கைக் கொண்டு வருகிறார்; அப்படியே தலைகீழாக தமிழ்நாட்டை மாற்றி காவிமயமாக , கமண்டல ராஜ்யமாக்கிவிடுவார் என்று கதைத்தனர்.
“மிஸ்டுகால்” கட்சி என்ற பெயர் வாங்கும் வண்ணம் டெலிபோன் டைரக்டரியில் உள்ள பெயர்களையெல்லாம் திரட்டி “உறுப்பினர் பட்டியலில் சேர்த்து” 60 லட்ச உறுப்பினர் ரெடி ரெடி என்றனர். அவர்களில் தலைவர் வைத்த இலக்கோ 1 கோடி நபர்கள் ஆயிற்றே! ரூபாய் என்றால் எளிதில் கார்ப்பரேட் கட்சி சேர்த்திடும்.
வடக்கே இருந்து ஜவ்டேகர் வந்தார் - சென்றார் - பேசினார் - திரும்பினார் மீண்டும் வந்தார் - ரகசியமாக வந்தார் - அவர் கட்சித் தலைமைக்கு தெரியாமல் வந்து முச்சந்தியில் விஜயகாந்தையோ குடும்ப ஆலோசகர் களையோ சந்தித்தார் திரும்பினார்!
பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் பார்வையிலிருந்து தப்பியதே பெரிய விஷயம் என்று சொன்னார்.!
கமலாலயத்தில் விரிக்கப்பட்ட  சிகப்புக் கம்பளம்
தங்களுடன் வருவாரா என்று நம்பி எதிர்பார்த்த பா.ஜ.க தலைமை, திமுகவுடன் போகவில்லையே-அதைப் பாராட்டு கிறோம் என்று கூறி கமலாலயத்தில் சிவப்புக் கம்பளம் விரித்து காத்திருந்தனர்!
எங்களிடம் வருவது இனி உறுதியாகிவிட்டது, ஏனெனில் திமுக பக்கம் போகவில்லை என்று கூறி புளகாங்கிதம் அடைந்தது தாமரை
இதற்கிடையில் “கிங்” யார்?
இதற்கிடையில் கிங் யார்? கிங் மேக்கர் யார்? என்பது சில நாள் சஸ்பென்ஸ்; வெடித்த பலூன் மாதிரி பா.ஜ.க. எதிர் பார்ப்பில் மண்ணைப் போட்டு விட்டாரல்லவா! அதனால் பூஜ்யங்கள் சேர்ந்தால் என்ன என்று ஒப்பாரி வைத்தார் தமிழிசை அம்மையார்!. பி.ஜே.பி. பிளஸ் என்ற ஒரு கோஷம் தந்தார் வடக்கேயிருந்து வந்த  மகாராஷ்டிரா ஜவ்டேகர்.
உள்ளதும் போச்சே!
சில நாட்களுக்கு முன் அதிமுகவிலிருந்து வெளியேறி கறிவேப்பிலை சரத்குமார் என்ற ‘மிகப்பெரிய’ கட்சித் தலைவர் பிப்ரவரி 27இல் மத்திய அமைச்சரான இந்த ஜவ்டேகரை சந்தித்து, பிஜேபியோடு சேர்ந்து விட்டேன் என்றார், மதுரை விமான நிலையத்தில் - ஙியிறி றிறீus (திஷீக்ஷீனீuறீணீ) எப்படி விவரிக்கிறது பார்த்தீர்களா?
23-3-2016 அன்று அம்மாவை பார்த்து அந்த அணியில் சேர்ந்து விட்டு, பேட்டி கொடுத்தார்!
பா.ஜ.க. சந்தித்த பரிதாபம் பார்த்தீர்களா? உள்ளதும் போச்சே என்ற பேச்சு அங்கு! மகாராஷ்டிரத்தில் பேடேக்கர் ஊறுகாய் பிரபலம், ஜவ்டேக்கர், ஷா, மோடி - ஆகியவர்கள் தேர்தல் கூட்டணி ஷ்ணீஸீtமீபீ ஷ்ணீஸீtமீபீ  என்ற விளம்பரப் பதாகைகள் தொங்குகின்றன!
பெரியார் மண்ணை காவிமயமாக்கிட ‘கஜகர்ணம்’ போட்டாலும் நடக்காது!
டெபாசிட்டை அதிகம் இழக்கப்  போவது யார்?
ஆனால் 234லிலும் நிற்பார்கள், முன்பு போல அதிக டெப்பாசிட் இழக்கும் பெரிய தேசீய “பிரதான” கட்சி இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கும் பா.ஜ.க.வாகத்தான் இருக்கும் என்பது பல நோக்கர்கள் கருத்தாகும்!
பணபலம், ஊடகபலம், அரசு அதிகார பலம் எல்லாம் திராவிட மக்கள் பலத்துக்கு முன் ஒன்றுக்கும் பயனற்ற வையே!
மிஸ்டுகால் கட்சியின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா? அவர்கள் மட்டுமா? சேர்ந்தவரும் டெப்பாசிட் வாங்கப் போவதில்லை. இதுதான் இன்றைய யதார்த்தம்! புரிந்து கொள்வீர்.

நல்லகண்ணு மறுக்கிறார்
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நல்ல கண்ணு, சட்டசபைத் தேர்தலில் ஆளும் அதிமுகவை எதிர்க்க வலுவான கூட்டணி அமைந்துள்ளது என்றார். அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்களின் முக்கிய வேலை என்றார். சட்டசபைத் தேர்தலில் அதிமுக விற்கும் மக்கள் நலக்கூட்டணிக்குமே போட்டி என்று கூறிய நல்லகண்ணு, தேமுதிகவும் இணைந்துள்ளதால் மக்கள் நலக்கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது என்றார். விஜயகாந்த் அணி என்று நாங்கள் கூறவில்லை, மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்து பணி யாற்றுவோம் என்றார். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என்று சொல்லுகிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரோ முரண் படுகிறார்! எது உண்மை?

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

Saturday, March 26, 2016

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 18 ஆம் தேதி மறியல் போராட்டம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 18 ஆம் தேதி மறியல் போராட்டம்- ஏராளமானோர் சிறைபுக தயாராவீர்!

திராவிடர் கழக ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு
திருச்சி, மார்ச் 25- அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகலாம் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 18 ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தார்.
திருச்சி பெரியார் உலகம் சிறுகனூரில் நடைபெற்ற திராவிடர் கழக ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.  அவரது உரை வருமாறு:
அறிவிப்பது - தெரிவிப்பது என்னுடைய கடமை!
சிறப்பான இந்த மாநாட்டில் - திராவிடர் கழகத்தினு டைய மாநில மாநாடு - ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு ஆகியவைகளை மய்யப்படுத்தி நடத்தப்படுகிற இந்த மாநாடு - ஒரு வரலாற்றுத் திருப்பமாக இருக்கக்கூடிய ஒரு மாநாடு என்பது - வெறும் உரைகளோடு, கருத்துக் களோடு நின்றுவிடக்கூடாது. இந்த மாநாடு பெரியார் உலகத்தில் கூடி நாம் எடுக்கின்ற முடிவுகள் - அடுத்த படியாக களத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற ஒரு பாசறை மாநாடு என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே வந்திருக்கின்ற பல்லாயிரக்கணக்கான கழகக் கருஞ்சட்டை வீரர்கள் - அது போல ஒத்தக் கருத்துள்ளவர்கள் ஆகியவர்களுடைய மத்தியில் தெரிவிப்பது என்னுடைய கடமையாகும்.
பெரியார் நாட்டிலிருந்து, காந்தி நாட்டிற்கு...
எனக்கு முன்பாக உரையாற்றிய 88 அகவை நிறைந்த - குஜராத் மாநிலத்தில் வரலாறு படைத்த தமிழ்நாட்டின் அந்தக் காலத்தில் தலைசிறந்த திராவிடர் இயக்கத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகி யோரின் மிகுந்த மதிப்பையும், மரியாதையும் பெற்ற நம்முடைய அய்யா நீதியரசர் - குஜராத் உயர்நீதிமன்றத்தி னுடைய தலைமை மேனாள் நீதிபதி அவர்கள் மிக சிறப்பான இந்த இயக்கம் - இவ்வியக்கம் ஆற்றக்கூடிய பணிகள் - இரட் டைக் குழலின் சிறப்புகள்பற்றியெல்லாம் சொன்னார்கள். பெரியார் நாட்டிலிருந்து, காந்தி நாட்டிற்குச் சென்று, அதையே மாற்றியவர் நம்முடைய அருமை அய்யா நீதியரசர் அவர்களாவார்கள்.
சமூக இழிவு ஒழிப்பு மாநாட்டினுடைய தொடர்ச்சி இந்த மாநாடு
அந்த வகையில், தந்தை பெரியார் - காந்தி இருவரும் நடத்திய  போராட்டங்கள் அமைதி வழிப் போராட்டங்கள். அறவழிப் போராட்டங்கள். அன்றைக்கு சத்தியாகிரகம் என்கிற பெயரால் - வைக்கம் சத்தியாகிரகத்திலிருந்து தொடங்கி பல்வேறு வகையான போராட்டங்கள்- தந்தை பெரியார் அவர்கள்  43 ஆண்டுகளுக்கு முன்பாக அறிவித்த சமூக இழிவு ஒழிப்பு மாநாட்டினுடைய தொடர்ச்சி இந்த மாநாடு. இதற்கிடையில், அவர்கள் சொன்னதைப் போல, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொன்னதனுடைய அடிப்படை - யாரோ சிலருக்கு வேலை கொடுக்கவேண்டும் என்பதல்ல.
காலம் காலமாக இருக்கின்ற நம்முடைய சமூக இழிவு துடைத்து வழித்து எறியப்படவேண்டும். எங்கள் சகோதரர்கள், யார் இல்லை என்றால், இந்த சமுதாயம் இயங்க முடியாதோ - அப்படிப்பட்ட சகோதரர்கள் - சகோதரர் அதியமான் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, நீதியரசர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, மிகத் தெளிவாக ஜாதியை ஒழிக்க, பேதங்களை ஒழிக்க என்று மாத்திரமல்லாமல், வாய்ப்பைக் கொடுக்கவேண்டும்.
இன்றைக்கு திராவிடர் இயக்கத்தினுடைய பெருமை களைச் சொன்னார்கள். இந்த இயக்கம் இருக்கின்ற காரணத்தினால்தான், ஆதிதிராவிடர் சமுதாய, மீதி திராவிடர் சமுதாயமும் இன்றைக்கு அய்.ஏ.எஸ்., அதிகாரி களாக, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக - இன்னும் பல்வேறு பெரிய பெரிய பொறுப்புகளில் எல்லாம் வருகிறார்கள் என்றால், 100 ஆண்டு கால திராவிடர் இயக்கம் - 90 ஆண்டுகால சமுதாய புரட்சி இயக்கமான சுயமரியாதை இயக்கம் - இவைகள் எல்லாம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியி ருப்பதனுடைய விளைவுதான் அது.
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவேன் என்று கலைஞர் சொன்னார்
எனவே, அப்படிப்பட்ட மாற்றம் - இவைபற்றியெல்லாம் விரிவான உரை  பின்னால் என்னுடைய தலைமை உரையில் ஆதாரபூர்வமாக திட்டங்களோடு பல செய்திகளை மாலையில் சொல்லவிருக்கிறேன். ஆனால், இந்த மாநாடு - போராட்ட மாநாடு. இந்த மாநாட்டில் ஒரு மிக முக்கியமான திட்டம் என்ன அறிவிக்கப்பட்டது என்பதோடு செல்லவேண்டும். உலகம் முழுவதும் இந்தக் கருத்துகள் போய் சேரவேண்டும். ஆகவேதான், இந்தத் தீர்மானம் - தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவேன் என்று கலைஞர் சொன்னார் - அதேபோன்றுதான் உச்சநீதிமன்றமும் அந்த சட்டங்கள் செல்லாது என்று சொல்லவில்லை. சில சந்தேங்களைச் சொன்னார்கள். அவைகளையும் சென்ற முறை அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, அதனை நிவர்த்தி செய்தார்கள். ஆகமங்களைப் படிக்கிறவர்களுக்கு தனிப் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொன்னார்கள்.
என்னுடைய உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்!
அப்பயிற்சியைப் பெற்று இன்றைக்கு 206 பேர் தயாராக இருக்கிறார்கள். தீர்ப்பும் - சட்டம் செல்லும் என்று வந்துவிட்டது இப்பொழுது. எனவே, இது செயல் படவேண்டிய நேரமாகும். எனவேதான், இப்பொழுது இருக்கும் அரசுக்கு அதனை சொன்னோம். ஆனால், அவர்கள் கேளாக்காதினராக இருந்து கொண்டிருக் கிறார்கள். செயல்படாத அரசாக இருக்கக்கூடிய இந்த அரசை செயல்பட வைக்கவேண்டும். எந்த அரசாக இருந்தாலும் அது செயல்படவேண்டும். சென்ற தேர்தலுக்கு முன்பாக நாங்கள் அதனைத்தான் எடுத்து வைத்தோம்.
அந்த வகையில், இந்த மாநாட்டில் மற்ற தீர்மானங்கள் எல்லாம் மாலையில் நிறைவேற்றப்படும். இது மிக முக்கியமான தீர்மானம் என்ற காரணத்தினால், கழகத் தினுடைய தொண்டர்களுக்குத் தொண்டன் - தோழர் களுக்குத் தோழன் - கழகத்தினுடைய முதல் பணியாள் என்பதற்காக இந்தத் தீர்மானத்தை முன்மொழிய, செயல்படுத்த வாய்ப்புக் கொடுத்த வரவேற்பு குழுவி னருக்கும், இயக்கத்தினருக்கும் என்னுடைய உளங் கனிந்த நன்றியைத் தெரிவித்து, இந்தத் தீர்மானத்தை - இது அறிவார்ந்த அரங்கம் - நேரில் இருக்கின்றவர்கள் - அல்லது கண்டுகொண்டிருக்கின்றவர்கள் எல்லோ ருக்கும் தெளிவாகக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தை அறிவிக்கக்கூடிய இந்தத் தீர் மானம் என்னால் இப்பொழுது முன்மொழியப் படுகிறது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்
ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புக்கு வழிவகுக்கும் மனித உரிமைப் போராட்டமாகிய - தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமையைச் செயல்படுத்தும் வகை யில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1970 ஆம் ஆண்டிலும், 2006 ஆம் ஆண்டிலும் ஆணைகளும், சட்டங்களும் பிறப்பிக்கப்பட்டன.
நீதிபதிகளைத் தலைவர்களாகக் கொண்ட மூன்று ஆணையங்கள் அமைக்கப்பட்டு, அவ்வாணையங்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு, 69 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில்  பயிற்சி கொடுக்கப்பட்டு, தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தீட்சையும் வழங்கப்பட்டு, பணி நியமனம் செய்யப் படவிருந்த ஒரு காலகட்டத்தில், அதனை எதிர்த்து சிவாச்சாரியார்களால் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அதன் தீர்ப்பு (16.12.2015) வழங்கப்பட்டு விட்டது.
தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று கூறியதோடு, மனுதாரர்களால் வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி யும் செய்துவிட்டது.
எந்தவித சட்டத் தடையும், நீதிமன்றத்தின் விரோத மான தீர்ப்பும் இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசு ஆகமத்துக்கு உட்பட்ட கோவில்கள், ஆகமங்களுக்கு உட்படாத கோவில்களில் ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சியும், தீட்சையும் பெற்ற தகுதியுள்ள 206 பேரையும் அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் எழுதிய 21.12.2015 நாளிட்ட கடிதத்துக்கு எந்தவிதமான பதிலோ, மேல்நடவடிக்கையோ இல்லாத நிலையில், இவ்வாட்சிக்கு இப்பிரச்சினையில் போதிய அக்கறையும், ஆர்வமும் இல்லாமையால், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த 206 பேரையும் இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில் களில் நியமனம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற் கும் அரசு அலுவலகம் முன் மறியல் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
போராட்டம் எப்பொழுது? போராட்டம் எப்பொழுது? என்று ஆர்ப்பரிக்கும் இளைஞர்கள்!
இந்தப் போராட்டம் நடைபெறும் தேதி என்னவென் றும், தேர்தல் நேரமாக இருக்கிறதே என்றும் சிலர் நினைக்கக்கூடும்.
அதை அவர்கள் என்னிடத்தில் விட்டார்கள். மற்றவர் கள் தேர்தலைப்பற்றியும், கோட்டைக்குப் போவதைப் பற்றியும் நினைக்கிறார்கள். நாம் சமூகப் பணியாளர்கள், சமூகப் பெரியார் தொண்டர்கள் - நம்மோடு இருக்கக் கூடிய ஒத்தக் கருத்துள்ள போராளிகள் - இவர்கள் எல்லாம் நம்மோடு வருவார்கள்.  சிறையை நிரப்புவது பற்றி நினைக்கிறார்கள். நிறைய பேர் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். நாங்கள் சுற்றுப்பயணம் செய்கின்ற பொழுது, எப்பொழுது போராட்டம், போராட்டம், போராட் டத்தை அறிவியுங்கள் என்று சொன்னார்கள் இளைஞர்கள்.
ஆகவே, இந்தப் போராட்டத்திற்கு நீண்ட இடைவெளி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்கு நாம் ஒன்றும் இடையூறாக இருக்கப் போவதில்லை. அந்தப் போராட்டத்தினுடைய முதல் கட்டம்தான் இது. பல கட்டங்களாக அப்போராட்டம் நடைபெறும். அந்த முதல்கட்டப் போராட்டம் என்பது மறியல் போராட்டமாக, எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், தாலுகா தலை நகரங்களிலும் தமிழ்நாடு முழுக்க நடைபெறும். அதில் குறிப்பாக முன்மொழிகின்ற நான் தெளிவாகச் சொல்கி றேன், ஏப்ரல் 18 ஆம் தேதி திங்கள்கிழமை காலை இந்தப் போராட்டம் நடைபெறும்.
சென்னையில் நடைபெறும் மறியலுக்கு நான் தலைமை தாங்குகிறேன்!
எனவே, இந்த இடைவெளியை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு, பிரச்சாரம், பட்டியல்களைத் தரவேண்டும். தமிழ்நாட்டில் இப்பொழுது தேர்தலில் நிற்கக்கூடிய அரசியல் கட்சி நண்பர்கள், தலைவர்கள் எல்லாம் ஒன்றைச் சொல்கிறார்கள் - நாங்கள் போடுகிற முதல் கையெழுத்து, நாங்கள் போடுகிற முதல் கையெழுத்து என்று சொல்கிறார்கள், நீங்களும் அறிவீர்கள். அதையே நானும் சொல்கிறேன், இந்தப் பட்டியலில் போடுகின்ற முதல் கையெழுத்து - என்னுடைய கையெழுத்து! சிறைச்சாலைக்குப் போவதற்கு - மறியலில் பங்கேற்பதற்கு - சென்னையில் நடைபெறும் அந்த மறியலுக்கு நான் தலைமை தாங்குவேன்.
சென்னையிலுள்ள இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு முன்பாக என் தலைமையில் போராட்டம் தொடங்கும். தமிழ்நாடு முழுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் அல்லது தாலுகா அலுவலகங்கள் - எங்கெங்கே மக்களுக்குத் தொடர்பு இருக்கக்கூடிய பகுதிகள் இருக்கிறதோ - அங்கு காவல் துறைக்குத் தகவல் கொடுத்துவிட்டு (ஏனென்றால், மறியல் செய்வதற்கு காவல்துறையினர் அனுமதி கொடுக்கமாட்டார்கள்) ஆகவே, அவர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, ஒரு சிறு சொத்துக்கு, பொதுச் சொத் துக்கு நாசம் இல்லாமல், பொது அமைதிக்குப் பங்க மில்லாமல் - இதுவரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் போராட்டங்கள் எவ்வளவு வெற்றிகரமாக நடந்து வந்ததோ, அதுபோல், பல்லாயிரக்கணக்கான இளை ஞர்கள் முன்வரவேண்டும்.
எந்தக் கட்சியினராக இருந்தாலும், இந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வந்தால்...
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அவர்கள் எந்தக் கட்சியினராக இருந் தாலும், இந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வந்தால், அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளலாம் என்று சொல்லி, நீங்கள் அனைவரும் இத்தீர்மானத்தை ஏற்கிறீர் கள் என்பதற்கு எழுந்து நின்று, கையொலி எழுப்பி - மிகத் தெளிவாக நீங்கள் இத்தீர்மானத்தை வரவேற்க வேண்டும் என்று இந்த மாநாட்டின் சார்பாக, முன்மொழிந்து இதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் போராட்டத்தின் - முதல் கட்டப் போராட்டம்
வழிமொழிகின்ற வகையில், பட்டியலை அவர்கள் கொடுப்பார்கள் என்பதையும் மகிழ்ச்சியோடு உங்களுக் குத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு மாநாடு முடிந்து சென்றவுடன், நீங்கள் செய்யவேண்டிய பணி - அடுத்த பணி என்னவென்றால், ஏப்ரல் 18 ஆம் தேதி - திங்கள்கிழமை அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் போராட்டத்தின் - முதல் கட்டப் போராட்டத்தில் பங் கேற்பதுதான்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

வெள்ளைக்காரன் கசப்பு - அவன் கொண்டு வந்த சட்டம் மட்டும் இனிப்போ!



- மின்சாரம்
"124(பி) பிரிவில்தான் மகாத்மா காந்தி உள்ளிட்ட ஏராளமான சுதந்திரப் போராட் டத் தலைவர்களை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். அதே பிரிவில்தான் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். தூக்குக் கயிற்றை முத்தமிட்டு இந்தியாவிற்காக பகத்சிங் உயிர்த்தியாகம் செய்ததும் இதே சட்டத்தால் தான்.
அதே சட்டப்பிரிவில் என்மீதும் வழக்குப் பதிவு செய்திருப் பதால், காந்தி மற்றும் பகத்சிங் உள்ளிட்டோரின் வரிசை யில் என்னையும் சேர்த்ததற்கு நான் பெரு மைப்படத்தானே செய்வேன். அவர் களுக்கு இணையான அதே மரியாதையை இந்த அரசாங்கம் எனக்கு வழங்கியி ருக்கிறது."
- தேசத்துரோக வழக்கு பாய்ந்தது குறித்து
சீத்தாராம் யெச்சூரி
டில்லி ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தேச விரோதமாக முழக்கம் போட்டார்கள் என்று கூறி கன்னையாகுமார் உள்ளிட்ட ஆறு மாணவர்களை 124 தேச விரோத சட்டத் தின்கீழ் சிறையில் அடைத்தனர். தேச விரோதமாக எந்த முழக்கத்தையும் போட வில்லை என்று மாணவர்கள் தரப்பில் மறுக்கப்பட்டது.
மாணவர்கள் முழக்கமிட்டதாகச் சொல் லப்பட்ட அந்த நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்தது ‘ஜி’ டி.வி.யாகும். அந்தப் பதிவில் இல்லாததை - பிறகு மோசடியாக இடை யில் புகுத்தி கன்னையாகுமார் உள்ளிட்ட மாணவர்கள் தேச விரோதக் குரலைக் கொடுத்தனர் என்று ஜோடிக்கப்பட்டது. ஜோடிக்கப்பட்ட அந்த வீடியோவைப் பார்த்து தலைமை செய்தியாளரான விஸ்வ தீபக் அதிர்ச்சி அடைந்து தன் வேலையி லிருந்து ராஜினாமா செய்தேன் என்றார். இதன் பின்னணியை எளிதிற் தெரிந்து கொள்ளலாமே.
அடேயப்பா எவ்வளவுப் பெரிய  மோசடிக் குரூரர்கள்! இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் மாணவர் தலைவர் கன்னையாமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றம் கொண்டு வந்த போது பிஜேபி சட்டமன்ற உறுப்பினரே முன்னின்று தாக்கியுள்ளார்; காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது.
ஜெ.என்.யு. பல்கலைக் கழகத்தில் நடக்கும் பிரச்சினைகளை அறிந்து அந்த இடத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு) அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஅய்) அகில இந்திய செயலாளர் து. ராஜா, டில்லி முதல் அமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், பேரா சிரியர் கிலானி உட்பட  பலர்மீதும் அதே தேச துரோக வழக்கு 124 பதிவு செய்யப்பட்டுள்ளது.
124-கி: இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமுலுக்கு வந்தது, அதை குடியரசு தினமாகவும் கொண்டாடிவருகிறோம். அதே 1950ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பஞ்சாப், ஹரி யானா உயர்நீதி மன்றத்தில் மாஸ்டர் தாரா சிங் கோபி மீதான தேசத்துரோக குற்ற வழக்கின் 124-கின் கீழ் இரண்டு நீதி பதிகள்அமர்வின் தீர்ப்பில் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி வாட்சன்சொன்னது என்னவென்றால்.
“இந்தியா இப்பொழுது ஒரு குடியரசு நாடாகும், இதில் வெளிநாட்டினர் ஆதிக் கத்தின் கீழாக கொண்டு வரப்பட்ட சட்ட மான தேசத் துரோக குற்ற சட்டம் 124-கி மிகவும் இயற்கையாக தேவையில்லாத ஒரு சட்டமாக ஆகிவிட்டது” என்று குறிப் பிட்டார்.
1950 ஆண்டு இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து இந்திய குடிமக் களின் உரிமைகள் என்னஎன்று வரையறுக் கப்பட்ட பிறகு, காலனிய ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவரப்பட்ட சட்டத்தை வைத்துக் கொண்டிருப்பது தேவையா என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே இருந்துவருகிறது. தேசத் துரோகச் சட்டம் 124கி யின் கீழ் வழக்குகள் பதியப்படுவதும், அந்த வழக்கின் பொழுது இந்திய அரசமைப்பு சட்டம் 19இன் கீழ் ஒரு இந்திய குடி மகனின் உரிமைகள் விவாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. இதில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 19 என்ன சொல்கிறது என்றால்
பேச்சு சுதந்திரம் போன்ற சுதந்திரங் களை பாதுகாப்பது
Aஅனைத்து குடிமக்களுக்குமான உரிமை
B தங்களது கருத்துகளையும் உணர்வுகளையும் பேச உரிமை உள்ளது.
C ஓரிடத்தில் அமைதியாக ஆயு தங்கள் இல்லாமல் ஒன்று கூடலாம்.
D இயக்கங்கள் மற்றும் சங்கங்கள் அமைக்க உரிமை உள்ளது.
E இந்தியா முழுவதிலும் எங்கு வேண் டுமென்றாலும் சென்று வரலாம்.
F இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தங்குவதற்கும் வாழ்வதற்கும் முழு உரிமை உள்ளது.
இதற்கு நேர் எதிரானதுதான் இந்தத் தேசத் துரோகக் குற்ற வழக்கு 124கி சீத்தாராம் யெச்சூரி சொன்னதுபோல வெள்ளைக்காரன் அன்னியன், வெளி நாட்டுக்காரன் இந்நாட்டை சுரண்ட வந்தவன், இந்திய மக்களை ஒடுக்கியவன் - கொண்டு வந்த - பிரயோகித்த அதே தேசத் துரோக சட்டத்தை சுதந்திர இந்திய நாட்டில் பயன்படுத்துகிறார்கள் என்றால் இவர்கள் எந்தவகையில் அந்நியன் வெள்ளைக்காரனைவிட உயர்ந்தவர்கள் - மாறுபட்டவர்கள்?
இந்த ஆட்சி (ஆங்கிலேயர் ஆட்சி) ஏன் ஒழிய வேண்டும்; என்ற தலைப்பில் ‘குடிஅரசு’ இதழில் (29.10.1933) தந்தை பெரியார் எழு திய தலையங்கத்துக்காக இதே இபிகோ 124 கி பிரிவின்படிதான் தந்தை பெரியார் மீதும், ‘குடிஅரசு’ ஏட்டின் வெளியீட்டாள ரும் - தந்தை பெரியாரின் தங்கையுமான எஸ்.ஆர். கண்ணம்மாள் ஆகியோர் மீதும் ஆங்கிலேய ஆட்சி வழக்கு  ஒன்றைத் தொடர்ந்தது.
வழக்கினை விசாரித்த வெள்ளைக்கார நீதிபதி (கோவை ஜில்லா மாஜிஸ்திரேட்) டபுள்யூ வெல்ஸ் அய்.சி.எஸ். தந்தை பெரியார் அவர்களுக்கு 6 மாத வெறுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மீண்டும் ஒரு மாத சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களுக்கு 3 மாத வெறுங்காவல் தண் டனையும், 300 ரூபாய் அபராதமும், செலுத்தத் தவறினால் ஒரு மாத வெறுங்காவல் தண்ட னையும் அளித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சென்னை மந்தைவெளியிலே கதர் பிரச்சாரக் காலத்தில் பெரியார் பேசிய பேச்சு ராஜநிந்தனைக் குற்றம் (124ஏ) குற்றஞ் சாட்டப்பட்டதுண்டு.
1938ஆம் ஆண்டில் சென்னை மாநில பிரதமராக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்கள்மீதும் இதே குற்றப் பிரிவின்கீழ்தான் தண்டனை பெற்றுக் கொடுத்தார்.
வெள்ளைக்காரன் - கொள்ளைக்காரன் - அந்நியர் கொண்டு வந்த அதே சட்டத்தை ‘சுதந்திர’ இந்தியாவிலும் முனை மழுங்காமல் பயன்படுத்துகிறார்கள் என்றால் இது  என்ன சுதந்திர நாடாம்? இதனைக் கண்டிக்கும் வகையில்தான் திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் திடலில் நடைபெற்ற சமூகநீதி மாநாட் டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாதுகாப்பு  சட்டம் - நீதிமன்ற அவமதிப்பு சட்டம் -
அவதூறு சட்டத்தில் மாற்றம் தேவை!
வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டு, சுயராஜ்யம் பெற்றுவிட்டோம் என்ற நிலைமை மாறி 69 ஆண்டுகளான பிறகும், அன்றைக்கு நம் நாட்டவரின் போராட்ட முறைகளை அடக்கி ஒடுக்கிட, பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த அதே பழைய அடக்குமுறை, அவதூறு, மதப் பாதுகாப்பு என்று கூறி, அவற்றைப் பாதுகாக்கும் குற்ற வியல் சட்டங்களை அப்படியே வைத்து,
இன்றும் தங்களது ஆட்சிக்கு வசதியாக இருக்கிறது என்கிற காரணத்தினால் - காலத்திற்கேற்ப, நவீன ஜனநாயக ஆட்சியின் கூறுகளான பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, கூடித் தெரிவிக்கும் உரிமை, அறவழியில் போராடும் உரிமைகளைப் பறிக்கும்  தேசத் துரோகச் சட்டம் (Sedition, Blasphemy Law) போன்ற மதங்கள் பாதுகாப்புச் சட்டம், நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்,
அவதூறு சட்டம் போன்றவைகளை நீக்கவும், திருத்தவும், மாற்றமும் செய்ய வேண்டியது 21 ஆம் நூற்றாண்டில் இந்திய ஜனநாயகத்தில் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானதாகும். அவசர அவசிய மானதும் ஆகும். இதுபற்றி இந்திய சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஆழ்ந்து மத்திய அரசு பரிசீலிக்க முன்வரவேண்டும்.
திராவிடர் கழக சட்டத்துறையின் சார்பில் மாண்பமை மேனாள் நீதிபதிகள் ஜஸ்டிஸ் டாக்டர் ஏ.கே.ராஜன், ஜஸ்டிஸ் து.ஹரிபரந் தாமன், மூத்த வழக்குரைஞரும், சட்டப் பேராசிரியருமான ஏ.தியாகராஜன் ஆகியோர் கொண்ட மூவர் குழுவை நியமித்து, அவர் களது ஆய்வுப் பரிந்துரைகளைப் பெற்று, நாடு தழுவிய அளவில் (டில்லி உள்பட) கருத்தரங்கு களை நடத்துவது என்று இம்மாநாடு தெரிவித் துக் கொள்கிறது என்பதுதான் அந்தத் தீர்மானம்.   நாடு எங்கே போய்க் கொண்டிருக் கிறது? வெள்ளைக்காரன் காலத்துக்கு அல்லவா போய்க் கொண்டிருக்கிறது.
1860இல் வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் இன்னும் நம்மை அடக்கும்  அங்குசமாக இருக்கிறது.
இதுதான் சுதந்திர இந்தியாவா? அன்றே சொன்னார் தொலைநோக்காளர் தந்தை பெரியார்: வெள்ளைக்காரன் கையிலிருந்து இந்தப் பார்ப்பன கொள்ளைக்காரன் கையில் ‘மேடோவர்’ செய்யப்பட்டுள்ளது என்று கூறினாரே - பெரியார் சொன்னது எதுதான் பிழையானது?
--------------------

Thursday, March 24, 2016

கோமாதாக்களுக்கு (மறு)திருமணம் செய்யும் பாரதீய - கலாச்சாரம் பாரீர்!

-  ஊசி மிளகாய்


இன்றைய ‘தமிழ் ஹிந்து’  நாளேட்டில் வெளிவந்துள்ள ஒரு செய்தியை அப்படியே தருகிறோம்.
‘‘குஜராத்தில் மாடுகளுக்கு இந்து முறைப்படி திருமணம்: ரூ.18 லட்சம் செலவு; 700 பேருக்கு அழைப்பு”
குஜராத் மாநிலத்தில் இரு மாடுகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. ரூ. 18 லட்சம் மதிப்பில் இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ள இத் திருமணத்துக்காக 700 குடும்பத்தினருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அகமதபாத்தைச் சேர்ந்த பூனம், பகடானா வைச் சேர்ந்த அர்ஜுனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட் டுள்ளது. இரண்டும் மாடுகள். இரண்டு மாடுகளின் உரிமையாளர்களும் நாளை (வியாழக்கிழமை) அவற் றுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
பர்சானா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திருமணத்துக்காக ரூ.18 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாடுகளின் மதிப்பு அளவிடமுடியாதது என்பதை இச்சமூகத்துக்கு வெளிப்படுத்தவே ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பர்சானா அறக்கட்டளை பொருளாளரும், பூனம் மாட்டின் உரிமையாளருமான விஜய்பாய் இது தொடர்பாகக் கூறும்போது,
கடந்த 30 ஆண்டுகளாக நான் மாடுகளுடன் வசித்து வருகிறேன். அதனால் அவை எவ்வளவு அன்புக் குரியவை என்பது தெரியும். எனது வாரிசுகளுக்கு இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்துவைப்பேனா எனத் தெரியாது. ஆனால், என் மகளான பூனத்துக்கு இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்து திருமணம் செய்து வைப்பேன். பூனத்துக்காக தங்க நகையும் வாங்கியுள்ளேன். பூனம் என் குடும்பத்தில் ஓர் உறுப் பினர். திருமண விருந்துக்காக எங்கள் தரப்பில் 300 பேர், மூன்று ஆர்க்கெஸ்ட்ரா குழுவினருடன் அழகான கோட்டியா பகுதிக்குச் செல்வோம் எனத் தெரிவித்தார்.
விஜய்பாயிடம் 9 மாத பூனம் தவரி, நான்கு மாடுகளும் வேறு சில செல்லப் பிராணிகளும் உள்ளன.
அர்ஜுன் மாட்டின் உரிமையாளர் தேகிரி கோஸ்வாமி. இவரும், விஜய்பாயும் கோட்டியா பகுதியை திருமணம் நடத்த தேர்வு செய்துள்ளனர். திருமணத்துக் காக ஆமதாபாத்திலிருந்து பிராமண புரோகிதர்கள் அழைத்து வரப்பட்டு, இந்து முறைப்படி மாடுகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. திருமணத்தை யொட்டி சிறப்பு யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத் திருமணத்தில் பங்கேற்கவுள்ள 700 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(தி தமிழ் ஹிந்து, 23.3.2016)
-படித்தீர்களா?
பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத் எவ்வளவு அறிவில் வளர்ச்சி - ‘விகாஸ், விகாஸ்’ பெற்றிருக்கிறது பார்த்தீர்களா?
விவேகானந்தரே கேட்டார், ‘நீங்கள் எல்லாம் மாட்டின் புத்திரர்கள்தானே, பின் அந்த கோமாதா செத்தால் தூக்குவதற்கு, அடக்கம் செய்வதற்கு வேறு ஜாதியினரை அழைக்கிறீர்களே - ஏன்?’ என்று கேட்டார். பதில் மவுனம்தான்!
பைத்தியக்காரர்களின் நாடு என்று ஒரு காலத்தில் பழைய மலையாள நாடு கேலி செய்யப்பட்டதுண்டு!
இன்று அவர்கள் எவ்வளவோ முன்னேறி விட்டனர்!
பிரதமர் மாநிலத்தில் மாட்டுக்கும், மாட்டுக்கும் கல்யாணமாம்! அதுவும் மிகவும் தொழில் வளர்ச்சியில் முன்னேறிய ‘அகமதாபாத்’ அருகில் உள்ள ஊரில்!
அகமதாபாத் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது ஓரளவு உண்மையாயினும், அறிவு வளர்ச்சியில் சுத்த பூஜ்ஜியம்தான்! ஒரு சந்தேகம் - ஏற்கெனவே பசு மாடுகள் - கோமாதாக்கள்தானே - மாதாக்களுக்கு இப்பொழுது கல்யாணம் என்றால், இது மறுமணமா? திருமணமா?
இந்தக் கோமாதாவுக்கு ஒரே ஒரு புருஷன்தானா? ஆஸ்திரேலியா காளைகளின் விந்து செயற்கை முறையில் உங்கள் கோமாதாவின் கருப்பையில் செலுத் தப்படுகிறதே- அப்பொழுது உங்கள் கோமாதாவின் ‘கற்பு’ என்னாயிற்று?
குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறுவதில் குஜராத் ஒரு குறிப்பிடத்தக்க மாநிலம் ஆகும்!
என்னா வினோதம் பாரு!
எவ்வளவு ஜோக்குப் பாரு!!
தமிழ்நாட்டில்கூட,  அம்மா ஆணைப்படி கொள்ளை யடித்தவர்கள் எல்லாம் இலவசத் திருமணங்களை மனிதர்களுக்குத்தான் செய்து வைத்து புண்ணியம் தேடுகிறார்கள்!
குஜராத் எவ்வளவோ முன்னேறியிருக்கிறதாம்! அது சரி, வெளிநாட்டவர் வந்தால் என்ன சொல்வார்களாம்?
இந்த லட்சணத்தில் விண்வெளி ராக்கெட் வெற்றிப் பெருமிதம் வேறு!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

6,368 அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


மேற்கு வங்க அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறையில் நிரப்பப்பட உள்ள 6,368    பணியிடங்களுக்கான அறிவிப்பை மேற்கு வங்க சுகாதார பணியாளர் தேர்வாணையம்  (WBHRB) வெளியிட்டுள்ளது.
இதற்கு  தகுதியும் விருப்பமும் உள்ளவர் களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:  Medical officer specialist  காலி யிடங்கள்: 6,368 பணியிடம்: மேற்கு வங்கம்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 42,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.210. விண்ணப்பிக்கும் முறை: http://www.wbhealth.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.03.2016
மேலும் முழுமையான விவரங்கள்
அறிய :http://wbhrb.in  பா£ர்த்து தெரிந்து கொள்ளவும்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள்!


அறியியல் பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன. பி.இ. சிவில் படித்தவர் களுக்கும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.
பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளும் பணி நியமனங்களும்:
  • இந்திய நிலக்கரி நிறுவனம் (Coal India Limited)
    பி.இ. சிவில் படித்தோருக்கு இந்நிறுவனம் நுழைவுத்தேர்வு நடத்தியும், நேர்முகத்தேர்வு நடத்தியும் தேர்வு செய்து பணி வாய்ப்புக் கொடுக்கிறது. இத்தேர்வு எழுத 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருத்தல் கல்வித்தகுதியாகும். சிவில் படித்தோர் மட்டுமின்றி பி.டெக், ஃ எ.எம்.அய்.இ, பி.எசி. போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றோரும் இந்நிறுவனத் தேர்வுகளை எழுதலாம்.
  • நேஷனல் தெர்மல்பவர் கார்பரேஷன் (National Thermal Power corporation)
    இப்பொதுத்துறையில் பணியில் சேர பி.இ/ எ.எம்.ஐ.இ. ஆகிய படிப்புகளில் ஏதாவதொன்றில் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருத்தல் கல்வித் தகுதியாகும். எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத் திறனாளிகள் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். இந்நிறுவனப் பணிக்கு கேட் மதிப்பெண்ணுடன், நேர்முகத்தேர்வும் நடத்தப்படும். இத்தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படும்.
  • ஆயில் மற்றும் நேச்சுரல் காஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (Oil and Natural Gas corporation Ltd) இந்நிறுவனத்தில் பணிவாய்ப்புப் பெற பி.இ/அறிவியல் பாடங்கள் படித்தவர்கள் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ. சட்டம் படித்தோரும் இந்நிறுவனத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். அய்.சி.டபிள்யு., சி.ஏ., எம்.பி.பி.எஸ் படித்துள்ளோர் தத்தமது படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்நிறுவனம் நடத்தும் எழுத்துத் தேர்வுடன் நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இத்தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படும்.
  • இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (Hindustan Petroleum Corporation LImited) இந்நிறுவனப் பணியில் சேருவதற்கு பி.இ/பி.டெக் படிப்புகளில் பொதுப் பிரிவினரும், ஓபிசியினரும் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருத்தல் கல்வித் தகுதியாகக் கொள்ளப் படும். எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளியினர் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். கேட் தேர்வில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் குழுவிவாதம், நேர்முகத் தேர்வு ஆகியனவும் நடத்தப்படும். இத்தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்குப் பணிவாய்ப்பு வழங்கப்படும்.
  • நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (National Aluminium Company Limited)
    பி.இ / பி.டெக். படித்துள்ளப் பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினரும் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். எஸ்.சி/எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகள் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதுடன் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெறுவோருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படும்.
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation)
    பி.இ. பி.டெக் படித்துள்ளோர் 65 சதவிகித மதிப்பெண்களும் எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55 சதவிகித மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றோருக்கு இந்நிறுவனம் சார்பில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோர்க்கு பணி வாய்ப்பு வழங்கப்படும்.
  • ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்(Steel Authority of India Limited)
    பி.இ. பட்டம் பெற்றுள்ள பொதுப்பிரிவினர்/ ஓபி.சி-யினர் 65 சதவிகித மதிப்பெண்களும் எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத் திறனாளிகள், துறை சார்ந்து தேர்வு எழுதுவோர் பொறியியல் பட்டத்தில் 55 சதவிகித மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இந்நிறுவனம் சார்பாக நடத்தப்படும் எழுத்துத் தேர்விலும் நேர்முகத்தேர்விலும் வெற்றி பெறுவோர்க்கு பணி வாய்ப்பு வழங்கப்படும்.
  • இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேசன் (Indian Space Research Organisation)
    இந்நிறுவனத்தில் வேலைவாய்ப்புப் பெற பி.இ/பி.டெக். ஆகியவற்றில் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், கல்வி நிறுவனத்தில் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்நிறுவனம் சார்பாக நடத்தப்படும் எழுத்துத் தேர்விலும் நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெறுவோருக்கு பணிவாய்ப்பு வழங்கப்படும்.
  • டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன்(Delhi Metro Rail Corporation)
    இந்நிறுவனத்தில் பணி வாய்ப்புப் பெற விரும்புவோர் பி.இ/பி.டெக் ஏதாவதொரு படிப்பில் 70 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதுடன், இந்நிறுவனம் நடத்தும் குழு விவாதத்திலும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் பணிவாய்ப்பு வழங்கப்படும்.
  • விசாக் ஸ்டீல் பிளாண்ட்(Vizag Steel Plant)
    இந்நிறுவனத்தின் தேர்வை எழுத விரும்புவோர் பி.இ / பி.டெக் ஏதாவதொரு படிப்பில் பொதுப்பிரினரும் ஓபிசி பிரிவி னரும் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவிகித மதிப் பெண்கள் பெற்றிருந்தால் போதும். இந்நிறுவனத்தில் பணி வாய்ப்புப் பெற இந்நிறுவனம் நடத்தும் எழுத்துத் தேர்விலும் குழு விவாதத்திலும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

Thursday, March 17, 2016

வடக்கே‘லவ்ஜிகாத்';தமிழ்நாட்டில் ‘கவுரவக்கொலை’யா? தமிழர் தலைவர் கடும் கண்டனம்!

உடுமலையில் பட்டப் பகலில்  அந்தோ கொடுமை! கொடுமை!!
ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் கொலை வெறித் தாக்குதல்
வடக்கே‘லவ்ஜிகாத்';தமிழ்நாட்டில் ‘கவுரவக்கொலை’யா?

தமிழர் தலைவர் கடும் கண்டனம்!
மூன்றாவது மொழி என்றபெயரால் பிஜேபி அரசில் சமஸ்கிருதம் நுழைகிறது
உடுமலையில் ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்மீது கொலை வெறித் தாக்குதல் நடைபெற்று சங்கர் என்ற தாழ்த்தப்பட்ட தோழர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், குமாரலிங்கம் சாவடியைச் சேர்ந்த திரு. வேலுச்சாமி என்பவருடைய மகன் சங்கர் (வயது 22) கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டுள்ளார்.
ஜாதி மறுப்புத் திருமணம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகள் கவுசல்யாவை (19) காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து 8 மாதங்களாகி விட்டது.
திருமணம் முடிந்து குமரலிங்கம் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தனர். கவுசல்யா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச்  சேர்ந்தார்.
பட்டப்பகலில் பகிரங்க படுகொலை!
இவர்கள் இருவரும் நேற்று (13.3.2016) உடுமலைப்பேட்டையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று கயவர்கள் அரிவாளால் வெட்டிச் சாய்த்துள்ளனர். பட்டப் பகலில் பேருந்து நிலையம் அருகில் இந்தப் படுகொலை நடந்துள்ளது. சங்கர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே மரணம் அடைந்தார். தடுக்கச் சென்ற கவுசல்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொலை செய்த கொடியவர்கள் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஏறி அரிவாளைத் தோளில் தொங்கப் போட்டுச் சென்றுள்ளனர். கண்காணிப்புக் கேமராவில் இவையெல்லாம் பதிவாகியுள்ளன.
திருமணம் செய்து கொண்ட இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள், இதில் சங்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
இந்தப் பின்னணியில் தான் இந்தப் படுகொலை என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.
கவுரவக் கொலைகளா?
இத்தகு கொடுமைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க   தயங்குவது ஏனோ?
அசிங்கத்துக்குப் பொட்டு வைத்ததுபோல, இதற்குக் ‘கவுரவக் கொலை’ என்றும் வேறு மகுடம் சூட்டுகின்றனர் ஜாதி வெறியர்கள். இந்த நிகழ்வுகள் இந்த ஆட்சியில் சர்வ சாதாரணமாகவே நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு படும்பாடு!
நாள்தோறும் ஏடுகளைப் புரட்டினால் கொலை, கொள்ளை, திருட்டு, சங்கிலிப் பறிப்பு என்பது ஏராளம் இடம் பெற்று வருகின்றன. இந்த லட்சணத்தில் சட்டம் - ஒழுங்கு தமிழ்நாட்டில் தான் சிறப்பாக இருப்பதாக முதல் அமைச்சர் கூறுகிறார். இதென்ன நாடா? காடா?
காதலித்துத் திருமணம் செய்து
கொள்வது என்பது குற்றமா?
வட மாநிலங்களில் ‘லவ்ஜிகாத்’  என்று சொல்லி, மதம் மாறித் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எதிராக பிஜேபிஆட்சியின் துணையோடு சங்பரிவார்கள் வன்முறை வெறியாட்டம் போடுகின்றனர். தமிழ்நாட்டில் ஜாதியை முன்னிறுத்தி அரசியல் நடத்த விரும்புபவர்கள் பிரச்சாரத்தால், செயல்பட்டால் ஜாதி மறுப்புத் திருமணங் களைச் செய்து கொள்வோர் உயிருக்கு உலை வைக்கப்படுகின்றது.
அரசு செயல்படட்டும்!
இது கடும் கண்டனத்துக்கு உரியது. கட்சிகளைக் கடந்து கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
தமிழ்நாடு அரசு இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. காலந் தாழ்த்தவும் கூடாது; குற்றவாளிகள் உரிய தண்டனைக்கு ஆளாக வேண்டும்.
தருமபுரியில் ஜாதிக் கலவரம் ஏற்பட்டு, ஊரே கொளுத்தப்பட்டது - தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளவரசன் மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. பெரும்பாலும் கொலைதான் என்ற கருத்து நிலவுகிறது.  இது நடந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. அதை தொடர்ந்து நடைபெற்ற கோகுல்ராஜ் படுகொலையும் வேதனைக்குரியது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி தானே! குற்றவாளிகளை காலந்தாழ்த்தாது கண்டுபிடித்து தண் டனையைப் பெற்றுத் தருவதில் காவல்துறை வேகத்தையும், விவேகத்தையும் காட்டுமாறு வலியுறுத்துகிறோம்.


கி. வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்


சென்னை
14.3.2016


.
 2

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...