Friday, December 19, 2014

இளந்தளிர்களே உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்

132 பள்ளி மாணவர்களைக் கொன்ற தலிபான்களின் பயங்கரவாத செயல்!

இளந்தளிர்களே உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்;

எங்களின் அன்புக் கண்ணீர் காணிக்கை!


பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளின் அடாத செயல் காரணமாக உலகின் கறை படிந்த மதக் கொடுமைகளின் பட்டியலில் மதவெறி மற்றொரு மனிதநேயமற்ற, பச்சாதாபம் பார்க்காது, 132 பள்ளிக் குழந்தைகளைக் கொன்றுள்ளது; பலரை உயிருக்கு மன்றாடச் செய்துள்ளது.

இந்தச் செயல்களின் அடிப்படைக் காரணம் மதவெறி! மதவெறி!! மதவெறி!!!

கடவுள் கருணையே வடிவானவர்; அங்கு இங்கு எனாது எல்லா இடங்களிலும் பரவியுள்ளவர்; அவர் இல்லாத இடமே இல்லை என்று கதையளக்கும் கடவுள், மத நம்பிக்கைவாதிகளே, அப்படி ஒரு சர்வசக்தி உடைய ஆண்டவனோ, கடவுளோ இருந்தால், இந்தப் பச்சிளம் தளிர்களின் உயிர்களைக் கொன்றிட உடன்பட்டு வேடிக்கைப் பார்த்திருப்பானா?

நாட்டில் கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இரத்த ஆறு ஓடுவது சகித்துக் கொள்ளக் கூடியதா?

உலகம் - மதவெறி காரணமாக - மீண்டும் காட்டுமிராண்டி யுகத்திற்கே திரும்பிச் செல்லுகிறதா? மகாவெட்கக்கேடு இது!

இதை ஒரு வன்முறைச் செயலாக மட்டும் பார்க்காமல், இதன்மூலம் - ஆணிவேர் - மதத் தீவிரவாதம் - அடிப்படை வாதம் என்ற தலிபான்கள் என்றால், அவர்களை உருவாக்கி மனிதாபிமானம் அறியாத வெறித்தனத்தை அவர்களுள் விதைத்தது எது?

கடவுளும், மதமும்தானே! அவைகளை ஏற்றுக்கொண்டே, மறுபுறம் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்று உபதேசம் செய்வது அர்த்தமுள்ளதா? முரண்பாடு அல்லவா?

பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும், மனிதநேயம் உள்ளவர்கள்; ஆனால், மதவெறியர்களோ சரித்திரத்தின் அந்நாள் தொட்டு, இந்நாள் வரை - அசல் காட்டுமிராண்டிகளாய், சகிப்புத்தன்மை அறியாததாக மிருக உணர்ச்சியின் பிண்டங்களாகத் தானே வாழ்ந்து வருகின்றனர்! இதனை மறுக்க முடியுமா?

இலங்கையில் புத்தம் என்ற மனித நேயத்தையே ரத்தத் தடாகத்தில் தள்ளி குளிக்க வைத்து மகிழும் குள்ளநரிக் கூட்டத்தின் யதேச்சாதிகார அரசு பயங்கரவாதம் - அரசே - செஞ்சோலை என்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் குண்டுவீசி கொன்று அழித்து, மகிழவில்லையா?

அந்த ரத்தக் கறையாளன், சட்ட புத்தகத்தையே திருத்தி, தானே மீண்டும் நாட்டை ஆளத் திட்டமிடுவதற்கு, அந்தச் சம்பவம் போன்றவற்றை - பயங்கரவாதத்தை நான் துடைத்து எறிந்துவிட்டேன் என்று கொக்கரிக்கிறாரே!
இது பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டின் பிரச்சினையாக மட்டும் உலகம் பார்க்காது; பார்க்கக்கூடாது;

மனிதநேயத்திற்கு மதவெறி விடுத்த சவால் என்று எடுத்துக் கொண்டு, அனைவரும் அந்த மதவெறிக்குச் சமாதி கட்ட முனைப்போடு, நாடு, இனம், மதம் என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி உலகம் ஒரு குலம்; மானிடப் பரப்பு பரந்து விரிந்தது என்ற அணுகுமுறையில் இதற்கு முடிவு கட்டி, நாகரிகத்தை நிலைநாட்டிட முன்வரவேண்டும்!

இளந்தளிர்களே, மொட்டுகளே, உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்! எங்களின் அன்புக் கண்ணீர்க் காணிக்கை!

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
18.12.2014

Wednesday, December 10, 2014

எல்லோரும் திருக்குறளைப் படியுங்கள் - எனது ஆசை - - பெரியார் ஈ.வெ.ரா

இந்நாட்டு மக்களனைவர்க்கும் சிறப்பாக இந்த நாட்டுப் பழங்குடி மக் களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் குறள் ஒரு பெரிய செல்வ மாகும். நமது பெருமைக்கும் நெறிக்கும் (மதத்திற்கும்) நாகரிகத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல சங்கதிகளை நாம் காணலாம். இக்குறளின் பேரால் நம் பெருமையைத் திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது.

நமது சரித்திரத்திற்கும் நாகரிகத் திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும், பல காவியங்களிலிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியும். ஆயினும் அவை பெரும்பாலும் பண்டிதர்களுக் குத் தான் புரியுமாகையால், பயன் படுமாகையால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக்கு ஏற்ற ஆதாரமாய் அமைந்திருக்கிறது.

திருக்குறளின் பெருமையை 45 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எடுத்துக்காட்டியவர் காலஞ்சென்ற தோழர் பா.வே.மாணிக்க நாயகர் ஆவார். அவரும் நானும் அடிக்கடி வேடிக்கை யாகவும் விதாண்டாவாதமாகவும் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அந்தச் சமயங்களிலெல்லாம் அவர் திருக் குறள் கருத்துக்களைத் தான் மேற்கோளாக எடுத்துக்கூறி என்னை மடக்குவார்.

அவருடைய விளக்க உரைகளால் திருக்குறளில் அடங்கியிருக்கும் பல அற்புத அதிசயக் கருத்துக்களை என்னால் அறிய முடிந்தது. திருவள் ளுவர் நூல் ஒன்றே போதும் - இந் நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை யுண்டாக்க. குறள்களை மட்டுமே எடுத் துக்கொண்டு, அதிலுள்ள எல்லாத் தலைப்புகளின் கீழ் வருவனவற்றையும் இரண்டு மூன்று பிரிவுகளாக, அதாவது படித்த மாத்திரத்தில் பொருள் விளங்கு வனவற்றைக் கீழ் வகுப்புகளுக்கும், சற்றுக் கடினமான குறள்களை நடுத்தர வகுப்புக்கும், மிகுந்த புதை பொருள் கொண்டு கூட்டிப் பொருள் காண வேண்டியவற்றை மேல் வகுப்புக்கும் வைத்தால் பள்ளிகளில் மதப்படிப்போ, ஒழுக்கப்படிப்போ தனியாக வைக்க வேண்டிய அவசியமே இராது. ஒரு மாணவன் தன்னுடைய பரீட்சைக்குள் திருக்குறள் முழுமையையும் உணரும்படி செய்யப்பட்டால், அது எவ்வளவோ நன்மை. பி.ஏ.படித்தவனுடைய உலக ஞானத்திற்கு மேற்பட்ட அறிவு அனுபவத்துடன் படிப்பதாக அமையும்.

இராமாயணத்தில் நூறு பாட்டும், பெரிய புராணத்தில் இருநூறு பாட்டும், பாரதத்தில் நூறு பாட்டும், பாகவதத் தில் இருநூறு பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறளைப் படிப்பது எவ்வளவோ மேலாக இருக்கும். பொருளை வீணாக்கி, காலத்தை வீணாக்கி பி.ஏ.பட்டமும், எம்.ஏ., பட்டமும் பெறுவதைக் காட்டிலும் திருக்குறளை முற்றும் உணர்ந்து பட்டம் பெறுவது எவ்வளவோ மேலாக இருக்கும். பி.ஏ., படிப்பதாலும், எம்.ஏ., படிப்பதாலும் அனுபவ அறி வொன்றும் நாம் பெற்றுவிடுவதில்லை. உத்தியோகம் பெற ஒரு பகுதியாகத்தான் அதுவும் பார்ப்பனருடன் உத்தியோகத் திற்கு நம்மைப் போட்டி போட முடி யாமல் செய்யத்தான் பயன்படுகிறதே யொழிய, உத்தியோகத்திற்கு அந்தப் படிப்பு ஒன்றும் பயன்படுவதில்லை. ஆனால் திருக்குறளின் ஒவ்வொரு கருத் தும் ஒருவன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு துறையும் நன்றாக அதில் விளக்கப்பட்டிருக்கிறது.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்

ஒருவன் மற்றவனை இரந்து, பிச்சை யெடுத்துத்தான் பிழைக்க வேண்டு மென்கிற நிலை வந்தால் அந்நிலைக்குக் காரணமான கடவுள் ஒழிக்கப்பட வேண்டுமென்று கூறியிருக்கிறார்.
பாட்டாளி மக்களின் புரட்சியைத் தடுத்து அவர்களை வேறுபக்கம் திருப்பப் பித்தலாட்டக்கூப்பாடுகள் வேண்டா.

ஒரு தொழிலாளி தன் பட்டினிக்கு ஜகத்தைக் காரணமாக நினைப்பதில்லை. கடவுள் தான் அப்படிப் பாடுபட்டு அவனைப் பட்டினி கிடக்கும்படி உற்பத்தி செய்துவிட்டான் என்று நினைக்கிறான்.

அவனுக்கு, போடா, போ! கடவுளாவது வெங்காயமாவது! பாடுபட்டும் நாமெல்லாம் பட்டினி. பாடுபடாத அவனெல்லாம் வயிறு வீங்க உண்பது - இதுதான் கடவுள் நீதியா?

இப்படி ஒரு கடவுள் இருக்குமா? இருந்தால் அந்தக் கடவுள் நமக்கு வேண்டவே வேண் டாம் என்று கூறினால் கடவுள் ஒழிந்து விடும். அப்புறம் உலகப் பொருள் யாவருக்கும் சரி பங்கு என்ற உணர்ச்சி ஏற்படும். அதனால் அவன் உணர முடியும். தான் பட்டினியிருக்கத் தன் முட்டாள்தனமே காரணமென்று. இதைத்தான் கூறியிருக்கிறார் திருக் குறள் ஆசிரியர்.

நூறு ரூபாய்க்கும் இருநூறு ரூபாய்க்கும் பாடப்புத்தகங்கள் வாங்கிப் படித்து மடையர்கள் ஆவதைவிட, நாலணாவுக்குத் திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்று தான் நான் கூறுவேன். திருக்குறள் ஒன்றே போதும் உனக்கு அறிவு உண்டாக்க; ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுக்க, உலக ஞானம் ஏற்பட. அப் படிப்பட்ட குறளைத்தான் நாம் இது வரை அலட்சியப்படுத்தி வருகிறோம்.

ஒரு தாசில்தார், ஒரு மாஜிஸ்ட்ரேட், ஒரு நீதிபதி, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இவர்களுக்குக் கூடத் திருக்குறள் ஒன்றே போதும். தமது வேலையைச் சரியாகச் செய்ய. அவர்களுக்கு உத்தியோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பரீட்சை வைக்கும் போது கூட. திருக்குறளை நன்குணர்ந் தால் போதும் என்று அவர்களுக்கு உத்தியோகம் வழங்க வேண்டும். அவர்கள் உத்தியோகத்திற்கு அவர்கள் படிக்கும் பூகோள சாஸ்திரமோ, வான சாஸ்திரமோ, திரி கணிதமோ, சரித் திரமோ பயன்படுவதில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

அனைவரும் திருக்குறளைப் படித்து, அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழ வேண்டும் என்பது தான் எனது ஆசை.

- முல்லை பி.எல்.முத்தையா தொகுத்த திருக்குறளின் பெருமை என்ற நூலிலிருந்து வெளியீடு: முனைவர் ஆறு. அழகப்பன், தமிழ்ச்சுரங்கம்


Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/92417-2014-12-06-08-25-44.html#ixzz3LNaT6odi

திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும்

திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும்
வருணபேதம் பேசும் கீதை புனித நூல் அல்ல!

குன்னூரில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

குன்னூர், டிச.9 - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமே தவிர, பிறப்பில் பேதம் பேசும் கீதையை அறிவிப்பது ஆபத்தானது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.  இன்று  (9.12.2014) குன்னூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கேள்வி: பாஜக விலிருந்து வைகோ வெளியே வந்தது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இது காலம் தாழ்ந்த முடிவாக இருந்த போதிலும்கூட, வரவேற்கவேண்டிய சிறந்த முடிவு. வைகோ எங்கள் சகோதரர். திராவிட உணர்வு, திராவிடத் தால் எழுந்தோம் என்பதில் எப்போதும், அந்த கொள்கையி லிருந்து மாறாதவர். அரசியல் நிலைப்பாட்டில்பல நேரங்களிலே அவர்களுடைய நிலைநாங்கள் ஏற்கத் தக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அடிப்படை உறவை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே, அதை வரவேற் கிறோம்.

அதேநேரத்தில் திராவிட உணர்வுகளை அழிப்பதற்காக இப்போது பல சக்திகள் ஒன்று சேருகிற இந்தக் காலக் கட்டத்திலே வைகோ போன்ற கொள்கை தெளிவாளர்கள் அடுத்து எடுக்கக்கூடிய முடிவு என்பதை முன்புபோலவே அவசரப்பட்டு எடுக்காமல் இன உணர்வு, மொழி உணர்வு, திராவிட பாரம்பரிய  வரலாறு இவைகளோடு ஒத்துப் போகக்கூடிய சிறந்த முடிவை அவர் சுதந்திரமாக எடுத்து, அதன்மூலமாக காலங்காலமாக அவர் கூறி வருகின்ற பெரியார், அண்ணா கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கு என்றைக்கும் தமிழ்மக்களுக்கும் இந்தப் பயணத்தில் உறுதுணையாக அமைய வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பகவத் கீதை புனித நூலா!

கேள்வி: பகவத் கீதையை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப்போவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளது குறித்து?

பதில்: அரசியல் சட்டத்தின்மீது பிரதமர் மோடி, வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்பட பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு நேர் எதிரான செய்கை இந்த பகவத் கீதையை தேசிய நூலாக ஆக்குவோம் என்று கூறியிருப்பது. பகவத் கீதை என்பது ஜாதியை, பெண்ணடிமையை, பெண்களைக் கொச்சைப் படுத்துகின்ற பல்வேறு ஒவ்வாத கருத்துகளைக் கூறுகின்ற ஒரு நூலாகும். இதை நீண்ட காலத்துக்கு முன்னால் கீதையின் மறுபக்கம் என்கிற தலைப்பில் ஆதாரபூர்வமாக ஒரு நூலாக, ஆய்வு நூலாக, ஆராய்ச்சி நூலாக இதை நான் தெளிவு படுத்தி இருக்கிறேன். இந்த நிலையில் திருக்குறள் போன்றமதங்களுக்கு அப்பாற்பட்ட  அனைவருக்கும் அறநெறியைக் கூறக்கூடிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறக் கூடிய வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்டோம் என்று பெருமைப்படத்தக்க ஒரு திருக்குறள் போன்ற நூலை வைக்க வேண்டும் என்று இங்குள்ள தலைவர்கள் பலரும் கலைஞர் முதல் அனைத்துக்கட்சித் தலைவர்கள் பலரும் கூறுகின்ற காலத்தில், திட்டமிட்டே இந்துத்துவாவைப் பரப்ப வேண்டும் என்ற அஜெண்டாவின் இன்னொரு நிகழ்ச்சியாக இதை அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை அவர் தனிப்பட்ட நிலையில் கூறியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மத்திய அரசாங்கத்தை நடத்துகிறது என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. இப்படிச் செய்தால் இந்தியாவை மதரீதியில் அவர்கள் துண்டு போடுகிறார்கள் என்று பொருள். மதச் சார்பின்மை என்ற கொள்கையை  குழிதோண்டிப் புதைக் கிறார்கள் என்று பொருள். எனவே, வன்மையான கண்டனத்துக்குரியது. இதை நான் சேலத்திலேயே 2 நாள்களுக்கு முன்னால் பேசும்போது உடனடியாகச் சொல்லியிருக்கிறேன்.

சமஸ்கிருதம் கட்டாயமாம்

 கேள்வி : கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் சமஸ் கிருதம் கட்டாயப்படுத்தும்போது தமிழ் வெளியே துரத்தப்படுகிறதே?

பதில் : ஆர்.எஸ்.எஸ்சினுடைய கொள்கைகளிலே முதல் கொள்கை இந்தியா முழுவதும் சமஸ்கிருதமயமாக் கப்பட வேண்டும் என்பதுதான். எனவே, பிள்ளைகளுக்குக் கட்டாயமாக சமஸ்கிருதத்தைப்படிக்க வேண்டும் என்று அவர்கள் ஆக்குகிறார்கள். இதற்கு எதிர்ப்பு என்பது பல கட்சிகளிடமிருந்து உடனடியாக வந்துவிட்டது. மோடி வந்தால், அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றால் இந்தியாவைத் தலைகீழாக மாற்றிவிடுவார் என்பது போன்று தேர்தல் நேரத்திலே அப்பாவி இளைஞர்கள் இணையதளத்தைப் பார்த்து ஏமாந்து, வளர்ச்சி என்ற முகமூடியைக் காட்டி வந்தார்கள். இப்போது வளர்ச்சி யாருக்கு? எப்படிப்பட்ட வளர்ச்சி? ஆர்.எஸ்.எஸ்சுக்கு வளர்ச்சியா?அகில இந்தியாவினுடைய வளர்ச்சியா? என்பது இப்போது புரிந்து விட்டது.மோடியினுடைய முகமூடி கிழிகிறது. ஆர்.எஸ்.எஸ். இந்தியாவை ஆளுகிறது என்பதற்கு இது அடையாளம். எவ்வளவு வேகமாக அவர்கள் செய் கிறார்களோ, அவ்வளவு வேகமாக அதனுடைய விளை வுகளும் இருக்கும்.

கேள்வி: ராஜபக்சே திருப்பதி வருகை...?

பதில்: ராஜபக்சேவை அவருடைய நாட்டில் அவர் தேர்தலில் நிற்பதற்கு அங்கேயே எதிர்ப்பு இருக்கிற நிலையில், வேறொரு நிகழ்ச்சியிலே சந்திக்கிறபோது, அவருக்கு வெற்றி வாய்ப்பு வரவேண்டும் என்று நம்முடைய பிரதமர் மோடி விரும்புவது என்பது இவர்கள் இருவருடையஎண்ணங்களும், அணுகுமுறைகளும் எப்படி இருக்கின்றன என்பதை அதுவே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே, அவர் திருப்பதிக்கு வருவதோடு அவருக்கு சிவப்புக்கம்பளம் கொடுத்து ஏற்கெனவே அவரைப் பதவி ஏற்புக்கு அழைத்ததைப்போல, குடியரசு நாளுக்கும் தலைமை விருந்தினராக அழைக்காமல் இருந்திருக்கிறார். அதுவரையிலும் மகிழ்ச்சி. பரவாயில்லை அதற்கு ஒபாமா கிடைத்திருக்கிறார்.

கேள்வி: கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு அப்பீல் சென்றுள்ளார்களே?

பதில்: நீதிமன்றத்தில் வழக்கு இருப்ப தாலே எந்தக்கருத்தையும் சொல்வ தற்கில்லை.
நிழல் முதல் அமைச்சரா?

கேள்வி: நிழல் முதல் அமைச்சர் என்று ஓ.பன்னீர் செல்வத்தைக் கூறு கிறார்களே, தமிழக அரசுடைய நிலை என்ன? சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் சரியாக உள்ளதாக கூறியுள்ளாரே?

பதில்: பரவாயில்லை. அவர் முதலமைச்சர் என்று நினைத்து சொல்லி இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

கேள்வி: அரசு எந்திரமே முடக் கப்பட்டிருப்பதாக ஒரு புகார் உள்ளது. அவர் சொன்னால்தான் நடக் கும், அவர் படம் கணினி உள்பட பல இடங்களிலும் உள்ளது. இதுகுறித்து கலைஞரும் வலியுறுத்தி போராட்டம் நடக்கும் என்றும் கூறியிருந்தார். இதற்கு தாங்கள் என்ன கருத்து கூறுகிறீர்கள்?

பதில்: ஜனநாயகத்தில் ஒரு முதல்வர் போய் இன்னொரு முதல்வர் வரும்போது இயல்பாகவே இருக்கைகள் மாறும். படங்கள் மாறும். ஆட்சிகள் மாறியிருக் கிற காரணத்தால். ஆனால், இங்கே காட்சிகள் அதேபோல இருக்கின்றன. ஆட்சிகள் மாறிவிட்டன என்று சொல்லப் படுகின்றன என்று சொல்லுவது உலக ஜனநாயகத்தில் விசித்திரமாக நம் முடைய நாடு இருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

கேள்வி: இன்றைக்கு இங்கே (குன்னூர்) என்ன நிகழ்ச்சி?

பதில்: பெரியார் 1000 என்று சொல்லி பெரியாருடைய வாழ்க்கை வரலாறு இவைகளைப்பற்றி ஒரு புத்தகம். மாணவ உள்ளங்களிலே சமூக நீதி, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெரியாருடைய தொண்டு இவைகளைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக பெரியார் 1000 வினா விடை என்கிற அந்தப் புத்தகத்தை இதுவரையிலே 1 இலட்சம் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் விரும்பி தேர்வு எழுதி பரிசு பெற்றிருக்கிறார்கள். நாடுபூராவும் 1 இலட்சம் மாணவர்கள் அதிலே வெற்றி பெற்றிருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் பல மாவட்டங் களில் இருக்கிறார்கள். அதிலே இந்த நீலகிரி மாவட்டத்திலே இங்கே நம் முடைய மாவட்ட செயலாளர் முபாரக் போன்றவர்கள், நம்முடைய தோழர்கள் பலரும் உதவி செய்து, அவரவர்கள் அவரவர்களுக்கு வேண்டிய பரிசுகள் மற்றவைகள்கொடுத்து உதவ முன் வந்திருக்கிறார்கள்.எனவே, இந்த பரி சளிப்பு விழாவுக்காக மாணவர்கள், பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள். இந்த நீலகிரி மாவட்டத்திலே இந்த அளவுக்கு சிறப்பாக மாணவர்கள் வந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. இது மேலும் வளர வேண்டும். காரணம் பெரியார் அனை வருக்கும் உரியார்.

மது விலக்கு!

சேலம் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மிக முக்கியமான ஒரு தீர்மானமாக பூரண மதுவிலக்கு இந்தியா முழுவதும் மத்திய அரசாலும், மாநில அரசாலும்கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி இருக் கிறோம். இதைத் தீவிரமான பிரச்சாரம், சட்ட நடவடிக்கைகள் இவற்றின்மூலமாக உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், தற்போதைய இளைய சமுதாயம் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்கூட இந்த குடிப்பழக்கத்துக்கு ஆளாகி பெண்கள், குடும்பங்களிலே மிகப்பெரிய அவதியை உருவாக்கக்கூடிய அளவுக்கு, அனுபவிக்கக்கூடிய அளவுக்கு கொடு மைகள் பரவலாக ஓங்கிக் கொண்டி ருக்கின்றன. எனவே, உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இந்த மதுவை ஒழித்து, வேறுவகையில் வருமானங்களை உருவாக்குவதில் திட்டமிட வேண்டும்.

கேள்வி: சட்டசபையில் கலைஞருக்கு போதிய வசதி, இருக்கை அமைக்க படாமல் இருந்ததுகுறித்து? ஆனால், ஏற்கெனவே சபாநாயகர் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தாரே...உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் 2 நாள்களுக்கு முன் னாலே ஏற்கெனவே அறிக்கை கொடுத் திருக்கிறேன். கலைஞரை அழைத்தவர் அவருக்கு வேண்டிய இருக்கையை ஏற்பாடு செய்யவில்லையானால், அவர் அழைப்பு உண்மையானதுதானா என் பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.  இதுவே ஒரு நல்ல சந்தர்ப்பம்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Read more: http://www.viduthalai.in/headline/92584-2014-12-09-10-49-04.html#ixzz3LNZwEgcp

Friday, December 5, 2014

உலகம் இருளில் மூழ்குமா?




அமெரிக்க வானியல் ஆய்வுத்துறையான நாசா கூறியதாக அவ்வப்போது கட்டுக்கதைகளை உலகெங்கிலும் உள்ள சில மதவாதிகள் பரப்பிவிடுவதுண்டு. அதுவும் நாசாவின் இணையதளத்தில் இருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உலகை நம்ப வைப்பது தற்போது ஓர் ஏமாற்றுக் கலையாகப் போய்விட்டது.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதோ ராமர் பாலம் நாசாவே உறுதிசெய்த படம் என்று கூறி இந்து மத அமைப்புகள் பரபரப்பை உண்டாக்கின. இதற்கு நாசாவே மறுப்புத் தெரிவித்தும் இன்றும் ஒரு கூட்டம் இதை நம்புகிறது.

சிதம்பரம் கோவிலுக்கு நேர் எதிரே வானவெளியில் இருந்து படம் எடுத்தால் அது வெண்மையாகத் தெரியும் என்பதும் நாசா பெயரில் வந்த கட்டுக்கதை. திருநள்ளாறுக்கு நேர் எதிராக வான்வெளியில் கடக்கும் எல்லா செயற்கைக் கோள்களும் சில வினாடிகள் செயலிழந்துவிடுமாம். இவை போன்ற மூடநம்பிக்கைகள் நாசாவின் பெயரால் பரப்பப்படுவதால் நாசா அவ்வப்போது மறுப்பு வெளியிட்டு வந்துள்ளது. இப்போது மேலும் ஒரு புரளி
"2014 டிசம்பர் மாதம் உலகம் இருளில் மூழ்கப் போகிறதாம்?

கிறித்தவ மதத்தின் சில பிரிவினர் இதோ தேவ மைந்தனின் இரண்டாம் வருகை என்று அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தற்போது தங்களின் வியாபாரத்திற்கு நாசாவையும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். 'உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும். அப்போது இறைவனுக்கு எதிரானவர்கள் அழிக்கப்-படுவார்கள்' என்பது கிறித்தவ மதத்தில் ஒரு பிரிவினரது நம்பிக்கை ஆகும். அவர்கள் தற்போது புதிய கட்டுக்கதையை விட்டு மக்களைக் குழப்பி இருக்கிறார்கள்.

அதற்கேற்ப, வரும் டிசம்பர் 2014 இல் உலகம் ஆறு நாட்கள் இருளில் மூழ்க இருப்பதாகவும், சூரியனில் ஏற்படும் காந்தப்புயலே இதற்குக் காரணம் என நாசா கூறிவிட்டது என்ற அறிவியல் கதையை விட்டுக் குழப்பியுள்ளார்கள்.

எப்போதும் போல் இது போன்ற மடமைத்தனமான செய்திகள் மேலும் பரவிவிடாமல் இருக்க நாசா முன்-னெச்சரிக்கை-யாக மறுப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் மாதம் 6 நாள்கள் உலகம் இருளில் மூழ்கி இருக்கும் என்ற கட்டுக்-கதைகள் நாசாவின் பெயரால் பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மையல்ல. அறிவுள்ள அனைவருக்கும் தெரியும், உலகம் பாதி நாள் இருளிலும் பாதி. நாள் பகலிலும் உள்ளது.

இருளை மனித இனம் விளக்குகளின் வெளிச்சத்தில் வென்றுவிட்டது. தற்போது சிலரால் பரப்பப்படும் கட்டுக்கதைகளின்படி மின்சாரம் தடைபட்டால்தான் இருளில் மூழ்க வாய்ப்புள்ளது. சூரியப்புயல் மட்டு-மல்ல, எந்த ஒரு இயற்கைக் காரணத்தாலும் மனிதனால் செயற்கையாகத் தயாரிக்கப்படும் மின்சாரத்தைத் தடைசெய்ய முடியாது. பருவநிலை மாற்றங்களான மழை, வெள்ளம், புயல் போன்ற நேரங்களில் மின்சாரம் தடைப்படுவது அந்த அந்தப்பகுதியில் மாத்திரமே நிகழும். அதுவும் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். ஆகவே உலகம் இனி வரும் காலத்தில் மேலும் அதீத அறிவியல் வளர்ச்சி பெற்று முன்னேறுமே தவிர இப்படி பொய்யான கதைகள் போன்று இருளில் மூழ்காது.  மேலும், அந்தப் பொய்யான இணைய-தளத்தில் சிலர் தொலைக்காட்சியில் உரையாடுவது போன்ற நிகழ்ச்சி, அதன் பின்புலத்தில் நாசாவின் அடையாளம் எல்லாம் பொய்யாகத் தயாரிக்கப்பட்டவை.

   சூரியப்புயல் என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புவியின் மேற்பரப்புவரை வந்து செல்கிறது. இதை, புவியின் மேலடுக்கில் உள்ள வளிமண்டலம் தடுத்து மீண்டும் வானவெளிக்கே அனுப்பிவிடும். இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று நாசா வெளியிட்டுள்ள மறுப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மூடநம்பிக்கையைப் பரப்ப நினைக்கும் மதவாதிகளும், இதைக் கடவுள் வந்து சொன்னார் என்று சொல்வதில்லை. உலகம் இருளில் மூழ்கும் என்று கடவுள் சொன்னதாகச் செய்தி பரப்பினால், கக்கத்தில் கைவைத்து கேலிச் சிரிப்பே பரிசாகக் கிடைக்குமென்பதால் அறிவியல் மய்யமான நாசாவைப் பயன்படுத்துகிறார்கள் நாசக்கார மதவாதிகள்.  ஆனால் பொய்கள் பரவும் வேகத்தில் நாசாவின் உண்மை பரவுவ-தில்லை. ஊடகங்களும் பொய்க்குத் தரும் முக்கியத்துவத்தை உண்மைக்குத் தருவதில்லை.
- சரவணா ராஜேந்திரன்

Friday, November 28, 2014

மகாபாரதக் காலத்தில் மத்திய அமைச்சர்கள்!

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி 21ஆம் நூற்றாண் டுக்கானது அல்ல! அது வேத காலத்துக்குப் பொருத்த மான கட்சிதான் - ஆட்சிதான்.

பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திரமோடி சிவபெருமானால் கழுத்து வெட்டப்பட்ட விநாயகருக்கு யானைத் தலையை வெட்டிப் பொருத்தியது - அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்திருக்கிறது என்றும், கர்ணன் குந்தியின் கருப்பையில் தரிக்காமல் காது வழியாகக்  பிறந்தான் என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த இதிகாசம் எழுதப்பட்ட காலத்தில் மரபணு அறிவியல் பற்றி அறியப்பட்டுள்ளது என்று ஒரு மருத்துவமனை தொடக்க விழாவில் ஒரு பிரதமர் கூறுகிறார் என்றால், இந்தப் பரிதாபத்தை என்னவென்று சொல்லுவது!

பிரதமரின் இந்தக் கூற்றைக் கேட்டு தொடக்கப் பள்ளி மாணவன்கூட கைகொட்டி கெக்கலிப்பான். மோடி தனிப்பட்ட முறையில் இந்து மதத்தின்மீது தீரா வெறி கொண்டவராக இருக்கலாம்.

பிரதமர் என்கிற மிகப் பெரிய பொறுப்பில் இருக்கக் கூடிய நிலையில் மூடத்தனங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறலாமா? பிரதமரின் மீதுள்ள மரியாதை வேறொரு மூடத்தனமான சுவாசத்தின் பக்கம் தள்ள இடம் கொடுத்து விடக் கூடாது அல்லவா?

15 கோடி கி.மீ., தூரத்தில் சூரியன் இருக்கும்போதே அதன் வெப்பத்தால் மண்ணில் மனிதன் பாதிக்கப் படுகிறான். அப்படி இருக்கும்போது சூரியனோடு சேர்ந்து ஒரு பெண் பிள்ளை பெற்றாள் என்று நம்புவது, சொல்லுவது - அடி மட்டமான மூடத்தனம் அல்லவா?

பிரதமர் இப்படி என்றால் மத்திய மனிதவளத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய ஸ்மிருதிராணி, பிரதமரைத் தோற்கடிக்கும் வகையில் மூடத்தனத்தில் முதல் பரிசைத் தட்டிச் செல்லப் பார்க்கிறார்.

ஜோதிடரிடம் கையை நீட்டிக் கொண்டு அலை கிறார். குடியரசுத் தலைவராக ஆவதற்குக்கூட அம்மை யாருக்கு யோகம் இருக்கிறதாம். இப்பொழுது அவர்மீது சனியனின் பார்வை உள்ளதாம். இதை மாற்றுவதற்கு வீட்டிலேயே யாகம் நடத்தியுள்ளார். இப்பொழுது குடியிருக்கும் அரசு வீடு இராசியில் லாததாம்; அதனால் தான் பல சர்ச்சைகளில் இவர் சிக்கிக் கொள்வதால் வேறு ஒரு வீட்டிற்குச் செல்ல இருக்கிறாராம். இவர்கள் எல்லாம் இந்திய அரசமைப்புச் சட்டத் திற்கு சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தின் 51a(h) என்ற பிரிவு என்ன கூறுகிறது? மக்களிடையே விஞ்ஞான மனப் பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் நிலையில், பிரதமரும், அமைச்சர்களும் விஞ்ஞானத்துக்கு மாறான அஞ்ஞான இருட்டில் உழலுபவர்களாக இருக்கலாமா?

அதுவும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் (கல்வித்துறை) இப்படியொரு மூடநம்பிக்கைவாதியாக இருந்தால், பாடத் திட்டங்கள் எல்லாம் எந்தத் திசையில் அமையும் என்பது முக்கியமான கேள்வியாகும்.

முன்பு பிஜேபி ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி பல்கலைக் கழகங்களில் வேத கணிதம் என்றும், கருமாதி மந்திரம் என்றும் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார் என்பதும் இந்த நேரத்தில் நினைவூட்டத் தக்கதாகும்.

வரலாற்றுத் துறைக்கு தலைவராக  ஒய்.எஸ். ராவ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் மகாபாரத கால ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். அவர் இதுவரை எழுதிய உருப்படியான வரலாற்று நூல் எதுவும் இல்லை என்று, புகழ் பெற்ற ரொமிலா தாப்பர் போன்ற  வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சமூகம், பொருளாதாரம், அரசியல் அனைத்துத் துறைகளிலும் பிற்போக்குத்தனத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் பிஜேபி ஆட்சி இந்தப் போக்கில் தொடர்ந்தால் நாடு 21ஆம் நூற்றாண்டில் பயணிப்ப தற்குப் பதிலாக மகாபாரத காலத்திற்குத் தான் செல்ல நேரிடும்.

மக்கள் மத்தியில் இந்த நிலையை பிரச்சாரத்தின் மூலம் விழிப்பை ஏற்படுத்தித்தான் இவர்களை வழிக்குக் கொண்டு வர வேண்டும்.

திராவிடர் கழகம் இந்தப் பகுத்தறிவுப் பணியை முன்பைவிட அதிகமாகவே செய்யும். இடதுசாரிகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் இந்தத் திசையில் பணி ஆற்றுவதில் அதிகக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய கால கட்டமிது.

தேவே கவுடா பிரதமராக இருந்தபோது நாமக்கல் சோதிடரைப் பார்க்க ஒவ்வொரு மாதமும் வருவார்; கருநாடக மாநில முதல் அமைச்சராக இருந்த எடியூரப்பா சோதிடர் பேச்சைக் கேட்டு நிர்வாணமாகப் படுத்துக் கிடந்தார் - ஒரு கோயிலில் படுக்கையாகப் போடப்பட்டு இருந்த கல்லில் போய் முட்டிக் கொண் டார். அதனால் ஏற்பட்ட பலன் என்ன? விளக்கெண் ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைக்க வில்லையே!

மோடிகளும், சீதை வேடம் போட்ட ஸ்மிருதி இராணிகளும் சிந்திக்க மாட்டார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். முன்னவர்களுக்கு ஏற்பட்ட கெதிதான் இவர்களுக்கும் என்பது மட்டும் உறுதியான உண்மையாகும்.

Read: http://viduthalai.in/e-paper/91918.html#ixzz3KKvMvoTz

Thursday, November 20, 2014

மார்க் எடுக்காத குழந்தைகள் மக்குகளா?

படிப்பில் ஆர்வம் குறைந்த பள்ளிக் குழந்தைகளுக்கான சிகிச்சைகளும் தீர்வுகளும்

- டாக்டர் ம.அமலி விக்டோரியா மஸ்கரன்ஹஸ் எம்.டி (மனநலம்)


ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் உட்கார்ந்து, அவர்களின் வீட்டுப்பாடங்களை முடிப்பதற்கு உதவி செய்வது பொதுவான ஒரு காட்சிதான். பெற்றோரின் எதிர்பார்ப்பு-களுக்கேற்ப பிள்ளைகள் தங்களின் வீட்டுப்-பாடங்களைச் செய்து முடித்தால் அந்த மாலை நேரம் அமைதியானதாகவும் இனிமையான-தாகவும் அமையும். இல்லையென்றால், கீழ்க்காணும் வார்த்தைகளில் ஏதாவது ஒன்றையாவது நாம் கேட்க நேரிடும்.

இதைக்கூட புரிஞ்சிக்க மாட்டியா?, திரும்பத் திரும்ப ஒரே பாடத்தை எத்தனை தடவை சொல்லிக்கொடுக்கிறது?, நீ கவனிக்கிறியா, தூங்கிக்கிட்டே கனவு காணுறியா?, மனப்பாடம் செஞ்சி எழுது. காப்பியடிக்காதே?, கணக்குன்னா ஏன் இப்படிப் பயந்து சாகுறே?

-இப்படிப்பட்ட வார்த்தைகளில் ஒரு சிலவேனும் நம் காதுகளில் விழும். பெற்றோரின் எதிர்பார்ப்புக்கேற்ப பிள்ளைகள் வீட்டுப்-பாடத்தைச் செய்யாமல் இருப்பதற்கு சோம்-பேறித்தனமும் ஆர்வமின்மையும் காரணமாக இருக்கலாம். (அவர்களுக்கு ஆர்வம் தரக்கூடிய ஒரு நிகழ்ச்சி கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் அந்த நேரம் ஓடிக்கொண்டிருக்கலாம்). அதே நேரத்தில், சில குழந்தைகளிடம் காணப்படும் குறிப்பிடத்தக்க குறைபாடுகளே வீட்டுப்பாடம் செய்ய முடியாமல் போவதற்கான ஆணிவேர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம். இந்தக் குறைபாடுகள் பள்ளியிலும் குழந்தைகளின் செயல்பாடுகளில் தலை-காட்டுவதால், இயல்பான புத்திசாலித்-தனத்துடன் இருக்கும் பிள்ளைகளும் சரி, கூடுதல் புத்திக்கூர்மையுடன் உள்ள பிள்ளைகளும் சரி, குறைவான மதிப்பெண்கள் எடுப்பதற்குக் காரணமாக அமைகிறது.

இயல்பான புத்திசாலித்தனத்துடனான பிள்ளைகளும் புத்திக்கூர்மையுடன் உள்ள பிள்ளைகளும் தேர்வில் மதிப்பெண்களைக் குறைவாகப் பெறுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்கள் மட்டுமே குழந்தைகளின் அறிவை அளவிடும் அளவுகோலாக நீண்டகாலமாக இருந்து வருவதால், துரதிர்ஷ்டவசமாக இத்தகைய குழந்தைகள், பள்ளிகளில் மக்குப் பிள்ளைகளாக முத்திரை குத்தப்படுகிறார்கள். உண்மையிலேயே இக்குழந்தைகளில் பலர் நல்ல  புத்திக்-கூர்மையுடன் மட்டுமின்றி ஒழுக்கம், அர்ப்-பணிப்பு, கடின உழைப்பு கொண்டவர்களாக இருந்தும் அவர்களால் பள்ளிக்கல்வியைச் சரியாக முடிக்க முடியாமல் பாதியிலேயே பள்ளியைவிட்டு நிற்க வேண்டிய சூழலுக்-குள்ளாகிறார்கள். இந்த இடைநிற்றலுக்குக் காரணம், அவர்களுக்குரிய பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு காணப்படாததும், அது குறித்த அவர்களின் பெற்றோரின் குறைவான விழிப்புணர்வுமேயாகும். எனினும், இது இப்போது உருவான பிரச்சினை அல்ல. இக்காலத்தில் நம்மால் இப்பிரச்சினைகள் குறித்து ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு பெருமளவில் சரி செய்யமுடியும். அதன் மூலமாக குழந்தைகளை இத்தகைய சூழல்களிலிருந்து மீட்டு, படிப்பில் அவர்களுக்குள்ள குறை-பாடுகளைச் சரிசெய்ய முடியும்.

இயல்பான அறிவாற்றல் உள்ள குழந்தைகள் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதற்கான காரணங்கள்

குழந்தைகளில் இயல்பான அறிவாற்றலும் கூடுதல் அறிவாற்றலும் உள்ளவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து, மக்குப் பிள்ளைகள் எனப் பள்ளிகளில் முத்திரை குத்தப்படுவதற்கு பின்வரும் நிலைப்பாடுகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களோ இருக்கும்.

உடல்ரீதியான காரணங்கள், தாமதமான வளர்ச்சி, மொழி _ -பேச்சு -_- உடல் செயல்-பாட்டுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள், கல்வித் திறனில் குறிப்பிடத்தக்க தாமதம், கவனச்சிதறல், உணர்ச்சிவயப்படுதல், நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளிட்டவை அத்தகைய காரணங்களாகும்.

இதுகுறித்த விவரத்திற்குள் நாம் செல்வதற்கு முன், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மனிதர்களைப் பொறுத்தவரை, இயல்பான என்ற வார்த்தை, குறிப்பிட்ட மதிப்பைக் குறிப்பிடுவது அல்ல. குறிப்பிட்ட வரையறையைக் குறிக்கிறது. உதாரணத்திற்கு, இயல்பான உயரம் என்று குறிப்பிட்ட அளவு எதுவும் கிடையாது. ஆனால் இத்தனை அடியிலிருந்து இத்தனை அடி வரை இருந்தால் இயல்பான உயரம் என வரையறை செய்துள்ளோம். அதுபோலவே உணவுக்கு முன்பாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுக்கும் இயல்பான வரையறை ஒன்று இருக்கிறது. உதாரணமாக, 80 - 120 mg/dl எனக் கொள்கிறோம். அதுபோல மனது மற்றும் உடலுக்கான இயல்பான வளர்சசி என ஒரு வரையறை உண்டு.

குறைந்த கல்வித்திறனுடன் இருப்பதற்கான உடல்ரீதியான காரணங்கள்

பள்ளியில் குறைந்த திறனை வெளிப்படுத்தும் பிள்ளைகளுக்கு மூன்று வகையில் உடல்சார்ந்த பிரச்சினைகள் இருக்கலாம். பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மூளைத்திறன் குறைபாடு. ஆகியவையாகும். கரும்பலகையில் எழுதிப்போடுவதை நோட்டுப்-புத்தகத்தில் எழுத முடியாமலோ, அல்லது ஆசிரியர் சொல்வதைக் குறிப்பெடுக்க முடியாமலோ உள்ள குழந்தைகளைக் கவனக்-குறைவான குழந்தைகள் என்றோ, சோம்பேறிக் குழந்தைகள் என்றோ முடிவு கட்டிவிடாமல், அவர்களுக்கு பார்வைக் குறைபாடோ அல்லது செவித்திறன் குறைபாடோ நிச்சயமாக  இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். கண் மருத்துவரிடமோ, காது-_மூக்கு_-தொண்டை மருத்துவரிடமோ அவர்களைக் காட்டுவது, பள்ளியில் அந்தக் குழந்தைகளின் செயல்-பாடுகளை அதிகரிக்க உதவும்.

நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய மூளைத்திறன்  குறைபாடு என்பது மற்றொரு முக்கிய அம்சமாகும். நரம்பு பாதிப்பு என்ற சொல்லைக் குறிப்பிட்டதும் வலிப்பினால் கை, கால்களை உதறும் மனிதர்களின் பயங்கரமான உருவம் உங்கள் மனக்கண்ணில் தோன்றக்கூடும். பள்ளிக்குழந்தைகளைப் பொறுத்தவரை திடீரென அவர்களின் நினைவாற்றலில் ஒரு தேக்கம் ஏற்படும். அது பழைய நினைவுகளை இழக்கும் அளவிற்கு இருக்காது. சில விநாடிகளுக்கு மட்டுமேயான இந்த நரம்பு மண்டல பாதிப்பும் நினைவாற்றல் தடுமாற்றமும் மீண்டும் சரியாகிவிடும். எனினும், இத்தகையை குறைபாடுகள் கொண்ட குழந்தைகள் திடீர் திடீரென விழிப்பதும், கண்களைச் சிமிட்டுவதும், கைகளை உதறுவதுமாக இருக்கும்.

மரபணு சார்ந்த இத்தகைய குறைபாடுகள் 4 முதல் 8 வயது வரையிலோ, அல்லது பதின்-பருவ வயதின் தொடக்கத்திலோ 15 முதல் 20 விழுக்காடு குழந்தைகளுக்கு இருக்கிறது.

இத்தகைய நினைவாற்றல் தேக்கம் ஒரு-நாளைக்கு நூற்றுக்கணக்கான தடவை  அந்தக் குழந்தைகளுக்கு ஏற்பட்டாலும் அவை அதுபற்றி உணரக்கூடியவைகளாகவோ அது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடிய அளவிலோ இருக்காது. அந்தளவுக்கு இந்தப் பிரச்சினை மிக நுண்ணிய அளவில் இருப்பதால், இதுகுறித்த முன் அனுபவம் ஏதுமற்ற பெற்றோர்களாலும் இதைக் கண்டுபிடிப்பது கடினம். இந்தக் குறைபாட்டை சரியாக உணர்ந்து, உரிய முறையில் சிகிச்சை  அளித்தால், அத்தகைய குழந்தைகள் ஒரு சில வாரங்களில் தங்கள் கல்வித்திறனில் மேம்பாடு அடையும்.

தாமதமான  வளர்ச்சி

ஒரே  நாளில் விதைக்கப்பட்ட எல்லா விதைகளும் எப்படி ஒரே நாளில் சீராக முளைத்து-விடுவதில்லையோ அதுபோலவே எல்லாக் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் வளர்ச்சியும் ஒரே சீராக இருப்பதில்லை. சிலருடைய வளர்ச்சி மெதுவாகவே இருக்கும்.

மொழி - பேச்சு - உடல்திறன் மேம்பாட்டு சிக்கல்கள்

படிப்பது, எழுதுவது, ஒரு கோடு வரைவது எல்லாமே குழந்தைகளுக்குச் சிக்கலான செயல்பாடுகள்தான். இதற்கு நன்கு வளர்ச்சி-பெற்ற மூளை, நரம்பு, தசை, மூட்டு ஆகியவை தேவை.

I என்ற ஆங்கில எழுத்தை எழுதுவதற்கு ஒரு டஜன் தசைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவற்றை மூளை கட்டுப்படுத்தும்.

G என்ற ஆங்கில எழுத்தை எழுதுவது கூடுதல் சிக்கலானது. வலது கையில் உள்ள 40 தசைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சில குழந்தைகளுக்கு எலும்புகள், மூட்டுகள், தசைகள், சவ்வுகள் ஆகியவை விரைவாக வளர்ச்சியடைந்துவிடும். சில குழந்தைகளுக்கு இவற்றில் ஒரு சில மெதுவாக வளர்ச்சியடையும். அதனால் அவற்றின் செயல்பாட்டின் மூலமாக செய்ய வேண்டிய பணிகளில் அத்தகைய குழந்தைகள் சிரமப்படும். எனினும் அவை சீராக வளர்ந்தபிறகு, மற்ற குழந்தைகளைப் போல இந்தக் குழந்தைகளும் செயல்படும். இது குறித்து கவனம் செலுத்தி, குழந்தைகளின் வளர்ச்சி நிலை குறித்த உண்மையை அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
வளர்ப்போம்...

அண்மையில் மறைந்த டாக்டர் அமலி விக்டோரியா அவர்கள், குழந்தைகளின் படிப்பார்வம் குறித்தும், அவற்றை மேம்படுத்துவது குறித்தும் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்

Monday, November 17, 2014

குதிக்கிறார்கள் குருமூர்த்திகள்!

மின்சாரம்
பார்ப்பனர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பம், இது ஒரு பொற்காலம் - மனுதர்மச் சிண்டை அவிழ்த்து விட்டு ஆகாயத்தில் பறக்கச் செய்யலாம், பூணூலைக் கூடக் கொஞ்சம் சட்டைக்கு வெளியில் தொங்க விட்டுப் பார்க்கலாம் என்ற ஆணவம் பீறிட்டுக் கிளம்பி யுள்ளது போல் தெரிகிறது; அவர்களின் நடவடிக்கைகளும், பேச்சுகளும், எழுத்துகளும் அடாவடித்தனமாகி விட்டன. திமிர் முறுக்கேறி - நல்ல பாம்பு பாட்டுக்காரனைத் தேடும்  என்பது போல நடந்து கொள்கின்றனர். கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளை என்று பொதுவாகக் கூறப்படுபவரும் ஆர்.எஸ்.எஸின் ஆலோசகருமான திருவாளர் எஸ். குருமூர்த்தி எழுதிய தினமணி கட்டுரை (8.11.2014) இதனை அப்பட்டமாக அம்மணமாகத் தெரி விக்கிறது.

தமிழக அரசியலில் பெரிய மாறு தலைக் கொண்டு வந்தது - 1960களில் அரசியல் கட்சியாக ஹிந்து ஆன்மிக விரோத, தேசிய விரோத, திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

திராவிட இயக்கம் எல்லா மதங் களையும் எதிர்க்கக் கூடிய ஒட்டு மொத்த நாத்திக இயக்கம் அல்ல. அது ஹிந்து ஆத்திகத்தை மட்டும் குறி வைத்ததே தவிர, மற்ற மதங்களை எதிர்க்காதது மட்டுமல்லாமல் அவற் றைப் போற்றி அவற்றுடன் உறவாடியும் வந்தது என்று எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி.
திராவிட இயக்கம் மதத்தை மறுத்தது உண்மைதான். இந்துக் கடவுள்களைத் தாக்குவதும் உண்மைதான். இராமா யணத்தையும், மனு தர்மத்தையும் கொளுத்தியதும் உண்மையே! தேவைப் பட்டால் நாளைக்கும் அதனைச் செய் யும்! அதில் ஒன்றும் சந்தேகம் வேண் டாம். (அண்ணல் அம்பேத்கர்கூட அதைச் செய்தார் - அவர் என்ன திராவிட இயக்கமா?)
ஆனால், ஏன் அதனைச் செய்கிறோம்? அறிவார்ந்த முறையில் என் றைக்காவது குருமூர்த்தி கூட்டம் சிந்தித்ததுண்டா?

இந்த இந்து மதத்திலே தான் பிராமணன் பிர்மா நெற்றியிலிருந்து பிறக்கிறான் - சூத்திரன் பிர்மாவின் பாதங்களிலிருந்து பிறக்கிறான் - அப்படிப்பட்ட சூத்திரன் யார் தெ ரியுமா? விபச்சாரி மகன்! இது தானப்பா உங்கள் மனுதர்மம்?  (அத்தியாயம் 8 -சுலோகம்  415) மறுக்க முடியுமா? இதனைக் கொளுத்தா விட்டால் நாங்களும் மனிதர்கள்தான் என்று மார் தட்டிக் கொள்ள முடியுமா?
விபச்சாரி மகன் என்று ஒத்துக் கொள்ளாத ஒவ்வொருவனும் இதனைச் செய்துதானே தீர வேண்டும்.

எவ்வளவுக் கொழுப்பு மண்டைக்கு மேல் வழிகிறது என்றால், மனு தர்மத் திற்கு வக்காலத்துப் போட்டு சோ ராமசாமியின் துக்ளக்கில் இன்றைக்கும் கூட எழுதுவார்கள்?

அந்த மனு தர்மத்தை 1991 டிசம்பரில் பூனாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அலங்கரித்து  எடுத்துச் செல்லவில்லையா? (Economical and Political Weekly - 6.3.1992)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற திருக்குறள் எங்கே? பிறப் பிலேயே பேதம் பேசும் மனுதர்மம் எங்கே?

திருக்குறளும் மனுதர்மமும் ஒன்றே என்று கூறும் சங்கராச்சாரியாருக்கு எவ்வளவு ஆரியத் திமிர் இருக்க வேண்டும்?

சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்த வர்கள் என்று கூறும் கீதையின் தமி ழாக்கம்தான் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் (தினத்தந்தி 15.4.2004) என்று அவாள் உச்சி மோந்து தோளில் தூக்கி வைத்துக் கொஞ்சும் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியை திராவிட இயக் கத்தவர்கள் மட்டுமல்ல; அதற்கு அப்பாற்பட்டவர்களும் நார் நாராகக் கிழிக்க  தான் செய்வார்கள்.

இந்து மதத்தைப் பற்றி மட்டுமே தான் பேசுகிறார்கள் என்று வாயிலும் வயிற் றிலும் அடித்துக் கொள்கிறார்களே -

அந்த இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்டவரோ - ஏன், உயர் ஜாதி பார்ப்பனர் அல்லாதாரோ - சங்கர மடத் தில் சங்கராச்சாரியார் ஆக முடியுமா?
இந்து மதத்தைச் சேர்ந்த பார்ப்பனர் அல்லாத ஒருவன் இந்து மதக்கோயிலில் அர்ச்சகராக முடியுமா? அதற்கான சட்டத்தைக் கொண்டு வந்து அர்ச்சகப் பயிற்சியும் அளிக்கப்பட்டாலும், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று முடக்குபவர்கள் யார்? இந்தக் குருமூர்த்திக் கும்பல் தானே! இதன் பின்னணியில் சங்கராச்சாரியார் இருந்தாரே - இருக்கிறாரே - சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்தாரே!

சூத்திரன் அர்ச்சனை செய்தால் சாமி தீட்டாகி விடும் - தோஷம் படும் என்று இந்த 2014லும் கூறும் கூட்டத்திற்கு எவ்வளவு அசட்டுத் தைரியம் இருந் தால் திராவிடர் இயக்கத்தவர் இந்து மதத்தை மட்டும்தானே விமர்சிக் கின்றனர் என்று கூப்பாடு போடு வார்கள்?


மற்ற மதங்களை விமர்சிப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை பிரச்சாரமாக செய்து, இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் மூக்கைக் கொஞ்சம் சொறிந்து விட்டுப் பார்க்கிறார்கள்.

அதாவது உண்மையா? பெரியார் சிலைகளின்கீழ் கல்வெட்டாக செதுக்கி வைத்திருக்கிறோமே - அது தெரியாதா?

கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் - பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்று பொறித்து வைத்துள் ளோமே - அது என்ன இந்து மதக் கடவுள்களுக்கு மட்டும்தானா?

நான் ஏன் கிறிஸ்துவனல்ல? (பெட் ரண்டு ரசல்) ஜீன் மெஸ்லியர் மரண சாசனம் (3 பாகங்கள்) இங்கர்சால் தீட்டிய கடவுள் போன்ற நூல்களை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளதே - அதனை வசதியாக மறைப்பானேன்?

அதே நேரத்தில் சிறுபான்மை மக்களான முசுலிம்களுக்கும், கிறித்தவர் களுக்கும் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு தேவை என்று திராவிட இயக்கம் கூறுவது சமூகநீதி அடிப்படையில்தான்! கடவுள் மறுப்பையும் சமூக நீதியையும் ஒன் றோடு ஒன்று போட்டுக் குழப்ப முயலக் கூடாது.

1960களில் ஹிந்து ஆன்மிக விரோத திராவிட முன்னேற்றக் கழகம் என்று வருணிக்கிறாரே - திருவாளர் குருமூர்த்தி அய்யர்!

அந்த திமுகவைத் தானே 1967இல் கனம் ராஜாஜி விழுந்து விழுந்து ஆதரித்தார்? பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று வைணவப் பெரு மாளாகிய கனம் ராஜாஜி பிரச்சாரப் பீரங்கியாய் முழங்கினாரே - அதற்கு என்ன பதில்?

அதே ஆச்சாரியார் 1971 சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. எதிர்ப்பு அணி அமைத்து, காமராசரோடு கூட்டணி வைத்து தேர்தலில் குதித்தாரே! ராமனை செருப்பாலடித்த திமுகவுக்கா ஒட்டு என்று பிரச்சாரம் செய்தாரே ஆச்சாரியார்!  பிரச்சாரம் செய்தனவே துக்ளக்குகளும், தினமணிகளும், பார்ப்பனப் பஞ்சக் கச்சங்களும்; முடிவு என்னாயிற்று?

திராவிடர் கழகம் ராமனைச் செருப் பால் அடிப்பதற்கு முன்பு திமுகவுக்கு சட்டப் பேரவையில் இடம் 138, செருப் பாலடித்தபிறகு கிடைத்த இடங்கள் 183.
அப்பொழுது கனம் ராஜாஜி கல்கியில் (4.4.1971) இந்த நாடு ஆஸ்திகர் வாழத் தகுதி இழந்து விட்டது என்று ஒப்புக் கொள்ளவில்லையா?

நாஸ்திகம் - ஆஸ்திகம் பற்றி யெல்லாம் எழுதிக் கிழிக்கும் கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளைக்கு ஒரே ஒரு கேள்வி.

இந்து மதத்தில் நாத்திகன் என்பான் யார்? ஆத்திகன் என்பான் யார்? வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான். (மனுதர்மம் அத்தியாயம் - 2 சுலோகம் 11).

இதையேதான் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதிவாளும் திருவாய் மலர்ந் தருளியுள்ளார்.

நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீஸ்வரவாதம் என்றுதானே இப்பொழுது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே ஆஸ்திகர்களாக இருக்க முடியும்
அப்படிப்பட்ட பல பேர் இருந் திருக்கிறார்கள். இது என்ன வேடிக் கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது எனறுதான் அர்த்தம்



வைதிக வழக்கை ஆட்சேபிப்பது தான் நாஸ்திகம், நாஸ்திகம் என்பதே ஞான சம்பந்தரின் கொள்கையாகவும், இருந்திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாம லிருப்பதால்கூட  அல்ல! (தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதி - பக்கம் 407-408).
இவற்றையெல்லாம் தெரிந்து கொள் ளாமல் படித்தறியாமல் தத்துப்பித்து என்று அம்பிகள் உளறலாமா?

பெரிய படிப்பு - ஆடிட்டர் உத்தி யோகம் - பெரிய  இடத்து சகவாசம்  எல் லாம் இருந்தென்ன? புத்தி மட்டும் பூணூலுக்குள் சிக்கிக் கொண்டால் இப்படித்தான் ஏறுமாறாக எழுதச் சொல்லும்!

1971 தேர்தலின்போது  தவத்திரு குன்றக்குடி அடிகளார் அழகாகச் சொன் னாரே!
இன்று ஆஸ்திகம் என்பது உயர் சாதியினரின் நலம். இன்று நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம் (19.2.1971) என்று சொன்னதையும்- இந்த இடத்தில் நினைவூட்டுவது சாலப் பொருத்தமானது.

ஆன்மிகம்பற்றி அடேயப்பா தாண்டிக் குதிக்கிறாரே திருவாளர் குருமூர்த்தி!  இவர்களின் ஆன்மிக யோக்கியதைக்குக் காஞ்சி சங்கராச் சாரியார் ஒருவர் போதாதா? கொலைக் குற்றத்தில் வேலூர் சிறையில் கம்பி எண்ணியவர்தானே!

பெண்கள் விஷயத்தில் அவர் எப்படி? அனுராதா ரமணன் என்பவர் அக்ரகாரத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அல்லவா? கண்ணீரும் கம்பலையுமாக தொலைக்காட்சியில் புலம்பித் தீர்க்கவில்லையா?

என்னவெல்லாம் சொன்னார் எழுத்தாளரான அந்த அக்ரகாரத்துப் பெண்மணி? பத்திரிகை ஒன்று மடத்தின் சார்பில் ஆரம்பிப்பதற்காக ஜெயேந்திரர் தன்னை மடத்துக்கு அழைத்ததாகவும், அப்படி நான் சென்ற பொழுது என் மார்பைப் பிடித்தார் சங்கராச்சாரியார் என்று சொன்னாரே! ...சே.. இப்படியும் ஒரு ஜென்மம்! இவாள்தான் அவாள் பாஷையில் ஜெகத் குரு - இதுதான் அவாள் போற்றும் ஆன்மிகத்தின் லட்சணம்!

மைதிலி என்னும் பெண்ணிடம் உடலுறவு கொண்டதை நேரில் பார்த்துத் திடுக்கிட்டேன் என்றும் - அம்மையார் அனுராதா சொன்னதற்குமேல் என்ன வேண்டும்?  ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு திருவரங்கத்திலிருந்து உஷா என்ற பெண் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியோடு சல்லாப மொழியில் பேசிய சங்கதிகளை யெல்லாம் அவிழ்த்துவிட வேண்டுமா?

காஞ்சிபுரம் மச்சேந்திர நாதன் கோயில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் செய்த லீலைகள் என்ன சாதாரணமானதா? சாமி கும்பிட வந்த பெண்களை மயக்கி, கோயில் கரு வறையையே கருவை உண்டாக்கும் அறையாக மாற்றவில்லையா? அந்தக் காட்சியைக் கைப்பேசியில் படம் பிடித்து அதையே திருப்பித் திருப்பிக் காட்டி அச்சுறுத்தி (Black Mail) மீண்டும் பக்தைகளை தம் காமப் பசிக்கு இரையாக்கவில்லையா?

அந்த மச்சேந்திரநாதன் கடவுள் என்னதான் பண்ணினான்? இந்த லட்சணத்தில் உள்ள ஆன்மிகத் துக்குத்தான் விட்டேனா பார் என்று வக்காலத்து வாங்கி எகிறிக் குதிக்கிறது குருமூர்த்தி கும்பல்.

--------------
என்னே ஜெயலலிதாமீதான பாசம்?

இந்த நேரத்தில் அதிகாரத்தின் உச்சியிலிருக்கும் அ.தி.மு.க.வுக்கு அந்தக் கட்சியின் தன்னிகரில்லாத் தலைவி ஜெயலலிதா வழக்கில் சிக்கியிருப்பதால் அதிமுக மட்டுமல்லாமல் தமிழக அரசியலும் ஒரு முடுக்கில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து அ.தி.மு.க. விடுபட வேண்டுமானால் கர்நாடக மாநிலத்தின் தீர்ப்பு அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைய வேண்டும். அவருக்கெதிரான வழக்கில் சாரம் இல்லை அதனால் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமையலாம் என்றும் சில நடுநிலை ஏடு நிபுணர்கள் கருதுகிறார்களாம் எழுதுகிறார் ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி ஜெயலலிதா என்றவுடன் கொண்டை ஊசி போல வளைகிறார்கள் பாரத்தீர்களா!

ஊழல் வழக்கில் சிக்கித் தண்டனை பெற்றவர் தங்கள் இனத்தவர்களாக இருந்தால்... சில நடுநிலை நிபுணர்கள் முக்காட்டில் ஒளிந்து கொள்வார்கள். திராவிட இயக்கம் ஊழல் கட்சி என்று ஒரு பக்கத்தில் குற்றஞ்சாட்டி விட்டு, ஜெயலலிதா என்று வரும்போது மட்டும் வேறு குரலில் பேசும் வேதியக்குலத்தின் பூணூல் புத்தியைக் கவனிக்க வேண்டும். ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருக்கும் கட்சியில் திராவிட இயக்கத்தின் அடையாளம் இல்லையா? பேச நா இரண்டுடையாய் என்று ஆரியத்தை பற்றி அண்ணா சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
--------------
கோயில் கொள்ளை யாரால்?



தமிழக மக்கள் கோவில்களையும் தெய் வத்தையும் போற்றுபவர்கள்; இன்று ஹிந்து கோயில்கள் அரசாங்கத்தின் சொத்தாக மாறி, அரசியல்வாதிகள் கையில் சிலைகளிலிருந்து நகைகள், நிலங்கள் சிக்கிக் கொண்டு இருக் கின்றன என்று ரொம்பத்தான் விசனப்படுகிறார் ஆடிட்டர்.

ஒரு கோயிலைக்கூட சொந்த பணத்தில், சொந்த உழைப்பில் எந்தப் பார்ப்பானும் கட்டியதில்லை. கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்த கதையாக தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில்களில்  பார்ப் பனர்கள் புகுந்து கொள்ளை அடித்தனர். அதனைத் தடுக்க நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதுதான் இந்த அறநிலையத் துறை. ஆனால் இதனைத் தலைகீழாக குருமூர்த்தி அய்யர் புரட்டிப் பேசுவதைக் கவனிக்க வேண்டும்.

ரொம்ப தூரம் போக வேண்டாம். சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்கள் கையில் இருந்த நேரத்தில் நீதி மன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை என்ன தெரியுமா?

எடுத்துக்காட்டாக 2007இல் சிதம்பரம் கோயிலுக்கு வந்த வருமானம் ரூ.37,199. செலவு ரூ.37,000. மீதி ரூ.199 என்று பேட்டா செருப்பு விலைபோல அறிக்கை கொடுத்தார்கள்.

அதே சிதம்பரம் கோயில் அரசு கைக்கு வந்தபோது நிலைமை என்ன?

அந்த இரண்டு ஆண்டுகளில் நடராஜன் கோயிலுக்குக் கிடைத்த வருமானம் ரூ.3 கோடியே 15 லட்சத்து 24 ஆயிரத்து 537 ரூபாய்; தங்கம் 332  கிராம் வெள்ளி 1458 கிராம் இத்தியாதி இத்தியாதி.

இப்பொழுது சொல்லுங்கள் குருமூர்த்தியாரே, கோயில் பார்ப்பான் கையில் இருந்தபோது கொள்ளை அடிக்கப் பட்டதா? அரசு கையில் இருந்தபோது கொள்ளை அடிக்கப் பட்டதா!

கோயில் சிலைகள் திருட்டில் பெரும்பாலும் கோயில் அர்ச்சகர்கள் சம்பந்தப்பட்ட சங்கதியும் தெரியுமா!

--------------
நாத்திகம் அழிந்து ஆத்திகம் வளர்வதாகக் கூறும் குருமூர்த்திகளே! இதற்குப் பதில் என்ன?

அரசியலில் எப்படி தேச விரோத திராவிடம் மறைந்ததோ, அது போலவே சமுதாயத்தில் ஹிந்து விரோத நாத்திகம் மறைந்தது. எந்தெந்த மூடநம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள் என்று தி.க., தி.மு.க. சாடியதோ - அது  தீமிதியாக இருக்கலாம்; அல்லது அலகு குத்துவதாக இருக்கலாம் - அவை எல்லாம் முன்னை விடப் பல மடங்கு வரவேற்புடன், சமுதாயத்தில் பரவி, அவற்றில் தி.மு.க. உள்பட திராவிட கட்சியினரே பங்கேற்கிற அளவுக்குப் பிரசித்தமாயின. 50 ஆண்டுகளுக்குமுன் எந்தளவுக்குத் தெய்வ நம்பிக்கை தமிழ்நாட்டில் இருந்ததோ, அதைவிட பல மடங்கு, இப்பொழுது வளர்ந்து வந்து இருக்கின்றது. மக்களை இப்படி மாற்றியது அரசியலோ, அரசியல்வாதிகளோ அல்ல. மக்கள் தாங்களாகவே நாத்திகத்தை வெறுக்க ஆரம்பித்தனர். ஆத்திகம் தழைத்தோங்க ஆரம்பித்தது. இதனால்தான் திராவிட அரசியல் சரிந்து திராவிட இயக்கங்கள் கலகலத்துப் போயின என்று நீட்டி முழங்கி இருக்கிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்.

இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? நாட்டில் நோய்கள் ஒழிய வில்லை என்பதால் மருத்துவத்துறை தோல்வி அடைந்து விட்டது என்று பொருளா? மருத்துவக் கல்லூரிகளை இழுத்து மூடிவிடலாம் என்று யாராவது சொல்லு வார்களா?

மூடநம்பிக்கை வெற்றி பெற்று விட்டது; பகுத்தறிவு தோற்று விட்டது என்று ஒரு பேர் வழி சந்தோஷப்படுவார் என்றால் அவரை எந்தப் பட்டியலில் வைப்பது?  மிருகத்தையும் மனிதனையும் பிரிப்பது அந்த  பகுத்தறிவுதானே? அந்தப் பகுத்தறிவைப் பழிப்பவரை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சரி.. அவர் கூறுகிற அந்தவிவாதத்துக்கே வருவோம்; அவாளின் லோகக் குருவான சங்கராச்சாரியாரையே சாட்சிக் கூண்டில் ஏற்றுவோம்.

மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிகப் பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோவில்களுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாக (திணீலீவீஷீஸீ) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது

- இப்படி சொல்லியிருப்பவர் அவாளின் லோகக் குரு சாட்சாத் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தான். அதுவும் எங்கே சொன்னார் தெரியுமா? காஞ்சி புரத்திலேயே சொன்னார்.  எந்த நிகழ்ச்சியில் சொன்னார்? 1976 மே மாதம் நடை பெற்ற அகில இந்திய ஹிந்து மாநாட்டில்தான் முழங்கினார்.

இன்னும்கூட தாராளமாக அவர் சொன்னதுண்டு.

பத்துப் பதினைந்து வருடங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி மக்களிடையே நிறைய தென்படுகிறது; ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதிகளும் நிறைய இருக்கின்றன. இவை நிறைய வர வரப் பக்தியும் மேன்மேலும் வளருகிறது. இவ்விதப் பக்தி நம்மிடையே வளர்ந்தும்கூட துக்கங் களும் வியாதிகளும் அதிகமாக வளருவதற்குக் காரணங்கள் என்ன? ஓரளவுக்கு நமக்குக் கடவுள் பக்தி இருந்தபோதும் பேராசையும், ஒழுக்கமின்மையும் சுயநலமும் அதிகமாக நம்முடைய வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டு விட்டன இதுவும் காஞ்சியிலே கும்பாபிஷேக நிகழ்ச்சியிலே திருவாய் மலர்ந்தருளியதுதான் (ஆதாரம்: தினமணி 7.9.1976).
இப்படிப்பட்ட பக்தி வளர்ந்ததற்குப் பெருமைப்படுகிறார் ஆடிட்டர் அய்யர் குருமூர்த்தி.. பலே! பலே!!
கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ...?
பதில்: என் அனுபவத்துல சொல்றேன்.. பக்தி அதிகமா யிட்டிருக்கு.. கோயிலுக்குப் போகிறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு?

பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டியலில் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்திச்சு இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூணு கொடியைத் தாண்டிடுது. ... பக்தி அதிகமாக இருக்கு... ஆனால் ஒழுக்கம்தான் குறைந்துப் போயிடுச்சு!

கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கமும் இருக்கிறதென்று கொள்ளலாமே?

பதில்: ஊ... ஹூம்.. அப்படியில்லை.. பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை. ஆனந்த விகடனின் பேட்டியில் இந்தப் பதிலைச் சொன்னவர் யார் தெரியுமா? திருமுருக கிருபானந்தவாரியார் (ஆனந்தவிகடன் 22.12.1991).
தெய்வ நம்பிக்கை பல மடங்கு பெருகி விட்டதாக அரட்டை அடிக்கும் குருமூர்த்திகள் இதற்கெல்லாம் என்ன பதில் வைத்துள்ளனர்!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...