Thursday, July 25, 2013

மன்னிப்புக் கேட்கவேண்டும் பா.ஜ.க.! - கி.வீரமணி

  • நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடாது என்று சொன்ன நோபல் அறிஞர் அமர்த்தியாசென்னைப் பழி தூற்றுவதா?
  • பாரத ரத்னாவைப் பறிக்கவேண்டும்என்று பி.ஜே.பி. கூறுவதா? 
  • பி.ஜே.பி.யின் ஜனநாயகக் கோட்பாடு இதுதானா?
  • மன்னிப்புக் கேட்கவேண்டும் பா.ஜ.க.!

தமிழர் தலைவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை

மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரான நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வரக்கூடாது என்று கூறிய நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியாசென்னைக் கடுமையாக விமர்சித்தும், அவருக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா பட்டத்தைப் பறிக்கவேண்டும் என்றும் ஆவேசமாகக் கூறும் பா.ஜ.க. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:
குஜராத் மதக் கலவரத்திற்கும், பல வகையான சிறு பான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமிய மக்களைக் குறி வைத்தும் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கும் (Pogrom)ப் பின்னணியாக இருந்த ஆட்சி, பா.ஜ.க. மோடியின் ஆட்சியாகும்.
சர்வதேச அளவில் மோடியின் மோசடிகள்!
போலித்தனமான என்கவுண்டர்களைத் திட்டமிட்டு ஆணையிட்டு நிறைவேற்றியதுபற்றியெல்லாம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டுள்ளது; தலைமைக் காவல்துறை அதிகாரிகளே, குற்றம் சுமத்தும் அளவுக்குப் பல்வேறு தகவல்களும், இந்தக் கலவரங்கள்பற்றி பல்வேறு நடுநிலையாளர்களும் ஆதாரங்களைத் திரட்டி எழுதியுள்ள புத்தகங்களும் சர்வதேச அரங்கில் பரவி உள்ளன!
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆணை யைத் தலைமேல் ஏற்று, பா.ஜ.க. என்ற அதன் அரசியல் பிரிவு (சங்பரிவாரத்தில் உள்ள அரசியல் கட்சி இதுவே) மோடியைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முதற்கட்டமாக - முன்னுரைபோல் - பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராகப் போட்டு முன்னோட்டம் நடத்துகிறது!
பா.ஜ.க.வுக்கு உள்ளேயே மோடிக்கு எதிர்ப்பு!
ஆனால், இதற்கு பா.ஜ.க.விற்குள்ளேயே பலத்த எதிர்ப்பு இருக்கிறது; இங்குள்ள ஊடகங்கள் - பார்ப்பன மேல்ஜாதியினரின் கைப்பாவையானபடியால் மோடியைத் தூக்கி வைத்து விளம்பர சடகோபம், சாத்தி, சைவ ஓநாய் இது என்று காட்டிப் பிரச்சாரம் செய்கின்றனர்!
மோடியின் ராஜ்ய பரிபாலனம் ஏதோ மோட்ச சாம் ராஜ்யத்தையே (அவர்கள் நம்பும்) மக்களுக்குக் கொண்டு வருவது போன்று மோடி மஸ்தான் வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்!
குஜராத்தில் கல்வி வளர்ச்சி உண்டா?
நிர்வாகத்தில் கல்வி வளர்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி முதல் பலவற்றில், மற்ற மாநிலங்களைவிட மோடியின் குஜராத் ஓங்கி நிற்கவில்லை என்ற உண்மையை முழுப் பூசணிக்காயை கைச் சோற்றில் மறைத்ததுபோல மறைத்து மகிழ்கின்றனர் - இந்தக் காவிகளின் ஏவுகணை களான பிரச்சார இயந்திரங்கள்!
அத்வானி, ஜஸ்வந்த்சிங், ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் போன்ற பல பா.ஜ.க. முன்னணித் தலைவர்கள் மோடியைப் பிரதமராக்குதல் கூடாது என்று உள்ளேயே போர்க் கொடி உயர்த்தியது - உலகெலாம் அறிந்த செய்தியாகிவிட்டது!
பொருளாதார அறிஞரின் அபாய அறிவிப்பு!
இந்திய நாடு பெருமைப்படும் வகையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர், பேராசிரியர் அமர்த்தியா சென் அவர்கள், மோடி பிரதமராக வந்தால் நாடு அதை ஏற்காது என்று அண்மையில் ஒரு ஏட்டிற்குப் பேட்டி கொடுத்தார்!
இந்தியாவின் நடுநிலையாளர்கள், மதச்சார்பின்மை யில் நம்பிக்கை உள்ள பெருமக்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்களும் இதே கருத்தைத்தான் கொண் டுள்ளனர்!
குஜராத் கலவரங்கள்பற்றி குஷ்வந்த் சிங் போன்ற பலரும் இவர்கள் கை ஓங்கினால் இந்தியா என்பதே காணாமற்போய்விடும்; வெறும் யதேச்சாதிகார ஹிந்து நாடுதான் இருக்கும் என்று கவலை தெரிவித்து நூலே வெளியிட்டுள்ளனர்.
அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவைப் பறிக்கவேண்டுமாம்!
பிரபல பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் அவரது கருத்தை வெளியிட்டார்; அது அவரது பேச் சுரிமை; அடிப்படை உரிமை. அதைக் கண்டு, பா.ஜ.க.வினர் ஆவேசத்துடன் அவர்மீது பாய்ந்து, பிய்த்துப் பிராண்டு கின்றனர்!
அவருக்குக் கொடுத்த பாரத ரத்னா பட்டத்தையே பறித்துவிடவேண்டுமாம்! என்னே அற்பத்தனம்!
இவர்களது ஆட்சியில் முன்பு இதுபோன்ற பட்டங்களை பல கிரிமினல் பேர்வழிகளுக்குத் தந்து, நாடே சிரிப்பாய் சிரித்த கதை மறந்துவிட்டதுபோலும்! காந்தியார் படுகொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட சாவர்க்கார் படத்தையே நாடாளுமன்றத்தில் மாட்டி ஆண்டுதோறும் அதற்கு வீரவணக்கம் செலுத்திட ஏற்பாடு செய்த கூட்டமா தனக்கிருக்கும் கருத்துரிமையைப் பயன்படுத்திய பொருளாதார மேதையைக் கண்டிப்பது?
அமர்த்தியாசென் என்ன குற்றம் செய்தார்? மோடி பிரதமராக வரக்கூடாது என்று அவரது கருத்தைக் கூறியதற்காக அவரது பாரத ரத்னா பட்டத்தைப் பறிக்கவேண்டும் என்கிறார்!
பா.ஜ.க.வின் எம்.பி. - மாநிலங்களவை உறுப்பினர் சந்தன் மித்ரா என்ற பேர் வழி; இவர் பயோனீர் என்ற பத்திரிகையின் முதலாளி, பிரதான ஆசிரியராம்! மகாவெட்கக்கேடு!! என்னே இவர்களின் பேச்சுரிமை, கருத்துரிமை லட்சணம்!
இவர்கள் ஜனநாயகவாதிகளா?
நாலாவது தூண் என்ற பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இப்படிக் கூறுவது பச்சை ஏதேச்சாதிகார கருத்து அல்லாமல் வேறு என்ன?
ஹிட்லர் மொழிதானே இது? அதுவும் அடுத்து வரவிருக்கும் (NDA) தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி யில் அந்தப் பாரத ரத்னாவைப் பறித்துவிடவேண்டுமாம்! (அடுத்து வருவது பகற்கனவு).
எத்தகைய தலைசிறந்த ஜனநாயகவாதிகள் இவர்கள்? இவர்களிடம் தேசியமும் இல்லை; ஜனநாயகமும், எந்தப் புடலங்காயும் இல்லை!
இதே கருத்தைக் கூறிய, கூறும் அத்வானிகளை, ஜஸ்வந்த்சிங்குகளை, யஷ்வந்த் சின்காக்களை என்ன செய்யப் போகிறது ஆர்.எஸ்.எஸ். அவதாரமாகிய பா.ஜ.க. தலைமை?
கட்காரியின் மிரட்டல்!
முன்பு கட்காரி என்ற பா.ஜ.க. தலைவர் கம்பெனிகளில் வருமான வரி ஏய்ப்பு ரெய்ட் நடந்து ஆவணங்களைக் கைப்பற்றி ஆராய்ந்த வருமான வரி அதிகாரிகளை, அந்த ஆர்.எஸ்.எஸ். கட்காரி (அய்யர்) நாங்கள் ஆட்சிக்கு அடுத்து வருவோம்; அப்போது பார்த்துக் கொள்ளுவோம் உங்களை! என்று உறுமவில்லையா?
நாடே கண்டித்த பிறகு மன்னிப்புக் கேட்கவில்லையா?
ஆட்சிக்கு வருமுன்னேயே இப்படிப்பட்ட மனப் பான்மை - பாசிசக் குரல் என்றால்; ஆட்சி இவர்களிடம் சென்றால், நாடே மறுபடியும் ஹிட்லரை மிஞ்சுவதாகத் தானே ஆகிவிடும்?
மன்னிப்புக் கேட்கவேண்டும் பா.ஜ.க.
அமர்த்தியா சென் அறிவு - பாரத ரத்னா பட்டத்தில் தொங்கவில்லை; அவரது மூளையில் உள்ளது; அதை எவராலும் பறிக்க முடியாது.  நோபல் பரிசு பெற்ற அறிஞர் பாரத ரத்னா அமர்த்தியா சென்னைக் கொச்சைப் படுத்தும்  பா.ஜ.க. மன்னிப்புக் கேட்கவேண்டும்!
கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்

சென்னை  
25.7.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

The Agnostic Question

- Lachlan Kent
Atheism is increasingly viewed in the media as an extreme position on the existence of God. Some have even gone so far as calling us atheists (whoever “we” are) religious fanatics. Not surprisingly, I differ on that account of atheism, as probably do you if you are one, and here’s why.
I am not just an atheist; I am also an agnostic. That might sound at first like the kind of garbled language used by religious adherents to justify their position on any number of contemporary issues (my current favourite being the Catholic Archbishop of Brisbane’s claim that his “sexuality” is expressed as “self giving”, another example of how the Catholic Church distorts normal sexuality); but I assure you it is a sound position if you take into account that there is a difference between the “facts” and the evidence”.
I, like everyone else on this pale-blue dot, am agnostic about the facts. God may exist. Jesus may be the Son of God, whatever that means. Mohammed may have received the last and final revelation. The Jews might have a Covenant with Yahweh. Durga might indeed have eight arms. None of these things are impossible in my world and I accept that I am agnostic about them because, to my mind, there is no evidence either way. I don’t know and neither do you, whether you’re religious or not.
On the other hand, it is on the evidence brought forward by religion that I am staunchly, sternly, stoically, and extremely atheist. I do not accept the gospels as either the literal or lateral word of God. I do not accept the contradictory and cobbled – together – after – the – fact testimony of people who claim to have seen Jesus reanimate and then ascend unto Heaven. I do not accept that Muhammad was channeling the Creator simply because he said so. I do not accept that Moses conversed with God despite what he may have believed at the time.
I have degree in psychology and instead accept the very real and disturbing possibility that all the so-called evidence for God can be more parsimoniously explained by, firstly, the psychopathology of individuals and then, secondly, the normal social psychology. If I were to act as judge or jury in the case for God, not only wouldn’t I use scriptural or even current testimony to inform my judgment, I also wouldn’t accept them as evidence in the first place!
However, being extreme on the evidence for God does not make me extreme on the facts as they stand. Creation exnihilo is as mysterious today as it was 2000 years ago and I cannot discount the possibility that intelligence or consciousness may have played or continue to play a role, for two reasons; firstly, scientists can’t explain consciousness and so don’t really know what it is; and secondly, scientists are still only guessing whether there was a time before the big bang or universes beyond. The good scientific evidence for a conscious-less creation remain inconclusive, and so I remain agnostic. “Not guilty, your honour!” And not because God didn’t do it but because there remains reasonable doubt.
Of course, that reasonable doubt is exploited by monotheism to the point of becoming “unreasonable undoubt”, i.e. faith, but atheists are in no position to deny that doubt exists, no matter how anti-atheist their leanings. Doubt is in fact one of the hallmarks of atheism, is it not?
And so it is on this moderate middle ground that atheists, I believe, can extend a warm, conciliatory hand to the professed agnostics by safely admitting that we’re all agnostic about the facts. God may have done it but, based on the evidence, we have to acquit him of creation at this stage of the trial.
And saying “not guilty” makes you an atheist whether you call yourself an agnostic, an atheist or (like me) both.
Courtesey : The Australian Atheist

Eradication of Castes : Congratulations to the Chief Ministers

30th March 2013
Thiru. Ashok Gehlot
Hon’ble Chief Minister
Government of Rajasthan, Jaipur
Respected Sir,
I am happy to know that the Government of Rajasthan under your steward leadership as Chief Minister has announced cash award of Rs. 5 lacs to the couples of inter-caste marriage, where either the  bride or bridegroom must be a Dalit. This is a revolutionary step by your Government towards eradication of caste and emancipation of the dalits.
I extend my heartiest Congratulations and Greetings to you for this bold and revolutionary announcement in a State considered from outside as orthodox State where once ‘Sati’ and ‘Child Marriage’ were conducted.
As you are aware, our great leader from Tamil Nadu, Periyar E.V.Ramasamy all through his life fought for the liberation of the deprived sections and eradication of caste system. It was Periyar’s vision to have a casteless society and he started the Self Respect Marriage devoid of rituals way back in 1930s and only in 1967 when our leader C.N.Annadurai affectionately called by us as “Anna” became the Chief Minister, he passed a legislation to legalize the Self Respect Marriages in Tamil Nadu.
The movement started by Periyar as a Self-Respect Movement is being taken forward by his disciples to empower the women and the downtrodden and inspired every successive Government in the State of Tamil Nadu to bring many revolutionary schemes for the oppressed people. I am sure that you will think and work in that direction also to implement Self Respect Marriage in Rajasthan that will change the face of the State from an orthodox to progressive state.
With best Wishes and Greetings,
Yours affectionately,
K. Veeramani
President, Dravidar Kazhagam

30th March 2013
Thiru. Nitish Kumar
Hon’ble Chief Minister
Government of Bihar, Patna
Respected Sir,
I am happy to know that the Government of Bihar under your steward leadership as Chief Minister, in the current budget, has increased the cash incentive from Rs. 25,000 to Rs. 50,000 to the couples of inter-caste marriage. This is a progressive announcement to encourage inter-caste marriages that will eventually lead to a casteless society.
Similarly, monthly pension of Rs. 300 for the widows, Child Career Balanced Fund of Rs. 2,000 to two girls in a family and Rs. 5,000 to the bride hailing from a poor family are all essential schemes required in a society where womenfolk is considered as a burden.
I extend my heartiest Congratulations and Greetings to you for these progressive announcements for kindly acceptance.
As you are aware our great leader from Tamil Nadu, Periyar E.V. Ramasamy all through his life fought for the liberation of the deprived sections and eradication of caste system. It was Periyar’s vision to have a casteless society and he started the Self-Respect Marriage devoid of rituals way back in 1930s and only in 1967 when our leader C. N. Annadurai affectionately called by us as “Anna” became the Chief Minister, he passed a legislation to legalise the Self Respect Marriages in Tamil Nadu.
The movement started by Periyar as a Self-respect movement is being taken forward by his disciples to empower the women and downtrodden and inspired every successive Government in the State of Tamil Nadu to bring many revolutionary schemes for the oppressed people.
I am sure that you will think and work in that direction also to implement Self Respect Marriage in Bihar that will change the face of the State as a progressive state and a really developed State.
With best Wishes and Greetings,
Yours affectionately,
K. Veeramani
President, Dravidar Kazhagam

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ? - காற்றுதான் சிலரை நீக்கி வீசுமோ?

தந்தை பெரியார் அவர்களைத் தரணிக்கு தந்த ஈரோடு பெரு நகரத்தில், இரண்டு அற்புத இன்றைய இருபால் இணையர்களை மருத்துவமனைக்கு சென்று கண்டு, மகிழ்ந்தேன் - சில ஆண்டுகளுக்கு முன் - அவரது பெரியார் பற்று - அதைவிட ஆழமான அவரது நன்றிப் பெருக்கு, நானிலமே போற்றிப் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று அல்லவா!
அதற்குரிய சான்றுதான் இந்தக் கடிதம்!
ஈரோடு - 18.07.2013 வியாழன் அன்று பிரபல எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் பி.டி.சக்திவேல்-மகப்பேறு மருத்துவர் சவுந்திரம் சக்திவேல் இணையரின் மகன் பிரதீப்குமார் அவர்களுக்கு இந்த ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

சமஸ்கிருதம் படித்தால்தான்  மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக் கதவை நீதிக்கட்சி ஆட்சி மருத்துவப் படிப்பிற்குத் திறந்தது. அதற்கும் தந்தை பெரியார்தான் காரணம், அதனைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக போராடி, இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததும் தந்தை பெரியார்தான்; இன்றுவரை தந்தைபெரியாரின் இயக்கமான திராவிடர் கழகம் சமூக நீதிக்காக பல்வேறு களங்களைக்கண்டு மாபெரும் வெற்றிகளைத் தமிழ்ச் சமுதாய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களின்  பணி அளப்பரியது.தந்தை பெரியார், விடுதலை, ஆசிரியர் கி.வீரமணி இவர்களது உழைப்பால் இடஒதுக்கீடு (கல்வி,வேலை வாய்ப்பு) தமிழ் நாட்டிலும்,மண்டல்கமிசன் மூலம் இந்தியா வெங்கும் சிறப்பான முறையில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இட ஒதுக்கீட்டு முறையில்தான் நானும், எனது இணையர் சவுந்திரம் அவர்களும் மருத்துவர்களாக படித்து பயன்பெற்றோம்,அதனால் நாங்களும் இச்சமூகத்திற்குப் பயன்படுகிறோம். அந்த வகையில் எங்களது மகன் பிரதீப் குமாருக்குக் கோவை அரசு மருத்துவக்கல்லூரி யில் 2013-இந்த ஆண்டு இடஒதுக்கீடு அடிப் படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத் துள்ளது. எனவே வாழையடி வாழையாக தமிழ்ச் சமூகம் உயர்வதற்கு உழைத்துவரும் விடுதலை" வளர்ச்சிக்கு  நன்றியுடன்  ரூபாய் 10000/- (பத்தாயிரம்) வங்கிவரைவோலையாக வழங்கி மகிழ்கிறோம். நன்றி.
நன்றியுடன் மருத்துவர் பி.டி.சக்திவேல்  எம்.பி.பி.எஸ். எம்.எஸ்.ஆர்த்தோ,  ஈரோடு.
அறிவு ஆசான் கல்வி வள்ளலாக இருந்து பரிந் துரைக் கடிதங்களை நூற்றுக்கணக்கில் ஆயிரக் கணக்கில் கடந்த பல ஆண்டுகளாகத் தந்து - அவர்கள் வாழ்ந்த காலத்தில் கல்வியாண்டு துவக்கப் பருவத்தில் எழுதி, எழுதிக் கொடுப்பார்கள் - எங்களைப் போன்ற உதவியாளர்களுக்கு, அத்தகவலை உரியவர்களை நேரில் பார்த்து அய்யாவின் விருப்பத்தை அப்படியே எடுத்துக்கூறி, அதன் காரணமாக மருத்துவத்தில், பொறியியலில், கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் இடம் பெற்று, பட்டதாரிகள் ஆனவர்கள் பல்லாயிரவர் இருந் திருப்பார்கள்; இருக்கிறார்கள் இன்றும்கூட!
பயன் பெற்றோர் பலரும் தவறாது தமிழன் என்றொரு இனமுண்டு.
தனியே அவர்க்கொரு குணமுண்டு என்ற நாமக்கல் கவிஞரின் கருத்துக்கு ஏற்ப, நன்றி கூற மறந்தவர்களும், தவறியவர்களுமே அநேகர்!
அது தமிழனின் தனிக்குணம் போலும்!
நன்றி விசுவாசம் காட்டுவதும் நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு  என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு.
இதில்அத்தி பூத்ததுபோல், தவறாது நன்றி சொன்னவர்கள், செய்பவர்களும் இல்லாமல் இல்லை! நன்றி மறந்த இந்தப் பரந்த பாலைவனத்தில், அத்தகையவர்கள் ஒயாசிஸ் - சோலைகள் போன்றவர்கள் ஆவார்கள்!
அதற்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டுதான் மேலே காட்டிய டாக்டர் இணையர்களின் எடுத்துக் காட்டான கடிதமும், நன்கொடையும்!
தந்தை பெரியார் தந்த பரிந்துரைகளால் பயன் பெற்ற - இடம் கிடைக்கப் பெற்ற தோழர், தோழி யர்கள் விடுதலை நாளேட்டிற்கு ஒரு சந்தா கட்டி னால் இன்று பல லட்சம் பிரதிகள் சர்க்குலேஷன் ஆகிக் கொண்டிருக்குமே!
என்ன செய்வது! நம் இனத்தின் கூறுபாடு இது! அதற்காக நாம் நமது தொண்டறத்தை, மனிதநேய அடிப்படையிலான கல்விக்கண் பெற வைத்தல், உத்தி யோக மண்டலக் கதவுத் திறக்க உழைத்தல் போன்ற பணிகளை நிறுத்திவிட முடியுமா?
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றுதான் சிலரை நீக்கி வீசுமோ?
நம் பணி என்றும் தொண்டறம் தானே!
நன்றி என்பது பயனடைந்தவர் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்க வேண்டிய ஒன்றல்ல; அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமே
- 1931இல் தந்தை பெரியார் அன்று குடிஅரசு ஏட்டில் எழுதிய வரிகள் இவை.
எனவேதான் இந்த நன்றி பாராத (Thankless Jobs) என்ற பயனுறு பணி செய்யும் பாதையான ஈரோட்டுப் பாதையில் என்றும் எப்போதும், எந் நிலையிலும் பயணிக்கிறோம்.
- கி.வீரமணி

Wednesday, July 24, 2013

அமர்த்தியா சென்னின் கருத்து பேரலையாய் வீசும்!

பிரபல பொருளாதார அறிஞரும், அத்துறையில் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் - பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடி குறித்துத் தெரிவித்துள்ள கருத்து - இந்திய அளவில் பெரிய இமாலய அலையாய் வீசப் போகிறது என்பதில் அய்யமில்லை.
அவர் ஒன்றும் அரசியல்வாதியல்ல; எந்த அரசியல் கட்சியோடும் தொடர்புடையவரும் அல்லர்.
பிரதமருக்கான வேட்பாளர் மதச் சார்பற்றவராக இருக்கவேண்டும்; மோடியைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்களின் நலனையும், பாதுகாப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாதவர் என்று மய்யப் படுத்தித்தான் அவரின் குற்றச்சாற்று அமைந் துள்ளது.
இதே குற்றச்சாற்றைத்தான் பிரபல சிந்தனை யாளர் இராமச்சந்திர குகா, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ போன்ற வர்கள் வைத்திருக்கின்றனர். ஏன், அன்னா ஹசாரே கூட இந்த வகையில் வாய்த் திறந்துவிட்டாரே!
இதே குற்றச்சாற்றைத்தான் - பி.ஜே.பி.யின் கூட்டணியில் அங்கம் வகித்த அய்க்கிய ஜனதா தளத்தின் - குறிப்பாக அக்கட்சியின் சார்பாக பிகாரில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிதிஷ் குமாரும் முன்வைத்துள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மிக முக்கியமான கொள்கைகளில் முற்றிலும் மாறுபட்ட வர் எப்படிப் பிரதமராக வர முடியும் என்ற கேள்வி மோடியின் கழுத்தை மிகவும் நெருக்கிப் பிடித்து அழுத்திக் கொண்டிருக்கிறது.
இதே காரணத்திற்காகத்தான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்ல விசா மறுக்கப்பட்டது.
இதே காரணத்தைச் சொல்லிதான் அன்றைய பிரதமரும் - சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருமான அடல்பிகாரி வாஜ்பேயியும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாட்டுக்குச் செல்வேன்? என்று புலம்பினார்.
இவ்வளவுக்குப் பிறகும், அரசியல் நாகரிகத் துக்காகக்கூட தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள மோடி தயாராகவில்லை.
சிறுபான்மை மக்களை - குறிப்பாக முஸ்லிம் களைக் குறிப்பிடும்பொழுதெல்லாம் தம் வன்ம உணர்வை வெளிப்படுத்திடத் தவறுவதில்லை. அம்மக்கள் சார்ந்த இடத்தில், பரிவர்த்தனைக்காகக் குல்லாயைக் கொடுத்தபோதுகூட ஒரு நாகரிகத் துக்காகக்கூட சற்று நேரம்கூட அதனை அணிந்து கொள்ளத் தயாராக இல்லையே!
முஸ்லிம்கள்பற்றிக் குறிப்பிடும்பொழுது அவருக் குக் கிடைத்த உதாரணம் நாய்க்குட்டிதான்; ஏன் நாயைக் குறிப்பிடுகிறார் தெரியுமா? முசுலிம்கள் பொதுவாக நாய்களை வளர்க்கமாட்டார்கள் - எனவே, அதைச் சொல்லி வம்பு வளர்க்கும் அற்பப் புத்தி.
காங்கிரசைக் குறிப்பிடும்பொழுது மதச்சார் பின்மை என்னும் பர்தாவுக்குள் தன்னை மறைப்பதாக, அந்தப் பர்தா என்னும் முசுலிம் பெண்கள் அணியும் உடையைப் பயன்படுத்துகிறார்.
மதச்சார்பின்மை என்னும் போர்வை அல்லது முகமூடி என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம்; அப்படிச் சொன்னால், மோடியின் இந்துத்துவா வெறி ஆசுவாசம் கொள்ளாதே!
அவர் முதலமைச்சராக இருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் ஒரே ஒரு முசுலிம்கூட வேட்பாளராக நிறுத்தப்படாததிலிருந்தே அந்த மனிதனின் கோர ரூபத்தை அடையாளம் காணலாமே!
சும்மாவா சொன்னார் - உச்சநீதிமன்ற நீதிபதி நீரோ மன்னன் என்று மோடியை?
120 கோடி மக்களைக் கொண்ட இந்தியா என்னும் துணைக் கண்டத்திற்குப் பிரதமராக வரக்கூடியவர் மதச் சார்பற்றவராக இருக்கவேண்டும் என்று இந் தியாவுக்குள் உள்ள மக்கள் மட்டுமல்லர்; இந்தியா வைத் தாண்டியுள்ள மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் கூடப் பெறத் தகுதியில்லாதவர் நரேந்திர மோடி என்பதால், தொடக்கத்தின் தேர்விலேயே இந்தியத் துணைக் கண்ட மக்களால் தள்ளுபடி செய்யப்படக் கூடிய வராகவே ஆகிவிட்டார்.
அதுவும், அமர்த்தியாசென் போன்றவர்கள் கூறிய பிறகு இந்தக் கருத்துப் பேருரு பெற்று - புதிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக்கொண்டு விடலாம்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...