Tuesday, December 4, 2012

ஈழத்தில் இன்னும் இராணுவ ஆட்சியா?


இலங்கையில் இன்னமும் இராணுவ ஆட்சிதான் நடைபெறுகிறது. மாறுபட்ட கருத்துக்கும் மதிப்பளிப்பது தான் ஜனநாயகத்தின் தத்துவம்; ஆனால் பாசிசமே ஆட்சி செய்கிறது. முள்ளி வாய்க்கால் படுகொலை களுக்குப் பின்பும், இலங்கையின் நவீன ஹிட்லர் ராஜபக்சேகளுக்கு இரத்தப் பசி தீரவில்லை.
அதன் கோரமுகம் பற்பல ரூபங்களில் இன்னமும் வெளிச்சம் போட்டுக் காட்ட வெட்கப்படுவதே இல்லை. தமிழர்கள் பெரிதும் வாழும் யாழ்ப்பாணம் பகுதியே சிங்கள இராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட பகுதியாகவே காட்சியளிக்கின்றது!
அது மட்டுமா? தமிழர்கள் இல்லத்து நிகழ்வுகள், அவர்களது நகர்வுகள் உட்பட எல்லாமே சிங்கள இராணுவத்தின் அனுமதி பெற்ற பிறகே நடந்தாக வேண்டும் என்ற இரும்புச் சட்டம் - அன்றாடம்!
கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று யாழ்ப் பாணத்தில் நடந்த மாவீரர்கள் நாளையொட்டிய நிகழ்வுக்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை மிருகத்தனமாக சிங்கள இராணுவம் தாக்கியுள்ளது.
நமது இளைய தமிழ் ரத்தங்கள், தேவையற்று தங்கள் இன இரத்தத்தை மீண்டும் யாழ் மண்ணில் தெளித்திருக்கிறது.
இது வன்மையான கண்டனத்திற்குரியது! இதற்குப் பெயர்தான் அரசியல் தீர்வா? இந்திய அரசும் உலக நாடுகளும் இத்தகைய அவலங்களைக் கண்டித்து, தடுத்து ஈழத் தமிழர் வாழ்வுரிமையைக் காக்க முன் வர வேண்டும்.
கி.வீர‌மணி  
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.12.2012


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

டிசம்பர் 2 சுயமரியாதை நாள்


டிசம்பர் 2 சுயமரியாதை நாள் - தமிழர் தலைவர் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா


தந்தை பெரியார் நினைவிடத்தில் மரக்கன்று நட்டார்
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்துறை அறிஞர்கள்
கழகப் பெரு மக்கள் அலை அலையாய் வந்து நேரில் வாழ்த்து!
பெரியார் (தொண்டர்கள்) நலப் பாதுகாப்பு அறக்கட்டளை நிதியும் குவிந்தது
இன்று 80ஆவது பிறந்த நாள் காணும் தமிழர் தலைவருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
சென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவான இன்று பல்துறைப் பெரு மக்களும் நேரில் வந்து வாழ்த்துகளை கூறினர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2012) சுயமரியாதை நாளாக திராவிடர் கழகத் தோழர்களால் தமிழகமெங் கும் சிறப்பாக கொண் டாடப்பட்டு வருகிறது.
பெரியார் திடலில் சிறப்பான வரவேற்பு
இன்று (2.12.2012) காலை 9 மணியளவில் பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் கி.வீரமணி - மோகனா ஆகியோரை தமிழகமெங்கும் இருந்து வந்த திரண்டிருந்த கழகத் தோழர் - தோழியர்களின் வாழ்த்து ஒலி முழக்கமிட்ட வாறு இரு பக்கங்களிலும் வரிசையாக நின்று வரவேற் றனர்.
தமிழர் தலைவருக்கு சிறப்பு
கழகத் தோழர் புடை சூழ திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து கூறி வரவேற்றார்.
பெரியார் நினைவிடத்தில் மரக்கன்று நட்டார்
இதையடுத்து தமிழர் தலைவர் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரி யார் - அன்னை மணியம்மை யார் நினைவிடங்கள் அருகே தமது 80ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சந்தன மரக் கன்றை நட்டார் அவரது துணைவியர் மோகனா வீரமணி அவர்களும் மற் றொரு மரக் கன்றையும் நட்டார். தமிழர் தலைவருக்கு கனிமொழி வாழ்த்து
மாநிலங்களவை உறுப் பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் இன்று காலை சென்னை பெரியார் திட லுக்கு வருகை தந்து தமிழர் தலைவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்தும், மலர் மாலை அணிவித்தும் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தார். இதையடுத்து கலைஞர் தொலைக்காட் சியின் தலைவர் கல்வியாளர் ரமேஷ்பிரபா தமிழர் தலை வருக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தார். வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் தமிழர் தலைவருக்கு பொன் னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்தை கூறினார்.
குருதிக் கொடை முகாம் தொடக்கம்
முன்னதாக இன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மருத்துவமனையில் தமிழர் தலைவர் பிறந்த நாளை யொட்டி ஏற்பாடு செய்யப் பட்டிருந்த குருதிக் கொடை முகாமை மலேசியா திராவிடர் கழக பொதுச் செயலாளர் கே.ஆர்.ஆர். அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தமிழர் தலைவருக்கு நேரில் வாழ்த்து
முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட் சகன், முன்னாள் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுப. சீதாராமன், தஞ்சை ராசகோபால், ஒப் பந்தக்காரர் ராதாகிருஷ்ணன், மருத்துவர் வி.பி.நாராயணன், மறைமலை இலக்குவனார், பொறியாளர் உஸ்மான், மருத்துவர் நரேந்திரன்,
பேராசிரியர் மா.நன்னன், கலைஞர் டி.வி. நிர்வாகி சரத், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் சேகர்பாபு, நடிகர் குமரிமுத்து, திரைப் பட இயக்குநர் செய்யார் ரவி, திருப்பத்தூர் கணேஷ்மல், மதுரை தொழிலதிபர் கனகாம் பரம், பட்டுக்கோட்டை குமாரவேல், சச்சி தானந்தம், இயக்குநர் அமிர்தம், வழக் குரைஞர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பராதி, பேராயர் எஸ்றா சற்குணம், செங்கை சிவம், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திருச்சி ஞானராஜ், பெரம்பலூர் முகுந்தன்.
திராவிடர் கழகப் பொருளாளர் வழக் கறிஞர் கோ.சாமிதுரை, கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர் ராஜகிரி கோ.தங்கராசு, கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை சந்திரசேகரன், டாக்டர் பிறைநுதல் செல்வி, வீ.அன்புராஜ் குடும்பத்தினர், தஞ்சை இரா. ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி, சட்டத்துறை செயலாளர் ச.இன்பலாதன், திராவிடர் தொழிலாளரணி மாநில செயலாளர் ஆ.நாகலிங்கம், திராவிட மகளிரணி மாநில செயலாளர் குடவாசல், கணபதி, மகளிரணி, மாநிலச் செயலாளர் தஞ்சை கலைச்செல்வி, மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை, மாநில இளைஞரணி செய லாளர் இல.திருப்பதி, மாநில மாணவரணி செயலாளர் இளந்திரையன், கழக தென் மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் மதுரை தே.எடிசன் ராசா, கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, திருமகள், பழநி, புள்ளையண்ணன், சாமி, திராவிடமணி, நாகர்கோவில் ப.சங்கரநாரா யணன், திருப்பத்தூர் கே.சி.எழிலரசன்.
கல்பாக்கம் வேம்பையன், வடசென்னை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.குப்புசாமி, எழும்பூர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, எழும்பூர் தேவநிதி, காங்கிரஸ் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன்,  கவிக்கோ வா.மு.சேதுராமன், வா.மு.சே. ஆண்டவன், ஈப்போ மாணிக்கம், மருத்துவர் ஞானசுந்தரம், ஆடிட்டர் ராமச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர்.
வரியியலில் நிபுணர் ராசரெத்தினம், பேராசிரியர் மங்கள முருகேசன், புதுவை மாநில கழகத் தோழர்கள், நீதியரசர் ஏ.கே. ராசன், வழக்கறிஞர் சுப்பாராவ், வழக்கறிஞர் தியாகராஜன், சட்டக்கதிர் சம்பத், தி.மு.க. அமைப்பு செயலாளர் பெ.வ.வீ கல்யாண சுந்தரம், தி.மு.க  துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி.
பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் ரெத்தினம், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி, முன்னாள் சட்டமன்ற செய லாளர் மா.செல்வராஜ், எழுத்தாளர் விஜயன் பாலா, ஒளிப்பட நிபுணர் முத்துக்குமார், செய்தியாளர்கள் ஆரோக்கியசாமி, பழ. அன்பரசு, தினமணி முருகேசன், ஆடிட்டர் கந்தசாமி, முன்னாள் துணை வேந்தர் பெ.ஜெகதீசன், பேராசிரியர் மீனா கந்தசாமி, மருத்துவர் சொக்கலிங்கம், முனைவர் நாகநாதன், முன்னாள் மேயர் சா.கணேசன்,  எழுத்தாளர் கயல் தினகரன்,  அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, மருத்துவர் சொக்கலிங்கம்,  முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன், மாம்பலம் சந்திரசேகரன், காரைக்குடி என்.ஆர்.சாமி குடும்பத்தினர், 100 ரூபாய் நோட்டு மாலை அணிவித்தனர்.
கடல் சார்பல்கலைக்கழக துணை வேந்தர் நாசே ராமச்சந்திரன், தஞ்சை திருச்சிற்றம் பலம், கவிஞர் காசி , முத்துமாணிக்கம், முனைவர் எஸ்.டி.ரத்தினசபாபதி, கவிவேந்தர் கா.வேழவேந்தன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜின்னா, கடலார் வேலாயுதம், மற்றும் திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள் செயலாளர்கள் பொதுக்குழு, தலைமை செயற்குழு உறுப் பினர், கழக தோழர் - தோழியர், பெரியார் கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள், விடு தலை பணிமனை பணியாளர்கள் அனை வரும் தமிழர்தலைவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் நல்.இராமச்சந்திரன், வழக் கறிஞர்கள் வீரசேகரன், ஆம்பூர் துரைசாமி, பெரியார் திடல் மேலாளர் பி.சீத்தாராமன், விடுதலை அச்சுப்பிரிவு மேலாளர் சரவணன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராஜன், விடுதலை ராதா, பெரியார் கல்வி குழும ஒருங்கிணைப்பாளர் பி.சுப்பிர மணியன், பேராசிரியர் பர்வீன், மருத்துவர் மீனாம்பாள், மருத்துவர் சாரதா, பெரியார் மருத்துவமனை மேலாளர் குணசேகரன், பெரியார் பகுத்தறிவு ஆய்வக நூலகர் கோவிந்தன், திராவிடன் நல நிதி பொது மேலாளர் அருள்செல்வன், மயிலை காளத்தி, சேதுராமன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் திருவள்ளுவன், செயலாளர் கி.இராமலிங்கம், புலவர் சங்கரலிங்கம்.
அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர்கள் டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் இலக்குவன் தமிழ், மலேசியா திராவிடர் கழக பொதுச் செயலாளர் கே.ஆர்.ஆர்.அன்பழகன், இராம. அன்பழகன், முனைவர் அதிரடி அன்பழகன், இரா.பெரியார் செல்வன், பூவை புலிகேசி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செ.தமிழ்சாக்ரடீஸ், மாணவரணி துணை செயலாளர் மு.சென்னியப்பன்.
மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, பொதுச் செயலாளர்கள் வீ.கும ரேசன், வடச்சேரி இளங்கோவன், பிரின்ஸ் என்னாரெசு பெரியார், சென்னை மண்டலத் தலைவர் தாம்பரம் ரத்தினசாமி, செயலாளர் வெ.ஞானசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் நீலாங்கரை ஆர்.டி.வீரபத் திரன், சைதை எம்பி பாலு, மயிலை சேது ராமன், மாநில இலக்கிய அணி செயலாளர் மஞ்சை வசந்தன், மற்றும் பொதுமக்கள் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Saturday, December 1, 2012

எந்த எதிர்பார்ப்புமின்றி நான் தொடரும் ஒரே பணி பெரியார் பணியே


உலகெங்கும் பெரியார் கொள்கையை எடுத்துச் செல்ல தோள் கொடுப்பீர்!
வீடு தொடங்கி நாடுவரை ஒத்துழைப்பு அளிக்கும் அனைவருக்கும் நன்றி! நன்றி!!

தமிழர் தலைவரின் பிறந்தநாள் செய்தி
உலகம் முழுவதும் தந்தை பெரியார் கொள்கையை எடுத்துச் செல்ல அனை வரும் தோள் கொடுப்பீர் என்று நன்றிப் பெருக்குடன் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
பிறந்த நாள் செய்தியாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாளை எனக்கு 80 ஆவது பிறந்த நாள். என்னைப் பொறுத்தவரையில் அது, அய்யாவின் - எனது அறிவு ஆசானின் அடிச்சுவட்டைப்பற்றிய 70 ஆண்டுகள் நிறைவு நாள்.
அறிவு ஆசானின் இயக்கத்தின் பொறுப்பாளனாக, அய்யா அவர்களால் (1960 முதல்) அமர்த்தப்பட்டு, மானம் பாராத தொண்டனாக ஆக பயிற்சிப் பட்டறையில் ஓர் பணி யாளனாக அனுபவம் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டவன்.
ஒரே திருப்பணி
இப்பணி - சமுதாய மாற்றத்திற்காக வேறு பலன் எதையும் எதிர்பாராது, காலம் நேரம் கருதாது, நன்றியை எதிர்நோக்காமல், பழி தூற்றப்படுதல், எதிர்நீச்சல் - இவற்றைப் பொருட்படுத்தாத கருமமே கண்ணான பெரும்பணி - அரும்பணி - ஒரே திருப்பணி மன நிறைவான பணி.
ஆயுள் நீட்டும் அருமருந்து
இப்பணிதான் என்னை சில நோய்கள் வராமல் தடுக்கவும், வந்த உடல்நோய்களிலிருந்தும் காப்பாற்றி, என்றும் சலிப்பின்றி, சமுதாயப் பணிக்கு உழைத்திடவும் தயார்படுத்தும் பட்டறை - பாசறைப் பணியாகி தாங்கிப் பிடித்து, ஆயுளை நீட்டும் அருமருந்தாகி வருகிறது!
எனது வாழ்விணையர் தொடங்கி, குருதிக் குடும்பத் தினர் அனைவரது ஒத்துழைப்பும் எனது கொள்கைக் குடும்பத்தினர், அன்புப் பொழியும் டாக்டர் நண்பர்கள்  ஆகியோரின் வற்றாத பாசமும், வறளாத உற்சாகமூட்டலும் இப்படி கடுமையாக உழைத்து, மகிழ்ச்சியை ஈட்டுவதற்குத் தோள் கொடுக்கும் தோழர்களாகி, தொண்டனுக்குத் தொண்டன் ஆகிய எனக்கு பேராதரவு அளித்து வருகின்றனர்!
என் விரல் பிடித்து கொள்கைப் பாடம் நடத்திய ஆசிரியர் ஆ. திராவிடமணி
என்னை இவ்வியக்க நுழைவு வாயிலுக்கு அழைத்து வந்து, விரல் பிடித்து கொள்கை அ எழுதச் சொல்லிக் கொடுத்த எனது ஆசிரியர் ஆ. திராவிடமணி ஆசானுக்கு இத்தருணத்தில் முதல் நன்றியைப் பணிந்து தெரிவிக் கின்றேன். (அவருக்கும் இன்றுதான் பிறந்த நாள் - 1914).
அவரது ஆரம்ப காலப் பாடங்கள் இன்னமும் என்னைச் செதுக்கிட உதவிய கருவிகள் ஆகும்.
எனது ஞானத் தந்தையின் கொள்கை வெளிச்சம்!
எல்லாவற்றிற்கும் மேலாக, எவருக்கும் எளிதில் கிடைக்காத பேரின்ப பெருவாழ்வான தொண்டு வாழ்க்கையை, கொள்கை நெறி பிறழாமல், சமரசம் அறியா சமர்க்கள வாழ்க்கையாக வாழச் செய்யும் உறுதியை என்னுள் விதைத்து, என்னை செய்த எனது ஞானத் தந்தையின் கொள்கை வெளிச்சம், மங்காத, மறையாத சூரிய ஒளியாகும்.
ஒரே பணி - ஒரே இலக்கு!
அய்யாவின் கொள்கைகளை, தத்துவங்களை அகிலத்திற்கும் கொண்டு செல்லும் அயராப் பணி எனது ஒரே பணி - ஒரே இலக்கு.
அதை நோக்கியே எங்கள் பயணம்.
அன்னை மணியம்மையார்
நம் அய்யாவை 95 ஆண்டுகாலம் வாழ வைத்து, அதற்குமேல் 5 ஆண்டுகாலம் அவர் தந்த அறிவியக்கத் தையும் பாதுகாத்து, பரப்பி வந்த சோதனைகளை யெல்லாம், நெருக்கடிகளையெல்லாம் சந்தித்து, இயக் கத்தை மீட்டெடுத்து, துரோகங்களைக் களையெடுத்து, தூய இயக்கமாகிய எங்கள் அன்னையாரின் உடல் நலிந்தாலும் - உள்ளம் ஒருபோதும் மனம் தளராது போர்ப்பறை கொட்டிய வீராங்கனையாக நின்று எம்மை மேலும் பக்குவப்படுத்திய தோடு அய்யாவைப் போலவே அவர் வைத்த நம் பிக்கையைக் காப்பாற்றவே உழைக்கும் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்திடும் நாளாகவே இந்நாளைக் கருதிகிறேன்.
என் உயிருக்கு வைக்கப்பட்ட குறிகள்!
எனது கொள்கைப் பயணத்தில் எனது வாழ்வை முடிக்க, கொள்கை எதிரி கள் மூன்று முறை முயன்று தோல்வியுற்றனர். திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள மம்சாபுரம் அருகிலும் (1982), வடசென்னை வண் ணாரப்பேட்டைப் பகுதி யிலும் (1985), சேலம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம் பட்டியிலும் (1987) தடம் புரளாது பயணிக்கிறேன் என்று நான் சான்றிதழ் பெற்ற நிகழ்வுகள் அவை.
சிறைச்சாலை வாசங்களிலேயே மிக மோசமான, கொடுமையான உரிமை பறிப்புகளும், அவமானங்களும், அடி உதைகளையும் பெற்று, எதையும் தாங்கும் பக்குவப் பாடத்தைப் போதித்த நெருக்கடிகால மிசாக் கொடுமை - ஓர் அரிய பேறு! காரணம், எந்த கீழ்நிலையிலும் நம்மால் உறுதியான கொள்கைப் பயணத்தைச் செய்யமுடியும் என்ற மனத்திண்மையை புகுத்தி, பக்குவப்படுத்திய பருவமாக அது அமைந்தது பேறு அல்லாமல் வேறு என்ன?
இச்சந்தர்ப்பங்களில் என்னைவிட என்னைச் சார்ந்த குடும்பத்தவர்கள், தோழர்கள் காட்டிய கொள்கை நெறிபிறழா உறுதி எனக்கு மேலும் உற்சாகம் தந்த டானிக் ஆகும்.
விளையாட்டுபோல விடுதலையில் உழைத்து, 50 ஆண்டுகள் ஓடோடி அது மேலும் இணையப் பதிப்பாகி யது, என்றென்றும் நம் உள்ளப் பதிப்பாகி, ஊற்றென மகிழ்ச்சியை வாரி வழங்குகிறது.
கட்டுப்பாடு காக்கும் எமது கருஞ்சட்டைப் படை தோழர்கள் யாமிருக்க, தயக்கமேன்? என்று முடிவுகள் எடுக்க உதவுகின்றனர்.
மற்றபடி வயது முதிர்வது முதுமையின் அடையாளம் என்றாலும், இக்கொள்கை என்றும் இளமையான கொள்கை என்பதால், இளமை முறுக்கு - எந்த செருக்குக்கும் இடந்தராது, கொள்கைப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திட  உதவுகிறது.
மீட்டுருவாக்கங்கள் மிக வேகத்துடன் நடைபெற வேண்டிய கால கட்டம் இது! புற்றீசல்கள்போல், புதுப்புது அறைகூவல்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன நாள் தோறும் - நம்மை நோக்கி!
இயக்கப் பணியின் வளர்ச்சிக்குக் காட்டப்படும் எதிர்ப்பை ஏளனங்களை உரமாக்கிடும் நெஞ்சுரமும், நேர்மைத் திறனும், நாணயமும், தன்னலத் துறவும், லட்சியத்திற்காக எந்த கடும் விலையையும் தருவதற்குத் தயாராக உள்ள உறுதியும் உடைய ஒரு கருஞ்சேனையுடன் உள்ளேன் என்ற மகிழ்ச்சியைவிட வேறு என்ன வேண்டும்?
பிழைக்கும் பட்டாளமல்ல!
இது பிழைக்கும் பட்டாளம் அல்ல; உழைக்கும் வீரர்களின் உன்னத அணிவகுப்பு. மக்களின் சுயமரியாதை வாழ்வே அதன் இலக்கு.
அதை ஏற்படுத்தும் வாய்மைப் போரில் நாம் என்றும் இளையோர்களே -எனவே வயதை வைத்துக் கணக்குப் போடாமல், சலிப்புற்று ஒதுங்காமல், குன்றா உணர்வினைக் கொண்டு, குறையா உற்சாகத்துடன் தளரா நடைபோட வாரீர்! வாரீர்!!
பெரியார் பணி முடிக்க எனது எஞ்சிய வாழ்நாளைப் பயன்படுத்த, துணையாக நில்லுங்கள் தோழர்களே, தோழியர்களே, நல்லெண்ண நண்பர்களே!
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, தமிழ்நாடு முழுவதும் - 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மரக்கன்றுகளை நடுவதற்கான (ஆண்டு முழுவதும்) முயற்சிகளை தொடர்ந்து செய்வோம்.
800 கூட்டங்களை ஆண்டு இலக்காக நாடு தழுவிய அளவில் நடத்துங்கள்.
கழக ஏடுகளை, நூல்களைப் பரப்புங்கள்!
நன்றி! நன்றி!! நன்றி!!!
வீடு தொடங்கி, நாடு முழுவதும், ஏன் உலகம் முழு வதும் இக்கொள்கை பரவ உறுதியைப் புதுப்பிக்கும் உங்கள் தொண்டனுக்குத் தோள் கொடுங்கள், தோழர்களே!
இறுதி மூச்சுள்ளவரை, இடர் எதுவரினும் உழைக்கும் உறுதி புதுப்பிக்கும் நாளே இந்நாள் எனக்கு!
உங்கள் உளங்கனிந்த
நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்கள் தொண்டன்
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.12.2012


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...