Friday, January 1, 2010

ஜனவரி 2010

2.1.2010 மனிதநேய நண்பர்கள் குழு

சென்னை மனிதநேய நண்பர்கள் குழு சார்பில் (ழரஅயளைவ குசநைனேள குடிசரஅ) சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் நடைபெற்ற விழாவில் சிறந்த சாதனையாளர்களாக நீதியரசர் பி. இராஜேந்திரன், பட்டயக் கணக்காயர் டி.என். மனோகரன், மருத்துவர் எம்.எஸ். இராமச்சந்திரன், மயிலை நா. கிருஷ்ணன் (அவரது வாழ்விணையர் பரமேஸ்வரி) ஆகியோர் பாராட்டப்பட்டனர். திராவிடர் கழகக் தலைவர் கி. வீரமணி தலைமையேற்றார். குழுவின் பொருளாளர் வழக்குரைஞர். கோ. சாமிதுரை (பொருளாளர், தி.க) நன்றி உரையாற்றினார். நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம், மூத்த வழக்குரைஞர் தியாகராஜன். மருத்துவர் ஏ. ராஜசேகரன், ஆடிட்டர் கந்தசாமி, கவிஞர். கலி. பூங்குன்றன் (பொதுச்செயலாளர்) ஆகியோர் பாராட்டுரை நிகழ்த்தினர்.

4.1.2010 சேது சமுத்திர திட்டம் - பிரச்சாரப் படைகள்

சேதுசமுத்திரத் திட்டம் - பிரச்சாரப்படைகள்- சேதுசமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டங்கள் 4.1.2010 முதல் 12.1.2010 வரை மூன்று குழுக்களாக நடத்தப்பட்டன. முதற்குழு: கன்னியாகுமரி முதல் மதுரை வரை சிறப்புரை: பூவை. புலிகேசி கலைநிகழ்ச்சி: திருத்துறைப்பூண்டி சுரேஷ் முரளி, மன்னை முருகராசு ஒருங்கிணைப்பாளர்: வன்னிப்பட்டு செ. தமிழ்ச்செல்வன். இரண்டாம்குழு: ராமேஸ்வரம் முதல் மதுரைவரை: சிறப்புரை: இராம. அன்பழகன், கலைநிகழ்ச்சி: திருத்தணி பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர்: சாமி. திராவிடமணி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) மூன்றாம் குழு: நாகை முதல் மதுரை வரை: சிறப்புரை: இரா. பெரியார்செல்வன் கலைநிகழ்ச்சி: சு. சிங்காரவேலர் ஒருங்கிணைப்பாளர்: தஞ்சை இரா. ஜெயக்குமார் (மாநில இளைஞரணி செயலாளர்.) நிறைவு விழா: 11.1.2010 மதுரை நேதாஜி சிலை அருகில். சிறப்புரை: தமிழர் தலைவர் கி. வீரமணி, வீதிநாடகம்: ச. சித்தார்த்தன்- பெரியார்நேசன் குழுவினர்.

11.1.2010 சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்ட விழிப்புணர்வுப் பயண நிறைவு விழா

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குழுக்கள் மதுரையில் சங்கமிக்கும் நிறைவுப் பொதுக்கூட்டம் கழக சட்டத்துறை செயலாளர் கி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கழகக் தலைவலர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

17.1.2010 சிவகாசியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டுவிழா

சிவகாசி காமராசர் பூங்கா அருகில் பெரியார் படிப்பகம், நூலகம், பெரியார் சிலையுடன் கூடிய பெரியார் மய்யம் கட்டு வதற்கான அடிக்கல்லை அ. சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் தமிழர் தலைவர் கி. வீரமணி திறந்து வைத்தார். பெரியார் மய்யத்திற்கான இடத்தினை சுபாஷ்சந்திரபோஸ் (காஞ்சனா போஸ் குடும்பத்தினர் அளித்துள்ளனர்)

21.1.2010- 24.1.2010 பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் நடத்திய சடுகுடு போட்டி

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 77ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டும் பெரியார் வீர விளையாட்டுக் கழகம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்திய (ஹ ழுசுஹனுநு) சடுகுடு போட்டி திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது.

பிப்ரவரி 2010

2.2.2010 கார்க்கரேயைக் கொன்றது - யார்?

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழாவில் மகாராட்டிர காவல்துறை அதிகாரி (ஓய்வு பெற்ற அய்.ஜி) எஸ்.எம். முஷ்ரிஃப் எழுதிய கார்க்கரேயைக் கொன்றது யார்? (றுழடீ முஐடுடுநுனு முஹஹசுமுஹசுநு?) என்று நூலினை கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட, கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை பெற்றுக் கொண்டார். ப.க. பொதுச் செயலாளர் வீ. குமரேசன் வரவேற்புரையும், நூலாசிரியர் எஸ்.எம். முஷ்ரிஃப் ஏற்புரையும் வழங்கினர். இவ்விழாவில், கழகத் தலைவர் தொகுத்தளித்த வன்முறையின் மறுபெயரே சங்பரிவார்க் கும்பல் என்னும் நூலினை தலித் வாய்ஸ் ஆசிரியர் வி.டி. ராஜசேகர் வெளியிட, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் பெற்றுக் கொண்டார்.

12.2.2010 துபாயில் தமிழர் தலைவர்

துபாயில் அமீரகத் தமிழர்கள் சார்பில் தமிழரங்கம் - 2010 என்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.

16.2.2010 ஈழத்தமிழர்க்கு வாழ்வுரிமை கோரி - ஆர்ப்பாட்டம்

ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமைகளை மீட்க மத்திய அரசினை வலியுறுத்தியும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவும் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொருளாளர். கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர் கவிஞர். கலி. பூங்குன்றன், தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் உள்ளிட்ட தலைமைக் கழக பொறுப்பாளர்களும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.
23.2.2010-சென்னையில் மத்திய அரசின் புதிய கல்வி மசோதாவை எதிர்த்து மாணவர் பேரணி- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கொண்டுவந்துள்ள தேசிய உயர்கல்வி ஆணையத்தின் சட்டமுன்வடிவினை எதிர்த்து, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மனிதநேயகழகம் (முஸ்லிம்லீக்) புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும், அமைப்புசாரா மாணவர்களும் பேரணி நடத்தினர். பேரணியை தொடங்கிவைத்து திராவிடர் கழக பொதுச்செயலாளர் கவிஞர். கலி. பூங்குன்றன் உரையாற்றினார்.

மார்ச் 2010

11.3.2010 காமலீலை சாமியார்களை தண்டிக்க வேண்டும் - தி.க. ஆர்ப்பாட்டம்

காமலீலை சாமியார்களின் கபட நாடகத்தை தோலுரித்துக் காட்டுவதற்கும், காவல்துறையினர் அவர்களை தனிப்பிரிவு அமைத்து கண்காணித்து குற்றவாளிக் கூண்டிலே ஏற்றி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில், மெமோரியல் ஹால் முன்பு கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை, கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

16.3.2010 அன்னை மணியம்மையார் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு
பேரா. முனைவர் ந.க. மங்களமுருகேசன் எழுதிய தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் என்னும் நூலினை சென்னை பெரியார் திடலில், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் மேனாள் தலைவர் முனைவர் கு.ம. இராமாத்தாள் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி வெளியிட்டார். கழகத் தலைவர் கி.வீரமணி நிறைவுரையாற்றினார்.

ஏப்ரல் 2010

14.4.2010 பெரியார் ஒளி - அம்பேத்கர் சுடர் விருதுகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை மறைமலை நகரில் விருதுகள் வழங்கும் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது. முதல்வர் கலைஞருக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.

16.4.2010 திராவிடர் கழக மாணவர் எழுச்சி மாநாடு

சென்னை பெரியார் திடலில் மாநில திராவிடர் கழக மாணவர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. வரவேற்புரை: சிவகாசி மா. கதிரவன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்) தலைமை: நம்பியூர் மு. சென்னியப்பன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்) கொடியேற்றம்: வீர. சுவீன் (தென்சென்னை மாவட்ட மாணவரணித் தலைவர்) சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தினை கழகப்பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை திறந்து வைத்தார். மாநாட்டுத் திறப்புரை: கவிஞர் ஈரோடு தமிழன்பன் த.சீ. இளந்திரையன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்) ஏ.பி. இளங்கவின் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவி) ஆகியோர் உரைக்குப்பின் கழகத் தலைவர் உரையாற்றினார். விவாதப்போர்: கழகப் பேச்சாளர் அதிரடி அன்பழகன் தொடுத்த வினாக்களுக்கு கழகப் பொதுச்செயலாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, பிரச்சார செயலாளர் அ. அருள்மொழி , துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் விடையளித்தனர். மாலையில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் பெரியார் திடலில் இருந்து புறப்பட்டு புரசைவாக்கம், தாணா தெரு சென்றடைந்தது. தாணா தெருவில் நடைபெற்ற திறந்த வெளிமாநாட்டிற்கு வரவேற்புரை: திருத்துறைப்பூண்டி மாணவரணி அமைப்பாளர் க. மணிகண்டன். மாநில மாணவரணி செயலாளர் ரெ. ரஞ்சித்குமார் தலைமையேற்றார். குடிஅரசு தொகுதிகளை வெளியிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. மேயர் மா. சுப்பிரமணியன், எஸ்.பி. கூரியர் உரிமையாளர் நாவங்கனி ஆகியோரின் உரைக்குப்பின் தமிழர் தலைவர் கி.வீரமணி நிறைவுரையாற்றினார். தாம்பரம் மாவட்ட மாணவரணித் தலைவர் தி. இர. சிவசாமி நன்றியுரை ஆற்றினார்.

25.4.2010 பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிய பாவிகள் யார்?

சென்னை பெரியார் திடலில் பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிய பாவிகள் யார்? என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார், சுப. வீரபாண்டியன், தொல். திருமாவளவன், கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் உரையாற்றினர்.

25.4.2010 திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் உதயம்

சென்னை பெரியார் திடலில் கூடிய கூட்டத்தில் திராவிடர் இனம்பற்றியும், திராவிடர் இயக்கம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளவும், திரிபுவாதங்களுக்கு மறுப்புக் கூறவும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

மே 2010

2.5.2010 இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் பெரியார் மய்யம் திறப்பு விழா!

ஜஸோலாவில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பெற்ற பெரியார் மய்யத்தைத் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் தமிழக முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள். விழாவில் மத்திய அமைச்சர்கள் திரு. ஜி.கே.வாசன், திரு.பரூக் அப்துல்லா, மேனாள் கல்வி அமைச்சர் திரு.டி.பி.யாதவ், திரு.தொல். திருமாவளவன், வரியியல் அறிஞர் திரு. ச.ராசரத்தினம், மானமிகு. வீ.அன்புராஜ், முனைவர் நல்.இராமச்சந்திரன் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
10.5.2010 ஜாதிவாரி கணக்கெடுப்பு - திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.கழகத்தலைவர் தஞ்சையில் பங்கேற்றார். சென்னையில் வழக்கறிஞர் சாமிதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர். கலி. பூங்குன்றன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர். தலைமைநிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் முன்னிலை வகித்தார்.

20.5.2010 தூத்துக்குடியில் தந்தை பெரியார் சிலை திறப்பு
தூத்துக்குடியில் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையினை சிலை அமைப்புக்குழு புரவலரும், தமிழ்நாடு சமூகநலத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் தமிழர் தலைவர் கி. வீரமணி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர். கலி.பூங்குன்றன், தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ், மாவட்ட தி.மு.க செயலாளர் என். பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை, சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் கங்காரி தங்கம் ஆகியோர் பங்கேற்றனர். மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் நடைபெற்றது.

19-22.5.2010 குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம்

குற்றாலத்தில் 33 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சி முகாம் மே மாதம் 19 முதல் 22 ஆம் தேதிவரை நடைபெற்றது. பயிற்சிப் பட்டறை, பேச்சுப்பயிற்சி குறும்படங்கள், பெரியார் திரைப்படம் ஒளிபரப்பு, பெரியாரியல் வகுப்புகள் என நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடத்தப்பட்டன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் கவிஞர். கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், டாக்டர் பிறைநுதல்செல்வி மற்றும் டாக்டர் கவுதமன் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். நிறைவு விழா நிகழ்ச்சியில் புதுயுகப் புரட்சியாளர் பெரியார் என்ற விசாகப்பட்டினம் ஜெயகோபால் தெலுங்கில் எழுதி, கோரா தமிழில் மொழிபெயர்த்த நூலின் குறுந்தகட்டினை கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட பொருளாளர் கோ. சாமிதுரை பெற்றுக்கொண்டார்.

24.5.2010 பெரியார் திரைப்படப் பாடல் - தெலுங்கு மொழி குறுந்தகடு

ஆந்திர மாநில பகுத்தறிவாளர்கழகம் சார்பில் பெரியார் திரைப்படத்தின் தெலுங்கு மொழி மாற்றப் பாடல்கள் குறுந்தகட்டினை அய்தராபாத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டார்.

ஜூன் 2010

5.6.2010 சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட ரயில் மறியல் போராட்டம்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தடையை மீறிய பல்லாயிரவர் கைதாயினர்.சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பாப்புலர் ஃபிரண்ட், சமாஜ்வாடிகட்சி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையினர் பங்கேற்றனர். கழகப்பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கிப் பேசினார். தமிழர் தலைவர் சென்னையில் 47ஆம் முறையாக கைதானார். விழுப்புரத்தில் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு தலைமையிலும், திருச்சியில் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையிலும் போராட்டம் நடை பெற்றது. 30.6.2010 நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்- நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து நெய்வேலி நகரம் பெரியார் சதுக்கத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு தலைமையில், துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூலை 2010


2.7.2010 தமிழர் தலைவர் கார்மீது தாக்குதல்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களது இல்லத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது காரினை ஒரு காலிக் கும்பல் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. 3- 4.7.2010 -

பெரியாரியல் பயிற்சி முகாம்

பொள்ளாச்சியில் 3,4.7.2010 தேதிகளில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. கழகத் தலைவர் கி.வீரமணி, கழகப் பொதுச் செயலாளர்கள் கவிஞர். கலி. பூங்குன்றன், சு.அறிவுக் கரசு, துணைப்பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன், ஆகியோர் பயிற்சி வகுப்பெடுத்தனர்.

6.7.2010 - கரூரில் கழக மண்டல மாநாடு

மறைந்த தி.மு.க. மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசன் நினைவு வளைவு, பெரியார் சிந்தனையாளர் வழக்குரைஞர் பி.ஆர் குப்புசாமி நினைவு மாநாட்டு அரங்கம். தலைமை: கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்புரை: வழக்குரைஞர் மு.க.ராசசேகரன் (மாவட்ட தி.க.தலைவர், கரூர்) தொடக்கவுரை: பரமத்தி சண்முகம் (தி.மு.க. கொள்கை பரப்பு இணைச்செயலாளர்) கொடியேற்றம்: கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ், தீர்மானங்கள் முன்மொழிதல்: துரை. சந்திரசேகரன் (தி.க.துணைப் பொதுச் செயலாளர்.) உரை: கவிஞர். கலி. பூங்குன்றன் (பொதுச் செயலாளர்) சு.அறிவுக்கரசு (பொதுச்செயலாளர், தி.க) டாக்டர் பிறைநுதல்செல்வி (துணைப் பொதுச் செயலாளர் தி.க) கே.சி. பழனிசாமி (முன்னாள் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்) நன்னியூர் கா. ராஜேந்திரன் (மாவட்ட தி.மு.க. செயலாளர்) நன்றியுரை: ம. காளிமுத்து (கரூர் மாவட்ட தி.க. செயலாளர். கரூரில் கழகச் சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம். கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

14.7.2010 நாகையில் கழகத்தின் எழுச்சி ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவது, கொல்லப்படுவது, மானபங்கப்படுத்தப்படுவது உள்ளிட்ட செயல்களைக் கண்டித்தும், இனி இவ்வாறு நடவா திருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியும் நாகை, காரைக்கால், திருவாரூர் மாவட்டக் கழகங் களின் சார்பில் மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 2010

2.8.2010 தி.மு.க.வுக்கு அறிவுரை-

முக்கிய பதவி நியமனங்களில் பார்ப்பனர்களை நியமிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க.வுக்கு அறிவுரை கூறினார்.

7.8.2010, 8.8.2010 பெரியாரியல் பயிற்சி முகாம்

வேலூர் மாவட்டம் வாலாஜாவில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. தி.க. தலைவர் கி.வீரமணி, பொதுச் செயலாளர்கள் கலி.பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், டாக்டர் பிறைநுதல்செல்வி, டாக்டர் இரா. கவுதமன், பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். புரபசர் பழ.வெங்கடாசலம் மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சிகளை நடத்தினார். 200 மாணவர்கள் பங்கேற்றனர்.

8.8.2010 வாலாஜாவில் மண்டல மாநாடு

வாலாஜாவில் திராவிடர் கழக மண்டல மாநாடு மண்டலத் தலைவர் செய்யாறு பா. அருணாசலம் தலைமையில் நடை பெற்றது. மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துக்கு கே.கே.சி. எழிலரசன் தலைமை வகித்தார். மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பொதுச் செயலாளர்கள் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர்கள் துரை.சந்திர சேகரன், டாக்டர் பிறைநுதல்செல்வி, உரத்தநாடு இரா. குண சேகரன், முகம்மது சகி (தி.மு.க. மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்) முதலியோர் கலந்துகொண்டனர். குடிஅரசு தொகுதிகள் (1933,1934) இரண்டினை பெரியார் பெருந் தொண்டர் வேல்.சோமசுந்தரம் வெளியிட்டார். 28.8.2010, 29.8.2010- பெரியாரியல் பயிற்சி முகாம் விழுப்புரம் மாவட்டம் கல்லக் குறிச்சியை அடுத்த கோமுகி அணைக்கட்டில் நடைபெற்றது.

செப்டம்பர் 2010


1.9.2010- திருச்சி அண்ணா நகரில் தந்தை பெரியார் சிலையை சில காலிகள் சேதப்படுத்தியதை அடுத்து அன்று இரவு அதே இடத்தில் புதியதாக தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டது.

5.9.2010 பேச்சுப் போட்டி
தந்தை பெரியாரின் 132ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரியாரால் வாழ்கிறோம் என்ற பேச்சுப்போட்டி நிகழ்ச்சி தமிழகம் முழுக்க எழுச்சியுடன் நடைபெற்றது.

7.9.2010 - திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் தொடக்கவிழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விழாவின் போது பேராசிரியர் க.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரை.

26.9.2010 - தஞ்சை வல்லத்தில் குழந்தைகள் பழகு முகாம், தமிழகம் முழுவதும் இருந்து குழந்தைகள் பங்கேற்பு.

27.9.2010 - சீர்காழியில் மண்டல மாநாடு, தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்குதல். அக்டோபர் 2010

7.10.2010 - நாமக்கல்லில் தந்தை பெரியார் படிப்பகம் திறப்பு விழா, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் செ.காந்திசெல்வன் திறந்து வைத்தார்.

10.10.2010 - சென்னை தாம்பரம் பெரியாரியல் பயிற்சி முகாம்.

15.10.2010 - குவைத்தில் பெரியார் பிறந்தநாள் விழா, சமூக நீதிக்காக வீரமணி விருது அளிப்பு விழா, இராவண காவிய சொற்பொழிவு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் கலந்து கொள்ளல்.

18.10.2010 - துபாயில் பெரியார் பன்னாட்டு மய்யம் கிளை உருவாக்கம் - தமிழர் தலைவர் பங்கேற்பு.

23.10.2010 - திருப்பத்தூரில் வேலூர் மண்டல திராவிடர் எழுச்சி மாநாடு மற்றும் திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம்

நவம்பர் 2010

8.11.2010 திருவரங்கத்தில் திருச்சி மண்டல திராவிடர் எழுச்சி மாநாடு

பார்ப்பனர்களை பல்லக்கில் தூக்கி சுமக்கும் போக்கை தடுத்து நிறுத்துவோம் என தமிழர் தலைவர் அறிவிப்பு.

13.11.2010 - ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் சிறப்புக் கூட்டம் - தமிழர் தலைவர் பங்கேற்பு.

20.11.2010 சென்னை பெரியார் திடலில் நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா நிதி அமைச்சர் பேரா.க.அன்பழகன் கலந்து கொள்ளல். நீதிக்கட்சித் தலைவர்களுக்கு சிலை வைக்கப்படும் என தமிழர் தலைவர் அறிவித்தார்.

24.11.2010 - சர்.பி.டி. தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற ஆ.இராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? ஊடகத் துறை பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை.

26.11.2010 வைக்கத்தில் விழா

வைக்கம் சத்தியாக்கிரக 85ஆம் ஆண்டு விழா வைக்கத்தில் நடைபெற்றது - செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி தமிழர் தலைவர் கலந்து கொள்ளல்.

டிசம்பர் 2010

2.12.2010 தமிழர் தலைவர் பிறந்தநாள்விழா

தமிழர் தலைவரின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் - நாடெங்கும் குருதிக்கொடை, நோயாளிகளுக்கு உணவு, இலவச மருத்துவ முகாம்.

5.12.2010 -சிறப்பு இணைய தளம்

உலக நாத்திகர் மாநாட்டையொட்டி சிறப்பு இணைய தளத்தை மதுரை மாநாட்டில் தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்.

10.12.2010 - நாடாளுமன்ற செயல்பாட்டை முடக்குவதை எதிர்த்து நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னையில் தமிழர் தலைவர் பங்கேற்பு.

24.12.2010 - தந்தை பெரியார் 37ஆம் ஆண்டு நினைவு நாள்நிகழ்ச்சியாக தமிழ்நாடெங்கும் நடத்தப்பட்டது.


ஆண்டு தொடக்கத் திலேயே ஆரம்பித்து விட்டார் களய்யா, ஆரம்பித்து விட்டார் களய்யா!

நாளை புத்தாண்டு சனி மகா பிரதோஷத்துடன் ஆரம்ப மாகிறது.

 மேலும் துவக்க மாத மான ஜனவரியில் மூன்று பிர தோஷங்கள் வருவது குறிப்பிடத் தக்கது. புத்தாண்டு அன்று கோயில் களில் கூட்டம் அலை மோதும். இவ்வாண்டின் துவக்கத்தி லேயே சனி பிரதோஷம் வருவ தால், கூட்டம் மேலும் அதிகமாக இருக்கும். ஒரு சனி பிரதோஷத் தன்று சிவனைத் தரிசித்தால், சாதாரண பிரதோஷங்களைவிட அதிக பலன் கிடைக்குமென்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. நரசிம்மரையும் இந்த நேரத்தில் தரிசிப்பர்.இந்த ஆண்டில் 25 பிரதோஷங்கள் வருகின்றன. இதில் ஜனவரி 1, ஏப்ரல் 30 ஆகிய இரண்டே நாட்கள்தான் சனி மகா பிரதோஷம்.ஜூலையில் 1,17, 31 ஆகிய தேதிகளிலும், மார்ச்சில் 2,17,31 ஆகிய தேதிகளிலும் மூன்று பிரதோஷங்கள் வருவது குறிப் பிடத் தக்கது - என்று பார்ப்பன ஏடுகள் விலாவாரியாக எழுதுகின்றன.அது என்ன பிரதோஷம்? திரியோதசியின் பொழுது அஸ்தமிக்குமுன் மூன்றே முக்கா நாழிகை தொடங்கி அஸ்தமித்து, மூன்றே முக்கா நாழிகை பரியந்தமுள்ள நேரம் என்று புராணிகர்கள் கூறுகின் றனர்.இப்படியெல்லாம் சொல்லு வதற்கு என்ன ஆதாரம்? யார் சொன்னார்கள்? என்கிற கேள்விகளைக் கேட்கக் கூடாது. எந்தப் பக்திமான்தான் கேட்டி ருக்கிறான்? கேட்டால் பதில் சொல்ல யாருக்குத்தான் தெரி யும்?மக்களின் சிந்தனைகளை எதையாவது புரியாத சொற் களை அடுக்கிச் சொல்லி, அந்தத் தூண்டிலுக்குள் கச்சித மாகச் சிக்க வைத்து, அவர்கள் தலையில் மிளகாய் அரைக்க வேண்டும், அவ்வளவுதான்!எதையாவது பிரச்சாரம் செய்து கோயில் குளம் என்று அலையச் செய்து புத்தியையும், பொருளையும், பொழுதையும் கரியாக்க வேண்டும் - புரோ கிதக் குதிருக்குள் அடைக்கலம் ஆக ஏற்பாடு செய்யப்பட்ட சுரண்டல் திட்டம்தான் இந்தப் புண்ணாக்குகள் எல்லாம்.இதைத்தான் பழுதற - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மிக அழகாக - துல்லியமாக நம் கண் முன் - கருத்துகள் அசைபோட படம் போட்டுக் காட்டுகிறார். அதற்கு அவர்கள் பாஷையிலே காயத்ரி மந்திரம் என்றும் நறுக்கென்று சொல்லியிருக்கிறார் அய்யா.நமது மக்கள் ஆத்மா, மோட்சம், நரகம், பிதிர் லோகம், மறுபிறப்பு என்கிற சொற்களை அயோக்கியர் களின் உற்பத்தி என்றும், மடையர்களின் பாவிப்பு என்றும் கருதி தங்கள் உள்ளத்திலிருந்து அடியோடு விலக்கிவிட வேண்டும். மற்றும் புராணக் கடவுள் கைள ஒழிக்க அவைகளை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு இழிவுபடுத்தி, மக்கள் மனதில் நினைத்தாலே மானங் கெட்டத்தன்மை என்று கருதும்படியாகச் செய்து அவைகளை ஒழித்துக் கட்ட வேண்டும்.இந்த இரண்டு காரியம் செய்வதன் மூலம்தான் நமது பிறவி இழிவு (ஜாதி) என்பதை ஒழித்துக்கட்டி, நாம் மான முள்ள மனித சமுதாயமாக ஆக முடியும், இவற்றில் ஒரு சிறிதளவை விட்டு வைத் தாலும் நாம் உண்மையிலேயே இழி மக்களாகத்தான் இருந் தாக வேண்டும்.இதுதான் நமக்குக் காயத்ரியாகும்.- ஈ.வெ. ராமசாமி, விடுதலை 15-3-1971புத்தாண்டு பிறந்ததும் பிறக்காததுமாக தங்கள் கோயில் கடைகளைத் திறந் திருக்கின்றனர். அதுவும், இங்கிலீஷ் ஆண்டு பிறப்புக்கும், இந்த இந்துக்களுக்கும் என்ன உறவு? அதுதான் அவர்கள் பார்வையிலே மிலேச்ச பாஷையாயிற்றே!

அதையெல்லாம் தங்கள் வசதிக்கு மாற்றிக் கொள் வார்கள் - எச்சரிக்கை! பெரியார் சொல்லியுள்ள காயத்ரி மந்திரம் முக்கியம், மிக மிக முக்கியம்!

- மயிலாடன்

Monday, December 28, 2009

ஒற்றுமை முழக்கம்


ஒற்றுமை முழக்கம்

   கவிஞர் கலி. பூங்குன்றன் 
பொதுச் செயலளார், 
திராவிடர் கழகம்


திராவிடர் கழகத்திற்கு பகுத்தறிவுக் கொள்-கைகள் உண்டு; பார்ப்பன ஆதிக்கப் பண்-பாட்டுப் படையெடுப்பை முற்றிலும் எதிர்க்கும் நேர் கொண்ட பார்வையுண்டு.

பெண்ணுரிமை என்பது ஆண்களுக்கு நிகராக அனைத்துத் தடங்களிலும் தேவை என்பதில் சமரசத்துக்கு இங்கு இடம் இல்லை.

சமதர்மம், சமத்துவம், இழைந்தோடும் வருண, வருக்கப் பேதமற்ற ஒப்புரவு சமூகப் படைப்பு என்பது இதன் இலட்சியம்.

அரசியலில் இன்னார் இனியார் என்ற பேதமின்றி, தமிழர் நலன் என்ற எடை தட்டு-தான் அதை நிர்ணயிக்கும்.

தமிழர்களின் ஒற்றுமையைக் கட்டுவதில் கழகத்திற்கு எப்பொழுதுமே முதல் இடம் உண்டு.

தி.மு.க. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் தனிக் கழகம் காண முயன்றபோது தந்தை பெரியார் தடுத்தாட் கொண்டார்; எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தும் பேசினார். தலைக்கு மேல் போயிற்று, தந்தை பெரியார் என் செய்ய!
கலைஞர் அவர்களுக்கும், டாக்டர் நாவலர் அவர்களுக்கும் கருத்துராய்வு ஏற்பட்ட நேரத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள் இரு-வரையும் அழைத்துப் பேசிய சந்தர்ப்பமும் உண்டு.

தி.மு.க. அ.தி.மு.க. இணைப்புக்கு உரத்த முறையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் முயற்சித்த-துண்டு, எம்.ஜி.ஆர். அவர்களின் தோட்டத்-திற்கே சென்று கலந்துறவாடினார்.

1) கழகத்தின் பெயர் தி.மு.க.வாகவே இருக்க வேண்டும்.

2) கொடியில் அண்ணா படம் இருப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

3) எம்.ஜி.ஆர். அவர்களே முதல் அமைச்சராகத் தொடரட்டும்; கலைஞர் கட்சியின் தலைவராகட்டும் என்கிற அளவுக்கு இணைந்து வந்தபோது, வெண்ணெய்த் திரண்டு வந்த நேரத்தில் தாழியை உடைத்த தம்பிரான்கள் உண்டு.

இணையதான் வேண்டாம்; காங்கிரசுடன் கூட்டுச் சேர்வதைவிட - _ கலாச்சாரக் கொள்கை _ தமிழர் இனவுணர்வு என்னும் தடத்தில் இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்தால் என்ன என்ற ஒரு சிந்தனையைத் தூவியவர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

1980 பிப்ரவரியில் அப்படியொரு, சிந்தனை-யோட்டம்! தேவி இதழுக்கு வெளிப்படையாகப் பேட்டியே கொடுத்தார்.

கேள்வி: தி.மு.க. அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்க தமிழினப்பற்று கொண்ட தாங்களும், கி.ஆ.பெ. போன்ற பெரியவர்களும் முயற்சி செய்வீர்களா?

வீரமணி பதில்: எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதோ இல்லையோ. ஆசையிருக்கிறது _ பெரும்பான்மையான தமிழர்களைப் போலவே! எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக இருந்த குடும்பம்தானே அது என்று தன் உள்ளக்கிடக்-கையை வெளிப்படுத்தினார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1984 இல் மீண்டும் இதேபோல ஒரு சிந்-தனை திராவிடர் கழகப் பொதுச் செயலாளரிடம்.

11.11.1984 _ நாள் ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்தது. அ.தி.மு.க. _ காங்கிரஸ் கூட்டு உறுதியென்றும், மக்களவைத் தேர்தலில் 40 இடங்களில் (புதுவையயும் சேர்த்து) மூன்றில் இரு பங்கு இடங்கள் காங்கிரசுக்கென்றும் - தகவல்கள் கசிந்தன.

நாவலர் இரா. நெடுஞ்செழியன் டெல்லி சென்றார் பிரதமர் இந்திரா காந்தியை இரு முறை சந்தித்தார்.

அந்த நேரத்தில் திராவிடர் கழகம் எடுத்த நிலை என்ன?

நாடாளுமன்றத் தேர்தலில் இ. காங்கிரசுக்கு மூன்றில் இரண்டு பங்கினைத் தாரை வார்த்து அரிசியும், உமியும் கலந்து ஊதி ஊதித் தின்னும் கேலிக் கூத்தான முயற்சிக்குப் பதில் அ.தி.மு.க.-வின் அமைச்சர்களும், தோழர்களும், பொறுப்-பாளர்களும் துணிந்து முடிவுக்கு வந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒரு தொகுதி உடன்-பாடு செய்து கொண்டு, தமிழ்நாட்டின் பிரதிநிதி-களாக பெரும்பாலும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய-வர்களே வரக்கூடிய நல்வாய்ப்பினை உருவாக்-கினால், அது எதிர்காலத்தில் இரண்டு கழகங்-களுக்குமே சிறப்பானதாகவும், தமிழ்நாட்டின் நலனைக் காப்பாற்றுவதாகவும் ஆகும்.

கொள்கை உடன்பாடு இல்லாத காங்கிர-சோடு கூட்டு சேரத் தயாராக இருக்கும்போது, ஒரே கொள்கை, ஒரே பாரம்பரியம் உள்ள இயக்கத்தின் இரு வேறு கூறுகளில் உள்ளவர்கள் ஒன்றாக இணைய முன் வராவிட்டாலும்கூட இந்தத் தொகுதி உடன்பாடு போன்ற குறைந்த-பட்ச பணியையாவது செய்ய முன் வரக்-கூடாதா?...

இப்போது திராவிட இயக்கங்களுக்கு ஏற்-பட்டுள்ள சோதனைகளை வெல்ல வேண்டு-மானால், ஊடுருவல்களைத் தடுக்க வேண்டு-மானால், பிரித்தாளும் பகைவர்களுக்குப் பலி-யாகாமல் புதிய திடமான முடிவை எடுக்க வேண்டும்.......

அரசியலுக்கு அப்பாற்பட்ட பல பெரியவர்-கள்- _ விவரம் தெரிந்தவர்கள் ஆசை இதுதான்! அறிவுரையும் எல்லோருக்கும் இதுதான்! எனவே அடுத்த தேர்தல் பற்றி மட்டும் சிந்திக்கின்ற அரசியல் கட்சிகளாக இல்லாமல், அடுத்த தலைமுறை பற்றி மட்டும் சிந்திக்கின்ற பொது நலவாதிகளாக இரண்டு அணி சகோதரர்களும் இருக்க முன்வர வேண்டும் என்று தாய்க் கழகத்தின் பாசத்-தோடு, பரிவோடு, கவலையோடு இதை ஒரு பிரார்த்-தனை வேண்டுகோளாக முன் வைக்கிறோம், துணிச்சலுடன் எதிர்காலம் கருதி நல்லமுடிவு எடுங்கள்
தமிழின மக்கள் பேராதரவு என்ற குடை உங்களுக்குத்தானே வந்து நிற்கும் என்று இன்றைக்கு கால் நூற்றாண்டுகளுக்குமுன் தனது 54 ஆம் அகவையிலே எடுத்து வைத்த இனமானச் சிந்தனைத் தலைவராக விளங்-கியவர்-தான்- _ இன்றைய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள். அந்தச் சிந்தனை அவரை விட்டு அகன்றதில்லை திராவிட பார்முலா என்ற ஒன்றைக்கூட அறிமுகப்படுத்-தினார்.

1993 அக்டோபரில் தி.மு.க.வில் மற்றொரு பிளவு வை. கோபால்சாமி அவர்களை மய்யப்படுத்திய பிளவு; அது.

உடல் நலம் நலிவுற்றிருந்த நிலையிலும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் ஓடோடிச் சென்று வைகோவைச் சந்தித்து சமரசம் செய்கிறார். திமுக தலைவர் கலைஞர்அவர்களிடம் வேண்டுகோள்களை முன் வைத்தார். எல்லோரையும்விட இயக்கம் முக்கியம்; இயக்கத்தைவிட (மக்கள்) இனம் முக்கியம். எத்தரப்பிலும் ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகள்பற்றி மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று பதறப் பதற வேண்டுகோள் விடுத்தார். (விடுதலை 9.10.1993)

பரஸ்பர குற்றச்சாற்றுகள் மற்றும் பதில்கள் இவைகளுக்கு இதுவா நேரம்? திராவிடர் கழகம் தி.மு.க.வின் தாய்க் கழகம் என்ற பாசத்துடன் எப்போதும் பிரச்சினையை அணுகும் உரிமை நமக்கு உண்டு என்பதாலும், மற்றவரைவிட லட்சியத்தில் மிகவும் அருகில் உள்ள தமிழ் இனவுணர்வு பாசறை அது என்பதாலும் அதற்கு ஏற்படும் சங்கடமும் நமக்கு ஏற்படும் சங்கடம் என்று தாய்க் கழகத்தின் தசை ஆடியதை, குருதிக் கொத்தளித்ததை இந்த எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தினார்; தமிழர் தலைவர் என்பதற்கு பொருத்தமான நம் தலைவர் கண்ணியக் குறைவாகப் பேசுவது, கொடும்பாவிகளைக் கொளுத்துவது - _ இவற்றைக் கைவிடுங்கள், கை-விடுங்கள் என்று கண்ணீர் மல்க அறிக்-கைவிட்டார்.

தந்தை பெரியார் அவர்கள் சிந்தனை ஊற்றில் பூத்த மலர் அல்லவா - _ அதனால் தான் அந்தப் பதைபதைப்பும் இனமானத் துடிதுடிப்பும்!

உறவுள்ள ஒர் இயக்கம் உரிமையோடு கேட்கிறது என்ற நிலையை முக்கியமான இடங்-களில் எல்லாம் எடுத்தவர் இவர்.

1997 ஜூலை தென் மாவட்டங்களில் முக்குலத்தோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் ஜாதிக் கலவரம் கொலைகள், தீயிடல்கள், சூறை-யாடல்கள் என்று மனிதத் தன்மைக்கு எதிரான கோரத்தாண்டவங்கள்.
அந்தக் கால கட்டத்திலும் கம்பீரமாகக் குரல் கொடுத்தவர் ஆசிரியர்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்கள் ஆனாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்கள் ஆனாலும் நாம் அனைவரும் ஒரு மண்ணின் மைந்தர்கள் என்ற உணர்வினை ஊட்டியாக வேண்டும். கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்ட பகை உணர்ச்சிப் பேயை விரட்டியாக வேண்டும் (விடுதலை 20.7.1997) என்று அறிக்கை வெளியிட்டார்.
அத்துடன் நிற்கவில்லை அதனோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கவும் இல்லை.

நமது இயக்கம் _ திராவிடர் கழகம்கூட இந்த இரு சாராரின் பிரச்சினைகளையும், பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து, தக்க சமரசம் கண்டு, அனைத்து மக்களையும் காப்பாற்ற என்றென்றும் சித்தமாக உள்ளது. எங்களுக்கு ஓட்டு அரசியல், பதவி அரசியல் கண்ணோட்டம் இல்லை. எனவே எந்த சந்தேகப் பார்வையும் இன்றி இரு சகோதரர்களும் ஒப்புக் கொண்டால், நாங்கள் என்றென்றும் அதற்குத் தயாராக உள்ளோம்.

எங்களின் உள்ளத்தில் வடியும் இரத்தக் கண்ணீரை அதன் மூலம் துடைத்துக் கொண்ட ஆறுதல் எங்களுக்குக் கிடைக்கும் என்பதைத் தவிர எங்களுக்கு இதனால் வேறு சுயநலம் லாபம் இல்லை! சகோதரர்களே, தாராள மனதுடன் முன் வாருங்கள் என்று இருகரம் நீட்டினாரே!

முசுலிம்லீக் அமைப்பில் நாவலர் அப்துல் சமது அவர்களுக்கும், பன்மொழி புலவர் அப்துல் லத்திப் அவர்களுக்குப் பிளவு ஏற்பட்ட அமைப்பும் இரண்டாகச் சிதறிய தருணத்தில் தொடக்க முதல் அதனை இணைத்து வைக்க இன்முகம் காட்டியவரும் மானமிகு வீரமணி அவர்களே!

இணைப்பு ஏற்பட்ட நிலையில், அப்துல் சமது அவர்கள் முதலில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததும் தமிழர் தலைவர் அவர்களிடத்தில்தான்.

அரசியலைத் தூக்கி எறிந்து தமிழர் ஒற்றுமை என்னும் பதாகையைத் தூக்கிப் பிடித்து தமிழா இனவுணர்வு கொள்! தமிழா தமிழனாக இரு! என்ற முழக்கங்களை மூச்சு உள்ளவரை முழங்கும் ஒரே தலைவர் _ தந்தை பெரியார் வழி வந்த தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களே!

பகுத்தறிவுப் பாதையில் திராவிடர் கழகத்தின் இன்னொரு பக்கம் பயணம் செயல் பணி என்பதும் இதுவே ! அதனை தந்தை பெரியார் வழியில் தமிழர் தலைவர் வீரமணி மிகச் சரியாகவே செய்துவருகிறார்.                             

பத்திரிகைகளின் பார்வையில் நம் ஆசிரியர்





கல்கியின் கருத்து

கழகப் பொதுச் செயலாளர் அவர்களைப் பற்றி கல்கி ஏடு (24.6.1979) குளோஸ் அப் என்ற பகுதியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது.

திரு. கி. வீரமணியிடம் சிகரெட் உட்பட எந்த வேண்டாத பழக்கமும் கிடையாது. எப்போதாவது பார்க்கும் ஆங்கில அறிவியல் படங்களைத் தவிர, சினிமா பார்ப்பதும் கிடையாது. ஈ.வெ.ரா. பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு அதிகாரப் பூர்வமாய்ச் சேலம் மாவட்டத்தில் 1944இல் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது திரு. வீரமணி பத்து வயதுச் சிறுவன்.


இப்போது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். மாணவப் பருவத்தில் எந்த வகுப்பிலும் முதல் அல்லது இரண்டாவது நிலையிலேயே இருப்பாராம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் படிப்பில் சேருவதற்கு, முதல் பருவக் கட்டணம் கட்டப் பொருளாதார வசதி இல்லை. 

மிகவும் தயக்கத்துடன் பெரியாருக்கு உதவி கேட்டுக் கடிதம் எழுதினார். எங்கோ சுற்றுப் பயணத்திலிருந்த பெரியார் குறிப்பிட்ட நாளில் பணம் கிடைப்பதற்காகத் தந்தி மணியார்டரில் ரூ. 95 அனுப்பினார். பின்னர், தேர்வில் முதலாவதாய்த் தேறித் தங்கப் பதக்கத்துடன் அய்யாவிடம் சென்று, நன்றி சொல்லப் போனபோது பெரியார் கூறியது; அப்படியா? நான் பணம் அனுப்பிச்சேனா? இருக்கலாம். மறந்து போச்சு.

இவ்வாறு கல்கி ஏடு எழுதியிருக்கிறது.


- விடுதலை, 24.6.1979

கீதையின் மறுபக்கம் நூல் பற்றி தினமனி

கி.வீரமணி எழுதிய இந்நூல் இருபது அத்தியாயங்களையும், ஏழு பின்னிணைப்பு-களையும் கொண்டுள்ளது. பாரதம் நடந்த கதையா? கீதை ஒரு கொலை நூல்தான். கிருஷ்ணன் ஒரு கபட வேடதாரி, கீதையின் முரண்பாடுகள், விநோதக் கருத்துகள் முதலிய தலைப்புகளையும் உள்ளடக்கியது.

இராமாயணம் என்ற காப்பியம் மகா-பாரதத்திற்குப் பின் வந்தது (பாகம் 17) என்றும், ஒரே மூலமான கீதையிலிருந்து பலர், பலவகையான போதனைகளைப் பெற்றதன் காரணம் அதிலுள்ள கருத்துகள் நம்ப-முடியாத அளவிற்கு முரண்பட்டவை என்பது-தான் (பக்.40) என்றும், பக்தி நெறியை இந்து மதம் பவுத்தத்திலிருந்து எடுத்துக்-கொண்டது (பக்.57) என்றும், ஆத்மா என்-றொன்று இல்லை (பக்கங்கள் 116.131) என்றும். ஒரு புதிய புராணத்தை இயற்றுகிற யாரும் வியாசர் என்ற பெயரால் அழைக்கப்படு-வ-துண்டு (பக்.226) என்றும் பல கருத்துகள் இந்-நூலில் இடம் பெறுகின்றன.

ஆன்மீகக் கருத்துகளை ஒட்டி, தொன்று-தொட்டு இருதரப்பு வாதங்களும் இருந்து-கொண்டே வந்திருக்கின்றன. இவை மேலும் தொடர்ந்து கொண்டு தானிருக்கும். சில சமயம் ஒரே கட்சியைச் சார்ந்தவர்களுக்-குள்-ளும் கூட சில விஷயங்களில் கருத்து வேறு-பாடுகள் எழுவதைப் பார்க்கலாம். இவர்-களுக்குப் பின் வருபவர்கள் இந்தக் கருத்-துகளை விரிவாக வாதம் செய்து. அவரவர்-கள் கருத்துகளையும் தருவார்கள். இந்த முறை-யில் தான் அறிவு வளர்ச்சி பெறுகிறது.

இந்த ஆய்வு நூலின் ஆசிரியர் பல மேற்-கோள்களையும், ஆராய்ச்சியாளர்கள் கூற்று-களையும், அறிஞர் பெருமக்களின் கருத்து-களையும் ஆதாரமாகக் காட்டி. சிந்தனைக்-குரிய பல கேள்விகளையும் கருத்துகளையும் மக்கள் முன் வைத்துள்ளார். அவரது முயற்சி பாராட்டத்தக்கது.

சி. இராமகிருஷ்ணன்
தினமணி விமர்சனம். 
8.10.1998


சாவியின் பார்வையில்

கருப்புச் சட்டை அணிந்து கொண்டு இவர் நாத்திகவாதம் பேசுவதைக் கேட்டால், பலர் காதை மூடிக் கொள்வார்கள். இன்னும் பலர் துடிப்பார்கள். நாராயணா இதை எல்லாம் கேட்டுக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டுமா? என்றும் சிலர் வருத்தப்படுவார்கள்.

ஆனால், அதே வீரமணியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பழகினால் _ தர்ம சாஸ்திரங்கள் ஒரு நல்லவனைப் பற்றி எப்படி எல்லாம் சித்திரிக்குமோ, அப்படிக் காட்சி தருவார்.

பண்புப் பழமாய்க் கனிந்திருக்கும்! பேச்சு நெய்யாய் உருகி நிற்கும்! நாகரிகம் இதம் பதமாய் இருக்கும்!

சின்னஞ்சிறு வயதில் மேடையில் ஸ்டூல் போட்டு ஏறி நின்று பேசிப் பழகினார். இப்போது எந்த மேடையிலும் இவர் பேச்சின் உயரத்துக்கு யாரும் வர முடிவதில்லை.

கொள்கையில் சிங்கம்; குணத்தில் தங்கம்.

(சாவி, 31.3.1985 இதழ்)

THE HINDU

தமிழர் தலைவர் பற்றி இந்து ஏட்டின் கனிப்பு


There is Justifiable euphoria in the AIADMK the Tamil Nadu Reservation Bill, which will now become an Act, but keen observers feel that the ordeals for the AIADMK Government are not yet over, in securing the interests of the backward classes on a firm basis.

The General Secretary of the Dravidar Kazhagam, Mr.K. Veeramani alone, these observers say, seems to have sensed the imminent dangers which has made him stress the need to remain wary about the next moves of the anti-reservationists while all other parties had generally welcomed the Presidential assent, and urged for a consitutional amendment to get a permanent protection.

தமிழ்நாடு இடஒதுக்கீடு மசோதா-வுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது பற்றி அ.இ.அ.தி.மு.க.வில் நியாயமான மனநிறைவோடு கூடிய மகிழ்ச்சி நிலவுகிறது. இப்பொழுது அது சட்டமாகிறது. ஆனால், பிற்படுத்-தப்-பட்ட வகுப்-பாரின் நலன்களைப் பெறுவதில், அ.இ.அ.தி.மு.க.-அரசின் இடர்-நிறைந்த முயற்சிகள் முடிந்துவிட-வில்லை எனக் கூர்மையான நோக்கர்கள் கருது-கிறார்கள்.

மற்ற கட்சிகள் எல்லாம் பொதுவாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வர-வேற்றுள்ள நிலையில், திராவிடர் கழகப் பொதுச் செய-லாளர் திரு கி.வீரமணி மட்டும் வரக்கூடிய ஆபத்தை உணாந் துள்ளார் என்றும், அதன் காரணமாக இடஒதுக்-கீட்டிற்கு எதிரானவர்களின் அடுத்த நட--வடிக்கை குறித்து எச்சரிக்-கையாக இருக்க-வேண்டும் என்றும், அதை முறியடித்து நிலை-யான பாதுகாப்புப் பெறுவதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் இந்த நோக்கர்கள் கூறுகிறார்கள்.

நன்றி: தி இந்து, 23 ஜூலை 1994

Thursday, December 24, 2009

பார்ப்பன வீடுகளில் பெண்கள் பெரியார் படத்தை வைக்கவேண்டும்!


பார்ப்பன வீடுகளில் பெண்கள் பெரியார் படத்தை வைக்கவேண்டும்! பெரியார், அண்ணா ஜெயலலிதாவுக்கு அரசியல் வியாபார லேபிள்
ஆசிரியருக்கும், கலைஞருக்கும் - பெரியார் அண்ணா குருதி ஓட்டத்தில் கலந்தது!

சென்னை, செப். 24_ பார்ப்பனப் பெண்கள் தங்கள் வீடுகளில் பெரியார் படத்தை மாட்டி வைக்க வேண்டு-மென்று பேராசிரியர் சுப.வீர-பாண்-டியன் பேசினார். ஜெயலலிதாவுக்கு அரசியல் வியாபாரம் நடத்தி அண்ணா, பெரியார் பெயரை லேபிளாகப் பயன்படுத்துகிறார். ஆசிரியர் அவர்களுக்கும், கலைஞர் அவர்களுக்கும் பெரியார், அண்ணா என்பது அவர்-களுடைய குருதி ஓட்டத்தில் கலந்த ஒன்று என்று உயர்கல்வித் துறை அமைச்-சர் க.பொன்முடி கூறினார்.
தென்சென்னை மாவட்ட தி.க. சார்பில் திருவல்லிக்கேணியில் 18.9.2009 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சுப.வீரபாண்டியன்
இந்நிகழ்ச்சியில் திராவிட இயக்கத் தமிழர்-பேரவை பொதுச் செய-லாளர் சுப.வீரபாண்டி-யன் ஆற்றிய உரை வருமாறு:
இங்கே நமது திராவிடர் கழக பொதுச் செய-லாளர் கவிஞர் கலி.-பூங்குன்றன் அவர்கள் பேசும்பொழுது இந்த திருவல்லிக்கேணி பகுதி திராவிட இயக்க முதல்-விதை விதைத்த மண் என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள். செப்டம்-பர் மாதம் என்று சொன்-னால் அது தந்தை பெரி-யார் பிறந்த நாளான செப். 17ஆம் தேதியும், செப். 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் என்பதுதான். நமக்கு ஞாபகம் வரும்.
செப்டம்பர் 5ஆம் தேதி
செப்டம்பர் 5ஆம் தேதி என்றால் அது டாக்டர் ராதாகிருஷ்-ணன் பிறந்த நாள். அது ஒரு முக்கிய நாள் என்று அதைத்தான் சொல்வார்-கள். தெரிந்தே நான் இதை விட்டுவிட்டேன். அதற்குக் காரணம் உண்டு. செப்டம்பர் 5ஆம் தேதி என்பது செக்கிழுத்த செம்மல் தியாகி வ.உ.சி. பிறந்தநாள் என்பதை மறைத்துவிடுகிறார்கள், அவர்கள் _ பார்ப்பனர்-கள் என்பதை நாம் அறியாதவர்கள் அல்லர். திருத்தணியில் பார்ப்பன குலத்தில் பிறந்தவர் டாக்-டர் ராதாகிருஷ்-ணன். தூத்துக்குடியில் சூத்திர-னாகப் பிறந்தவர் வ.உ.-சிதம்பரனார் என்பது-தான் அதற்குக் காரணம்.
பார்ப்பனர் வீட்டில் பெரியார் படம்
நம் இனத்திற்காகவும், தமிழினத்திற்காகவும், உலக மனிதநேயத்-திற்-காகவும் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்கள் எடுத்-துவைத்த அத்துணை கருத்துகளையும் இன்-றைக்கு உலகத்தில் உள்-ளோர் உணரத் தொடங்-கி-யிருக்கிறார்கள்.
தந்தை பெரியார் உலகில் உள்ள மக்கள் சமத்துவத்துடன் வாழ-வேண்டும் என்பதற்காக பாடுபட்டார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்-திற்காகப் பாடுபட்டவர்.
பார்ப்பன பெண்கள் மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்-கப்பட்ட நிலைகளை எல்-லாம் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பார்ப்பன பெண்-களுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். எனவே, ஒவ்-வொரு பார்ப்பன பெண்-களும் அவரவர்களுடைய வீட்டில் தந்தை பெரியார் அவர்களுடைய படத்தை மாட்டி வைக்க வேண்டும்.
நவீன இந்துத்துவா
டபுள்யு.ஏ.வில்கின்சன் என்பவர் நவீன இந்துத்-துவா என்ற ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அந்த நூலை நான் தற்-பொழுது படித்துக்-கொண்டி-ருந்தேன். பல அதிர்ச்சியான தகவல்கள் அந்த நூலில் இருந்ததை என்னால் உணர முடிந்தது-
சதி என்கிற பெய-ராலே பெண்களை நெருப்-பிலே போட்டுக் கொன்-றார்கள். இது நெருப்-பிலே பெண்களுக்கு நடந்த கொடுமை.
அதேபோல நெருப்-பில் மட்டுமல்ல; நீரினா-லும் பெண்களுக்கு பெரிய கொடுமைகள் இழைக்கப்-பட்டி-ருக்கிறது என்பதை விளக்கியிருக்கின்றார். கங்கைக் கரையில் மிகவும் குளிர்ந்த நீர் ஓடிக்கொண்-டிருக்கும் இடத்தில் ஈமச்சடங்குகள் நடப்பது வழக்கம்.
ஒரு குடும்பத்தில் சிறந்த ஒருவருக்கு ஈமச்சடங்கு நடத்த ஆரம்பிக்கின்-றார்கள். அப்பொழுது மிகவும் குளிர்ந்த நீரில் அந்த குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை கழுத்-துவரை உள்ள தண்ணீ-ரில் வலுக்கட்டாயமாக நிற்க வைக்கிறார்கள். 6 மணிநேரம் ஈமச்சடங்-குகள் நடைபெறுகிறது. அதுவரை அந்த பார்ப்-பனப் பெண் குளிர் நீரில் நடுங்கி விறைத்துப் போகிறார். பிறகு தண்-ணீரில் இருந்து மேலே வருகின்ற அந்தப் பெண்ணை ஈமச்சடங்கு நடத்துவோர் அழைத்து வருகின்றனர்_பார்ப்பனப் பெண்ணைத் தொடக்-கூடாது. ஒரு கயிற்றால் கட்டி இழுத்து வருகிறார்கள்.
நூலாசிரியர் வில்கின்-சன் கங்கைக் கரையில் நேரில் கண்ட சம்ப-வத்தை அப்படியே இந்த நூலில் பதிவு செய்தி-ருக்கிறார்.
அப்படி இழுத்து வரப்பட்ட பெண் நடக்க முடியாமல் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டு கதறுகிறார். எந்தப் பார்ப்பனப் பெண்ணும், வயது முதிர்ந்த பார்ப்பன பெண்கள்கூட இரக்கப்-பட்டு அந்தப் பெண்ணுக்-குத் தண்ணீர் கொடுக்க முன்வரவில்லை. கார-ணம், அதுதான் அவர்-களுடைய கலாச்சாரம்.
ஓர் இளம்பெண் மட்டும் யாருக்கும் தெரி-யாமல் அந்தப் பெண்-ணுக்கு குடிக்க ஒரு மடக்கு தண்ணீர் கொடுக்-கிறார். போய்க்கொண்-டிருக்கிற உயிர் திரும்பி வந்ததைப்போல தண்ணீரைக் குடித்த அந்தப் பார்ப்பனப் பெண் தனக்குத் தண்-ணீர் கொடுத்த இளம்-பெண் காலிலே விழுந்து வணங்கி கதறுகிறார். நீதான் எனக்கு தெய்வம் என்ற குமுறி அழுகிறார். இது எப்படிப்பட்ட கொடுமை என்பதை பார்ப்பனப் பெண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனால்-தான் ஒவ்வொரு பார்ப்-பனப் பெண்கள் வீட்டி-லும் தந்தை பெரியாரு-டைய படத்தை மாட்-டவேண்டும் என்று சொல்லுகின்றேன்.
இன்றைக்கு தந்தை பெரியார் அவர்-களு-டைய கொள்கை வழியில், அண்ணா அவர்-களு-டைய கொள்கை வழியில் நின்று நமது முதலமைச்-சர் கலைஞர் அவர்கள் சிறப்பாக ஆட்சியை நடத்திக் கொண்டு வரு-கின்றார். அவரு-டைய ஆட்சிக்கு நாம் எல்-லாரும் துணை-நின்று ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு பேசினார் சுப.வீரபாண்-டியன்.
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அடுத்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் ஆற்றிய உரை-யில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு:
தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த-நாள், பேரறிஞர் அண்-ணா அவர்களுடைய பிறந்த நாள் திமுக பிறந்த நாள் என்று இன்றைக்கு நாடெல்லாம்_ மூலை-முடுக்குகளில் எல்லாம் முப்பெரும் விழா உற்சாக-மாகக் கொண்டா-டப்பட்டு வருகின்றது.
திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இன உணர்-வோடு கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் ஏதோ ஒரு சடங்கிற்காக, சம்பிரதாயத்திற்காகக் கொண்டாடப்படுகின்ற விழாக்கள் அல்ல இவை.
சில பேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அவர்கள் கொண்டாடு-கின்ற விழா எப்படி-யிருக்கின்றது தெரியுமா? ஒரு முன்னாள் பெண் அமைச்சர் கோவிலில் வேப்பிலை ஆடை அணிந்-துகொண்டு ஆடி-யிருக்-கிறார். ஏனென்-றால், உலகத்திலேயே பெரிய இலை வேப்-பிலை பாருங்-கள். அந்த வேப்-பிலை-யைச் சுற்றிக்-கொண்டு கோயிலைச் சுற்றி ஆடிக்-கொண்டு வருகின்றார். அந்தக் காட்சியைப் பார்க்க ஒரு கூட்டம் அங்கேயும் இருந்தது. (சிரிக்க-_கை-தட்டல்)
நீங்களே புரிந்து-கொள்வீர்கள். அதே-போல அந்த அம்மா-வுக்குப் பிறந்தநாள் என்ற பெயராலே _ பிரார்த்-தனை என்ற பெயராலே மண்சோறு சாப்பிட்டவர்-களும் அவர்கள்தான்.
அண்ணா பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு
இப்படிப்பட்ட ஒரு கட்சியினர்தான் அண்ணா பெயரை தன் கட்சியிலும், கொடியிலும் வைத்துக்-கொண்டு அண்ணா-வையும், தந்தை பெரியா-ரையும், திராவிட என்ற பெயரையும், ஒரு லேபி-ளாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் வியா-பாரம் நடத்திக் கொண்-டி-ருக்கின்றார்கள் அந்தப் பக்த சிரோன்மணிகள். பெரியார் அண்ணா பெயரை விளம்பரத்திற்-காகப் பயன்படுத்திக்-கொண்டு வருகின்றார்கள்.
இன்றைக்குக் கலை-ஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களு-டைய கொள்-கைகளை ஆட்சியின் சட்டங்க-ளாக ஆக்கி அவருக்குப் பெருமை சேர்த்துக்-கொண்டு வருகின்றார். அதேபோல அண்ணா அவர்களது வழியில் நின்று ஆட்சியை நடத்-திக்கொண்டு வருகின்றார்.
தந்தை பெரியார் ஒரு பெரிய கூட்டத்தை சேர்த்துக் கொண்டு இயக்கத்தைத் தொடங்க-வில்லை. பிரெஞ்சுப் புரட்சியே ஒரு மாநாடு போட்டு ஆரம்பிக்க-வில்லை. ஒரு டென்னிஸ் கோர்ட்-டில்தான் தொடங்கியது.
2000ஆம் ஆண்டு-கால சமூகக் கொடு-மைகளை, அநீதிகளை அழித்து மக்களிடத்தில் ஒரு மாறுதலை ஏற்-படுத்திய-வர் தந்தை பெரியார்.
நம்முடைய முதல-மைச்--சர் கலைஞர் அவர்-கள் ஈரோட்டுக் குரு-குலத்திலே பயின்ற காரணத்தால்-தான். பாராட்டிப் போற்றி-வந்த பழைமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்-தால் இடியுதுபார்!
என்று எழுதினார்.
சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார்.
தந்தை பெரியார்-அவர்கள் தனது மேடைப் பேச்சுகளால் ஒரு சமூகப் புரட்சியை, சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தி-யவர் என்பதை எதிரி-களால்கூட மறுக்க முடியாது.
தந்தை பெரியார் அவர்-கள் ஒரிஜினல் திங்க்கர் நமது ஆசிரியர் அவர்களைப்-போல _ எங்-களைப்போல _ சபாபதி மோகன் அவர்-களைப்-போல பட்டம் படித்த-வர் இல்லை. தந்தை பெரியார். சுயமாகச் சிந்தித்தார்.
மனிதனை நினைத்தார் - பெரியார்
இந்த நாட்டிலே ஏன் உயர்ந்த ஜாதிக்காரன் ஆதிக்கம் செலுத்த வேண்-டும்? தாழ்ந்த ஜாதிக்கா-ரன் ஏன் அடிமையாக இருக்க வேண்டும்? அதற்கு அடிப்-படை மூலகாரணம் என்ன என்று சிந்தித்தார். கடவு-ளின் பெயரால், மதத்தின் பெயரால் இந்த நாட்டு மக்கள் அடிமைப் படுத்-தப்பட்-டிருக்கின்-றார்கள் என்-பதைக் கண்-டறிந்-தார். எனவேதான் கடவு-ளை மற! என்று சொன்ன தந்தை பெரியார் மனித-னை நினை! என்று சொன்னார்.
முதலமைச்சர் கலை-ஞர் அவர்கள் மனிதனை நினைத்த காரணத்தால்-தான் தந்தை பெரியார் அவர்களின் எண்ணத்தை ஈடேற்றுகின்ற வகையிலே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு--வந்தார்.
பார்த்தசாரதி கோயிலில் நம்மவர்
இங்கே அருகேயிருக்-கின்ற பார்த்தசாரதி கோயிலில் நாளைக்கு கோயில் கர்ப்பக் கிரகத்-திற்குள் சென்று மணிய-டிக்கப் போகிறார். அப்-பொழுது கோயிலுக்கு வருகின்ற பார்ப்பனர்கள் அவர்களே சொல்லிவிடு-வார்கள். கோயிலுக்குள் கடவுள் இல்லை! கடவுள் இல்லை! போகாதீர்கள் என்று பார்ப்பனர்களே சொல்லிவிடுவார்கள் என்று தந்தை பெரியார் அவர்கள்தான் இதை விளக்கிச் சொன்னார். அந்த சமூக மாறுதல் கலைஞர் ஆட்சியில் வரப்போவதை நாம் காணத்தான் போகின்றோம்.
பெரியாரின் கனவுகள் நனவாகின்றன
தந்தை பெரியார் அவர்களுடைய கனவு-கள் எல்லாம் இன்-றைக்குக் கலைஞர் ஆட்சி-யில் நனவாகிக் கொண்-டி-ருக்கின்றன.
மத்திய அரசு நிகழ்ச்-சியிலே சரஸ்வதி வந்தனா என்ற பாடல் பாடியதற்-காக மத்திய அரசு நிகழ்ச்சியையே புறக்-கணித்து-விட்டு வெளியே வந்தவர்தான் நம்முடைய பேராசிரியர் அவர்கள்.
ஆனால், சென்ற அதிமுக ஆட்சி மதச்-சார்பற்ற ஆட்சியாக நடைபெற்-றதா? ஒரு அரசாங்கம் என்றால் மதச்சார்பற்ற அரசாக நடைபெற வேண்டும். மக்களை சமத்-துவமாக, சகோதரத்துவ-மாக நடத்த வேண்டும்.
அந்த அம்மையாரின் எண்ணம்
வெர்ஜின் என்றால் என்ன பொருள் என்-றால் ஆண்களோடு எந்த தொடர்பும் இல்-லாவ-ருக்குப் பெயர்தான் கன்னி என்று சொல்-லுவார்கள்.
ஆனால் அதை-விட்டு விட்டு எல்லா ஆண்-களையும் நான் சமமாகத்-தான் பாவிப்-பேன் என்று சென்ற ஆட்சியில் ஆண்டு--கொண்டிருந்த அந்த அம்மையார் சொன்-னால் அது அவருடைய சாமர்த்-தியம். (சிரிப்பு) அந்த அம்மாவுக்கு அண்ணா-வையும் தெரி-யாது, பெரி-யாரையும் தெரியாது. மதச்சார்பற்ற தன்மையும் தெரியாது. எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
சிணீமீ வேறு; சிறீணீ வேறு. ஜாதி என்பது மிகப்பெரிய போராட்-டம் கொண்-டது. மிகக்-கொடி-யது என்று ஏசியன் டிரா-மாவில் எழுதிய நோபல் பரிசு பெற்ற குன்னர்-மிர்தால் விளக்கம் சொன்-னார்.
அரசியல் வியாபா-ரம் இன்றைக்கு அதிமுக என்ற ஒரு கட்சி அண்ணா பெயரை சொல்லிக்-கொண்டு _ தந்தை பெரி-யாரை லேபிளாக வைத்துக் கொண்டு _ அதைப் பட-மாக கொண்டு அரசியல் வியாபாரம் செய்து-கொண்டி-ருக்கிறார்கள்.
தந்தை பெரியார்-_அண்ணா கொள்கை-களை இளைய தலைமுறை-யினருக்குப் போதிக்க வேண்டும் என்பது ஆசிரி-யர் அவர்களுக்கும், கலைஞர் அவர்களுக்கும் குருதி ஓட்டத்திலே கலந்து ஒன்று.
அதனால்தான் வரும் 26ஆம் தேதி நமது ஆசிரி-யர் அவர்களுக்குத் தந்தை பெரியார் விருதும், முதல-மைச்சர் கலைஞர் அவர்-களுக்கு அண்ணா விருதும் காஞ்சிபுரத்தில் நடை-பெற-விருக்கின்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா--வில் வழங்கப்பட-விருக்-கின்றன. இவ்வாறு உரை-யாற்றி-னார் அமைச்சர் க.பொன்-முடி அவர்கள்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...