Saturday, February 1, 2020

இதோ ஒரு கோட்சே!

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட ராம பக்த கோபால்

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் களின் குடியுரிமை சட்ட எதிர்ப்புப் பேரணியில் ராம்பக்த கோபால் சர்மா என்ற பார்ப்பனர் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாண வர்கள்  குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள்  பதிவேடு உள்ளிட் டவைகளுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று (30.1.2020) அந்த பல்கலைக்கழக மாணவர்கள் ராஜ்காட் வரை பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
அப்போது திடீரென ஒருவர் பேரணி யின் முன் துப்பாக்கியுடன் வந்துள்ளார்.  அவர் மாணவர்களைப் பார்த்து இதோ உங்கள் சுதந்திரம்,  நான் உங்களுக்குச் சுதந்திரம் தருகிறேன்,  பாரத்மாதாகி ஜே, ஜெய்சிறீராம் எனக் குரல் எழுப்பியபடி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இந்த சம்பவம் மக்களிடையே கடும் பீதியை உண்டாக்கி உள்ளது.
இந்த சம்பவம் காணொலி படமாக்கப் பட்டு பல இணைய தள பக்கங்களில் உலவி வருகிறது.   கருப்பு ஜாக்கெட் அணிந்த ஒரு மனிதர் ஒற்றைக் குழல் துப்பாக்கியால் சுடும் காட்சி அந்த காணொலியில் பதிவாகி உள்ளது.  துப்பாக்கியால் சுட்டவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக் கழகத்தின் மாஸ் கம்யூனிகேஷன் பிரிவு மாணவர் காஷ்மீரைச் சேர்ந்த ஷதாப் நஜார் காயமடைந்துள்ளார்.   அவர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய, ராம்பக்த கோபால் என்று அடையாளம் காணப் பட்ட, அந்த நபர், பெரிய அளவிலான ஒரு படுகொலையை நடத்துவதற்காகத் தயாராக ஜாமியா பகுதிக்கு வந்ததாகத் தெரிகிறது. அவர் தனது முகநூலில், எனது பெயர் ராம்பக்த கோபால். பயோவுக்கு இது போதும். மற்றவை, நான் சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வியாழக்கிழமை பிற்பகலில் அவரது முகநூல் இடுகைகளில் ஒன்று, ஷாஹீன் பாக். உன் விளையாட்டு முடிந்து விட்டது, என்று தெரிவித்தது.
இதற்கு முந்தைய மற்றொரு இடு கையில், அவர் ஒத்த கருத்துடைய இந்துத் துவ வெறியருக்கு இவ்வாறு சவால் விடுத்திருந்தார்:
உங்கள் முகநூலை பின்தொடர்பவர் களில் பாதி எண்ணிக்கை எனக்கிருந்தால் கூட, நான் எப்போதோ ஷாஹீன் பாக் அய் ஜாலியன் வாலாபாக் ஆக மாற்றியிருப்பேன்.
ராம்பக்த  கோபாலை கைது செய்ததாக டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஜாமியா பகுதியில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, இதோ உங்கள் சுதந்திரம், என்ற கூச்சலுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய அதே வேளை, டில்லி போலீஸ் ஜிந்தாபாத், இந்துஸ்தான் ஜிந்தாபாத், ஆகிய முழக்கங்களையும் அந்நபர் முழங்கியதாகத் தெரிகிறது.
இத்தகைய துணிச்சலான பயங்கர வாதச் செயல் கண்முன்னே நடந்தேறியும் துளியும் பதட்டப்படாமல் காவல்துறையினர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தேசப்பிதா மகாத்மா காந்தி, 1948 ஆம் ஆண்டில் இதே தேதியில் ஒரு இந்துத்துவ பயங்கரவாதியான நாதுராம் கோட்சே வால் படுகொலை செய்யப்பட்ட அதே நாளில் இச்சம்பவமும் நடந்தேறியுள்ளது.
நாடு முழுவதும்  காந்தியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் இச்சம்பவமும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...