Thursday, January 23, 2020

மத்திய அரசுக்கு முடிவெடுக்கும் திறன் இல்லை மத்திய அமைச்சரே ஒப்புதல்

மத்திய அரசிடம் வளர்ச்சித் திட்டங்களுக்கான போதிய நிதி இருந்தாலும், முடிவுகள் எடுக்கும் திறன் அதற்கு போதாது என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசிய தாவது: நான் கடந்த அய்ந்து ஆண்டுகளில் ரூ.17 லட்சம் கோடிக்கான வேலைகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளேன். இந்த ஆண்டில் ரூ.5 லட்சம் கோடிக்கான வேலைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். மத்திய அரசிடம் பணத்துக்கு பற்றாக்குறை கிடையாது. ஆனால் முடிவு களை எடுக்கும் திறன்தான் குறைவாக இருக்கிறது. அதனால் திட்டங் களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...