Tuesday, December 17, 2019

இத்தாலியில் 2ஆம் உலகப்போரின் வெடிகுண்டு கண்டெடுப்பு

இத்தாலியின் தெற்கு பகுதியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள துறை முக நகரம் பிரிந்தி. இங்குள்ள திரையரங்கு ஒன்றை புனர மைக்கும் பணிகள் அண்மை யில் நடந்தது.
அப்போது அங்கு கட்டு மான பணிக்காக குழி தோண் டியபோது வெடிக்காத வெடி குண்டு ஒன்று கண்டெடுக்கப் பட்டது. அதனை ஆய்வு செய்ததில் அது, 2ஆம் உல கப்போரின் போது 1941ஆம் ஆண்டு இத்தாலி மீது இங் கிலாந்து வீசிய வெடிகுண்டு என தெரியவந்தது.
இதையடுத்து, 1 மீட்டர் நீளமும், 200 கிலோ எடை யையும் கொண்ட அந்த வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்க வைக்கும் தீவிர முயற்சியில் இத்தாலி ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.
பல்வேறு கட்ட ஆராய்ச் சிகளுக்கு பிறகு ரிமோட் மூலம் அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய அதிகாரி கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையொட்டி முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு கண்டெடுக் கப்பட்ட பகுதியில் இருந்து 1,617 மீட்டர் சுற்றளவு பகுதியில் வசிக்கும் சுமார் 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப் பட்டனர். சுமார் 1,000 பாது காப்பு படை வீரர்கள் மற்றும் 250-க்கும் அதிகமான தன்னார் வ லர்கள் மக்களை பாதுகாப் பான இடத்துக்கு வெளியேற் றும் பணிகளை மேற்கொண் டனர்.அதுமட்டும் இன்றி பிரிந்தி நகரில் உள்ள உள்ளூர் விமான நிலையம், ரயில் நிலையம், 2 மருத்துவமனை கள் மற்றும் சிறைச்சாலை ஆகியவை பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.
சிறையில் இருந்த 200-க் கும் அதிகமான கைதிகள் 35 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு சிறைக்கு மாற்றப் பட்டனர். மேலும் வெடி குண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, மூத்த ராணுவ அதிகாரிகளின் கண்காணிப்பில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் திட்டமிட்டப்படி ரிமோட் மூலம் அந்த வெடிகுண்டை வெற்றிகரமாக செயலிழக்க செய்தனர்.
முன்னதாக கடந்த 1ஆம் தேதி இத்தாலியின் துரின் நகரில் 2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட தும், சுமார் 10 ஆயிரம் மக்களை வெளியேற்றிவிட்டு ராணுவவீரர்கள் அந்த வெடி குண்டை செயலிழக்க செய்த தும் குறிப்பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...