Thursday, June 13, 2019

எரிவாயு குழாய் திட்டம்: மத்திய அரசு உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு

தூத்துக் குடியை சேர்ந்த செல்லம் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்தியன் ஆயில் நிறுவ னத்தின் சார்பில் ரூ.700 கோடி மதிப்பில் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு ஆலைகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் செயல்பட உள்ளது.
இதற்காக ஆறுகள், கால் வாய்கள், சாலைகள், வனப் பகுதிகள், பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள், சக்கரைக் கோட்டை பறவைகள் சரணா லயம், மன்னார் வளைகுடா பகுதியின் பவளப்பாறைகள் வழியாக குழாய் பதிக்கப் படுகிறது. இதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
இதுதொடர்பான ஒரு வழக் கில், ஏற்கெனவே நிலங்களை கையகப்படுத்த இடைக்காலத் தடை உள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம்  தூத்துக்குடி இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்திற்கு முன் கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 23.8.2018இல்  உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தால் பறவைகள் சரணாலயம், பவளப்பாறைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்துக்கு  சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசா ரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.புகழேந்தி ஆகி யோர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 17க்கு தள்ளி வைத்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...