Saturday, April 13, 2019

பாஜகவில் உள்ள தமிழர்கள் சிந்திப்பார்களா?

பாரதிய ஜனதாவோ, ஆர். எஸ். எஸ் - சோ கடந்த அய்ந்து வருடமாக தமிழ்நாட்டில் நடத்திய கூட்டங்களில் பிரச்சாரங்களில் வீர சிவாஜி, சாவர்க்கர் கேட்கேவர் படங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் தேசபக்தர்கள்னு பொய் சொல்லுவாங்க இருந்தாலும் பரவால்ல விட்றலாம்.
இதே பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் வடமாநிலங்களில் நடத்திய கூட்டங்களில் தமிழ்நாட்டின் தேசத்திற்காக உயிரை கொடுத்த மருது சகோதரர்கள் பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், வ.உ.சி, அழகுமுத்து கோன், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், போன்றோரின் படங்களை வடமாநிலங்களில் எங்காவது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி இருக்கிறார்களா?
இல்லை என்றால் அவர்களின் நோக்கம் என்ன?.
வடநாட்டு மார்வாடிகளை கூட்டிவந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பின்புலமாக இருக்கும் பாரதிய ஜனதா, ஆர் எஸ் எஸ், தமிழ்நாட்டு முதலியார்களையோ, செட்டியார்களையோ, நாடார்களையோ, கவுண்டர்களையோ குஜராத், ராஜஸ்தான் டில்லி கூட்டிச் சென்று தொழில் தொடங்குவதற்கு, வளர்வதற்கு வாய்ப்பளித்து இருக் கிறார்களா? இந்திய துணைக்கண்ட மக்களின் பணத்தை வங்கிகளின் மூலம் கொள்ளையடிக்கவைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறவர்களில் பெரும்பான்மையோர் மோடி மற்றும் அமித்ஷா வின் இனமான குஜராத் மார்வாடி இனம் என்பதை நினைவில் கொள்வோமாக!
வடநாட்டு ராமனை, கிருஷ்ண ஜெயந்தியை, ஹோலியை தமிழ்நாட்டில் விழா எடுக்கும் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாட்டின் முருகனுக்கோ, கருப்பசாமிக்கோ, அய்யனார் போன்ற கடவுளர்களுக்கோ வடநாட்டில் விழா எடுத்திருக் கிறார்களா? இல்லை என்றால் அவர்களின் நோக்கம் என்ன?
இந்தியை, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்கும் இந்த வடநாட்டு கொள்ளைக்கார கும்பல் தமிழை உத்தரப் பிரதேசத்திலோ, குஜராத்திலோ, பீகாரிலோ திணிப்பார்களா? அப்படி என்றால் இவர்களின் நோக்கம் தான் என்ன?
மதத்தைக்காட்டி தமிழ்மொழியை, தமிழர் பண்பாட்டை, தமிழர் வாழ்வாதாரத்தை, தமிழக இயற்கை வளங்களை சூறையாடுவது, தமிழினத்தை இரண்டாந்தர குடிமக்களாக்கி சமுகநீதியை ஒழித்து அவரவர் குலத்தொழிலை செய்ய வைத்து பார்ப்பன அடிமைகளாக்குவது என்பதைத்தவிர வேறொன்றுமல்ல!
பிஜேபி, ஆர்எஸ்எஸ் என்பது தமிழர்களின் நான்காயிரம் ஆண்டு வரலாற்று எதிரியின் நவீன வடிவம் என்பதை புரிந்து கொண்டால் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.
சிந்து சமவெளியில் இருந்து நம்மை விரட்டி அடித்தவர்கள் இப்போது தமிழ்நாட்டிலும் நம்மை துடைத்தெறிய மதம் என்னும் ஆயுதத்தைக் கொண்டு பரவி இருக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகமான அறிவுச் சமுகம் ஆகிய தமிழ் சமுகம் இந்த எதிரிகளை புத்திசாலித்தனத்தோடு துடைத்தெறிய வேண்டும்.. தமிழ் சமுகத்திற்கு வரும் பிரச்சினைகளுக்கு மூல காரணம் இவர்கள் தான் என்பதை புரிந்துகொள்வோம். நம் கையை வைத்தே நம் கண்ணை குத்துவது தான் ஆரிய பார்ப்பன குள்ளநரித்தந்திரம்.
தமிழன் கண்டாய்! ஆரியன் கண்டாய்! - என்ற திருமூலர் ஆரிய இனத்தை வேறுபடுத்திக்காட்டியதும், ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் என்ற தமிழிலக்கியப்பதிவுகளும், "ஆரிய பாசையாகிய சமஸ்கிருதத்தில் நாட்டம் கொள்ளாமல் தென்மொழியாகிய தமிழில் நாட்டம் கொள்ளச்செய்த இறைவனுக்கு நன்றி" - என்று வள்ளலார் சொன்னதெல்லாம் ஆரிய இனத்திற்கும் தமிழினத்திற்குமான முரண்பாடுகளின் வரலாற்று தொகுப்பாக நாம் பார்க்கவேண்டாமா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...