Friday, May 11, 2018

கருநாடகம்: பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் 10 ஆயிரம் வாக்காளர் அட்டைகள்

பிரமுகர் ஒப்புதல் வாக்குமூலம்
ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் பா.ஜ.க. பிரமுகர் மஞ்சுளா

பெங்களூரு, மே 10 கருநாடகாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளில் பாஜகவினருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைகள் இருந்த வீட் டின் உரிமையாளர் பாஜக கட்சியில் உறுப்பினராக இருப்பதும் தெரிய வந் துள்ளது. கருநாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்மும்முரமாகநடந்து வருகிறது. வரும் மே 12 ஆம் தேதி வாக்குப் பதிவும், மே 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில், கருநாடக மாநில தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை பிரச்சினை ஒன்று உருவாகி உள்ளது. நேற்று முதல் நாள் இரவு ராஜராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கொத்தாக நிறைய வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 10,000 வாக்காளர் அடை யாள அட்டைகள் நேற்று முதல்நாள் ஒரு வீட்டின் அறையில் பறிமுதல் செய் யப்பட்டது. இதுபற்றிய விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்தச் செயலுக்கு பின்பாக காங்கிரசு இருக்கிறது என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. அந்தத் தொகுதியின் காங்கிரசு எம்எல்ஏதான் இந்த மோச டியை செய்து இருக்கிறார் என்று கூறி யுள்ளது. அவரை கைது செய்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்து இருந்தது.

காங்கிரசு குற்றச்சாட்டு

கைப்பற்றப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்
ஆனால், காங்கிரசு இதில் புதிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. அதன் படி பாஜகவின் உறுப்பினர் மஞ்சுளா நஞ்சமரி என்பவர்தான் அந்தக் கட் டடத்திற்கு உரிமையாளர் என்று கூறி யுள்ளது. அவர்தான் இந்த மோசடிக்கு காரணகர்த்தா என்றும் காங்கிரசு குற்றச் சாட்டு வைத்து இருக்கிறது. இதனால், அவரை கைது செய்து தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது. கடைசி நேரத்தில் பாஜக இதில் திடீர் என்று பல்டி அடித்தது. அதன் படி மஞ்சுளாவை யார் என்றே தெரி யாது என்று பாஜக குறிப்பிட்டது. மஞ் சுளா எங்கள் கட்சியில் உறுப்பினர் இல்லை, எங்கள் கட்சியில் உள்ள யாருமே மஞ்சுளாவுடன் அரசியல் ரீதியாக தொடர்பில் இல்லை என்று கூறியது. காங்கிரசு தேவையில்லாமல் பழிபோடுகிறது என்றும் குற்றச்சாட்டு வைத்து இருந்தது.
ஒப்புதல் வாக்குமூலம்
தற்போது இதில் மஞ்சுளா மற்றும் அவரதுமகன் சிறீதர் விளக்கம் அளித் துள்ளனர். அதன்படி, ''நாங்கள் இப் போதும் பாஜகவில்தான் இருக்கிறோம். எங்களுக்கு பாஜக கட்சியினர் எல் லோரிடத்திலும் நல்ல தொடர்பு இருக் கிறது. பாஜக உறுப்பினர்கள் ஏன் இப்படி எங்களை கைவிட்டார்கள் என்று தெரியவில்லை. பாஜக எங்களை கைவிட்டுவிட்டது'' என்று வருத்தமாகக் கூறியுள்ளனர்.
குறிப்பு: பா.ஜ.க. பிரமுகரின் வீட்டிலி ருந்து கைப்பற்றப்பட்ட வாக்காளர் அட்டைகள் அனைத்தும் உண்மை யானவைதான். போலியல்ல என்று தேர்தல் ஆணையம் அறுதியிட்டுக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...