Tuesday, November 21, 2017

தமிழக மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது மத்திய அரசு: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

 சென்னை, நவ. 20- தி.மு.க. செயல் தலை வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:


செய்தியாளர்: தமிழக மீனவர்களை இந்திய கடற்படை சுட்டதாகவும், மீன வர்களை இந்தியில் பேசுமாறு கட்டா யப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந் துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அது இந்திய கடற் படை சுட்ட குண்டு இல்லை என்றும், அதுபற்றி விசாரணை நடப்பதாகவும் மாறுபட்ட தகவலை தெரிவித்துள்ளாரே?

மு.க.ஸ்டாலின்: ராமேசுவரம் பகு தியில் தமிழக மீனவர்கள் சுடப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. அதை கண்டித்தும், தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அங்கிருக்கக்கூடிய மீனவர்கள், தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், எங்கிருந்து அந்த குண்டு வந்தது என்று ஒரு கேள்வியை எழுப்பி, இப்படியொரு கருத்தினைச் சொல்லியிருப்பது, பாதிக் கப்பட்ட மீனவர்களின் உணர்வுகளை உள்ளபடியே கொச்சைப்படுத்துவது போல அமைந்திருக்கிறது, என்பதை மிகுந்த வேதனையோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

செய்தியாளர்: ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தில் இரவு முழுவதும் தொடர்ந்து சோதனை நடந்து கொண்டிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?.

மு.க.ஸ்டாலின்: ஏற்கெனவே இது குறித்து நான் பலமுறை சொல்லியிருக் கிறேன். முன்னாள் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா இறந்தபிறகு, இந்த ஆட்சியில் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் அலுவலகத்திலும், வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதன் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. அதன் பிறகு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்து, ரூ.89 கோடி ரூபாய் பணம் கொடுக்கப் பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அதில் முதல்அமைச்சர் உள்பட பல அமைச்சர்களின் பெயர்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன. அவர்கள் மீது இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டது?.

அதுமட்டுமல்ல, டி.ஜி.பி. மற்றும் இதே அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகி யோர் குட்கா விற்பனை செய்ய மாமூல் வாங்கியதை அதே வருமான வரித்துறை சோதனை செய்து, வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு என்ன வானது?. நத்தம் விஸ்வநாதன் வீட்டில் சோதனை நடந்தது, அன்புநாதன் வீட் டில் சோதனை நடந்தது, மணல் மாபியா சேகர்ரெட்டியின் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடந்தது, சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி வீட்டில் சோதனை நடந்தது, இவைகள் எல்லாம் என்ன ஆயின?.

எதற்காக இந்தச் சோதனைகள் நடை பெற்றன? அவற்றில் உண்மையாக என்ன வெல்லாம் கண்டுபிடித்து இருக்கிறார் கள்? என்னென்ன வழக்குப் போட்டு இருக்கிறார்கள்? போன்றவற்றிற்கெல் லாம் விளக்கம் வந்தபிறகுதான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...