Friday, July 14, 2017

'நவீன மகாபாரதம்!'

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சூதாட்டத்தில் பணம் சொத்து அத்தனையும் இழந்ததால், இறுதி யாக தனது மனைவியை சூதாட்டத்தில் வைத்து விளையாடிய கேவலம் நடந்துள்ளது. அதிலும் அவர் தோல்வியடைந்தார். இந்த நிலையில் சூதாட்டத்தில் வென்றவர்கள் அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக கணவர் உள்ளிட்ட ஏழு பேரை இந்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

ஜான்சாசவும் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார். அப்புகாரில் அவர் கூறியதாவது, "எனக்கும், கிஷோர் சர்மா என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இத்திருமணத்தில் எனது பெற்றோர்கள் பெரும் பொருட்செலவு செய்தனர். எங்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்த நிலையில் எனது கணவர் குடிப்பழக்கம் மற்றும் சூதாட்டத்தில் அடிமையாகிவிட்டார்.  

நீண்ட நாள்களாக சூதாடி எனது பெற்றோர் கொடுத்த பொருள்  மற்றும் எங்களுக்குச் சொந்த மான வீடு, நிலம் உள்ளிட்ட அனைத்தையுமே சூதாடி இழந்துவிட்டார். இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு கன்ஷியாம் சவுக்கிதார் மற்றும் நவுசத்ராம் இருவருடன் தவுலத்பூர் என்ற ஊரில் சூதாடியுள்ளார். இந்த சூதாட்டத்தில் என்னைப் பணயமாக வைத்து சூதாடியுள்ளார். 
  
சில நாள்களுக்கு முன்பு மூன்று பேர் எனது வீட்டிற்கு வந்து "உனது கணவர் எங்களிடம்  தோற்றுவிட்டார். அவர் தோற்றப் பணத்தை கொடு" என்று என்னை வற்புறுத்தினர். நான் மறுத்த போது உன்னையும் சேர்த்து பணயம் வைத்துதான் விளையாடி தோற்றுவிட்டார், என்று கூறி என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன் பிறகு அவர்கள் 'நடந்ததை வெளியே சொன்னால் குழந்தைகளைக் கொலைசெய்துவிடுவோம்' என்று மிரட்டிவிட்டுச்சென்றுவிட்டனர்.  

இவர்களுக்குப் பயந்து நான் எனது குழந்தை களை அழைத்துக் கொண்டு எனது தாய்வீடு சென்றுவிட்டேன். கடந்த சனிக்கிழமை அன்று மீண்டும் என் வீட்டிற்கு வந்த அவர்கள் "உனது கணவர் மூத்த பெண்ணையும் பணயமாக வைத்து தோற்றுவிட்டார், ஆகவே உனது மூத்த பெண்ணை எங்களுடன் அனுப்பிவிடு" என்று மிரட்டினர். நான் அவர்களை விரட்டிவிட்டேன், ஆனால் அவர்கள் மீண்டும் என் வீட்டிற்கு வந்து மூத்த பெண்ணை அவர்களுடன் அனுப்புமாறு தொடர்ந்து மிரட்டுகின்றனர்" என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  

இவரது புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்து விட்டனர். இதனை அடுத்து அவர் மாவட்ட காவல்துறை ஆணையரிடம் (இந்தூர் கிழக்கு)  புகார் தெரிவித்தார். இதனை அடுத்து காவல்துறை ஆணையர் இப்புகாரை விசாரிக்க ஆணையிட்டார்.   

விசாரணையில் இவரது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் சூதாடியதும், மனைவியைப் பணயம் வைத்து தோல்வியடைந்ததும் தெரியவந்தது, இதனைத் தொடந்து பெண்ணின் கணவர், அவரது நண்பர்கள் உட்பட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்து மதத்தின் இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமும் தான்! இரண்டு  இதிகாசங்களுமே பெண்களை இழிவுபடுத்தக் கூடியவை தான்!

கர்ப்பிணிப் பெண் என்று தெரிந்திருந்தும் தனது மனைவியைக் காட்டுக்கு அனுப்பியவன் இராமன். காதலை வெளிப்படுத்திய பெண்ணின் மூக்கையும், முலையையும் சிதைத்தவன் இராமனின் உடன் பிறப்பு இலட்சுமணன்.

மகாபாரதமோ 'அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி' என்று புது இலக்கணம் வகுத்தது! மனை வியை வைத்து சூதாடியிருக்கிறார்கள் - அந்தக் கலாச்சாரத்தின் தொடர்ச்சிதான்  - தாக்கம்தான் பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடந்தி ருக்கிறது. இந்த இலட்சணத்தில் 1000 கோடி ரூபாய் செலவில் மகாபாரதத்தைத் திரைப்படமாக எடுக்கப் போகிறதாம் மத்திய பிஜேபி அரசு,  இதைவிட வெட்கக் கேடு வேறு உண்டா? தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் 'இது இந்துமத அரசு' என்று முத்திரைப் பதிப்பதில்தான் பா.ஜ.க. முந்திரிக் கொட்டையாகத் துள்ளுகிறது. அரசமைப்புச் சட்டத் தில் வலியுறுத்தப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் காலில் போட்டு மிதிக்கும் மத்திய அரசு சட்டப்படி தொடரத் தகுதி உடையது தானா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...