Monday, April 1, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு - பணிநியமன இட ஒதுக்கீட்டு மோசடி - (4)


தினுசு தினுசா மோசடி! உட்கார்ந்து யோசிப்பாங்களோ?
ஆசிரியர் தகுதித் தேர்வு - பணிநியமன இட ஒதுக்கீட்டு மோசடி
TET தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என இரு தரப்பினருக்கு நடத்தப்பட்டது. அதாவது தாள் ஒன்று (Paper-I) இடைநிலை ஆசிரியர்களுக்கானது. தாள் இரண்டு என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது.
12.7.2012இ-ல் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாட்டில் நடத்தப்பெற்றது. இதில் தேர்வெழுதி யவர்களிலிருந்து 60%-க்கு மேல், அதாவது 90 மதிப் பெண்களுக்கு மேல் (மொத்தம் 150 மதிப்பெண்கள்) எடுத்து தேர்ச்சி அடைந்தவர்களின் பட்டியல் 24.08.2012 அன்று வெளியிடப்பட்டது. (http://trb.tn.nic.in/TET2012/24082012/status.asp)
அதில், தாள் ஒன்று எனப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் வெற்றிபெற்றவர்கள் -  1,735 பேர் (மொத்தம் தேர்வு எழுதியவர்கள்: 2,88,588)
GT - 67+ 2 (Telugu) + 1 (Malayalam)
BC - 1023+ 2 (Telugu)
BCM - 41 (பிற்படுத்தப்பட்டோர் - முஸ்லிம்)
MBC - 465+1 (Telugu)
SC -115 
SCA -17 (தாழ்த்தப்பட்டோர் - அருந்ததியர்)
ST -1
தாள் இரண்டு எனப்படும் பட்டதாரி ஆசிரியர் களுக்கான தேர்வில் வெற்றிபெற்றவர்கள் - 713 பேர் (மொத்தம் தேர்வு எழுதியவர்கள்: 3,88,175 பேர் )
Maths and Science category: (283) 
GT -8 
BC -114 
BCM -3 
MBC -128 
SC -25 
SCA -3 
ST -2 
Social Science Category: (430) 
GT -13+ 2 (Malayalam)
BC -227+ 2 (Malayalam)
BCM -8 
MBC -138 
SC -37 
SCA -2 
ST -1
இப்படி வெளியிடப்பட்ட பட்டி யலைத் தான் அவர்கள் ஜாதி வாரியான பட்டியல் என்று சொல்லி ஏமாற்றினார்கள்.
இதில் ஏமாற்ற என்ன இருக் கிறது? அது தான் எல்லா பிரி வினர் பற்றியும் தனித்தனியாக கொடுத்திருக்கிறார் களே, சரியாகத் தானே வகுப்புவாரி பின்பற்றப்பட்டி ருக்கிறது? என்று நாமெல்லாம் ஏமாற வேண்டு மென்பது தான் அவர்களின் நோக்கம்.
எப்படி ஏமாற்றப்பட்டோம்?
1. 60% மதிப்பெண் தான் அளவுகோல் என்ற பொதுப் போட்டிக்கான முடிவுகள் மட்டும் தான் இவை. முறையாக வழங்கப்படவேண்டிய (NCTE விதிப்படி) சமூகநீதிப்படியான தளர்த்தப்பட்ட தகுதி அளவுகோல் இல்லாமல் வெளிவந்த பட்டியலே இது!
2. GT - என்று General Turn என்ற பொருளில் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட் டோர் அனைவருமே முற்றிலும் பொதுப் போட்டிக்கான தகுதி அடிப்படையிலேயே (60% பெறவேண்டும் என்ற பொதுவான அளவுகோலின் அடிப்படையிலேயே) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றால் அனைவருமே pen Competition பிரிவில் வந்தவர்கள் தானே! அதாவது, அனைவருமே அவர்கள் குறிப்பிட்டது போல, General Turn தானே!
3. பிறகென்ன BC, MBC, SC, ST என்றெல்லாம் போட்டுவிட்டு தனியே GT என்று பார்த்தால் GT என்று குறிப்பிட்டுள்ளோர் அனைவருமே இட ஒதுக்கீடு இல்லாத முற்பட்ட வகுப்பினர். அதாவது Forward Caste-அய் சேர்ந்தவர்கள்.
4. Open Competition (OC) என்பதை Other Castes (OC) என்று அரசியல் சட்டத்திற்கு விரோதமாகப் பயன்படுத்தக்கூடாது என்று எத்தனையோ தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் தெரிவித்துவிட்டபின்னும் (ஆசிரியர் பணி நியமனத்திலேயே அப்படியொரு தீர்ப்பு இருக்கிறது. அதைப் பிறகு பார்ப்போம்) General Turn (பொது வாய்ப்பு) என்று போட்டுவிட்டு அதில் முற்பட்ட வகுப் பினரை (FC) மட்டும் கொடுத்திருப்பதை அயோக்கியத் தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?
மேலோட்டமாகப் பார்க்கும் போது அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள் ளது போன்ற தோற்றத்தை உருவாக்கத் தான் இந்த மோசடி பட்டியல்.
இந்தப் பட்டியலைப் பார்த்தாலே புரியும்.
எடுத்துக்காட்டாக, இடைநிலை ஆசிரியர்களுக்கான (தாள் -1) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளhttp://trb.tn.nic.in/TET2012/24082012/P1RESULT.pdf
உள்ள பட்டியலைப் பாருங்கள். (கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
122 மதிப்பெண்கள் எடுத்து முதலாமவராக வந்திருப் பவரை BC என்றும், 116 மதிப்பெண்கள் எடுத்து 4-ஆம் இடத்தில் உள்ளவரையும், 111 மதிப்பெண்கள் எடுத்து 17-ஆம் இடத்தில் உள்ளவரையும் GT என்று குறிப்பிட் டுள்ளதை மோசடி என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?
தாள் இரண்டு எனப்படும் பட்டதாரி ஆசிரியர் களுக்கான தேர்வில் 142 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்திருப்பவர் BC என்றும், 107 எடுத்து 29-ஆம் இடம் பிடித்திருப்பவர் GT என்றும் பட்டியலில் உள்ளது.
இப்படித்தான் இந்தப் பட்டியல்கள் முழுக்கவும் இருக்கிறது.
BC, MBC, SC, ST என்று அனைவரையும் குறிப்பிட்டுக் காட்டியபிறகு GT  என்பது யார்? உயர்ஜாதியினரைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்?
பிறகு இதையே தனித்தனியாக பிரித்துப் போட்டு Communal list என்று ஒரு பட்டியல் வேறு. அதுவும் நாம் ஏமாறுவதற்கு!
முற்றிலும் தகுதி அடிப்படையில் தான் தேர்வு என்றால் communal wise list வெளியிடவேண்டிய அவசியமே இல்லையே! இதே போன்ற மோசடியைத் தான் இவர்கள் முது நிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அரங்கேற்றி னார்கள். அந்த பட்டியலை உயர்நீதிமன்றம் ரத்துசெய்து, கண்டனம் தெரிவித்து தீர்ப்பு தந்தது அக்டோபர் 01, 2012-ல்! (அந்த விவரம் பின்னர் வெளிவரும்) ஆனால், அதே நடைமுறையைத் தான் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் விசயத்தில் பின்பற்றியது TNTRB.
பொதுப் போட்டி என்பதில் அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இடம் உண்டு. தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், முன்னேறிய வகுப்பினர் என் றெல்லாம் பிரிவு காட்டாமல், முற்றிலும் மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு, பொதுப் போட்டிக்கான இடங்கள் நிரப்பப்பட வேண்டும். முன்பெல்லாம், பொதுப் போட்டி என்ற இடத்தில் முன்னேறிய வகுப்பை மட்டும் நிரப்பி, இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கு அவர்களது இட ஒதுக்கீட்டு அளவுக்கேற்ப இடங்களை நிரப்பி மோசடி செய்யப்படும். எடுத்துக்காட்டாக, 69% இட ஒதுக்கீடு என்றால் அதில் மட்டும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை அடக்கிவிட்டு, 31% பொதுப்போட்டி என்பதை முற்பட்ட வகுப்பினருக்கு மட்டும் முற்றிலும் திறந்துவிட்டுவிடுவது. இதன் மூலம் பொதுப் போட்டியான 31% -அய் உயர் ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டைப் போல நோகாமல் திருடிக் கொள்வார்கள். அது வேலை வாய்ப்பில்!
ஆனால், இங்கே கல்வி இட ஒதுக்கீட்டில்  பொதுப் போட்டி முடிவை மட்டும் அறிவித்துவிட்டு, அதையே இட ஒதுக்கீட்டுப் பட்டியல் போல காட்டுவது புதுவகையான மோசடி.
வடிவேலு சொல்ற மாதிரி, தினுசு தினுசா கண்டுபிடிக்கிறாங்களே! உட்கார்ந்து யோசிப்பாங்களோ?
கிட்டத்தட்ட 6.5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2,448 பேர் மட்டுமே என்றது 2012 ஆகஸ்ட் 24 ஆம் தேதி வெளிவந்த அந்த தேர்வு முடிவு!
காரணம் என்ன சொல்லப்பட்டதென்றால்...
150 கேள்விகளை 1:30 மணி நேரத்திற்குள் (90 நிமிடங்களுக்குள்) முடிக்க வேண்டும் என்பதால் தான் தேர்வு எழுதியவர்களில் 0.5% (அரை சதவிகிதம்) கூடத் தேர்ச்சி அடையவில்லை. அரசுப் பள்ளியிலேயே மொத்த காலிப் பணியிடம் 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கிறது. எனவே மறு தகுதித் தேர்வு ஒன்று நடத்த இருக்கிறோம். முதல் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் மறு தகுதித் தேர்வு எழுதலாம். இதில் 1.30 மணி நேரங்கள் என்பதற்குப் பதிலாக, 3 மணிநேரங்கள்  தருகிறோம். ஆனால் அதே 60% மதிப்பெண்கள் எடுத்தால் தான் தேர்ச்சி. நாங்க தரத்தில யெல்லாம் சமாதானம் செஞ்சுக்க முடியாது என்றார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால், ஏதோ பாவம் பொழைச்சுப் போகுது என்று நேரத்தையெல்லாம் கூட்டி, கோடிக் கணக்கில் செலவு செய்து அடுத்த தேர்வையும் நடத்துவது போல் தோன்றும். ஆனால், NCTE  வழிகாட்டுதல் படி, வகுப்புவாரியான தனித் தனியான தகுதி அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட் டிருந்தால் தேர்ச்சி பெற்றோரின் அளவு பல மடங்கு ஏறியிருக்கும்.
ஆனால், அதைச் செய்யாமல், மறுதகுதித் தேர்வு அறிவித்தது யாருக்காக? அதுவும் உயர்ஜாதியினருக்காக மட்டுமே!
எப்படி என்றால், NCTE விதிப்படி தகுதி மதிப் பெண்ணைத் தளர்த்தி அறிவிக்க வேண்டியது, அறிவிக்க முடிந்தது - இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டுமே! எக்காரணம் கொண்டும், எச்சூழலிலும் பொதுப் பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்ணைத் தளர்த்த முடியாது. அதாவது 24.08.2012-இல் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குரிய 55% அல்லது 50% என்று வழங்கியிருந்தால், எந்த உயர் ஜாதியினரும் அதில் இடம்பெற முடியாது. அதனால், எண்ணற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோர் வாய்ப்புப் பெற்றிருப்பார்கள். ஆனால் அது உயர்ஜாதியினருக்குப் பயன்படுமா?
கருணையுள்ளத்தோடு, தாயுள்ளத்தோடு மறு தேர்வு என்று நடத்தினால் தான் உயர்ஜாதியினருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உரிய தனித்த தகுதி மதிப்பெண் வழங்கி யிருந்தாலே முடிந்திருக்கக் கூடிய விசயத்தை, கோடிக் கணக்கான ரூபாய் செலவழித்து மறுதகுதித் தேர்வு நடத்தி செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று யோசித்தாலே அது உயர்ஜாதியினருக்கு மட்டுமே என்பது புலப்படும்.
இந்த மறுதகுதித் தேர்வில் மற்றுமொரு மோசடி என்னவென்றால், முதல் முறை தேர்வு எழுதியவர்கள், இம்முறை எழுதக்கூடாது என்று சொன்னது. அப்படியொரு விதி NCTE-ஆல் வகுக்கப்படவில்லை. ஒரே ஆண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வுகள் நடத்தப்படலாம். அதில் வெற்றிபெற்றோர் கூட மீண்டும் தேர்வு எழுதி, தங்களது மதிப் பெண்ணைக் கூட்டிக் கொள்ளலாம் என்பது தான் விதி.
60%-க்கும் மேல் எடுக்கும் மதிப்பெண்கள் இடை நிலை ஆசிரியர்களுக்கு மதிப்பெண்ணைக் கூட்டிக் கொள்வதில் பயனில்லையே தவிர, பட்டதாரி ஆசிரி யர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற வாய்ப்புக் கிடைக்கும். பயன் இருக்கிறதோ இல்லையோ, அப்படி எழுதும் வாய்ப்பு NCTE-ஆல் வழங்கப்பட்டிருந்தும், தடுக்கப்பட்டிருக்கிறது) ஆனால், தமிழ்நாட்டில் நடைபெற்ற மறுதகுதித் தேர்வில் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏனெனில், இதற்கு போட்டித் தேர்வு போன்ற தோற்றத்தைத் தருவதற்குத் தான்.
அப்படி நடத்தப்பட்ட மறுதகுதித் தேர்வுக்கு 2.11.2012இ-ல் வெளியிடப்பட்ட முடிவுகளையும் வைத்துக் கொண்டு வேலை வழங்கும் பணியை நடத்தத் தொடங்கியது
TRB. கொஞ்சம் நில் லுங்க.... பணி நிய மனத்தைப் பற்றி அப்புறம் பேசுவோம். முதல்ல மறுதகுதித் தேர்வு முடிவு என் னாச்சுன்னு சொல் லுங்க. முதல் தேர்வு முடிவில, மோசடியா உயர்ஜாதியினரை மட்டும் GT ன்னு போட்டிருந்தாலும்,  எவ்வளவு பேர் பாஸ்? BC, BCM, MBC, SC,SCA,ST எவ்வளவுன்னு ஒரு கணக்கு சொன்னாங்களே, யார் யார் பாஸ் பண்ணியிருக்காங்கன்னு ஒரு பட்டியல் வெளி யிட்டாங்களே, அது மாதிரி இதுக்கும் வெளியிட்டி ருப்பாங்களே, அது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க.... என்ற உங்கள் கேள்வி புரிகிறது.
"ஆனால், அப்படி ஒரு பட்டியலே வெளியிடப் படவில்லை."
"என்ன? தேர்வு முடிவே வெளியிடப்படவில்லையா?"
"வெளியிடப்பட்டது. ஆனால், தனித்தனியாக ஒவ்வொருவரும் தனித்தனியாக தெரிந்து கொள்ளும் விதத்தில் வெளியிடப்பட்டது. மொத்தமாக வெளியிட்டால் தான், ஏன் GT போட்டீங்க... யாருக்கு GT போட்டிங்க... யார் யாரு எத்தனை மார்க்... அப் படின்னு நோண்டி நொங்கெடுக்கிறோம்ல... அதனால தான் பட்டியலை வெளியிடாம, வெவரமா தனித் தனியா பார்த்துக்கிற மாதிரி போட்டது.
அடக் கொடுமையே? இப்படியெல்லாமா செய்யமுடியும்?
இதைவிடவும் மோசடி செய்ய முடியும்ங்கிறதைத் தான் இந்த தகுதித் தேர்வும், பணி நியமன நடவடிக் கைகளும் நமக்கு எடுத்துக் காட்டுது. அதைத் தான் நாமளும் விரிவா எடுத்துக்காட்டிக்கிட்டு இருக்கோம்.
இப்போ சும்மா சாம்பிளுக்கு இன்னொன்னை எடுத்து விடுறேன். 24.08.2012-ல முதல் தகுதித் தேர்வு முடிவு வந்தது. அடுத்த தேர்வு 14.10.2012 அன்று நடக்கும்னு அறிவிக்கப்பட்டது. வேலை போட்டப்போ இது இரண்டையும் சேர்த்து தான் அறிவிப்பு வந்தது. ஆனால் அக்டோபர் 1, 2012 அன்றைக்கு ஆசிரியர் தேர்வு ஆணையத்துக்கு எதிரா வந்த தீர்ப்பை மதிச்சிருந்தா, முதலில் வெளியிடப்பட்ட பட்டியலே திரும்ப வாங்கப்பட்டு, மாற்றப்பட்டிருக்கணும். ஆனால் அதை வச்சே வேலையும் கொடுப்போம். மறு தகுதித் தேர்வுல நீங்க கண்டுபிடிக்க முடியாதபடி ரிசல்ட் போடு வோம். அப்படின்னு நீதிமன்றத் தீர்ப்பையே அவ மதிச்சு நடந்துக்க முடியும்னு காட்டியிருக்காங்க...
அது என்ன தீர்ப்பு?
அது தான் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில நடந்த இட ஒதுக்கீட்டு மோசடிக்கு எதிரான சாட்டையடித் தீர்ப்பு!
அரசியல் சட்டம், சமூகநீதி, நீதிமன்ற ஆணை, கண்டிப்பு எதனையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து செய்யப்பட்ட அடுக்கடுக்கான சமூக நீதி மோசடி - நாளைய விடுதலையில்!


ஆசிரியர் தகுதித் தேர்வு -ஆசிரியர் பணி நியமனம் இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டுலயும் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடுன்னு மாறி மாறி சொல்றீங்களே? ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு என்று சொல்வது கல்வியில் இடஒதுக்கீடு! (அதாவது தனித்தனியான தகுதி மதிப்பெண்கள் மூலம் வழங்கப்படுவது. பொதுப் பிரிவினருக்கு 60% என்றால், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55% அல்லது 50%, 40% என்று முடிவு செய்யப்படவேண்டியது.) தேர்வு முடிவுகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி தேர்ச்சி விகிதம் வைப்பது சரியா? என்றால், சரியே, ஒரே சூழலில் கல்வி கற்காத / கற்க முடியாத பலருக்கும் பொதுவான தேர்வு என்று வைக்கும் தகுதித் தேர்வு, முடிவுகளில் இப்படி தளர்வுகள் வழங்கப்படுவது இயற்கையானதே. சரியானதே. இதைத் தான் NET  SLET தேர்வுகளிலும் பின்பற்றுகிறார்கள். இப்படிப் பின்பற்றப்படவேண்டும் என்று தான்  வழிகாட்டலிலும் இருக்கிறது.
ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு என்பது வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு! (இதில் வகுப்பு வாரியான காலிப்பணியிட விவரங்களை வெளியிட்டு, அதற்கேற்ப பணிநியமனம் செய்யப்படவேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதில் பொதுப் போட்டி என்பது 31%, இட ஒதுக்கீடு 69%)
இவை இரண்டுமே அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டவை.


சுருக்கமா, எங்களுக்கு என்னென்ன பிரச்சினைன்னு சொல்லுங்கள்!
1. ஆசிரியர் தகுதித் தேர்வில் சட்டப்படி நிர்ணயிக்கப்படவேண்டிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குரிய தனித்த தகுதி அளவுகோல் நிர்ணயிக்கப்படாமல் அவர்களது வெற்றிவாய்ப்பு தடுக்கப்பட்டிருக்கிறது
2. வெளியிடப்பட்ட தகுதித் தேர்வு முடிவுகளில் உயர்ஜாதியினரை மட்டும் G.T. (பொதுப்பிரிவு) என்று குறிப்பிட்டு மோசடி செய்யப்பட்டிருக்கிறது.
3. வேலை வாய்ப்பிற்கான வகுப்புவாரியான காலிப் பணியிட விவரங்களைக் கொண்ட அறிவிக்கை வெளியிடாமலே 19000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
4. தகுதித் தேர்வு முடிவிலிருந்து கலந்தாய்வுப் பட்டியல் தயாரிக்கக் கூடாது என்பதை மறைத்து, தகுதித் தேர்வையே போட்டித் தேர்வு போலக் காட்டி பட்டியல் தயாரித்து, வேலை வழங்கியது.
5. அப்படி தயாரிக்கப்பட்ட வேலை வாய்ப்புப் பட்டியலிலும் உயர்ஜாதியினரை மட்டும் G.T. என்று குறிப்பிட்டு, பொதுப் பிரிவில் வந்திருக்க வேண்டிய அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களெல்லாம் இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளனர்.
6. தேர்வு முடிவை வெளிப்படையாக அறிவிக்காமல், பணிநியமனம் குறித்த வகுப்புவாரியான விவரங்களை வெளியிடாமல் மறைத்துள்ளனர்.
7 .பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவில் மதிப்பெண்ணே போடாமல் தகுதிப் பட்டியல் தயாரிக்கப் பட்டிருக்கிறது. அதிலும் இதே உயர்ஜாதியினரை மட்டும் G.T. என்று குறிப்பிட்டு மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இப்படி தயாரிக்கப்பட்டிருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு முடிவை உயர்நீதிமன்றம் ரத்து செய்யச் சொன்ன பின்பும், அதே போன்ற நடைமுறை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பின்பற்றப்பட்டிருக்கிறது.
8. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் உள்ளபடி முடிவு செய்யாமல், உயர் மதிப்பெண்கள் எடுத்த தாழ்த்தப்பட்ட பிரிவினரை G.T. பட்டியலுக்குள் கொண்டுவராமல், SC என்று இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்குள் அடக்கப்பட்டிருக்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...