Tuesday, September 25, 2007

ராம்விலாஸ் வேதாந்தியைக் கைது செய்க! - திராவிடர் கழகம் புகார் மனு

முதல்வர் கலைஞரை கொலை செய்யத் தூண்டிய ராம்விலாஸ் வேதாந்தியைக் கைது செய்துநடவடிக்கை மேற்கொள்க!
சென்னை காவல்துறை ஆணையரிடம் திராவிடர் கழகம் புகார்மனு

சென்னை, செப். 24- தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்களைக் கொலை செய்யத் தூண்டிய விசுவ இந்துபரிசத்தின் முக்கிய தலைவரும், பி.ஜே.பி., சார்பில் மக்களவையில் இருமுறை உறுப்பினராக இருந்தவருமான ராம்விலாஸ் வேதாந்தியைக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் சென்னை - மாநகரக் காவல் துறை ஆணையரிடம் இன்று புகார் மனு கொடுத்தார். வழக்கறிஞர் த. வீரசேகரன் உடனிருந்தார்.

புகார் மனு விவரம் வருமாறு:விசுவ இந்து பரிசத் கேந்திரா மார்க்தர்ஷக் மண்டல் தலை வரும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவருமான ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் தி.மு.க., தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலையையும், நாக்கையும் துண்டித்து வருபவர்களுக்கு (பாட்வா) அயோத்தியில் உள்ள சாமியார்கள்மூலம் எடைக்கு எடை தங்கம் பரிசளிக்கப்படும் என்று அறிவிப்புக் கொடுத்துள்ள தானது - பச்சையாக கொலையைத் தூண்டும் வன்முறை செயலாகும்.இணைய தளத்திலும், ஏடுகளிலும் இந்தச் செய்தி விரிவாக வந்துள்ளது .கொலை வெறி, வன்முறையைத் தூண்டியுள்ள ராம் விலாஸ் வேதாந்தி என்பவரைக் கைது செய்து, தமிழகம் கொண்டு வந்து, சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.-

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...