Friday, June 26, 2015

லலித்மோடி எனது உறவினர் - அவருக்கு அவமானம் என்றால் அது எனக்கும் தான்! வசுந்தரா ராஜே கடிதம் அம்பலமானது

கிடுக்கிப்பிடியில் பிஜேபி முதல் அமைச்சர்
லலித்மோடி எனது உறவினர் - அவருக்கு அவமானம் என்றால் அது எனக்கும் தான்!

வசுந்தரா ராஜே கடிதம் அம்பலமானது



லலித்மோடியின் அழைப்பின் பேரில் லண்டன் சென்ற நிதின் கட்கரி, வசுந்தரா ராஜே, ஸ்மிருதி இரானியுடன், லலித்மோடியின் நெருங்கிய நண்பரும், லண்டனில் லலித்மோடிக்கு நிதி உதவிகள் செய்துவரும் விஜய் ஜோலியும் 2011 ஆம் ஆண்டு எடுத்தபடம்

ராஜஸ்தான் மாநில முதல்வராக உள்ள வசுந் தரா ராஜே 2011-ஆம் ஆண்டு லண்டன் நீதிமன் றத்திற்கு எழுதிய கடி தத்தை காங்கிரஸ் கட்சியினர் டில்லி யில் வெளியிட்டனர். இந்தக் கடிதத்தில் லலித் மோடி தனது உறவினர் என்றும் தான் இந்தியாவில் உள்ள ஒரு மாகாணத்தின் மகா ராணி; லலித் மோடி எனது உறவினர், லலித் மோடிக்கு அவமானம் என்றால் அது மகாராணி யான எனக்கும் அவ மானம் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.  

அந்தக் கடித்ததின் முழு விவரம் வருமாறு:    இங்கிலாந்தின் நீதி மன்ற ஆவணப் பதிவு களில் இருந்து சண்டே மெயில் என்ற பத்திரி கைக்கு 2011 ஆகஸ்ட் 18 தேதியிட்ட ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்ததில் முதல் பத்தியி லேயே நான் இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக வரும் தேர்தலில் தேர்ந் தெடுக்கப்படப் போகி றேன். ஆகையால், நான் எழுதியுள்ள இந்தக் கடி தத்தை பொதுப்படுத்தக் கூடாது; இதனால் எனது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படலாம். 

என்று குறிப்பிட்டுள்ளார்.  அதைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ளதாவது: விரைவில் இந்தியா வில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அப்போது எங்கள் கட்சி மத்தியிலும், மாநிலத்தி லும் ஆட்சிக்கு வரும்; தற் போது இருக்கும் காங் கிரஸ் அரசு விரைவில் வீழ்த்தப்படும்; மக்களி டையே நாங்கள் கடுமை யான பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறோம்.  காங்கிரஸ் அரசை மக்கள் வெறுக்கத் துவங்கி விட்டனர். ஆகையால் தான் இந்தியா முழுவதும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.   

இந்தியா முழுவதும் தேசியக் கட்சிகள் பலமி ழந்து வருகின்றன. ஆகை யால் தென் மாநிலங்களில் பாஜகவும் வடமாநிலங்க ளில் காங்கிரசும் வெற்றி வாய்ப்பை இழக்கும், இருப்பினும் வரும் காலத் தில் பாஜகவின் கைகள் பலம்பொருந்தி இருக்கும்.    லலித் மோடி எனது உறவினர், எனது தலை மையில் ஆன அரசு 2008-ஆம் ஆண்டு தோல்வி அடைந்ததும், லலித் மோடியை உடனடியாக ராஜஸ்தான் கிரிக்கெட் போர்ட் தலைவர் பதவி யில் இருந்து அரசு நீக்கி விட்டது. இது பழி வாங்கும் செயலாகும். என் மீது காங்கிரஸ் ஆட்சி யாளர் பொறாமை கொண்டுள்ளனர். அவர் களுக்கு எனது உறவினர் கள் முக்கியபதவியில் இருப்பது பிடிக்கவில்லை.  

 அதன் பிறகு எனது அரசியல் எதிரிகள் லலித் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைச் சிறை யில் தள்ள முயற்சி செய் தார்கள். தேர்தல் பிரச் சாரத்தின் போது லலித் மோடியின் மீது பொய் யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அதற்கு நான் உடந்தையாக இருப்பது போல் காட்டிக் கொண் டார்கள். இதன் காரண மாக நான் தோல்வி யடைய நேர்ந்தது. நான் தோல்வியடைந்த பிறகு அசோக் கெலாட் தலை மையில் உள்ள அரசு எனக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. என்னை மோசடிக்காரி என்றும் ஊழல்வாதி என்றும் கூறி வருகிறார்கள். 

லலித் மோடி இங் கிலாந்தின் பிரபல விளை யாட்டான கிரிக் கெட்டை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்களுள் முதன்மையானவர், அய். பி.எல். என்னும் கிரிக் கெட்டை கொண்டுவந்து குறுகிய காலத்திலேயே இந்தியாவில் உள்ள அனைத்து இளைய தலை முறைகளிடம் கொண்டு சேர்த்தவர். இது ஒரு சாதனையாகும்; லலித் மோடியின் இந்தச் செயல் பாராட்டத்தக்கதாகும். அவர் எனது உறவினர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். லலித் மோடியின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இந்தியா வில் இல்லை, தற்போது உள்ள பிரச்சினை எல் லாம் அரசியல் சூழ்ச்சி தான், ஆகையால் அவ ருக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் இங்கி லாந்து நீதிமன்றம் எடுக் கத் தேவையில்லை.  இங்கி லாந்து நீதிமன்றம் தவறு தலாக லலித்மோடி மீது நடவடிக்கை எடுத்தால், அது லலித்மோடியை அவமானப்படுத்துவது போலாகிவிடும். லலித் மோடிக்கு ஓர் அவமானம் என்றால் அது ராஜஸ் தானின் மகாராணியான எனக்கும் அவமானம் தான் என்று என்னுடைய சுயநினைவுடன்  ஆங்கி லத்தில் நானே எழுது கிறேன்.
இத்துடன் லலித் மோடி எங்களது குடும்ப உறவுகள் குறித்த சில ஆவணங்களை இணைத்துள்ளேன். மேலும் அதிக ஆவணங்களை நான் நேரில் கொண்டு வந்து இங்கி லாந்து நீதி மன்றத்தில் வழங்குவேன். 

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட மத்திய - மாநில அரசுகள் அழுத்தம்!

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளைத்
தப்பிக்கவிட மத்திய - மாநில அரசுகள் அழுத்தம்!

அரசு வழக்குரைஞரே அம்பலப்படுத்துகிறார்


டில்லி, ஜூன் 26_ மாலேகான் குண்டுவெ டிப்பில் கைதாகி சிறையில் உள்ள கைதிகளின் வழக்கை தீவிரமாக கையாளக் கூடாது என்றும், அவர் களை விரைவில் விடு விக்கும் வகையில் வழக் காட வேண்டுமென்றும் தனக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அரசுத் தரப்பில் ஆஜராகி வழக்காடி வரும் ரோகினி செலியன், ஆங்கிலப் பத் திரிகை ஒன்றிற்குப் பேட்டி யளித்துள்ளார்.
இதன் விவரம்: 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டி ராவில் உள்ள மாலேகான் பகுதியில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 37 பேர் பலியானார்கள், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த காவல் துறை, உள்ளூரைச் சேர்ந்த சில முஸ்லீம் இளைஞர் களைக் கைது செய்தது. அதன் பிறகு இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த் தியது தெரியவந்தது.  தொடர் விசாரணைக்குப் பிறகு பிரங்யா சிங் தாக் கூர் என்ற சாமியாரினி, சிவ்நாராயண் கோபால், ராணுவ அதிகாரியான சிரிகாந்த் புரோகித், கல சஹரா, ஷ்யாம் போன் றோர் கைது செய்யப்பட் டனர். இவர்களுடன் மேலும் 12 காவி பயங்கர வாதிகள் கைது செய்யப் பட்டனர். அதில் நான்கு பேர் தற்போது பிணையில் வெளியே வந்து விட்டனர். இவர்கள் இந்து அமைப் பான அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இந்த அமைப்பிற்கும் ஆர்.எஸ். எஸ்.க்கும் தொடர்பு உள்ள தாக மும்பை தாக்குதலில் மரணமடைந்த காகரே புலனாய்வு செய்து கூறி யிருந்தார்.   தொடர்ந்து இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்குரைஞரான ரோகினி செலியன் பத்தி ரிகைக்கு அளித்த பேட் டியில் கூறியதாவது.
மோடி அரசு வந்த உடனேயே தேசிய புல னாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் என்னை நேரில் சந்தித் தார். தொலைபேசியில் கூட பேசவேண்டாம் என்று கூறி நேரில் வந்த அந்த அதிகாரி,  உங்க ளுக்கு ஒரு செய்தி இருக் கிறது. இந்த வழக்கில் தீவிரமாக வாதாட வேண் டாம் என்று கூறினார்.
பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி வழக் கின் விசாரணை நாளன்று, அதே அதிகாரி மீண்டும் வந்து  மேலிடத்தின் விருப்பப்படி இந்த வழக் கில் நீங்கள் வாதாட வேண்டாம். உங்களுக்கு பதில் வேறு வழக்குரை ஞர் நீதிமன்றத்தில் வாதா டுவார் என்று வெளிப் படையாகவே மிரட்டினார்.
இதற்குப் பதிலளித்த நான் நல்லது, ஏற்கெ னவே நீங்கள் சொல்லியி ருப்பதால் இதைத் தான் எதிர்பார்த்தேன். எனது கணக்கு வழக்கு களை முடியுங்கள். மேலும் இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிப்பதாக அறிவித் தால்தான் தேசிய புல னாய்வு அமைப்பிற்கு எதிரான வழக்குகளில்  -_ இந்த வழக்கில் அல்ல -_  ஈடுபட முடியும் என்று  கூறினேன்.

 அதற்கு பிறகு அந்த அதிகாரி மற்றும் புலனாய்வு அமைப் பிலிருந்து யாரும் பேச வில்லை என்றார் அவர். ரோஹினி செலிய னுக்கு அரசு தரப்பில் தரவேண்டிய சலுகைகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக குறைக் கப்பட்டுவிட்டன. அரசு தரப்பு ஓட்டுநர் திடீரென உடல் நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்து விட்டார். அதனை அடுத்து நீங்களே ஓட்டுநரை வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு தேவையான பணத்தை அரசு வழங்கும் என்று கூறிய நிலையில் வழக்குரைஞர் தனக்கான ஓட்டுநரை வைக்க நடை முறையில் செய்ய இயலாத வகையில் பல்வேறு விதி களை புதிதாகப் புகுத்தியது.  மேலும் பயணச் செலவு, வழக்குச் செல வுகள் தொடர்பான விவ காரங்களில் தொடர்ந்து அலைக்கழிக்க வைக்கப் பட்டார். மத்திய அரசின் போக்கிற்கு துணைபோ காத காரணத்தால் வேறு வழியில் அவருக்கு தொந் தரவுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வழக்குரைஞர் கூறியதாவது என்னை இந்த வழக்கில் இருந்து அவ்வளவு சாமா னியத்தில் விடுவிக்க முடியாது ஆகவே நானாக விலகிக்கொள்ளும் வகை யில் பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுக் கிறார்கள். 

அதே நேரத்தில் ஒரு புதிய வழக்குரைஞர் இதை விசாரித்து வாதா டுவது சிரமம். அவர் எதுவும் செய்ய முடியாது. இந்த வழக்கை திரும்பப் பெற முடியாது என்பதால்  அரசு தரப்பு தோல்வி யுற்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் இதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது என்று கூறினார். தேசிய புலனாய்வுத் துறை அமைப்பு, பிரதம ரின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, June 25, 2015

தினமணியின் மூக்கில் வியர்ப்பது ஏன்?


வடலூரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதய்யரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேராசிரியர் மோகன ராசு கீதையையும், திருக்குறளையும் ஒப்பிட்டுக் கீதையின் முகத்திரையைக் கிழித்து எறிந்தார் அல்லவா!

அதற்குப் பதில் சொல்ல முடியாத தினமணி அய்யர்வாள் திருக்குறளிலே கொல்லாமை கூறப்பட்டுள்ளதே - அதைக் கடைப்பிடிக்காதவர்கள் திருக்குறளைப்பற்றிப் பேசலாமா? என்று பிரச்சினை யைத் திசை திருப்பிப் பேசினார்; மக்கள் சலசலப்பைக் காட்டினார்கள்.

ஒரு நூலைப் போற்றவேண்டும் என்றால், அந்நூலில் உள்ள அத்தனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது அசல் விதண்டாவாதமே! வடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியை விடுதலை விரிவாக வெளியிட்டு இருந்தது (23.6.2015, பக்கம் 8) அல்லவா!

அதைக்கண்டு ஆத்திரப்பட்ட தினமணி அய்யர்வாள் இன்றைய தினமணி ஏட்டில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். மீண்டும் அந்தப் புலால் உண்ணாமைப் புராணம்தான்.

திருவாளர் தினமணி அய்யரைக் கேட்கிறோம். பார்ப்பான் பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும்; அத்தகையவன்தான் பூணூல் போட்டுக்கொள்ள அருகதை உடையவன்; அப்படி இருக்கும்பொழுது, நீங்கள் ஏன் பூணூல் போட்டுக்கொண்டு பிராமணன் என்று மார்தட்டுகிறீர்கள் என்று நாங்கள் கேட்டால் உங்கள் பதில் என்ன?

சங்கராச்சாரியார் என்றால் கால்நடையாகத்தான் ஊர் சுற்றவேண்டும். உங்கள் லோகக் குரு ஜெயேந்திர சரசுவதி விமானத்தில் பறக்கிறாரே அது எப்படி? என்று நாங்கள் கேட்டால், உங்கள் பதில் என்ன?

அய்தீக முறைப்படி திருவாளர் வைத்திய நாதய்யர் உச்சிக்குடுமி வைத்துக்கொண்டுள்ளாரா? அப்படி வைத்துக் கொண்டால்தானே அவர் பூணூல் தரிக்க முடியும்.

இந்த வகைகளில் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துவிட்டால், ஒரு பார்ப்பான்கூட தேறமாட்டானே.

ஆக, வடலூர் நிகழ்ச்சி - தினமணியாரின் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கச் செய்துவிட்டது என்பது மட்டும் உண்மை. தினமணி கட்டுரை அதைத்தான் வெளிப்படுத்துகிறது.


இதையும் கொஞ்சம் படிங்க : 

வடலூர் திருக்குறள் மாநாட்டில் விழி பிதுங்கிய தினமணி வைத்தியநாதய்யர்!

 

 

 

 


அத்வானியின் கருத்தைப் புறந்தள்ள முடியாது! ஜனநாயகத்தைக் காக்க மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

40 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை சிந்தனை
1975 நெருக்கடி காலம் மீண்டும் வருமா?

அத்வானியின் கருத்தைப் புறந்தள்ள முடியாது!

ஜனநாயகத்தைக் காக்க மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

மிசா  கைதியாக இருந்த தமிழர் தலைவர் அறிக்கை
இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்)  தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!
1975 நெருக்கடி நிலைக்குப் பிறகு மீண்டும் நெருக்கடி நிலைவருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1975 ஜூன் 12ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள், நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் - முறை  கேடுகளுக்கான வழிகளில் (Corrupt Practices) வெற்றி பெற்ற தேர்தல்  என்று போட்டியிட்டு தோற்ற ராஜ்நாராயண் என்ற சோஷியலிஸ்ட் கட்சி வேட்பாளர் போட்ட வழக்கில், அந்த உயர்நீதிமன்ற நீதிபதி S.N. சின்கா அளித்த  தீர்ப்பில், அவரது தேர்தல் செல்லாது; மேலும் 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் நிற்கத் தகுதி இழந்த வராவார் என்று குறிப்பிட்டதானது, நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது; அந்த நீதிபதியின் நேர்மை, அஞ்சாமை தெளிவு - இவைகளை மக்களில் பெரும்பாலோர் வரவேற்றனர்.

அதற்கு முன்பே 1973 முதலே இத்தகு தவறான வழிகள் நாட்டில் மேலோங்கியிருந்தன. ஊழல் தலை விரித்தாடியது - இவைகளுக்கு எதிராக லோக் நாயக் என்று அழைக்கப்பட்ட ஜெயப் பிரகாஷ் நாராயண் தலைமையில்  அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கம் ஆட்சிகளில் குறைபாடுகளைச் சுட்டி அறவழி போராட்டங்களை நடத்தியது.

அதற்குப் பிறகு ரயில்வே ஸ்டிரைக் போன்றவைகள் நடந்தன; ஒரு குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மத்திய அமைச்சர் எல்.என். மிஸ்ரா கொல்லப்பட்டார். இதை வைத்து (1975 ஜூன் 10-இல்)  ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டனர்

நெருக்கடி நிலை பிரகடனம்!

இவைகளைப் பின்னணியாகக் காட்டி 1975 ஜூன் 25இல் நெருக்கடி  காலம் (Emergency)
 
 பிரகடனப்படுத்தப்பட்டது.

முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டனர்.

பத்திரிக்கைககள் தணிக்கை (Censor) க்கு உட்படுத்தப் பட்டு, அரசு விரும்பும் செய்திகளை மட்டுமே  வெளியிடப் படும் வகையில் அவர்களது அதிகாரிகளின் கண்காணிப் புக்கு உள்ளாகியது. கருத்துச் சுதந்திரம் காற்றில் பறந்தது. பாசீசம் தலை விரித்தாடியது.

அரசியல் சட்ட அடிப்படை உரிமைகள் எல்லாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.

தி.மு.க. ஆட்சி கலைப்பு!

1975இல் தி.மு.க. ஆட்சி கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஆட்சி, மத்திய அரசின் இந்த நெருக்கடி பிரகடனத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி ஜனநாயகக் காவலனாக உயர்ந்து நின்றது.

இதனால் பிரதமரின் வெறுப்புக்கும், உருட்டல் மிரட்ட லுக்கும் ஆளாகிய நிலை ஏற்பட்டது.

1975 - இந்த நெருக்கடியை எதிர்த்து ஒரு மாநாடுகூட பெரியார் திடலில் நடைபெற்றது. ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கலைஞர் போன்றவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

1975 ஜனவரி 31ஆம் தேதி தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. (356ஆவது பிரிவின்படி)

அன்று இரவே தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திராவிடர் கழகத்தவரில் சென்னையில் என்னையும் மற்றும் 9 முக்கியஸ்தர்களையும் நள்ளிரவில் கைது செய்து, அடுத்த நாள் சென்னை மத்திய சிறைச்சாலையில் கொண்டு போய் அடைத்தனர். (மற்ற சிறைச் சாலைகளிலும் பலர் கைது செய்து அடைக்கப்பட்டனர்)

அருவருப்பான வசவுகளை அதிகாரிகள் எங்கள்மீது காரணமின்றிப் பொழிந்தனர் - அச்சுறுத்தினர்.

9 நம் நம்பர் பிளாக் எனும் தொழுநோயாளிகளை அடைத்த பகுதிகளில் (அவர்களை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு) வைத்தனர்.

எட்டடி கொட்டடியில் 8 பேர்கள் - இரண்டு பானைகள்; ஒன்றில் தண்ணீர் - மற்றொன்று சிறுநீர் கழிக்க; சாப்பாடு தரும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் எங்கள்அறைகள் பூட்டப்பட்டே இருக்கும். காலைக் கடன்கள் கழிக்கக்கூட குறிப்பிட்ட நேரம்தான். உடனே உள்ளே போய் விடுவோம்.
 
எங்களது உடைகள் எதுவும் 15 நாட்கள் வரை தரப்படாததால், கட்டிய வேட்டி, உடையையே நாங்கள் பயன்படுத்திய நிலையில் இருந்த பரிதாபம்! அது எங்களை மிகவும் பக்குவப்படுத்தி விட்டது!

சிறையில் தாக்கப்பட்டோம்!

பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 9 மணி; எங்கள் அறைகள் திடீரென்று திறக்கப்பட்டன. ஆயுள் கைதிகளான காணிக் வார்டன்கள் என்பவர்களைக் கொண்டு எங்களை வரிசையாக (File) உட்கார வைத்து, திடீரென்று மூர்க்கத் தனமாகத் தாக்கினர்கள். எங்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி! எனக்கு லட்டியின் தாக்குதல் கண்ணுக்கு கீழே! தோழர் N.S. சம்பந்தம் முதுகுத் தண்டு வடம் அறுவை சிகிச்சை செய்தவரை அடிக்காதீர் என்று கெஞ்சிக் கேட்ட எனக்கு அந்த லட்டிக் குத்து! இன்று வரை அதன் பாதிப்பு தொடர்கிறது. தி.மு.க. தி.க. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் (காங்கிரஸ்-ஓ) முக்கிய தோழர்கள் சுமார் 300 பேர்களுக்கு பக்கமாக இருந்தோம்! நடிகவேள் எம்.ஆர். ராதாவும் எங்களுடன் கைது செய்யப் பட்டவர்களில் ஒருவர்.

உணவில் திட்டமிட்டே கல் போடப்பட்டது. சிறுநீரும் கலக்கப்பட்டது (இது ஜஸ்டீஸ் இஸ்மாயில் விசாரணைக் கமிஷன் அறிக்கையிலும் உள்ளது)

தி.மு.க. தோழர்கள் குறிப்பாக மேயர் சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி, முரசொலி அடியார் போன்றவர்கள் வெகு கடுமையாகத் தாக்கப்பட்டனர். எட்டி உதைக்கப் பட்டனர். கடுமையான காயங்களுக்கு ஆளாகினர்.

விடுதலை முரசொலி போன்ற ஏடுகள் தணிக்கை என்ற பெயரால் மிகவும் அச்சுறுத்தப்பட்ட அவலம் மறக்கப்பட முடியாத ஒன்று!

அடுத்த நாள் இரவு சகோதரர் மு.க. ஸ்டாலினை அடித்து  ரத்தம் சொட்டச் சொட்ட இரவு எங்கள் கொட்டடி யில் கொண்டு வந்து தூங்கிக் கொண்டிருந்த எங்கள்மீது அவரைத் தள்ளினர். திடீரென்று பார்த்தபோது ஸ்டாலின் ரத்தக் கோலத்தில், இக்கோலத்தில் ஆறுதல் கூறி அரவணைத்தோம் - நானும் நண்பர் சிட்டிபாபுவும்.

நாங்கள் எந்த சிறையில் இருக்கிறோம் என்ற தகவல் கூட எங்கள் வீட்டாருக்குத் தெரியாது!

இந்த கொடுமை ஒரு மாதத்திற்குமேல் நீடித்து - பிறகே பல அதிகாரிகள்  மாற்றத்திற்குப்பின் நிலைமை மாறியது.

சென்னையில் தான் இப்படி - அதி தீவிர கொடுமையின் அட்டகாசம்!
தோழர் சிட்டிபாபுவின் மரணம், சாத்தூர் பால கிருஷ்ணன் மரணம்  - சிறைச்சாலை விளைவுகள்.

வெள்ளைத்தாள்களை நீட்டினர்

வெள்ளைத்தாள்களை வார்டன்கள் கொண்டு வந்து கொடுத்து,  கட்சியிலிருந்து விலகுவதாக மன்னிப்புக் கூறி எழுதினால் உங்களுக்கு விடுதலை கிடைக்கும், வெளியில் செல்ல முடியும்; இல்லையேல் உங்கள் கதை இங்கேயே முடிந்து விடும் என்று அச்சுறுத்தி, ஆசைகாட்டினார்கள்.

திராவிடர் கழகத்தவர்களிடம் வர மாட்டார்கள்; கம்யூனிஸ்ட்களிடமும், தி.மு.க.வின் முக்கிய தலைவர்களை தவிர மற்ற சபலத்திற்குரியவர்களிடத்தில் இப்படியெல்லாம் செய்வார்கள்!

நேர்காணல் போதும் சி.அய்.டி.கள்

நேர்காணல் வாரம் ஒருமுறை; இரண்டு மூன்று சி.அய்.டி. அதிகாரிகள் பக்கத்தில் இருந்து கொண்டு மனைவி மக்களிடம் நாங்கள் பேசுவதைக் குறிப்பெடுப் பார்கள். அடிப்படைச் சுதந்தரம் பறிபோன நாள் அந்நாள்!

எப்படியே 1977 மார்ச் 17 நெருக்கடி காலம் அகற்றப் பட்டது!

நாங்கள் சுமார் ஒரு ஆண்டுகால சிறை வாசத்திற்குப் பிறகு கெட்டுப் போய் இருந்த வெளிக்காற்றை சுவாசிக்க முடிந்தது.

அத்வானியின் கூற்றைப் புறந்தள்ள முடியுமா?

இப்படிப்பட்ட இருண்ட காலம் மீண்டும் வராது என்று உறுதியாக சொல்ல முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் - முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி அவர்களே கூறுவது - புறந்தள்ளக் கூடிய ஒன்றா?
வெளியில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பைவிட, பா.ஜ.க.வின் பல குரல்கள் - மோடி ஆட்சியின் அமைச் சர்களுக்கு எதிராக அக்கட்சியினரால் நாளும் எழும்பு கின்றன. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அருண் ஷோரி போன்ற மூத்த பா.ஜ.க. தலைவர்களே விமர்சிக் கின்றனர்.

நாட்டில் மீண்டும் மீண்டும் அவசரச் சட்டத்தையே புதுப்பிக்கும் போக்கு அரும்புகிறதோ என்ற அய்யம் - மக்கள் ஜனநாயகத்தைக் கேள்விக் குறியாக்குகிறது!

தமிழ்நாடு அரசும் சரி, மத்திய அரசும் அறிவிக்கப்படாத நெருக்கடி காலம் போல,  தகவல் தரும் நவீன மின்னணு சாதனங்களையும் மிரட்டும் போக்கு இருப்பது  விவாதங்கள் நடைபெறுவது ஆரோக்கியமல்ல.

ஜனநாயகத்தைக் காக்க மக்கள் எந்த விலையும் கொடுக்க எப்போதும் தயார் நிலையில் இருப்பதே ஒரே வழி - இருண்ட காலம் மீண்டும் வந்து கதவைத் தட்டாமல் இருக்க.



கி.வீரமணி  
தலைவர்,     திராவிடர் கழகம்
சென்னை, 25.6.2015

நலவாழ்வின் எதிரி சர்க்கரை நோய் - புரிந்திடுவீர்!

சர்க்கரை நோய் என்பது மிகவும் ஆபத்தானது; அது மட்டுமா? ஒருமுறை நம் உடம்பினுள் புகுந்து அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டால், அது நமக்கு வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்தே தீரும் என்பதுதான் இதுவரை
நிலவிவரும் மருத்துவத் தகவல். இனி எதிர்காலத்தில் - ஆய்வுகளால் எப்படி மாறுமோ? நாம் அறியோம்!

இன்றைய (24.6.2015) டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேட்டில் இந்த நோய் தாக்குவதற்குரிய மூலகாரணம் ஒன்றைப்பற்றி மிகவும் தெளிவாக ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.

மிக நீண்ட நேரம் அமர்ந்தே, எழா மல், சிறிதுநேரம்கூட நடந்து, திரும்பி பணியை மேற்கொள்ளாது பணியாற்றும் போது, அந்தப் பல மணிநேர அமர்வு - உட்கார்ந்திருத்தல்கூட, நாம் பணியாற்று கிறோம்; சும்மா இருக்கவில்லை என்ற போதிலும்கூட, அது நமது ரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் கூடுதலாக்கி, சர்க்கரை நோயை (Diabetes) கொண்டு வந்து விடுகிறது.

பொதுவாக பணியாற்றுகிறவர்கள் கணினி முன்னால், அல்லது பல மணிநேரம் இடைவிடாது நாற்காலியில் அமர்ந்தோ தொடர்ந்து தொலைக் காட்சி (டி.வி.) பார்த்துக்கொண்டே இருக்கும் இருபாலர்களோ, சில பொது நிகழ்ச்சிகளில்கூட அன்பு தண்டனை யாக மூன்று, நான்கு மணிநேரம் நம்மை அமரச் செய்து, நீங்கள் முக்கிய மானவர்; இறுதியில் பேசுங்கள்; அப் போதுதான் கூட்டம் கலையாமல் இருக்கும் என்று கூறி, நேரத்தை வீணாக்கி, மற்ற பலரையும் பேசவிட்டு, பெருங்கூட்டத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் கலையச் செய்த பிறகு, கூட்டத் தினரிடையே பேச வைக்கும் ஏற்பாடு - இப்படி எத்தனையோ விதங்களில் தொடர்ந்து அமர்ந்திருப்பது - எழாமல் இருப்பது - சர்க்கரை நோய் மட்டுமல்ல - கூடுதல் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) - அதன் விளைவாக மாரடைப்பு - இருதய நோயை உண்டாக்குதல் போன்றவை களோகூட முன்னோட்டமான நிலை மைகளை உருவாக்குவது போன்ற தொடர் நிகழ்வுகள்தான்!

இவைகளைத் தவிர்க்க, எளிய வழிகள்:

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல், அடிக்கடி எழுந்து, அல்லது அலுவலக அறைக் குள்ளே பொடி நடைச் சுற்று சுற்றி மீண்டும் வந்து அமர்ந்து பணி தொடர் தல் போன்றவற்றைச் செய்யலாம்.

உடல் அசைவுகள், எல்லா உறுப்பு களுக்கும் ரத்த ஓட்டம் செல்லும்படி சிறு சிறு மாற்றுப் பணிகள் இடைவேளை களில் செய்தல், எழுந்து, நடந்து மீண்டும் அமர்தல் போன்றவைகளைச் செய்யலாம்.

நீண்ட நேரம் அமர்ந்திருப்பது (தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்த உருளைக்கிழங்கு போண் டாக்களும் இது சேர்ந்ததே)

இருதயம்:

எந்தெந்த உடல் உறுப்புகளை இப்படி நீண்ட நேரம் குந்தியே (உட் கார்ந்தே) சில ஊர்களில் இச்சொற் றொடர் புழக்கத்தில் உள்ளது.
நீங்கள் அமர்ந்தே இருக்கும்போது ரத்த ஓட்டம் குறைகிறது; தசைகளில் கொழுப்பை (உணவின்மூலம் சேரு வதை) எரிப்பது குறைகிறது. விளைவு கொழுப்பு திரவங்கள் (Fatty Acids) இதயத்தின் இரத்தக் குழாய்களை அடைக்கின்றன.

கணையம்:

உடல் உறுப்பில் இந்தக் கணையம் (Pancreas) தான் இன்சுலின் என்பதை ஈர்த்து ஒழுங்குபடுத்தும் கருவி,  ஒரு நாள் அதிகமாக உட்கார்ந்தே இருப்பது அதிகமான அளவு இன்சுலின் அதிக அளவில் உற்பத்தியாவதற்குக் காரண மாக - சர்க்கரை நோயைத் தோற்று விக்கிறது.

செரிமான உறுப்புகள்:

உட்கார்ந்தே இருப்பதால், செரி மானப் பணிகளைச் செய்யும் வயிற்று உறுப்புகள் சுருங்கி, செரிமானத்தைத் தாமதிக்கிறது. இப்படி சரியானபடி ஆகாத மிகவும் தாமதமான செரிமானம் - வயிற்றில் ஒரு பிடிப்பு (வலி) (Cramping, Bloating) நெஞ்சு எரிச்சல் (Heart Burn)  மலச்சிக்கல் (Constipation) இவைகளை உருவாக்குகிறது.

உடற்பயிற்சி ஏதும் செய்யாது மிக நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதனால், சுறுசுறுப்பு இன்றி மிகவும் டல்லாக குறைந்த சக்தியை மட்டுமே பெறும் அளவுக்கு ஆக்கி அசத்தி உட்காரவும் வைத்துவிடுகிறது!

எனவே, அடிக்கடி எழுந்து குறு நடை நடைப் பயிற்சி செய்து; உள்ளே, வெளியே சென்று தண்ணீர் குடித்தோ, உரையாடியோ திரும்புங்கள்.

இன்று வந்துள்ள இந்து ஆங்கில நாளேட்டில் சர்க்கரை நோய் வரு வதற்கு நான்கு முக்கிய காரணங்கள் என்பவைபற்றியும் விளக்கி ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.

அந்த நான்கு பெரிய (Big Four) என்ன தெரியுமா?

1. உணவு - கண்டதையும் அரைத்தல் (குறிப்பாக, வேக உணவுகள்)

2. உடற்பயிற்சி இன்மை - lack of exercise

3. உடற்பருமன் - Obesity

4. கொலஸ்ட்ரால் (கொழுப்புச் சத்து) மிகுதல்

இவற்றில் நாம் அனைவரும் கவனம் செலுத்துதல் முக்கியம் - மிக முக்கியம்  - நல வாழ்வுக்கு.

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Wednesday, June 24, 2015

வடலூர் திருக்குறள் மாநாட்டில் விழி பிதுங்கிய தினமணி வைத்தியநாதய்யர்!

வடலூர் திருக்குறள் மாநாட்டில் விழி பிதுங்கிய தினமணி வைத்தியநாதய்யர்!


வடலூரில் நடைபெற்ற திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் மீண்டும் மீண்டும் ஒலித்த தந்தை பெரியாரின் கருத்துகளால் கருவாட்டை பறிகொடுத்த பாப்பாத்தி போல் ஆனார் அந்த மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்! இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே போன வைத்தியநாதன், புலால் உண்பவர்களுக்கு திருக்குறள் பற்றி பேச தகுதி இருக்கிறதா? என்று பேசி மாநாட்டுப் பார்வை யாளர்களின் கடும் விமர்சனத்துக்கும் ஆளானார்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூகநல அறக்கட்டளை இணைந்து வடலூரில் ஜூன் 21ஆம் தேதி மாலை திருக்குறள் தேசிய நூல் மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டு சிறப்பு அழைப்பாளராக வைத்தியநாதன் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த மாநாட்டு மேடையில் பேசிய பேச்சாளர்களில் சிலர், திருக்குறளை பரப்பியதில் திராவிடர் இயக்கம் மற்றும் பெரியாரின் பெரும்பங்கினைப் பற்றியும் ராமாயணம் மகாபாரதம், கீதை ஆகியவற்றை படிப்பதைவிட திருக்குறளை படிப்பதே சிறந்தது எனவும் பெரியாரின் கருத்துகளை மேற்கோள்காட்டிப் பேசினர்.

பேராசிரியர் மோகனராசு

குறிப்பாக இந்த மாநாட்டுக்குத் தலைமை ஏற்றிருந்த, கு.மோகனராசு (ஆசிரியர் -வாழும் வள்ளுவம்), அவர் கள் கீதை எவ்வளவு மோச மான வர்ணாசிரமக் கருத்து களை உடையது ஆனால் திருக்குறள் அதற்கு நேரெ திராக சமத்துவத்தை பேசக் கூடியது என்று அடுக்கடுக் காக கருத்துகளை முன் வைத்தார்.

மோகனராசு பேசியதன் சுருக்கம் வருமாறு: கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் திருக்குறளுக்குத் தான் தேசிய நூலுக்கான முழுத்தகுதியும் உண்டு. இந்தியாவின் அரசியல் சட்டமானது மக்களுக்கான சமத்துவம், சமவாய்ப்பு பற்றி சொல்கிறது. ஆனால், மக்களை நான்கு வர்ணமாகப் பிரித்து ஜாதிக்கு ஒரு தொழிலை பிரித்துக்கொடுக்கிறது கீதை.

இதில் சூத்திரன் அடிமை வேலை செய்யவேண்டும் என்றிருக்கிறது. பேதத்தை வலியுறுத்துகிற ஒரு நூல் எப்படி தேசிய நூலாக முடியும்? ஆனால், திருக்குறளோ பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது. பார்ப்பனர்கள் உழவுத் தொழில் செய்யக்கூடாது என்கிறது வர்ணாசிரமம். ஆனால், உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தையும் உழவர்களின் சிறப்பையும் பற்றி சொல்கிறது திருக்குறள்.

இவ்வாறு தொடர்ச்சியாக, பல திருக்குறள்களை மேற் கோள்காட்டி திருக்குறளின் சிறப்பையும், கீதையின் கேடு பயக்கும் கருத்துகளையும் மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டே போனார் மோகனராசு அவர்கள். அவரின் உரையில், அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், வைத்தியநாதனுக்கு மட்டும் நெரிக்கட்டத் தொடங்கியது. நாற்காலியில் உட்கார்ந்தபடியே நெளிந்தார். முகம் சிவந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்?

தினமணி வைத்தியநாதய்யர்!

அடுத்து பேச வந்தார் வைத்தியநாதன். பார்ப்பன விஷத்தை கக்கினார்.

வள்ளலாரின் வடலூரில் நின்றுகொண்டு வள்ளுவரை பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளுவரும், வள்ளலாரும் கொல்லாமையை, புலால் உண்ணாமையை வலியுறுத்தியவர்கள். எனவே, புலால் சாப்பிடுகிற வாயால் வள்ளுவரைப் பற்றி பேசுவது முறையாகுமா? புலால் உண வையும்,
கள்ளையும் யார் தவிர்க்கிறார்களோ அவர்களுக்கே திருக்குறளைப் பற்றி பேச முழுத்தகுதியும் உண்டு. புலாலையும் சாப்பிட்டுக்கொண்டு திருக்குறளையும் தேசிய நூலாக்க வேண்டும் என்று கேட்பது சரியாகுமா? புலால் உண்பவர்கள் திருக்குறளை பற்றிப் பேசும்போது குற்ற உணர்வோடுதான் பேசவேண்டும் என்று சமாளிக்க முயன்றார்.

பேராசிரியர் மோகனராசு அவர்களின் உரைக்குப் பதில் சொல்ல வக்கத்து வேறு கிளைக்குத் தாவும் பரிதாபத்தைப் பாரீர்!

எதிரிலே உட்கார்ந்திருக்கிற நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் புலால் உண்பவர்கள் என்று நன்றாக தெரிந்திருந்தும் அவர்களுக்கு திருக்குறள் பற்றிப் பேசும் தகுதி இல்லை என்று அங்கேயே ஜாதி உணர்வோடு பேசினார்.

அதாவது புலால் உண்ணாமையை கடைப்பிடிக்கிற பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் திருக்குறளைப் பற்றி பேசுகிற முழுத்தகுதியும் உண்டு என்று மறைமுகமாகச் சொல்கிறார்!

கூட்டத்தில் அமர்ந் திருந்தவர்களோ,  கேலி யாக சத்தம் போட்டனர். அப்படிப் பேசிக்கொண்ட வர்கள் வைத்தியநாதனை காய்ச்சி எடுத்தார்கள்.

திருவள்ளுவரும், வள் ளலாரும் கொல்லாமையை மட்டும்தான் வலியுறுத்தி னார்கள் என்பதுபோல் பேசுகிறாரே? பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர். வைத்தியநாதன் இதை ஏற்கக்கூடியவரா? பார்ப்பனர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று சொல்பவராயிற்றே என்றார் ஒருவர். சாதி, மதம், சடங்குகள், ஏன் உருவ வழிபாட்டுக்கே எதிரானவர் வள்ளலார்.

கண்மூடிப்பழக்கம் எலாம் மண்மூடிப்போக என்றார் வள்ளலார். வைத்தியநாதன் இதைப் பின்பற்றுகிறாரா? என்னமோ இவருக்கு மட்டுந்தான் வள்ளுவரையும், வள்ளலாரையும் பற்றி பேசுகிற தகுதி உண்டு என்கிற ரீதியில் பேசுகிறாரே என்றார் இன்னொருவர். புலால் உண்பதாலேயே எங்களுக்கு திருக்குறள் பற்றிப் பேசத் தகுதி இல்லை என்றால் உருவவழிபாட்டையும் பேதங்களையும் மனு தர்மத்தையும்,

வர்ணாசிரமத்தையும் ஏற்றுக் கொள்கிற வைத் தியநாதனுக்கு அந்தத் தகுதி முற்றாகவே கிடையாது என்றார் ஒரு முதிய தமிழன்பர். வைத்தியநாதனுக்கு பிறகு வேறு யாரையாவது உரையாற்றவிட்டிருந்தால், இந்த பார்ப்பனக் கருத்துகளை கிழித்தெடுத்திருப்பார்கள் என்றார் மற்றொருவர்.

 பெரியார் மறைந்தாலும்...

ஆக, ஒவ்வொருவரும் பெரியாரின் கருத்துகளை வெவ்வேறு குரல்களில் பேசிக்கொண்டேதான் அரங்கில் இருந்து கலைந்து சென்றனர். மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் பார்ப்பனர்களை குத்திக்குடைந்திருக்கிறார் பெரியார் என்பது இந்த விழாவே எடுத்துக்காட்டு! அதனால்தான், பார்ப்பனர்கள் பெரியார் என்ற பெயரைக் கேட்டாலே கொதிக்கிறார்கள்.

வைத்தியநாதன் அவர்களே, நீங்கள் எங்கே சென்றாலும் பெரியார் கருத்துகள் உங்களை தொடர்ந்துவரும். அதனால்தான், இதை பெரியார் மண் என்கிறோம். எச்சரிக்கையும், அசிங்கப்பட்டதற்கு வாழ்த்துகளும்!

- நமது சிறப்புச் செய்தியாளர்

Tuesday, June 23, 2015

தமிழருக்கு மதம் கிடையாது

தமிழருக்கு மதம் கிடையாது


எங்கள் கவலையெல்லாம் மக்களிடத்தில் ஒரு புதிய உணர்ச்சி ஏற்படவேண்டும். மாறுதல் வேண்டும். மக்களிடத்தில் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றில் காட்டுமிராண்டித்தனமான புத்தி இருக்கிறது. இது மாற வேண்டும் என்று கருதி அதற்காகப் பாடுபடுகிறோம். எங்கள் கட்சிக்குப் பெயர் தமிழர் கட்சியாகும். தமிழர் கட்சியின் லட்சியம் தமிழர் நலன் பற்றியதேதான். மற்ற எந்தக் கட்சிக்கும் தமிழர் நலன் பற்றிக் கவலையில்லை.


காங்கிரஸ்காரர்களைக் கேட்டால் தமிழ் -தமிழ்நாடு - தமிழர்கள் என்று பிரித்துப் பேசாதே. எல்லோரும் அண்ணன் தம்பிகள் -_- எல்லோரும் சமம் - பிரிக்கக்கூடாது என்பான். இங்குள்ள காங்கிரஸ்காரர் அல்ல,- காங்கிரசை ஏற்படுத்தியவனே செய்த ஏற்பாடு எல்லோரும் பாரதமாதா புத்திரர்கள் என்று. பாரதமாதாவுக்கு எத்தனை புருஷர்கள்? துலுக்கன், கிறிஸ்துவன்,  தமிழன் என்று கூறிக்கொண்டேதான் போக வேண்டும். பாரதமாதா என்று மகாத்மாகாந்தி ஆரம்பித்ததே பித்தலாட்டம். மக்களுக்கு உணர்ச்சி ஏற்பட்டு தங்களை முன்னேற்றிக்கொள்ள இருப்பதைத் தடுக்கவே பாரதமாதா ஏற்பட்டது. இந்தக் கருத்தை நான் 30 ஆண்டுகளாகக் கூறிவந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கும் பாரதத்திற்கும் சம்பந்தம் என்ன என்று கேட்டால் இதை ஒரு பத்திரிகைக்காரன்கூட எழுதமாட்டான். எல்லா பத்திரிகைக்காரர்களும் வயிற்றுப் பிழைப்பைக் கருதி பித்தலாட்டம் அயோக்கியத்தனம் செய்பவர்கள்தான். ஒருவனுக்குக் கூட, நாம் தமிழர்கள் நலன்பற்றி பாடுபடணும், எழுதணும் என்ற கவலையே சிறிதுகூட இல்லை. அம்மாதிரி கருதி எழுதக்கூடிய பத்திரிகையே கிடையாது.

நாங்கள் கடவுள் இல்லை என்று கூற உங்களிடையே வரவில்லை. கடவுள் இல்லை என்று கூற அறிவுள்ளவனால்தான் முடியும். அந்த அறிவு உங்களுக்கு வருகிறவரையில் ஏதோ கடவுளை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அது தமிழன் கடவுளாக இருக்கட்டும். பார்ப்பான் கடவுள் வேண்டாம். இப்போதிருக்கிற கடவுள்களில் ஏதாவது தமிழன் கடவுள் உண்டா என்றால் இல்லை, எல்லாம் பார்ப்பனக் கடவுள்களேயாகும்.

அதுபோலவேதான் மதமும். தமிழனுக்கு தமிழன் மதமும் கிடையாது.  மற்ற நாட்டில் எல்லாம் அந்தந்த நாட்டின் பெயர் அந்நாட்டின் மொழியின் அடிப்படையில் இருக்கிறது. ஜப்பான் மொழியைக்கொண்ட நாடு ஜப்பான் என்று உள்ளது. ஃபிரான்சு மொழியைக் கொண்ட நாடு ஃபிரான்சு நாடு என வழங்குகிறது. இப்படியே எல்லாமும். ஆனால் தமிழ்மொழியைக்கொண்ட நம் நாட்டிற்கு என்ன பெயர் - இந்தியநாடு. இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் எவ்வளவு சம்பந்தமோ அப்படித்தான் இதற்கும். இந்த எண்ணம் எங்களைத்தவிர வேறு யாருக்காவது ஏற்பட்டு உண்மையில் பாடுபடுகிறார்களா என்றால் கிடையாது.
சேத்தியாதோப்பில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு, (விடுதலை 10.7.1961)
 
வெளிநாடுகளில் மதம் என்றால் அவர்கள் என்னவென்று புரிந்து கொள்வார்கள். அதைப்பற்றி அவர்களுக்குத் தெரியும். நம் நாட்டில் யாருக்குத் தெரியும்? பொட்டு வைப்பது மதம், நாமம் போடுவது மதம், சேலை கட்டுவது மதம், இந்த வகையான சோறு தின்பது மதம் என்பதுபோன்றுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட மத நம்பிக்கை கொண்ட பைத்தியக்கார நாடு நம் நாட்டைத் தவிர வேறு ஒன்றுமில்லை. மதத்திலேயே வைணவம், சைவம், காளிமதம் என்கிறான். இன்னும் போனால் பேய் மதம் என்றுகூட வைத்துக் கொள்வான்; மனிதனுக்கு அறிவு கொடுக்க வேண்டியது கடவுள். மதம், சாஸ்திரம்தான். இங்கு அப்படி இல்லையே.

எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அயோக்கியக் கடவுளாகத்தான் இருக்கின்றன. விரோதிகளைக் கொன்று குவிப்பதும், பெண்ணை அடித்துக் கொண்டு போவதும், பெண்டாட்டி, பிள்ளைகளை வைத்துக் கொள்வதும்தான் நம் கடவுள். ஒவ்வொருவனும் தனக்கு ஏற்றாற்போல், சிவன், பரமன், சக்தி, குமரன் என்று வைத்துக் கொள்ளுகிறான். இவர்கள் எல்லாம் யார்? அப்படி எவனாவது இருந்தானா? அல்லது இருக்கிறானா? என்ன வெங்காயமோ தெரியவில்லை. அப்படி கடவுள் இருப்பதாகக் கூறினான். அவன் எங்கே போய் விட்டான்? கடவுள் கண்ணுக்குத் தெரியாது என்றால் அதற்கு ஏன் பெண்டாட்டி, வைப்பாட்டி, பிள்ளை, ஆறுவேளை சோறு? இவையெல்லாம் எவ்வளவு முட்டாள்தனம்? அடிக்கடி மக்களிடம் வந்துபோன கடவுள் இன்று ஏன் வரக்கூடாது? நாம் அவ்வளவு பாதகர்களா?

சாஸ்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், எவனுக்கு சாஸ்திரம் என்றால் என்ன என்று தெரியும். அதில் அவனைப் பற்றிய மரியாதை என்ன? இதையெல்லாம் யோசிக்கத் தெரியாதா? மதத்தில் ஒரு வேத மதம், என்ன வெங்காய வேத மதம். அதைப்பற்றி யாருக்கு என்ன தெரியும்? அதன் கருத்துகள் படித்தால் சிரிப்பை மூட்டுகின்றன. இவையெல்லாம் விளையாட்டுத்தனமாகவே இருக்கின்றன.

கடவுளிடம் பேசினார் என்கிறான் ஒருவன். இவர் கடவுளைப் பார்த்தார் என்கிறான் இன்னொருவன். அப்படிக் கூறுகிறவன் எதைக் கடவுள் என்கின்றான். எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும், மனிதனைத்தான் சித்தரித்துக் காட்டுகிறார்கள்.

மனிதனுக்கு இருப்பது போன்ற உடலமைப்புகள், உருவமெல்லாம் உணர்ச்சி குணங்கள். கடவுள் மனிதனைப் போன்று ஏன் இருக்க வேண்டுமென்று கேட்க ஆள் இல்லையே? மூட நம்பிக்கைகளை ஒழித்தால்தான் நம்மக்களுக்கு அறிவு வரும். கடவுள் இருக்க வேண்டுமென்றால் யோக்கிய உணர்ச்சிக்கு இருந்துவிட்டுப் போகட்டும். அப்படியில்லாத நிலையில் நீண்ட நாளாக இந்த மூட நம்பிக்கைகள்தானே தலைவிரித்தாடுகின்றன. நம் மக்களுக்கு அறிவு உணர்ச்சி, மான உணர்ச்சி வரவேண்டும் என்பதற்காகப் பாடுபடாமல் சும்மா ஏதோ பேசி காலத்தைக் கழிப்பதால் என்ன நன்மை? அப்படிக் காலத்தை வீணாக்கினால் எப்போது நாம் முன்னுக்கு வருவது?

19.10.1963 அன்று எழும்பூர் பெரியார் திடலில் தந்தை பெரியாரின் 85ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் தந்தை பெரியார் சொற்பொழிவு, (விடுதலை, 25.10.1963)

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...