Monday, July 30, 2012

உமாபாரதி


பி.ஜே.பி.யில் மீண்டும் சரணடைந்த செல்வி உமாபாரதி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒன்றைக் கூறியுள்ளார். ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார். அதற்கு எதிர்ப்புத் தெரி வித்து இன்றைய தமிழக முதல் அமைச்சர் ஜெய லலிதா கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதைக் காப் பாற்றுவார் என்று நம்பு கிறேன் என்று பேட்டியில் கூறி இருக்கிறார்.
நாட்டு மக்கள் எல்லாம்  மறதி மன்னர்கள் அல்லது மாங்காய் மடையர்கள் என்ற நினைப்பில் இத்த கைய அரசியல்வாதிகள், அதிலும் குறிப்பாக இந்த இந்துத் துவாவாதிகள் மிதக்கி றார்கள் போலும்! ராமர் பாலத்தை இடிக் கச் சொன்னது ஒன்றும் அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அல்ல - அப்படி ஒரு பாலம் இருந்தால் அல் லவா உடைக்கவும் முடியும்.
இந்தப் பாதையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றச் சொன்னது நீரி என்ற தொழில் நுட்ப நிறுவனம். அவ்வாறு முடிவு எடுக்கப் பட்டதும்கூட  அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் அல்ல; அது தேசிய ஜனநாயகக் கூட் டணியான வாஜ்பேயி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் தான் அத்தகைய முடிவும் எடுக்கப்பட்டது.
இதில் மேலும் ஒரு முக்கியமான தகவலும் உண்டு - அதுவும் இதே உமாபாரதி சம்பந்தப்பட்டது என்பதுதான் படு நகைச் சுவை!
மத்திய அமைச்சராக உமாபாரதி இருந்தபோது தான் ராமன் பாலம் இருந்ததா, இல்லையா என்பதை   தொல் பொருள் துறைமூலமாக ஆய்வு செய்யச் சொல்லப்பட்டது. அந்த ஆய்வு பாலம் இருப் பதற்கான சுவடே இல்லை என்று தெரிவித்துள்ளது என்ற தகவலை சேது சமுத்திரத் திட்டத்தில் நிருவாக இயக்குநர்  ரகுபதி வெளிப்படுத்தினர் (ஆதாரம்: தினமலர் 26.7.2007 பக்கம் 5).
உண்மை இவ்வாறு இருக்க அதே உமாபாரதி இப்பொழுது பல்டி அடித் துப் பேசுவதன் பொருள் என்ன?
முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் ஒரு பொறுப்பை  ஒப்படைத் துள்ளார். அதுவும் மிகவும் பொருத்தம்தான்! ராமன் பாலத்தை (?) ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று சொன்னதோடு மட் டுமல்ல; இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அச்சிட்டுக் கொடுத் தவரே இதே ஜெயலலிதா தானே! முரண்பாடு என்னும் ஒரே ஓடத்தில் பயணம் செய்பவர்கள் (Sailing in the Same Boat) இப்படி யாகத்தானே நடந்து கொள்வார்கள்.
- மயிலாடன்

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 80


நமது இயக்கத்துக்குத் தவறான நோக்கங்கள் கற்பிக்கப்பட்டு, பார்ப்பனர் கள் மீது துவேஷம் கொண்டிருப்பதாக நம் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையானது அல்ல என்பதுடன், சில்லறைத்தனமானதுமா கும். தங்களுக்குத் தனியாக பிரதி நிதித்துவம் வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரியபோது, அவர்கள் இந்துக்களை வெறுத்தார்களா?
உருவாக்கப்பட உள்ள கவுன்சிலில் பெரும்பகுதியினர் இந்தியர் களாக இருக்க வேண்டும் என்று இந்தி யர்கள் கேட்டபோது, ஆங்கிலேயரை அவர்கள் வெறுத்தார்களா? அவையில் அதிகாரிகள்  உறுப்பினர்களின் எண் ணிக்கை பாதியிலிருந்து அய்ந்தில் ஒரு பாகமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் அல்லாத உறுப் பினர்கள் கோரிய போது அதிகாரி உறுப்பினர்களை அவர்கள் வெறுத் தார்களா? இல்லை என்றால், நம் மீது மட்டும் இந்த வெறுப்புக் குற்றச்சாட்டு ஏன் சுமத்தப்படுகிறது?
இத்தகைய குற்றச் சாட்டுகள் நமது நோக்கத்தை எட்டுவ திலிருந்து நம்மை தடுத்து நிறுத்தி விடப்போவதில்லை என்பதை நமது எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்றே தோன்றுகிறது. பொதுப் பணிகளிலும், சட்டக் கவுன்சில்களிலும் தாங்களே ஏகபோக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று பார்ப்பனர்கள் விரும்பு கின்றனர் என்ற எண்ணத்தையே, இத்தகைய தடைசெய்யும் தந்திரங்கள் நம் மனங்களில் ஏற்படுத்தும். எவர் மீதும் நமக்கு எந்த வித வெறுப்பும் இல்லை. நமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள மட்டுமே நாம் விரும்புகிறோம்.
நம்மை நாமே உயர்த்திக் கொள்ளவே நாம் முயல்கிறோமே அன்றி, மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்க முயலவில்லை.  ஒரு நடைமுறை மீதே, தற்போதுள்ள வாக் குரிமை, சட்டமன்ற அமைப்புகள் என்ற நடைமுறை மீதே நாம் தாக்குதல் நடத் துகிறோம்.  எந்த ஒரு தனிப்பட்டவர் மீதோ, ஒரு சமூகத்தின் மீதோ எந்தக் குறையையும் நாங்கள் கூறவில்லை. எங்களுக்கு ஏதேனும் குறைபாடு இருந் தால்,  1892 மற்றும் 1909 ஆம் ஆண்டு களில் அறிமுகப்படுத்தப்பட்ட நடை முறையைத் தொடர்ந்து இயல்பாக ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர் பார்த்து அவற்றைத் தவிர்க்க நடவடிக் கைகள் மேற்கொள்ள அரசு தவறிவிட்டது என்பதுதான் அந்தக் குறை. இத்தகைய பின்விளைவுகள் மிகவும் மோசமான வைகளாக ஆகவில்லை என்பதில் அய்ய மேதுமில்லை.
சட்டக் கவுன்சில்களை பெரும் அளவில் விரிவுபடுத்தும் திட் டத்தை அறிமுகப்படுத்தி, இந்தக் கவுன்சில்களுக்கு நிருவாகக்கட்டுப்பாடு மற்றும் வரி விதிக்கும் அதிகாரங்களை அதிக அளவில் அளிக்கத் திட்டமிடும் போது,  இத்தகைய அதிகாரங்களால் பாதிக்கப்படக்கூடிய  மக்கள் தங்களுக்கு வர உள்ள ஆபத்துகளைக் கண்டு அஞ்சி, அத்தகைய அதிகாரங்கள் தங்கள் மீது தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வகையில் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோருவது இயல்பானதேயாகும்.
ஆங்கிலோ இந்தி யர்கள் அதிகாரத்தில் இருந்தபோது,  நிருவாகிகளுக்கு சுயநலம் என்று எதுவும் இல்லாமல் இருந்ததாலும், இயல்பாக ஒரு தலை சார்பாக ஆதரவு காட்டச் செய்யும் உள்ளூர் மக்களுடனான தொடர்புகள் அவர்களுக்கு  இல்லாமல் இருந்ததாலும்,  அவர்கள் ஒருதலை சார்பாகச் செயல் படாமல் நடுநிலை வகித்தார்கள் என்ற ஒரு பாதுகாப்பு மக்களுக்கு இருந்தது. அதற்கு மாறாக,  மற்ற சமூகங்களின் நலன்களுடன் மோதல் போக்கைக் கொண்டுள்ள நலன்களைப் பெற்றுள்ள ஒரு சமூகம் பெரும் அதிகார நிலைக்கு உயருமானால்,  மற்ற சமூக மக்களின் முன் னேற்றத்தை விட, தனது சமூகத்தைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்திலேயே அந்த சமூகம் அதிக அக்கறையும், ஆர்வமும் இயல்பாகவே கொண்டிருக்கும் என்பதால், ஒரு தனிப்பட்ட சமூகத்தின் கைகளில் இவ்வாறு அதிக அளவு அதிகாரங்கள் குவிக்கப்படுவது பற்றி மற்ற சமூக மக்கள் அச்சம் கொள்வது இயல்பேயாகும்.
ஹங்கேரியின் வரலாற்றை நாம் படித்ததில்லையா? அந்த நாட்டில் மாக்யார்கள்  ஆற்றிய செயல்களைப் பற்றி நாம் அறிந்திருக்கவில்லையா? அவர் களின் கைகளில் அதிகாரங்கள் குவிக் கப்பட்டதே அந்நாட்டின் அழிவுக்குக் காரணமாக ஆகிவிடவில்லையா? இத் தகைய ஒரு நிலை நம் நாட்டிலும் ஏற்படுவதற்கு நாம் அனுமதிக்கலாமா? அப்படி இல்லையென்றால், ஒரு அதிகார மற்றும் செல்வாக்கு சமநிலையை உரு வாக்க மட்டுமே நாம் முயலும்போது, தவறான நோக்கங்களை நமது முயற் சிக்குக் கற்பிப்பது ஏன்? பழைய ரணங் களைக் கிளற வேண்டும் என்பது நமது விருப்பமல்ல. அதனால் எந்த ஒரு நல்ல பயனும் ஏற்படப் போவதில்லை.
ஆனால், தங்களின் சொந்த நலன்களைப் பாது காத்துக் கொள்ள வேண்டும் என்ற அவர்களது விருப்பத்தை ஏதேனும் ஒரு வழியில் முறியடிக்க முனையும்போது,  கடந்த கால வரலாறு திரும்புகிறது என்ற உண்மையையே அது உணர்த்துகிறது. சமூக அடிப்படையில் ஒரு திட்டத்தை உருவாக்குவது கடினமான செயலாகவும் இருக்கக்கூடும். என்றாலும், அத்தகைய ஒரு திட்டத்தில் இருந்து தப்பிச் செல்வது என்பது அவ்வளவு எளிதான செயலல்ல.  எந்த வகையிலும் நாம் அதனை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.
பின்னர் நெல்லூரைச் சேர்ந்த ஒரு செல்வந்தரான நிலச்சுவான்தாரரான திரு. கே.ஆதிநாராயணரெட்டி மாநாட்டுக் குத் தலைவராக திரு. தியாகராய செட்டி யார் அவர்களை முறைப்படி முன்மொழிய, உயர்நீதிமன்ற வழக்குரைஞரும், பெர் ஹாம்பூர் நகர்மன்றத் தலைவருமான  திரு. ஏ.பி.பட்ரோ வழிமொழிந்தார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பா.ஜ.கட்சி தலைவர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகும் ஆர்.எஸ்.எஸ். (2)


- ராணா அயூப்
நேற்றைய தொடர்ச்சி....

முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சுதர் சனம் அரசின் விவகாரங்களில் தலையிடு வதை வாஜ்பேயியும், அத்வானியும் எவ்வாறு திறமையுடன் தவிர்த்தனர் என்பதை எண்ணி ஆர்.எஸ்.எஸ். இப்போதும் குழம்பிக் கொண்டே இருக்கிறது. வாஜ்பேயி போன்ற மென்மையான தாராளமனம் கொண்ட தலைவருடன்  தீவிரக் கொள்கைப் பிடிப்புள்ள அத்வானி போன்ற தலைவரும் உடனிருப் பதையே ஆர்.எஸ்.எஸ். விரும்பி வரவேற் கிறது. ஆனால் அத்தகைய தலைவர்கள் மீது கட்டுப்பாடு வைத்திருக்க வேண்டும் என்றே விரும்புகிறது. கட்டுப்பாட்டை இழக்க அது விரும்பவில்லை.
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, மிகுந்த நம்பிக்கைக்கு ரிய அவரது தலைமைச் செயலாளர் பிரஜேஷ் மிஸ்ராவை ஆர்.எஸ்.எஸ்.  தொடர்ந்து தாக்கிக் கொண் டிருந்தது. அவரை பதவி விலக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் கூறிய காரணம் உண்மையானதல்ல. அவர் நீக்கப்பட்டால், வாஜ்பேயி பலவீனமடைந்துவிடுவார் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் அரசு நிலைக்க வேண்டுமே என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கியதை தெகல்கா வெளிப்படுத் தியதில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு மகிழ்ச்சிதான். பிரதமர் அலுவலகத்தில் இருந்த பிரிஜேஷ் மிஸ்ரா மற்றும் என்.கே.சிங் மீது தாக்குதல் நடத்துவதையும் அது வரவேற்றது. வாஜ்பேயி பிரதமர் அலுவலகத்தின் மிது முழு அளவி லான தாக்குதலை நடத்த சென்னை கணக் காயர் குருமூர்த்திக்கு  சுதந்திரம் அளித்தது.
பா.ஜ.கட்சி விவகாரங்களில் தலையிடு வதை ஆர்.எஸ்.எஸ். நிறுத்திக் கொண்டு அதனை ஒரு முழுமையான அரசியல் கட்சி யாக வளர விடுமா? என்று அரசியல் நோக் கர்கள் கேட்பதுண்டு. இது பற்றி ஆர்.எஸ். எஸ்.சின் ஓர் உண்மையான விவாதம் நடந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை இக்கேள்வி அளிக்கிறது. ஆனால், பா.ஜ.க. தன் கட்டுப்பாட்டை விட்டு விலகிச்செல்வதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவே இல்லை. யார் தலை வராக வரவேண்டும், யார் ஓய்வு பெற வேண்டும் என்பத தாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின் றனர். முற்றிலும் அரசியலை மட்டுமே சார்ந்த பிரச்சினையிலும் ஆர்.எஸ்.எஸ். மூக்கை நீட்டி வருகிறது. பிரதமர் வேட்பாளர் மதச்சார் பற்றவர் என்ற தோற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியபோது, பா.ஜ.கட்சி இதற்கு பதில் கூறட்டும் என்று விட்டுவிடாமல், மோகன் பகத், இந்துத்வ ஆதரவாளர் ஒருவர் பிரதமராக வருவதில் தவறென்ன? என்று கேட்டார். உடனே பிரதமர் வேட்பாளராக தான் ஆவதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அளிப்ப தாக மோடி கூற ஆரம்பித்து விட்டார். அதனை மறுத்து, ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர் பாளர் ராம் மாதவ், இந்துத்துவா பற்றி நிதிஷ் குமார் கூறியதற்கு மோகன் பகத் பதிலளித் தார் அவ்வளவுதான்.  எவரையும் குறிப்பிட்டு அவர் அவ்வாறு கூறவில்லை என்று கூறினார்.
2002 குஜராத் படுகொலைகள் என்னும் களங்கம் மோடியின் மீது நீடித்திருக்கும் நிலையில் அவரை எப்படி பிரதமர் வேட்பாள ராக ஆக்க முடியும் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, கோட்பாடு பற்றிய கேள்வி அது என்பதால், பாபர் மசூதி இடிப்புக் குப் பின்தான் அத்வானி உதவி பிரதமர் ஆனார் என்று அவர் பதிலளித்தார்.
கமல்சந்தேஷ், பஞ்சஜைன்யா, ஆர்கனை சர் என்ற ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தால் நடத்தப்படும் மூன்று பத்திரிகைகளிலும் அண்மையில் மோடிக்கு எதிரான செய்திகள் வெளிவந்துள்ளன. மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவர் பிரபாத் ஜாவை ஆசிரியராகக் கொண்ட கமல்சந்தேஷில், மோடி ஓர் அவசரக் குடுக்கை என்று எழுதியுள்ளார். எல்லோரை யும் அனுசரித்துச் செல்ல முடியாத பொறுமை யற்ற தலைவராக மோடி ஆகி வருவதாக பஞ்சஜைன்யாவின் கட்டுரை எச்சரிக்கிறது. சங் வட்டாரத்தில் மிகவும் மதிக்கப்படும் முன்னாள் பேராசிரியர் தேவேந்திர ஸ்வரூப் எழுதிய கட்டுரை இது.
சங் என்ன நினைக்கிறதோ அதற்கு எதிரான இத்தகைய கருத்துகள் சங் பத்திரி கைகளில் எவ்வாறு வெளி வருகின்றன என்று ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கேட்கிறார்.
ஆனால்  ஓர் அமைப்பு என்ற முறையில் ஆர்.எஸ்.எஸ். மோடிக்கு இத்தகைய ஆதரவு அளிப்பது பற்றி குஜராத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.கட்சியினர் கவலையும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். சங்கத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும் சரி, அவர்கள் அளிக்கும் ஆதரவு மோடியை சர்வாதிகாரி அரசியல்வாதியாகத்தான் ஆக்கும் என்று ஜடாபி கூறுகிறார். மோடியை ஆதரிக்க நம்மைப் போன்ற எத்தனை ஆடுகளை பலி தருவார்கள்? ஹரேன் பாண்டியா, சஞ்சய் ஜோஷி, கேசுபாய் படேல் என்று எத்தனை பேர்? என்று அவர் கேட்கிறார். கொள்கைப் பிடிப்பு கொண்ட தலைவர்களை உருவாக்குவதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். தீய சக்திகளையே உருவாக்கி வருகிறது என்று அவர் கூறுகிறார்.
தனக்கு உடல்நலமில்லை என்று கூறிக்கொண்டு மோடி மருத்துவமனையில் சேர்ந்தபோது ஆர்.எஸ்.எஸ். அவருக்கு அடிபணிந்தது. ஆர்.எஸ்.எஸ்.கோட்பாட்டில் என் கணவர் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர் என்பதை அவர்கள் அறியமாட்டார்களா? என்று ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜக்ருதி கேட்கிறார்.
இப்போது நடப்பது இதுதான். ஒரு அமைப்பு பிரச்சாரம் செய்யும் கோட்பாடு வெளிப்படுத்தப்படும்போது,  ஒரு நோக்கத் திற்காக அல்லாமல் ஒரு தனிப்பட்டவருக்கே அது உதவுவதாக உள்ளது. எந்தப் பிரச் சினையில் இருந்தும் எளிதாகத் தப்பிக்கும் வழியையே இன்று ஆர்.எஸ்.எஸ். தேடுகிறது. எடியூரப்பா, வசுந்தரா, மோடி போன்ற தனிப்பட்டவர்களின் கட்டளைக்கு அது கீழ் படிந்து வருகிறது என்று ஒரு பா.ஜ.க. மூத்த தலைவர் கூறுகிறார்.
என்றாலும், ஆர்.எஸ்.எஸ்.சின் முரண் பாடுகளே முன் நிற்கின்றன. ஜாதி அரசி யலுக்கு இடம் கொடுத்து லிங்காயத் சமூகத் திற்கான அடையாளத்துக்கு ஆதரவு தரும் எடியூரப்பாவுக்கு பா.ஜ.க. ஆதரவு தருவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை. ஆனால், தனது சொந்த ஊரான நாக்பூரைச் சேர்ந்த தனது பார்ப்பன இனத்தைச் சேர்ந்த கட்காரிக்கு இரண்டாவது முறை பா.ஜ.க. தேசிய தலைவர் பதவியை பகவத் அளித்துள் ளது எப்படி? என்ற கேள்வி எழுகிறது.
பா.ஜ.கட்சியில் உள்ள புதுதலைமுறை யினருடனான தொடர்பில் ஓர் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. முரளி மனோகர் ஜோஷி, அத்வானியை விட்டால், வேறு யார் எங்களுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ள உள்ளனர்? இரண்டாம் நிலை தலைவர்களை எல்லாம் பாருங்கள். அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ரஜ்நாத் சிங், எடியூரப்பா அவர்களில் எவரும் கோட்பாட்டுக்காக வேலை செய்பவர்கள் அல்ல. மேல்பதவியில் இருப்பதையே அவர்கள் அனைவரும் விரும்புகின்றனர். இந்த மாதிரியான அரசியல் நடத்துவ தால்தான் அத்வானி மும்பை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின் றனர். குஜராத்தில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு அம்மாநிலத்தின்  வளர்ச்சியும், இந்துத்துவா கோட்பாடும் தான் காரணம் என்று  சிலர் கூற ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இந்த வியூகம் மத்தியபிரதேசம், ராஜஸ்தான்  போன்ற மாநிலங்களில் ஏன் செல்லுபடி யாகவில்லை? மத்திய பிரதேசத்தில் உண் மையில் ஆர்.எஸ்.எஸ்.தான் பா.ஜ.க. போர் வையில் ஆட்சி செய்கிறது. அரசியல் விவ காரங்களில் சுரேஷ் சோனியின் தலையீடும், வியாபார ஒப்பந்தங்களை ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் முடித்துத் தரும் வெளிப்படையான ரகசியங்கள்தான். சோனி ஆர்.எஸ்.எஸ்.சில் பணக் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து விட்டதாக பலரும் புகார் கூறுகின்றனர். மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒப்பந்தங்களுக்கு அவர் ஒரு தரகர் போல இருக்கிறார்; ஆர்.எஸ்.எஸ்.சும் அதனைக் கண்டு கொள்ளாமல் உள்ளது என்று ஒருவர் கூறுகிறார்.
ஆர்.எஸ்.எஸ்.சின் இணைச் செயலாள ரான சோனி முன்னாள் தலைவர் சுதர்சனின் சீடர்.  மற்றொரு பார்ப்பனரான சுரேஷ் பய்யாஜி ஜோஷியை பொதுச் செயலாளராக ஆக்கி தன்னைப் புறக்கணித்ததற்காக பகவத் மீது சோனிக்கு வருத்தம் இருக்கிறது. ஜாதி தான் இதன் காரணம் என்று வைசியரான அவர் கூறுகிறார்.
பா.ஜ.கட்சிக்கு அரசியல் களத்தில் இடம் பெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ். இரட்டைப் பேச்சு பேசி வருகிறது. இது இதர இந்துத்துவ அமைப்புகளைப் புறக்கணிப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பலரையும் ஏமாற்ற மடையச் செய்வதாகவும் இருக்கிறது. விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தளத்துடன் ஆர்.எஸ். எஸ்சுக்கு நல்ல உறவு இருந்தது.  கருநாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த அமைப்பு களுக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.கட்சி யினருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் வெடித்துக் கிளம்பின. மகாராஷ்டிராவில் மாலகான் குண்டுவெடிப்புகளுக்கும் தனக் கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். சவுகரியமாக விலகிக் கொண்டது. பஜ்ரங்தளம், சனாதன் சன்ஸ்தா, விசுவ இந்து பரிசத் ஆகியவை மாலகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவு தந்தபோது, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தர வில்லை. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்திரேஷ்குமார், சுனில் ஜோஷி என்ற இரு ஆர்.எஸ்.எஸ். காரர்களைப் பற்றி சாட்சியம் அளித்தபோது, ஆர்.எஸ்.எஸ். தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தியது.
இவை அனைத்துக்கும் ஆர்.எஸ்.எஸ். சின் செல்வாக்கு குறைந்து வருவதே கார ணம் என்று ஒரு முக்கிய ஆர்.எஸ்.எஸ்.நட்சத் திரமான கோவிந்தாச்சார்யா கூறுகிறார். சாதாரண சாப்பாடு, படுக்கும் பாய், 200 சதுர அடி அறையுடன் ஆர்.எஸ்.எஸ். தொண் டர்கள் மனநிறைவடைந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்களும் அவர்களது மூத்த தலை வர்களைப் போலவே  அதிகாரம் தேடுபவராக இருக்கிறார்கள்; குளிரூட்டப்பட்ட அறை, மற்றும் நவீன சாதனங்களைத் தேடுபவர் களாக உள்ளனர். அந்த சவுகரியங்களைப் பெறுவதற்கு இந்துத்துவா, சமூக முன்னேற் றம் பற்றி பேசுவதே வழியாகும். இதுதான் அரசியல் என்று தோன்றுகிறது.
நன்றி: தெகல்கா 14 ஜூலை 2012 தமிழில்: த.க.பாலகிருட்டினன்

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

செய்திச் சிதறல்கள்!


காலரா எனும் கொடிய நோய்

காலரா என்ற வார்த்தை புதிய தலைமுறையினருக்கு அனேகமாக தெரியாத வார்த்தையாகும்.
ஒரு 50 ஆண்டுகளுக்கு முன் இந்த நோய் மக்களை அள்ளிக் கொண்டு செல்லும். வீடு வீடாக, தெருத் தெருவாக சாவுகள் விழுந்து கொண்டே இருக்கும்.
பக்திச் சேற்றில் மூழ்கிக் கிடந்த மக்களுக்கு காலரா ஒரு நோய் என்று தெரியாது. காளியாத்தா ளுக்குக் கோபம்! அதன் விளைவு தான் காலரா என்று நம்பினார்கள். என்ன செய்வார்கள் தெரியுமா?
காளியம்மன் கோயிலுக்குக் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள்.  ஆனாலும் மரணக் கழுகு மக்களைக் கொத்திக் கொண்டு செல்வது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அது போலவே அம்மை நோயும். மாரியாத்தாளுக்குக் கோபம் என்று மாரியம்மன் கோயிலுக்குக் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். பிரயோ சனப் படவில்லை.
காலரா ஒரு நோய். குறிப்பிட்ட கிருமியால் தொற்றக் கூடியது; அம்மை ஒரு நோய் - குறிப்பிட்ட கிருமியால் பரவக் கூடியது என்று கண்டறிந்து, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டு,(Prophylatic Measures) பொது மக்களுக்கு தடுப்பு ஊசிகள் போடப்பட்டன. அதன் விளைவு - இந்நோய்கள் மறைந்துவிட்டன.
சுகாதாரமற்ற உணவும், தண்ணீரும், சுற்றுச் சூழலும்தான் இந்நோய்கள்  தொற்றுவதற்குக் காரணம் ஆகும்.
சில நாள்களாக சென்னையில் காலரா பரவியுள்ளது பற்றி செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன. இல்லை என்று சென்னை மாநகராட்சி மறுக்கிறது.
இது ஒன்றும் அரசியல் பிரச்சி னையல்ல - மக்கள் உயிரோடு விளையாடிப் பார்க்க யாரும் ஆசைப்பட வேண்டாம்.
பிரச்சினைகளை எடுத்துச் சொல்லத்தான் எதிர்க் கட்சிகள். மாநகராட்சிக் கூட்டங்களில் கருத்துக்களை எடுத்துக் கூற எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். அது தான் ஆளும் தரப்புக்கு நல்லது.
மதுரையிலும் காலரா பரவி வருவதாக செய்திகள் வெளி வரு கின்றன. பொதுவாக மாநகராட்சி யின் முக்கிய வேலை நகரத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதே - கவனத்தைப் பிரச்சினையின் மீது செலுத்த வேண்டும் - குறை கூறும் எதிர்கட்சிகள் மீதல்ல!


பேருந்துகள் கொலைக் களமா?


பள்ளிப் பேருந்துகளா கொலைப் பீடங்களா என்ற கேள்வி செங்குத் தாக எழுந்துள்ளது. தாம்பரம் அருகே இந்திரா நகர் சீயோன் மெட்ரிக்குலேசன் மேனிலைப் பள்ளி 2ஆம் வகுப்பு சிறுமி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து பலியான கோர சம்பவம் இதயக் குழாய்களை வெடிக்கச் செய்த கொடுமை அடங் குவதற்குள் வரிசையாக பேருந்து களில் மாணவிகள் மரணச் செய்தி கள் அடுத்தடுத்து வெளி வந்துள் ளன. ஆம்பூர் அருகே பள்ளிப் பேருந்தில் இறங்கி சாலையைக் கடக்க முயன்ற சிறுமி அதே பேருந் தின் முன் சக்கரத்தில் சிக்கிச் சிதறுண்டார் என்ற செய்தியும் நம் உணர்வுகளைச் சிதற அடிக்கிறது.
அதேபோல சிதம்பரத்தில் ஆறாம் வகுப்புப் படித்த மாணவி தீபிகா மரணம் அடைந்துள்ளார்.
பேருந்து என்றாலே மாணவி களின் மரணக் கிணறுகளா என்று அதிர்ச்சியுறும் நிலை!
பிரச்சினைகள் ஏற்படும் பொழுது மட்டும் கடுமையான நடவடிக்கை கள், அதன்பின் பழைய குருடி - கதவைத் திறடி என்கிற மனப் போக் குகள் நம் நாட்டில் சர்வ சாதாரணம்!
அந்த நிலை இதிலும் ஏற்பட்டு விடக் கூடாது! மனித உயிர்கள் நம் நாட்டில் வெறும் குப்பைகள்தானா?
மதம் இருக்கிறது. ஆனால் மனிதநேயத்தைச் சொல்லிக் கொடுக் கும் மனம் அதனிடம் இல்லையே!

சக்தியுள்ள கடவுள்கள்?


தமிழ்நாட்டுக் கோயில்களி லிருந்து திருடப்பட்ட ரூபாய் 110 கோடி மதிப்புடைய சிலைகள் அமெரிக்காவில் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.
இதனைப் படித்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.  இணைய தளத்தில், வெளியிடப்பட்ட படங்களைப் பார்த்து அதன் அடிப்படையில் இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனவாம்.
நம் நாட்டுக் கோயில்களின் வீர தீரப் பிரதாபங்களை ஆன்மீகச் சிறப்பிதழ் போட்டு விளம்பரப்படுத் தும் அதே இதழ்கள்தான் - தமிழ் நாட்டுக் கோயில்களில் இருந்த சாமி சிலைகள் அமெரிக்காவில் பறிமுதல் செய்துள்ளதையும் வெளி யிடுகின்றன. இதில் இவர்களுக்கு வெட்கம் சிறிதும் இல்லை. இந்து மதக் கோயில்களுக்குள் வெளி மதக் காரன் நுழைய அனுமதியில்லை - வெளியிலேயே அறிவிப்புப் பல கையைத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இப்பொழுது என்ன நடக்கிறது? அமெரிக்காவில் உள்ள கிறித்துவக் காவல்துறை அதிகாரிகள்தான் அந்த இந்துக் கடவுள்களைக் கைப்பற்றுகிறார்கள். கண்டுபிடித்தது கிறித்துவக் கை என்பதால் இந்தியாவுக்குக் கொண்டு வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட் டோம் என்று சங்கராச்சாரியார் களும்,  இந்து முன்னணி வகை யறாக்களும் சொல்வார்களா?
பார்ப்பனர்கள் பலே கெட்டிக் காரர்கள் ஆயிற்றே! அதற்கும் சடங்கு, சாங்கித் தியம், சுத்திகரிப்பு என்று சொல்லி பணம் பறிப்புத் தொழிலைத் தயா ராக வைத்திருக்க மாட்டார்களா?
சுரண்டல் தொழிலில் நட்டக் கணக்குக்கு இடம் ஏது?

அடியாட்களை ஏவி அட்டகாசம்! சிவசங்கர் பாபா கைது செய்யப்படுவாரா?


சென்னை, ஜூலை 29- சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நீலாங்கரையில் ஆசிரமம் அமைத்து பக்தி வியா பாரம் செய்யும் சிவசங்கர்பாபாவின் மீது வன்முறையைத் தூண்டிய தாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாபா நடத்தும் கோடீஸ்வர அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் மாம்பாக்கம் - கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் ஏ.எம்.எஸ். வணிக வளாகத்தின் ஒரு பகுதியில்  சுரேஷ் என்பவர் 11-4-2011 முதல் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். மாத வாடகை ரூ. 9000 அளிக்க ஒப்புக் கொண்டு முன்பணம் ரூ. 30,000 செலுத்தி 11 மாத காலத்திற்கான வாடகை ஒப்பந்தம் ஒன்றும் செய்து கொண்டுள்ளார். தனது அழகு நிலையத்திற்கு ஏற்ற வகை யில் கட்டடத்தை அழகுபடுத்த - தான் 15 லட்ச ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகக் கூறும் சுரேஷ், தனது வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் கோரியபோது, அந்த அறக்கட்டளையினர் அவ்வாறு ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்த துடன் அந்த இடத்தை உடனே காலி செய்து விடுமாறும் சுரே ஷைக் கேட்டுள்ளனர். நாளடை வில் அவரை மிரட்டவும் செய் தனர். கட்டடத்தை அழகுபடுத்த, தான் பெரும் அளவில் செலவு செய்துள்ளதால், வாடகை ஒப் பந்தம் நீட்டிக்கப்படாவிட்டால், தான் பேரிழப்புக்கு ஆளாக நேரிடும் என்று அவர் தெரிவித் திருந்தும், அறக்கட்டளையினர்   அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இடத்தைக் காலி செய்யக் கூறி மிரட்டலும் அதிகரித்தது.
இதனால் காஞ்சிபுரம் மாவட் டக் காவல் துறை அதிகாரிக்கு சுரேஷ் அனுப்பிய ஒரு புகார் கடிதம் கேளம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளருக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அத்துடன் செங் கல்பட்டு மாவட்ட மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் சுரேஷ் தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில்  23-07-2012 அன்று இரவு சுரேஷ் தனது அழகு நிலையத்தை மூடிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு பல குண்டர்கள் லாரியில் வந்து அழகு நிலையத் தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கே இருந்த பொருள் களை எல்லாம் அடித்து உடைத்து லாரியில் வாரிப் போட்டுக் கொண் டிருந்தனர். தகவல் அறிந்த சுரேஷ் தனது மனைவியுடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றது டன் காவல்துறையினரிடமும் புகார் அளித்தார். சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வன்முறையில் ஈடு பட்ட வர்களையும், லாரியில் ஏற் பட்டடிருந்த அழகுநிலையத்தின் உடைக்கப்பட்ட பொருள்களுடன் லாரியை காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று, சிவசங்கர்பாபா, ஜானகி, நாகராஜன் மற்றும் இதர அறக் கட்டளை உறுப்பினர்கள் மீதும், வன்முறையில் ஈடு பட்டவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
பக்தி போர்வையில் ஊரையும், மக்களையும் ஏமாற்றி வரும் சிவசங்கர் பாபாவின் வன்முறைச் செயல்களுக்கு தக்க நடவடிக் கையை காவல்துறை மேற்கொள் ளும் என்று நம்புகிறோம்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...