Thursday, September 29, 2011

ஆ. இராசா எழுப்பிய கேள்வி


2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கில் தொடக்கம் முதல் ஆ. இராசா எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

27ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது ஆ. இராசா அவர்களே குறுக்கிட்டு ஒரு கருத்தை அழுத்தந் திருத்தமாகக் கூறினார்.

நாட்டின் மிகப் பெரிய ஊழல் வழக்கில், நான் சம்பந்தப்பட்டுள்ளவன் என்பது தெரியும். ரோமிங் வசதி தொடர்பானவற்றில், நான் எந்த விதி முறையையும் மீறவில்லை. டிராய் விதிமுறையின் அடிப்படையில்தான், இந்த வசதி செயல்படுத் தப்பட்டது.

நான் டிராய் விதிமுறையை மீறிவிட்டதாக, சி.பி.அய்., குற்றம் சாட்டியுள்ளது. நான் இந்தத் துறை அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே, ரோமிங் வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது.

ரோமிங் வசதி விஷயத்தில், நான் டிராய் விதிமுறையை மீறியதாகக் குற்றம் சாட்டும் சி.பி.அய்., இந்த நிமிடம் வரையில், இது தொடர்பாக டிராய் ஆவணங்களை, சி.பி.அய்., நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இன்னும் சொல்லப் போனால், தற்போது டில்லி திலக் மார்க் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர், இந்த விஷயம் தொடர்பாக, எந்தப் புகாரையும் எழுதவில்லை. தவறான எண்ணத்துடன் தான், என்மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்ன தாக, ரோமிங் வசதியில்லை என்பதை, சி.பி.அய்., நிரூபிக்க வேண்டும். நான் அமைச்சராவதற்கு முன்பே, ரோமிங் வசதி இருந்தது.

இதற்கு, டிராயும் அனுமதியளித்துள்ளது என்பதை, நான் நிரூபித்தால் என்மீது எந்தக் குற்றமும் சொல்ல முடியாது. இது தொடர்பாக, யார் என் சார்பில் வாதாடுவது?

டிராயை உதாரணம் காட்டி, என்மீது குற்றம் சாட்டும் சி.பி.அய்., வேண்டுமென்றே டிராய் ஆவணங்களை, இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் உள்ளதாக, அதன்மீது நான் குற்றம் சாட்டுகிறேன். விரைவில், டிராய் ஆவணங்களை, சி.பி.அய். இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா கூறி இருக்கிறார். இந்த வழக்கு மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமானால் இராசா அவர்கள் தெரிவித்துள்ள இந்த மிக முக்கியமான கருத்தை ஆதாரப் பூர்வமாக மறுத்த பிறகே தொடரத் தகுதி உடையதாகும்.

கொள்கையை வகுத்துக் கொடுப்பதற்கென்றே ஒரு அமைப்பை (டிராய்) உருவாக்கி வைத்துள்ளதற்குப் பிறகு - அதன்படி செயல்பட வேண்டியதுதான் அமைச்சரின் கடமையாகும். அதன்படி ஏன் செயல்பட்டாய் என்றா கேட்பது?

இராசாவுக்கு முன்பும் அவ்வாறுதானே செயல் படுத்தப்பட்டது. அப்பொழுதெல்லாம் ஏற்படாத சிக்கல், இராசா விடயத்தில் மட்டும் தலை தூக்குவானேன்?

டிராய் அமைப்பு அப்படி ஒரு கொள்கையை வகுத்தது என்றால், அதன்படி செயல்பட்டு தீர வேண்டியது ஓர் அமைச்சரின் கடமையாகும்.

ஏலத்தில்தான் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று டிராய் வழிகாட்டியிருந்து, அதற்கு மாறாக முதலில் வருவோர்க்கு முதல் உரிமை என்று அமைச்சர் மாற்றி செயல்பட்டு இருந்தால் அமைச்சர் இராசாமீது குற்றம் சுமத்த முழு தகுதி உண்டு.

இந்தச் சாதாரண உரிமைகூட மெத்தப் படித்த மேதாவிகள் கூட்டத்திற்குத் தெரியாமல் போயிற்றா? அல்லது தெரியாதது போல பாவனை செய்கிறார்களா என்று தெரியவில்லை.

கணக்குப் பாடத்தில் முதல் அடியில் (Step)  தவறு செய்துவிட்டு, அதற்குப் பிறகு எல்லா அடிகளிலும் சரியாகக் கணக்குப் போட்டால் இலாபம் என்பதற்குப் பதில் நட்டம் என்றுதான் கணக்குக் காட்டும். 2ஜி அலைக்கற்றை வரிசை வழக்கு இந்தத் தன்மையில் தான் போய்க் கொண்டிருக்கிறது.

ஏலத்தில் விட்டிருந்தால் இவ்வளவு இலாபம்  வந்திருக்கும் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று. இலாபத்தில் நஷ்டம் என்கிற  முறையில் பேசப்படும் பேச்சே தவிர, இந்த முறையால் மக்கள் அடைந் திருக்கும் பலன் என்பதுபற்றி ஏன் சிந்திக்கப் படவில்லை என்பது புதிராக இருக்கிறது.

டிராய் ஆவணங்களை நீதிமன்றத்தில் சி.பி.அய். தாக்கல் செய்யாதது ஏன்? வேண்டுமென்றே சி.பி.அய். இப்படி நடந்துள்ளது என்று சி.பி.அய்.மீது நான் குற்றஞ் சாட்டுகிறேன் என்று நீதிமன்றத்தில் ஆ. இராசா கூறி இருக்கிறாரே, இதற்கு என்ன பதில்?

ஆ. இராசாமீது சுமத்தப்பட்ட குற்றச்சாற்று நொறுங்கிப் போயுள்ள இடமாக இதனைக் கருத வேண்டும்.

பந்தை மிக அழகாக சி.பி.அய். பக்கம் தள்ளி விட்டார் ஆ. இராசா.

சிறப்பு நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது? நாடே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

துரை சந்திரசேகரன் அவர்கள் சந்தித்த வேளை நிகழ்ச்சியில் அளித்த பேட்டி

நாகை மாநில மாநாடு பகுதி-2

திராவிடர் கழக நாகை மாநில மாநாடு பகுதி-1

Wednesday, September 28, 2011

தடை செய்க சோதிடத்தை!


தடை செய்க சோதிடத்தை!


அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள கார்ல்சேகன் வானியல் ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பிரபஞ்ச வெளியில் புதிதாக இரு சூரியன்களைக் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா விண்ணில் செலுத்திய கெப்லர் விண்கலம் அனுப்பிய தகவல்களிலிருந்து இது தெரிய வந்துள்ளது. இந்த இரு சூரியன்களையும் 229 நாள்கள் சுற்றிவரும் கிரகம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிரகம் பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு என்பது ஏறக்குறைய ஒன்பதரை லட்சம் கோடி கிலோ மீட்டர்).

இரண்டு சூரியன்கள் இருந்தாலும் ஒரே திசையில் இருப்பதால் பூமியைப் போலவே இங்கும் பகல் இரவு ஏற்படுகிறது. என்ன விந்தையென்றால் இவ்விரு சூரியன்களும் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. இதனால் 20 நாள்களுக்கு ஒருமுறை கோள் மறைப்பு (கிரகணம்) வருகிறதாம்.

இரு சூரியன்களைச் சுற்றி வருவதால் அந்தக் கிரகத்துக்கு இரண்டு சூரிய உதயங்களும், இரண்டு அஸ்தமனங்களும் ஏற்படுகின்றனவாம்.

ஒரு சூரியன் ஆரஞ்சு நிறத்திலும், மற்றொன்று சிவப்பு நிறத்திலும் உள்ளதாம். ஒன்றையொன்று சுற்றிக் கொள்ளும் இவ்விரு சூரியன்களுக்கிடையே 65 மில்லியன் மைல்கள் இடைவெளி உள்ளதாம்.

இந்தப் புதிய கிரகத்துக்கு கெல்லர் 16பி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அறிவியல் நாளும் இவ்வாறு புதியனவற்றைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்க, இங்கே ஜோதிடர்கள் இன்னும் நவக்கிரகத்தையே (ஒன்பது) கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் கூறும் நவக்கிரகத்தில் கிரகமே இல்லாத நட்சத்திரமான சூரியனைச் சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். முக்கிய கிரகமான பூமிக்கு அந்தப் பட்டியலில் இடம் இல்லை; ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனைச் சேர்த்துக் கொண்டு, ஜாதகம், ஜோதிடம் என்று பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவின்  முன்னாள் குடியரசுத்  தலைவரும், விண்ணியல் அறிஞருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் என்ன சொல்லுகிறார்?

சூரியக் குடும்பத்தில் வெகு தொலைவிலுள்ள கிரகங்கள்மீது மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும், அக்கறையும் வந்திருக்கிறது. அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்துகொள்ள முடியவில்லை.

அறிவியலை ஒதுக்கி வைத்து அதை (சோதிடத்தை) ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

விண்கோள்களின் (கிரகங்களின்) இயக்கங்கள் பற்றிய சிக்கலான கணிப்புகளைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து தங்கள் வாழ்க்கையை அவை (கிரகங்கள்) ஆட்டிப் படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள்? என்பதுபற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை  என்று  (அக்கினிச் சிறகுகள் நூலில்) விஞ்ஞானி அப்துல்கலாம் சொல்லியிருக்கிறார்.

மக்களை அறியாமையில் அழுத்திச் சுரண்டும் இந்தச் சோதிடம் தடை செய்யப்படவேண்டாமா?

கேலிவதை (ராகிங்) மீண்டும் தலையெடுக்கிறதா?



மாணவர்கள் மத்தியில் கேலிவதை என்னும் ராகிங் சிறிது காலமாக அடங்கி இருந்தாலும், சென்னையில் மீண்டும் தலைதூக்கி இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக எம்.அய்.டி. கல்வி நிறுவனத்தில் இது நடைபெறுவது தொடர்பாக மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற செய்தி படத்துடன் வெளியாகியுள்ளது.

புதிய மாணவர்களை விளையாட்டாகக் கேலி செய்வது என்று தொடங்கப்பட்ட இந்தக் கதை நாளடைவில் அநாகரிகத்தின், அருவருப்பின் உச்சிக்கே சென்றுவிட்டது. மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல; மாணவிகள் மத்தியிலும் இந்த நோய் அதிகரிக்க ஆரம்பித்தது.

எந்த அளவுக்கு அது கொடூர வடிவம் கொண்டது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னுசாமி அவர்களின் மகன் நாவரசு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, உறுப்புகளை வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டதாகும்.

இப்படிக்கூட நடக்குமா? என்று கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத கொடுமை!

முன்பெல்லாம் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் தொடக்கப் பருவத்தில்தான் இந்தக் கேலி வதை நடக்கும். இப்பொழுதோ - முதலாண்டு மாணவர்களை மூத்த மாணவர்கள் கேலிவதை செய்வது பல பருவங்களிலும் தொடர்கிறதாம்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திரைப்பட கதாசிரியரின் மகன் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் படித்து வந்தான். விடுதியில் தங்காமல் வெளியில் அறை எடுத்துத் தங்கியிருந்த மாணவனிடம் மூத்த மாணவர்கள் மேற்கொண்ட செயல்கள் மாணவர் சமுதாயத்தின் மரியாதையையே மாசுபடுத்துவதாகும்.

தங்கள் செருப்புகளை நாக்கால் நக்கச் சொல்லியிருக் கிறார்கள். மறுத்ததால் கண்ணில் ஓங்கிக் குத்தினார்கள். மாடியிலிருந்து தூக்கி எறிய முயற்சித்தார்கள். கல்லூரி நிருவாகத்திடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கேரளா சென்று கண் சிகிச்சை பெற்று கோவை வந்த அகில்தேவ் என்ற அந்த மாணவன் காவல் துறையிடம் புகார் செய்தான். சம்பந்தப்பட்ட மாணவர் கள்மீது கொலை முயற்சி வழக்குத் தொடுக்கப்பட்டது.

ஆந்திராவில் குண்டூரில் விவசாயப் பொறியியல் கல்லூரி விடுதியில் இருந்த மூத்த மாணவிகள் 20 வயது புதிய மாணவியை நிர்வாணமாக நடனமாடப் பணித்தனர். அந்த மாணவி நஞ்சு அருந்தித் தற்கொலை செய்துகொண்டார்.

இங்கு அங்குஎனாதபடி இந்தியா முழுமையும் இந்த நச்சு நோய் பரவியுள்ளது.
நம் நாட்டுக் கல்வியின் தரமும், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளும், கலாச்சாரச் சீரழிவுகளும் எந்தத் தரத்தில் இருக்கின்றன என்பதற்கு இந்தக் கேலி வதைகள் எடுத்துக்காட்டாகும்.

இதனைத் தடுப்பதற்காக சி.பி.அய். முன்னாள் இயக்குநர் ஆர்.கே. இராகவன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு பல பரிந்துரைகளையும் கொடுத்துள்ளது.

பல்கலைக் கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆணையம் ஆகிய அமைப்புகள் கேலி வதையைத் தடுத்திட கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் அதில் 15-லிருந்து 20 மாணவர்கள் இடம்பெறவேண்டும் என்றும், இந்தக் குழுவில் புதியவர்களான இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளின் முதலாண்டு மாணவர்கள் பெரும்பான்மையாக இருக்கவேண்டும்; ஆண் - பெண் மாணவர்களின் எண்ணிக்கை சரி சமமாக இருக்கவேண்டும்; ஆசிரியர் ஒருவர், ஆசிரியை ஒருவர் இடம்பெறவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கேலி வதை செய்யப்பட்டால் அதனைத் தெரிவிக்க கல்வி வளாகத்தில் தனி தொலைப்பேசியை ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி தகவல் சொல்லுபவர்களின் விவரம் இரகசியமாக வைக்கப்படவேண்டும் என்பதை போன்ற பரிந்துரைகள் செய்யப்பட்டன.

இவை எந்த அளவுக்குச் செயல்படுகின்றன என்பது கேள்விக்குறியே! தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டங்கள் இருக்கவே செய்கின்றன.

இவை ஒரு பக்கம் இருந்தாலும், கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். கல்வி நிறுவனங்களுக்குச் செல்லுவது ஏதோ ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை இருக்கக் கூடாது.

தேவைப்பட்டால் படிப்பின் கால அளவைக் குறைத்து, விடுமுறைகளையும் குறைத்து, முழுநேரமும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தும் அளவுக்கு ஒரு நெருக்குதலைக் கொடுக்கவேண்டும். அப்படிச் செய்வதன்மூலம் அவர்களின் கவனம் வேறு திசையில் செலவழிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

ஊடகங்கள் சமூகப் பொறுப்போடு கருத்துகளை வெளியிடுவதும் அவசியமாகும். கேலிவதை என்பது அநாகரிகக் காட்டுவிலங்காண்டித்தனம் என்று உணருமாறு பிரச்சாரமும் செய்யப்படவேண்டும்.

பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முக்கியமான பொறுப்பு இருக்கிறது என்பதை மறக்கவேண்டாம்.

மருத்துவ படிப்பிற்கு அனைத்திந்திய அளவில் நுழைவுத்தேர்வா?


மருத்துவ படிப்பிற்கு அனைத்திந்திய அளவில் நுழைவுத்தேர்வா?

மாணவர் சமுதாயத்திற்குப் பேரிடியாக எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரி களில் எம்.பி, பி.எஸ் பட்டப் படிப்பினை மேற்கொள்வதற்கான மாணவர்கள் தேர்விற்கும், எம்.டி., எம்.எஸ் போன்ற பட்ட மேற்படிப்பினை மேற்கொள்வ தற்கான மாணவர்கள் தேர்விற்கும், தேசிய அளவில் பொதுவானதான நுழைவுத் தேர்விற்கும் (Common Entrance Test-CET) முறையே, டெல்லி யிலமைந்த உயர்நிலைப் பள்ளிகளுக் கான மத்திய அமைப்பு (Central Board Of Secondary Education- CBSE) மற்றும் அகில இந்திய மருத்துவக் கழகத்தின் (All India Institute of Medical Sciences-AIIMS) வழிகாட்டுதலோடு நடத்தும் என்கிற இந்திய மருத்துவக்குழாமின் (Medical Council of India-MCI) முடிவாக செய்தி வெளியாகி இருப்பது மக்கள் தொகையில் எண்பது சதவிகிதத்திற் கும் (80ரூ) மேலாக இருக்கும் கிராமப் புற மற்றும் வசதி, வாய்ப்புகளற்ற ஏழை-எளிய மாணவ சமுதாயத்திற்கு பேரிடியாக அமைந்து சமுதாயச் சீரழி விற்கு வழிவகுக்கும்; அநீதியாகவும் அமையும்.
ஏழை மாணவர்களாலும் நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது......
ஏனெனில், தேசிய அளவில், அதுவும், அய்.சி.எஸ்.சி கல்விப் பாடத்திட்டத்தை மேற்கொள்ளும் மாணவர்களால் மட்டுமே தேசிய அளவிலான பொதுவான நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும்; வசதி வாய்ப்புகளற்ற கிராமப்புற மாணவர்களாலும் நகர்ப்புற ஏழை மாணவர்களாலும் நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது.
மருத்துவக் குழாமின் தன்னிச்சையான முடிவா அல்லது மத்திய அரசின் கொள்கை முடிவா.....?
இந்திய மருத்துவக்குழாமின் அறிவிப் பாக செய்தி வெளியாகி இருப்பது, இந்திய மருத்துவக் குழாமின் தன்னிச்சையான முடிவா அல்லது மத்திய அரசின் கொள்கை முடிவா எனத் தெரியவில்லை.
ஏனெனில், இந்திய மருத்துவக் குழாமிற்கு தன்னிச்சையாக செயலாற்றக் கூடிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருந் தாலும், பொதுவான நுழைவுத் தேர்வினை நடத்தி எம்.பி, பி.எஸ் பட்டப் படிப்பிற்கும், எம்.டி, எம்.எஸ் போன்ற பட்ட மேற்படி ப்பிற்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற அறிவிப்பு தான்தோன்றித் தனமானது மட்டுமின்றி ஏழை-எளிய மக் களுக்கு வாய்ப்புகள் கிட்டாமல் செய் வதற்கான சூழ்ச்சி வலைகளோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது.
ஏழை எளிய மக்களுக்கு பெரும் பாதக மாக அமையும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணைபோகிறதா அல்லது அலட் சியம் காட்டுகிறதா என்று தெரியவில்லை.
தாறுமாறானதும், ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தக் கூடியதுமான அய்.சி.எஸ்.சி, கல்வி, சி.பி.எஸ்.ஈ., கல்வி, ஆங்கிலோ இந்தியக் கல்வி, ஓரியண்டல் கல்வி, மாநில மெட்ரிக் முறை கல்வி என்று மாறுபட்ட, வேறுபட்ட கல்வி முறைகளைக் களைந்து சமச்சீர் அளவிலான உயர் கல்வியை நாடு முழுவதும் அளிக்க வேண்டுமென்றும்; கிராமப்புற மாணவர் களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் போக்கிக் கிராமப்புற மாணவர்கள் நலனைப் பாதுகாத்திட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பொதுவான நுழைவுத் தேர்வு என்கிற பேச்சுக்கே இடமிருக்கக்கூடாது.
தேசிய அளவில் அனைத்துப் பள்ளிகளி லும், குறிப்பாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும், அரசு உதவி பெறா தனியார் பள்ளிகளிலும், தனியார் கூட்டமைப்புப் பள்ளிகளிலும், கிராமப்புறப் பள்ளிகளிலும், நகர்ப்புறப் பள்ளிகளிலும் மாணவர்கள் பயிலக்கூடிய உயர்தரப் பள்ளி அமைப்புகள், செம்மையான ஆசிரியர்கள், பயிற்சிக் கூடங்கள், இன்னபிற  வசதிகளை உருவாக்கி ஒரே சீரான கல்வி, அதுவும் தரமான சமச்சீர் கல்வியைத் தாய்மொழி அல்லது வட்டார மொழியிலும், ஆங்கிலத்திலும் ஒரே சீராக அளிக்கப்பட்டால்தான் நாட்டளவில் பொதுவான நுழைவுத் தேர்வு பற்றி சற்றே பரிசீலனை மேற்கொள்ளலாம். அந்த நாள் வரை தேசிய அளவில் பொதுவான நுழைவுத் தேர்வு என்கிற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது.
ஒன்று திரண்டு போராடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அதற்குப் பாரதப் பிரதமர் மாண்பு மிகு டாக்டர் மன்மோகன்சிங் தலைமை யிலான மத்திய அரசு உடனடி நடவடிக் கைகளை மேற்கொண்டு, இந்திய மருத் துவக் குழாம் மேற்கொள்ளவிருக்கின்ற தேசிய அளவில்  பொதுவான நுழைவுத் தேர்வு என்கிற
முடிவினை விலக்கி முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்
இல்லையேல் நாடு தழுவிய ஏழை-எளிய மக்களும், மாணவர் சமுதாயமும், பிற்படுத்தப்பட்ட மக்களும், ஒடுக்கப் பட்ட மக்களும், சிறுபான்மையினரும் ஒன்று திரண்டு போராடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அந்த அறப்போராட்டத்தை, ஒத்த மனமும் செயல்பாடுகளும் கொண்ட அரசியல் கட்சிகள், சமுதாய அமைப் புகள், மருத்துவர்கள்-மருத்துவத் துறையினர், ஆசிரியர் அமைப்புகள்- ஆசிரியர் கூட்டமைப்புகள், மாணவர் சமுதாயம், பொதுமக்கள் உள்ளிட் டோரை ஒன்று திரட்டி நாடு தழுவிய அளவில், தேசிய பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் கூட்டமைப்பு நடத்தும்.
குறிப்பிட்டுள்ள அமைப்புகளும் தத் தமக்கே உரிய எழுச்சியோடும் வேகத் தோடும், முனைப்போடும் போராட் டங்களை ஒன்றுபட்டு நடத்தி, உரிமைக் குப் போராடி, சமூக நீதி காத்து, சமுதாய நலன் காப்போம்!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...