Wednesday, May 24, 2017

உற்சாகம், உறக்கம், வாழ்க்கை அளவீடு என்ன?


வாழ்க்கையில் பலபேருக்குப் பிடிப்பில்லாமல், ஏனோதானோ என்ற அலட்சியமும் சலிப்பும் சங்கடமும் கலந்த விரக்தி நிலையிலேயே காலந் தள்ளும் தன்மை பல வெகு பேரிடம் உண்டு.
இதற்கு மூல காரணம் என்ன?
உடலும், உள்ளமும் சரியான ஒருங்கிணைப்போடு இயங்காமல் இருப்பதேயாகும்.
உடல்நலக்குறைவு, அல்லது உடல்நோய் உபாதைகள் மனதில் சலிப்பினை ஏற்படுத்தும்.
சிலர் நல்ல உடலைப் பெற்றிருந்தும், ஏனோ நல்ல உள்ளத்தைப் பெறாமல், தங்களுக்குள் உள்ள ஆற்றலை வெளிப் படுத்தி, வெற்றிகரமான வாழ்க்கையைப் பெற முடியாமல் வேதனையை அனுபவிக்கின்றனர்!
மனக்குழப்பம், ஒரு வகை தாழ்வு மனப்பான்மை; Ôஹூம்... நமக்கெங்கு இது கிடைக்கப்போகிறது? நம்மால் இது முடியாத காரியம்Õ இப்படிப்பட்ட சிலந்திவலைக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தே வாழ்க்கையின் பயனை துய்க்கத் தவறிவிடுகிறார்கள்!
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்த டேவிட் ஸ்டார் ஜோர்டன் கூறுகிறார்: “நீங்கள் எதைச் செய்தாலும் சரி, உற்சாகத்துடனும், துடிப்புடனும் செய்யுங்கள்”!
- எளிய இந்த அறிவுரையைப் பின்பற்றுங்கள்.
பிரபல வரலாற்றுப் பேராசிரியரான ஆர்னால்டு டாயன்பி (இவர் பெரிய தத்துவ சிந்தனையாளரும்கூட) எழுதுகிறார்: (ஒரு நூலைப்படித்தேன் - உங்களுடன் பகிர்ந்து கொள்ளு கிறேன்)
“சுவாரசியமற்ற ஒரு நிலையை உற்சாகத்தால் மட்டுமே உடைத்தெறிய முடியும். உற்சாகத்தை இரண்டு வழிகளில் தூண்டிவிடமுடியும்.”
“முதலாவது, எல்லை யற்ற கற்பனையைத் தூண்டி விடக்கூடிய உயர்ந்த சிந்தனை.”
“இரண்டாவது, அந்த உயர்ந்த சிந்தனையை நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய ஒரு சிறந்த புத்திசாலித்தனமான திட்டம்’’
எதிலும் உற்சாகத்துடன் இருப்பதால் தனிச் சிறப்பே சிறப்பு
எவரும் எதிலும் தூசியாக இருப் பதைவிட சாம்பலாக இருப்பதே மேலானது.
துடிப்பு மக்கி மடிவதைக்காட்டிலும் சுடர் விட்டு எரிந்து சாம்பலாகி விடுவதில் எவ்வளவு சிறப்பு - எண்ணிப்பாருங்கள்!
உற்சாகத்தோடு எதையும் செய்யுங்கள் துடிப்போடு இயங்குங்கள்.
துடிப்புகளை மிகைப்படுத் தாமலும், அதேநேரத்தில் குறைத்துக் கொள்ளாமலும் வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கு வேறு ஆசானைத் தேடி அலையவேண்டியதில்லை. நமது இதய ஒலியைக் கேளுங்கள் - அந்த‘over-enthusiasm’எவ்வளவு சீராக அதன் பணியை அலுப்பு சலிப்பின்றி செய்துவருகிறது!
அதைப்பார்த்து, நாம் நமது கடமையைச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டாமா?
உற்சாகம் என்பதுகூட, கட்டுக்குள் இருந்தால் - விழுமிய பயன், நாம் விரும்பிய வண்ணம் கிட்டக்கூடும்!
அடுப்பெரிக்க நெருப்பு தேவை தான்! அதனைப் பயன் படுத்தும்போது நாம் எவ்வளவு விழிப்புடன் உள்ளோம்; அதே போன்று உற்சாகத்தைக்கூட அளவுக்கு மீறி வழிந்தோட விடக்கூடாது!
இதை ஆங்கிலத்தில் enthusiasm உற்சாகம் என்று குறிப்பிட்டாலும், அதிலும் சற்று வேகமானப் பாய்ச்சல் என்றால், அது ‘over-enthusiasm’ வரம்பு தாண்டியது. அதன் விளைவு நாம் எதிர்பார்க்கும் இலக்கையும் அடையாமல் தடுத்து தோல்விப் படுகுழியில் நம்மைத்  தள்ளிவிடும். எனவே, கட்டுப்படுத்தப்படாத உற்சாகம் பொங்கவேண்டாம்!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

கூடலூர், திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் உரைகள்

கடந்த 20ஆம் தேதி கூடலூரிலும், 21ஆம் தேதி திண்டுக் கல்லிலும் நடைபெற்ற தந்தை பெரியார் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. கட்சி களையும் கடந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
அவ்விரு நாட்களில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவ்விரு கூட்டங்களிலும் முக்கியமாக நாட்டை ஆளும் இந்துத்வா சக்திகளினால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் சமூக நீதிக்கு ஏதிரான அவற்றின் நடப்புக் குறித்தும் மதச் சார்பின்மைக்கு விரோதமான நடவடிக்கைகள் குறித் தும் குறிப்பாக மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்குத் திணிக் கப்பட்ட ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வு குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். மாலை நேர வகுப்பு போல அவ்வுரைகள் அமைந்திருந்தன என்றே கூறவேண்டும்.
அரசியல் நோக்கமின்றி சமூக பொறுப்புடன் பொது நிலையிலிருந்து திராவிடர் கழகம் நாட்டு நலனில் அக்கறை கொண்டு பாடு படக் கூடிய சமூகப் புரட்சி இயக்கம். அத்தகு இயக்கத்திற்கு உள் நோக்கம் கற்பிக்க முடியாது என்ற விதமாக, தம் உரையைத் தொடங்கினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர்  முனைவர் அறவாணன் அவர் களின் ஆய்வு நூலிலிருந்து ஒரு முக்கிய தகவலைத் தெரி வித்து, பின்னால் தாம் கூறும் கருத்துக்கு வலு சேர்த்தார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழர்களில் படித்தவர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவு; அரசிளங்குமரன் கூடப் படித்திருக்கவில்லை என்று அந்நூலிலிருந்து எடுத்துக் காட் டிய தமிழர் தலைவர் அவர்கள் நமது அரசர்கள் பள்ளிகள் கண்டதெல்லாம் பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படிப்பதற்கே என்று கூறியது வரலாற்றுப் பேருண்மையே!
எடுத்துக்காட்டாக பலவற்றைக் கூறமுடியும். 11ஆம் நூற்றாண்டில் தென் ஆற்காடு மாவட்டத்தில் எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் சோழ அரசர் கல்விக் கூடம் ஒன்றை உருவாக்கினார். 140 மாணவர்கள் படித்தனர். 14 ஆசிரியர்கள், 45 வேலி நிலம் அதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது என்ன?
மீமாம்ச வேதாந்தத் தத்துவம், சமஸ்கிருத இலக்கணங்கள் கற்பிக்கப்பட்டன. திருபுவனம், திருவாவடுதுறை போன்ற இடங் களிலும் இதே நிலைதான்.
இராபர்ட் டி. நொபுலி என்ற இத்தாலிய பாதிரியார் எழுதிய ஒரு கடிதத்தில் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு தகவல் என்ன தெரியுமா?
1610ஆம் ஆண்டில் விஜயநகர மன்னர்கள் ஆட்சியில் மதுரை யில் 10 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். அவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்களே என்று எழுதியுள்ளார் என்றால் நம் நாட்டின் நிலையைத் தெரிந்துகொள்ளலாமே!
நூற்றாண்டு காணும் திராவிடர் இயக்கம்தான் நம் மக்களுக்கு கல்வி உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்து - போராடியது - அதில் வெற்றியும் கண்டுள்ளது.
உலகத்திலேயே தங்களைத் தவிர மற்றவர்களுக்கு அதா வது சூத்திர, பஞ்சம மக்களுக்கு கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன ஒரே ஒரு மதம் ஹிந்து மதம்தான். அந்தப் பார்ப்பன மேல்ஜாதி ஆதிக்க மதத்தை எதிர்த்துப் போராடிப் போராடித்தான் கல்வி உரிமை கிடைத்தது. இந்தியத் துணைக் கண்டத்திலேயே 69 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படி கிடைக்கச் பெற்றுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதானே!
96 சதவீதம் அளவுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்றால் இது கல்வி வளச்சியைக் காட்டுவதல்லவா?
இந்தக் கல்வி வளர்ச்சிக்கு இடை இடையே முட்டுக்கட் டைகள் வரும்பொழுதெல்லாம் அவற்றைத் தகர்த்தெறிந்து நம் மக்கள் கல்வியின் பயனைத் துய்ப்பதற்கான பணியில் முழு மூச்சாக ஒப்படைத்துக் கொண்டு பாடுபடுவது - போரா டிப் பாதுகாத்துத் தருவது திராவிடர் கழகம் அல்லவா?
குறிப்பாக எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதனையும் தொடக்கம் முதலே எதிர்த்து வந்தது திராவிடர் கழகமே! (2007)
கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது அந்த நுழைவுத் தேர்வு முற்றிலுமாக சட்டரீதியாகவே ஒழிக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கான உருவாக்கத்திற்குத் தேவையான யோசனை களைச் சொன்னதும் திராவிடர் கழகமே.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆண்டு வருமானம் ரூபாய் ஒன்பதாயிரம் என்றால் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று எம்.ஜி.ஆர். ஆட்சி கொண்டுவந்த நிலை யில் அதனையும் முறியடித்தது திராவிடர் கழகமே.
இப்பொழுது மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வை மத்திய பி.ஜே.பி. ஆட் சியால் திணிக்கப்பட்டுள்ளது. +2 தேர்வில் எவ்வளவு மதிப் பெண் பெற்றிருந் தாலும் அதனைக் குப்பைக் கூடையில் தூக்கி எரிந்துவிட்டு, ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்தான் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான தகுதியாக நிர்ணயிப்பது என்றால் இது என்ன அநியாயம் என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர்.
இந்தியா முழுதும் ஒரே மாதிரியான கல்வி இல்லாதபோது - குறிப்பாக சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வு நடத்துவது என்பது பொதுவான (Uniformity) அளவு கோலாக இருக்க முடியுமா என்ற வினாவைத் தொடக்கம் முதலே எழுப்பி வருவது திராவிடர் கழகமே!
அது மாத்திரமல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ் வேறு கேள்விகள் அடங்கிய வினாத்தாள் என்றால் அது எப்படி சமமான முறையில் மதிப்பீடு செய்வதாக இருக்க முடியும்? என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் எழுப் பிய வினாவின் நியாயத்தை நன்கு உணர்ந்தனர் என்பதற்கு அடையாளம் பொதுமக்களின் மிக நீண்ட கரஒலியே!
ஒரு மாநிலத்திற்குள் நடத்தப்பட்ட தேர்வில்கூட தமிழில் கேட்கப்பட்ட கேள்விகள் வேறு, ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் வேறு என்பது பார்ப்பனியத்திற்கே உரித்தான பிரித்தாளும் சூழ்ச்சிதானே!
இதில் இன்னொரு சதிப் பின்னணியும் இருக்கிறது என்பதைப் கவனிக்கத் தவறக் கூடாது. சி.பி.எஸ்.இ. முறை யில்தான் ‘நீட்’ தேர்வு என்பதால் மாணவர்கள் பெரும்பாலும் சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்களில் சேரும் ஆர்வம்தானே சிறகடித்துப் பறக்கும். அப்படி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்கள் சேர்வார்களேயானால் அங்கே சமஸ்கிருதம் அல்லது இந்தியைக் கட்டாயமாகப் படித்திட வேண்டும் அல்லவா? எப்பொழுதும் திரைமறைவு சூழ்ச்சி என்பது பார்ப்பனியத்திற்கே உரித்தான கைவந்த கலையாயிற்றே! இத்தகைய கருத்துகளையெல்லாம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த முகாமிலிருந்து கேட்க முடியும்?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


பெண்களைப் "பாவ யோனி"யில் பிறந்தவர்கள் என்று கூறும் பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்குவதா?

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து நாடாளுமன்றத்தில் எதிர்த்து முறியடிப்பீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

பெண்களை 'பாவ யோனியில்' பிறந்தவர்கள் என்றும், நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்றும், பகவான் கிருஷ்ணன் சொன்னான் என்றும் கூறும் கீதையைப் பள்ளிகளில் பாடநூலாகக் கட்டாயமாக வைக்க வேண்டும் என்ற பி.ஜே.பி.யின் முயற்சியை எதிர்த்தும், இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்துக் குப்பைக் கூடையில் போட வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்தியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்பெறும் மோடி தலைமையிலான பா.ஜ.க. சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, என்.டி.ஏ. என்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்ற பெயருடனே கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
வளர்ச்சி, வேலைவாய்ப்புகளைப் பெருக்குதல், விவசாயிகளின் வாழ்வைப் பன்மடங்கு வளப்படுத்துவோம் என்றெல்லாம் தேர்தலில் கூறிவிட்டு, ஆட்சிக்குப் பெரும் பலத்தோடு வந்துவிட்ட பிறகு ‘மதச் சார்பற்ற’ என்ற அரசமைப்புச்சட்டம் விதித்துள்ள ஆட்சிமுறையையே தூக்கி எறியும் வண்ணம் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு
கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்து ஒற்றை ஆட்சிமுறை (Unitary System) யைக் கொண்டு வரும் வகையில், மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் பணியையும் அடக்கமாகவும், அதேநேரத்தில் உறுதியாகவும் திட்டமிட்டே நடத்துகின்றது.
பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள ஜனநாயகக் குடியரசினை மாற்றி `ஹிந்து ராஷ்டிரமாக்கிட’ அவ்வப்போது தொடர்முயற்சிகளை பல்வேறு ரூபத்தில் நடத்திட முயலுகின்றது.
ஜாதி, வர்ணாஸ்ரமம், அந்நிலைக்கு கர்ம வினைப்பயனே காரணம்; ஆத்மா அழியாதது ஆகையால் நாட்டில் கொலைகள் உடலை மட்டும்தான் அழிக்கின்றன என்ற  ஜாதி தர்மம் நிலைக்கப்பாடுபட வேண்டும்.
பகவத் கீதை பள்ளிகளில் கட்டாயமாம்!
மக்கள் தொகையில் சரிபகுதியாக உள்ள பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்பது போன்ற அறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை உள்ளடக்கிய `பகவத் கீதை’ என்ற நூலை கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் கட்டாயமாக்கிட வேண்டும் என்று பா.ஜ.க.வின் எம்.பி. ரமேஷ் பிடாரி என்ற ஒருவர் தனி நபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மசோதா நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும், இதை அமலாக்காத பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மசோதா கூறுகிறது.
அரசின் மதச்சார்பின்மை பலி!
அரசின் மதச்சார்பின்மை எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுத் தப்படுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா?
சதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று கடவுள் அவதாரமான கண்ணன் கூறுகிறான் என்று எழுதி, ஜாதியைப் பாதுகாக்கிறது!
பெண்களை அசிங்கமாக அருவருக்கத்தக்க வகையில் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று  கீதை கூறுகிறது!
கொலையை நியாயப்படுத்தும் நூல் இந்நூல் - காந்தியாரைக் கொன்ற கோட்சே, `நான் கீதையைப் படித்தபிறகே இந்த முடிவுக்கு வந்தேன்’ என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளான்.
இந்த வன்முறையைத் தூண்டும் நூலை- மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் புகுத்தினால் அது நஞ்சைப் புகுத்துவது அல்லவா?
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து
எதிர்க்க வேண்டும்
இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடித்து, குப்பைக் கூடைக்கு அனுப்ப வேண்டும்.
கல்வி எப்படி காவிமயமாக்கப்படுகிறது பார்த்தீர்களா? வன்மையான கண்டனங்கள் குவியட்டும்.
பகவத் கீதையை தேசிய நூலாக்க அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு - கண்டனம் புயல்போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது.
மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி; எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை 

23-5-2017
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
        



Tuesday, May 23, 2017

சபாஷ்; சரியான தண்டனை!


சாமியார்களின் திருவிளையாடல்கள் குறித்து திரா விடர் கழகம் தொடர்ந்து தன் பிரச்சாரத்தைச் செய்து வந்துள்ளது. சாமியார்களின் திருவிளையாடல்கள் குறித்து தனி நூலே கூட திராவிடர் கழகத்தின் வெளியீடாக வந்துள்ளது. பல பதிப்புகள் போடப்பட்டு, மக்கள் மத்தியிலும் சென்றடைந்துள்ளது.

ஆனாலும், அவ்வப்போது சாமியார்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்; காரணம், அது ஒரு முதல் தேவைப்படாத தொழில்.

மக்கள் மத்தியில் பதிந்து கிடக்கும் மூடநம்பிக்கை களை வேண்டுமானால் சாமியார்களின் முதலீடாகக் கொள்ளலாம். நமது சமுதாயத்தில் வறுமை, பிணிகள், குழந்தை இல்லாமை என்பது போன்ற பிரச்சினைகள் இருக் கின்றன. இவற்றின் அடிப்படையில் பலகீனப்பட்ட மக்களை வெகு எளிதில் தங்கள் கைக்குள் போட்டுக் கொள்ளும் ஒரு யுக்தியைத்தான் இந்த சாமியார்கள் கைக்கொள்கின்றனர்.

புட்டபர்த்தி சாய்பாபாவிலிருந்து, கேரளாவில் ஆண் குறி அறுக்கப்பட்ட சாமியார்கள்வரை - அவர் களின் பின்னணியில் உள்ள சமாச்சாரம் இத்தியாதி... இத்தியாதி...

ஒரு பெண் திருமணமாகி சிறிது காலத்திற்குள் கருத்தரிக்கவில்லை என்றால், அது பெரிய பிரச்சி னையாகக் கருதப்படும் கீழிறக்கச் சிந்தனை - இந்துச் சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினை!

ஒரு பெண் கருத்தரிக்காமைக்குக் காரணம் பல உண்டு; கணவனும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால், ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்ற மமதை - ஆண் என்றால் ஆண்மைக்குச் சொந்தக்காரன் என்ற அகந்தையில், அவனிடம் குறையிருப்பதாகச் சொல்லக்கூடாது; ஏன் அந்த வகையில் எண்ணவும்கூடக் கூடாது என்கிற திமிர்ப் பிடித்த ஆண் எஜமானத்தனம் நம் நாட்டில் இருக்கிறது என்பது  நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

அறிவியல் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில்கூட, சோதனைக் குழாய் (டெஸ்ட் டியூப் பேபி) மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிற அளவுக்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி விண்ணை முட்டும் இந்தக் காலகட்டத்தில்கூட குழந்தைப் பேற்றிற்காக சாமி யார்களைத் தேடிச் செல்லும் அவலத்தை என்னென்று சொல்ல!

இந்த சந்தர்ப்பத்தை சாமியார்கள் என்னும் ஆண் பொலிக் காளைகள் பயன்படுத்திக் கொள்கின்றன - இந்தச் செய்தியை வெளியில் சொல்ல முடியாத நிலைக்குப் பெண்களும் தள்ளப்படும் பரிதாப நிலை!

கோவில் நகரம் என்று சொல்லப்பட்ட காஞ்சீபுரத்தில் மச்சேந்திர நாதர் கோவில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் என்ற கயவன் கோவிலுக்கு வரும் பக்தைகளை எப்படியெல்லாம் பாலியல் வேட்டையாடினான் என்பது ஊர் சிரிக்கவில்லையா? எந்த அளவுக்கு கயமைத்தனத்தின் உச்சிக்குச் சென்றான் என்பதற்கு அடையாளம் - பக்தைகளிடம் தான் உறவு கொண்ட நிலையில், அதைக் கைப்பேசி மூலமாகப் படம் எடுத்து, அந்தப் பெண்களிடம் போட்டுக் காட்டி அச்சுறுத்தி (பிளாக்மெயில்) மீண்டும் மீண்டும் அந்தப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்துவதை வழமையாக்கிக் கொண்டான் என்பதைக் கண்டித்து ஏடுகள் எழுதிய துண்டா? ஊடகங்கள் விமர்சித்ததுண்டா?

ஏன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி யின் யோக்கியதைதான் என்ன?

எழுத்தாளர் அனுராதா ரமணன் தொலைக்காட்சி யில் கண்ணீரும், கம்பலையுமாகக் குமுறவில்லையா? காஞ்சி மடத்துக்குச் சென்றபோது தன் கையைப் பிடித்து ஜெயேந்திரர் இழுத்ததாகப் பட்டாங்கமாகப் போட்டு உடைத்தாரே!

யோக்கிய சிகாமணி குருமூர்த்தி அய்யர்கள், ‘சோ’ போன்றவர்கள் அந்த நேரத்திலும்கூட அந்தக் காமுகன் சங்கராச்சாரியார் பக்கத்தில் நின்றுதானே சாமரம் வீசினார்கள். இவ்வளவுக்கும் அனுராதா ரமணன் என்னும் அந்தப் பேர் பெற்ற எழுத்தாளர் அக்கிரகாரத்துப் பெண்மணிதான்!

ஏடுகளில் நேற்று வந்த ஒரு தகவல்தான் சிறப்பானது: காமக் கொடூரர்களுக்கான அபாய எச்சரிக்கையும்கூட!

திருவனந்தபுரத்தில் இளம்பெண் ஒருவரை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்த - கொல் லத்தைச் சேர்ந்த சட்டம்பு சுவாமி ஆசிரமத்தைச் சேர்ந்த ஆசாமியின் ஆண் உறுப்பை - பாதிக்கப்பட்டு வந்த அந்தப் பெண் அறுத்தார் என்பதுதான் அந்தச் செய்தி!

அந்த சாமியார் இப்பொழுது மருத்துவமனையில்! பல பிரிவுகளின்கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு விட்டது. அந்தப் பெண்ணின் வீர தீரத்தை கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் பாராட்டியுள்ளார்.
 பல தளங்களிலிருந்தும் பாராட்டுகள் குவிவது வர வேற்கத்தக்கது. திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவரும் வரவேற்றார்.
பக்தியின் ஒழுக்கம் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை பக்தர்கள் சிந்திப்பார்களாக!

தந்தை பெரியார் சொன்ன மாற்று உணவு முறையே நோய்களைக் குணப்படுத்தும் “பேலியோ’’ உணவுமுறை!

ஆய்வுகள் தொடரப்படவேண்டியதும் அவசியமாகும்


சென்னை, மே 22- மக்களிடையே மிக வேகமாக பரவிவரும் பேலியோ உணவு முறை பற்றிய விளக்கவுரைக்கூட்டம் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் நடைபெற்றது. இந்த உணவுமுறையா னது 1930ஆம் ஆண்டுகளிலேயே தந்தை பெரியார் அவர்கள் வேறு முறையில் சொல்லியிருக்கின்றார் என்பது குறிப் பிடத்தக்கது. ஆய்வுகள் தொடரப்பட வேண்டும்.
 
வரலாறு படைக்கும் பெரியார் நூலக வாசகர் வட்டம்!

பெரியார் நூலக வாசகர் வட்டம் 1.1-.1978இல் தொடங்கப்பட்டது. இவ் வமைப்பு 40ஆவது ஆண்டில் அடி யெடுத்து வைத்துள்ளது. இது எந்த சூழ்நிலையிலும் இடைநிற்காமல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த அமைப்பின் 2238 ஆவது நிகழ்ச் சியாக, இன்று உலகமெங்கும் பரபரப் பாக பேசப்பட்டும், ஏற்றுக்கொள்ளப் பட்டும் வருகிற “பேலியோ’’ உணவு முறை பற்றிய ஒரு கருத்தரங்கம் பெரி யார் திடலில் உள்ள அன்னை மணி யம்மையார் குளுமை அரங்கத்தில், ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. வாசகர் வட் டத்தின் பொருளாளர் சேரன் அவர்கள் 18-.5.-2017 அன்று மாலை சரியாக 7 மணிக்குத் தொடங்கி வைத்தார். நிகழ்ச் சிக்கு திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர். கலிபூங்குன்றன் தலை மையேற்று சிறப்பித்தார். சிறப்புரை நிகழ்த்த வருகை தந்திருக்கும் சங்கர்(ஜி) அவர்களை உடுமலை வடிவேல் அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். பா.மணியம்மை அவர்கள் நன்றியுரை வழங்கினார். சிறப்புரையாளருக்கு துணைத் தலைவர் கவிஞர். கலிபூங் குன்றன் அவர்கள் ஆடைபோர்த்தி இயக்க நூல்களைக் கொடுத்து மரியாதை செய்தார்.

தந்தை பெரியாரின் தொலைநோக்கு!

அறிமுவுரைக்குப்பின்னர் கவிஞர் தலைமையுரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், திருச்சி தோழர் வி.சி. வில்வம் அவர்கள் இந்த உணவுமுறை யைப் பற்றி சிலமாதங்களுக்கு முன்னர் தனது கவனத்திற்கு கொண்டுவந்தபோது தான் பெரிதாக இதில் ஆர்வம் காட்ட வில்லை என்று குறிப்பிட்டுவிட்டு, காரணம்? அதற்கு ஆதாரம் வேண்டு மல்லவா? என்று அவரே இரட்டைக் கேள்விகளைக் கேட்டு, அதற்கு அவரே பதிலும் சொன்னார். அதாவது, திரா விடர் கழகத்தின் திருவாரூர் தோழர் ஒருவரை சமீபத்தில் தான் ஒரு கழக நிகழ்ச்சியில் சந்தித்ததாகவும், இந்த உணவு முறையைக் கைக்கொண்டு தனது அதிகளவிலான எடையைக் குறைத்துவிட்டதால், அவரே அவரது தம்பியைப்போல இருந்ததை தான் நேரில் கண்டு வியந்து அப்படியே அவ ரிடம் சொன்னதாகவும், மற்றொரு கழ கத் தோழர் சர்க்கரை நோய் காரணமாக தொடர்ந்து இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டிருந்தவர் இந்த பேலியோ உணவு முறையைப் பின்பற்றியவுடன், ஊசி போடுவதை அறவே நிறுத்திக் கொண்டதையும் குறிப்பிட்டு வியந்தார். அதைவிடவும் அவர் வியப்படைந்த ஒன்றைப் பற்றியும் குறிப்பிட்டார். அதாவது இன்றைக்கு பிரபலமாகியுள்ள இந்த உணவு முறையைப்பற்றி தந்தை பெரியார் 1930 ஆம் ஆண்டுகளிலேயே போகிற போக்கில் குறிப்பிட்டிருப்பது தான் அந்த வியப்புக்குக் காரணம்!

புறக்கணித்தவர்களும் ஏற்கும் மாற்று உணவுமுறை!

தொடர்ந்து சிறப்புப் பேச்சாளர் சங்கர் (எ) சங்கர்ஜி, இந்த உணவுமுறை பற்றிய வரலாற்றை அமெரிக்காவில் வசிக்கும் நியாண்டர் செல்வனில் தொடங்கி சுருக்கமாக எடுத்துரைத்தார். 
பிறகு இன்றைய நிலையில் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் தங்கள் பணிநேரம்போக இந்த உணவு முறை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற் படுத்தி வருவதாகவும், அதனால் இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் இந்த உணவுமுறைக்கு மாறியுள்ளதா கவும், அதற்குரிய பலன்களைப் பெற் றுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த உணவுமுறைக்கு முதலில் இரத்தபரி சோதனை செய்து அதன் அடிப்படையில்தான் உணவு பரிந்துரைக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். மனித இனம் வரலாற்றில் மாமிசம் சாப்பிட்டது வரையில் மனிதன் இன்றைக்கிருப்பது போன்ற நோய்கள் இல்லாமல்தான் வாழ்ந்திருக்கிறான். இந்த தானிய உணவுகளுக்கு மாறியபிறகுதான் நோய்கள் அதிகரித்தன என்பதைப்பற்றி விளக்கினார்.
 தொடக்கத்தில் கவிஞர். கலிபூங் குன்றன் அவர்கள் வியந்ததைப்போலவே நாங்களும் இதுகுறித்து நிறைய வியந்திருக்கிறோம். ஆனால் இன்று எங்களுக்கு இது சாதாரணமாக ஆகி விட்டது. இதனால் பலனடைந்தவர்கள் பலரும் நாள்தோறும் இதுகுறித்து முக நூலில் பதிவிட்டு வருவதாகவும் அதை அனைவரும் பார்க்கலாம் என்றும் சொல்லிவிட்டு, முக்கியமாக ஒன்றைக் குறிப்பிடவேண்டும் என்று பெண்க ளுக்கு இருக்கும் ஏராளமன நோய்க ளுக்கு இது அருமருந்தாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு அதைப்பற்றிய விளக்கங்களை அரங்கத்தினர்முன் எடுத்துவைத்தார். அனைத்திற்கும் மக்கள் கைதட்டி வரவேற்புத் தெரிவித்தனர்.
 இதற்காக தொடக்கத்தில் தாங்கள் ஏராளமான விமர்சனங்களுக்கு ஆளான தாகவும், அப்படி தங்களை விமர்சனம் செய்தவர்களே இன்று தங்கள் குழுவில் இணைந்து பயன்பெற்று இதைப்பற்றி பிரச்சாரம் செய்துவருவதாகவும் குறிப் பிட்டார். இதுவரையில் பின்பற்றி வந் துள்ள உணவுமுறையால்தான் மனித னுக்கு பலவிதமான நோய்கள் வருவா தாகவும், பகுத்தறிவுப்படி மனிதன் வாழ்வாதாகயிருந்தால் நம் உடலுக்கு எது சரியான உணவு என்பதை ஆய்வு செய்து உண்ணவேண்டும். அதுதான் இந்த பேலியோ உணவுமுறை என்று எளிமையாக விளக்கினார். 
இது தொடர் பான கூடுதல் தகவல்களைப் பெறுவற்கு முகநூலில் தங்கள் குழுவின் முகவரி யைக் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றோர் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை அளித் தார். விற்பனை செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டிருந்த புத்தகங்களை விருப்பத்துடன் மக்கள் ஏராளமாக வாங்கிச்சென்றனர்.

இந்துத்துவத்திற்கு எதிரான உணவுமுறை!

இறுதியாக பா.மணியம்மை தனது நன்றியுரையில், “மாட்டுக்கறியைச் சாப் பிட்டால் இந்து மதத்திற்கு விரோத மென்று காட்டுமிராண்டிகள் மாதிரி மதவாதிகள் மக்களைக் கொல்லும் இந்த காலகட்டத்தில் மாட்டுக்கறியை மாத்திரமல்ல, எல்லாவகையான கறியையும் சாப்பிடச் சொல்லும் இந்த உணவுமுறை மிகவும் சிறப்பானது.
’’ என்று கூறினார். நிகழ்ச்சியில் கழகத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் குமாரதேவன், பெரியார் களம் தலைவர் இறைவி, பண்பொளி, கண்ணப்பன், திவாரி, பெரியார் பிஞ்சு நனிபூட்கை, கோவி.கோபால், பூவை செல்வி, திருக்குறள் இளங்கோவன், பொறியாளர் பத்மநாபன், தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் செல்வராஜ், பெரியார் மாணாக்கன், தொண்டறம் ஆகியோரோடு ஏராளமான வாசகர் வட்டத் தோழர்கள் மற்றும் பொதுமக் களும் அரங்கு நிறையும் அளவுக்குக் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

மாநில உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு முயற்சி!

‘‘தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் வழங்கும் 123- ஆவது சட்டத் திருத்த மசோதாவை வரவேற்கிறோம். ஆனால், அம்மசோதாவின் சில பிரிவுகள் மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும்வகையில் அமைந்துள்ளன’’ என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
அவரது பேட்டி
1. தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் துக்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் வழங்கும் மசோதாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை மனதில் வைத்தும்கூட இந்தத் திருத்தத்தைப் பிரதமர் மோடி கொண்டுவந்திருக்கலாம். ஆனால், திராவிடர் கழகமும் இன்ன பிற சமூகநீதி அமைப்புகளும் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். எனவே, இந்தச் சட்டத் திருத்தத்தை வரவேற்கிறோம். ஆனால், இச்சட்டத் திருத்தத்தில் சில விஷயங்கள் மோசமானவை. அதில் முக்கியமானது, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கும், மாநில அரசுகளுக்கும் அதிகாரம் இல்லாத அளவுக்கு அனைத்து அதிகாரங்களுமே குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட இருப்பதுதான். குடியரசுத் தலைவர் முடிவுசெய்வார் என்றால், அந்த அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக்கொள்கிறது என்பதுதான் அர்த்தம். எனவே, மாநிலங்கள் உரிமை பறிக்கப்படுமோ என்ற அச்சத்துக்கு இடமளிக்காதவகையில், எந் தெந்தப் பகுதிகள் பிரச்சினைக்கு உரியவையாக இருக்கின்றனவோ அவற்றை விட்டுவிட்டு, இச்சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.
2. தற்போது செயல்பட்டுவரும் பிற்படுத்தப்பட் டோருக்கான தேசிய ஆணையத்தின் செயல் பாடுகள் திருப்தி அளிக்கவில்லையா?
மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையிலான அரசாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்திரா சஹானி வழக்கில் வழங்கப் பட்ட தீர்ப்பின்படி, 1994-இல்தான் மாநில அளவிலும் மத்தியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக ஆணை யங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவற்றுக்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் இல்லை என் பதால், வெறுமனே ஆலோசனை சொல்கிற அமைப்பாகத்தான் அவை இருந்துவருகின்றன. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மரபினர் ஆணை யங்களைப் போல அவற்றால் முழு அதிகாரத்தோடு செயல்பட முடியவில்லை.
3. சட்டத் திருத்தத்தின் எந்தெந்தப் பிரிவுகள் பிரச்சினைக்குரியவை எனக் கருதுகிறீர்கள்?
அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் வழங்கப் படுவதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மரபினர் ஆணையங்களுக்கு உள்ளது போன்று பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக்கான திட்டமிடுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் அதிகாரத்தைப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அளிக்கும் பிரிவுகள் மசோதாவில் நீக்கப்பட்டுள்ளன. அந்தப் பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும். பிற்படுத்தப் பட்டோருக்கான மத்திய பட்டியலில் புதிதாக ஒரு பிரிவினரைச் சேர்க்கவோ, நீக்கவோ உள்ள அதிகாரம் மாநில அரசின் வேண்டுகோளின் பேரிலேயே அமைய வேண்டும். மாநில அரசின் வேண்டுதல் இல்லாமல் தன்னிச்சையாக, ஆலோசனை என்ற பெயரில் அந்த அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் பிரிவு நீக்கப்பட வேண்டும். மாநிலப் பட்டியலுக்கான அதிகாரம் மாநில அரசுகளிடமே நீடித்திட வேண்டும். அதற்கான விதிகள் மசோதாவில் இடம்பெறவில்லை. அதற்கான புதிய விதிகள் சேர்க்கப்பட வேண்டும். மேலும், மத்திய - மாநில ஆணையங்கள் நீதிபதியின் தலைமையில் செயல்பட வேண்டும் என்ற பிரிவுகளைத் தற்போது நீக்கியிருக்கிறார்கள். எனவே, யார் வேண்டுமானாலும், ஆணையத்தின் தலைவராக வரலாம் என்ற வாய்ப்பும் இருக்கிறது. இது தவறானது. எனவே, இத்தகைய பிரிவுகள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.
4. அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா -123 ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற் றப்பட்டுள்ள நிலையில், அம்மசோதாவில் திருத் தம் செய்யும் கோரிக்கை ஏற்கப்பட வாய்ப்பு இருக்கிறதா?
மக்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இருக்கிற காரணத்தாலேயே ஒரே நாளில் அதிக விவாதங்கள் இல்லாமலேயே அதை நிறைவேற்றிவிட்டார்கள். ஆனால், மாநிலங்களவையில் பாஜக வுக்குப் பெரும்பான்மை இல்லை. எனவே, இந்தக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதே கருத்தை மே 15 இல் மாநிலங் களவைத் தெரிவுக் குழுவின் முன்னாலும் நான் எடுத்துக் கூறியிருக்கிறேன்.
5. மத்திய அரசின் நடவடிக்கை என்றாலே சந் தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது சரிதானா?
மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கல்வித் துறையில் மத்திய அரசு எடுக்கும் முடி வையே மாநிலங்கள் பின்பற்றியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு ‘நீட்’ தேர்வே ஓர் உதாரணம். இந்நிலையில், தற் போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களில் மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளையும் பறிப்ப தற்கு முயற்சிக்கிறது மத்திய அரசு. கூட்டாட்சித் தத்துவத்துக்குப் பதிலாக ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்வு என்று ஒற்றையாட்சி முறையை இந்த ஆட்சி வலியுறுத்துகிறதோ என்று தோன்றுகிறது.
- புவி
நன்றி: ‘தமிழ் இந்து’, 22.5.2017

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உ.பி.யில் சாமியார் ஆளும் பி.ஜே.பி. ஆட்சி இதுதான்! தாழ்த்தப் பட்டோரைத் தாக்கிய உயர்ஜாதிக் கும்பல்!

டில்லியை கிடுகிடுக்க வைத்த தாழ்த்தப்பட்டோர் போராட்டம்!
50 ஆயிரம் தலித்துகள் நீலத் தொப்பியணிந்து போர் முழக்கம்!

புதுடில்லி, மே22 உத்தரப்பிரதேச மாநிலத்தில் சகரன்பூரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடைபெற்றவன்முறைகளைக்கண்டித்துடில்லி ஜந்தர்மந்தரில்நேற்று(21.5.2017)நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட வர்கள், இளைஞர்கள், செயற்பாட்டாளர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்குஎதிரான வன்முறைகளைக் கண்டித்து தாழ்த்தப்பட்டவர் களின் உரிமைகளுககாகப் போராடி வருகின்ற  பீம் ஆர்மி  எனும் தாழ்த்தப்பட்டோருக்கான தொண்டறப்படையின் சார்பில் கண்டன விளக் கப் பொதுக்கூட்டம் டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்றது.
டில்லியில் கண்டன ஊர்வலம் நடத்த டில்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
இளம் வழக்குரைஞர் சந்திரசேகர் தலைமையில் உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடை பெற்ற கண்டனப் போராட்டத்தின் விளக்கக் கூட்டத்தில் பீம் ஆர்மியின் தாழ்த்தப்பட்டவர்கள் ஒற்றுமைப்பணி என்கிற திட்டத்தின்கீழ் நீல உடை அணிந்து ஏராளமானவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக திரண்டிருந்தார்கள்.
டில்லி ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும்  ஜெய் பீம்  ஒலி முழக்கம் நிரம்பியிருந்தது. மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் டில்லி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இளைஞர்கள் தலித் சங்கர்ஷ் மோர்ச்சா, யுவ சக்தி தள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலிருந்து திரண்டிருந்தார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் சகரன்பூர் பகுதி யில் உயர் ஜாதி பார்ப்பனர்களான தாக்கூர் வகுப்பைச் சேர்ந்தவரான மகாராணா பிரதாப் பிறந்த நாள்விழா கொண்டாடுவதாகக் கூறி, அப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர்.
5.5.2017அன்றுவன்முறையின்போது,தாக்கூர் வகுப்பைச் சேர்ந்த கும்பல் தாழ்த்தப்பட்டவர்
களின்25வீடுகளைதீக்கிரையாக்கியது.தாழ்த்தப்பட்டவர்கள் 15 பேர் படுகாயம் அடைந் தார்கள்.9.5.2017அன்றுகாவல்துறைக்கும்,போராட் டக்காரர்களுககும் இடையே மோதல் வெடித்தது.
சந்திரசேகர் இதுகுறித்து பேசுகையில், ஒடுக்கு முறைக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். ஆயிரக்கணக்கில் கிளர்ந்தெழுவோம். ஆர்.எஸ்.எஸ்-. இந்து வலது சாரிகள் நூற்றாண்டுகளாக எங்களை ஒடுக்கி வருகிறார்கள். ஆனாலும், நாங்கள் பலவீனமடைந்துவிடவில்லை.
பாதிப்புக்குள்ளாகின்ற தாழ்த்தப்பட்டவர்கள் தொலைபேசி, வாட்ஸ்அப் சமூக ஊடகங்களின் மூலமாக ஒடுக்குமுறைகள் குறித்து வெளிப்படுத்த வேண்டும்என்றும்கூறியுள்ளோம்என்று பேசினார்.
உத்தரபிரதேசம் மாநிலம், சகரன்பூரில் மே 5 ஆம் தேதி உயர் சமூகத்தினரான தாக்குர் மக்கள் நடத்திய பேரணியின் போது ஒலிபெருக்கி மிகவும் சத்தமாக ஒலிபரப்பப்பட்டதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி தலித் சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, வன்முறையாக வெடித்தது.
இந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் பலியானார். 15-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சகரன்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சகரன்பூர் நகரில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து தலைநகர் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தலித் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட் டத்தில் சுமார் 50 ஆயிரம் தலித்கள் பங்கேற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலையில் நீல நிற தொப்பிகளை அணிந்து இருந்தனர். பீம் படை என்ற அமைப்பின்கீழ் இந்த போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாக்குதல் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவா ரணம் வழங்கவேண்டும், தாக்குதலில் ஈடு பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...