Tuesday, September 22, 2015

சென்னை-வில்லிவாக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற 345ஆவது திராவிடர் விழிப்புணர்வு மாநாடு

சென்னை-வில்லிவாக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற  345ஆவது திராவிடர் விழிப்புணர்வு மாநாடு
சென்னை, செப்.21_ வட சென்னை மாவட்ட திரா விடர் கழகத்தின் சார்பில் திராவிடர் விழிப்புணர்வு 345ஆவது வட்டார மாநாடு 18.9.2015 அன்று மாலை சென்னை_ வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சுயமரியாதை சுடரொளிகள் தியாகராசன், குண சீலன், கடலூர்  கேசவன் நினைவரங்கத்தில் மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலை மையில் நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் கு.தங்கமணி வரவேற்றார். வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செய லாளர் வி.பன்னீர்செல்வம், மாநில தொழிலாளரணி இணை செயலாளர் பெ.செல்வராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் தி.வே.சு.திருவள்ளுவன், வெ.மு.மோகன் முன்னிலை வகித்தனர்.
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணி யம்மை உள்பட கழக நிர்வாகிகள் பலரும் உரை யாற்றினர்.
பகுத்தறிவு கருத்துப் பொழிவாக தமிழர் தலைவர் உரை
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டு சிறப்பு ரையில் பழமையான நினைவுகளை எடுத்துக்காட்டி உரை ஆற்றினார். இங்கு வரும்போது பழைய நினைவுகளோடு வந்தேன்.
தந்தை பெரியார் காலத்தில் கழகத்தின் பாசறையாக விளங்கிய பகுதி சென்னை வில்லிவாக்கம் பகுதி என்றும், சுயமரியாதைச் சுட ரொளி தியாகராசன் வழியில் அவர் வாழ்விணையர் பாப்பம்மாள், குணசீலனுக்குப்பிறகு அவர் வாழ் விணையர் தங்கமணி மற்றும் அவர் குடும்பத்தினர்,
அன்பாக உரிமையுடன் தம்பி என்று என்னை அழைப்பவர் கடலூர் கேசவன். அவருடைய பேரன் உள்ளிட்ட அனைவருமே இயக்கத்தில் ஈடுபட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதை  பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அரசமைப்பு சட்டத்தைக் கொளுத்தும் போராட் டத்தில் கலந்துகொண்டு  சிறைச்சாலை சென்றவர்கள் துரைக்கண்ணு, அயன்புரம் பக்தவச்சலம் என்று நீண்ட பட்டியலையே சொல்லலாம். அப்படி இயக் கத்தில் தீவிரமாக செயல்பட்ட பகுதி வில்லிவாக்கம் பகுதி. நம்முடைய இயக்கம் அடிப்படையில் பிரச்சார இயக்கம்.
ஆண்டுமுழுவதும் கூட்டங்கள், கருத்தரங் கங்கள், விடுதலை ஆண்டு விழா மலர் வெளியிடுவது என்று அனைத்துமே பிரச்சாரத்துக்காகத்தான். பெரியார் சொன்னதை நாங்கள் சொல்லி வந்தாலே எங்கள் வாழ்நாள் போதாது.
பலநேரங்களில் தந்தை பெரியார் கூறியதையே கூறினால் விளக்கம் கிடைத்துவிடும். பெரியார் திடலில் 21 அடி சிலையே பிரம்மாண்டமாக இருக்கிறது. திருச்சி சிறுகனூரில் அமையக் கூடிய 135 அடி உயர பெரியார் சிலைக்கு முன்னோட்டமாக இது அமைந்திருக்கிறது. அந்த சிலையின் பீடத்திலேயே பெரியார் கூறிய வாசகம் இருக்கிறது.
சிலை மணி அடிப்பதற்கு அல்ல.
பெண்ணடிமை, தீண்டாமை, ஜாதி, மதம் ஒழிய வேண்டும் என்கிற விளக்கங்கள் உள்ளன.
பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!!
பிறக்காத கடவுள் என்று பிறப்பு, இறப்பு இல்லை, கண்ணுக்குத் தெரியாதவர் என்று சொல்லி, கடவுள் பிறந்ததாக ஒரு நாளைச் சொல்கிறான். பிறக்காத கடவுளுக்கு பிறந்த நாள் என்று  விநாயகன் சதுர்த்தி,  ராம நவமி, கோகுலாஷ்டமி, கந்தன் சஷ்டி என்கிறான்.
இவை யாவும் தமிழா? இதிலிருந்துதமிழருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரியவில்லையா? இவைகளை விட்டுவிட்டால் கடவுளை மறந்து விடு வார்கள் என்று திருவிழா, பிரச்சார முறைகளாக மட்டுமன்றி பார்ப்பனருக்கு வருவாயும் பார்க் கிறார்கள்.
இதைவைத்து அவர்கள் பிரச்சாரம் செய் கிறார்கள்.  எனக்கு பிறந்த நாள் விழா என்பது பிரச் சாரம் என்று தந்தை பெரியார் கூறியுள்ளார். ராமன் பிறந்த நவமி, கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியில் எதுவும் செய்யக்கூடாது என்றால், கடவுள் பிறந்த நாள் ரொம்ப கேவலமான நாள், நல்ல நாள் இல்லை என்கிறான்.
தமிழர்கள் தோளில் துண்டு போடவும், வேட்டி கட்டவும், தாய்மார்கள் மாராப்பு உடுத்திக்கொள்ளவும் யார் காரணம்? போராடித்தான் உரிமைகளைப் பெற வேண்டியிருந்தது. நல்ல உடை உடுத்தக் கூடாது என்று மனுதர்மம் கூறுகிறது. நல்ல பெயர் வைக்கக்கூடாது என்றார்கள்.
இளைஞர்களுக்கு பெரியார் கொள்கை அறிந்து கொள்வது முக்கியமானது. மனுதர்மம், அரசமைப்பு, ஒருகுலத்துக்கு ஒரு நீதி என்று இருந்தது. பெண்கள் வாழ்நாள் முழுவதும் அடிமையாக்கப்பட்டனர். சூத் திரர்கள் மற்றவர்களுக்கு அடிமை என்றால், பெண்கள் எல்லா ஜாதியிலும் அடிமையாக்கப்பட்டார்கள்.
பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன், மேலும் அவர்ணஸ்தர்கள் (OutCaste) என்று தொடக் கூடாதவர்கள், தீண்டத்தகாதவர்கள் பிரித்து வைத்தான்.
துப்புரவுப்பணிகளை செய்பவர்களின் பணி என்பது அர்ச்சகர் பணியைவிட ஆயிரம் மடங்கு மேலான பணியாகும். துணி வெளுப்பவர்கள், செருப்பு தைப்பவர்கள், சவரம் செய்பவர்கள்,
துப்புரவு பணி செய்பவர்கள் என்று அத்தியாவசியமான (Essential Services) பணிகளை செய்பவர்களை கீழ் ஜாதியி னராகவும், எந்த உழைப்பும் கொடுக்காமல் ரோடு ரோலர்போல் கொழுத்துக்கொண்டு இருப்பவனை மேல்ஜாதி என்றும் வைத்துள்ளார்கள். எந்த நாட்டில் இந்தக் கொடுமை இருக்கும்? இன்றைக்கு இந்த நிலைமை உண்டா?
ஜாதி அடிப்படையில் ஒதுக்கீடு என்றால், எந்த  நிலையில் வைக்கப்பட்டிருக்கிறானோ அந்த அடிப் படையில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதற்கே.
சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் ஆனபின்னும் மலம் அள்ளுகிற நிலை உள்ளதே. மோட்சத்துக்கு டிக்கட் கொடுக்கின்ற வேலையில்தானே பார்ப் பனர்கள் இருக்கிறார்கள்.
மனுதர்மத்தில் சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் அறிவை, கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று உள்ளது.
வௌ¢ளைக்காரன்கூட கருப்பர் இனத்தவரை (நீக்ரோ) இன பேதத்துடன் நடத்தினான் என்றாலும், படிக்கக் கூடாது என்று சொல்லவில்லை.
அரசமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் செய் வதற்கு காரணமானவர், சமூக நீதி நிலைநாட்டியவர் தந்தை பெரியார் ஆவார். கொள்கையை இடை விடாது பரப்பவேண்டும்.
இடஒதுக்கீடு கூடாது என்ற பார்ப்பனர்களே எங்களுக்கும் இட ஒதுக்கீடுவேண்டும் என்று கோரி பார்ப்பனர்கள் சார்பில் எஸ்.வி.சேகர் பெரியார் திடலில் எங்களை வந்து சந்தித்தார். எல்லார்க்கும் எல்லாம் என்பதற்குதான் இட ஒதுக்கீடு என்று இட ஒதுக்கீட்டு வரலாறை எடுத்துச்சொன்னோம். நீதிக்கட்சி காலத்தில் பார்ப்பனருக்கு இருந்த இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டியவர்கள் பார்ப்பனர்கள். இப்போது கேட்கிறார்கள்.
மாற்றம் மாற்றம் என்கிற சொல் இப்போது பலரிடமும் சிக்கிக்கொண்டுள்ளது. இருப்பதை மாற்றுவது என்கிறார்கள்.
மாற்றம் என்று கூறுவது ஏமாற்றத்துக்குத்தான் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே திராவிடர் கழகம் சொன்னது.
குஜராத்தில் 1984ஆம் ஆண்டில் இட ஒதுக்கீட்டை எதிர்த்தார்கள். இப்போது அதே வகுப்பினர் இடஒதுக்கீட்டைக் கோருகிறார்கள். படேல் சமூகத்து பெண்கள் போராடுகின்றனர். குஜராத்தில் இட ஒதுக் கீடு கோரும் போராட்டம். பெரியார் குஜராத்துக்கு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் பக்தவச்சலம் காலத்தில் 1965ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதுதான் இராணுவம் வந்தது.
குஜராத்தில் இராணுவம் செல்லக்கூடிய நிலையில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினரை பெண்கள் முற்றுகையிட்டுள்ளார்கள். தொகுதிக்குள் அரசு நிகழ்ச்சியிலிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இது போன்று 6 இடங்களில் பிரச்சினைகள் நடந்துள்ளன. இதுதான் குஜராத் மாடலா?
கிரிக்கெட் விநாயகர், நரமுக (மனித முக) விநாயகர், பெண் பிள்ளையார்_கணேசசிறீ என்றெல்லாம் புதிதுபுதிதாக சொல்கிறார்கள்.
கடவுளுக்கு ஏன் பூணூல்-? ஜாதி, மத வெறிகள் ஒழிக்கப்பட வேண்டும். அடுத்த தேர்தலைவிட, அடுத்த தலைமுறை முக்கியம்.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர்தம் உரையில் குறிப்பிட்டார்.
கலந்துகொண்டவர்கள்
இம்மாநாட்டில் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் செ.தமிழ் சாக்ரட்டிஸ்,
சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், துணைத் தலைவர் கருங்குழி கண்ணன், துணை செயலாளர் செம்பியம் இராம லிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, சொ.அன்பு, இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன், தளபதி பாண்டியன்,
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால், செயலாளர் வெங்கடேசன், அமைப்பாளர் இராமு, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் இல.குப்புசாமி,
மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், செயலாளர் அனகை ஆறுமுகம், பொழிசை கண்ணன், காரைக்குடி மாவட்டச் செயலாளர் பிராட்லா, தென் சென்னை மாவட்டத் துணை செயலாளர் கோ.வீ.ராகவன், அமைப்பாளர் செங்குட்டுவன், அரும்பாக்கம் தாமோ தரன், மதுரவாயல் பாலமுரளி, தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன்,
செயலாளர் சண்முகப்பிரியன், பொறியாளர் குமார், ஆவடி மணிகண்டன், இரணி யன், வழக்குரைஞர் ஜெ.துரைசாமி, சி.காமராசு, கொடுங்கையூர் தங்கமணி, அம்பத்தூர் சிவக்குமார், புழல் ஏழுமலை,  திருவொற்றியூர் கணேசன், பூவிருந்தவல்லி நகர செய லாளர் பெரியார் மாணாக்கன், பிழைபொறுத்தான், மகேஷ், சுரேஷ், லோகேஷ், சக்திவேல், இசையின்பன், பெரியார் களம் இறைவி, சி.வெற்றிசெல்வி,  சுமதி, உமா, தனலட்சுமி,
முனியம்மாள், ஜெயந்தி, பூவை செல்வி, நதியா, சீர்த்தி, ரமணி, திலகவதி, தமிழரசி, வெண்ணிலா, எழில்,  புழல் மாலதி, ஆவடி நதியா, கற்பகம், சசிகலா, த.மரகதமணி, பசும்பொன் செந்தில் குமாரி, பெரியார் பிஞ்சுகள் பகுத்தறிவு, ஜெனிமா மற்றும் இளைஞரணியினர், மகளிரணித் தோழியர், தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
வில்லிவாக்கம் கு.வீரமணி நன்றி தெரிவித்தார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

திருக்குறள் வர்ணதர்மத்தைப் போதிக்கும் நூலாம் ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர் எழுதியுள்ளார் சென்னை அய்யா விழாவில் அம்பலப்படுத்தினார் தமிழர் தலைவர்

திருக்குறள் வர்ணதர்மத்தைப் போதிக்கும் நூலாம்
ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர் எழுதியுள்ளார்
சென்னை அய்யா விழாவில் அம்பலப்படுத்தினார் தமிழர் தலைவர்

சென்னை, ஆக. 20- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறும் திருக்குறள் - இந்து வர்ணதர்மத்தைப் போதிக்கும் நூல் என்று ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர் குறிப்பிட்டுள்ளதை அம்பலப்படுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியார் அவர்களின் 137 ஆவது பிறந்த நாள் விழா 17.9.2015 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பெரியார் களஞ்சியம் தொகுதி 37 - திருக்குறள் - வள்ளுவர் நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமி ழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார்.
அவரது உரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 137 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, நடைபெறக்கூடிய பெரியார் களஞ்சியம் தொகுதி 37 திருக்குறள் - வள்ளுவர் என்ற 37 ஆவது களஞ்சியத்தை நமக்கெல்லாம் திறந்து காட்டி, மிகச் சிறப்பான ஒரு திருக்குறள் விரிவுரையை நிகழ்த்தவிருக் கின்ற பெரியாரின் பெருமைகளை பேசாத நாளெல்லாம் தான் பிறவாத நாள் என்று கருதக்கூடிய எங்கள் ஒப்பற்ற இனமானப் பேராசிரியர் அவர்களே, இந்தக் களஞ்சியத்தில் இருக்கக்கூடிய சாறைப் பிழிந்தெடுத்து, மிக அற்புதமாக இங்கே நமக்கு முன்னாலே எடுத்து வைத்து, இன்னும் அதிகமாக விளக்கமாட்டாரா என்ற சுவையோடு கேட்டுக் கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கிய, இந்தக் காலத்து அவ்வையார் அவர்களே,
இந்த நிகழ்ச்சியில் முடிந்தவுடன், அடுத்து நடை பெறவிருக்கும் மகளிர் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைக்க வந்திருக்கக்கூடிய, எங்கே சென்றாலும் எந்த வாய்ப் பிலும் தன்னை பெரியாரிஸ்ட் என்று தன்னை வர்ணித்துக் கொள்ளக்கூடிய அருமை தோழியர் குஷ்பு சுந்தர் அவர்களே, நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு சிறப்பாக பங்கேற்க இருக்கக்கூடிய கவிஞர் சல்மா அவர்களே, பத்திரி கையாளர் கவிதா முரளிதரன் அவர்களே, பேராசிரியர் சுந்தரவல்லி அவர்களே, வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே, வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, நண்பர்களே, செய்தியாளர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்து லட்சம் நூல்களுக்குத் தந்தை பெரியார் காட்டிய வழி
நீண்ட நேரத்தை நான் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இடையிலே நான் நிற்கவும் அதிகமாக விரும்பவில்லை.
பெரியார் களஞ்சியம் என்ற நூலில் மிக அழகாக நம்முடைய அவ்வை நடராசனார் அவர்கள் சிறப்பாகச் சொன்னார்கள். இந்த நூலினுடைய இறுதிப் பகுதியில், தமிழன் நெறி விளக்க மாநட்டை, அய்யா அவர்கள், 11.1.1949 இல் நடத்தினார்கள். கலைவாணர், அண்ணா, திரு.வி.க., நாவலர், பேராசிரியர் ஆகியோர் அந்த மாநாட்டில் இருந்தார்கள். பல்வேறு வரலாற்று குறிப்புகளும் இதிலே இணைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நூலை நீங்கள் வாங்கவேண்டும்; படிக்கவேண்டும்; பரப்பவேண்டும். அவர்கள் சொன்னார்கள் அல்லவா, ஏற் கெனவே திட்டமிட்டிருக்கிறோம் 10 லட்சம் பிரதிகளுக்கு. அதனை அய்யா அவர்கள் செய்துகாட்டினார்கள். எங்கே செய்து காட்டினார்கள் என்று சொன்னால், திருக்குறளை ஒரு நான்கணா என்கிற அளவில், சிந்தாதிரிப்பேட்டையில் விடுதலை அலுவலகம் இருந்த காலகட்டத்தில், மிகத் தெளிவாக அவர்கள் நான்கணாவுக்கு 1330 குறளையும், அந்தக் குறளைப்பற்றி மற்ற கவிஞர்களின் கருத்தையும் இணைத்து வெளியிட்டார்கள். அந்தக் காலத்தில் நாலணா விற்கு புத்தகம் என்பதே மிகவும் அரிது. மிக அழகாக அய்யா அவர்கள் வெளியிட்டார்கள். அப்பொழுது விடு தலைக்கு நிர்வாகியாக என்னுடைய ஆசிரியர் திராவிட மணி அவர்கள்தான் இருந்தார்கள்.
அப்படி வெளியிட்டபொழுது, அய்யா அவர்கள் ஒரு கருத்தை சொன்னார்கள். விலை அதிகமாகப் போடக் கூடாது; மக்கள் மத்தியில் இது அதிகமாகப் போகும் என்று திராவிடமணி அவர்களிடம் கேட்டார்கள்.
நாலணாவிற்கு நாம் கொடுத்தால், கொஞ்சம் கைப்பொறுப்பு வரும் என்று சொன்னார். கைப்பொறுப்பு வராமல் செய்வதற்கு என்ன வழி என்று கேட்டீர்களா? என்றார் அய்யா. உடனே திராவிடமணி அவர்கள் யோசித்தார்கள், தயக்கம் காட்டினார்கள். அய்யா அவர்களுக்கு அச்சுக் கலையினுடைய நுட்பம் மிக நன்றாகத் தெரியும். டபுள் கிரவுன் என்றால் என்ன - டபுள் டம்மி என்றால் என்ன - என்பது பற்றி தெரியும்.
அய்யா அவர்கள் விடுதலை அச்சிடும் தாளை எடுத்து வரச்சொன்னார். அந்தத் தாளை கையில் வைத்துக் கொண்டு, இதை நம் அச்சகத்திற்குத் தகுந்தமாதிரிதானே வெட்டி பயன்படுத்துகிறீர்கள். அந்த வெட்டிய பகுதியை திருக்குறளுக்குப் பயன்படுத்துங்கள்; அப்படிப் பயன்படுத்தினால், புத்தகமும் சிறியதாக இருக்கும். அப்படி அச்சடித்தால், நமக்கு அடக்கம் எப்படி வருகிறது என்பதை கணக்குப் போட்டு பாருங்கள் என்றார்.
அப்பொழுதுதான் எங்கள் ஆசிரியர் திராவிடமணி அவர்களுக்கு விளங்கிற்று. அவர் அந்த அச்சுத் துறைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் அந்தப் பணிக்குச் சென்றார். அதற்குமுன்பு கடலூரில் இருந்தார்.
அய்யா சொன்னவுடன், அவர் கணக்குப் போட்டு மூன்றரை அணா ஆகிறது என்பதைச் சொன்னார்.
உடனே அய்யா அவர்கள், பரவாயில்லை; நமக்கு அரை அணா லாபம் இருக்கிறது என்றார். திருக்குறளை பரப்பவேண்டும் என்று அய்யா நினைத்தார்.
வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ
மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி
என்ற இந்த நிலை, இன்றைக்கும் திருக்குறள் ஏன் தேவை என்பதற்கு இதைவிட தேவையானது சுந்தரம் பிள்ளையிலிருந்து நம்முடைய அறிவாசன் தந்தை பெரியார் அவர்கள் விளக்கத்திலிருந்து இன்றைய நம்முடைய தலைவர்கள், பேராசிரியர்கள் இங்கே இருக்கக் கூடியவர்கள் வரையில் திருக்குறள் நெறி என்பது தேவையான ஒன்று.
திருக்குறள் மக்கள் சந்தைக்கு வந்தது எப்படி?
திருக்குறள் இன்றைக்கு எல்லோருக்கும் பயன்படுகிறது. இன்றைக்கு எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்றால், புலவர்கள் வீட்டு அலமாரிக்குள் இருந்த இந்தத் திருக்குறள் பொதுமக்கள் சந்தைக்கு வந்தது என்று சொன்னால், அய்யா அவர்களுடைய முயற்சி என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள்.
இப்பொழுது திருக்குறள் எல்லோருக்கும் பயன்படு கிறது.  ஏன்? இன எதிரிகளுக்கும் பயன்படுகிறது. எனவே, திருக்குறளைப் பரப்பவேண்டிய கட்டம் தாண்டி, திருக்குற ளைப் பாதுகாக்கவேண்டிய கட்டம் இப்பொழுது வந்திருக் கிறது என்பதுதான் மிக முக்கியமானது.
வடக்கே இருந்து ஒருவர் தூண்டிலோடு வருகிறார்; அந்தத் தூண்டிலிலே திருக்குறள் தொங்குகிறது. அதனைக் கண்டு பல பேர் ஏமாந்துவிடுகிறார்கள்.
திருக்குறள் வர்ணதர்ம நூலாம்!
திருக்குறளை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்; யாரெல் லாம் பயன்படுத்தலாம்; எல்லோருக்கும் பொதுவானது  என்று சொன்னார்கள். நம் இன எதிரிகளுக்கும் சேர்த்துத் தானே என்ற அளவிலே அவர்கள் பயன்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள்.
இன்னொன்றை இங்கு சொல்லவேண்டும், ஆர்.எஸ். எஸ். அமைப்பு, மதவெறி அமைப்பு எவ்வளவு தீவிரமாக இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது; எவ்வளவு பெரிய அறைகூவலை விடுத்துக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த ஆர்.எஸ்.எஸ்.யினுடைய கொள்கை வகுப்பாளராக இருந்தவர், அவர்களால் குருஜி என்று அழைக்கப்பட்ட கோல்வால்கர். அந்தக் கோல்வால் கர் எழுதிய புத்தகம் ஆங்கிலத்தில் ஙிஸீநீலீ ஷீயீ ஜிலீஷீரீ என்ற புத்தகமாகும். அது தமிழில் ஞானகங்கை என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
அந்தப் புத்தகத்தில் திருக்குறளைப்பற்றி எழுதியிருக் கிறார் கோல்வால்கர். திருக்குறள் ஒரு அற்புதமான இந்து தர்மத்தை, வருண தர்மத்தைப் பாதுகாக்கும் ஒரு நூல்.
திருக்குறள் ஒரு இந்து தர்மத்தை, வருண தர்மத்தைப் பாதுகாக்கின்ற ஒரு நூல் என்று சொல்லியிருக்கிறார். நூலெல்லாம் இப்பொழுது திருக்குறளைத் தேடிக் கொண்டி ருப்பது ஏன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
பாதுகாக்க வேண்டும்
எனவேதான், இன்றைக்கு நாம் திருக்குறளைப் பரப்பு வது ஒரு கட்டம் தாண்டியது; திருக்குறளைப் பாதுகாக்க வேண்டும்; திருக்குறளுக்கு மட்டுமா? பெரியார் கொள் கைக்கும் அதே நிலைதான். பெரியார் கொள்கையைப் பரப் பிய காலம் மாறி, பெரியார் கொள்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற காலமும், இப்பொழுது தேவையும் ஏற்பட்டிருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில்தான், இந்தக் கொள்கைக்கு, இந்தத் தடுப்புக்கு, நமக்கெல்லாம் பேராசிரியராக இருந்து, தமிழகத்தின் முதல் பேராசிரியரின் தந்தை பெரியாருக்கு அடுத்து, இனமானப் பேராசிரியராக என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கின்ற எங்கள் அருமைப் பேராசிரியர் அவர்களே, நீங்கள் உங்கள் கருத்துகளை சிறப்பாகத் தாருங்கள். நாங்கள் எப்பொழுதும் உங்களைப் பின்பற்ற, உங்கள் சொற்களைக் கேட்க, உங்களால் மிகப்பெரிய அளவிற்குத் தன்மான உணர்வு பெற்ற அனைவருமே அதை ஏற்க என்றைக்கும் தயாராக இருக்கிறோம். உங்கள் இருவருக்கும் நன்றி!
நீங்கள் கொஞ்சம் உடல்தளர்ந்திருந்த நிலையில், நாங்கள் இந்த விழாவிற்காக தேதி கேட்டபொழுது, பெரியார், அண்ணா விழா என்றால், எனக்கு உடல் நன்றாக இருக்கும். நான் வந்துவிடுவேன் என்றுதான் எங்களிடத்தில் தெளிவாக இனமானப் பேராசிரியர் அவர்கள் சொன்னார் கள். ஆகவே, அவர்களுக்கு, அவ்வையார் அவர்களுக்கு, எல்லோருக்கும் நன்றி!
இந்நூலை வாங்கிப் படியுங்கள்! பரப்புங்கள்!! பாது காத்துக் கொள்ளுங்கள்!!! திருவள்ளுவரைப் பாதுகாப்போம், பரப்புவோம் என்பதை தாண்டி, வள்ளுவரைப் பாதுகாப் போம் என்று குரல் கொடுங்கள்! தூண்டிலைக் கண்டு ஏமாறாதீர்கள்! எச்சரிக்கை என்று கூறி முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க வள்ளுவர் அறம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் உணர்வோடு தமிழர்கள் வாழ - தமிழ் உணர்வை தொடர்ந்து நிலைநாட்ட திருக்குறளை போற்றி புகழ்ந்து நாம் வாழவேண்டும்; அதுதான் திருவள்ளுவருக்கு செய்கின்ற கடமையாகும்!

தமிழ் உணர்வோடு தமிழர்கள் வாழ - தமிழ் உணர்வை தொடர்ந்து நிலைநாட்ட
திருக்குறளை போற்றி புகழ்ந்து நாம் வாழவேண்டும்; அதுதான் திருவள்ளுவருக்கு செய்கின்ற கடமையாகும்!
தந்தை பெரியார் 137 ஆவது பிறந்த நாள் விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் உரை
சென்னை, செப். 21- தமிழ் உணர்வோடு தமிழர்கள் வாழ, தமிழ் உணர்வை தொடர்ந்து நிலை நாட்ட, அய்யா அவர்கள் சொன்னதைப்போல - பெரியார் அவர்கள் சொன்னதைப்போல, திருக்குறளை நாம் போற்றி, புகழ்ந்து என்றைக்கும் நம்முடைய உள்ளத்திலே கொண்டு நாம் வாழப் பழகவேண்டும்; 
அப்படி வாழப் பழகுவதுதான் வள்ளுவருக்குச் செய்கின்ற உண்மையான கடமை என்று இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார் 17.9.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியார் 137 ஆவது பிறந்த நாள் விழா - பெரியார் களஞ்சியம் தொகுதி 37 திருக்குறள் - வள்ளுவர் நூல் வெளி யீட்டு விழாவில் தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
நம்முடைய லட்சியத்திற்குத் துணையாக விளங்குவது  திருக்குறள்!
உங்களையெல்லாம் பார்க்கின்றபோது திருவள்ளுவர் மறுபடியும் பிறந்திருக்கிறாரோ என்கிற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. திருவள்ளுவரை நாம் போற்றுகிறோம் என்று சொன்னாலும்கூட, நாம் போற்றுவது, அவ்வப்போது போற்று வது, ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு பிரச்சினைக்காக அதனைப் போற்றுவது, இன்னும் சொல்லப்போனால், திருவள்ளுவருடைய திருக்குறள் நமக்கு ஒரு பெரிய ஆதரவாக, துணையாக, நம்முடைய லட்சியத்திற்குத் துணையாக விளங்குவது.
அப்படிப்பட்ட திருக்குறளை நம்முடைய மக்கள் உணரவேண்டிய முறையில் உணரவில்லை. தெளிய வேண்டிய முறையில் தெளியவில்லை. அதனுடைய கருத் துகளில் மாறுபாடுகள் இருந்தாலும், அந்தக் கருத்துக்களிலே எந்தக் கருத்தை மக்களிடம் எடுத்துச் சொல்வதன்மூலமாக அந்தக் கருத்துக்கு மரியாதை கிடைக்கும்; ஒரு சிறப்பு கிடைக்கும் என்று நாம் எண்ணிப் பார்க்கவில்லை.
இலக்கியங்களுக்கெல்லாம் முன்னோடி நூலாக விளங்குகிறது திருக்குறள்!
நீங்கள் ஆழமாக எண்ணிப் பார்த்தால், தொல்காப் பியம் எப்படி தமிழுக்கு முதல் நூலோ - அதுபோல் திருக் குறளும் முதல் நூல். தொல்காப்பியம் எப்படி தமிழுக்கு முதல் நூலாக, முதன்முதலாக எழுதப்பட்ட நூலாக நமக்கு இன்றைய தினம் கிடைக்கின்ற நூல்களிலே மிகப் பழைய நூலாக தொல்காப்பியம் அமைந்திருப்பதைப்போல, திருக் குறள் எழுதப்பட்ட நூல்களிலே மிகத் தொன்மையானதாக - மற்ற இலக்கியங்களுக்கெல்லாம் முன்னோடி நூலாக விளங்குகிறது.
அதனை நம் மக்கள் முன்னோடி நூல் - முதல் நூல் - கருத்துக்களிலே தெளிவு ஏற்படுத்துகின்ற நூல் - அப் படிப்பட்ட நூலை நாம் போற்றவேண்டிய முறையில் போற்றவேண்டும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டு மானால், தொல் காப்பியத்தைப்பற்றி - அதன் பழைமை யைச் சொல்கின்றவர்கள் பாணினி அவனுடைய இலக் கணம் எப்பொழுது தோன்றியதோ, அதற்கு முன்னாலே தொல்காப்பிய நூல் தோன்றியது என்று சொல்லப்பட் டாலும், அது உண்மையல்ல. தொல்காப்பியம் தோன்றி, அதனுடைய இலக்கணம் தோன்றி, பல நூற்றாண்டுகள் கழித்துதான் பாணினியினுடைய சமஸ்கிருத இலக்கணம் பிறந்திருக்கிறது என்பார்கள்.
அப்படி ஒப்புக்கொள்ளாதவர்கள்கூட, அந்தப் பாணினி இலக்கணம் தமிழில் தோன்றிய இலக்கணங் களுக்கு பின்னாலே அந்த இலக்கணம் தோன்றியது என் பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் உள்ள அருமையான ஆழமான கருத்துக்களைக் கொண்ட அந்தத் தொல்காப் பியத்திற்கு அந்தப் பாணினி இலக்கணம் எந்த வகையிலும் இலக்கணமாகாது. வடமொழியில் பாணினி இலக்கணமும், தொல்காப்பியமும் சமத்துவம் உடையது என்கிற கருத்தைக் கூட, வட மொழியில் தொல்காப்பியத்தை இயற்றியவர்கள், அதே நேரத்தில், தென்மொழியில் தமிழில் இலக்கணம் அமைந் தால், அது அதற்குச் சமமாகும் என்று கருதியதுதான்.
தமிழ் மொழி இலக்கணம் மற்ற எல்லா மொழி இலக்கணங்களுக்கும் முந்தையது
ஒரு சிறிய உவமையைச் சொல்ல விரும்புகிறேன். இலக்கணங்களில் தமிழ் இலக்கணம், சமஸ்கிருதம் இலக்கணம், இன்னொரு மொழி இலக்கணம் என்பதைவிட, இலக்கணங்கள் மொத்தமாகக் கருதப்பட்டால், அது திராவிட இலக்கணம்தான். அதனுடைய தொன்மையாது? வள்ளுவர் சொல்கிறபோது, மிக அழுத்தமாக சொன்ன ஒரு கருத்து, மொழி இலக்கணங்களிலேயே தமிழ் மொழி இலக்கணம் மற்ற எல்லா மொழி இலக்கணங்களுக்கும் முந்தையது. அந்த சிறப்பை உணராத முறையில் பல பேர் நடந்துகொள்கிறார்கள்.
தமிழ் முதல் மொழி - தமிழ் இலக்கணம் முதன் முதலில் தோன்றிய இலக்கணம். அதைச் சொல்கிறபோது, தமிழில் உள்ள எழுத்துக்கள்தான் சமஸ்கிருத எழுத்துக் களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்படி எடுத்துக்கொள் ளப்பட்ட  அறம், பொருள், இன்பம் என்று நாம் சொல்வதற் குப் பதிலாக, அறம், பொருள், இன்பம் என்பதைச் சேர்த்து, நான்கு பொருளாக அதனை வளர்த்துப் பேசுகிறவர்கள், இந்தத் தமிழில் உள்ள இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு சொன்னதில்லை.
ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும், தமிழ் மொழியினுடைய பெருமை, தமிழ் மொழியினுடைய சிறப்பு அதற்குக் குறையாக வடமொழியில் பல கருத்துகளைக் கொண்டு வந்து திணிக்கின்ற முறையில், தமிழ் மொழியில், வடமொழியில் உள்ள கருத்துக்களைத் திணிக்கின்ற முறையில் பல கருத்துக்கள் வந்தன.
திருக்குறளைவிட மூலமான நூல் தமிழுக்கு வேறில்லை
எனவே, அந்த வகையில் ஆழ்ந்து எண்ணிப் பார்த் தால், நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன். திருக்குறளைவிட மூலமான நூல் தமிழுக்கு வேறில்லை. திருக்குறளைவிட மூலமான நூல் தமிழில் வேறு இல்லை என்று சொல்கிறபோது, தமிழ் உணர்வை எடுத்துக்காட்டு கின்ற நூல். தமிழ் என்கிற அந்த உணர்ச்சியை, தமிழ் என் கிற நினைப்போடு சேர்த்து சொல்லக்கூடிய - அப்படிப் பட்ட ஒரு நூல் திருக்குறளைத் தவிர வேறு இல்லை.
இன்னொன்றை நீங்கள் எண்ணிப் பார்த்தால், திருக் குறளை ஆழமாக, தந்தை பெரியாரைப்போல அதனை அலசி அலசிப் பார்க்கக்கூடிய பெரியவர்களாக இருந்தால், அந்தத் திருக்குறள் - மற்றவர்கள் சொன்ன கருத்துகளை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மிகச் சிறந்த தமிழ் உணர்ச்சியை அந்தத் திருக்குறளில் காண முடியும்.
ஆகவே நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள் வது, திருக்குறளை பெரியார் பார்த்த அந்தப் பார்வையில் பார்த்தால்தான், அதனுடைய சிறப்பு புலனாகும்.
பெரியாரிடமிருந்து விலகிப் பார்ப்பது தமிழர்களுடைய மானத்தை, தமிழர்களுடைய உரிமையைப் பறிப்பதாக இருக்கும்
பெரியார் பார்த்த பார்வையில் பார்க்காமல், வேறு பார்வையில் பார்த்தால், அதனுடைய கருத்து, வடமொழி யில் உள்ள அந்தக் கருத்து - தமிழர்களுக்கு ஈடு கொடுக் கக்கூடிய கருத்து - அந்தக் கருத்து தமிழர்களுடைய மானத்தை, தமிழர்களுடைய உரிமையைப் பறிப்பதாக இருக்கும்.
எனவே, அவற்றை எதிர்த்து, தமிழ் உணர்வோடு தமிழர்கள் வாழ, தமிழ் உணர்வை தொடர்ந்து நிலை நாட்ட, அய்யா அவர்கள் சொன்னதைப்போல - பெரியார் அவர்கள் சொன்னதைப்போல, திருக்குறளை நாம் போற்றி, புகழ்ந்து என்றைக்கும் நம்முடைய உள்ளத்திலே கொண்டு நாம் வாழப் பழகவேண்டும்; அப்படி வாழப் பழகுவதுதான் வள்ளுவருக்குச் செய்கின்ற உண்மையான கடமை என்று கூறி, நான் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

இதோ ஒரு எளிமை - இனிமை - மண வரவேற்பு விழா!

20.9.2015 அன்று காலை வந்த நாளேடு ஒன்றில், கர்நாடக அரசு, திருமணங்களை எளிமையாக நடத் துங்கள் - விவசாயிகள் கடன் தொல் லையாலும், ஏழ்மை, வறுமை, எதிர் பார்த்த வருவாய் இன்மையாலும், விரக்தியடைந்து தற்கொலைகளில் ஈடுபடுகிறார்கள். வறட்சி அவர்களை வாட்டுகிறது.
இந்நிலையில் விவசாயிகளே ஆடம்பரமாகத் திருமணங்களை நடத் தாதீர்கள்; கடன் வாங்கி திருமணங் களை நடத்தாதீர்கள் என்று சுற்றறிக்கை விடுத்துள்ளது!
இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். திருமணங்களும், வரவேற்புகளும், ஏராளமான தடபுடல் செலவில், ஆடம் பரம் வழிந்தோடும் வகையிலும், செல்வத்தின் செல்வாக்கு, சமையல் விருந்தில் காலையிலேயே 3 இனிப் புகள், பகல் இரவு விருந்தில்  4 இனிப் புகள் (அய்ஸ்கிரீம் உட்பட) இத்தியாதி! இத்தியாதி!!
அழைப்பிதழ்களை விதவிதமாக, ஒலிகளை உள்ளடக்கி நேரில் அழைப் பது, நாயன இசை உள்பட எத்தனையோ விதம், ரூபாய் 100-க்கு மேலாகக் கூட இதற்கு (ஒரு அழைப்பிற்கு இவ்வளவு செலவு என்ற டம்பாச்சாரித்தனம்!) ஆகியிருக்கலாம்.
அழைக்கப்படுபவர்கள் எவரும் அழைப்புகளை கண்ணாடிச் சட்டம் போட்டு நிரந்தரமாகத் தங்கள் வீடுகளில் தொங்க விடவா செய்கிறார்கள்? இல் லையே, பின் ஏன் இந்த வீண் ஜம்பம்? செல்வச் செருக்கின் வெளிச்சம்!
தந்தை பெரியார் அவர்கள் சிக் கனத்தின் அவசியம்பற்றி பேசியவர் மட்டுமல்ல, செயலில் செய்து காட்டியவர்; அவரது வாழ்வு நெறியே எளிமையும், சிக்கனமும், பகுத்தறிவும் தானே!
19.9.2015 அன்று மாலை  பிரபல மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், முதுபெரும் கொள்கை வீரர், தோழர் ஆர். நல்ல கண்ணு அவர்களது பெயரன் பொறியாளர் ப.சதிஷ்குமார் M.E. அவர்களுக்கும், பொறியாளர் ர. பாலபாரதி M.E. அவர் களுக்கும் நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்!
அங்கே கண்ட காட்சி எளிமையின் இனிமையாக அமைந்திருந்தது!
சென்னை சைதாப்பேட்டை தாடண் டர் நகரில் உள்ள மாநகராட்சியின் கலைஞர் திருமணக் கூடத்தில் மாடியில் நிகழ்ச்சி; கீழே உணவுக் கூடம். எவ்வித ஆடம்பரமும் இன்றி, வழி நெடுக கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிகள், வழிகாட்டி வருவோருக்கு உதவின!
இரவு சுமார் 7.15 மணிக்கு நான் சென்றேன். எளிய மேடை இருபுறமும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியின், கொடி களும், பதாகைகளும்.
மணமக்கள் கற்ற பொறியாளர்கள், பொருத்தமான வாழ்விணையர்கள்! இரு வரும் பொறியியல் (முதுநிலை) பட்டதாரிகள்.
சுமார் 700 பேர் (ஆண் பெண் இரு பாலரும்) வந்திருந்து உண்மை அன் புள்ளத்தோடு வாழ்த்திச் சென்றனர். தோழர் ஆர்.என்.கே. அவர்களைப் போலவே எளிமை இந்த வரவேற்பிலும் எல்லோரையும் ஆட் கொண்டது! பின் பற்ற வேண்டியது!! பெண்கள் உட்பட தோழர்கள் வந்தோரை, தோழர் முத் தரசன் கீழே நின்று நுழைவு வாயிலில் வரவேற்று அழைக்க,
அங்கே தோழர் அய்யா நல்ல கண்ணு, தோழர் தா. பாண்டியன், சி.மகேந்திரன், வீரபாண்டியன், ஏழுமலை போன்ற தோழர்கள் அழைத்துச் சென்று, மண மக்களுக்கு வாழ்த்துச் சொல்ல உதவினர்.
திரும்பும்போது எல்லோருக்கும் நன்றி கூறும் ஒரு கையடக்கப் பை! அதில் புரட்சி சின்னம் உள்ளே  ஆலன் உட்ஸ் எழுதிய சோசலிசம் என்ற நூலும், ஒரு எழுதுகோல் மணமக்கள் பெயர் பொறித்தது.
எத்தனையோ திருமண வரவேற் புகள் என்ற ஆடம்பரப் பாலைவனத் தில், எளிமையே இனிமை - எடுத்துக் காட்டு என்ற ஒயாசிஸ் இந்த மண வரவேற்பு!
நூல் அளிப்பதை சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் முன் னோடியாக இருந்து தாம்பூல முறை யில் புரட்சி செய்தது; தோழர்களும் இப்படிப்பட்ட முறையைக் கடைப் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது!
வசதியிருந்தாலும் வாரி இறைக்க வேண்டுமா என்ன? அதை கல்வி, மருத்துவத் தொண்டறத்திற்கு உதவி மணமக்கள் பெயரைப் போடலாமே!
வாழ்க மணமக்கள் - வருக இந்த எளிமை இனிமை.
தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பிஜேபியின் சாணிப் புத்தி


மத்தியிலும், சில மாநிலங்களிலும் பிஜேபி ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் போதும் மக்கள்                     அனுபவிக்குதுயரங்களும் போதும் - போதும் என்கிற நிலைக்குக் கீழிறக்கத்திற்கு வேக வேகமாகச சென்று கொண்டு இருக்கிறது.
மாட்டுக்கறியைச் சாப்பிடக் கூடாது என்றார்கள் - அதனைத் தொடர்ந்து இப்பொழுது அரசு மருத்துவ மனைகளில் கிருமிகளைக் கொல்லுவதற்கு (Disinfectant) கிருமி நாசினியாக இதுவரை விஞ்ஞான ரீதியாகப் பயன்படுத்தி வந்த பினைல் டெட்டால் போன்ற மருந்து களுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தை (அதில்கூட பசு மூத்திரத்தை) பயன்படுத்த வேண்டும் என்று ராஜஸ் தானில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிஜேபி அரசு சுற்றறிக்கை விட்டுள்ளது என்பது மிகப் பெரிய அதிர்ச் சியான செய்தியாகும். முதற்கட்டமாக ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப் படுமாம்.
எதில் பரிசோதனை? நோய் வாய்ப்பட்ட மக்களின் உயிரோடு விளையாடிப் பார்க்க விரும்புகிறார்களா? இது ஒரு வகையான விஷப் பரிட்சை Acid Test)
அல்லவா!
இந்த மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்திய காரணத் தால் நோயாளிகள் தொற்றுநோய்க்கு ஆளாகி மரணிக்க நேர்ந்தால் அதற்கான பொறுப்பினை ராஜஸ்தான் அரசு ஏற்றுக் கொள்ளுமா? அப்படியே ஏற்றுக் கொண்டாலும் போன உயிரைத் திருப்பிக் கொடுப்பார்களா?
அரசாங்கங்கள் ஒன்றைத் தயாராக வைத்துக் கொண்டிருக்கின்றன. எதற்கெடுத்தாலும் இழப்பீடு என்பதுதான் அந்தக் கை வந்தகலை!
எதையும் விலை பேசி விடலாம் என்பது எவ் வளவுக் கேவலமானது மனித உயிரைத் துச்சமாகக் கருதக் கூடியது.
1870ஆம் ஆண்டிலே என்ன நடந்தது? இந்தியக் கிராமங்களில் குழந்தைகளுக்குத் தொடர்ந்து சுவாசம் தொடர்பான கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவதற்குக் காரணமே வீடுகளில் தெளிக்கப்படும் சாணமும், மாட்டு மூத்திரமும்தான் என்று அறிவியல் ரீதியாகக் கண்டறியப்பட்டு, மாட்டுச் சாணத்தையும், மாட்டு மூத்திரத்தையும் தவிர்க்குமாறு ஆங்கில அரசு விளம்பரங்கள் மூலமாகவே நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
பிஜேபி ஆளும் ராஜஸ்தான் அரசு மேற்கொள்ள விருக்கும் இந்த அஞ்ஞான நடவடிக்கையில் மருத் துவத் துறை உடனடியாக தலையிட்டாக வேண்டும்; ஏனெனில் இது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை உயிர்ப் பிரச்சினை.
இவர்கள் மேற்கொள்ளும் இந்த முறையை விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அது வரை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு அறுவைச் சிகிச்சைப் பிரிவுகளில் மாட்டு மூத்திரத்தைத் தெளிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
பிஜேபியின் அபிமான சாமியாரான ராம்தேவ் என்பவர் ஒரு மருந்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்தார். அவர் உற்பத்தி செய்யும் அந்த மருந்தை வாங்கிச் சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இது விஞ்ஞானப் பூர்வமான வகையில் ஏற்றுக் கொள்ளப் படக் கூடிய ஒன்றா?
செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருக்கிறது. பனி உறைந்த நிலை காணப்படுகிறது - எனவே மனிதர்கள் வசிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது - நிலா உலகில் வாழலாம் என்கிற அளவுக்கு அறிவியல் உச்ச நிலை யில் உலா வரும் கால கட்டத்தில் இப்பொழுது போய், மாட்டுச் சாணி, மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்துங்கள் என்று சொல்லுவது - மனிதன் இன்னும் காட்டு விலங் காண்டிக் காலத்தில் சஞ்சரிக்க ஆசைப்படுவதாகத்தான் பொருள்படும்.
பக்ரா நங்கல் அணை கட்டப்பட்டு, அதற்கான திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் - இவைதாம் நமது உண்மையான கோவில்கள் மற்றவையல்ல  - நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறியதோடு அவர் நிற்கவில்லை We are not living in the Cow Dung Age
(நாம் சாணியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வில்லை என்று) - நம்மிடையே நிலவும் மூடநம்பிக்கைப் புத்தியையும் ஒரு தட்டுத் தட்டி விட்டார்.
நேரு போன்ற பிரதமர் இருந்த இடத்தில் தான் மாட்டு மூத்திரப் புத்தியோடு ஆட்சிக் கட்டிலில் அமர்பவர்களும் இருக்கிறார்களே, என்ன சொல்ல!
இவ்வளவுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) ) பிரிவு மக்களிடையே விஞ்ஞான மனப் பான்மையை வளர்ப்பது- ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று வலியுறுத்துகிறது. ஆனால் பிஜேபி ஆட் சியாளரோ மாட்டு மூத்திரத்திலும் மாட்டுச் சாணியிலும் விஞ்ஞானத்தைத் தேடிக் கொண்டு திரிகிறார்கள்.
பொதுவாக இந்துத்துவாவாதிகள் என்பவர்கள் பழைமை விரும்பிகள்தான் முற்போக்கான பாதையில் அவர்களின் சிந்தனைகள் பயணிக்காது.
மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் என்று மாட்டிலிருந்து கிடைக்கும் அய்ந்து பொருள் களையும் ஒரு கலக்குக் கலக்கி அதற்குப் பஞ்சகவ்யம் என்ற நாமகரணமும் சூட்டி, பக்தி நோயால் பாதிக்கப் பட்ட மக்களை பார்ப்பனப் புரோகிதர்கள் குடிக்கச் செய் வதில்லையா! அப்படிக் குடிப்பவர்களிடம் தட்சிணை யையும் கணிசமான அளவுக்குக் கறந்து கொள்வ தில்லையா!
விவேகானந்தர் ஒரு முறை இந்துத்துவாவாதி களைப் பார்த்துக் கூறியதுபோல பசுவைத் தாயாகக் கொண்டவர்களுக்கு அந்த மாட்டுப் புத்தி தானே இருக்கும்?
மக்களிடம் பகுத்தறிவுச் சிந்தனை இல்லை என்றால் மிகப் பெரிய ஆபத்துதான் - வீண் சங்கடங்கள் தான்

அரசு அதிகாரிகளின் தற்கொலைப் பட்டியல் நீண்டு கொண்டே இருப்பது தமிழக அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது!

அரசு அதிகாரிகளின் தற்கொலைப் பட்டியல்  நீண்டு கொண்டே இருப்பது தமிழக அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது!

தமிழர் தலைவர் பேட்டி
நாகுடி, செப்.21- தமிழக அரசு அதிகாரிகளின் தற்கொலைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்வது இந்த அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
20.9.2015 அன்று புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
மத்திய அரசுக்கு வலியுறுத்தவேண்டும்!
நடுவர் மன்றத் தீர்ப்பின்படி நம்முடைய காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான நீர்வரத்து கருநாடக அரசு மறுத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், கருநாடக அரசைப் பார்த்து ஒவ்வொரு முறையும் நாம் மனு போட்டு கேட்டுக் கொண்டிருப்பதைவிட, அடிப்படையில் தெளிவாக செய்யவேண்டியது - தமிழகத்தில் உள்ள அத்துணை கட்சிகளும் சேர்ந்து தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தி, ஏன் இன்னமும் டில்லி மேல்முறையீட்டு மன்றத்தை - உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்து, பல ஆண்டுகள் ஆன பிறகும்கூட, அதனை இன்னமும் நடைமுறைக்குக் கொண்டு வராமல் மத்திய அரசு இருக்கவேண்டும்? இதனை வலியுறுத்த அத்துணை இயக்க நண்பர்களும், தலைவர்களும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
இதனை வலியுறுத்தினாலே, அதனுடைய கடமையை அது தாராளமாகச் செய்யும். அந்த வாய்ப்பை உரு வாக்கவேண்டும்.
அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் அழுத்தம் தரவேண்டும்!
அதுபோலவே, ஈழத்தில் நடந்த இனப்படு கொலையைப்பற்றி விசாரிக்க சர்வதேச விசாரணை  தேவை. தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர் களால் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மற்ற கட்சித் தலைவர்களால் வரவேற்கப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசு அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் அழுத்தம் தரக்கூடிய அளவிற்கு, அய்.நா. சபையில், மனித உரிமை அமைப்பில் அதற்கு வேண்டிய உரிய முயற்சியை எடுக்கவேண்டும்.
ஏற்கெனவே முதலமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய அந்தத் தீர்மானத்தில், அய்ந்து முறை பல்வேறு செய்திகளைச் சொல்லியிருக்கிறோம் என்று சொன்னார்கள். அய்ந்து முறை பல்வேறு செய்திகளைச் சொல்லியிருந்தாலும், எது செயல்படுத்தப் பட்டிருக்கிறது என்பது இன்னும் தெரியாத சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, அந்த சூழ்நிலைக்கு அழுத்தம் தரக்கூடிய கடமை நம் எல்லோருக்கும் உண்டு. ஆகவே, இந்தப் பிரச்சினையில் மீண்டும் மீண்டும் கடிதம், தீர்மானங்களோடு நிறுத்திவிடாமல், மத்திய அரசுக்கு அனைவரும் ஒத்த குரலில் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்பது மிகமிக முக்கியமாகும்.
பகுத்தறிவு பூமியில் நரபலியா...?
அதுபோன்று, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நரபலி என்கிற சொல்லைக் கேட்கும்போதே அருவருப்பாக இருக்கின்றது. இந்தப் பகுத்தறிவு பூமியில் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பது மிகமிக வேதனைக்கும், வெட் கப்படக்கூடிய  சூழ்நிலையாகும். இதற்குரிய நடவடிக் கைகளை தெளிவாக எடுக்கவேண்டிய கடமை மாநில அரசுக்கு இருக்கிறது. அதற்காகப் பதில் சொல்லவேண்டிய கடமையும் இருக்கிறது. அதனை உறுதியாகச் செய்ய வேண்டும். நாடு போகின்ற போக்கில், மிகத் தெளிவாக இந்தச் செய்திகளை உருவாக்கிக் காட்டவேண்டியது மிகப்பெரிய பொறுப்பாகும்.
அரசு அதிகாரிகள் தற்கொலை
மாநில அரசு அதிகாரிகள் தற்கொலை பட்டியல் நீண்டு கொண்டே இருப்பது இந்த அரசுக்குப் பெருமை தருவ தல்ல. எனவே, அதற்குத் தகுந்த விளக்கமும், மாற்றமும் தேவை. அதுகுறித்து மக்களுக்கு ஒரு தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியமாகும்.
கட்சி மாறுதலைத் தடுக்காத சட்டம் இருக்கும்வரை...
செய்தியாளர்:தேர்தல் நெருங்கி விட்டாலே,  திராவிட கட்சியில் உள்ளவர்கள் கட்சி
மாறுகிறார்களே அதுபற்றி...?
தமிழர் தலைவர்: கட்சி மாறுதலைத் தடுக்காத சட்டம் இருக்கின்ற வரையில், கட்சிகள் மாறுகிறார்கள். கட்சி மாறுவது கூடாது என்று சொன்னால், கட்சிகளை உரு வாக்குவார்கள்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Thursday, September 10, 2015

இறைச்சி உணவிற்கு மும்பையில் தடையா?

மும்பையில் ஜைன மதத்தினரின் நோன்புக் காலத்தில் மும்பை, தானே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  இம்மாதம் 10 முதல் 18 ஆம் தேதிவரை மாமிச உணவுகள் முற்றிலும் விற்கக்கூடாது என்று மும்பை, தானே மாநகராட்சி சுற்றறிக்கை விட்டுள்ளது.   மும்பை தானே நகரில் பெரும் தொழில் நிறுவனங்களை நடத்திவரும் ஜைன மதத்தினர் வெறும் 1.3  விழுக்காடு மட்டுமே வாழ்கின்றனர்.  
செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதிமுதல் 18 ஆம் தேதிவரை ஜைனர்களுக்கான நோன்பு நாட்கள் ஆகும். இந்த நோன்பு நாட்களை முன்னிட்டு மும்பை மற்றும் தானே மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு வெட்டுதல், கோழி வெட்டுதல், இவற்றின் இறைச்சியை விற்பது, பொது இடங்களில் அசைவ உணவு பரிமாறுவது, அசைவ உணவுகளை வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மும்பை மற்றும் தானே மாநகராட்சிக்கு கொண்டு வருவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. 
இந்த தடை உத்தரவு குறித்து மும்பை, தானே மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறியுள்ளதாவது, பெருகிவரும் ஜைன மக்களின் விருப்பத்தையும், கோரிக்கையையும் நிறைவேற்றவே இந்த தடை விதிக்கப்படுவதாகவும் இதை மீறி இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள குரோஷி இன மக்கள், இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் நாங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். ஏற்கனவே மாட்டிறைச்சித் தடையால் எங்களில் பெரும் பாலானோர் வேலைவாய்ப்பை இழந்து  தவிக்கின்றனர். இந்த நிலையில் இது போன்ற தடைகளால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம், இந்தத் தடையை நீக்க வேண்டும் என மும்பை மேயரை சந்தித்து முறையிடுவோம் எனக் கூறினர்.
அப்படி மேயர் எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடவேண்டிவரும்.  போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மும்பை மாநகராட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை சரியானதல்ல என்று கூறிய அவர்கள்  சீக்கியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் அனைவருமே இங்கு சிறுபான்மை இனத்தவர்கள்தான். நாம் அவர்கள் அனைவருக்கும் மதிப்பளிக்க வேண்டும். இந்நிலையில், அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என கட்டுப்படுத்தும் இந்த தடையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினர்.
ஜெயின் சமூகத்தினர் மண்ணுக்குக் கீழே விளையும் எந்தப் பொருளையும் உண்ண மாட்டார்கள். அதற்காக அவற்றையும் தடை செய்வார்களோ!
சிவசேனா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ரவுத் கூறியபோது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டும் திருப்திப்படுத்த நினைக்காமல் அரசியலமைப்புச் சட்டத்துக்கு மதிப்பளித்து மும்பை மாநகராட்சியின் நிர்வாகம் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மும்பை, தானே இரண்டு மாநகராட்சிகளையும் சிவசேனா, பாஜக கூட்டணி நிர்வாகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாநிலத்தில் ஏற்கனவே மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை மீறினால் 5 ஆண்டுகள் சிறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்படும். அந்தத் தடையின் காரணமாக பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையில் மண்ணள்ளிப் போடப்பட்டு விட்டது. இப்பொழுது போதும் போதாதற்கு மாட்டிறைச்சி மட்டுமல்ல. 9 நாட்களுக்கு ஆடு, கோழி, மீன் என்று கூறப்படும் எந்த அசைவு உணவும் பயன்படுத்தப்படக் கூடாது; அதற்கான தொழிலை நடத்தக் கூடாது என்பது கடைந்தெடுத்த காட்டு விலங்காண்டித்தனமான அடக்கு முறை அராஜக ஆணையாகும்.
உணவுப் பழக்கம் என்பது தனி மனிதரின் உரிமையைச் சேர்ந்தது. அதில் மூக்கினை நுழைக்க யாருக்கும் உரிமை வழங்கப்படவில்லை.
குடிமக்களின் மூன்று வேளை உணவுக்கு உத்தர வாதம் செய்ய வக்கற்ற அரசு, தனி மனிதன் உண்ணக் கூடிய உணவு விடயத்தில் அத்துமீறி நுழைவது சட்ட விரோதமும், மனித விரோதமும் ஆகும்.
மத்திய பிஜேபி ஆட்சி வந்ததும் வராததுமாக அது தன்னுடைய ஹிந்துத்துவா நாற்றமெடுத்த நிகழ்ச்சி நிரலை வலுக்கட்டாயமாகத் திணிப்பதிலேயே மூர்க்கத் தனத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.
வெகு மக்கள் கிளர்ச்சியின் மூலமாகத்தான் இந்த ஹிந்துத்துவா பாசிச சக்திகளை அடக்க முடியும். மிதிக்க மிதிக்க புழுவும் புலியாகும் என்பது இயற்கை நியதி;  அதனை பிஜேபியும் அதன் சங்பரிவார்களும் உணரத் தவறினால் அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும் என்று எச்சரிக்கின்றோம்.
மாட்டிறைச்சித் தடையை அகில இந்திய அளவில் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு விரிவு படுத்தும்போது இதன் தன்மை என்னவென்று அப் பொழுது கண்டிப்பாகவே புரிந்து விடும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...