Sunday, August 16, 2009

தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா பேட்டி


பெரியாரின் கருத்துகளைப் படித்த பிறகுதான் வாழ்வில் எதிர்நீச்சல் போட கற்றுக் கொண்டேன்
தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா பேட்டி

பெரியாரின் கருத்தை படித்த பிறகுதான் வாழ்க்கை போகிற போக்கில் வாழாமல், எதிர்த்து நின்று வாழ்ந்திட எண்ணினேன். எதிர்க்கேள்வி கேட்பது, எதிர் சிந்தனை உருவாவது என இதுபோன்ற விசயங்களில் பெரிய ஒரு தாக்கத்தையும், மாற்றத்தையும் உண்டாக்கியது. வீட்டிலேயே இருந்துவிட்டு, திருமணம், குழந்தைகள் என்று போய்விடுவதுதான் வாழ்க்கை என்பதைத்தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள எனக்கு உடன்பாடில்லை.

பெண்ணுரிமைக்காக எவ்வளவோ பெண்கள் போராடியிருக்கிறார்கள் உலகெங்கும். ஆனால் ஓர் ஆணாகப் பிறந்து, தந்தை பெரியார் அவர்கள் போராடிய அளவுக்கு, சிந்தித்த அள-வுக்கு உலகில் எந்தச் சிந்தனை-யாளரும் எழுதியதோ, பேசியதோ, போராடியதோ, அதில் வெற்றி பெற்றோ இருப்பதாக நமக்குத் தெரிய-வில்லை. உலகில் எந்த மூலையில் பெண்களுக்கு எதிரான ஆதிக்கம் நிலைத்தாலும் பெரியாரின் பெண்ணு ரிமைச் சிந்தனைதான் அடிமை விலங்கொடிக்கக் கிடைத்த மிகப்பெரும் அறிவாயுதம். இதி-லிருந்து விடுபட்ட, விடுதலையான பெண்கள் இன்று சமூக விரோத மான கட்டுப்பாடுகளை உடைத்-தெறிந்து சகல துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். இசுலாமிய மதத்தில் பிறந்திருந்தும், ஒன்பதாம் வகுப்புவரை மட்டுமே படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்திருந்தும், தடைகள் பல தாண்டி, தளராத முயற்சியுடன் தொடர்ந்து பல்வேறு புத்தகங் களையும், பெரியாரின் அறிவுக் கருத்-துகளையும் படித்து, தன்னை சிறந்த கவிஞராக, மக்கள் பிரதிநிதியாக, எழுத்தாளராக இன்று மாநிலம் தழுவிய தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் எனும் முக்கிய பொறுப்பில் அமர்த்தக்கூடிய அளவுக்கு தயார் படுத்திக் கொண்டவரும், கவிஞர் சல்மா என்று நம் அனைவராலும் அறியப்பட்டவருமான சல்மா அவர்களுடன் விடுதலை விருந்தினர் பக்கத்திற்காக நேரடி சந்திப்பிலிருந்து.....

உங்களுக்கு கவிஞர், எழுத்தாளர், மக்கள் பிரதிநிதி, சமூகநலவாரிய தலைவர் என பல முகங்கள் இருக்-கின்றன. அடிப்படையில் தாங்கள் எப்படி இந்நிலையை அடைந்தீர்கள் என நாம் கேட்டபோது அதற்கு கவி-ஞர் சல்மா அளித்த பதிலிலிருந்து.....

திருச்சி மாவட்டம்-- துவரங் குறிச்சிதான் நான் பிறந்தது படித்தது எல்லாமே. பொதுவாக கிராமங்களில் கல்வியின் நிலை எப்படி இருக்கு மென்று நமக்குத் தெரியும். அவ்வள-வாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். அதிலும் இசுலாமியக் குடும்பங்களில் பெரிய அளவுக்கு கல்வியில் ஆர்வம் காட்டியதில்லை. எனக்கும் அதே போல 9-- ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கிடைத்தது. திருமணம் வரைக்கும் வீட்டில் இருக்க வேண்டிய சூழல். எனக்குக் கிடைத்த நேரத்தில் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம். முக்கியமாக பக்கத்-தில் இருந்த ஒரு நூலகத்தில் அதிகம் படித்தேன். எவ்வளவோ புத்தகங் களை நான் படித்திருந்தாலும் கூட, பெரியாருடைய கருத்துகள் என்னை இளம்வயதில் மிகவும் பாதித்தது என்றே சொல்ல வேண்டும். இது வரை சரி என்று நம்பிக் கொண்டி-ருந்த ஒரு விசயத்தை பெரியார் தவறு சொல்வார். புனிதத் தன்மையாக நம் பிக்கொண்டிருந்த ஒரு விசயத்தை மறுப்பார். திருமணம், தாலி போன் றவை பெண்ணடிமைத் தனம் என் பது அன்றாட வாழ்வில் இருப்பது நமக்கு தெரியவில்லை. அனைத்-தையுமே மறுபரிசீலனைக்கு உட்-படுத்துவார். இதுவா, இப்படியா என கட்டுகளை உடைப்பதற்கு அய்யா தூண்டினார்.

பெரியாரின் கருத்தை படித்த பிறகுதான் வாழ்க்கை போகிற போக்கில் வாழாமல், எதிர்த்து நின்று வாழ்ந்திட எண்ணினேன். எதிர்க் கேள்வி கேட்பது, எதிர் சிந்தனை உருவாவது என இதுபோன்ற விசயங்-களில் பெரிய ஒரு தாக்கத்தையும், மாற்றத்தையும் உண்டாக்கியது. வீட்டிலேயே இருந்துவிட்டு, திரு மணம், குழந்தைகள் என்று போய் விடுவதுதான் வாழ்க்கை என்பதைத் தான் எல்லோரும் வாழ்ந்து கொண்-டிருக்கிறார்கள். இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள எனக்கு உடன் பாடில்லை. எனக்கு என்று சில தனித் தன்மைகள் இருக்க வேண்-டுமென நினைத்தேன். வாசிப்பதில் இருந்த ஆர்வத்தினால் எனக்கு இந்த சமூகத்தின் மீதிருந்த பார்வைகள், விமர்சனங்களை எழுதத் தொடங்-கினேன். கவிதைகளாக அது வந்தது. என்னுடைய கவிதைகள் எல்லாமே பெண்ணடிமைத் தனத்திற்கு எதி-ரான கருத்துகள் தான். எனக்கு அப்-போது வயது 16தான்.திருச்சியிலிருந்து வெளி-வந்த சில இதழ்களில் வெளியாகின. அதில் கிடைத்த வரவேற்பின் மூலம் மேலும் எழுதத் தொடங்கினேன். என்னுடைய எழுத்துக்களும்--- தற்-செயலாக நிகழ்ந்த அரசியல் பிர-வேசமும்தான் என்னை உயர்த்-தியது. திருமணத்திற்கு பின்பும் எழுதினேன். முற்போக்கு கருத்துகளை எழுதிய-தால் குடும்பத் திலும் சரி, சமூகத்திலும் சரி பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு நான் நிறைய போராட வேண்டியி-ருந்தது. எதிர்கொள்ள நிறைய மன-வலிமை தேவைப்பட்டது. என் வீட்டிலேயே நான் எழுதக்கூடாது என்று தடை போடப்பட்டது. தலை-வர் கலைஞர் அவர்கள் நான் சட்ட-மன்ற தேர்தலில் தோற்று வந்-தாலும், சந்தித்த போது மனம்-தளராதே என்று ஆறுதல் கொடுத்-தார். தளர மாட்டாய்-- என்றும் சொன்-னார்-- என்று பெருமைப்படுகிறார் சல்மா.
மேலும் பெண்ணடிமைத்தனம் அதிகமாக இசுலாமிய மதத்தில் காணப்படுவதாக எழும் குற்றச்சாற்று பற்றி நாம் வினவியபோது, கவிஞர் சல்மா அளித்த பதில் வருமாறு.

பெண்ணடிமைத்தனம் எல்லா மதத்திலும் இருக்கிறது. பார்ப்பனப் பெண்களில் கூட விதவைகள் இருக்கிறார்கள். ஆனால் இசுலாமிய மதத்தில் விதவைகள் திருமணம், பெண்களுக்கு சொத்துரிமை என நல்ல விசயங்கள் உள்ளன. நபிகள் நாயகத்தின் மனைவிகூட ஏற்கெனவே விதவையாகவும், வாணிகத்திலும் இருந்திருக்கிறார்.அவரைத்தான் நபிகள் நாயகம் திருமணம் செய்தார். இதற்காக நான் நியாயப்படுத்துவதாக நினைக்கக் கூடாது. மேற்கத்திய இசுலாமிய நாடுகளில் இருக்கும் பெண்களுக்கான சதந்திரம் கூட நமது நாட்டில் இல்லை. இது மதத் தினை வழி நடத்துபவர்கள் சிந்திக்க வேண்டிய விசயம். நம் நாட்டில் பெண்-களை வேலைக்கு அனுப்பக் கூட யோசிக்கிறார்கள். எதிர்காலத்-தில் இது போன்ற நிலைகளில் மறு பரிசிலனை செய்தால் சமூகத்தில் இசுலாமிய மதத்தின் மீது மரியாதை கூடுதலாகும். எல்லா மதங்களும், சமூகக் கட்டுப்பாடுகளும் பெண்ணை ஒரு பொருளாகவே பார்க்கின்றன. இதிலிருந்து சமூகம் விடுபட பெரி-யாரியல் மட்டுமே உதவும் என்கிறார் கவிஞர் சல்மா. அவரிடத்தில் , மென்-மேலும் பல சாதனைகள் தொடர்ந்-திட வாழ்த்துகளைக் கூறி விடை-பெற்றோம்.

நேர்காணல்: நம்பியூர் சென்னியப்பன்

தமிழ்த் தாய்க்குக் கோயிலா?


தமிழ்த் தாய்க்குக் கோயிலா?
மின்சாரம்

தந்தை பெரியார் மட்டுமல்ல; புத்தர் முதல் காந்தியார் வரை கோயிலைப்-பற்றி நிரம்பவே கூறியிருக்கிறார்கள்.

இங்கு என்ன கோயிலுக்கா பஞ்சம்? தடுக்கி விழுந்தால் தம்பிரான்களும், தண்டபாணி கோயில்களும்தானே!

ஒரு கொள்கையை அழிக்க வேண்-டும் என்றால் அதைக் கோயிலாக்கி-விடலாம். அதில் கடவுளாகவும் குந்த வைத்து விடலாம்.

புத்தறிவைப் புகட்டியவன் அல்லவா புத்தன். தந்தை பெரியார் சொன்ன முறை-யில் புத்தியைப் பயன்படுத்தியதால் அல்லவா அவன் புத்தனானான்.

சிந்தனை என்பது செத்துப் போய் கடந்த ஒரு கால கட்டத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன் மன்னவன் குலத்-திலே தோன்றிய அந்தக் கோமகன் கொளுத்திய சிந்தனைத் தீயிலே பார்ப்பனியத்தின் வேதப் பருப்பும் சாஸ்திர சரக்கும், யாகப் புரட்டும் வெந்து சாம்பலாயின. வருணக் கொடுமையால் வாட்டி வதைத்த ஆரியத்தை கருணைவழியும் அறிவுத் திறவுகோலால் அஸ்தமிக்க செய்த - _ அரச குலத்தில் உதித்த ஆசான் புத்தன்.

அந்தப் புத்தனை மகாவிஷ்ணுவின் அவதாரமாக்கி அதற்குப் பிறகு கட-வுளாகவே ஆக்கிக் கோயில் கட்டியதன் பலன்- _ அதோ முப்பது கல் தொலை-வில் தெரிகிறதே இலங்கைத் தீவு அங்கே கடவுளாகச் செதுக்கப்-பட்ட புத்-தரின் உருவச் சிலைகள் எல்-லாம் மனித ரத்தத்தால் குளிப்பாட்-டப்படுகின்றன. கோயிலானால் கர்ப்பக் கிரகத்-துக்குள் கடவுளாகக் குந்தினால் நித்தம் நித்தம் அபிஷேகம் கேட்குமே! புத்தன் போதித்த போதனைகள் என்ன, யாருக்குத் தெரியும்? சித்தார்த்-தன் வெளியிட்ட சிந்தனைக் கருவூலங்-கள் என்ன? எந்த கடையில் கிடைக்கும்?

புத்தன் ஒரு மனிதன் என்று சொன்னாலே புருவத்தை உயர்த்-துகிறார்கள் _ சிந்தனையாளன் என்று சொன்னால் சீற்றம் கொள்-கிறார்கள் சீச்.. சீ.. கேவலம் புத்தன் ஒரு மனிதனா? இல்லை இல்லை _ இல்லவேயில்லை! அவன் கடவுள்; ஆம் கடவுளே தான் என்று ஆகாயத்-துக்கும் பூமிக்கும் குதிக்கும் ஒரு கூட்டம் உலகிலே தோன்றிவிட்டது.

கோயிலைக் கள்ளர்குகை என்று சொன்ன புத்தனுக்குக் கோயில்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் மந்திரகோஷங்கள்!

அருள்கூர்ந்து தமிழை தமிழாகப் பாருங்கள். தமிழனின் தாய்மொழி-யாக அணுகுங்கள் _ மூத்த இனத்தின் மொழி என்று மொழியுங்கள்.

மாறாக கோயில் எழுப்பாதீர்கள்; கடவுளாக்கி விடாதீர்கள்; தலபுரா-ணங்களை எழுதிக் குவித்து விடா-தீர்கள்.

ஏற்கெனவே தலபுராணங்கள் என்னும் கோயில் புராணங்கள் மண்-டிட கருவேல்முள் அடர்ந்த காட்-டுக்குள்ளே கிடக்கிறாள் தமிழன்னை.

பதினெண்-புராணங்களின் படை-நோயாக அவளை உருமாற்றிக் காட்டியிருக்-கிறார்கள். இதிகாச காச நோயின் பாதிப்-பாலும் ஈளை கட்டியிருக்கிறது.

இதிலிருந்து மீட்பதற்கே எவ்வளவு விலையைக் கொடுக்க நேர்ந்திருக்-கிறது. எத்தனை மாநாடுகளை நடத்த வேண்டியிருந்தது? எத்தனை எத்தனைத் தீர்மானங்கள் _ எத்தனை எத்தனை பேரணிகள்.

ஆரிய மேக நோயிலிருந்து தமிழைத் தடுத்தாட் கொள்ள தந்தை பெரியாரும் அவர்தம் சேனையும் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா?

மறுபடியும் தமிழுக்குப் பன்றிக் காய்ச்சலா? தஞ்சை மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த அன்பர்கள் தமிழ்த் தாய்க்குக் கோயில் எழுப்-புகிறார்களாம் என்ன கொடுமை இது!

வேறு பல இடங்களில் தமிழ்த் தாய்க்குக் கோயில் உண்டு -_ நாங்கள் எடுக்கும் தமிழ்த்தாய் கோயிலுக்கே கலசங்கள் வைக்கப் போகிறோம் என்று கலகலப்பாகப் பேசுகிறார்கள்.

நல்ல தமிழர்கள்தான் அவர்கள்; கடவுளாக்கிக் கோயில் எழுப்-பினால்தான் தமிழுக்குப் பெருமை என்ற தவறான கண்ணோட்டத்தால் தடுமாறியிருக்கிறார்கள்.

கோயில் கொள்ளை நோயின் குடியிருப்பு என்ற தத்துவத்தைப் புரிந்து கொண்டிருந்தால் தலை வைத்துப் படுத்திருக்க மாட்டார்கள் அந்தப் பக்கத்தில்.

தமிழுக்குச் செய்ய வேண்டிய தொண்டு இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

தமிழன் வீட்டுப் பிள்ளைகளின் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதமய-மாகிக் கிடக்கின்றன. தமிழன் ஊர்ப் பெயர்கள் எல்லாம் ஆரியமயமாக்-கப்பட்டு விட்டன.

தமிழர் கட்டிய கோயிலுக்குள் தமிழுக்குத் தனித்தன்மையான உரிமையில்லை; தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழனுக்கும் அங்கு உரிமை வந்து சேரவில்லை.

இன்னும் தமிழன் வீடுகளில் விவாஹசுப முகூர்த்தங்கள் நடக்-கின்றன; அங்குத் தமிழுக்கு மருந்-துக்கும் இடமில்லை.

இன்னும் கிரஹப்பிரவேசங்கள்-தான்! அங்கோ சமஸ்கிருத இரைச்-சல்தான்.

சஷ்டியப்த பூர்த்திகளும் தமிழர்-கள் இல்லத்தில்; சங்கத் தமிழுக்கு அங்கு இடம் உண்டா?

தீபாவளிகளும், கார்த்திகைகளும், விஜய தசமிகளும், சதுர்த்திகளும் சதுராட்டம் தமிழன் இல்லங்களில். இவற்றிற்கு விடை கொடுக்க வேங்கைகளாக எழ வேண்டிய நேரம்; வெண்தாடி வேந்தரின் விழுமிய கொள்கைகளை நெஞ்சில் தாங்கி நெடும் பயணத்தைத் தொடங்க வேண்டிய கால கட்டம்.

கட்டாய தமிழ்ப் படிப்பு என்று கூறி கனத்த குரலெழுப்பிடக் களம் காண வேண்டிய தருணம்.

பணிகள் நம்முன் பலப்பல! அதைவிட்டுவிட்டு வேண்டாத வேலை ஏன்?

தமிழ்த் தாய்க்குக் கோயில் கட்-டினால் அங்கும் அர்ச்சகன் _ பார்ப்-பான் வரக்கூடும். அர்ச்சனை மொழி-கூட அவாள் மொழியாகவே கோலோச்சும்.

கோயில் என்றால் காதை மூடு காத தூரத்தில் ஓடு! என்ற புரட்சிக் கவிஞனின் குரல் கேட்கவில்லையா!

தமிழுக்குத் தேவை உரிமை முரசம்; கலசமல்ல!

Friday, August 14, 2009

தகுதியில்லை என்று எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை வெளியேற்றுவதா?

தகுதியில்லை என்று எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை வெளியேற்றுவதா?
கூடுதலான பயிற்சி அளித்து அய்.அய்.டி. நிருவாகம் அவர்களை உயர்த்தவேண்டும்!
உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று
தமிழர் தலைவர் அறிக்கை
போதிய மதிப்பெண் கள் பெறவில்லை என்று கூறி டில்லி அய்.அய்.டி., யில் படித்த 5 மாணவர் கள் வெளியேற்றப்பட்ட தைக் கண்டித்தும், அதன் மீது தொடரப்பட்ட வழக் கில் உச்சநீதிமன்ற நீதிபதி கள் மூவர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய சமூக நீதிக்கு ஆதரவான தீர்ப் பினை வரவேற்றும் திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.அய்.டி., அய்.அய்.எம்., போன்ற மத்திய கல்வி நிறுவனங்-களை, பல்லாயிரக்கணக்-கான கோடி மக்கள் வரிப் பணத்தைக் கொட்டி, மத்திய அரசு நடத்தி வரு-கிறது. தகுதி, திறமைக்குப் பெயர் போனவர்களை மட்டும்தான் தேர்வு செய்-வது என்று கூறி, ஒடுக்-கப்பட்ட, தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட சமு-தாயத்தவர்களை அக்-கல்வி நிறுவனங்கள் உள்ளே நுழையவே அனுமதிப்-பதில்லை.

மக்கள் வரிப் பணத்தால் நடக்கும் நிறுவனங்கள்

மக்கள் தரும் வரிப்-பணத்தால் நடைபெறும் இத்தகைய நிறுவனங்கள் பார்ப்பன உயர்ஜாதிக்-காரர்களின் _ ஏகபோகக் கூடாரங்களாகி விட்டன. இந்நிலையே தொடர்ந்து இருந்து வருகின்றது. அதனை மாற்றிட இடை-யறாது அரசியல் களங்-களிலிருந்து நீதிமன்றத் தளங்கள்வரை தொடர் போராட்டங்கள் நம்மைப் போன்றவர்களால் நாளும் நடைபெற்றே வருகின்றன!

1951_லேயே திருத்தப்-பட்ட முதல் அரசியல் சட்டத் திருத்தத்தின்மூலம், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் கல்வி நிலையங்-கள் எவையானாலும் அவற்றில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவேண் டும் என்பது தெளிவாக்-கப்பட்டது.

ஆனால், இந்த அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தராமலேயே கடந்த 50 ஆண்டுகளுக்கு-மேலாக ஏமாற்றியே வந்தனர்; கேட்டால் தகுதி, திறமை பேசி வந்தனர்!

மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் சுமார் 25 விழுக்-காட்டினர் (எஸ்.சி., எஸ்.டி.,).

சுதந்திரத்துக்குப் பின்னும் அநீதி தொடர்வதா?

பிற்படுத்தப்பட்டவர்கள் 60 விழுக்காடு. இரண்டும் சேர்த்தால் 85 விழுக்காட்-டினர் ஆவர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் _ முன்பு மனு, மாந்தாதா காலத்திலிருந்தே கல்வி மறுக்கப்பட்டவர்களாக வைக்கப்பட்ட நிலை சுதந்திரத்திற்குப் பின்னும் தொடர்கிறது.

இதற்குப் பிறகு நமது இயக்கம் போன்றவை-களின் இடையறாத போராட்-டங்களுக்குப் பின்னரே, சற்று கதவு திறக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மலை-வாழ் மக்களுக்கான 22.5 சத-விகித ஒதுக்கீடு முழு-மையாக ஒருபோதும் அங்கே தரப்படவே இல்லை.

மத்தியில் இருந்த மனித வள மேம்-பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங் அவர்களின் முயற்சியால் மீண்டும் கூடு-தலாகச் சட்டத் திருத்தங்-கள் எல்லாம் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி பெற்று, இட ஒதுக்கீட்டுக்கு அந்த மத்திய கல்வி நிறு-வனங்களில் கதவு திறந்-தாலும், பிற்படுத்தப்பட்டவர்-களுக்கு 27 சதவிகிதத்தி-னையும் ஒரே அடியாக நிறைவேற்றாமல், ஆண்-டுக்கு 9 சதவிகிதம் என்ற முறையில் மூன்று ஆண்டு-களில் நிரப்புவது என்-கின்ற விசித்திர நிலையை ஏற்படுத்தி, அதற்குப் பிற-கும்கூட சமூகநீதிக்குப் பதி-லாக சமூக அநீதியே நடைமுறைப்படுத்தப் பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களைப் புறக்கணிக்கும் பார்ப்பனிய சக்திகள்

எஸ்.சி., எஸ்.டி., மாண-வர்களைச் சேர்த்து அவர்-களை தகுதி, திறமையற்ற-வர்கள் என்று முத்திரை குத்திடவும் திட்டமிட்ட ஏற்பாடுகள்; தேர்வுகளில் அவர்கள் மற்ற மாணவர்-களைப் போல வெற்றி பெற்று வர முடியவில்லை; ஆகவே, அவர்கள் தொடர்ந்து அய்.அய்.டி.,-யில் படித்துப் பட்டம் பெற்றவர்களாக வர முடி-யாத நிலையை அங்கே உள்ள பார்ப்பனிய உயர்-ஜாதி சக்திகள் செய்தன.

அவர்கள் குறைவான கிரேடு மார்க்குகள் வாங்-கினார்கள் என்று கூறி, அங்கிருந்து மேலும் படிக்க இயலாது வெளி-யேறும்படி ஒரு சதி-யையே நடத்தினர். சமூகநீதித் திட்டத்தை அமல்படுத்தி-யதைக் கண்டு வெறுப்பு-டன் நடந்து வருகின்றன _ இந்த ஆதிக்க சக்திகள்!

5 மாணவர்கள் தேர்-வில் குறைந்த கிரேடு பெற்ற காரணத்தினால் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து _ உச்சநீதிமன்-றத்-தில் வழக்குத் தொடர்ந்-தனர்.

அருமையான தீர்ப்பு

தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் ஜஸ்டிஸ் பி. சதாசிவம், ஜஸ்டிஸ் பி.எஸ். சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசா-ரித்து, அருமையான சமூக-நீதிப் பயணத்தில் மற்-றொரு முக்கிய மைல்கல் என்ற தீர்ப்பினை வழங்கி-யுள்ளது _ மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்!

பெஞ்ச் சார்பில் இத்-தீர்ப்பினை எழுதிய ஜஸ்-டீஸ் பி. சதாசிவம் அவர்-களின் சமூகநீதிப் பார்வை _ கோடானுகோடி தாழ்த்-தப்பட்ட, மலைவாழ் சமூ-கத்தவர் நன்றி கூறவேண்-டிய அருமையான தீர்ப்பு ஆகும்!

1. இதன்படி கிரேடு குறைவாக வாங்கினார்கள் என்று காரணம் காட்டி எஸ்.சி., எஸ்.டி., மாணவர்-களை அய்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்-கள் வெளியேற்றக் கூடாது; மாறாக, அவர்-களை உயர்த்தும் வகை-யில் தனியான பயிற்சி-களை அளித்து கைதூக்கி-விட வேண்டும்; கூடுத-லான சிறப்புப் பயிற்சி அளித்து பொது நிலை மாணவர்களோடு அவர்-கள் போட்டியிடக் கூடிய தன்னம்பிக்கையை ஆற்-றலை அளித்து கைதூக்கி-விடவேண்டும்.

2. தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு கிரிமீலேயர் (Creamy Layer) என்ற தடையும் இல்லை. பொருந்தாது என்பதால் அவர்களை மேம்பாடு அடையச் செய்யவேண்டும்.

3. இவர்களைப்பொறுத்தவரை குறைந்தபட்ச கட் ஆஃப் மார்க் (தகுதி மதிப்பெண்) பெற்றுத்தான் அவர்கள் அய்.அய்.டி.,யில் சேர்க்கப்-பட்டவர்கள். எனவே, அவர்களை குறைந்த கிரேடு வாங்கினார்கள் என்ற ஒரு செயற்கை வடிகட்டல் சூழ்ச்சி-களின் மூலம் வெளியேற்றக் கூடாது. 2006_07, 2007_08 ஆகிய இரு கல்வி ஆண்டுகளில் சேர்ந்த அந்த 5 தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள்பற்றி டெல்லி அய்.அய்.டி. நிருவாகம் நான்கு வார காலத்திற்குள் முடிவு செய்ய-வேண்டும் என்று ஓங்கி தலையில் குட்டியதைப்போல ஒரு பெருமை மிக்க தீர்ப்பினைத். (A Landmark Judgement) தந்துள்ளார்கள்!
இதற்கு முன்பு வந்த தீர்ப்பு
ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற ஒரு வழக்கு வந்தபோது, இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள சட்டத்-தின்முன் அனைவருமே சமம் என்ற அடிப்படையில் உள்ள Equality யை சாக்காகக் கொண்டு சம வாய்ப்பு (Article 14) விதிக்கு ஒடுக்கப்-பட்டவர்களுக்குத் தனி ஒதுக்கீடு அளிப்பது முரண் என்றெல்லாம் வாதாடியபோது, அன்றைய உச்சநீதி-மன்றத்தின் 3 நீதிபதிகள் ஜஸ்டிஸ் கஜேந்-திர கட்கர் (இவர் பார்ப்பனர்), ஜஸ்டிஸ் சுப்பாராவ், ஜஸ்டிஸ் ஹெக்டே ஆகிய மூவரும் இதுபற்றி மிக அரு-மையானதொரு தீர்ப்பை அளித்தனர். அரசுகள் பின்பற்றவேண்டிய நெறி-முறைகளான (Directive Principles of State Policy) கிக்ஷீவீநீறீமீ 46 என்பது சமூக அநீதிகளை அகற்றி சமூகநீதி தழைக்-கவும், பலவீனமான பிரிவு மக்களை முன்னேற்றவே புகுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலங்காலமாய் அழுத்தி வைக்கப்-பட்ட சமுதாய மக்களுக்கும், முன்னே-றியவர்களுக்கும் சம வாய்ப்புத் தருகி-றோம் என்று போட்டி போட வைத்தால், அது சம போட்டியாக இருக்காது என்ப-தைத் தெளிவுபடுத்தினர்.
மண்டல் அறிக்கை
கூறுவது என்ன?
மண்டல் பரிந்துரை அறிக்கையில் அருமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“There can be equality only among equals. There cannot be equality among unequals’’ என்று.
சம பலமில்லாதவர்களிடையே எப்படி சம போட்டி உருவாகும் என்று கேட்டனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டீஸ் கஜேந்திர கட்கர், ஜஸ்டீஸ் சுப்பாராவ், ஜஸ்டீஸ் ஹெக்டே ஆகிய மூவரது தீர்ப்பில் மிக அருமையான உதாரணத்தைச் சுட்டிக்காட்டியிருந்தனர். “....To make my point clear take the illustration of a horse race. Two horses are set down to run a race - one is a first class horse, the other ordinary one. Both are made to run from the same starting point. Though theoritically they are given equal opportunity to run the race; in practice the ordinary horse is not given an equal opportunity to compete with the race horse; indeed that is denied to it. So a handicap may be given either in the nature of extra weight or a start from a longer distance. By doing so, what would otherwise have been a farce of a competition would be made a real one.”
(ஜஸ்டிஸ் கே. சுப்பாராவ் தீர்ப்பு எழுதினார்).
இதன் தமிழாக்கம் வருமாறு:
எனது கருத்தைத் தெளிவுபடுத்த, ஒரு குதிரைப் பந்தயத்தினை எடுத்துக்-காட்டாக எடுத்துக் கொள்வோம். ஒரு பந்தயத்தில் ஓடுவதற்கு இரண்டு குதிரைகள் விடப்படுகின்றன. அவற்றில் ஒன்று உயர் தரம் வாய்ந்த பந்தயக் குதிரை; மற்றது சாதாரணமான குதிரை. ஒரே இடத்தில் இருந்து இரண்டு குதிரை-களும் புறப்படவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அவை இரண்டுக்-கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டது போன்று கருத்தளவில் தோன்றினாலும், நடைமுறையில் பந்தயக் குதிரையுடன் போட்டியிட சாதாரணக் குதிரைக்கு சம வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். சாதாரணக் குதிரைக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அதனால், பந்தயக் குதிரைக்கு கூடுதல் எடை அளிப்பதன் மூலமோ அல்லது சாதாரண குதிரை புறப்படும் இடத்-திலிருந்து ஒரு நீண்ட தொலைவில் இருந்து பந்தயக் குதிரையைப் புறப்பட வைப்பதன் மூலமோ, இந்த இரு குதிரைகளுக்கிடையே சம வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், போட்டி என்ற பெயரில் நடந்தேறும் ஒரு கேலிக்கூத்து என்ற நிலை மாறி உண்மையில் அது உண்மையான ஒரு போட்டி என்ற நிலையைப் பெற்றுவிடும்.
இதன்படி ரேஸ் குதிரையும், ஜட்கா வண்டிக் குதிரையும் ஒன்றாக குதிரை ரேசில் ஓட முடியுமா?
நோஞ்சான் பிள்ளைகளுக்குத்தான் போஷாக்குத் தேவை
அதைத்தான் சிறப்பாகச் சுட்டிக்காட்டி சமூகநீதி வழங்கி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு நோஞ்சான்கள், சவலைப்-பிள்ளைகள்மீது கூடுதலான அக்கறை செலுத்தி, போஷாக்குக் கொடுத்து, பலசாலிகளாக்கிடுவதுதானே தாய், தந்தையரின் கடமை? அதுபோலத்தான் அய்.அய்.டி.,யின் இயக்குநரும், மற்றவர்களும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு தனி சிறப்பு ஏற்பாடு செய்து முன்னேற்ற முயலவேண்டும் என்பது அவசியம், அவசரம்!
தலைவர்,
திராவிடர் கழகம்.


தகுதியில்லை என்று எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை வெளியேற்றுவதா?

தகுதியில்லை என்று எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை வெளியேற்றுவதா?
கூடுதலான பயிற்சி அளித்து அய்.அய்.டி. நிருவாகம் அவர்களை உயர்த்தவேண்டும்!
உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று
தமிழர் தலைவர் அறிக்கை
போதிய மதிப்பெண் கள் பெறவில்லை என்று கூறி டில்லி அய்.அய்.டி., யில் படித்த 5 மாணவர் கள் வெளியேற்றப்பட்ட தைக் கண்டித்தும், அதன் மீது தொடரப்பட்ட வழக் கில் உச்சநீதிமன்ற நீதிபதி கள் மூவர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய சமூக நீதிக்கு ஆதரவான தீர்ப் பினை வரவேற்றும் திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.அய்.டி., அய்.அய்.எம்., போன்ற மத்திய கல்வி நிறுவனங்-களை, பல்லாயிரக்கணக்-கான கோடி மக்கள் வரிப் பணத்தைக் கொட்டி, மத்திய அரசு நடத்தி வரு-கிறது. தகுதி, திறமைக்குப் பெயர் போனவர்களை மட்டும்தான் தேர்வு செய்-வது என்று கூறி, ஒடுக்-கப்பட்ட, தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட சமு-தாயத்தவர்களை அக்-கல்வி நிறுவனங்கள் உள்ளே நுழையவே அனுமதிப்-பதில்லை.

மக்கள் வரிப் பணத்தால் நடக்கும் நிறுவனங்கள்

மக்கள் தரும் வரிப்-பணத்தால் நடைபெறும் இத்தகைய நிறுவனங்கள் பார்ப்பன உயர்ஜாதிக்-காரர்களின் _ ஏகபோகக் கூடாரங்களாகி விட்டன. இந்நிலையே தொடர்ந்து இருந்து வருகின்றது. அதனை மாற்றிட இடை-யறாது அரசியல் களங்-களிலிருந்து நீதிமன்றத் தளங்கள்வரை தொடர் போராட்டங்கள் நம்மைப் போன்றவர்களால் நாளும் நடைபெற்றே வருகின்றன!

1951_லேயே திருத்தப்-பட்ட முதல் அரசியல் சட்டத் திருத்தத்தின்மூலம், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் கல்வி நிலையங்-கள் எவையானாலும் அவற்றில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவேண் டும் என்பது தெளிவாக்-கப்பட்டது.

ஆனால், இந்த அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தராமலேயே கடந்த 50 ஆண்டுகளுக்கு-மேலாக ஏமாற்றியே வந்தனர்; கேட்டால் தகுதி, திறமை பேசி வந்தனர்!

மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் சுமார் 25 விழுக்-காட்டினர் (எஸ்.சி., எஸ்.டி.,).

சுதந்திரத்துக்குப் பின்னும் அநீதி தொடர்வதா?

பிற்படுத்தப்பட்டவர்கள் 60 விழுக்காடு. இரண்டும் சேர்த்தால் 85 விழுக்காட்-டினர் ஆவர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் _ முன்பு மனு, மாந்தாதா காலத்திலிருந்தே கல்வி மறுக்கப்பட்டவர்களாக வைக்கப்பட்ட நிலை சுதந்திரத்திற்குப் பின்னும் தொடர்கிறது.

இதற்குப் பிறகு நமது இயக்கம் போன்றவை-களின் இடையறாத போராட்-டங்களுக்குப் பின்னரே, சற்று கதவு திறக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மலை-வாழ் மக்களுக்கான 22.5 சத-விகித ஒதுக்கீடு முழு-மையாக ஒருபோதும் அங்கே தரப்படவே இல்லை.

மத்தியில் இருந்த மனித வள மேம்-பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங் அவர்களின் முயற்சியால் மீண்டும் கூடு-தலாகச் சட்டத் திருத்தங்-கள் எல்லாம் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி பெற்று, இட ஒதுக்கீட்டுக்கு அந்த மத்திய கல்வி நிறு-வனங்களில் கதவு திறந்-தாலும், பிற்படுத்தப்பட்டவர்-களுக்கு 27 சதவிகிதத்தி-னையும் ஒரே அடியாக நிறைவேற்றாமல், ஆண்-டுக்கு 9 சதவிகிதம் என்ற முறையில் மூன்று ஆண்டு-களில் நிரப்புவது என்-கின்ற விசித்திர நிலையை ஏற்படுத்தி, அதற்குப் பிற-கும்கூட சமூகநீதிக்குப் பதி-லாக சமூக அநீதியே நடைமுறைப்படுத்தப் பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களைப் புறக்கணிக்கும் பார்ப்பனிய சக்திகள்

எஸ்.சி., எஸ்.டி., மாண-வர்களைச் சேர்த்து அவர்-களை தகுதி, திறமையற்ற-வர்கள் என்று முத்திரை குத்திடவும் திட்டமிட்ட ஏற்பாடுகள்; தேர்வுகளில் அவர்கள் மற்ற மாணவர்-களைப் போல வெற்றி பெற்று வர முடியவில்லை; ஆகவே, அவர்கள் தொடர்ந்து அய்.அய்.டி.,-யில் படித்துப் பட்டம் பெற்றவர்களாக வர முடி-யாத நிலையை அங்கே உள்ள பார்ப்பனிய உயர்-ஜாதி சக்திகள் செய்தன.

அவர்கள் குறைவான கிரேடு மார்க்குகள் வாங்-கினார்கள் என்று கூறி, அங்கிருந்து மேலும் படிக்க இயலாது வெளி-யேறும்படி ஒரு சதி-யையே நடத்தினர். சமூகநீதித் திட்டத்தை அமல்படுத்தி-யதைக் கண்டு வெறுப்பு-டன் நடந்து வருகின்றன _ இந்த ஆதிக்க சக்திகள்!

5 மாணவர்கள் தேர்-வில் குறைந்த கிரேடு பெற்ற காரணத்தினால் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து _ உச்சநீதிமன்-றத்-தில் வழக்குத் தொடர்ந்-தனர்.

அருமையான தீர்ப்பு

தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் ஜஸ்டிஸ் பி. சதாசிவம், ஜஸ்டிஸ் பி.எஸ். சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசா-ரித்து, அருமையான சமூக-நீதிப் பயணத்தில் மற்-றொரு முக்கிய மைல்கல் என்ற தீர்ப்பினை வழங்கி-யுள்ளது _ மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்!

பெஞ்ச் சார்பில் இத்-தீர்ப்பினை எழுதிய ஜஸ்-டீஸ் பி. சதாசிவம் அவர்-களின் சமூகநீதிப் பார்வை _ கோடானுகோடி தாழ்த்-தப்பட்ட, மலைவாழ் சமூ-கத்தவர் நன்றி கூறவேண்-டிய அருமையான தீர்ப்பு ஆகும்!

1. இதன்படி கிரேடு குறைவாக வாங்கினார்கள் என்று காரணம் காட்டி எஸ்.சி., எஸ்.டி., மாணவர்-களை அய்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்-கள் வெளியேற்றக் கூடாது; மாறாக, அவர்-களை உயர்த்தும் வகை-யில் தனியான பயிற்சி-களை அளித்து கைதூக்கி-விட வேண்டும்; கூடுத-லான சிறப்புப் பயிற்சி அளித்து பொது நிலை மாணவர்களோடு அவர்-கள் போட்டியிடக் கூடிய தன்னம்பிக்கையை ஆற்-றலை அளித்து கைதூக்கி-விடவேண்டும்.

2. தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு கிரிமீலேயர் (Creamy Layer) என்ற தடையும் இல்லை. பொருந்தாது என்பதால் அவர்களை மேம்பாடு அடையச் செய்யவேண்டும்.

3. இவர்களைப்பொறுத்தவரை குறைந்தபட்ச கட் ஆஃப் மார்க் (தகுதி மதிப்பெண்) பெற்றுத்தான் அவர்கள் அய்.அய்.டி.,யில் சேர்க்கப்-பட்டவர்கள். எனவே, அவர்களை குறைந்த கிரேடு வாங்கினார்கள் என்ற ஒரு செயற்கை வடிகட்டல் சூழ்ச்சி-களின் மூலம் வெளியேற்றக் கூடாது. 2006_07, 2007_08 ஆகிய இரு கல்வி ஆண்டுகளில் சேர்ந்த அந்த 5 தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள்பற்றி டெல்லி அய்.அய்.டி. நிருவாகம் நான்கு வார காலத்திற்குள் முடிவு செய்ய-வேண்டும் என்று ஓங்கி தலையில் குட்டியதைப்போல ஒரு பெருமை மிக்க தீர்ப்பினைத். (A Landmark Judgement) தந்துள்ளார்கள்!
இதற்கு முன்பு வந்த தீர்ப்பு
ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற ஒரு வழக்கு வந்தபோது, இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள சட்டத்-தின்முன் அனைவருமே சமம் என்ற அடிப்படையில் உள்ள Equality யை சாக்காகக் கொண்டு சம வாய்ப்பு (Article 14) விதிக்கு ஒடுக்கப்-பட்டவர்களுக்குத் தனி ஒதுக்கீடு அளிப்பது முரண் என்றெல்லாம் வாதாடியபோது, அன்றைய உச்சநீதி-மன்றத்தின் 3 நீதிபதிகள் ஜஸ்டிஸ் கஜேந்-திர கட்கர் (இவர் பார்ப்பனர்), ஜஸ்டிஸ் சுப்பாராவ், ஜஸ்டிஸ் ஹெக்டே ஆகிய மூவரும் இதுபற்றி மிக அரு-மையானதொரு தீர்ப்பை அளித்தனர். அரசுகள் பின்பற்றவேண்டிய நெறி-முறைகளான (Directive Principles of State Policy) கிக்ஷீவீநீறீமீ 46 என்பது சமூக அநீதிகளை அகற்றி சமூகநீதி தழைக்-கவும், பலவீனமான பிரிவு மக்களை முன்னேற்றவே புகுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலங்காலமாய் அழுத்தி வைக்கப்-பட்ட சமுதாய மக்களுக்கும், முன்னே-றியவர்களுக்கும் சம வாய்ப்புத் தருகி-றோம் என்று போட்டி போட வைத்தால், அது சம போட்டியாக இருக்காது என்ப-தைத் தெளிவுபடுத்தினர்.
மண்டல் அறிக்கை
கூறுவது என்ன?
மண்டல் பரிந்துரை அறிக்கையில் அருமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“There can be equality only among equals. There cannot be equality among unequals’’ என்று.
சம பலமில்லாதவர்களிடையே எப்படி சம போட்டி உருவாகும் என்று கேட்டனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டீஸ் கஜேந்திர கட்கர், ஜஸ்டீஸ் சுப்பாராவ், ஜஸ்டீஸ் ஹெக்டே ஆகிய மூவரது தீர்ப்பில் மிக அருமையான உதாரணத்தைச் சுட்டிக்காட்டியிருந்தனர். “....To make my point clear take the illustration of a horse race. Two horses are set down to run a race - one is a first class horse, the other ordinary one. Both are made to run from the same starting point. Though theoritically they are given equal opportunity to run the race; in practice the ordinary horse is not given an equal opportunity to compete with the race horse; indeed that is denied to it. So a handicap may be given either in the nature of extra weight or a start from a longer distance. By doing so, what would otherwise have been a farce of a competition would be made a real one.”
(ஜஸ்டிஸ் கே. சுப்பாராவ் தீர்ப்பு எழுதினார்).
இதன் தமிழாக்கம் வருமாறு:
எனது கருத்தைத் தெளிவுபடுத்த, ஒரு குதிரைப் பந்தயத்தினை எடுத்துக்-காட்டாக எடுத்துக் கொள்வோம். ஒரு பந்தயத்தில் ஓடுவதற்கு இரண்டு குதிரைகள் விடப்படுகின்றன. அவற்றில் ஒன்று உயர் தரம் வாய்ந்த பந்தயக் குதிரை; மற்றது சாதாரணமான குதிரை. ஒரே இடத்தில் இருந்து இரண்டு குதிரை-களும் புறப்படவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அவை இரண்டுக்-கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டது போன்று கருத்தளவில் தோன்றினாலும், நடைமுறையில் பந்தயக் குதிரையுடன் போட்டியிட சாதாரணக் குதிரைக்கு சம வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். சாதாரணக் குதிரைக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அதனால், பந்தயக் குதிரைக்கு கூடுதல் எடை அளிப்பதன் மூலமோ அல்லது சாதாரண குதிரை புறப்படும் இடத்-திலிருந்து ஒரு நீண்ட தொலைவில் இருந்து பந்தயக் குதிரையைப் புறப்பட வைப்பதன் மூலமோ, இந்த இரு குதிரைகளுக்கிடையே சம வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், போட்டி என்ற பெயரில் நடந்தேறும் ஒரு கேலிக்கூத்து என்ற நிலை மாறி உண்மையில் அது உண்மையான ஒரு போட்டி என்ற நிலையைப் பெற்றுவிடும்.
இதன்படி ரேஸ் குதிரையும், ஜட்கா வண்டிக் குதிரையும் ஒன்றாக குதிரை ரேசில் ஓட முடியுமா?
நோஞ்சான் பிள்ளைகளுக்குத்தான் போஷாக்குத் தேவை
அதைத்தான் சிறப்பாகச் சுட்டிக்காட்டி சமூகநீதி வழங்கி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு நோஞ்சான்கள், சவலைப்-பிள்ளைகள்மீது கூடுதலான அக்கறை செலுத்தி, போஷாக்குக் கொடுத்து, பலசாலிகளாக்கிடுவதுதானே தாய், தந்தையரின் கடமை? அதுபோலத்தான் அய்.அய்.டி.,யின் இயக்குநரும், மற்றவர்களும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு தனி சிறப்பு ஏற்பாடு செய்து முன்னேற்ற முயலவேண்டும் என்பது அவசியம், அவசரம்!
தலைவர்,
திராவிடர் கழகம்.

Thursday, July 9, 2009

அர்ச்சகர் - ஜோசியர் சம்பாஷணை



அர்ச்சகர்: என்ன ஜோசியரே, கோயிலுக்கு முன்போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் கஷ்டமாகவல்லவா இருக்கிறது.
ஜோசியர்: என்ன காரணம்?

அர்: இந்த எழவு எடுத்த சுயமரியாதைதான்.

ஜோ: சுயமரியாதை காரணம் என்றால், சுயமரியாதைக்காரர்கள் சாமி இல்லை பூதம் இல்லை என்று சொல்லி மக்களைக் கோயிலுக்குள் போகக் கூடாது என்று பிரச்சாரம் செய்கின்றார்களே, அதனாலா?

அர்: இல்லை இல்லை. அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை. இன்னமும் ஆயிரந்-தடவை வேண்டுமானாலும் சாமியில்லை; பூதமில்லை என்று சொல்லட்டும்; கோயிலை வேண்டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும். அதனால் நமக்கு ஒன்றும் கெட்டுப் போகாது.
ஜோ: மற்றென்ன காரணம் என்ன சொல்லுகிறீர்கள்?

அர்: கோயில்களுக்கு தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றி கண்டபடி பேசி அதை நிறுத்தி விட்டார்-களல்லவா, அதனால்தான்.
ஜோ: இதற்கும் பக்திக்கும் சம்பந்தமென்ன? இதனால் எல்லாம் மக்களுக்குக் கடவுள் பக்தி குறைந்து விடுமா?

அர்: கடவுள் பக்தி என்றால் என்ன என்கிறீர்! கடவுள் தான் எங்கும் நிறைந்தவ-ராயிற்றே; இதற்காக ஒரு மனிதன் கோயிலுக்கு வர வேண்டுமா?
ஜோ: மற்றெதற்காக வருகிறார்கள்?

அர்: இரண்டு காரியத்திற்காகத்தானே கோயிலுக்கு வருகின்றார்கள்:

1) தன்னை பக்திமான் என்று பிறர் மதிக்க வேண்டும்.

2) அங்கு வரும் நல்ல பெண்களை ஆண்கள் பார்க்கவும், ஆண்களைப் பெண்கள் பார்க்கவுமான காரியங்களுக்கு என்றாலும், இரண்டாவது விஷயத்திற்குத்தான் அதிகம் பேர் வாலிபர்கள் சற்று ஷோக் பேர் வழிகள் சிறிது வயதானவர்களாயிருந்தாலும் சபலமுடையவர்கள் ஆகியவர்கள் வருவது. இப்படிப்பட்ட ஆண்கள் தாராளமாய் - வரா-விட்டால் குடும்பப் பெண்களும் வருவதில்லை. ஆக, இப்படிப்பட்ட இரண்டு கூட்டம் வந்தால்தானே காணிக்கை, கட்டளை, இணைப்புத் தரகு ஆகியவை கிடைக்கும். ஆகவே, நமக்குக் கோயிலில் மணியடிப்பதில் என்ன பிரயோசனம்? கோயில் சம்பளமாகிய மாதம் 1-12-0 ரூபாய் சம்பளமா நமக்குக்கட்டும்?

ஜோ: அப்படியா சங்கதி, அவர்கள் இப்படிச் செய்தால் நமக்கு வேறு கிடைக்காதோ?

அர்: என்ன வழி?

ஜோ: நம்ம ஆளுகளே ஒன்று சேர்ந்து நாம் ஆளுக்கு இரண்டு மூன்று வீதம் பெண்டாட்டிகள் கட்டி, நன்றாய் அலங்கரித்து தினம் காலை, மாலையில் கோயிலுக்கு வரும்-படி செய்தால் என்ன?

அர்: அப்படிச் செய்வது சாத்தியமாகுமா? அவர்களுக்கு நகை, புடைவை, மினுக்கு கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று அறி-முகம் செய்து கொள்ளுவது முதலாகிய இதெல்லாம் செய்ய வேண்டாமா? பிறகு நமது வீடுகளிலும் போதிய சவுகரியம் - வீடு, வாசல், கட்டில், படுக்கை முதலிய சவுகரியம் ஆகியவை வேண்டாமா? இவற்றிற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது?

நாம் ஏதோ தாசிகள் செல்வாக்கினால் கோயிலுக்கு வருகின்றவர்களில் ஒன்று இரண்டு ஆள்களைப் பிடித்து சரி பண்ணி, அதுவும் இரகசியம் என்றும் அவசரமென்றும் பயப்படுத்தி 10, 5 பெற்றுக் கொண்டு கஷ்டமில்லாமல் நஷ்டமில்லாமல் சம்பாதிப்பது நலமா? அப்படிக்கின்றி, நம்ம பெண்களையே தாசிபோல் நடக்க ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா?

ஜோ: என்னமோ கஷ்டகாலம் உங்களுக்கு மாத்திரமல்ல; நமக்கும்கூடத்தான் வந்துவிட்டது.

அர்: உங்களுக்கு என்ன வந்தது?

ஜோ: இப்போது எந்தத் தேவடியா மகன் நம்மிடம் ஜோசியம் பார்க்க வருகிறான்? பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்க்கின்ற வேலையே மிகவும் குறைந்து போய் விட்டது.

அர்: ஏன்?

ஜோ: ஏன் என்ன! அத்துகளே - பெண்ணும் மாப்பிள்ளையுமே பொருத்தம் பார்த்துக் கொள்ளுகின்றன.

அர்: இருந்தாலும் கிரகதோஷம் பார்க்கவாவது வருவார்களே?

ஜோ: அதாவது வந்தாலும் பரவாயில்லை. அதற்குத்தான் எங்கு வருகின்றார்கள்! திருட்டுத் தேவடியா பிள்ளைகள் காய்ச்சல் வந்தால் - தலைவலி வந்தால் உடனே டாக்டர்கள் இடம் போய் விடுகின்றார்கள். நம்மிடம் வருவதே இல்லை. நம்மைக் கண்டால் சிரிக்கின்றார்கள்; என்னடா என்று கேட்டால், சுயமரியாதையடா என்கின்றார்கள்.

அர்: சரி, இவ்வளவு ஆனதற்கப்புறம் எனக்கு ஒன்று தோன்றுகிறது.

ஜோ: என்ன?

அர்: நாமும் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி மெள்ள மெள்ள உள்ளே இருந்தே அதை ஒழித்து விடுவது! எப்படி என்றால், இப்பொழுது எத்தனையோ தமிழ்ப் பண்டிதர்கள் அப்படித்தான்; அதாவது, நானும் சுயமரியாதைக்காரன் என்று சொல்லிக் கொண்டு அதற்குள் பிரவேசித்து அதை ஒழிக்கப் பார்க்கின்றார்களே அதுபோல்.

ஜோ: அது நல்லவழிதான். நம்முடைய பெரியவாள் பவுத்தர்கள் காலத்திலும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால், இந்த சு.ம. பயல்கள் (சுயமரியாதைக்காரர்கள்) இது தெரிந்து தான் பு.ம. பயல்களை (புராண மரியாதைக்காரர்களை) அதாவது, பிராமணர்-களைச் சேர்ப்பதில்லை என்று தீர்மானித்து விட்டார்களே!

அர்: அதுவும் அப்படியா! அப்படியானால் இந்தப்படி ஏழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் இந்த சு.ம.காரன்கள் நாசமாய் நிர்மூலமாய்ப் போகட்டும். நாம் போய் இனி காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவோம்.

- சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது, (குடிஅரசு 10.5.1931).

நாகரிகக் கோமாளி




இனி என்.எஸ்.கே. செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி. நாடக - _ புரட்சி உலகைப் -பற்றி சரித்திரம் எழுதப்-பட்டால், அந்தச் சரித்திரத்-தின் அட்டைப் படத்தில் கிருஷ்ணன் படம் போடா-விட்டால் அந்தச் சரித்திரமே தீண்டப்படாததாகி விடும்
(குடிஅரசு 11.11.1944)

- _ கலைவாணர் என்.எஸ்.கே. பற்றி தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு _ வரைபடம் இது.

அந்தப் புகழுக்குரிய நாட்டுக்குச் சேவை செய்ய வந்த நாகரிகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் இன்று (1957).

சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்த கலைக் கோட்டம் அவர்.

கலைவாணரின் கொள்கை என்ன? 1952 _ தென்றல் பொங்கல் மலரில் அவரே சொல்லுகிறார்:

வினா: தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளில் உங்களுக்குப் பிடித்தமான கட்சி எது?

விடை: இந்தக் கேள்-விக்கு நான் பதில் சொல்லக் கூடாது என்றாலும் பரவா-யில்லை. சந்தேகமில்லாமல் நான் ஆதரிப்பது, விரும்-புவது சுயமரியாதைக்-கட்சிதான்.

வினா: உங்கள் கொள்கை என்ன?

விடை: ஆதி முதல் குடிஅரசு கிருஷ்ணசாமி பாவலர் நடத்திய தேசபந்து ஆகிய இரண்டு பத்திரி-கைகளை நான் படித்து வந்தேன்; அப்போது நான் சிறுவ. நாடகக் கம்-பெனியில் வேலை. பக்தி மார்க்கத்திற்கும் நாடகத்-திற்கும் உள்ள வேறுபாடு-களை நான் அப்போது நன்றாகத் தெரிந்து கொண்-டேன். படித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தேன்.
வினா: உங்கள் முடிவு?

விடை: சுயமரியாதைக் கொள்கை நம் நாட்டுக்குத் தேவை என்பதுதான் அந்த முடிவு.

கலைவாணரின் இந்தப் பதிலைப் படிக்கும்போது என்.எஸ்.கே. அவர்களைப்-பற்றி தந்தை பெரியார் கணித்ததன் உண்மை புரியும்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்று சொல்-வார்களே _ அது கலைவா-ணர் அவர்களுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். யார் பையன்? என்ற ஒரு திரைப்படம். கலை-வாணரின் துணைவியார் டி.ஏ. மதுரம் ஒரு கீழ் ஜாதிக்காரருக்குத் தண்ணீர் கொடுப்பார். அவரும் குடித்துவிட்டு அந்தப் பாத்திரத்தைத் திண்ணை-யில் வைப்பார். டி.ஏ. மதுரம் உள்ளே போய் தண்ணீர் கொண்டு வந்து அந்தப் பாத்திரத்தின்மீது தெளித்து, அதை வீட்டுக்குள் எடுத்துச் செல்லுவார். சிறிது நேரம் கழித்து ஒரு தாழ்ந்த ஜாதிக்காரர் கலைவாணரிடம் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து கொடுப்பார்; கலைவாணர் என்ன செய்தார்? அந்த ரூபாய் நோட்டுகள்மீது தண்ணீரை ஊற்றுவார். அய்யயோ பணம் எல்லாம் பாழாய்ப் போச்சே! என்று மதுரம் கத்துவார். தாழ்த்தப்பட்டவர்-கள் கொண்டு வந்து கொடுத்த நோட்டாச்சே அதை உயர்ந்த ஜாதிக்-காரர்களான நாம் கையால் தொட்டால் தீட்டாச்சே! என்பார்.

என்னே நையாண்டி! இவர்தான் நம் கலை-வாணர். வாழ்க! வாழ்கவே!!

- மயிலாடன்




Thursday, May 28, 2009

சென்டிமென்ட்

ஒற்றைப்பத்தி

"சென்டிமென்ட்"

நம் நாட்டில் அண்மைக் காலமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தைதான் "சென்டிமென்ட்!" மனோபாவம், 

சுயமனோதத்துவமுடைய ஒன்று என்றெல்லாம் அகராதிகள் அர்த்தம் கூறுகின்றன.

சுருக்கமாகக் கூறுவது என்றால் அறிவும், துணிவும் இல்லாதவர்கள் மத்தியில் உருவாகும் ஒரு வகையான கோழைத்தனம் இது என்றே சொல்லவேண்டும்.

திறமைக்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டிய விளையாட்டுப் போட்டி களில் ஈடுபடுபவர்களுக்குக் கூட இந்தத் தன்னம்பிக்கையற்ற கோழைத்தனம் ஏற்படுவதுண்டு.

குறிப்பிட்ட வண்ணத்தில் கைக்குட்டை வைத்திருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்று நினைப்பவர்கள் உண்டு.

அதேநேரத்தில் அந்த வண்ணத்தில் கைக்குட்டையை வைத்துக்கொண்டு விளையாடச் சென்ற போதெல்லாம் வெற்றி பெற்று இருக்கின்றனரா? தோல்வியே அடைவதில்லையா? என்ற கேள்வியை எழுப்பி சுய மதிப்பீடு செய்யும் அளவுக்கு அவர்களின் அறிவு விரிவடைவதில்லை. தோல்விக்கு வேறு ஏதாவது காரணம் கூறி தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொள்ளும் தலைப்பிரட்டைகள் இத்தகையவர்கள்.

அரசியலிலும் இந்த நிலைப்பாடு உண்டு. ஜோதிடர்களின் செல்வாக்கு அரசியலில் ஓங்கி நிற்கிறது என்றால் அதற்கு இது தான் காரணம்.

தேர்தலில் நிற்க விரும்பும் வேட்பாளர்கள் தங்களைப்பற்றிய குறிப்புகளோடு ஜாதகத்தையும் கொண்டு வரவேண்டும் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார் - முடிவு என்னவாயிற்று? இதற்குப் பிறகாவது ஜோதிடக் கூவத்திலிருந்து அரசியல்வாதிகள் வெளியேறவேண்டாமா?

தேனி மக்களவைத் தொகுதியில் ஒருமுறை வெற்றி பெற்றவர்கள் அடுத்தமுறை வெற்றி பெறமாட்டார்கள் என்று ஒரு கதை. ஆரூண் (காங்கிரஸ்) அவர்கள் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றி பெற்றுவிட்டாரே - அந்த நம்பிக்கையாளர்கள் எதில் போய் முட்டிக்கொள்வார்கள்?


இன்னொரு செய்தி - நடிகர் நெப்போலியன் குறித்து... அவர் வெற்றி பெற்றால், அவர் சார்ந்த கட்சி ஆட்சியைப் பறி கொடுத்துவிடும் என்று ஒரு கிளப்பல்! வில்லிவாக் கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்; ஆனால், தி.மு.க. ஆட்சிப் பீடம் ஏறவில்லை என்று கதை கட்டினர்; கடந்த தேர்தலில் மயிலாப்பூரில் தோற்றார்; தி.மு.க. ஆட்சியில் அமர்ந்துவிட் டது என்று காக்கை உட் கார பனம் பழம் விழுந்தது போல சில நடவடிக்கைகள் அமைந்துவிட்டால், பார்த்தீர்களா - பார்த்தீர்களா? நாங்கள் சொல்வது எவ்வளவு கரெக்டாக இருக்கிறது என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டுப் பேசுவோர் உண்டு.

இப்பொழுது பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்; மத்தியில் அவர் சார்ந்த கூட்டணி ஆட்சியும் அமைந்துவிட்டதே - இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? மூடத்தனத்திற்கு அடிமையானால் சிந்தனையாவது, மண்ணாங்கட்டியாவது!

- மயிலாடன்
படியுங்கள்: விடுதலை
நன்றி:http://files.periyar.org.in/viduthalai/20090527/news06.html


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...