Tuesday, March 4, 2008

சென்னையில் ஏசு! மூடப் பிரச்சாரம் பிசுபிசுத்தது!

சென்னையையடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள சூசையப்பர் ஆலயத்தின் மணிக்கூண்டு கோபுரத்தில் இயேசுவின் முகம் தெரிவதாக ஞாயிற்றுக் கிழமை வதந்தி பரவியது. செய்தித்தாள்களும் படத்துடன் வெளியிட்டு விளம் பரம் செய்தவுடன் மக்கள் குவியத் தொடங்கிவிட்டனர். கடந்த ஞாயிறன்று (02.03.08) அக்கோயிலில் பூசைக்கு வந்த பக்தர்களில் யாரோ ஒருவர் முதலில் பார்த்ததாகவும், னர் பார்த்த அனைவரும் இயேசுவின் முகம் தெரிவதாகக் கூறியவுடன் வதந்தீ பரவத் தொடங்கியிருக்கிறது. இது பற்றி அப்பகுதியில் வசிக்கும் திராவிடர் கழக இளைஞரணி தோழர் பிரபாகரன் தெரிவித்த தகவலையடுத்து திங்கள் கிழமை இரவு இதுகுறித்து நேரில் ஆய்வு செய்ய றனர் இளைஞணியினர்.
மணிக்கூண்டில் இருந்து வழிந்த மழைநீரால் பாசி உருவாகியிருக்கிறது. அதில் மங்கலாகத் தெரியும் உருவத்தை, தங்களுக்கேற்றாற்போல் உருவகம் செய்துகொண்டு இயேசு தெரிவதாகப் புரளி கிளப்பி விட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த கூட்டத்தில் திடீரென ஒருவர் பக்கத்து தூணில் மேரி மாதா கையில் குழந்தையோடு தெரிவதாகச் சொல்ல அதையும் பார்த்து பரவசமடையத் தொடங்கிவிட்டார்கள். மேரி மாதாவின் கையில் குழந்தை, பின்னால் ஒளிவட்டம், அவர் அணிந்திருக்கும் கவுன், தலையில் மூடியிருக்கும் முக்காடு எல்லாம் தெரிவதாகக் கூறி இங்கே நடக்கிறார் என்றால் அங்கே பறக்கிறார் என்று வதந்தீ பரவும் என்பதைப் போல பரவத் தொடங்கி விட்டது.

இப்படி அடுத்தடுத்து வரும் செய்திகள் பற்றி அக்கோயிலின் இளம் பாதிரியார் சவரி முத்துவிடம் கேட்டபோது, கடவுள் பல வடிவங்களில் தன்னுடைய இருப்பை நிரூபிப்பதாகவும், அவ்வப்போது இவ்வாறு மக்களுக்கு காட்சி தருவதாகவும் கூறினார். நேற்று வெறும் இயேசுவின் உருவம் மட்டும் தெரிந்த நிலையில் இன்று மாதாவின் உருவமும் உருவாகியிருப்பதாகவும் சிலுவைத் தெரிவதாகவும் பார்த்து மக்கள் நம்புகிறார்கள். நாளை இந்த உருவம் இன்னும் தெளி வாகத் தெரியக்கூடும். எனவே இன்னும் கூர்ந்து பார்த்தால் உருவாகியிருக்கும் மற்ற உருவங்களையும் பார்க்கலாம் என்றார் அவர்.

இதுதான் சமயமென்று தூணில் தெரியும் உருவத்தைப் புகைப்படம் எடுத்து, அதை இயேசு உருவத்துடன் ஒப்பிட்டுப் புகைப்பட வியாபாரம் ஜரூராக நடந்துவருகிறது.வினா எழுப்பிய கழகத் தோழர்கள்கூட்டத்தில் சிலரிடம் கேட்டபோது எனக்கு எம்.ஜி.ஆர் உருவம்போல் தெரிகிறது என்றார் சந்துரு என்ற எம்.ஜி.ஆர். பற்றாளர். இன்னொருவர் பக்கத்தில் இருந்த இன்னொரு தூணில் மான் உருவம் தெரிவதாகக் காட்ட பின்னர் மான் காட்சி யளிக்கத் தொடங்கிவிட்டது.

* கோயிலுக்குள் காட்சி தராமல் இப்படி தூணின் அடியில் பாசியில் தெரிவது ஏன்?

* இயேசு, மாதா என்று தொடர்ந்து உருவங்கள் உருவாகி வருகிறது என்றால், முதலில் மாதா உருவம் வந்து பின்னர்தானே மகன் இயேசு வின் வடிவம் வந்திருக்க வேண்டும்.?

* மழைநீரால் உருவாகி யிருக்கும் பாசி தானே அப்படித் தெரிகிறது. முழுதும் பாசியை சுரண்டிவிட்டு, அந்த இடத்தில் சுண்ணாம்பு அடித் தால் அவ்விடத்தில் மீண்டும் இவ்வுருவங்கள் தெரியுமா?

* சுரண்டப்பட்ட பாசி யைப் பரிசோதித்தால், அது இன்று நேற்று உருவானதா, அல்லது மழைநீர் வழிந்து உருவாகி நீண்ட நாட் களாகிவிட்டதா என்று தெரி யுமே? அதற்குத் தயாரா?

என்பது போன்ற அறிவார்ந்த கேள்வியை எழுப்பினார்கள் திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள்.ஆனால் இக்கேள்விகளுக்கு நம்பிக்கை என்று பதில் கூறித் தப்பித்தார்கள் பக்தர்கள். அங்கு குடியிருந்த இளைஞர் களோ, ஆம், அதுதான் சரி. அப்படி சுண்ணாம்பு அடித்த பின்னும் இயேசு உருவம் உருவானால் அப்போது நாங்கள் நம்புகிறோம் என்று உரக்கக் குரலெழுப்பட் தொடங்கிவிட்டனர்.

மாதா உருவத்தை தான் கண்டு பிடித்ததாக தன்னை அறிமுகம் செய்துகொண்ட சீனிவாசன் என்ற கணினிப் யாளரை, செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட ஆட்டோ நர்கள் பகுத்தறிவுக் கேள்விகள் கேட்டுட் திணறடித்தனர்.

உடுமலை, வை.கலையரசன், கருணாகரன், ரவிக்குமார், ராஜசேகர், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட ஏராளமான இளைஞரணித் தோழர்கள் நேரடியாக அவ்விடத்திற்கு சென்று கேள்விகளை எழுப்பினர்.

நன்றி: விடுதலை (04.03.2008)

Friday, February 15, 2008

விடுதலை - தற்காலிக முகவரி


விடுதலை இணைய தளத்தின் முகவரி தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
வாசகர்கள் இங்கு செல்லுமாறு கேட்டுகொள்கிறோம்.

Wednesday, February 13, 2008

மோடியின் வெற்றி: காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன?



தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து, கர்நாடகத்தில் 7 நாள் ஆட்சி என்ற கேலிக் கூத்தால் அவமானப்பட்ட பா.ஜ.க.,வுக்கு குஜராத்தில் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது என்பது, உற்சாக பானத்தை அருந்தியவன் போல திடீர் மகிழ்ச்சி வெள்ளம் பீறிட்டுக் கிளம்புவது இயல்பானது-தான்.

குஜராத் சட்டப்பேரவையின் மொத்த இடங்கள் 182.

இதில் மோடியின் கட்சியான பா.ஜ.க., 117 தொகுதிகளையும், காங்கிரஸ் 59 தொகுதிகளையும், அதனுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மூன்று தொகுதிகளையும், அய்க்கிய ஜனதா தளம் ஒரு தொகுதியையும், சுயேச்சைகள் இரு தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

காங்கிரஸ் முன் இருந்ததைவிட சற்றுக் கூடுதலான இடங்-களை இம்முறை பெற்றுள்ளது. என்றாலும், இது அதற்கு ஆறுதலாக அமையவில்லை.

மோடிக்கு எதிரான வாக்குகளை, காங்கிரஸ் ஒரு சிறப்பான முற்போக்குக் கூட்டணி அமைத்து - 2004 இல் தமிழ்நாட்டில் கலைஞர் அவர்கள் ஒரு அருமையான அரசியல் வியூகம் அமைத்து, பல கட்சிகளையும் ஒருங்கிணைத்து, உழைத்து, தமிழ்நாடு மற்றும் புதுவை உள்பட 40 மக்களவைத் தொகுதி-களையும் கைப்பற்றியது போல செய்திடத் தவறியதனால்தான் இந்த தோல்வி காங்கிரசுக்கு!

மோடியைத் தோற்கடிக்க அனைத்துக் கட்சிகளையும் ஒருங் கிணைத்து, பொது வேட்பாளர்களை (இடங்களைப் பகிர்ந்து கொண்டு) நிறுத்தியிருந்தால் வெற்றி, இப்படி கானல் நீராக ஆகி இருக்காது!

செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மொத்தம் உள்ள 182 இடங்களில் 166 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும்கூட, அது போட்டியிட்ட 14 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழக்கக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்த 14 தொகுதிகளில், ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மோடி எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்துவிட்டது.

50 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் சுமார் 5000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியா-சத்தில்தான் தோல்வி அடைந்து உள்ளனர்.

மாயாவதி கட்சி (பகுஜன் சமாஜ்) தனது வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளைப் பிரித்ததே இதற்கு முக்கிய காரணம். தாழ்த் தப்பட்ட சமுதாய வாக்குகள், முஸ்லிம்களில் ஒரு பகுதியினர், பார்ப்பனர் போன்ற முன்னேறிய ஜாதியினர் - இவர்கள் எல்லாம் மோடிக்கு எதிரான வாக்குகளை, பகுஜன் சமாஜ் கட்சிக்கே போட்டனர்!

பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது படுதோல்வி அடைந்தது என்றாலும், காங்கிரசு பெரும்பான்மை பெரு வதைத் தடுத்து இருக்கிறது என்பதே ஆய்வாளர்-களின் கருத்து.

காங்கிரஸ் பிரச்சாரத்தில், மோடியை மரண வியாபாரி என்று திருமதி சோனியா காந்தி பேசியது (அவரது உரையை தயாரித்தவர்களின் மாபெரும் தவறு அது) எதிர்மறை விளைவை உருவாக்கி, பூமராங் ஆகிவிட்டது!
தேர்தல் பிரச்சாரம் என்பது சர்க்கஸ் கம்பியில் வித்தைக்காரன் நடப்பதுபோல! விழிப்போடு செய்யவேண்டும்.

மோடியின்மீது இருந்த வெறுப்பு, எதிர்ப்பு, கசப்பு உணர்வுகளை சரியான வகையில் ஒருமுனைப்படுத்தி, ஒரு வெற்றிகரமான கூட்டணியை அமைக்கத் தவறியதால்தான் மோடி மீண்டும் வந்து, அரசியல் ஆணவத்து-டன் பேசும் நிலை ஏற்பட்டு விட்டது!

மற்ற காரணங்கள் சாதாரணமானவை.

மீண்டும் ஒரு இந்துத்துவா ஆட்சி உருவாகி, சிறுபான்மைச் சமுதாயத்தவர்களான இஸ்லாமியர், கிறித்தவர்களின் பாது காப்பைக் கேள்விக்குறியாக்கிவிட்டது!

பா.ஜ.க., முக்கியத் தலைவர்களுக்கு உள்ளுக்குள் மோடியின் வெற்றி உற்சாகத்தினை தரவில்லை. ஆனால், அத்வானி, ஆர்.எஸ்.எஸ்., கூட்டாளிகளுக்கு இது பெரிய உள்காயத்தை ஏற்படுத்தியுள்ளது!

காங்கிரசின் தலைமை, இந்த அமெரிக்-காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டு, இடதுசாரிகள் மற்றும் முற்-போக்குச் சிந்தனையாளர்களின் ஆதரவினை இழக்காமல், 2009 வரை அய்ந்தாண்டுகால ஆட்சியைத் தொடர்ந்து நடத்திடவேண்டும்.

விலைவாசி போன்றவற்றில் மிகவும் கவனத்துடன் கட்டுப்படுத்தி மத்திய ஆட்சி-யாளர்-கள் நடந்துகொள்ளவேண்டும். இத்-தோல்வியை, ஒரு வகையில் காங்கிரசை ஒரு சுய பரிசோதனை செய்துகொள்ள கிடைத்த வாய்ப்பாகவே கருதிடவேண்டும்.

உடனடியாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (ருஞஹ)யின் முக்கியத் தலைவர்-களையும் டில்லியில் கூட்டி, அதன்  பொதுத் திட்டத்தை மேலும் தீவிரமாக செயல்படுத்த உறுதி எடுத்துக் கொண்டு, அதில் உள்ள கட்சிகளையும், இடதுசாரி முற்போக்குச் சிந்தனையாளர்களையும் அரவணைத்து, 2009 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே ஒரு வியூகம் வகுத்து, இந்தக் கூட்டணி யினை மிகவும் வெற்றிக் கூட்டணியாக்க ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் சிற்பியான முதல்வர் கலைஞர், லாலுபிரசாத் போன்றவர்களிடம் நன்கு ஆலோசித்து, வரும் 2009-இல் மதவெறி சக்திகளுக்கு, ஜாதி வெறி சக்திகளுக்கு இடம் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள இப்போதே பணிகள் (2008 முதலே) தொடங்கிடவேண்டும்.

தோல்விகளை அனுபவங்களாகக் கொண்டு, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதே சிறந்தது!

விழுவது தவறல்ல; விழுந்தவுடன் எவ்வளவு விரைவில் எழுந்து நிற்க முடியுமோ அவ்வளவு விரைவாக எழுவதே முக்கியம்.
அதுவும் அரசியலில் மிகமிக முக்கியம்!


கி. வீரமணி
ஆசிரியர்

Thursday, February 7, 2008

எந்த எல்லைக்கும் சென்று கலவரம் விளைவிக்கத் திட்டம்

தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலக குண்டுவெடிப்பு
இந்து முன்னணியினர் கைது - எதைக் காட்டுகிறது?



எந்த எல்லைக்கும் சென்று கலவரம் விளைவிக்கத் திட்டம்

உளவுத்துறை தீவிரமாக விசாரணை நடத்தட்டும்!




தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை



தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை இந்து முன்னணியினரே குண்டு வைத்துத் தகர்த்துள்ள பின்னணி குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் கடந்த 24 ஆம் தேதி இரவு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலைய குண்டுவெடிப்பில் வெற்றிலை வியாபாரி உள்பட 2 பேர் காய மடைந்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்து முன்னணிப் பிரமுகர் குமார் பாண்டியனின் (வயது 40) அண்ணன் உள்பட 3 பேரை குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக் காத குண்டு மற்றும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து தென்மண்டல அய்.ஜி. சஞ்சீவ்குமார், டி.அய்.ஜி. கண்ணப்பன், எஸ்.பி. சிறீதர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு தொடர்பாக, தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த சமீபத்தில் கொலையுண்ட இந்து முன்னணி தென்காசி நகர பிரமுகர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவி பாண்டியன் (வயது 42), குமார் என்ற கேடிசி குமார் (வயது 28), நாராயண சர்மா (வயது 26) ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளோம்.ரவிபாண்டியனிடம் நடத்தப் பட்ட விசாரணையில், தனது வீட்டில் 4 பேர் பலியான போதும் இந்துக்களிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. போதிய ஆதாரம் கிடைக்கவில்லை. இப்படி ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தால், அவர்கள் ஒன்றாக சேர்வார்கள் என்ற நோக்கத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தார்.

அவருக்குச் சொந்தமான கேபிள் டி.வி., அறையில் வைத்து குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 குண்டுகளை தயாரித்து, அவற்றை இரண்டு இரண்டாக சேர்த்து 7 குண்டுகளாக மாற்றி உள்ளனர். கடந்த ஜூலை மாதத்திலிருந்தே குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு தான் 6 பேர் கொலை நடந்துள்ளது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிந்துள்ளது. 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பலர் கைதாவார்கள்.ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு முன்பாக, மின்சார ப்யூஸ் கேரியரை உருவி மின் தடையை ஏற் படுத்தியுள்ளனர். சுவிட்ச் ஆன் செய்த 20 அல்லது 30 செகண் டுக்குள் வெடிக்கும் வகையில் குண்டுகளை வடிவமைத்துள்ளனர். - இவ்வாறு அவர்கள் கூறினர்.(தினகரன், 5.2.2008, பக்கம் 6)
இந்தச் செய்திகள் தெரிவிப்பது என்ன?
இந்தச் செய்திகள் தெரிவிக்கும் பாடம் என்ன? இந்து முன்னணி வகையறாக்கள் திட்டமிட்டு மதக் கலவரத்தை உண்டாக்கும் ஒரு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது வெளிப்படை. மண்டைக் காடு கலவரம்பற்றிய ஜஸ்டிஸ் திரு. பெ. வேணுகோபால் அவர்களின் அறிக்கையில்கூட ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் எப்படியெல்லாம் மதக்கலவரங்களைத் தூண்டி வருகிறார்கள் என்பது விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
சதுமுகையில் செருப்பு மாலை போட்டவர்கள் யார்?
ஈரோடு - சத்தியமங்கலம் அருகில் சதுமுகை என்ற ஊரில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைக்குச் செருப்பு மாலை போட்டும், முனீஸ்வரன் சிலையைச் சிதைத்தும் மதக் கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பாக இரண்டு இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்ட செய்தியை இந்து ஏடே வெளிப்படுத்தியதையும் இந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்வது பொருத்தமானது. (தி இந்து, 18.2.2002).கலவரம் விளைவிப்பதற்காக அவர்கள் அலுவலகத்தை அவர்களே குண்டு வைத்துத் தகர்க்கின்றனர் என்றால், இவர்கள் வேறு எதைத்தான் செய்யமாட்டார்கள்?சதி வேலைநாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஒரு பக்கத்தில் பிரச்சாரம் செய்துகொண்டே இன்னொரு பக்கத்தில் அப்படி சொல்பவர்களே மதக் கலவரங் களை விளைவிக்கக் கத்தி தீட்டு வதும் எத்தகைய சதி வேலை!உளவுத் துறை தீவிரமாக விசாரிக்கட்டும்!காவல்துறை - உளவுத் துறை இந்த இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். கண்மூடி கண் திறப்பதற்குள் ளாகவே விஷ விதைகளை ஊன்றிடக் கூடிய பயிற்சி பெற்ற ஆபத்தானவர்கள் இவர்கள்.தென்காசி குண்டுவெடிப்புத் தொடர்பாக மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய ஏடுகள் கூறுகின்றன.இவர்களைத் தீவிரமாக விசாரித்தால், இவர்களின் பின்னணி யில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் - இந்தக் கும்பலின் தொடர்ச்சி எங்கெங்கெல்லாம் செல்லுகிறது என்பதைக் கண்டு பிடித்துவிட முடியும்.இந்தத் திசையில் புலனாய்வு தீவிரமாகட்டும்!







தலைவர், திராவிடர் கழகம்.

Monday, February 4, 2008

தினமணி கக்கும் நஞ்சு


நாட்டு நடப்பு
தமிழர் பண்பாட்டைப்பற்றி தினமணிகள் பேசலாமா? தமிழர் பண்பாடு என்றால் என்ன? என்று எழுத்தாளர் சிவசங்கரி ஒருமுறை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைப் பார்த்து ஒரு பேட்டியில் வினா எழுப்பினார்.அதுவா? - அம்மாவை வாடி என்றும், அக்காவை போடி என்றும் சொல்லாததுதான் தமிழர் பண்பாடு என்று கூறினார்.தினமணி (3-2-2008)யின் முதல் பக்கம் கார்ட்டூனை பார்க்கும்பொழுது, தமிழர்களை கொச்சைப்படுத்துவதில் அவர்கள் காட்டும் வெறி இன்னும் அடங்கவில்லை என்பதைதான் வெளிப்படுத்துகிறது. கணவன் பேசுவதை மனைவி ஒட்டுக் கேட்பதும், மருமகள் பேசுவதை மாமியார் ஒட்டுக் கேட்பதும், பிள்ளைகள் பேசுவதை பெற்றோர்கள் ஒட்டுக் கேட்பதும் தமிழர் பண்பாடுதானே என்று கருத்துப் படம் வெளியிட்டிருக்கிறது தினமணி.டெலிபோனில் ஒட்டுக் கேட்பது பற்றிய பிரச்சினையில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தமிழர்களை இழுத்துக் கொச்சைப்படுத்த வேண்டுமா? டெலிபோனில் ஒட்டுக் கேட்கப்படுவதற்கும் இதற்கும் என்ன தொடர்பு.பிரச்சினை எதுவாயிருந்தாலும் தமிழர்களை இழிவுபடுத்த வேண்டும் என்கிற திமிரும், ஆணவமும்தானே இதன் பின்னணியில் இருக்கிறது.ஒட்டுக் கேட்பது இயல்புதானே என்று பொதுவாகச் சொன்னால்கூட அதைப் புரிந்துகொள்ள முடியும். இந்த ஒட்டுக் கேட்பது என்பது தமிழர் பண்பாடுதான் என்று தினமணிகள் எழுதுவது - தமிழினத்தின் மீது பார்ப்பனர்களுக்கு இருக்கும் அடக்க முடியாத திமிர் பிடித்த துவேஷம் என்பது அல்லாமல் வேறு என்ன?ஒட்டுக் கேட்பது, போட்டுக் கொடுப் பது, உயர் பதவிகள் பெறுவதற்காக மேலதிகாரிகளை அந்தரங்கத்தில் சந்திப்பது என்பதெல்லாம் பார்ப்பன வட்டாரத்துக்குக் கைவந்த கலை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!பண்பாட்டைப் பற்றியெல்லாம் பார்ப்பனர்கள் பேச ஆரம்பித்தால் அது எங்கே கொண்டு போய்விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண் டும், கண்ணாடி வீட்டிலிருந்தா கல் எறிவது?பெற்ற மகளையே பெண்டாண் டான் படைப்புக் கடவுள் பிர்மா - என்று புராணம் எழுதி வைத்துக் கொண்டுள்ள கூட்டமா பண்பாடு களைப் பற்றிப் பேசுவது? கோள் சொல்லுவதற்கும், சண்டை மூட்டி விடுவதற்கும், ஒட்டுக் கேட்பதற் கும் என்றே நாரதன் என்ற கடவுளை கற்பித்துள்ள கூட்டத்திற்கு இதுமாதிரி பிரச்சினைகளைப்பற்றி பேசவோ, எழுதவோ அருகதை உண்டா?தமிழைப் பேசிக் கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழிலேயே பத்திரிகைகளை நடத்தி, தமிழர்களின் பணத்தால் வயிறு நிரப்பிக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம் - தமிழர்களைக் கொச்சைப்படுத்துவது என்பதையே தம் ரத்த ஓட்டமாகக் கொண்டு திரிகிறது என்பதைத் தமிழர்கள் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டாமா?தமிழ் செம்மொழியானால், நாலு பிளேட் பிரியாணி கிடைக்குமா? என்று தினமலர் கேள்வி கேட்கிறது. தைத் திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று கலைஞர் அறிவித்தால் - கிடந்தது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மணை யிலே வை என்ற கதைதான் என்கிறது கல்கி.வேறு எது எதற்கெல்லாமோ கச்சை கட்டிக் கொண்டு கிளப்பும் நம் தமிழர்களும், தமிழர் அமைப்புகளும் - இந்தப் பார்ப்பனர்கள் தமிழர்களைச் சீண்டுவதையே, கொச்சைப்படுத்துவதையே பிழைப்பாகக் கொண்டு செயல்படுகிறார்களே, இவர்களின் பக்கம் கவனத்தைத் திருப்ப வேண்டாமா?தினமணி மீண்டும் ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் கையிலே தஞ்சம் புகுந்துவிட்டது. திருவாளர் சோ வின் பினாமியாக இருக் கக் கூடிய ஒருவர், தினமணியை ஆர்.எஸ்.எஸின் அதிகாரப் பூர்வ ஏடாக அறிவிக்கும் வரை ஓயமாட்டார் என்று தெரிகிறது.
- மயிலாடன்


Sunday, December 2, 2007

மகிழ்ச்சியான செய்தி தமிழர் தலைவர் பவள விழா நேரடி ஒளிபரப்பு!



தமிழர் தலைவரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் பெரியார் வலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப் பாக இருக்கிறது. 2.12.2007 அன்று காலை - மாலை நிகழச்சிகளை periyar.org.in வலைத்தளத்தில் நேரடியாகக் காணலாம். உலகத் தமிழர்களே! தமிழர் தலைவரின் விழா மாட்சியைக் காண இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்!

Saturday, December 1, 2007

பன்னாட்டு நிறுவனங்களில் ஜாதிப்பார்வை -




    சமூகநீதிக்குத் தலைநகரமான தமிழகம்-தான் இந்தியாவிற்கே இன்று வழிகாட்டி வருகிறது. எதையும் கொஞ்சம் முந்திச் சிந்திப்பது பெரியாரின் மரபு. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, அதாவது இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்கு முன்பேயே சமூகநீதி குறித்து தமிழகம்தான் சிந்தித்தது. அரசியல் விடுதலையை விட, சமூக விடுதலையே அவசியம் என பெரியார் முழங்கினார். அன்றைய நாள் தொட்டு, திராவிட இயக்கம் நடத்திய போராட்டமே சமூகநீதியை உறுதி செய்து இட ஒதுக்கீடு முறையைத் தமிழகம் தக்க வைத்துக் கொண்டது.

      1985-களின்போது அரசுத் துறை நிறு-வனங்களைப் போலவே தனியார்த் துறையும் இந்தியா-வில் அதிக அளவு வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகின. இந்திய அரசியல் சூழல் உலக மயமாதலுக்கு உறுதுணையாக அமைந்தது; அதன் விளைவாக தனியார்த் துறையில் பனியாக்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஈடுபட்டு தொழில்களைக் கைப்பற்றி விடும் என முன்னேயே கணித்தது திராவிடர் கழகம். பெரியாரின் மரபில் அவரின் வீச்சோடு எதையும் தொலைநோக்கோடு சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்த தலைவர் கி. வீரமணி அவர்கள் தனியார், துறையிலும் இட ஒதுக்கீடு என்ற முழக்கத்தை முதன்முதலில் எழுப்பினார் 2.1.1982 இல் மதுரையில் நடைபெற்ற தி.க., மாநாட்டில்-தான் தனியார் துறையில் இட ஒதுக்கீடு குறித்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.

        இன்று இந்தியாவெங்கும் தனியார் துறைகள் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சமூகநீதிக் கொள்கையில் உடன்பாடு கொண்ட அத்தனைக் கட்சிகளும் தி.க.,வின் அன்றைய தீர்மானத்தை இன்று வழிமொழிகின்றன. ஒரு பக்கம் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்திப் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், அண்மையில் நடந்த ஒரு நிகழ்வு ஜாதியப் பார்வை இன்னும் உயர் ஜாதியினரிடம் இருந்து அகன்று விடவில்லை என்பதை உணர்த்தியுள்ளது. டெல்லியில் உள்ள மயூர் பாஞ்ச் பகுதியில் இந்தியாவின் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கான நேர்காணலுக்கு பித்யூத் என்பவர் சென்றுள்ளார். இவர் ஒரு தாழ்த்தப்பட்டவர். டில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் கணிதம் பயின்றவர். அந்தப் பன்னாட்டு நிறுவனத்தில் பித்யூத்க்கு அமர்வதற்கு நாற்காலிகூட தரப்பட-வில்லையாம். நேர்காணல் செய்யப்படும்போது பித்யூத்தின் கல்வித் தகுதியைத் தவிர்த்து விட்டு, குடும்பப் பின்னணி (அதாவது ஜாதி) பொருளாதாரப் பின்புலம், பெற்றோரின் வேலை வாய்ப்பு ஆகியவைபற்றியே கேள்வி கேட்கப்பட்டதாம். கடைசியில் அந்நிறுவன இயக்குநர், மிகக் குறைந்த ஊதியத்தில் பிழைக்கும் குடும்பத்தில் பிறந்தவருக்கு வேலை தர முடியாது என மறுத்துவிட்டாராம். இந்த நிகழ்வு ஒரு உதாரணம்தான். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு இந்த நிலைதான் என்பதை ஒரு ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.

          நியூயார்க்கின் சிட்டி பல்கலைப் பேராசிரியர் பால் அட்டினுல் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைப் பேராசிரியர் கேத்ரின் நியூமென் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்குத் தற்போதைய பல்கலைக் கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) தலைவர் சுக்தேவ் தோரட் ஒத்துழைப்புத் தந்துள்ளார். 2005 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு நாளிதழ்களில் இருந்தது பன்னாட்டு வேலை வாய்ப்பு விளம்பரங்களைச் சேகரித்தனர். அதிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் மூன்றுவிதமான மனுக்கள் மற்றும் கடிதங்களை இந்த ஆய்வில் ஈடுபட்ட-வர்கள் உருவாக்கினார்கள். அந்த மனுக்களில் எளிதில் பிரித்து அறிய முடியாத கல்வி மற்றும் இதர விவரங்களை இடம்பெறச் செய்தனர். ஜாதி மற்றும் மதப் பின்னணிபற்றி வெளிப்படையாகக் குறிப்பிடாமல் ஒவ்வொரு செட் மனுக்களிலும் - ஒன்று உயர்ஜாதி பெயர் கொண்டவராகவும், இன்னொன்று சிறுபான்மையினர் அல்லது தாழ்த்தப்பட்டவர் பெயர் கொண்டவராகவும் அமைக்கப்பட்டது. அதில் தொடர்பு முகவரியும் எழுதப்பட்டி-ருந்தது. இதுபோல மொத்தம் 4,808 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. நேர்-காணலுக்-கான வாய்ப்பு எப்படி அமைந்தது என்பதில்தான் தனியார் நிறுவனங்களின் ஜாதிய மனப்பான்மை தெரிய வந்தது.

            உயர்ஜாதி மனுதாரரோடு ஒப்பிடும்போது அதே அளவு கல்வித் தகுதி உடைய தாழ்த்தப்-பட்ட மாணவருக்கான நேர்காணல் வாய்ப்பு 66 சதவிகிதமாக மட்டுமே கிடைத்தது. இஸ்லாமிய மனுதாரரைப் பொறுத்தவரை இந்த வாய்ப்பு 33 சதவிகிதமாகக் குறைந்து-விட்டது. தகுதிக் வாய்ந்த தாழ்த்தப்பட்ட மாணவரைவிட தகுதி குறைவான உயர்ஜாதி மாணவருக்கு 20 சதவிகித அளவில் அதிக வாய்ப்பு கிடைத்தது. சமூகப் பொறுப்-புணர்ச்சிபற்றிப் பேசும் பல நிறுவனங்களும் இதில் அடக்கம் என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

              இந்த ஆய்வு குறித்துப் பேசிய சுக்தேவ் தோரட், வணிக நிறுவனங்கள் சமூகப் பின்னணியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுகின்றனர் என்பதற்கான ஆதாரம் முதல் முறையாகக் கிடைத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறினார்.

                பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் இந்து மத இழிகுணம் எந்த வகையிலும் அதன் பார்வையைக் கைவிடவில்லை. ஒரு வேலைக்-கோ, தொழிலுக்கோ அதற்குத் தேவையான அறிவும் உழைப்புக்கான தகுதி மட்டுமே போதுமானது. ஆனால், இந்தியாவில் இதையும் தாண்டி ஜாதித் தகுதி என்ற மோசமான பார்வை இன்னும் இருக்கிறது என்பதையே இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது. சமூகச் சமநிலையைக் கொண்டு வர அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மட்டுமல்லாது தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கவேண்டிய சூழல் அதிகரித்து வருகிறது. அரசுத் துறை, நீதித்துறை, தனியார் துறைகள், பன்னாட்டு நிறுவனங்கள் என எல்லா நிலையங்களிலும் சமூகநீதியை வலியுறுத்திப் போராடுவதன்மூலமே சமுதாயத்தில் சம நிலையை உருவாக்க முடியும்.
                1. (நன்றி: தி சண்டே இந்தியன் (நவ.18, 2007)).

                குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

                மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...