Thursday, February 7, 2008

எந்த எல்லைக்கும் சென்று கலவரம் விளைவிக்கத் திட்டம்

தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலக குண்டுவெடிப்பு
இந்து முன்னணியினர் கைது - எதைக் காட்டுகிறது?



எந்த எல்லைக்கும் சென்று கலவரம் விளைவிக்கத் திட்டம்

உளவுத்துறை தீவிரமாக விசாரணை நடத்தட்டும்!




தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை



தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை இந்து முன்னணியினரே குண்டு வைத்துத் தகர்த்துள்ள பின்னணி குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் கடந்த 24 ஆம் தேதி இரவு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலைய குண்டுவெடிப்பில் வெற்றிலை வியாபாரி உள்பட 2 பேர் காய மடைந்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்து முன்னணிப் பிரமுகர் குமார் பாண்டியனின் (வயது 40) அண்ணன் உள்பட 3 பேரை குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக் காத குண்டு மற்றும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து தென்மண்டல அய்.ஜி. சஞ்சீவ்குமார், டி.அய்.ஜி. கண்ணப்பன், எஸ்.பி. சிறீதர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு தொடர்பாக, தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த சமீபத்தில் கொலையுண்ட இந்து முன்னணி தென்காசி நகர பிரமுகர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவி பாண்டியன் (வயது 42), குமார் என்ற கேடிசி குமார் (வயது 28), நாராயண சர்மா (வயது 26) ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளோம்.ரவிபாண்டியனிடம் நடத்தப் பட்ட விசாரணையில், தனது வீட்டில் 4 பேர் பலியான போதும் இந்துக்களிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. போதிய ஆதாரம் கிடைக்கவில்லை. இப்படி ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தால், அவர்கள் ஒன்றாக சேர்வார்கள் என்ற நோக்கத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தார்.

அவருக்குச் சொந்தமான கேபிள் டி.வி., அறையில் வைத்து குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 குண்டுகளை தயாரித்து, அவற்றை இரண்டு இரண்டாக சேர்த்து 7 குண்டுகளாக மாற்றி உள்ளனர். கடந்த ஜூலை மாதத்திலிருந்தே குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு தான் 6 பேர் கொலை நடந்துள்ளது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிந்துள்ளது. 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பலர் கைதாவார்கள்.ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு முன்பாக, மின்சார ப்யூஸ் கேரியரை உருவி மின் தடையை ஏற் படுத்தியுள்ளனர். சுவிட்ச் ஆன் செய்த 20 அல்லது 30 செகண் டுக்குள் வெடிக்கும் வகையில் குண்டுகளை வடிவமைத்துள்ளனர். - இவ்வாறு அவர்கள் கூறினர்.(தினகரன், 5.2.2008, பக்கம் 6)
இந்தச் செய்திகள் தெரிவிப்பது என்ன?
இந்தச் செய்திகள் தெரிவிக்கும் பாடம் என்ன? இந்து முன்னணி வகையறாக்கள் திட்டமிட்டு மதக் கலவரத்தை உண்டாக்கும் ஒரு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது வெளிப்படை. மண்டைக் காடு கலவரம்பற்றிய ஜஸ்டிஸ் திரு. பெ. வேணுகோபால் அவர்களின் அறிக்கையில்கூட ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் எப்படியெல்லாம் மதக்கலவரங்களைத் தூண்டி வருகிறார்கள் என்பது விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
சதுமுகையில் செருப்பு மாலை போட்டவர்கள் யார்?
ஈரோடு - சத்தியமங்கலம் அருகில் சதுமுகை என்ற ஊரில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைக்குச் செருப்பு மாலை போட்டும், முனீஸ்வரன் சிலையைச் சிதைத்தும் மதக் கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பாக இரண்டு இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்ட செய்தியை இந்து ஏடே வெளிப்படுத்தியதையும் இந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்வது பொருத்தமானது. (தி இந்து, 18.2.2002).கலவரம் விளைவிப்பதற்காக அவர்கள் அலுவலகத்தை அவர்களே குண்டு வைத்துத் தகர்க்கின்றனர் என்றால், இவர்கள் வேறு எதைத்தான் செய்யமாட்டார்கள்?சதி வேலைநாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஒரு பக்கத்தில் பிரச்சாரம் செய்துகொண்டே இன்னொரு பக்கத்தில் அப்படி சொல்பவர்களே மதக் கலவரங் களை விளைவிக்கக் கத்தி தீட்டு வதும் எத்தகைய சதி வேலை!உளவுத் துறை தீவிரமாக விசாரிக்கட்டும்!காவல்துறை - உளவுத் துறை இந்த இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். கண்மூடி கண் திறப்பதற்குள் ளாகவே விஷ விதைகளை ஊன்றிடக் கூடிய பயிற்சி பெற்ற ஆபத்தானவர்கள் இவர்கள்.தென்காசி குண்டுவெடிப்புத் தொடர்பாக மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய ஏடுகள் கூறுகின்றன.இவர்களைத் தீவிரமாக விசாரித்தால், இவர்களின் பின்னணி யில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் - இந்தக் கும்பலின் தொடர்ச்சி எங்கெங்கெல்லாம் செல்லுகிறது என்பதைக் கண்டு பிடித்துவிட முடியும்.இந்தத் திசையில் புலனாய்வு தீவிரமாகட்டும்!







தலைவர், திராவிடர் கழகம்.

Monday, February 4, 2008

தினமணி கக்கும் நஞ்சு


நாட்டு நடப்பு
தமிழர் பண்பாட்டைப்பற்றி தினமணிகள் பேசலாமா? தமிழர் பண்பாடு என்றால் என்ன? என்று எழுத்தாளர் சிவசங்கரி ஒருமுறை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைப் பார்த்து ஒரு பேட்டியில் வினா எழுப்பினார்.அதுவா? - அம்மாவை வாடி என்றும், அக்காவை போடி என்றும் சொல்லாததுதான் தமிழர் பண்பாடு என்று கூறினார்.தினமணி (3-2-2008)யின் முதல் பக்கம் கார்ட்டூனை பார்க்கும்பொழுது, தமிழர்களை கொச்சைப்படுத்துவதில் அவர்கள் காட்டும் வெறி இன்னும் அடங்கவில்லை என்பதைதான் வெளிப்படுத்துகிறது. கணவன் பேசுவதை மனைவி ஒட்டுக் கேட்பதும், மருமகள் பேசுவதை மாமியார் ஒட்டுக் கேட்பதும், பிள்ளைகள் பேசுவதை பெற்றோர்கள் ஒட்டுக் கேட்பதும் தமிழர் பண்பாடுதானே என்று கருத்துப் படம் வெளியிட்டிருக்கிறது தினமணி.டெலிபோனில் ஒட்டுக் கேட்பது பற்றிய பிரச்சினையில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தமிழர்களை இழுத்துக் கொச்சைப்படுத்த வேண்டுமா? டெலிபோனில் ஒட்டுக் கேட்கப்படுவதற்கும் இதற்கும் என்ன தொடர்பு.பிரச்சினை எதுவாயிருந்தாலும் தமிழர்களை இழிவுபடுத்த வேண்டும் என்கிற திமிரும், ஆணவமும்தானே இதன் பின்னணியில் இருக்கிறது.ஒட்டுக் கேட்பது இயல்புதானே என்று பொதுவாகச் சொன்னால்கூட அதைப் புரிந்துகொள்ள முடியும். இந்த ஒட்டுக் கேட்பது என்பது தமிழர் பண்பாடுதான் என்று தினமணிகள் எழுதுவது - தமிழினத்தின் மீது பார்ப்பனர்களுக்கு இருக்கும் அடக்க முடியாத திமிர் பிடித்த துவேஷம் என்பது அல்லாமல் வேறு என்ன?ஒட்டுக் கேட்பது, போட்டுக் கொடுப் பது, உயர் பதவிகள் பெறுவதற்காக மேலதிகாரிகளை அந்தரங்கத்தில் சந்திப்பது என்பதெல்லாம் பார்ப்பன வட்டாரத்துக்குக் கைவந்த கலை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!பண்பாட்டைப் பற்றியெல்லாம் பார்ப்பனர்கள் பேச ஆரம்பித்தால் அது எங்கே கொண்டு போய்விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண் டும், கண்ணாடி வீட்டிலிருந்தா கல் எறிவது?பெற்ற மகளையே பெண்டாண் டான் படைப்புக் கடவுள் பிர்மா - என்று புராணம் எழுதி வைத்துக் கொண்டுள்ள கூட்டமா பண்பாடு களைப் பற்றிப் பேசுவது? கோள் சொல்லுவதற்கும், சண்டை மூட்டி விடுவதற்கும், ஒட்டுக் கேட்பதற் கும் என்றே நாரதன் என்ற கடவுளை கற்பித்துள்ள கூட்டத்திற்கு இதுமாதிரி பிரச்சினைகளைப்பற்றி பேசவோ, எழுதவோ அருகதை உண்டா?தமிழைப் பேசிக் கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழிலேயே பத்திரிகைகளை நடத்தி, தமிழர்களின் பணத்தால் வயிறு நிரப்பிக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம் - தமிழர்களைக் கொச்சைப்படுத்துவது என்பதையே தம் ரத்த ஓட்டமாகக் கொண்டு திரிகிறது என்பதைத் தமிழர்கள் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டாமா?தமிழ் செம்மொழியானால், நாலு பிளேட் பிரியாணி கிடைக்குமா? என்று தினமலர் கேள்வி கேட்கிறது. தைத் திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று கலைஞர் அறிவித்தால் - கிடந்தது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மணை யிலே வை என்ற கதைதான் என்கிறது கல்கி.வேறு எது எதற்கெல்லாமோ கச்சை கட்டிக் கொண்டு கிளப்பும் நம் தமிழர்களும், தமிழர் அமைப்புகளும் - இந்தப் பார்ப்பனர்கள் தமிழர்களைச் சீண்டுவதையே, கொச்சைப்படுத்துவதையே பிழைப்பாகக் கொண்டு செயல்படுகிறார்களே, இவர்களின் பக்கம் கவனத்தைத் திருப்ப வேண்டாமா?தினமணி மீண்டும் ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் கையிலே தஞ்சம் புகுந்துவிட்டது. திருவாளர் சோ வின் பினாமியாக இருக் கக் கூடிய ஒருவர், தினமணியை ஆர்.எஸ்.எஸின் அதிகாரப் பூர்வ ஏடாக அறிவிக்கும் வரை ஓயமாட்டார் என்று தெரிகிறது.
- மயிலாடன்


Sunday, December 2, 2007

மகிழ்ச்சியான செய்தி தமிழர் தலைவர் பவள விழா நேரடி ஒளிபரப்பு!



தமிழர் தலைவரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் பெரியார் வலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப் பாக இருக்கிறது. 2.12.2007 அன்று காலை - மாலை நிகழச்சிகளை periyar.org.in வலைத்தளத்தில் நேரடியாகக் காணலாம். உலகத் தமிழர்களே! தமிழர் தலைவரின் விழா மாட்சியைக் காண இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்!

Saturday, December 1, 2007

பன்னாட்டு நிறுவனங்களில் ஜாதிப்பார்வை -




    சமூகநீதிக்குத் தலைநகரமான தமிழகம்-தான் இந்தியாவிற்கே இன்று வழிகாட்டி வருகிறது. எதையும் கொஞ்சம் முந்திச் சிந்திப்பது பெரியாரின் மரபு. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, அதாவது இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்கு முன்பேயே சமூகநீதி குறித்து தமிழகம்தான் சிந்தித்தது. அரசியல் விடுதலையை விட, சமூக விடுதலையே அவசியம் என பெரியார் முழங்கினார். அன்றைய நாள் தொட்டு, திராவிட இயக்கம் நடத்திய போராட்டமே சமூகநீதியை உறுதி செய்து இட ஒதுக்கீடு முறையைத் தமிழகம் தக்க வைத்துக் கொண்டது.

      1985-களின்போது அரசுத் துறை நிறு-வனங்களைப் போலவே தனியார்த் துறையும் இந்தியா-வில் அதிக அளவு வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகின. இந்திய அரசியல் சூழல் உலக மயமாதலுக்கு உறுதுணையாக அமைந்தது; அதன் விளைவாக தனியார்த் துறையில் பனியாக்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஈடுபட்டு தொழில்களைக் கைப்பற்றி விடும் என முன்னேயே கணித்தது திராவிடர் கழகம். பெரியாரின் மரபில் அவரின் வீச்சோடு எதையும் தொலைநோக்கோடு சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்த தலைவர் கி. வீரமணி அவர்கள் தனியார், துறையிலும் இட ஒதுக்கீடு என்ற முழக்கத்தை முதன்முதலில் எழுப்பினார் 2.1.1982 இல் மதுரையில் நடைபெற்ற தி.க., மாநாட்டில்-தான் தனியார் துறையில் இட ஒதுக்கீடு குறித்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.

        இன்று இந்தியாவெங்கும் தனியார் துறைகள் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சமூகநீதிக் கொள்கையில் உடன்பாடு கொண்ட அத்தனைக் கட்சிகளும் தி.க.,வின் அன்றைய தீர்மானத்தை இன்று வழிமொழிகின்றன. ஒரு பக்கம் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்திப் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், அண்மையில் நடந்த ஒரு நிகழ்வு ஜாதியப் பார்வை இன்னும் உயர் ஜாதியினரிடம் இருந்து அகன்று விடவில்லை என்பதை உணர்த்தியுள்ளது. டெல்லியில் உள்ள மயூர் பாஞ்ச் பகுதியில் இந்தியாவின் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கான நேர்காணலுக்கு பித்யூத் என்பவர் சென்றுள்ளார். இவர் ஒரு தாழ்த்தப்பட்டவர். டில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் கணிதம் பயின்றவர். அந்தப் பன்னாட்டு நிறுவனத்தில் பித்யூத்க்கு அமர்வதற்கு நாற்காலிகூட தரப்பட-வில்லையாம். நேர்காணல் செய்யப்படும்போது பித்யூத்தின் கல்வித் தகுதியைத் தவிர்த்து விட்டு, குடும்பப் பின்னணி (அதாவது ஜாதி) பொருளாதாரப் பின்புலம், பெற்றோரின் வேலை வாய்ப்பு ஆகியவைபற்றியே கேள்வி கேட்கப்பட்டதாம். கடைசியில் அந்நிறுவன இயக்குநர், மிகக் குறைந்த ஊதியத்தில் பிழைக்கும் குடும்பத்தில் பிறந்தவருக்கு வேலை தர முடியாது என மறுத்துவிட்டாராம். இந்த நிகழ்வு ஒரு உதாரணம்தான். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு இந்த நிலைதான் என்பதை ஒரு ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.

          நியூயார்க்கின் சிட்டி பல்கலைப் பேராசிரியர் பால் அட்டினுல் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைப் பேராசிரியர் கேத்ரின் நியூமென் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்குத் தற்போதைய பல்கலைக் கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) தலைவர் சுக்தேவ் தோரட் ஒத்துழைப்புத் தந்துள்ளார். 2005 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு நாளிதழ்களில் இருந்தது பன்னாட்டு வேலை வாய்ப்பு விளம்பரங்களைச் சேகரித்தனர். அதிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் மூன்றுவிதமான மனுக்கள் மற்றும் கடிதங்களை இந்த ஆய்வில் ஈடுபட்ட-வர்கள் உருவாக்கினார்கள். அந்த மனுக்களில் எளிதில் பிரித்து அறிய முடியாத கல்வி மற்றும் இதர விவரங்களை இடம்பெறச் செய்தனர். ஜாதி மற்றும் மதப் பின்னணிபற்றி வெளிப்படையாகக் குறிப்பிடாமல் ஒவ்வொரு செட் மனுக்களிலும் - ஒன்று உயர்ஜாதி பெயர் கொண்டவராகவும், இன்னொன்று சிறுபான்மையினர் அல்லது தாழ்த்தப்பட்டவர் பெயர் கொண்டவராகவும் அமைக்கப்பட்டது. அதில் தொடர்பு முகவரியும் எழுதப்பட்டி-ருந்தது. இதுபோல மொத்தம் 4,808 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. நேர்-காணலுக்-கான வாய்ப்பு எப்படி அமைந்தது என்பதில்தான் தனியார் நிறுவனங்களின் ஜாதிய மனப்பான்மை தெரிய வந்தது.

            உயர்ஜாதி மனுதாரரோடு ஒப்பிடும்போது அதே அளவு கல்வித் தகுதி உடைய தாழ்த்தப்-பட்ட மாணவருக்கான நேர்காணல் வாய்ப்பு 66 சதவிகிதமாக மட்டுமே கிடைத்தது. இஸ்லாமிய மனுதாரரைப் பொறுத்தவரை இந்த வாய்ப்பு 33 சதவிகிதமாகக் குறைந்து-விட்டது. தகுதிக் வாய்ந்த தாழ்த்தப்பட்ட மாணவரைவிட தகுதி குறைவான உயர்ஜாதி மாணவருக்கு 20 சதவிகித அளவில் அதிக வாய்ப்பு கிடைத்தது. சமூகப் பொறுப்-புணர்ச்சிபற்றிப் பேசும் பல நிறுவனங்களும் இதில் அடக்கம் என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

              இந்த ஆய்வு குறித்துப் பேசிய சுக்தேவ் தோரட், வணிக நிறுவனங்கள் சமூகப் பின்னணியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுகின்றனர் என்பதற்கான ஆதாரம் முதல் முறையாகக் கிடைத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறினார்.

                பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் இந்து மத இழிகுணம் எந்த வகையிலும் அதன் பார்வையைக் கைவிடவில்லை. ஒரு வேலைக்-கோ, தொழிலுக்கோ அதற்குத் தேவையான அறிவும் உழைப்புக்கான தகுதி மட்டுமே போதுமானது. ஆனால், இந்தியாவில் இதையும் தாண்டி ஜாதித் தகுதி என்ற மோசமான பார்வை இன்னும் இருக்கிறது என்பதையே இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது. சமூகச் சமநிலையைக் கொண்டு வர அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மட்டுமல்லாது தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கவேண்டிய சூழல் அதிகரித்து வருகிறது. அரசுத் துறை, நீதித்துறை, தனியார் துறைகள், பன்னாட்டு நிறுவனங்கள் என எல்லா நிலையங்களிலும் சமூகநீதியை வலியுறுத்திப் போராடுவதன்மூலமே சமுதாயத்தில் சம நிலையை உருவாக்க முடியும்.
                1. (நன்றி: தி சண்டே இந்தியன் (நவ.18, 2007)).

                Tuesday, November 20, 2007

                பா.ஜ.க., ஆசையில் விழுந்த மண்!

                சாலமன் கிரண்டி திங்கள்கிழமை பிறந்தான் (Born on Monday) ஞாயிறு அன்று மரித்தான் என்று கூறும் ஆங்கிலக் கவிதை பலருக்கும் நினைவிருக்கலாம். அதனை மறந்து போனவர்கள், அல்லது இதுவரை அறியாமல் இருந்தவர்கள் கருநாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி - ஆட்சி அமைத்த ஒரு வார காலத்தில் மரணித்ததன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.சோ ராமசாமி கல்கி போன்ற பார்ப்பன அமைப்பு களே குமட்டிக் கொண்ட அளவுக்கு பா.ஜ.க.,வின் பதவி வெறி அனைத்து நியாய தர்மங்களையும் தூக்கி எறியச் செய்துவிட்டது.மற்ற மற்ற அரசியல் கட்சிகளைப் போன்றதல்ல பா.ஜ.க.; அதற்கென்று அறநெறிக் கோட்பாடுகள் அநேகம் உண்டு என்று வானக் கூரையேறி முழக்கம் போடுவதில் குறைச்ச லில்லை. ஆனால், நடப்புகள் என்னவோ அதற்கு நேர் எதிர்மறைதான்.மதச்சார்பற்ற ஜனதா தளம் தொடக்கத்திலேயே தன் ஆதரவை அளிப்பதில் கோணங்கி வித்தைகளை எல்லாம் காட்டியது. அப்பொழுதே மரியாதையாக ஆட்சியும் வேண் டாம் - மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று சொல்லியி ருந்தால், கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சியிருந்திருக்கும். இதில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கேவ லத்தின் எல்லைக்கே சென்றுவிட்டது என்பது இன்னொரு சங்கதி.மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற மகுடத்தைத் தரித்துக் கொண்டு, பாரதீய ஜனதாவின் தயவில் ஆட்சியை நடத்தியது. தொடக்கத்தில் பா.ஜ.க.,வுக்கு ஆதரவு இல்லை என்று தெரிவித்துவிட்டு, அதன்பின்னர் ஆதரவு என்றும், நேசக் கரத்தையும் நீட்டி துணை முதலமைச்சர் என்ற பதவியையும் பெற்றுக்கொண்டு, சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் காலை வாரிவிட்டது! பா.ஜ.க.,வின் தகுதிக்கு சரியான கூட்டாளிதான் என்பதை இதன்மூலம் தனக்குத்தானே அறிவித்துக் கொண்டுவிட்டது மதச் சார்பற்ற ஜனதா தளம்.பா.ஜ.க., மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று மோசமாக நடந்துகொண்டாலும் எப்படியோ நாட்டுக்கு நல்லது நடந்துவிட்டது; மதவெறி ஆட்சியின் கீழ் அவலப்படவேண்டிய ஆபத்திலிருந்து கருநாடக மாநிலம் தப்பிப் பிழைத்துக் கொண்டுவிட்டது - அந்த அளவுக்கு அம்மாநில மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.தென்மாநிலங்களில் கருநாடகத்தில் முதன்முதலாக ஆட்சியைப் பிடித்துவிட்டது பாரதீய ஜனதா தளம் என்ற மகிழ்ச்சியில் வாணவேடிக்கை நடத்தினார்கள். தமிழ்நாட்டு பா.ஜ.க.,வினர் இனிப்புகளை வழங்கி தீபாவளியும் கொண்டாடினார்கள். இப்பொழுது துக்க வீடாகக் களை யிழந்து காணப்படுகிறது.மதச்சார்பற்ற ஜனதா தளம் நம்பிக்கை மோசடி செய்துவிட்டது என்றெல்லாம் குற்றப் பத்திரிகை படிக்கலாம் பா.ஜ.க. ஆனால், அப்படி சொல்ல அதற்கு அடிப்படை அருகதை உண்டா என்பதுதான் முக்கியமான வினாவாகும்.ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனதாவுடன் அய்க்கிய மான நிலையிலும்கூட, ஆர்.எஸ்.எஸில் உறுப்பினர் என்கிற இரட்டை நிலையை எடுத்தவர்கள்தானே இவர்கள்! அதன் காரணமாகவே தானே ஜனதா என்ற மதச்சார்பற்ற அமைப்பு நொறுங்கிப் போனது.நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி கரசேவை என்ற பெயரில் பாபர் மசூதியை ஒரு பட்டப்பகலில் இடித்து தரைமட்டமாக்கிய வாக்குச் (அ)சுத்தக்காரக் கூட்டம்தானே அது!மண்டல் குழுப் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் அமல்படுத்திய காரணத்தால்தானே, வெளியிலிருந்து அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க., விலக்கிக் கொண்டு, ஒரு நல்லாட்சியைக் கவிழ்த்த மாபாதகத்தைச் செய்தது.இந்த நிலையில், இன்னொரு கட்சியை நோக்கி விரலை நீட்டிக் குற்றம் சுமத்தும் யோக்கியதை பா.ஜ.க.,வுக்கு கிடையாது - கிடையவே கிடையாது என்பதைப் பொதுமக்கள் அறிவார்களாக!

                நன்றி: விடுதலை தலையங்கம் 20.11.2007

                எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!

                கர்நாடக பா.ஜ.க. அரசு கவிழ்ந்தது

                நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் 7 நாளில் பதவி விலகல்

                பெங்களுர், நவ.20-
                கர்நாடக மாநிலத்தில் அமைந்த எடியூ ரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு 7 நாள்களில் நம்பிக்கை வாக்கெடுப்புகூட நடத்தாமல் கவிழ்ந்தது.எடியூரப்பா அரசு அமைக்க முதலில் ஆதரவளித்த மதச் சார்பற்ற ஜனதா தளம் தனது முடிவை மாற்றிக் கொண்ட தால் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக் கும் முன்னதாகவே எடியூரப்பா அரசு பதவி விலகியது.இம்மாதம் 12 ஆம் தேதி பதவியேற்ற எடியூரப்பா 20 ஆம் தேதிக்குள் தனது பெரும் பான்மையை மெய்ப்பிக்க வேண்டுமென்று ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் காலகெடு விதித்தார். அதற்கு ஒரு நாள் முன்னதாக 19 ஆம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் போவதாக எடியூரப்பா அறி வித்திருந்தார்.நேற்று மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடந்தது. குமாரசாமி முதல்வராக இருந்தபோது அவர் மீது கொலைப் பழி சுமத்திய சிறீராமுலுவுக்கு அமைச்சர் பதவி தரக்கூடாது என்ற கோரிக்கையை பா.ஜ.க. ஏற்க மறுத்ததால், எடியூரப்பா அரசை எதிர்த்து வாக்களிப் பது என முடிவு செய்யப்பட் டது.பரபரப்பான இந்தப் பின் னணியில் நேற்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடி யது. முன்னாள் உறுப்பினர் களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்தி வைக்கப் பட்டு பிற்பகல் 3 மணிக்கு மறுபடியும் அவை தொடங் கியது. முதல்வர் எடியூரப்பா தனது அரசுமீதான நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டு வந்த பேசினார். அதன் பின் அதன் மிது விவாதம் நடைபெற்றது.நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு கிடைக்காது என்பது உறுதியான நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வ தாகத் தெரிவித்து விட்டு, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அவர் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.

                Friday, November 16, 2007

                பாசிச கொடூர சக்திகளிடமிருந்து ஈழ மக்களைக் காப்பாற்றும் ஒரே அமைப்பு விடுதலைப்புலிகளே! - கி.வீரமணி

                சுப. தமிழ்ச்செல்வன் மறைவிற்கு முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்தது மனிதாபிமான அடிப்படையில்தான்!

                அதற்காக காங்கிரசார் இரத்தக் கண்ணீர் வடிக்கவேண்டுமா?



                காந்தியாரைக் கொன்ற பரம்பரையினர் ஆட்சிக்கு வரவில்லையா - அவர்களோடு தேவைப்படும்போது நாகரிகம் கருதிக் கைகுலுக்குவதில்லையா?


                ஈழ மக்களை அழிக்கும் பாசிச கொடூர சக்திகளிடமிருந்து அம்மக்களைக் காப்பாற்றும் ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள்தானே!

                ராஜீவ் படுகொலையையும், இதனையும் குழப்பிக் கொள்ளலாமா?
                உரிமையுடன் காங்கிரசாருக்குச் சுட்டிக்காட்டுகிறோம்


                தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

                விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச் செல்வன் மறைவிற்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கண்ணீர் இரங்கல் தெரிவித்ததற்காக ரத்தக் கண்ணீர் வடிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

                அரசியல் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துள்ள தமிழக முதல்வர், முன்னாள் பிரதமரை படுகொலை செய்த, தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலி இரங் கற்பா எங்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத் துள்ளது என்று சத்தியமூர்த்தி பவனில் கூட்டிய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர்.உலகத் தமிழர்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பார்களே!தங்களுடைய தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் இந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, அவர்கள் மறக்கவொண் ணாத் துன்பம், துயரத்தின் காரணமாக இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்; இத்தீர்மானத்தினைக் கண்டு உலகம் முழுவதிலும் வாழும் மனிதநேயமும், தமிழ் இன உணர்வும் கொண்ட கோடானு கோடி தமிழர்கள் உண்மையாகவே இரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மிகுந்த மரியாதையுடன் காங்கிரஸ் நண்பர்களுக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

                மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப் பட்டதை, மனித இதயம் படைத்த எவராலும் ஏற்கவே முடியாது.அப்படி ஒரு கோரமான, சோகமான சம்பவம் அதுவும் தமிழ் மண்ணில் நிகழ்ந்திருக்கவே கூடாது; அது கண்டனத்திற்குரியது. இதை நாம் இப்போது சொல்லவில்லை. இந்தச் சம்பவம் நடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறோம்.அந்நிகழ்வின் விளைவுதான் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் இல்லாத ஓர் இயக்கமாக இருப்பினும்கூட - தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
                அண்டை நாட்டில் தமிழர்களைப் பாதுகாப்பவர்கள் யார்?
                ஆனால், அண்டை நாடான இலங்கையில் ஈழத் தமிழர்கள் - ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சொந்த நாட்டிலேயே அந்நாட்டு முப்படையினரால் - ஈவு இரக்கமின்றி காக்கைக் குருவிகளைப்போல் கொல்லப்பட்டும், வாழ்வுரிமையை இழந்தும், பட்டினியாலும், நோயாலும் அழிக்கப்படும் நிலை நிலவுகிறதே! சிங்கள அரசு தமிழர்கள்மீது மூர்க்கத்தனமாக கடந்த 20 ஆண்டு களுக்குமேல் திட்டமிட்டு போர் நடத்துகிறதே! சிங்கள அரசின் இனப்படுகொலையிலிருந்து அவர்களைக் காப்பவர்கள் அவர் களுக்குப் பாதுகாப்பாக அமைந்து போராடுபவர்கள் அவர்களின் வாழ்வுரிமையை மய்யப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா?

                ஈழத் தமிழர்களை அழித்துவரும் ராஜபக்சே அரசு ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சில குறைந்தபட்ச சலுகைகளைக்கூட காலில் போட்டு மிதித்துவிட்டது என்பதும் உலகம் அறிந்த உண்மையல்லவா!
                சமாதானப் புறாவைச் சாகடித்துவிட்டனரே!
                அந்த மக்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற பற்பல வெளி நாடுகள் - நார்வே, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாட்டவர்கள் எல்லாம் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, தங்களது மனித நேயத்தைக் காட்டிவரும் வேளையில், சிவிலியன் மக்கள்மீதும், ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின்மீதும்கூட குண்டுமாரி பொழிந்தவர்களைத் தடுத்ததோடு, சமாதானப் புறாவாகப் பறந்து, இப்பிரச்சினைக்கு ஓர் இணக்கமான உடன்பாடு காண முயன்ற ஒருவரது படுகொலைக்காக மனிதாபிமானத்தோடு, அதுவும் நாட்டால் வேறுபட்டாலும், தமிழ் மான உணர்வில் ஒன்றுபட்ட ஒருவருக்காகக் கண்ணீர் சிந்தி அழுவது எப்படி தேசியக் குற்றமாகும் என்பதை நிதானித்து நமது காங்கிரஸ் சகோதரர்கள் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.
                செய்யாத குற்றத்துக்கு ஜென்ம தண்டனை!

                கலைஞர் அவர்கள் ஆண்ட போது இப்படி ஒரு படுகொலை நிகழ வில்லை; மாறாக மத்தியில் உள்ள ஆட்சி - காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த ஓர் ஆட்சி - குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தபோதுதான் நிகழ்ந்தது என்றாலும், செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல எத்தனையோ சொல்லொணாக் கொடுமைகளை தி.மு.க.,வும், அதன் தோழமையினரும் அன்று அனுபவித்தனர்.

                அவைகளையெல்லாம் தாண்டி சில மாதங்களுக்குமுன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற நிகழ்வுகளின்போது, இப்பிரச்சினை குறித்து மிகத் தெளிவாக முதல்வர் கலைஞர் அவர்கள் விளக்கி, நடந்த சம்பவங்களைக் கண்டித்துவிட்டு, அதற்காக ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை நாம் அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்பதை உள்ளடக்கமாகக் கொண்டு, தோழமைக் கட்சியினரின் ஒத்துழைப்போடு ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது நினைவூட்டப்பட வேண்டியதாகும்.

                அன்று ராஜீவ் காந்தியோடு சந்திப்புஅம்பேத்கர் நூற்றாண்டு விழா குழு (1989 இல் மத்தியில் வி.பி. சிங் பிரதமராகவும், ராஜீவ் காந்தி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தபோது)வில் ஓர் உறுப்பினர் என்ற முறையில் டில்லி பார்லி மெண்ட் அனெக்ஸ் கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் மதிய உணவுக் காகக் கலைந்து, உணவு பரிமாறும்போது, பலருடனும் ராஜீவ் காந்தி அவர்கள் சகஜமாகப் பேசி வந்தவர்; திடீரென என்னைப் பெயர் சொல்லி அழைத்து, அருகில் அழைத்து, தனியே பேசினார்.

                இலங் கையில் இனப்படுகொலை நடப்பது மிகவும் கொடுமை; இதை நாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அங்கே தீவாயு (நாப்பாம்) குண்டு வீசுகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது என்று கூறினார்.

                முதலமைச்சர் கலைஞரிடம் கூறினேன்

                ராஜீவ் அவர்களே, நீங்கள் தங்கள் தாயார் இந்திரா காந்தி அவர்கள் கடைசியாக தஞ்சாவூருக்கு வந்தபோதே இதே சொல்லை (ழுநடிஉனைந) பயன்படுத்தினார்; இப்போது நீங்களும் அதையே சொல்வது தங்களுக்குள்ள மனிதாபிமானத்தினைக் காட்டுகிறது என்று நான் சொன்னவுடன், தமிழ்நாடு முதல்வர் கலைஞரிடம் சொல்லுங்கள் என்றே சொன்னார். அதன்படி நான் சென்னை வந்து முதல்வரிடம் (கலைஞரிடம்) ராஜீவ் காந்தி அவர்கள் சொன்னதைக் கூறியதோடு, அவர்தம் பதில் பற்றி தன்னிடமோ அல்லது குறிப்பிட்ட சில அதிகாரிகளிடமோ கூறச் செய்யுங்கள் என்று ராஜீவ் காந்தி சொன்னதையும், முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினேன்.

                அப்படிப்பட்டவர் கொல்லப்பட்டது மிகக் கொடுமை - ஏற்கவே இயலாது!என்னை அவர் தனியே அழைத்துப் பேசியவுடன் சற்று தூரத்திலிருந்து பார்த்தவர் இந்து ஆசிரியர் என். ராம் அவர்கள். அதற்குப்பின் எவ்வளவோ நடந்துவிட்டன! இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது! ராஜீவ் கொலையையும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் 20 ஆண்டுகளாக நொடிதொறும் அனுபவிக்கும் வாழ்க்கைத் துயரத் தையும் ஒன்றாகவே காங்கிரஸ் கட்சியினர் பார்த்தால் அது சரியாக இருக்குமா?

                நிதியமைச்சர் ப. சிதம்பரம்கூறியதுகூடக் குற்றம்தானா?

                அண்மையில் இலங்கைக்குச் சென்று உரையாற்றிய, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய, நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், இராணுவ நடவடிக்கையால் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது; அரசியல் தீர்வுதான் வழி; விடுதலைப்புலி களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று ராஜேபக்சே அரசுக்கு அறிவுரை கூறிவிட்டு வந்துள்ளாரே, அதுகுறித்து தடை செய்யப் பட்ட விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசியல் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்தவர் பேசலாமா என்று கேட்டால், நியாயமா?அனுதாபம் தெரிவித்ததைவிட சற்றுக் கூடுதலான நடவடிக்கை அல்லவா, இது!

                முதல்வர் தெரிவித்தநல்லெண்ணக் கண்ணீர் அஞ்சலி

                நல்லெண்ணத்தோடு அவர்கள் சொன்னதைப்போலவே, எவ்வித உள்நோக்கமும் இன்றி கண்ணீர் அஞ்சலியை கலைஞர் விடுத்தால், அதைக் கண்டு ரத்தக் கண்ணீர் சிந்துகிறோம் என்று சொல்லி, இந்த ஆட்சியை வீழ்த்தவேண்டும், பலவீனப்படுத்தவேண் டும் என்று நினைக்கும் மதவெறி மற்றும் பார்ப்பனீய சக்திகளுக்கு அறிந்தோ, அறியாமலோ, தோழமைக்கட்சியினர் துணை போகலாமா?

                ஒரு மரணத்துக்காகக் கண்ணீர் வடிக்கக் கூடாது; ஆனந்தக் கண்ணீர் உகுக்கவேண்டும் என்ற எண்ணத்தை காங்கிரசார் உருவாக்கலாமா? இந்நிலை அக்கட்சிக்குப் பெருமை சேர்க்காதே!

                திரு. வீரப்பமொய்லி அவர்களிடம் கேட்கப்பட்டபோதுகூட, அவர்கள் அவர்களது தனிப்பட்ட உணர்வு என்று சொன்னதையும் சுட்டிக்காட்ட நாம் விழைகிறோம்.தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியார் அவர்களையே படுகொலை செய்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தனரே - அவர்களைப் பார்ப்பதே பாவம் என்றா கண்களை மூடிக்கொண்டு விட்டனர்? அரசியலில் தேவைப்படும் போது, கைகுலுக்கிக் கொண்டது இல்லையா? நாகரிகம் கருதி பல சந்தர்ப்பங்களில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதில்லையா?

                பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் என்று கூறி ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தையே தீண்டத்தகாத பட்டியலில் வைக்க வில்லையே! தடை செய்யப்பட்ட காஷ்மீர், வடகிழக்கு மாகாண தீவிரவாத அமைப்புகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துவது இல்லையா?ராஜீவ் படுகொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாழும் ஒரு பெண்மணி (நளினி) விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பெருமை மிக்க எடுத்துக்காட்டாகக் காங்கிரசார் கொள்ள வேண்டாமா? வெறும் வாய்க்கு அவலா?அவரவர்கள் கருத்துகளை வெளியிட அவரவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும்,அரசியல் எதிரிகளுக்கும், கலைஞரைத் தனிப்பட்ட முறையில் எதிர்ப்போருக்கும் வெறும் வாயை மென்றவர்களுக்கு இந்த அவலை மெல்லுங்கள் என்று தருவதால், என்ன லாபம்? மத்தியில் உள்ள ஆட்சிக்கு மூலக்கல்லாக இருக்கும் தி.மு.க., ஆட்சியை அசைத்துப் பார்த்தால் யாருக்கு நட்டம் - யோசிக்க வேண்டாமா?மனிதநேயர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதநேயர்கள் மத்தியில் இது எவ்வகையான சிந்தனைகளை எழுப்பும் என்பதை யும் அருள்கூர்ந்து காங்கிரஸ் கட்சி நண்பர்கள் சிந்திக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

                உரிமையுடன் சுட்டிக்காட்டுகிறோம்உங்களுக்கென்ன (தி.க.) உரிமை என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்; காரணம், 1954 முதல் 1967 வரை அதை ஆதரித்ததோடு, 2004-லும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மகத்தான ஆதரவினையும், 2006 சட்டமன்றத் தேர்தலில் அதனை ஆதரித்தோடு, இன்னமும் ஆதரிப்பவர்கள் என்ற உரிமையுடனும் சுட்டிக்காட்டுகிறோம்.

                கி.வீரமணி
                தலைவர், திராவிடர் கழகம்.
                சென்னை
                15.11.2007

                குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

                மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...