Wednesday, February 12, 2020

ஜப்பானுக்குச் சென்ற கப்பலில் இந்தியர்கள் உள்பட பலருக்கு கரோனா பாதிப்பு

ஹாங்காங் கில் இருந்து ஜப்பானுக்கு 3711 பேருடன் சென்ற டைமண்ட் பிரின்ஸ் சொகுசு கப்பலை நிறுத்தி அதில் பயணம் செய் தவர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத் தப்பட்டது.
இதில் முதியவர் ஒருவ ருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பின் நடத்தப்பட்ட பரிசோதனை யில் மேலும் பலருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுவரை சொகுசு கப்ப லில் 135 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள் ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
ஜப்பானில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ள சொகுசு கப்ப லில் இந்தியர்களும் உள்ள னர். அவர்கள் கப்பலிலிருந்து வெளியேற தடை விதிக்கப் பட்டுள்ளது.
இதனால் அவர்கள் உள் பட அனைத்து பயணிகளும் பரிதவிப்பில் இருக்கிறார்கள். இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டைமண்ட் பிரின்ஸ் சொகுசு கப்பலில் உள்ள பயணிகளில் இந்தியர் களும் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கப்பல் ஊழியர்களில் இந்தி யர்களும் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சொகுசு கப்பலில் தவிக்கும் இந்தியா வைச் சேர்ந்த ஊழியர்கள் வீடியோ ஒன்றை வெளியிட் டுள்ளனர். அதில், தங்களை மீட்டு சொந்த நாடு திரும்ப நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத் துள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...