Wednesday, February 12, 2020

குடியுரிமைத்திருத்தச்சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியைக்கு அச்சுறுத்தல்! உத்தரப் பிரதேச மாநில பாஜகவினர் அடாவடி

டில்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ)  எதிராக கடந்த 50 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்று வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் உத்தர பிரதேச மாநிலம், சகரான்பூரில் உள்ள ஆஷா மாடர்ன் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை நாகித் ஜைதி கடந்த ஜனவரி 19ஆம் தேதி பங்கேற்றார்.
இந்நிலையில், நேற்று அவர் வேலை பார்க்கும் பள்ளியை முற்றுகையிட்ட 200க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களும், பாஜக நிர்வாகிகளும் அவரை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும், அவரை பணி நீக்கம் செய்யும்படி  தலைமையாசிரியரை அச்சுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஆசிரியை நாகித் கூறியதாவது: பள்ளியில் நேற்று இடைவேளையின் போது உள்ளே நுழைந்த 200க்கும் மேற்பட்டோர் எனக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அவர்களின் வற்புறுத்தலால் தலைமையாசிரியர் என்னை பணியில் இருந்து நீக்கியதுடன், பணியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தினார். பின்னர், காவல்துறையினர் மற்றும் உள்ளூர் தலைவர்களின் தலையீட்டால் பணியிடை நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...