Wednesday, February 26, 2014

ஈழத் தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை! - கி.வீரமணி


ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள் (பிப்ரவரி 26)

ஈழத் தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை!

அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலின் பரிந்துரைகளைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் விடுத்துள்ள விரிவான அறிக்கை




உலகத் தமிழர்களால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிற ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாளில் (பிப்ரவரி 26) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2012ஆம் ஆண்டில் பிரிட்டானியப் பாராளுமன்றத்தில் கூடிய, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய உலகின் பன்னாடுகள் சார்ந்த அமைப்புகளாலும், தொண்டு  நிறுவனங்களாலும் ஒரு முக்கிய கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றி சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்றை அய்.நா.வின் உறுப்பினராக உள்ள நாடுகள் வற்புறுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பிப்ரவரி  26ஆம் நாளை ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனுசரிக்கின்றனர்.

இலங்கை அரசுக்கு அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ள பரிந்துரைகளை சுட்டிக் காட்டுவதும், அந்த அடிப்படையில் அய்.நா. செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தவும் உலக நாடுகளும் அய்.நா.வுக்கு அழுத்தும் கொடுக்க வேண்டும் என்று கோரவும் இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

இலங்கை அரசுக்கு அய்நா மனித உரிமைக்கவுன்சிலின் பரிந்துரைகள்

1.    பாதிக்கப்பட்ட மக்களிடம் வெறுப்பு விரோத மனப்பான்மை மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரத்தில் கண் துடைப்பான விசாரணையை போலல் லாமல் சரியான முறையில் விசாரணை நடத்தவேண்டும் ; மனித உரிமை மீறல்பற்றிய விவகாரத்தில் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இலங்கை அரசு விசாரணை நடத்தவேண்டும்; மேலும் இதுவரை நடந்த சில மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு பற்றிய விசாரணையை மறு ஆய்வு செய்து அதையும் சர்வதேச சட்ட திட்டத்திற்கு ஏற்ப மறு விசாரணை செய்யவேண்டும்

2.    தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் தீவிரவாத செயல்கள் புரிந்தவர்கள் என்று கூறி சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள நபர்கள் மீதான அதீத கட்டுப்பாடுகளை விலக்கி, அவர்களுக்கான சட்ட உரிமைகளை வழங்கவேண்டும்.

3.    சிறுபான்மை சமூகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் பற்றி பக்கச்சார்பின்றி விசாரணை நடத் தப்பட வேண்டும்; மற்றும் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வர்கள்  கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பிற்கு அரசு உறுதியளிக்கவேண்டும். மனித புதை குழிகள்

4.    சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழிகள் பற்றி மனித உரிமை மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் படி தகுந்த விசாரணை நடத்தி, அது பற்றிய உண்மைகளை உலகிற்குக் கொண்டுவரவேண்டும். குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கும், நோக்கிலோ அல்லது அவர்களை தப்பவைக்கும் செயலிலோ இறங்கக்கூடாது.

5. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்க வேண்டும். மேலும் சர்வதேச சட்டவிதிகளுக்கு ஏற்ப அம்மக்களின் புகார்களுக்குத் தகுந்த பதில் அளிக்க வேண்டும்; அவர்களுக்கான இழப்பீடு கொடுப்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

6.    விடுதலைப்புலிகளின் காலத்தின் போதும், இறுதிப் போருக்குப் பிறகும் இராணுவக்குழு அமைத்த நீதிமன்ற விசாரணைகளை உடனடியாக வெளியிடவேண்டும், அதே நேரத்தில் இலங்கை அதிபரின் நேரடிப் பார்வைக்கு இந்த அறிக்கையை அனுப்பி, அங்கிருந்து அதன்மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிடவேண்டும்.

7.    இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் பொது மக்களின் விளைநிலங்களை ஆக்கிரமித்த இராணுவ நடவடிக்கை குறித்தும், அப்படி ஆக்கிரமித்த நிலங்களை உரிய நபர்களிடம் ஒப்படைத்து, அந்த நிலங்களில் வாழுபவர்களின் மீதான குற்றவியல் தொடர்பான விசாரணைகளை விரைந்து விசாரிக்கவும் மற்றும் அவர்கள் சமூகத்துடன் சேர்ந்து சுமுகமான வாழ்க்கை வாழ அரசு அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்

8.    சர்வதேச மனித உரிமைகள் காட்டிய வழிகளின் படியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் படியும் குழு ஒன்றினை அமைக்க வேண்டும்; அந்தக் குழுவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வர்களின் பிரதி நிதிகளை நியமித்து, அவர்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்து பெறவேண்டும். தேவை ஓர் உயர் ஆணையம்

9.    மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஓர் உயர் ஆணையம் ஒன்று அமைத்து,  அறிக்கைகளை உடனுக்கு உடன் மனித உரிமை ஆணையத்துக்கும் இதர விசாரணை அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தவேண்டும்.

10.    இறுதியாக மனித உரிமைக்குழுக்கள் இலங்கை யில் சுற்றுப்பயணம் செய்து தெரிவித்துள்ள தகவல்களின்  அடிப்படையில் விசாரணைனையைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும் அரசின் நடவடிக்கைகள் எவ்வித ஒளிவு மறைவின்றி நடைபெறவேண்டும். இவற்றைக் கண்காணிக்க சிறப்புப் பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றையும் அமைக்கவேண்டும்.

பாலச்சந்திரன் கொல்லப்பட்ட கொடுமைபற்றி..

11. விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் மரணம் கொலை என்றே நிரூபணம் ஆகிறது; இராணுவ வீரர்களிடம் சரணடைந்த பாலச்சந்திரன் முதலில் நிராயுதபாணியாக ஒரு இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். இது முதல் படத்திலும், அதே இடத் தில் மார்பு வயிறு போன்ற இடங்களில் குண்டுப்பட்டு இறந்த நிலையில் உள்ள படம் இரண்டும் ஒரே காமிராவில் எடுக்கப்பட்டது. இந்த கொடுஞ்செயல் குறித்தும், விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஸ் என்ற துரைராஜசிங்கம் முதலில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தது குறித்து பல நேரில் கண்ட சாட்சிகளும் அலை வரிசை (சானல்) 4 வெளியிட்டுள்ள ஆவணப் படங்களிலும் காணப்படுகிறது, அதன் பிறகு வெளியான காட்சிகளில் மிகவும் கோரமாக அவர் கொலை செய்யப் பட்டு பாதி எரிந்த நிலையில் பிணமாகக் காணப்படுகிறார். இந்த கொலைச்சம்பவம் குறித்தும் சுபா என்ற இசைப்பிரியா விடுதலைப்புலிகளின் ஊடகவியலாளர் உயிரோடு சரணடைந்தும் பிறகு அவர் கோரமாக பிணமாகக் கிடந்த காட்சியும் வெளியாகி இருந்தது,  மேலும் வெள்ளைக் கொடியுடன் இராணுவ உயரதிகாரிகளின் முன்னிலையில் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள்  பிணமாக இருக்கும் காட்சிகள் வெளிவந்துள்ளன,

பத்திரிகையாளர்கள் படுகொலை

12) மற்றும் இலங்கைப் போரின் போது பல பத்திரி கையாளர்களும் கொல்லப்பட்டனர்; இதுகுறித்து பொது வான விசாரணை ஒன்றை அமைக்கவேண்டும். இந்தச் சம்பவம் குறித்து இதுவரை ஆரம்பக் கட்ட விசாரணை யைக்கூட இலங்கை அரசு துவங்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பரிந்துரைகளை மனித உரிமை ஆணையம் அய்.நா.வுக்கு அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மேலும் தாமதிக்காமல் மனித உரிமை அமைப்புகளும் உலக நாடுகளும், அய்.நா.வும், குறிப்பாக இந்தியாவும் இந்த மனிதஉரிமை காக்கும் பணியில் தத்தம் கடமைகளை ஆற்றிட முன்வர வேண்டும் என்றும் ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் உலகத் தமிழர்கள் அறிவித்துள்ள இந்த நாளில் (பிப்ரவரி 26) வலியுறுத்துகிறோம்.



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்,

சென்னை     25.2.2014



Read more: http://viduthalai.in/headline/75939-2014-02-25-13-04-37.html#ixzz2uPt6x6fl

ஏழைக் கடவுள்கள்


தமிழ்நாட்டில் 38481 இந்துக் கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் 2000 வருவாய் உள்ள (அதாவது பசையுள்ள) கோயில்களாம். 7000 கோயில்களில் ஒரு கால பூஜை மட்டும் நடக்கிறது. இந்தக் கோயில்களைச் சீரமைத்து வழிபாடு நடத்த ஆவன செய்ய வேண்டும் என்று விசுவஹிந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடவுள் சக்தியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் இப்படி சொல்லுகிறார்கள். ஒரு வேளை பூஜை மட்டும் நடந்தக் கூடிய கோயில்கள் என்று பட்டியலிட்டுப் புலம்புகின்றனர்.

அப்படியென்றால் அந்தக் கடவுள் சக்தி  இவ்வளவு தானா? மனிதர்களாகப் பார்த்து ஏதாவது ஏற்பாடு செய்தால் தான் உண்டு என்ற நிலை இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. ஆக கடவுள் என்பது மனிதன் தயவில் தான் வாழ வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட கோயில்களுக்குச் சென்று தான் மனிதன் வழிபாடு செய்கிறான் கடவுளே, எனக்கு அது செய், இது செய்! என்று வேண்டுகோள் வைக்கிறான் - காணிக்கை செலுத்துகிறான்.

வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! என்று சொல்லுவதுபோல கடவுளே, உன் சக்தி என்ன என்பதை நிரூபித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது.கடவுளாவது மண்ணாங் கட்டியாவது அது வெறும் கல், அல்லது உலோகங்களால் ஆனது - சக்தியும் இல்லை - வெங்காயமும் இல்லை என்று நாம் சொல்லுவதைத்தான் வேறு வார்த்தைகளில் திருவாளர் வேதாந்தம் ஒரு வேளை பூஜை நடத்தப்படும் கோயில்களின் நிலைமைபற்றிப் புலம்புகிறார்.

கடவுளை மற - மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் கருத்து எவ்வளவு உண்மையானது - சரியானது - உறுதியானது என்பது இப்பொழுது விளங்கி விட்டதா இல்லையா?

கடவுள்களிலும் பணக்காரக் கடவுள், ஏழைக் கடவுள் என்ற நிலையுள்ளதே - இதற்கு என்ன காரணம்? என்ன பதிலாம்? ஓ, கடவுளுக்குக்கூட தலையெழுத்து, கர்மா பலன் உண்டோ! அதன் காரணமாகத்தான் பணக்காரக் கடவுள் ஏழைக் கடவுள் என்கிற நிலையா?

சரி, அது இருக்கட்டும்; வேதாந்தம் ஏன் இப்படி சிந்திக்கக் கூடாது? 2000 பணக்கார கோயில்கள், கடவுள்கள் இருக்கின்றனவே, திருப்பதி கல் முதலாளியான ஏழுமலையானுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கிகளில் தூங்குகின்றனவே, அதனை எடுத்து ஏழைக் கடவள்களுக்கு மூன்று வேளை படையல் (சோறு) போட்டு அந்த யாசகம் எடுக்கும் கடவுள்களின் வயிற்றை நிரப்பக் கூடாதா?

இந்துமதம் என்பது இந்தியா முழுவதும் இருக்கத்தானே செய்கிறது! தேசீயம், தெய்வம் இரண்டும் தானே இருகண்கள் என்றும் கூறிக் கொள்கிறார்கள். அப்படி யானால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இல்லாத சொத்துக்களா? பணமா? தங்கமா?  நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி, கட்டடங்கள் ரூ.1500 கோடி, நகைகள் (கொள்ளையடித்தது போக) ரூ.30 ஆயிரம் கோடி பணமாக மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி, நாள் ஒன்றுக்கு உண்டியல் வசூல் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில்  பழனிக் கோயிலுக்கு ஆண்டு வருமானம் ரூ.72,15 கோடி, சமயபுரம் மாரியம்மன்  ரூ.33,55 கோடி, திருச்செந்தூர் ரூ.19.80 கோடி, திருத்தணி முருகன் ரூ.16.09 கோடி, திருவண்ணாமலை அருணாசலம் ரூ.13.54 கோடி, சிறீரங்கம் ரெங்கநாதன் - ரூ.12.21 கோடி, மதுரை மீனாட்சி - ரூ.11.65 கோடி, இராமேசுவரம் ராமநாதன் - ரூ.9.89 கோடி, சுசீந்திரம் - ரூ.5.87 கோடி, திருவேற்காடு மாரியம்மன் - ரூ.5.65 கோடி,

இவை எல்லாம் ஓர்ஆண்டுக்கான வருமானம்.

தேசியக் கண்ணோட்டத்தோடு திருப்பதி ஏழுமலை யான் கோயில் நிதியிலிருந்து ஏழைக் கடவுள்களுக்குத் தான தர்மம் செய்யவேண்டியதுதானே.

சைவக் கோயில்களுக்கு வைணவக் கோயில்களி லிருந்தோ அதுபோல வைணவக் கோயில்களுக்கு சைவக் கோயில்களின் நிதியிலிருந்தோ நிதி உதவிடச் செய்ய விரும்ப மாட்டார்கள். இந்த இரண்டு பிரிவுகளுக்கிடை யேயுள்ள பிணக்குகளும், சண்டைகளும் ஊர் சிரித்த கதைதான் என்பதாலும், அந்தந்தப் பிரிவு கோயில் களுக்குச் சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பணக்காரக் கோயில்களிலிருந்து நிதியைப் பயன்படுத்தலாமே, அதை விட்டு விட்டு அரசுக்கு மனு போடுவானேன்?

உண்மை என்னவென்றால் கோயிலிலிருந்து இன் னொரு கோயிலுக்கு நிதியளிக்க ஒப்பம் அளிக்க மாட்டார்கள். கோயில் காரியம் என்பதே வணிக நிறுவனமான பின்பு அந்த மனப்பான்மை எப்படி வரும் என்று எதிர்பார்க்க முடியும்?


திருடுவதற்குக் கடவுள் கருணையாம்!

கேள்வி: தற்போது கோயில் திருட்டுகள் அதிகரித் துள்ளனவே? (பொதுவாக திருடர்களும், திருட்டு நல்ல படியாக நடக்க சாமி கும்பிட்டு விட்டுச் செல்வார்களாமே? ஆக திருட்டுக்கு சாமி ஒத்துழைக்கிறது என்று தானே ஆகிறது?)

பதில்: மந்திரிகளும் சிறைச்சாலைகளுக்குச் செல் லுவது, கைதிகளுக்குப் பரிசுகளை அளிப்பது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். கடும் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்கள் உயர் பதவிகளில் இருப்பவர்களால் பரிசீலிக்கப்பட சட்டமே வழி செய்கிறது. இதை எல்லாம் வைத்துக் கொண்டு, பிரதமர், ஜனாதிபதி, மந்திரிகள், முதல் மந்திரிகள் அனைவரும் குற்றங்களை ஊக்குவிக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியுமா? குற்றவாளிக்கும்கூட கருணை காட்ட சட்டத்திலே வழி இருக்கிறபோது, கருணையே வடிவான கடவுளுக்கு அந்தக் கருணை இருக்காதா? அந்தக் கருணை உண்மையாகவே அந்தக் கொள்ளைக்காரனுக்கோ, திருட னுக்கோ கிட்டினால் அவன் தானாகவே அந்த வேலையை விட்டு விடுவான். அதற்கேகூட அந்தக் கருணை உதவும். - (துக்ளக் 26.2.2014 பக்கம் 17)

இப்படி ஒரு கேள்வி பதில். திருவாளர் சோ ராமசாமி அவரையொத்த பார்ப்பனர்களின் கருத்துரைக்கும் முறை, வாதமுறை எவ்வளவு அற்பமானது என்பதற்கு இந்தப்பதிலே போதுமானது. மனிதர்களிடத்தில் பலமும் உண்டு, பலகீனமும் உண்டு, அதே போன்றதுதான் கடவுளுமா? அப்படியென்றால் மனிதனுக்கு மேம்பட்ட சக்தி கடவுளுக்கு ஏதும் கிடையாது என்பதை அவரை அறியாமலேயே திருவாளர் சோ ஒப்புக் கொண்டது ஆகாதா?

திருடர்கள் சாமி சிலையையே திருடிக் கொண்டு போய் விற்று விடுகிறார்களே - அதுவும் கடவுளின் கருணை தானா? திருடனை நீதிமன்றத்தில் நிறுத்தும்போது, நீதிபதியிடம் கடவுளின் கருணை எனக்கு இருந்ததால்தான் திருடினேன் என்று சொல்லலாமா?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் மேலாளர் சங்கரராமன் பட்டப் பகலிலேயே சிறீமான் வரதராஜப் பெருமாள் சன்னதி முன்னாலேயே வெட்டிக் கொல்லப் பட்டாரே - அப்பொழுதுகூட அந்தக் கொலைகாரனுக்கு வரதராஜ பெருமாள் அருள் பாலித்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

சரி, சங்கராச்சாரியார் தான் கொலையாளியில்லை; ஏதோ 61 நாட்கள் லோகக்குரு கம்பி எண்ணினார் - இருக்கட்டும்; சங்கராச்சாரியார் கொலைகாரர் இல்லா விட்டால் உண்மையான கொலைகாரனைக் கண்டுபிடிக்க வரதராஜ பெருமாள் சக்தி பயன்படாதது ஏன்? உண்மை யான கொலைகாரன் கையில் சிக்காமல் இருக்க அந்தச் சாமி அந்தக் கொலைகாரனுக்குக் கருணை காட்டி விட்டதா?

அதே காஞ்சிபுரம் மச்சேந்திரன் கோயில் குருக்கள் தேவநாதன் கோயில் கருவறைக்குள் என்ன செய்தான்? பக்தைகளோடு பாலியல் உறவு கொண்டான்; அந்தச் செயற்கரும் காரியத்தை கைப்பேசியில் படம் எடுத்து, அந்தப் பெண்களிடம் அதைக் காட்டிக் காட்டி, மிரட்டி, மிரட்டி மீண்டும் மீண்டும் அந்தப் பெண்களை அனுபவித்தானே - அதற்குக்கூட அந்த மச்சேந்திரக் கடவுள் உடந்தைதானோ - கருணை தானோ!?

திருவாளர் சோவின் பதிலுக்கு நாம்கூடப் பதில் சொல்லத் தேவையில்லை. அவாளின் ஜெகத்குருவான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தெரிவித்த கருத்தினை எடுத்துச் சொன்னாலே போதுமானது.

கேள்வி: பெரிய மற்றும் சிறிய கோயில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம்? மக்களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய் விட்டதா?

ஜெயேந்திரர் பதில்: கொலை, கொள்ளை செய்ய  துணிகிறவர்களில் அனேகம் பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற் கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது. பணமுடை அதிகரித்து விட்டது. - (குமுதம் 12.9.1996)

திருடுகின்றவர்களுக்கு கடவுள் கருணை புரிவதாக சோ சொல்லுகிறார். அப்படி திருடுகிறவர்கள் பக்தர் களாகவே இருப்பதாக சங்கராச்சாரியும் சொல்லுகிறார்.

கடவுள் கருணை புரிவதாக இருந்தாலும் சரி, பக்தர்கள் திருடுவதாகச் சொன்னாலும் சரி இரண்டுமே ஒழுக்கக் கேட்டிற்கு உறைவிடமாகவும், தூண்டுகோலாகவும் துணை போவதாகவும் பக்தியும், கோயிலும், அதில் வடித்து வைக்கப்பட்டுள்ள சாமிகளும் உள்ளன என்பது விளங்கி விட்டதல்லவா?

திருடுவதற்குக் கடவுளின் கருணை கிட்டினால் அந்தத் திருட்டு வேலையை விட்டு விடுவான், அதற்கேகூட அந்தக் கருணை உதவும் என்கிறார். அது எப்படி உதவும்?

திருடுவதற்குக் கடவுளே கருணை காட்டும் போது, நமது திருட்டுத் தொழிலை ஜாம் ஜாம் என்று நடத்தலாம் என்ற தைரியத்தைத்தானே அது கொடுக்கும்.

கோயில் சிலைகளைத் திருடி விற்றே கோடீஸ்வரர் ஆனவர்களின் பட்டியல் நீளமாக உண்டே! அதுவும் இந்தியாவின் அயம்பொன்னாலான சாமி சிலைகள் வெளிநாடுகளில் கொள்ளை விலைக்குப் போகின்றனவே சாமி -சிலை திருட்டைக் கண்டுபிடிப்பதற்கே காவல் துறையில் தனிப்பிரிவு செயல்படும் அளவுக்கு நிலைமை ஆகி விட்டதே!

கடவுள் சக்தியைக் காப்பாற்றுவதற்கு சோ போன்றவர்கள் என்ன பாடுபட வேண்டியுள்ளது பார்த் தீர்களா? மனிதனைக் கடவுள் காப்பதாகச் சொல்லுவது போய், கடவுளைக் காப்பாற்றிட மனிதர்கள்தான் ( சோ போன்றவர்கள்தான்) பெரும் பாடுபட வேண்டியுள்ளது. அந்தோ பரிதாபம்!

Wednesday, February 19, 2014

மோடி ஸ்வாமிகளின் தனிமை உபதேசம்


இமாச்சல பிரதேசத்தில் பேசிய மோடி, தனக்கு குடும்ப வாழ்க்கை இல்லாததால், தான் ஊழல் செய்து பணம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், குடும்ப சூழல் இல்லாதவர் மட்டுமே,ஊழலை ஒழிக்க முடியும் என ஊழல் ஒழிப் புக்கு புதிய இலக்கணத்தை உதிர்த் துள்ளார் மோடி ஸ்வாமிகள்.

மோடி ஸ்வாமிகளிடம் சில கேள் விகளை கேட்கும் விரும்புகிறோம்.

1. ஊழலை ஒழிக்க குடும்ப ஸ்தர்களால் முடியாது என்பதால் தான், அத்வானியை பிரதமர் வேட் பாளராக பாஜக அறிவிக்கவில்லையா?

2. பிரதமர்  மட்டுமே முடிவு செய்து, ஊழலை ஒழிக்க முடியுமா?
 
3. ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், என அனைவரும் குடும்ப சூழல் இல் லாதவர்களாக இருக்க வேண்டுமா?

4.மோடி ஸ்வாமிகளின் கருத்தை, பாஜக ஏற்றுக் கொள்கிறதா?

5. இல்லற வாழ்க்கை இல்லாத வர்களுக்குத்தான் இம்முறை பாஜக சார்பில் வேட்பாளராக வாய்ப்பு தரப்படுமா?

6. அத்வானி, சுஸ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி  போன்றோர் இம்முறை வேட்பாளர்களாக போட் டியிடுவார்களா?

7. எந்த ஆய்வின் அடிப்படையில் மோடி ஸ்வாமிகள் இந்தக் கருத்தை உபதேசிக்கிறார்?

8. எனக்கு குடும்ப வாழ்க்கை கிடையாது, முதல்வர் பதவியில் மாத ஊதியமாக ஒரு ரூபாய் தான் பெறு கிறேன் எனக் கூறியவர் தான்,கடந்த பதினேழு ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றப் படிகளில் ஏறி வருகிறார். அதற்கு மோடி ஸ்வாமிகளின் விளக்கம் என்ன?

9. யோகேந்திர யாதவ் மோடி ஸ்வாமிகளிடம் கேட்ட கேள்வியான, அதானி  குழுமத்திற்கு அதிகப்படி யான சலுகைகள் அளிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதற்கு மோடி ஸ்வாமிகளின் பதில் என்ன?

அண்மையில் ஒரு திரைப் படத்தில் ஒரு வசனம் வரும். வெள் ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வசனம் வரும். அது போலத்தான் இருக்கிறது மோடி ஸ்வாமிகளின் பேச்சு.

- குடந்தை கருணா

Tuesday, February 18, 2014

நீதியரசர்களைப் பாராட்டுகிறோம்- பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்!

சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்குத் தண்டனை ரத்து!

உச்சநீதிமன்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட மனிதநேய மரகதக்கல் தீர்ப்பு இது!

நீதியரசர்களைப் பாராட்டுகிறோம்- பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்!

23 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்களை உடனே விடுதலை செய்க!



 
ராஜீவ்காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் குற்றவாளிகளாக ஆக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்திருப்பது - வரலாற்றுப் புகழ் மிக்க தீர்ப்பு என்றும் உச்சநீதிமன்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட மரகதக்கல் என்றும் கூறி, மூவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் (போதிய சட்ட நியாய முறைகளைக் கடைப்பிடிக்காத நிலையில்) சாந்தன், முருகன், பேரறிவாளன் என்ற மூவரின் தூக்குத் தண்டனையை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்பமை ஜஸ்டீஸ் திரு. ப. சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பின் மூலம் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது; இது மிகப் பெரிய வரலாற்றுப் புகழ் பெறக் கூடிய நியாயத் தீர்ப்புகளில் முதன்மையானது ஆகும்! நீதி வழங்குவதில் தாமதிக்கப்பட்ட நீதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதியாகி விடும் கொடுமை உண்டு என்பது அரிய நீதித் தத்துவங்களுள் மிகவும் முக்கியமானதாகும்.

அந்த அடிப்படையிலும், மனிதநேயம் பூத்துக் குலுங்கும் வகையிலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் சக நீதிபதிகளும் அளித்த இத்தீர்ப்பை நாடே பாராட்டி வரவேற்கும் என்பது உறுதி! உறுதி!! நீதியரசர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து செய்துள்ள இந்த நீதித் தீர்ப்பு நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட நேர்மை கொழிக்கும் சிறப்புக்குரியதாகும். பாதிக்கப்பட்டு 23 ஆண்டுகள் சிறையில் வதியும் அந்த காளைப் பருவத்தினர்கள், ஏதோ மகிழ்ச்சியாக உல்லாசமாகத்தான் அங்கே இருக்கிறார்கள்; எனவே அவர்களது சிறைத் தண்டனையைக் குறைக்கவே கூடாது! என்று மத்திய அரசின் சார்பில் வாதிட்ட மத்திய அரசு வழக்குரைஞரின் வாதம் வேதனையூட்டிய வெட்கப்பட வேண்டிய - உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருந்த வாதங்களாகும். அவைகளைப் புறந்தள்ளி, நாடே போற்றும் நல்ல தீர்ப்பை அளித்த அந்த நீதி அரசர்கள் இருக்கும் திக்கு நோக்கி வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம்! உச்சநீதிமன்றத்தின் மகுடத்தில் பதிக்கப்பட்ட மனிதநேய மரகதக்கல் இது!

இத்தனை ஆண்டுகள் சிறையில் தண்டிக்கப்பட்டு காலத்தைக் கழித்த அவரவர்களின் விசாரணைபற்றி பல புதிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்யவும் நீதித்துறை - உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என்பது நமது வேண்டுகோளாகும்.

தமிழ்நாடு அரசும் இப்பிரச்சினையில் முக்கியக் கவனம் செலுத்தி, அவர்களை முற்றிலும் விடுதலை செய்ய முயற்சிக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

18.2.2014

சென்னை

Monday, February 17, 2014

சிதம்பரத்தில் சுயமரியாதைப் பிரச்சாரம்

- தந்தை பெரியார்

எனக்கு முன்பேசிய மூன்று கனவான் களும் பேசியவற்றிற்குப் பின் நான் சில விஷயம் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அதாவது முதலில் பேசியவர், தலைவர்கள் அடிக்கடி மாறுவதால் சுயராஜ்யம் தூரமாகி விடுகின்றது என்று சொன்னார்கள். நான் தலைவனல்ல; ஒரு தொண்டனாவேன்.

நான் எப்போதாவது மாறவும் இல்லை. பொது வாழ்வில் தொண்டு ஆரம்பித்த காலத்தில் நமது விடுதலைக்கு என்ன என்ன காரியங்கள் தடையாயிருக் கின்றது என்று சொன் னேனோ அதையேதான் இப்போதும் சொல்லுகிறேன். தீண்டாமையும் வருணா சிரம தர்மமும் ஒழிந்தாலல்லாது நமக்கு விடுதலை இல்லை என்பது எனது உறுதி.

அதற்காக இப்போதும் பாடுபடுகிறேன். காங்கிரசினால் தீண்டாமையும் வருணா சிரமும் ஒழியாது என்பது உறுதியாதலால் நான் அதை விட்டுவிட்டு அதற்காகத் தனி யாய் பிரச்சாரம் செய்கின்றேன்.ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிட வில்லை என்கின்றார்.

ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிட்ட காலத்தில் எனக்கு அவரி டம் இருந்த மதிப்பு இப்போது இல்லை. என்னவென்றால், இப்போது அவர் வருணா சிரமத்திற்கு வியாக்கியானம் செய்ததில் பிறவியில் ஜாதி உண்டென்று சொல்வ தோடு இந்த ஜன்மத்தில் பிராமணனுக்குத் தொண்டு செய்தால்தான் அடுத்த ஜன்மத் தில் பிராமணனாகப் பிறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.  இதைக் கேட்ட பிறகு அவரை மகாத்மா என்று சொல்ல எனக்கு இஷ்டமில்லை.

மற்றபடி மற்ற மதங்களிலும் பிரிவு களும் மூடநம்பிக்கைகளும் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.

மற்ற மதங்களிலும் இருக்கின்றது என்கின்ற சமாதானம் போதாது. ஜனசமுகம் உண்மையான விடுதலை பெற மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டியது தான்.

ஆனால், இப்போது எனது வேலை அதுவல்ல. என் தலைமீதும் எனது சகோ தரர்கள் மீதும் சுமத்தப்பட்ட மதத்தின் யோக் கியதை வெளியாகி மக்கள் உண்மையறிந்து அதிலிருந்து அறிவு பெற்ற பிறகுதான் நமக்கு மற்ற மதங்களின் சீர்திருத்தத்தைப் பற்றி பேச யோக்கியதை உண்டு.

ஆதலால் மற்ற மதங்களில் ஊழல்கள் இருப்பதற்காக நாம் நமது மதம் என்பதின் ஊழல்களை மூடி வைத்திருக்க முடியாது. நான் தொட் டால் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமிகளைப்பற்றி அலட்சியமாய் பேசின தற்காக வருந்துவதாக பேசினார். நான் அதற்குப் பரிதாபப்படுகின்றேன். நான் தொட்டால் நான் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமியை நான் வேஷ்டி துவைக்கக்கூட உபயோகிக்க மாட்டேன்.

யார் என்னை என்ன சொன்னாலும் சரி, எனக்குக் கவலையில்லை அப்படிப்பட்ட குணம் ஏற்பட்ட உருவத்திற்கு என்ன பெயர் சொன்னாலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதை வெறும் கல்லென்றும் செம்பென்றும் தான் சொல்லுவேன். ஸ்ரீ முத்துகிருஷ்ணன் பிள்ளையை அனுசரித்து ஸ்ரீமான் ரங்கநாதன் செட்டியாரும் பேசியிருக்கிறாராதலால் அவருக்குத் தனியாய் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.

ஆனாலும் முன்பு இந்த ஊர் ஜில்லா மகாநாட்டுக்குத் தலைமை வகித்த காலத்தில் தீண்டாமை ஒழிய வேண்டுமென்பதையும் அதற்கு விரோத மாக மதம், சாஸ்திரம், புராணம் என்பதையும் பற்றி அப்போது அதாவது சுமார் 5, 6 வருஷங்களுக்கு முன்னால் நான் 2-மணி நேரம் அக்கிராசனர் என்கின்ற முறையில் பேசியிருப்பதை ஞாபகப்படுத்திக் கொண் டாரானால் நான் ஏதாவது இப்போது மாறி இருக்கின்றேனா அல்லது காங்கிரசும் அந்த இடத்தில் இப்போது இருப்பவர்களும் மாறி இருக்கின்றார்களா? என்பது புலனாகும்.  ஸ்ரீ அய்யங்கார் வெகு நேரம் பேசியதில் குறிப்பாய் எடுத்துக் காட்டிய குற்றம் இன்னது என்பது எனக்குத் தெரியவில்லை - என்று நாயக்கர் சொன்னதும் அய்யங்கார் எழுந்து நீங்கள் கல்லென்று சொன்னீர்களே இது சரியா? என்றார்.

உடனே ஸ்ரீமான் நாயக்கர், ஆம், வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள்! காட்டுகின்றேன் என்று மேஜை மீதிருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைதட்டி சிரித்தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலைகுனிந்தார்.

மற்றொரு பார்ப்பனர் - (பத்திரிகை நிருபர்) அந்தக் கல்லுக்கு மந்திர உச்சா டனம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன் னார்.

நாயக்கர்:- அப்படியானால் மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்குச் செய்த மந்திர உபதேசம் உண்மையில் சக்தி உள்ள தானால் இதோ - எதிரில் இருக்கும் சகோ தரருக்கும் கொஞ்சம் அதே மந்திர உபதே சம் செய்து அவரை அந்த கல்லுச்சாமிக்குப் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும் படியாகவாவது செய்யக்கூடாதா? என்றார்.

அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார்.

மறுபடியும் ஸ்ரீ திரு. நாராயணய்யங்கார் இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன்! ஆனால் நீங்களா வது ஒரு புது மதம் சொல்லுவது தானே என்றார்.

நாயக்கர்:- நான் ஒரு புது மதத்தைப் போதிக்க வரவில்லை. ஒழுக்கத் திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றா தீர்கள். ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத்தில் அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்று தான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகின்றேன்.

அய்யங்கார்:- இருக்கின்றதை மறைப்ப தானால் புதிதாக ஒன்றைக் காட்ட வேண் டாமா? என்றார்.

நாயக்கர்:- வீட்டிற்குள் அசிங்கமிருக் கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்கு பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும்? இந்து மதம் என்பதாக உலகமெல்லாம் நாறுகின்றதே. அந்த துர் நாற்றம் போய்விட்டால் அதுவே போதும், நீங்களே இந்துமதம் என்பதாக ஒன்று இல்லை என்றும் சொல்லி ஒப்புக் கொண்டு விட்டீர்களே இனி நான் என்ன சொல்ல வேண்டும்!

அய்யங்கார்:- நீங்கள் இவ்வளவு சமத்துவம் பேசுகின்றீர்களே! உங்களுக்கு லட்ச லட்சமாக சொத்துக்கள் இருக்கின்றதே, அதை ஏன் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கக் கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே என்றார்.

நாயக்கர்:- ஸ்ரீமான் அய்யங்கார் சொல்லுகின்றபடி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்துக்கள் கிடையாது. ஏதோ சொற்ப வரும்படிதான் வரக்கூடிய தாயிருக்கின்றது. அதையும் எனக்குச் சரியென்று தோன்றிய வழியில் பொது நலத் துக்குத்தான் செலவு செய்து வருகிறேன்.

அல்லாமலும் இந்தத் தொண்டுக்கு வரு முன் பெருவாரியாக - வியாபாரமும் செய்து வந்தேன். வருஷம் ஒன்றுக்கு 1000 ரூபாய் கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கின் றேன். ஆனால் அவைகளை இப்போது அடியோடு நிறுத்தி விட்டேன்.

இந்தப் பிரச்சார செலவு சிலசமயம் மாதம் 200, 300 ரூபாய் வீதம் ஆகிவருகிறது மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான் ஒன்றும் அதிகமாய் அனுபவிப்பதில்லை. நான் அனேகமாய் மூன்றாவது வகுப்பு வண்டி யில்தான் போகிறேன். அப்படி இருந்தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.

அய்யங்கார்:- புரோகிதத்தைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத் திற்கும் போவதில்லை, பிச்சைக்கும் போவ தில்லை, காப்பிக்கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரை யும் ஒன்றாகக் கண்டிக்கிறீர்கள். அப்படி யானால் என்னதான் செய்கின்றது? எந்த புஸ்தகத்தை தான் படிக்கின்றது?

நாயக்கர்:- நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவதில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிடமிருந்தாலும் மனிதனின் சுபாவத்திற்கும், சமத்துவத் திற்கும், சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கைகளும், கதைகளும் எதிலிருந்தா லும் அவைகளை ஒதுக்கி சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன் (என்று ஆவேசமாய் சொல்லி கடைசியாக முடிவுரையாக சொன்னதாவது), இந்த ஊர் எவ்வளவோ நல்ல ஊர் என்றுதான் சொல்வேன்.

சில ஊர்களில் கல்லுகள் போடவும் கூட்டத்தில் கலகம் செய்யவும் கூச்சல் போடவும்கூட பார்த்திருக்கின்றேன். இதெல்லாம் அனுபவிப்பது எனக்குச் சகஜம் தான். எவ்வளவுக்கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகின்றதோ, எவ்வளவுக்கெவ்வளவு எதிர்பிரச்சாரங்கள் ஏற்படுகின்றதோ அவ் வளவுக்கவ்வளவு எனது வேலை சுலப மாகும், எனது எண்ணமும் நிறைவேறும் என்கின்ற தைரியம் எனக்கு உண்டு.

இம்மாதிரி வேலைகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்இருந்தே பலர் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் அந்தச் சமயம் இருந்த அரசர்கள் முட்டாள்களாகவும் பலவிதத்தில் பார்ப்பனர்களால் மயக்கப் பட்டவர்களாகவும் இருந்ததினால் அது பலிக்காமல் போய்விட்டது. ராமராஜ்ய மாகவோ , பாண்டிய ராஜ்யமாகவோ இருந்தால் நான் இதுவரை ஒரே பாணத்தால் கொல்லப்பட்டிருப்பேன் அல்லது கழுவேற் றப்பட்டிருப்பேன்.

நல்ல வேளையாக அந்த அரசாங்கங்கள் மண் மூடிப்போய் விட்டது. வேறு ஒரு லாபமும் இல்லாவிட்டாலும் நமது பணம் கொள்ளை போனாலும் மனிதனின் சுயமரியாதையைப் பற்றியாவது வெள்ளைக்காரர் ராஜ்யத்தில் இதுவரை தாராளமாகப் பேச இடம் கிடைத்துவிட்டது.

சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி, நான்கு நாள் முன்னோ பின்னோ சாக வேண்டியது தான். வீட்டில் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத் தொண் டிற்குப் பிரவேசிக்கின்றேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாகப் பயணம் சொல்லிக் கொண்டு தப்பிப் பிழைத்தால் தான் திரும்பி வரமுடியும் என்று என் பெண் ஜாதிக்கும் தாயாருக்கும் முடிவு சொல்லி உத்தரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம்.

நான் பேசிக் கொண் டிருக்கும்போதே உயிர்விட வேண்டும் என்பது எனது ஆசை. ஏனெனில் நான் எடுத்துக் கொண்ட வேலை அவ்வளவு பெரியதும் பல எதிரிகளைக் கொண்டதும் தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால் இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும், தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும் இனி பயப்படுவது என்பது முடியாத காரியம்.
ஆயிரம் தரம் சொல்லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும்கல், வெறும்கல். நமது தேசிய இயக்கம் என்கின்ற காங்கிரஸ் முதலியவைகள் வெறும்புரட்டு, வெறும் புரட்டு என்பது எனது முடிவு. யார் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ளா விட்டாலும் சரி நான் யாருக்கும் போதிக்க வரவில்லை. எனக்குப்பட்டதைச் சொல்ல வந்தேன். சரியானால் ஒப்புக் கொள் ளுங்கள். தப்பானால் தள்ளி விடுங்கள்.

சாமி போய்விடுமே என்று யாரும் சாமிக்காக வக்காலத்து பேச வேண்டியதில்லை. பேசினாலும் நான் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. உண்மையான கடவுளும் உண்மையான தேசியமும் எனக்குத் தெரியும்.

அதை வெளியிடும் தொண்டு தான் இது என்று பேசி உட்கார்ந்திருந்தார்.  (25-02-1928 அன்று சிதம்பரத்தில் வக்கீல் இராமையா தலைமையில் நடந்த சுயமரி யாதைப் பொதுக்கூட்டத்தில் பல குறுக்குக் கேள்விகளுக்கு விடை  தந்து தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

- குடிஅரசு - சொற்பொழிவு - 04.03.1928


.


மோ"டீ"யில் பாசிசம்

- குடந்தையான்

தேநீருடன் அரட்டை என்கிற முறையில் இந்தியா முழுவதும் ஆயிரம் இடங்களில் தேநீர் கடைகளின் வாயிலாக மோடி பிரச்சாரம் துவக்கினார். ஆனால், தமிழ் நாட்டில் அதற்கு எந்தவித வரவேற்பும் இல்லை என டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் குடி அரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட் பாளர்கள் ஆங்காங்கே விவாதம் செய்வதைப்போல், இங்கேயும் அது போன்ற ஒன்றை தனியார் ஏஜென்சி மூலம் பாஜகவும் மோடியும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் செய்யத் துவங்கி உள்ளனர். இதற்கு யாரிடமிருந்து பணம் வருகிறது என்ற தகவலை பாஜகவும் சொல்வதில்லை; மற்றதற்கு எல்லாம், கேள்வி கேட்கும் ஊடகங்கள், இதைப் பற்றி எந்த கேள்வியும் கேட்பதும் இல்லை.

இந்த தேநீர் அரட்டையில், மோடியிடம் காணொலி மூலம் கேள்வி கேட்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், எந்த மாதிரியான கேள்வி கேட்கப்பட வேண் டும் என்பதை, அந்த கடையில் உள்ள பாஜகவினர் தேர்வு செய்த பின்னர் தான், கேட்க முடியும்.

இது மட்டுமல்ல; ஊடக நிருபர்கள், மோடியை சங்கடப்படுத்தும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்றும், மீறி கேட்பவர்கள் உரிய வகையில் கவனிக் கப்படுவர் என்றும், அத்தகையவர்களின் பெயர் களங்கப்படுத்தப்படும் என்றும் மிரட்டப்பட்டுள் ளார்கள் என மத்திய அமைச்சர் மனீஸ் திவாரி செய்தி வெளியிட்டுள்ளார்.

அண்மையில் வெண்டி டோனிகர் எழுதிய புத்தககம் இந்துக்கள்; ஒரு மாற்று வரலாறு எனும் ஆங்கில நூல் (Wendy doniger’s the hisdus an alternative history) பென்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட் டது. அந்த நூல் இந்துக்கள் மனதைப் புண்படுத்துவ தாக ஆர்ப்பாட்டம் செய்து, புத்தகத்தை திரும்பப் பெற வைத்துள்ளனர்.

மோடிக்கு எதிராக கட்டுரைகளை எழுதும் கட்டுரையாளர்கள், அந்த நிறுவனங்களிலிருந்து விலக்கப்பட்டு வருகின்றனர். வித்யா சுப்ரமணியன், சித்தார்த் வரதராஜன், சகரிகா கோஸ், நிகில்வாக்லே, ஹர்தோஸ் சிங் போல் என சிறந்த செய்தியாளர்கள், சிலர் நீக்கப்பட்டுள்ளனர்; சிலர் மிரட்டப்பட் டுள்ளனர்.

தங்களது கருத்துக்கு மாறான கருத்தை கூறுபவர் களுக்கு, பதில் கருத்து சொல்லாமல், அவர்களை தாக்குவது, கொல்வது என்பது ஆர்.எஸ்.எஸ். வழிமுறை. இந்த பாசிச முறையைத் தான் மோடியின் தேநீர் அரட்டையும் செய்து வருகிறது.

Friday, February 14, 2014

முட்டாள்தனம் உனக்கு மட்டும்தான் சொந்தமா?

இஸ்ரேலில் கன்னி மேரி சிலை ஒன்று பேசிய தாக வந்த தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனான் எல் லையை ஒட்டியுள்ள டர்ஷிஹா என்ற சிறிய நகரத்தில் ஒசாமா கவுரி என்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவரது வீட்டின் வரவேற்பறையில் உள்ள கன்னி மேரி சிலை சமீப காலங்களாக பளபளப் புடன் இருப்பதை, மனைவி அமிரா பார்த்துள்ளாராம்.

இதனை சுத்தம் செய்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் அந்த சிலையில் எண்ணெய்த் தன்மை தென்பட்டுள்ளதாம். அத்துடன் கன்னி மேரி சிலை தன்னிடம் பேசியதாகவும், தன்னை பயப்பட வேண்டா மென்று கூறிய தாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தத் தகவல் வெளியே கசிந்து விடவே, நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பார்வையிடுகின்றனர்.

மேலும் சிலையின் கன்னத்தில் ஒரு கண்ணீர் துளி திரண்டு வெளிப்பட்டதாகவும், கடந்த வாரம் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் வந்து இந்த சிலையை பார்த்து சென்றுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் என்பதுதான் இந்தச் செய்தி. இது போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்புவது எல்லா மதத்திலும் உண்டு; 

ஒரு சில நாள்களில் வந்த இடம் தெரியாமல் போய் விடும். சென்னையில்கூட சிலுவைக் குழந்தை என்று ஒரு புரூடா கிளம்பி சில நாள்களில் கப்சிப்! 

பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று புரளி கிளப்பி விடப்படவில்லையா?

ஆர்.எஸ்.எஸ். காரர்களும் சந்திராசாமியும் சேர்ந்துதானே அந்தப் பித்தலாட் டத்தை அரங்கேற்றினர். பிள்ளையார் கொழுக்கட்டை தின்பதாக நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று சென்னை அண்ணா சாலையில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் டாம் டாம் அடித்தாரே!

இதுபோன்ற வெளி நாட்டுத் தகவல்களை தந்தை பெரியாரிடம் யாராவது சொன்னால் முட்டாள்தனம் என்பது உனக்கு மட்டும்தான் சொந்தமா? என்று கேட் பார். அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

மதம் என்றாலே அற்புதங்களைக் கிளப்பி விட்டு, அதை நம்பும் பாமர மக்களின் முட்டாள் தனத்தில்தானே உயிர் வாழுகிறது!

கேள்விக்கென்ன பதில்?


பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி எல்லோரையும் கேள்வி கேட் கிறார். ஆனால் மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தராமல் இருப்பது சாமர்த்தியம் என நினைக்கிறார். யோகேந்திர யாதவ், சமூக இயலாளர்; தற்போது ஒரு அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். சில கேள்விகளை தனது டிவிட்டர் வாயிலாக அவர் மோடியை நோக்கி, 10.2.2014 அன்று தொடுத்துள்ளார்.     

1. அதானி குழுமத்திற்கு, மோடி அரசில் நிறைய சலுகைகள் தரப்பட் டுள்ளன. மோடிக்கும், அதானி குழுமத்திற்கும் உள்ள உறவு என்ன?  

  2.  தற்போது மோடி மேற்கொள் ளும் கோடிக்கணக்கான ரூபாய் விளம் பர செலவுகளுக்கு யாரிடமிருந்து பணம் பெறப்பட்டது? இது குறித்து பிஜேபியிடம் வெளிப்படையான தன்மை இல்லையே?     

3. நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட பாபுலால் பொகாரியா இன்னமும் மோடியின் அமைச்சர வையில் நீடிக்கிறாரே.

மோடி எப்படி அரசியலில் குற்றவாளிகள் நுழை வதை தடுப்பேன் எனக் கூற முடியும்.    

 4. விவசாயிகள் தற்கொலை, குழந்தைகள் இறப்பு விகிதம், பள்ளி கல்வி தரம் இவற்றில் குஜராத் மாநி லம் பின் தங்கியுள்ளதே?  இந்த கேள்விகளுக்கெல்லாம், மோடியிடமிருந்து எந்த பதிலும் வரப் போவதில்லை.  2007ஆம் ஆண்டு ஆங்கிலத் தொலைக்காட்சியில் கரன் தபார் கேட்டகேள்விக்கு பதில் தர முடியாமல் மோடி வெளியேறினார்.

தற்போது, அகமதாபாத்தில் தேநீர் கடையினை உருவாக்கி, அதில் காணொலி காட்சி முறையினை மிகுந்த பொருட் செலவில் உருவாக்கி உள்ளார் மோடி. நாடு முழுவதும் பல இடங்களிலிருந்து அவரிடம் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என விளம்பர யுக்தியை புகுத்தியுள்ளார். இந்த முறையில் எந்த ஊரிலும் தேநீர் கடை யாரும் நடத்தவில்லை. மோடி போன்ற கார்ப்பரேட் ஏஜெண்டுகள் தான் இம்மாதிரி கடையை நடத்த முடியும் என்பது வேறு செய்தி. முதலில் யோகேந்திர யாதவ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லட் டும். பிறகு தேநீர் சாப்பிடலாம்.

- குடந்தையான்

Thursday, February 13, 2014

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இலச்சினையில் கடவுளர் படமா?


பாங்க் ஆப் இந்தியா என்னும் தேசிய மயமாக் கப்பட்ட வங்கியின் இலச் சினை அடையாளத்தில் சிங்கம், சூலத்துடன் ஒரு பெண் உருவம் இருப்ப தான படத்துடன் இலச் சினை உள்ளது.

நாடு விடுதலை அடை வதற்குமுன் 1906 இல் தொடங்கப்பட்ட வங்கி யில் இந்துமத கடவுள் படத்துடன் தனியாரால் மும்பையில் தொடங்கப் பட்டு, பின்னர் 1969 இல் தேசியமயமாக்கப்பட்டது.

மதசார்பற்ற நாட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் இலச்சினையில் இதுபோன்ற ஒரு சார்புள்ள மத சின்னம் இடம் பெற லாமா?

வாடிக்கையாளர்கள் ஒரு மதத்தை மட்டும் சார்ந் தவர்களாகவா உள்ளனர்? வங்கி நிர்வாகம், மத்திய அரசு சிந்திக்குமா?

அய்ந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களிலும் கூட இந்து மதக் கடவுள் களின் உருவங்கள் பொறிக் கப்பட்டுள்ளன. இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற அரசாம்!



http://goo.gl/DetDL0


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, February 12, 2014

நியாயமா?


ஆசிரியர் தகுதித் தேர் வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 விழுக் காடு மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டதால், கூடு தலாக 45 ஆயிரம் பேர்கள் பலன் அடைந்ததாக தின மணி நாளிதழில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இப்படி செய்தி வெளி யிடுவதன் நோக்கமே தாழ்த்தப்பட்டவர்களுக் கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் ஒரே அளவு கோல் சரியா என்ற கேள் வியை மறைத்துவிடலாம் என்று தினமணி கருது கிறதோ?

இரண்டாவதாக 2013 இல் எழுதியவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று அரசு அறிவித்திருப் பது நேர்மையா, நியாயமா? என்ற கேள்வியையும் புறந் தள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்களா?

நீதிமன்றம் சென்றால் அரசின் முடிவு நிற்குமா? வீண்பிடிவாதம் காட்டா மல் 2012 ஆம் ஆண்டில் இரு கட்டமாக நடை பெற்ற தகுதித் தேர்வை எழுதியவர்களுக்கும் இந் தப் பலன் கிடைக்க, வழி செய்யவேண்டும் தமிழ் நாடு அரசு.


நளினிக்கு உரிமை இல்லையா?

90 வயது மூப்படைந்த தனது தந்தையார் பி.சங்கர நாராயணன் அவர்களை - ராஜீவ் கொலை சம்பந்த மாக 22 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் நளினி நேரில் பார்ப்பதற்காக ஒரு மாதம் பரோலில் சென்றிட நீதிமன்றத்தின் துணையை நாடினார்.

அதனை எதிர்த்து வேலூர் மத்திய சிறைச் சாலை கண்காணிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்த மனுவில், நளினியைப் பரோலில் அனுப்பினால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற் படும் என்று கூறியுள்ளார். சிறைக் கண்காணிப்பாளர் சொல்லுகிறார் என்றால், அதன் பொருள் தமிழக அரசு சொல்லுகிறது என் பதே!

முதலமைச்சர் ஜெய லலிதா அவர்களை நம்பி யவர்கள், தமிழ்த் தேசிய வாதிகள். இதற்கும் ஏதா வது முட்டுக் கல்லு தேடி னாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை.

(நளினி பரோல் கேட் டது ஒன்றும் சட்ட வரம் பிற்கு அப்பாற்பட்டதும் அல்ல; சட்ட ரீதியான உரிமையின் அடிப்படை யில்தானே நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் - சிறை யில் இருப்பதாலேயே அவர்களுக்கு எந்த உரிமை யும் கிடையாது என்று எந்தச் சட்டமும் சொல்ல வில்லையே! அதேநேரத் தில் சஞ்சய் தத் என்ற நடி கர் சிறையில் இருப்பதை விட வெளியில் இருப்பது தான் அதிகம் - என்னே நீதி, சட்டம்?).

மோடியின் நல்லிணக்க கார்ப்பரேட் கூட்டணியை இஸ்லாமியர்கள் நம்பி ஏமாற மாட்டார்கள்



அகமதாபாத், பிப். 12- நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதை கருத்தில் கொண்டு இஸ் லாமியர்கள் மீது அக்கறை யுள்ளவர் போல் மோடி கபட வேஷமிட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக சில சுயநலம் கொண்ட பணக் கார இஸ்லாமியர்கள் இயங்கி வருகின்றனர். இவர் களை ஒட்டு மொத்த இஸ்லா மியர்களும் நம்புவதற்கு தயாராக இல்லை. மோடியின் கார்ப்பரேட் கூட்டணியை அவ்வளவு எளிதாக நம்பி ஏமாற மாட்டோம் என்று குஜராத்தில் வாழும் இஸ்லா மிய மக்கள் தெரிவித் துள்ளனர்.

குஜராத்தில் பிப்.7ஆம் தேதி உம்மத் வர்த்தகக் கண் காட்சி மற்றும் வர்த்தகர்கள் மாநாடு துவங்கியது. குஜராத்தில் இப்படியொரு கண்காட்சி நடப்பது இதுவே முதன்முறையாகும். குஜராத் தில் தொழிலதிபராக இருக் கக்கூடிய ஜாபர் சரேஷ்வாலா என்பவர் இந்தக் கண் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந் தார். உள்நாடு மட்டுமன்றி துபாய் உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்தும் பல நிறு வனங்கள் இந்தக் கண் காட்சியில் கலந்து கொள்ள வுள்ளதாக அறிவிக்கப் பட்டது. சமுதாயங்களுக் கிடையே நல்லிணக்க வர்த்தகம் என்ற மய்யக்கருத் தை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாக மாநாட்டு அமைப் பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மோடியின் நெருக்கத்தை பெறுவதற் காகவே இந்த மாநாடு நடத் தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த மாநாட்டின் மூலம் இந்து - முஸ்லிம் வர்த்தகர் களிடையே எவ்வித மாற்ற மும் ஏற்படப்போவதில் லை என்றும், 2002ஆம் ஆண்டு தாங்கள் (முஸ்லிம்) தாக்கப்பட்டதை மக்கள் மறக்கமாட்டோம்.
யார் இந்த ஜாபர்?

 இந்த மாநாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கக் கூடிய ஜாபர் சரேஷ்வாலா என்பவர் குஜராத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக உள்ளார். இவர் பர்சோலி மோட்டார்ஸ் என்ற பெயரில் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்களை விற்பனை செய்து வருகிறார். அதேசமயம், தொழிலில் பல்வேறு முறை கேடுகளில் அவர் ஈடுபட் டுள்ளார். இதனை இந்தியப் பங்குச்சந்தை வாரியமான செபி கண்டுபிடித்து, கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி,பர் சோலி கார்ப்பரே சன் லிமிடெட்டுக்கு வழங் கப்பட்ட அங்கீகாரத்தை தேசிய பங்குச்சந்தை வாரி யம் மற்றும் மும்பை பங்குச் சந்தை வாரியத்திலிருந்து ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த தகவல் வாட்ச்அவுட் இன்வெஸ்டார்ஸ் என்ற வலைதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

இதேசெய்தி, குஜராத் டெய்லி மற்றும் குஜராத் சமாச்சார் ஆகிய செய்தித் தாள்களில் மாநாடு துவங் கும் நாளன்று வெளியிடப் பட்டது.இப்படியொரு களங்கம் கொண்ட நபர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, முஸ்லிம் களை பூரிப்பில் ஆழ்த்தும் வகையில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், இந்துக் களும், முஸ்லிம்களும் வளர்ச்சியின் இருசக்கரங்கள். முஸ்லிம்கள் பெரிய தொழில்களை கொண்டுள் ளனர். அவர்கள் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளனர். முஸ்லிம் இளைஞர்களும், பெண் களும் மிகப்பெரிய திறமை யைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பொருத்த மான தளம் வேண்டும்.

வேலையைத் தேடுவ தற்குப் பதிலாக பிறருக்கு வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய நிலைக்கு வர வேண் டும். நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவ சியம். முஸ்லிம் இளைஞர் களின் திறமையை வளர்க்க தனது அரசு உதவி செய்யும் என்று திடீர் கரிசனத்தோடு பேசியி ருக்கிறார்.

2002இல் மோடி


ஆனால், இதே மோடி கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மிகப்பெரிய கலவரத்தில் இஸ்லாமிய மக்கள் கொன்று குவிக்கப்பட்டு உறவுகளை, உயிர்களை இழந்த நேரத்தில் பேசியது வேதனையின் உச்சம். கலவரத்திற்குப் பிறகு மோடி நடத்திய கவுரவ் யாத்திரையின் போது, மெக்சானா மாவட்டத்தின் பகுசார்ச்சியில் 2002ஆம் ஆண்டு செப்.9ஆம் தேதி அவர் பேசியதாவது, சகோ தரர்களே, நிவாரண முகாம் களை நாம் தொடர வேண்டுமா? குழந்தைகளை உற்பத்தி செய்யும் மய்யங் களை நான் திறக்க வேண்டு மா? குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கடைப்பிடிப் பதன் மூலம் நாடு முன் னேற்றத்தை அடைய வேண்டும். நாம் அய்ந்து பேர், அவர்களோ 25! குஜராத் தில் குடும்பக் கட்டுப் பாட்டை அமல்படுத்த முடி யாதா? நம்முடைய வழியில் யார் தடை போடுவது? எந்த மதப்பிரிவு நம் வழியில் குறுக்கிடுகிறது? உதவிகள் ஏழைகளுக்குச் சென்று சேரா தது ஏன்? சிலர் குழந்தை களை உற்பத்தி செய்தால், அவர்களது பிள்ளைகள் சைக்கிளுக்கு பஞ்சர் போடு வதையே செய்வார்கள் என்று பேசி னார்.

அவரது தற்போதைய பேச்சைக் கேட்கும்போது, இஸ்லாமியர்கள் மீதான திடீர் கரிசனம் ஏன் என்று கேட்காமல் இருக்க முடிய வில்லை. இப்படியான ஒருவருடன் சேர்ந்துள்ள ஜாபர் போன்றோருக்கு, சிறுபான்மையினரின் கண் ணியமும், உறுதியும் புரியப் போவதில்லை .சிறுபான் மையினர்களின் கேள்வி களுக்கு அரசுகளால் ஒரு போதும் தீர்வு காணப்பட்ட தில்லை. மேலும், நாடாளு மன்ற ஜனநாயகம் என்பது முரண்பாடுகளை அதிகரிக்க மட்டுமே செய்திருக்கிறது. சில அரசியல் கட்சிகள் முதலாளிகளுக்கு ஆதரவாக வும், சில கட்சிகள் பெரும் பான்மையினருக்கு ஆதர வாகவும் உள்ளன. 2002ஆம் ஆண்டு மோடி பெரும்பான் மையினரின் உதவியுடன் சிறுபான்மையினரைக் கொன்றுகுவித்து வெற்றி கண்டார். இதுபோன்ற துரோகிகளை சரேஷ்வாலா போன்றோர் தூக்கிப் பிடித்து வருகின்றனர்.

மிகப்பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட இந்த மாநாட்டில், சொற்ப அளவி லான வர்த்தகர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இதற்கு காலியாக இருந்த நூற்றுக்கணக்கான இருக்கை கள் சாட்சி. மேலும், முஸ்லிம்களின் வர்த்தகக் கண்காட்சியை குஜராத்தில் ஏற்படுத்தி, தன்னை இஸ்லாமிய மக்கள் மீது அக் கறையுள்ளவனாகக் காட்டிக் கொள்ளும் மோடி மற்றும் அவரது கைக்கூலிகளாக மாறி வரும் ஜாபர் சரேஷ் வாலா போன்றோரின் கபட நாடகத்தையும், 2002ஆம் ஆண்டு அனுபவித்த வலி களையும் இஸ்லாமியர்கள் ஒருபோதும் மறக்கமாட் டார்கள் என்று குஜராத்தின் உண்மை என்ற இணைய தளம் தெரிவித்துள்ளது.

(நன்றி: தீக்கதிர் - 12.2.2014)

கிரிக்கெட் சூதாட்டம்: அய்.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்க!

தமிழர் தலைவர் அறிக்கை


ஊழல், லஞ்சம் என்பது பற்றி மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு பிரச்சினை இருந்து வருகிறது. ஊழல், லஞ்சம், பேரம், சூதாட்டம் எங்கு நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது தான் - சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வும் வேண்டியது தான்.

ஆனால் நம்நாட்டு ஊடகங்கள் அரசியலில் நடை பெறும் ஊழல்களைப் பற்றித்தான் ஓங்காரக் கூச்சல் போடுகின்றன.

திறமையைப் பயன்படுத்தித் தீரவேண்டிய விளையாட் டில் கூட சூதாட்டம் நடைபெறுகிறதே!. விளையாட்டுகளில் கிரிக்கெட் சூதாட்டம் (மேட்ச் பிக்ஸிங்) தான் பிரதான மானது.

மற்ற விளையாட்டுகளில் சூதாடுவது கொஞ்சம் கடினம்! கிரிக்கெட்டில் அதற்கு தாராளமான அளவு இடம் உண்டு. மேலும் பணம் காய்ச்சித் தொங்கும் மரமாக -  சந்தையாக அது ஆகிவிட்டதால் சூதாட்டம் பெரிய அளவிற்கு சூடு பிடிக்கிறது. எத்தனையாவது ஓவரில் எந்த பந்தை எப்படி வீச வேண்டும்? எப்படி அவுட்டாக வேண்டும்? என்பது வரை முன்னதாகவே முடிவு செய்யப்படுகிறது. இதற்கு உடன் படும் விளையாட்டுக்காரர்களை வெட்கம் கெட்டவர்கள் என்றுதான் கூறிட வேண்டும்.

பார்ப்பனர் - பணக்காரர் - பனியாக்களின் முக்கூட்டு ஒப்பந்தம் - இதில் புகுந்து விளையாடுவதால் கமுக்கமாக அமுக்கி விடுகிறார்கள்.

சூதாட்டம்

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கக் கூடிய சீனிவாசன் அவர்களின் மருமகன் குருநாத் மெய்யப் பன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பொறுப் பாளர் ஆவார். அதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்தரா உள்ளிட்டோர் அய்பிஎல் அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டுள் ளனர் என்பது நீதிபதி முகுல்முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குருநாத் மெய்யப்பரின் மாமனார் - இப்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என்பதையும் தாண்டி, அகில உலக அமைப்பின் தலைவராகவும் பெரிய பதவிக்குச் சென்றுள்ளார். கிரிக்கெட்டை பொறுத்தவரை உயர்ஜாதிப் பார்ப்பனர் களின் தனி உடைமையாகவே பெருமளவுக்கு ஆகிவிட் டது. இல்லாவிட்டால் இந்திய மண்ணுக்குரிய ஹாக்கிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், அந்நிய நாட்டு விளை யாட்டான கிரிக்கெட்டை முதன்மைப் படுத்துவார்களா?  இங்கு மட்டும் சுதேசியம் காணாமல் போய்விடும்.

டெண்டுல்கர் என்ற பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்து மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்ததோடு பாரத ரத்னா பட்டமும் வழங்குகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?

கிரிக்கெட்டில் கூட உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தவர்கள் கபில்தேவும், தோனியும் அணித்தலைவராக இருந்தபோதுதானே!

இவர்கள் இருவரும் பார்ப்பனர் அல்லாதார் என்பதால் பாரத ரத்னா மட்டும் டெண்டுல்கருக்கு.

எல்லாம் வருண பேதம் தான்!

பண மழை கொட்டுகிறது

இந்தக் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள்.

ஏ பிரிவுக்காரர்களுக்கு (7 பேர்) ஓர் ஆண்டு சம்பளம் ரூ.50 லட்சம். பி - பிரிவிலும் ஏழு பேர்; அவர்களுக்கு ஆண்டுச் சம்பளம் ரூ.35 லட்சம். சி - பிரிவினர் மூவருக்கு ஆண்டுச் சம்பளம் ரூ.20 லட்சம்.

இதோடு முடியவில்லை. உள்நாட்டில் விளையாடினால் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம்; வெளிநாட்டில் விளையாடினால் நாள் ஒன்றுக்கு ரூ.2.40 லட்சம்.
அணியில் இடம் பிடித்தால் போதும், விளையாடாமல் இருந்தாலும் அந்தத் தொகை கிடைத்துவிடும். இது அல்லாமல் விளம்பரம்மூலம் கிடைப்பதோ கோடிக்கோடி ரூபாய்கள். ஆண்டு ஒன்றுக்கு மொத்த குத்தகை.

அய்.பி.எல். கிரிக்கெட்டை விடக் கேவலமானது ஒன்று கிடையாது; விளையாட்டுக்காரர்களை (விளையாட்டு வீரர்கள் என்று கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நாம் கூறுவது கிடையாது!) ஏலம் எடுக்கிறார்கள் என்பதைவிட, இவர்கள் ஏலம் போகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  இது எத்தகைய கேவலம்! முதலில் அய்.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்யவேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பு

பார்ப்பனர்கள் கையில் ஊடகங்கள் இருப்பதால், காற்றடித்துப் பறக்க விடுகிறார்கள். அதன் தீய விளைவு நம் ஊரில் வயல்வெளிகளில்கூட நம் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டனர். நம் மண்ணுக்குரிய சடுகுடு காணாமல் போய்விட்டதே!

நம் இளைஞர்களைப் பீடித்த நோயாகவே கிரிக்கெட் ஆகிவிட்டது. இதுவும் ஒருவகையான கலாச்சாரச் சீரழிவு தான். செண்டை மேளம் என்று கேரளாவிலிருந்து இப் பொழுது இறக்குமதி ஆகிவிடவில்லையா? எளிதில் அயல் கலாச்சாரத்திற்கு விலை போவதில் தமிழர்களை அடித்துக் கொள்ள உலகில் வேறு யாரும் கிடையாதோ - வெட்கக் கேடு, நம் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை இதிலும் ஏற்படுத்தவேண்டும்.

கி.வீரமணி
தலைவர் , திராவிடர் கழகம்

சென்னை
12.2.2014 

தினமலருக்குப் பதிலடி


சக மனிதனை தொட்டால் தீட்டு என, சொன்னவர்களும்; செருப்புப் போட்டு கீழ் ஜாதிக்காரன் நடக்கக் கூடாது என, சொன்னவர்களும்; ஆத்திகரா, நாத்திகரா? அனைவருக்கும் பொதுவானவர் கடவுள்' எனக் கூறிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களை, கோவிலுக்குள் விடாமல் தடுத்தவர்கள், ஆத்திகரா, நாத்திகரா? கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையப் போராட்டம் நடத்தியவர்கள் ஆத்திகரா, நாத்திகரா? இதிகாசம், புராணங்களை மட்டும் வைத்துக் கொண்டுள்ள தமிழை, காட்டுமிராண்டி மொழி என்றார் ஈ.வெ.ரா. பெரியார்  அவர்தான் கணினியில் தமிழைப் பயன்படுத்தும் அளவுக்கு எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்.

வைக்கம் போராட்டத்தை நிறுத்தி விடுங்கள் என, ஈ.வெ.ரா., பெரியாருக்கு கடிதம் எழுதியவர் காந்தியடிகள்.  ஆனால், அதை ஏற்காமல் போராட்டத்தைத் தொடர்ந்து, வெற்றி கண்டார் ஈ.வெ.ரா. பெரியார், 'வைக்கம்' போராட்ட வரலாறு அறிந்தவர்களுக்கு தான், இது தெரியும். நாட்டில் உள்ள அனைத்து ஜாதிகளுக்கும் இடஒதுக்கீடு இருந்தது. ஆனால், சண்பகம் துரைசாமி என்ற பார்ப்பான், தன் மகளுக்கு அனைத்து தகுதியும் இருந்தும், மருத்துவக் கல்வி சேர்க்கை கிடைக்கவில்லை என, பொய்யான வழக்கை, தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மூலம் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டது. இதன்பின், ஈ.வெ.ரா., நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இடஒதுக்கீடு என்பது, செயினை பறித்துச் செல்லும், திருடனிடம் அதை மீட்பது போன்றது.

குறிப்பிட்ட சமூகங்களுக்குக் கல்வியும், வேலைவாய்ப்பும் பல ஆண்டுகாலம் மறுக்கப்பட்டதால், அவர்களையும், பிற சமூகத்தினரைப் போல, சமத்துவப்படுத்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், சமூகநீதியை நிலைநாட்டி, சமூகங்களுக்கு இடையே உள்ள இழிவைப் போக்குவதே நோக்கம். இதைத் தான் ஈ.வெ.ரா. பெரியார் செய்தார்.

பாமரன், எழுத்தாளர்
(தினமலர், 5.2.2014, பக். 4)

Read more: http://www.viduthalai.in/page1/74732.html#ixzz2t5cYDwXC

மூன்றாவது அணிபற்றி நரேந்திர மோடி

பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர மோடிக்கு இப்பொழுது மேலும் சில சிக்கல்கள் சிரங்காக உருவெடுத்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சி ஒருபுறம்; டில்லி தேர்தல் முடிவுகள்  மோடியையும் அவரது பரிவாரங்களையும் பாடாகப்படுத்தியுள்ளன. அந்த ஆத்திரம் அவர்களின் அலுவலகத் தைத் தாக்குவது வரை கொண்டு வந்து விட்டுள்ளது.

கடுமையான வார்த்தைகளால் அர்ச்சிக்கவும் ஆரம்பித்து விட்டனர்; இன்னொரு புறம் - மூன்றாவது அணி, அது குறித்தும் திருவாளர் மோடி மூன்றாந்தர அணி என்று மூர்க்கமாகத் தாக்க ஆரம்பித்து விட்டார்.

தொடக்க முதலே அய்க்கிய ஜனதாதளம் - அதன் தலைவர்களும், குறிப்பாக பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் பி.ஜே.பி.மீது கடுமையான விமர்சனத்தை வைத்து வருகின்றார். பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துக் கொண்டி ருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்துக்கு பீகாருக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி வந்துவிடக் கூடாது  என்பதிலே தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். கூட்டணியிலிருந்து பிஜேபி விலகியது குறித்து சிறிதும் அவர் அலட்டிக் கொள்ளவும் இல்லை. பிஜேபி என்பது மதவாதக் கோட்பாடுள்ள ஒரு நோய் என்கிற அளவுக்கு படம் பிடித்தும் காட்டி விட்டார்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கும்  பி.ஜே.பி.யின் முகத்திரையைக் கிழிக்க ஆரம்பித்துள்ளார். ராமன் கோவில் பிரச்சினையைத் தேர்தல் ஆதாயத்துக்காக பிஜேபி பயன்படுத்துவதாகக் குற்றம் சுமத்துகிறார்.
இடதுசாரிகள் எப்பொழுதுமே பிஜேபியை விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தான்.

இந்த மூன்றாவது அணியின் முக்கிய பங்குதாரர் யார் என்றால் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. அதன் பொதுச் செயலாளர், செல்வி ஜெயலலிதா தான்; மூன்றாவது அணி வெற்றி பெற்றால், தான்தான் பிரதமர் என்ற கனவில் மிதக்கக் கூடியவர்; தேவேகவுடாவுக்கு அடித்ததுபோல லாட்டரி அடிக்காதா என்று கருதிக் கொண்டிருக்கக் கூடியவர்.

நியாயமாக பிஜேபியையும், அதன் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியையும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தானே கடுமையாகச் சாட வேண்டும்!  தோலுரித்துக்காட்டிட வேண்டும். அதுவும் மூன்றாவது அணி என்பது மூன்றாந்தர அணி என்று மோடி விமர்சித்த நிலையில், கடுமையாகச் சாடிய நிலையில், ஜெயலலிதா தரப்பிலிருந்து உக்கிரமான பதிலடிச் சம்மட்டி ஏன் புறப்படவில்லை?

தன்மீது ஒரு துரும்பு அளவு மற்றவர்கள் கிள்ளிப் போட்டால்கூட விட்டேனா பார்! என்று விடுபட்ட அம்புபோல அக்னி அம்புகளால் சரம் தொடுக்கும் பாணியைக் கொண்ட செல்வி ஜெயலலிதா   மவுன சாமியாராக இருப்பது - ஏன்?

ஜெயலலிதா பதவியேற்றால் தனி விமானத்தில் மோடி சென்னைக்கு வருவார்; மோடி பதவியேற்றால் தனி விமானத்தில் அகமதாபாத் போய் சேர்வார் ஜெயலலிதா. சென்னைக்கு வந்தால் நாற்பது வகை சிறப்பு விருந்து வைத்து, உபசரித்து திக்கு முக்காடச் செய்யக் கூடியவர்.

ஆனாலும் தனக்குப் போட்டி என்று வந்த நிலையில் நரேந்திர மோடி, ஜெயலலிதாவையும் சேர்த்துத்தான் மூன்றாவது அணியின் மீது மோதிடத் தயாராகி விட்டார்; மோசமான வார்த்தைக் கற்களால் கவண் வீசுகிறார். என்றாலும் தமிழ்நாடு முதல் அமைச்சர் 16ஆவது மக்களவைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று டில்லிக் கோட்டையில் அமரத் துடிதுடித்துக் கொண்டு இருப்பவர், மோடிக்குப் பதிலடி கொடுக்க மறுப்பது ஏன்?

திருவாளர் சோ ராமசாமியின் அறிவுரையா - வழிகாட்டுதலா? மோடியைத் தாக்க ஆரம்பித்தால் ஊடகங்கள் திசை மாறிப் போய் விடும் என்ற அச்சமா?

தேர்தலுக்குப் பிறகு உருவாகும் - அரசியல் சூழல் (கற்பனையாகத்தான்) கெட்டுப் போய் விடக் கூடாது என்ற கெட்டிக்காரத்தனமான தொலை நோக்கா?
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் பரிதாப நிலையை எண்ணிப் பரிதாபப்படத் தான் வேண்டியுள்ளது. ஆனாலும், தேர்தலுக்கான நாள்கள் நெருங்க நெருங்க மூன்றாவது அணி - தேசிய ஜனநாயகக் கூட்டணி (மோடி)களுக்கிடையே கத்திகளை இறக்கை களில் கட்டிக் கொண்டு ஆவேசமாக போரிடும் சேவல் சண்டைகளை நாடு காணத்தான் போகிறது.


.

11 ரூபாய் முதல்வர்!

11 ரூபாய் முதல்வர்!
மோடி மோசடியை வெளுத்துவாங்கும் புதிய இணையதளம்
http://www.rs11.in/

குஜராத்தில் மோடி அரசு சார்பில் கடந்த டிசம்பர் மாதம் அரசின் இணையத்தில் உணவுப்பொருட்களுக்கான மானியம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்கிற அறிவிப்பு வெளிவந்தது. அதன் படி,  நாள் ஒன்றுக்கு ரூபாய் 10.80க்குள் வருமானம் இருப்பவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்கான அளவு என்று கருதப்பட்டு மானியத்தில் உணவுப்பொருள் பெற தகுதி உள்ளவர்கள் என்கிற குஜராத் மாநில அரசின் அறிவிப்பு வெளிவந்தது.
    இந்த அறிவிப்பின்மூலம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஏழை மக்களின் ஏழ்மையைக் கேலி செய்வதாக காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் கண்டித்ததும் விவாதங்கள் நடந்ததும் நாம் அறிந்தது.
    இது தொடர்பாக தற்போது புதிதாக  தொடங்கப்பட்டுள்ள www.rs11.in என்கிற இணையதளத்தில் நரேந்திர மோடியின் படத்துடன் கேள்வி பதில் பாணியில் கருத்துப்படம் வெளியாகி உள்ளது. நீங்கள் எந்த அளவில் பணக்காரன் என்பதை கேட்டு, மோடி அரசின் அளவுகோலின் படி, ”சிப்ஸ் பாக்கெட் ஒன்று வாங்க முடிந்தால் அவன் மிகப்பெரிய செலவாளி” என்றும், ”மாதம் ஒருமுறைக்குமேல் சிப்ஸ் தின்றால் அம்பானியுடன் தொடர்பில்லாதவர் என்று சொல்லிவிட முடியுமா?” என்று கேட்பதுடன், ”சிப்ஸ் தின்னும்போது குளிர்பானம் அருந்தினாலும், ஒரே நாளில் இரு வேளை உணவு உண்டாலும் குஜராத்திலேயே அவன்தான் பணக்காரன்” என்றும் கூறுவதாக உள்ளது.
    மேலும், அவ்விணையத்தில் குஜராத் மாநிலத்தில் உண்மையான வாழ்வாதார நிலை என்பது ரூ.11க்கு ஒரு பாக்கெட் நொறுக்குத்தீனி, ஒரு குவளை தேனீர், பெண்கள் தலையில் போடும் ரப்பர் பேண்ட் மட்டுமே வாங்க முடியும் என்றும், ரொட்டி குருமா, குளிருக்கு சால்வை, மருந்து மாத்திரைகள் என்று மற்ற அத்தியாவசியப்பொருட்கள் எதுவும் வாங்க முடியாது என்றும் விளக்கப்படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
    குஜராத்தில் கடும் உழைப்பிற்குப் பிறகு என்னதான் பெற முடியும் என்றால் 250கிராம் சர்க்கரை, இரண்டு முட்டைகள், இரண்டு ரொட்டிகள், 3கி.மீ.தூரத்திற்கு பேருந்தில் பயணம் என்கிற அளவில்தான் முடியும். ஒரு கிலோ சர்க்கரை, ஆறு முட்டைகள், ஒரு முழு சாப்பாடு ஆகியவற்றை வாங்க முடியாது. கலுப்பூர் முதல் கன்கானியா ஏரி வரை 4 கி.மீ. கூட பயணம் செய்ய முடியாது என்பதுடன் அப்படி வாங்க முடியாத ஏழைகளை குஜராத்திலிருந்து விரட்டிவிடு என்கிற பாணியில், உண்மை குஜராத்தின் நிலையைச் சொல்லி நிறைவடைகிறது இணையத்தின் தகவல்.

இல. கணேசன் ஏன் பாடினார் வந்தே மாதரம்?

சென்னையை அடுத்த வண்டலூரில் கடந்த 8ஆம் தேதி நரேந்திர மோடி பேசினார். அந்தக் கூட் டத்தில் கலந்து கொண்ட திருவாளர் இல. கணேசன் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடினா ராம். அவருக்குப் பாடத் தெரியும் என்பதற்காக தனது திருவாயைத் திறந் தாரா? சங்கீதத்தில் புலி என்பதற்காக தனது சாரீ ரத்தைக் காட்டிக் கொண் டாரா? அதெல்லாம் ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது!

நரேந்திரமோடி இப் பொழுதெல்லாம் முஸ்லீம் களைத் தாக்கிப் பேச மாட் டார் - வேண்டுமானால் தாஜா செய்வார்! அவர் முகத்தில் விழுந்த மத வெறி கரும் புள்ளியைத் துடைத்தெடுக்க படாத பாடுபடுகிறார். இந்த நிலையில் வீண் வம்பை விலைக்கு வாங்க முடியுமா?

அந்தக் குறையைப் போக்குவதற்குத்தான் திரு வாளர் இல. கணேசன் தன் சாரீரத்தை அரங்கேற்றினார்.

வந்தே மாதரம் என்ற பாடலை எழுதியவர் வங்கா ளத்தைச் சேர்ந்த பங்கிம்சந் திர சட்டர்ஜி என்பவர்; 1894இல் வங்காள மொழி யில் எழுதப்பட்ட ஆனந்த மடம் எனும் நாவலில் இடம் பெற்ற பாடல்தான் இந்த வந்தே மாதரம்!

அந்த நாவலில் காணப் படும் கதையம்சமும், உரை யாடலும் இஸ்லாமியர்க ளுக்கு எதிரானவை என்பது மட்டுமல்ல; அவர்களை நாட்டை விட்டே துரத்திய டிக்க வேண்டும் என்பது தான் அந்த நாவலின் அடி நாதம். அந்த நாவலின் எட்டாம் அத்தியாயத்தில் ஒரு காட்சி; ஒரு கிராமமே கொள்ளையடிக்கப்படுகிறது. திடீரென ஒரு முழக்கம்! முஸ்லீம் களைக் கொல்லு! கொல்லு!! என ஒரே ஆர்ப் பரிப்பு! வந்தே மாதரம் எனும் பாடல் பீறிட்டுக் கிளம்புகிறது.

அடுத்து ஒரு குரல்: ஓ சகோதரர்களே! மசூதிகளை யெல்லாம் தரை மட்ட மாக்கி, அந்த இடத்திலே மாதவர் ஆலயத்தைக் கட் டும் நாள் விரைவில் வரும் (பாபர் மசூதி இடிப்பை இந்த இடத்தில் நினைவு கொள்க!) என்றுபிரசங்கம்.
வந்தே மாதரத்தின் தாத்பரியம் என்ன என்பது ஓரளவிற்கு இப்பொழுது புரிந்திருக்குமே!

1937இல் ஒரிசா சட்டப் பேரவையில் வந்தே மாத ரம் தேசிய கீதமாகப் பாடப் பட்டது. சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை. சட் டப் பேரவைத் தலைவரி டம் முறையிடப்பட்டது. தேசிய கீதம் பாடும் பொழுது உட்கார்ந்திருப்பதும், எழுந் திருப்பதும் அவரவர்களின் விருப்பம் என்று கூறி விட் டார் சபாநாயகர்.
அதே கால கட்டத்தில் 1938இல் சென்னை மாநிலத் தில் என்ன நடந்தது? சக்ர வர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி) அப்பொழுது சென்னை மாநிலப் பிரதமர்.

சட்டப் பேரவைத் தலை வராக இருந்தவர் புலுசு சாம்பமூர்த்தி. சட்டப் பேரவை தொடங்கும் போது வந்தே மாதரம் பாடலைப் பாடச் செய்ய வேண்டும் என்பது அவரின் பேரவா! பாடவும் பட்டது; முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்த னர். இந்துக் கடவுள்களைப் போற்றித் துதிக்கும் பாடலை நாங்கள் எப்படிப் பாட முடி யும்? என்று எதிர்க் கேள்வி வைத்தனர்.

குல்லூகப்பட்டர் பிரத மர் ஆச்சாரியார் ஒரு தந்திரம் செய்தார் (அதுதானே அவ ருக்கே உரிய குணாம்சம்!)

சபை அலுவல் தொடங் கும் நேரம் காலை 11 மணி  -அதற்கு முன்னதாகவே வந்தே மாதரம் பாடி விட லாம், மற்றவர்கள் அதற்குப் பின் அவைக்கு வரலாம் என்று நரியை நனையாமல் குளிப்பாட்டப் பார்த்தார். வேண்டுமானால் வந்தே மாதரத்தோடு வேறு மதப் பாடல்களையும் இணைத் துக் கொள்ளலாம் என்றும் கூறினார். இந்தத் தந்திர வலைக்குள் சிக்கிக் கொள்ள முசுலிம்கள் தயாராக இல்லை; முடிவு வந்தே மாதரம் வராத மாதரமாக ஆக்கப் பட்டு விட்டது.

இதற்குள் இவ்வளவு சரக்குகள் இருக்கின்றன. முஸ்லீம்களை  நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்ற விஷம் அந்தக் குப்பிக் குள் இருக்கிறது.

இந்துத்துவா கூட்டத் தில் இஸ்லாமியர்களைத் தாக்கிப் பேசாமல் இருக்க முடியுமா? சந்தர்ப்பவாத மாக மோடி பேசாவிட்டா லும் நம் உணர்வின் வெறியை வெளிப்படுத்தா மல் இருக்க முடியுமா? இருக்கலாமா? என்ற எண்ணத்தோடுதான் திருவாளர் இல. கணேசன் வாள்(ல்) வந்தே மாதரம் பாடலை, வண்டலூர் கூட் டத்தில் முழுமையாகப் பாடித் தீர்த்திருக்கிறார் புரிகிறதோ!

காந்தியைப் படு கொலை செய்த நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தில் கடைசிப் பகுதியாகக் கூறி முடித்த வரியில்கூட அந்த வந்தே மாதரம் இருக் கிறதே!

அகண்டபாரத் அமர் ரஹே, வந்தே மாதரம்

- கருஞ்சட்டை


Read more: http://www.viduthalai.in/e-paper/75085.html#ixzz2t5BCvcCZ

Saturday, February 8, 2014

உடுமலையாரின் பாடல்!

ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற காலம் மாறிப் போச்சு... இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற உண்மை தெரிஞ்சு போச்சு
பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும் எல்லாம் நடக்குதுங்க - அதை
எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு ஏமாந்து போகாதீங்க!
ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால் அடுப்பை மூட்டுறாங்க
ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக
ஆளையே மாத்துறாங்க - இங்கே ஆளையே மாத்துறாங்க.
பெண்: அது... ஆயிரங்காலத்துக் கப்பாலே நடக்கிற
ஆராய்ச்சி விசயமுங்க... மூளை
ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம அறிவுக்குப் பொருத்தம் ஆறு, கோயில், அரசமரந்தானுங்க!
ஆண்: கோழியில்லாமெ தன்னால முட்டைகளில்
குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்
கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த
கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக்
கோளாறைக் கண்டு பிடிச்சார்!
பெண்: அந்தக் குஞ்சுகள் பொரிக்க வச்ச கோளாறுக் காரனை
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்
கூசாமல் எதையும் யோசனை செய்யாமே பேசுவது தப்பித முங்க
ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால்
இயற்கை யெங்குறாங்க - இனிமேல்
இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும் முயற்சியும் பண்ணுறாங்க!
- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப்பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

கடவுளை நம்புகிறாயா?

ருஷ்ய நாட்டு பிரஜை ஒருவன் வேலை தேடுகிறான் என்றால் அவனைப் பார்த்து ஒரு பேட்டியாளர் நீ கடவுளை நம்புகிறாயா?
என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது இல்லை. அவ்வாறு கேட்பதை சட்டம் தடை செய்கிறது.
- ருஷ்ய வெளியீடு: 100 வினாக்களும் விடைகளும் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 48.
தகவல்: ந.சுப்ரமணியன், கோவை.



Read more: http://www.viduthalai.in/e-paper/74850.html#ixzz2siFtwEMc

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...